Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தேசிய மக்கள் சக்தி யாழ் எம் பிக்கள் பரிதாபமாக உள்ளனர்
தேசிய மக்கள் சக்தி யாழ் எம் பிக்கள் பரிதாபமாக உள்ளனர்
தேசிய மக்கள் சக்தி யாழ் எம் பிக்கள் பரிதாபமாக உள்ளனர் ,வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களொ பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது என இலங்கைத்
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியை மட்டக்களப்பு மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் நிராகரித்தமை போல் உள்ளூராட்சித் தேர்தலிலும் நிராகரிப்பார்கள் என்ற செய்தியை தைரியமாக பாராளுமன்றில் சொல்லியிருக்கின்றேன்.
மட்டக்களப்பில் அனைத்து சபைகளையும் நாங்கள் கைப்பற்றுவோம். ஆனால் யாழ் மாவட்டத்தை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாண மக்கள் விட்ட தவறை இந்த உள்ளூராட்சித் தேர்தலில் நிவர்த்தி செய்ய வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது.
அவர்களுக்கு பாராளுமன்றில் உரையாற்றவே சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. செயற்றிறன் அற்றவர்களாக இருக்கிறார்கள்.
சிலவற்றை பாராளுமன்றில் கதைத்தால் எம்.பி. பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்திலும் அவர்கள் உள்ளார்கள் என்றார்
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு ,இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இரு நாடுகளும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கூட்டு இராணுவ மற்றும் கடற்படை பயிற்சிகள் ஆகியவற்றால் இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, இலங்கை முப்படைகளின் சுமார் 750 அதிகாரிகளுக்கு இந்தியா ஆண்டுதோறும் விடயதானம் சார்ந்த பயிற்சியை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு நாடுகளும் பல தசாப்தங்களாக நல்லுறவுப் பாதுகாப்பு உறவுகளைப் பேணி வருவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்தியப் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு விழா
இந்தியப் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு விழா
இந்தியப் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு விழா இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கை வந்த இந்திய் பிரதமர் நரேந்திர மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது.
கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் மற்றும் முப்படை வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்
ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது
ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது
ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் ரவிகரன் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது ,ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம்; ரவிகரன் எம்.பியின் தலையீட்டையடுத்து தலைமறைவான சந்தேகநபர் கைது.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குடபட்ட சின்னசாளம்பன் பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபரை உடனடியாக கைதுசெய்யவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் துரைராசா ரவிகரன் 03.04.2025இன்று ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையத்திற்கு நேரடியாகச் சென்று பொலீசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.
இந் நிலையில் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய குறித்தநபர் ஒட்டுசுட்டான் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொற்றில் பணியாற்றும் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியைச்சேர்ந்த
இருபெண்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்துமுரண்பாட்டையடுத்து, பெண்ணொருவரின் கணவர், மற்றைய பெண்ணை வீதியில்வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இந் நிலையில் இவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்டபெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த பெண்ணைத் தாக்கிய நபர் தலைமறைவாகியிருந்தார்.

இத்தகையசூழலில் குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கிய நபரை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பெண்ணை தாக்கிய நபரைக் கைதுசெய்ய வலியுறுத்தி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்குமுன்பாக அப்பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த இடத்திற்குவிரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பெண்ணை கொடூரமாகத் தாக்கிய குறித்த நபர் உடனடியாகக் கைதுசெய்யப்படவேண்டுமென பொலிசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைய 24மணிநேரத்திற்குள் குறித்த நபர் கைதுசெய்யப்படுவார் என ஒட்டுசுட்டான் பொலிசார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடமும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் உத்தரவாதமளித்திருந்தனர்.
அந்தவகையில் குறித்த நபர் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையபொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர்
துரைராசா ரவிகரன் அவர்களை தொடர்புகொண்டு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு
தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு
தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு ,ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (03) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் கணவன், மனைவி இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதிக்கு அருகில் உள்ள ஒரு கடையில் காத்திருந்த தம்பதியை இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது
இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி
இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி
இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கைக்கு வருகின்றார்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்துக்கான உறுதிப்பாடு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணையவுள்ளது.
இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதோடு இரு தரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும்.
நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்தியப் பிரதமர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்வார்
கச்சத்தீவு இலங்கைக்குரியதாகும்
கச்சத்தீவு இலங்கைக்குரியதாகும்
கச்சத்தீவு இலங்கைக்குரியதாகும் ,கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது. எது எப்படி இருந்தாலும் கச்சத்தீவென்பது இலங்கைக்குரியதாகும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மற்றும் கச்சத்தீவு பிரச்சினை என்பன தொடர்பில் யாழில் இன்று (03) ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
‘ தமிழகத்தில் தேர்தல் வருவதாக இருந்தால், அதனோடு சேர்ந்து கச்சத்தீவு பிரச்சினையும் வந்துவிடும். அதேபோல தேர்தல் பிரசாரத்தில் அது பேசு பொருளாக மாறும். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களிலும் இது பற்றி பேசப்பட்டது. தற்போது முதல்வர் மு.கா. ஸ்டாலினும் அவ்வழியை கையாண்டுள்ளார்.
ஆனால் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதேசம் கூட அங்கீகரித்துள்ளது.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனவே, தமிழகத்தில் தேர்தலுக்கு வேண்டுமானாலும் கச்சத்தீவு பிரச்சினையை வைத்து விளையாடலாம். அது இலங்கைக்குரியது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
அதேவேளை, தமிழக மீனவர்களிடமிருந்து பெறப்பட்ட அரசுடமையாக்க பட்டுள்ள கப்பல்களை ஆழ்கடலில் மூழ்கடிப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதன் பயன்பாடு தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
அத்துடன், பாரத பிரதமர் மோடியின் வருகை என்பது மீனவர்களுக்கான வருகை அல்ல. 13 ஆவது திருத்தத்துக்கான வருகையும் அல்ல. அவ்வாறு கூறிக்கொண்டு வேண்டுமானால் இங்குள்ள தமிழ்க் கட்சிகள் சுய திருப்தி அடையக்கூடும்.” எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு பிணை
யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு பிணை
யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டது.
இதன்போது பிரதிவாதிகளை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் கையளிக்கப்பட்டன.
மேலும், இது தொடர்பான விரிவான விசாரணைகளை மே 30 ஆம் திகதி நடத்துவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது
மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்
மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்
மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள் ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நாளை (05) காலை சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இதன் பின்னர், ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல் நடைபெறும்.
இதற்கிடையில், இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு, அவருடைய பயன்பாட்டிற்காக MI 17 வகை 4 ஹெலிகொப்டர்கள் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 40 இந்திய விமானப்படை வீரர்கள் வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம்
தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம்
தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம் ,வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற அவசர பிரிவுக்கு அழைத்து குறித்த இளைஞனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, குறித்த நபர் முல்லேரிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் உயிரிழந்தவர் மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நடனக் கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது
பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ
பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ
பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ ,ஒரு பெண்ணை நடு வீதியில் வைத்து தாக்குகின்றான் அவசரமாக பகிருங்கள் இவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை வேடிக்கை பார்க்க மட்டும் ஆட்கள்.
இவன் கைது செய்யப்படவண்டும். பொலிசாரின் கண்ணில் படும்வரை விரைவாகப் பகிருங்கள் 🙏
இது கண்ணிவெடி அகற்றும் பணியகம் போலுள்ளது.
இதில் அழுத்தி காணொளி பார்க்க அதிகம் பகிருங்கள் மக்களே
https://www.facebook.com/61553765198144/videos/999254965085625
பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் சஜித்
பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் சஜித்
பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் சஜித் ஆட்சியொன்றின் கீழ் மக்கள் ஊழல் இல்லாதவர்கள், மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடியவர்கள், நேர்மையானவர்கள், அனைவரையும் உள்ளீர்க்க கூடியவர்கள், நீதி
நியாயத்தோடு நடக்கக் கூடியவர்களை எதிர்பார்க்கிறார்கள். புதிதாக ஒன்றைச் செய்யும், நாட்டுக்கு நேர்மையையும், கூறுவதை செவிமெடுக்கும், மனித நேயம் மிக்கவர்களை எதிர்பார்க்கின்றனர்.
சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை நிராகரித்து, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், திறம்பட்ட சேவையை ஆற்றுவோரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு மக்கள் எதிர்பார்க்கும் இதற்கு மிகவும் பொருத்தமான நபரை ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபைக்கு முன்னுறித்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மாளிகாவத்தை Grand Zenith வரவேற்பு மண்டபத்தில் நேற்று (02) நடந்த “மகிழ்ச்சியுடன் கூடிய கொழும்பு நகருக்கு” எனும் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் வைத்திய கலாநிதி றுவைஸ் ஹனிபாவின் கொள்கை
ஆவணத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஒரு குறிப்பிட்ட வர்த்தகக் குழுவின் மாதிரியாக நடந்து கொள்ளும் பொம்மை அரசியல்வாதிகளைக் கொண்ட அரசியல் இயக்கம் அல்ல. எனவே நாம் எமது பலவீனங்களை சரிசெய்து பலத்தோடு
முன்னோக்கிப் பயணிப்போம். நாட்டு மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்
நித்தியானந்தா உயிரிழந்துவிட்டார் என வெளியான தகவலை கைலாசா மறுத்துள்ளது
நித்தியானந்தா உயிரிழந்துவிட்டார் என வெளியான தகவலை கைலாசா மறுத்துள்ளது
நித்தியானந்தா உயிரிழந்துவிட்டார் என வெளியான தகவலை கைலாசா மறுத்துள்ளது. இந்த விடயத்தைக் கண்டித்து கைலாசா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
நித்தியானந்தாவின் சகோதரி மகன், நித்தியானந்தா ஜீவசமாதி அடைந்துவிட்டார் என காணொலி ஒன்றில் தெரிவித்திருந்தார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இவ்வாறு வெளியான தகவல்களை மறுக்கும் வகையில் கைலாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், நித்தியானந்தா ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிருடனும், உத்வேகத்துடனும் இருக்கிறார் என கைலாசா உறுதியாக அறிவிக்கிறது. நித்தியானந்தாவை இழிவுபடுத்தவும் ,அவதூறு செய்யவும் தொடுக்கப்பட்ட இந்த தீய அவதூறு பிரசாரத்தை கைலாசா திட்டவட்டமாக மறுக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பும் அவர் இறந்துவிட்டார் எனவும் வதந்திகள் பரவியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரும் மோடி
இலங்கை வரும் மோடி
இலங்கை வரும் மோடி ,இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில், “இலங்கைக்கு எனது பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறும்.
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிகரமான இந்திய வருகைக்குப் பிறகு இந்தப் பயணம் இடம்பெறுகின்றது.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்பை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், மேலும் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவோம்.
அங்கு நடைபெறும் பல்வேறு சந்திப்புகளிலும் நான் கலந்துகொள்ளவுள்ளேன்”. என தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை
தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை
தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் இன்று (03) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்கள் தலைம றைவாக இருந்து பிறகே இவர் கைது செய்யப்பட்டார்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.
நான்காவது தவணையாக 334 மில்லியன் டொலர்கள்
நான்காவது தவணையாக 334 மில்லியன் டொலர்கள்
நான்காவது தவணையாக 334 மில்லியன் டொலர்கள் ,இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து மேலும் விவாதிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று வியாழக்கிழமை (03) நாட்டிற்கு வர உள்ளது.
இந்தக் குழு, 11ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து, நாட்டின் அரசியல் மற்றும் நிதி அதிகாரிகளுடன் மேலும் கலந்துரையாடல்களை நடத்த உள்ளது.
இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (ECF) தொடர்பான மூன்றாவது மதிப்பாய்வு பெப்ரவரி 28 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அதன் நிர்வாகக் குழு 334 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை வழங்க முடிவு செய்ததிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் முதல் குழு இதுவாகும்.
இந்த விவாதங்கள், டிசெம்பர் 2024க்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட குறிகாட்டிகள் மற்றும் இலக்குகளை இலங்கை எவ்வாறு அளவு ரீதியாக அடைந்துள்ளது என்பது குறித்து கவனம் செலுத்தும்.
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி அன்று, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு இலங்கைக்கு மொத்தம் 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை வழங்க முடிவு செய்தது.
மேலும், நான்காவது தவணையாக 334 மில்லியன் டொலர்கள் உட்பட 1.34 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 44 வீத வரி விதிப்பு
இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 44 வீத வரி விதிப்பு
இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 44 வீத வரி விதிப்பு உலக நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
அர்ச்சுனாவை அம்பலப்படுத்திய ஊசி கட்சியின் வேட்பாளர்
அர்ச்சுனாவை அம்பலப்படுத்திய ஊசி கட்சியின் வேட்பாளர்
அர்ச்சுனாவை அம்பலப்படுத்திய ஊசி கட்சியின் வேட்பாளர் .அர்ச்சுனா இ மநாதன் ஏமாற்றி பணமோசடி அனுராவை வெல்ல வைக்க திட்டமிட்டு நடத்த பட்ட சதி .
அணைத்து அர்ச்சுனா தங்கத்தின் பித்தலாட்டங்கள் அமபலம் .கண்டிப்பாக காணொளி பார்க்க .
மயக்கமடைந்த பெண்ணிடமிருந்து ஆயுதங்கள் மீட்பு
மயக்கமடைந்த பெண்ணிடமிருந்து ஆயுதங்கள் மீட்பு
மயக்கமடைந்த பெண்ணிடமிருந்து ஆயுதங்கள் மீட்பு ,வத்தளை, ஹேகித்த வீதியில் உள்ள வாடகை விடுதியில் குளியலறையில் மயக்கமடைந்த ஒரு பெண்ணை சோதனை செய்து விசாரித்தபோது, வெளிநாட்டில் வசிக்கும் ஒரு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் அவருக்கு வழங்கப்பட்ட T-56 துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் மெத்தம்பேட்டமைன் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடிந்ததாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கியை வைத்திருந்த அவரது காதலன் என்று கூறப்படும் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான அந்த பெண்ணிடம் இருந்து ஐஸ் என்ற போதைப்பொருள் மற்றும் ஒரு T-56 துப்பாக்கி, 113 தோட்டாக்கள் மற்றும் 4 மகசின்கள்
ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸார் கூறுகின்றனர், இவை காதலன் என்று கூறப்படுபவரின் வசம் இருந்தன.
வத்தளை, ஹேகித்த வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கியதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, வத்தளை பொலிஸார் விசாரணை நடத்தச் சென்றபோது, தங்கும் விடுதியின்
அறையொன்றில் உள்ள குளியலறையில் அந்தப் பெண் மயக்கமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உச்சம் தொடும் முட்டை விலை
உச்சம் தொடும் முட்டை விலை
உச்சம் தொடும் முட்டை விலை ,முட்டை உற்பத்தியாளர்கள் தற்போது வற் வரி செலுத்த வேண்டியிருப்பதால் கோழிப் பண்ணைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார்.
கோழிப்பண்ணை உரிமையாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு முட்டையின் விலை 70 ரூபாய்க்கு மேல் உயர்வதைத் தடுக்க இயலாது என்றும் அவர் கூறினார்.
அரிசி, காய்கறிகள் மற்றும் மீன்பிடித் தொழில் போன்ற விவசாயப் பொருட்களுக்கு வற் வரி விதிக்கப்படவில்லை என்றாலும், கோழிப்பண்ணைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
முட்டை உற்பத்தி அதிகரித்திருந்தாலும், முட்டைகளுக்கான தேவை குறைந்து வருவதால் நாட்டில் முட்டை உற்பத்தி உபரியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
முட்டை உற்பத்தியாளரின் வருமானத்தின் அடிப்படையில் VAT நிர்ணயிக்கப்படுகிறது என்றும், முட்டை உற்பத்தியாளர்கள் அதற்கேற்ப தங்கள் வரி கோப்புகளைத் திறக்க வேண்டும் என்றும் தலைவர் கூறினார்


























