ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை

ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை

ஈரானால் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் ஒருவரும் காயமடையவில்லை என இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதட்டங்களுக்கு மத்தியில், இலங்கை தூதரகம் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரானில் அணுசக்தி தொடர்பான தளங்கள் மீது அமெரிக்க விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை 8.00 மணியளவில்

இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களை குறிவைத்து தொடர்ச்சியான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இது நிகழ்கிறது.

நாள் முழுவதும் நிலைமை அதிகரிக்கக்கூடும் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அதன்படி, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் விழிப்புடன் இருக்குமாறும்,

தாக்குதல்களின் போது சேதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு உத்தியோகபூர்வ பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுமாறு வலியுத்தியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் 10 நாட்களை எட்டியுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களாக ஆளில்லா விமான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

எனினும், பலத்த காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று தூதுவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்டிய பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின்

ஏவுகணைத் தாக்குதல்கள் பல நடந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த நிலைமை நாள் முழுவதும் மோசமடையலாம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதன்படி, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இந்த நிலைமையில் ஏற்படக்கூடிய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க,

பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் கோரியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த 20ஆம் திகதி இரவு TABA எல்லை வழியாக இலங்கைக்குப் புறப்படுவதற்காக எகிப்திற்குள் நுழைந்த நான்கு

இலங்கையர்களில், செல்லுபடியாகும் இஸ்ரேல் விசா இல்லாதவர்கள் சில மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

பின்னர், எகிப்தில் உள்ள இலங்கைத் தூதுவர் சிசிர செனவிரத்ன மற்றும் அவரது குழுவினர், எகிப்தின் பாதுகாப்பு மற்றும் எல்லைக் குழுக்களுடன்

ஒருங்கிணைந்து, பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் அவர்கள் நேற்று (21) காலை கெய்ரோ விமான நிலையத்திற்கு வந்ததாக நிமல் பண்டார தெரிவித்தார்.

அவர்கள் இன்று காலை கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்படவிருந்ததாக தூதுவர் கூறினார்.

மேலும், நேற்றைய தினம் இலங்கைக்குப் புறப்பட எதிர்பார்த்த மூவர் வந்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான ஆவணங்களைத் தூதரகம் தயார்

செய்து வழங்கியதாகவும், அவர்களும் TABA எல்லை வழியாக கெய்ரோ விமான நிலையத்திற்கு சென்று இலங்கைக்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க தூதரகத்தின் உதவி

இதற்கிடையில், தற்போது இஸ்ரேலில் பணிபுரிந்து இலங்கைக்கு விடுமுறையாக வந்திருக்கும் மேலும் 119 பேர் கொண்ட குழுவொன்று இருப்பதாக தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு

மேலதிகமாக துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் தங்கியிருந்த 10 பேர் மீண்டும் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

அதன்படி, அவர்களின் மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க PIBA நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையர்களுக்கு மட்டுமல்லாமல், ஈரான் தாக்குதல்கள் தொடங்கியதால் மீள் நுழைவு விசா

காலம் முடிவடைந்த அனைத்து வெளிநாட்டவர்களும் மீண்டும் இஸ்ரேலுக்கு வருவதற்கு வசதியாக, சர்வதேச விமான சேவைகள் மீண்டும்

தொடங்கியவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்

இதன்படி, இலங்கையர்களின் விசா காலத்தை நீட்டிக்க தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைத் தூதரகம் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்திய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்தியப் பிரஜைகளை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக, ஜோர்தானின் அம்மான் நகரிலிருந்து புது டில்லி விமான நிலையம் வரை

அவ்வப்போது விமானங்களை இயக்கியுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதுவர் தெரிவித்ததாகவும், இந்த விமானப் பாதையைப் பயன்படுத்தி அம்மான் மற்றும் புது டில்லி விமான நிலையங்கள் வழியாக இலங்கைக்கு

புறப்பட விரும்புவோர் தூதரகத்திற்கு வந்து பதிவு செய்யுமாறும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை இராஜதந்திர தூதரகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஈரானிலிருந்தும்

இஸ்ரேலிலிருந்தும் புறப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இன்று (22) வெளியிட்டது.

அதன்படி, இஸ்ரேலிலிருந்து இதுவரை புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 5 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 3 பேர் என்றும் அமைச்சு தெரிவித்தது.

அதேபோல், ஈரானிலிருந்து புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 4 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 4 பேர் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு
Posted in இலங்கை செய்திகள்

பற்றாக்குறைக்கு தீர்வு ஆசிரியர்

பற்றாக்குறைக்கு தீர்வு ஆசிரியர்

பற்றாக்குறைக்கு தீர்வு ஆசிரியர் ,சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.

உயர் கல்வி

உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர், டிஜிட்டல் கல்வி நிலை மாற்றத்தை (வகுப்புகள் 6-13) மேற்பார்வையிட

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த கருத்துகளை வெளியிட்டார்.

உரிய சவால்களை எதிர்கொண்டு தேவையான கொள்கைகளை செயற்படுத்து கல்வித்துறையில் டிஜிட்டல் நிலை மாற்றத்தை ஆரம்பித்தல் குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ,

தேசிய மற்றும் மாகாண பாடசாலை

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது உள்ள 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை அவசரமாக தீர்க்கப்பட வேண்டும்.

தற்போதுள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக, தற்போதுள்ள வளங்களை திறம்பட பயன்படுத்தி கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக அடுத்த ஆறு

மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைமைகளை அறிமுகப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த பணிக்குழுவின் முதன்மை நோக்கங்களில், மாற்றுத்திறனாளி சமுதாயம் உட்பட அனைத்துப் பாடசாலைகளுக்கும் வசதிகளின் சமமான

விநியோகத்தை உறுதி செய்வது அடங்கும். இந்த இலக்கை அடைவதற்கு வலுவான, பல்துறை பணிக்குழு அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின் போது பணிக்குழு அதிகாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதோடு பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சாரதிகளுக்கு இலங்கை எடுத்த அதிரடி நடவடிக்கையா
Posted in இலங்கை செய்திகள்

சாரதிகளுக்கு இலங்கை அதிரடி நடவடிக்கை எடுத்ததா

சாரதிகளுக்கு இலங்கை அதிரடி நடவடிக்கை எடுத்ததா

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இது தொடர்பில் ​​விசாரணைகளை மேற்கொண்ட போக்குவரத்து பிரதி பொலிஸ் கண்காணிப்பாளர் இந்திகா ஹபுகோட, இந்த செய்தி முற்றிலும் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தவறான செய்தி விளம்பரங்களை உருவாக்குபவர்கள் பதிவிடுபவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தவறானது என்று இலங்கை பொலிஸார் உத்தியோகபூர்வ பக்கத்திலும் ஒரு குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், பது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என மக்கள் மத்தியில் விசனம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தினந்தோறும் அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் பெரும்பாலனவை மதுபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளால் ஏற்படுவதாக அறிக்கைகள் தெரிவித்த போதிலும் அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதா?

மது போதையில் வாகனம் ஓட்டுவது என்பது ஒரு பொறுப்பற்ற செயலாகும். இது ஓட்டுனரின் விழிப்புணர்வைக் குறைத்து, பாதையைப் புரியாமல் தவறாக திருப்புவதற்கும், வேகக் கட்டுப்பாட்டை இழப்பதற்கும் வழிவகுக்கும்.

இதன் காரணமாக ஆபத்தான சாலை விபத்துகள், உயிரிழப்புகள், சிக்கல்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட செயல்கள் மற்ற உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒரு சமூக குற்றமாகவும் கருதப்படுகின்றன.

இதற்கான தீர்வாக, ஓட்டுநர்கள் மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். அவசியமாயின், மாற்று ஓட்டுநரை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு முக்கியம் என்பதால், அரசு மற்றும் சமூக அமைப்புகள் விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்து, இளைஞர்கள் மத்தியில் பாதுகாப்பான ஓட்டுமுறை பற்றிய அறிவை ஏற்படுத்த வேண்டும்.

இதுதான் சாலைகளில் உயிரைக் காக்கும் சிறந்த வழி.

ஆனாலும் அபராதம் விதிக்கப்படும் என்ற செய்தியைக் கூட அரசு எதிர்த்துள்ளமை யோசிக்கவே வைக்கின்றது.

உணவுக் கட்டணம் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

உணவுக் கட்டணம் குறைப்பு

உணவுக் கட்டணம் குறைப்பு

உணவுக் கட்டணம் குறைப்பு ,பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது.

அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று (20) பாராளுமன்றத்தில் குழு கூடியபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2025.05.23 அன்று பாராளுமன்ற அவைக் குழுவு எடுத்த தீர்மானத்தின்படி, பாராளுமன்ற பணிக்குழாமினருக்கான உணவு விலைகளை நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் ரூ. 4,000 ஆகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் ரூ. 2,500 ஆகவும் 2025.06.01 முதல் வசூலிக்க பாராளுமன்ற அவைக் குழு முடிவு செய்தது.

இருப்பினும், இந்த விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற பணிக்குழாமினரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்த குழுவால் நீண்ட நேரம் பரிசீலிக்கப்பட்டு, அதன்படி, நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் ரூ. 3000 ஆகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் ரூ. 2000 ஆகவும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த புதிய விலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

மேலும், மே 23 ஆம் திகதி குழுவால் தீர்மானிக்கப்பட்டபடி, பாராளுமன்ற பொது உணவகத்தில் உணவுகளை கொள்வனவு செய்யும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர்

பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளாலர்களுக்கும் தற்போது வசூலிக்கப்படும் உணவுக் கட்டணங்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை இல்லத்தின் ஒரு பகுதியை பாராளுமன்ற ஊழியர்களுக்காக ஒதுக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுவரை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இந்த விடுமுறை இல்லத்தை முன்பதிவு செய்ய முடிந்ததுடன், சபாநாயகரின் அறிவுறுத்தலின்படி, இந்தக்

கட்டிடத்தில் உள்ள ஒரு பகுதியை எதிர்காலத்தில் பாராளுமன்ற ஊழியர்களுக்குக்கும் ஒதுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதுப்பித்தல் பணிகள் குறித்தும், பாராளுமன்ற அவைக் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன்,

பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு பகலில் தற்காலிக தங்குமிடத்திற்கான இடத்தை தயார் செய்வதற்கான அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பதுளையில் கவிழ்ந்த பேருந்து
Posted in இலங்கை செய்திகள்

பதுளையில் கவிழ்ந்த பேருந்து

பதுளையில் கவிழ்ந்த பேருந்து

பதுளையில் கவிழ்ந்த பேருந்து, விபத்து மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் பயணிகள் பேருந்து தலைகீழாக கவிழ்வதற்கு காரணமாக அமைந்த சம்பவம் அந்த பேருந்து சாரதியில் உதவியாளரை அந்த பேருந்து செலுத்தியதாகவும் அதனாலயே இந்த பேருந்து கவர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மூவரையும் இழந்து 34 பேர் காயமடைந்துள்ளனர்.

சாரதி அனுமதி பத்திரம் என்று சாரதி உதவியாளர் பேருந்து ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டுச் சிந்தனை காரணமாக பயணிகளை ஏற்றியபடி பயணித்த பேருந்தை, சாரதியின் அனுமதிப்பத்திரம் இல்லாது , சாரதியின் உதவியாளர் ஓட்டிச் சென்ற விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தை எடுத்து தற்பொழுது பேருந்து சாரதி உதவியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த பேருந்து விபத்தில் காயவடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இறந்தவரின் உடல்கள் மரண பரிசோதனை பின்னல் உறவினர்களிடம் கை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள், அதிகரித்து காணப்படுவதும் அதனை தடுக்க முடியாது இலங்கை போலீஸ் சற்று திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி

ஈரான் – இஸ்ரேல் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் இருக்கும் இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி எடுத்துள்ளது.

நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது.

ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.

இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.

இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ருவிட்டரில்

“நேபாளம் மற்றும் இலங்கை அரசுகளின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மீட்டு அனுப்பி வைக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது.

நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்கள் டெலிகிராம் வாயிலாகவோ அல்லது +989010144557, +989128109115, +989128109109 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

தற்போது ஈரானில் 37 இலங்கையர்கள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு ,கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால்

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (22) கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஒரு மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப்பெற்ற 60 மாணவர்கள் வீதம் தெரிவு

செய்யப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நிதிப் புலமைப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மாகாண ரீதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் முதல் நிகழ்வு, இன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம்,

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டுவதற்கு, ஜனாதிபதி நிதியம் தயாராகி வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி ,அம்பாறை பகுதியில் நபரொருவரிடம் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் இன்று (21) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை குற்றத் தடுப்பு பிரிவில் பணியாற்றிய இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் என தெரியவந்துள்ளது.

மணல் போக்குவரத்து தொழில் நடவடிக்கைகளை எவ்வித இடையூறும் இன்றி மேற்கொள்வதற்காகவும், அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள்

மேற்கொள்ளாமல் இருப்பதற்காகவும், குறித்த இரு அதிகாரிகள் 25,000 ரூபாய் இலஞ்சமாக கோரியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவரும் இலஞ்சம் கோரியமை, அதனைப்

பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்

காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்

காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ,வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்று (21) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டில்

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்ற காணிகளை விடுவிக்க கோரிய அமைதி வழிப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காணிகள் யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகிறது.

ஆனால் யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னராக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் மக்கள் காணிகளை படிப்படியாக சிறிய சிறிய துண்டுகளாக விடுவித்தனர்.

இருப்பினும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சுயமாக தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் 2400 ஏக்கர்

காணிகளையும் முழுமையாக விடுவிப்பதே தமது வாழ்வியலை முன்னெடுக்க முடியும் என்ற நோக்கில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

150மில்லியன் வழங்கும் உலக வங்கி
Posted in இலங்கை செய்திகள்

150மில்லியன் வழங்கும் உலக வங்கி

150மில்லியன் வழங்கும் உலக வங்கி

150மில்லியன் வழங்கும் உலக வங்கி ,150 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக இலங்கைக்கு அள்ளி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

உலக வங்கி கடன் உதவி

உலக வங்கியானது இலங்கையின் அபிவிருத்தி பணிக்காக 150 மில்லியன் டாலர் பெறுமதியான பணத்தினை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

இந்த பணம் கட்டம் கட்டமாக இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட உள்ளது .ஸ்ரீலங்காவின் கிளீன் எனர்ஜி திட்டதற்காக இந்த உதவி திட்டம் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

உலக நாடுகள் ஓடி ஓடி கடனை வாங்கி குவிக்கும் இலங்கை ,தான் பட்ட கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகிறது.

ஆளும் அதிகாரம் கொண்ட ஆட்சி அதிகாரம் இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் நிதிகளை, லஞ்ச உடல் மோசடியாக தாங்கள் அபகரித்து செல்கின்ற நடவடிக்கை காணப்படுகிறது.

இதனால்தான் இலங்கையின் இன்றைய காலப் பகுதியில் பிரபல லஞ்ச ஊழல் பெருகி காணப்படுகிறது.

இலங்கை அபிவிருத்தி பணிக்கு என கோரிக்கைகளை விடுத்து உலக வங்கி இந்த பணத்தினை வழங்க முன் வந்துள்ளது வரவேற்கத்தக்கது .

பெரும் தொகை பணம் உலக வங்கியால் வழங்கல்

ஆனால் உலக வங்கியால் வழங்கி வைக்கப்படும், இந்த பெருந்தொகை பணம் உரிய முறையில் அபிவிருத்தி பணிக்காக செயல் படுத்தப்படுமா ..?

பொருளாதாரத்தில் நலிவடைந்து கிடக்கும் இலங்கையின் பொருளாதாரம், இந்த பணத்தின் ஊடாக இவ்வளவு நிமித்தப்படுமா? அதற்கு உலக வங்கி இந்த நிதி மிகப்பெரும் சாதனையாக இருக்குமா

இவ்வாறான கேள்விகள் எழுகின்ற பொழுது, உலக வங்கியில் வழங்கப்பட்ட நிதியினை ஆளுகின்ற அரசுகள் ஆட்டைய போட்டு மக்களை ஏமாற்றுவது என்பதே இந்நிலவரமாக உள்ளது.

ஈரானில் இருந்து இலங்கையர்கள் வௌியேற்றம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து

இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து

இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து,ஈரானில் இருந்து இலங்கையர்களை வௌியேற்ற இந்தியா உதவிக்கரம் ,ஈரானில் இருந்து இலங்கைஉயர்கள் வெளியேற்றம்.

இலங்கையர்கள் வெளியேற்றம்

ஈரானில் இருந்து இலங்கையர்கள் வெளியேற்றம் இடம்பெற்று வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய படைகளுக்கும் ஈரானுக்கும் இடையில் திடீர் யுத்தம் இடம்பெற்று வருகிறது.

இந்த யுத்தம் கடுமையாக இடம் பெற்று வருவதால் ,இலங்கையர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ,ஈராலில் இருந்து இலங்கையர்களை வெளியேறுமாறு இலங்கை உத்தரப்பட்டுள்ளது .

அதனை அடுத்து ஈரானில் தங்கி உள்ள இளைஞர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா உதவி புரிந்து வருவதாக தற்போது இலங்கை அரசு அறிவித்துள்ளது .

உயிருக்கு ஆபத்து

தனது நாட்டு குடிகளை உயிருக்கு ஆபத்து பாதுகாப்பாக இலங்கை தெரிவித்து விசேட மீட்பு நடவடிக்கையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு செயல்பட்டு வருகிறது.

இதற்கு உறுதுணையாக இந்தியாவின் உதவியை இலங்கை கூறியதை அடுத்து அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இலங்கை அழைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூத படைகளுக்கும் ஈரானிய ராணுவ படைகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வருகிறது.

இந்த போரில் இருபகுதியும் கடுமையான சேதங்களை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர்

இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர்

இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர் ,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வல்கர் டர்க் இம்மாதம் இலங்கை பெற உள்ளதாக இலங்கையின் பிரதான செய்திகள் தெரிவிக்கின்றது .

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தம்

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக மனித உரிமை பேரவையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன உள்ளூர் வழிமுறைகள் அரசுகள் தீர்மானத்தை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பது விதியாக இருக்கிறது.

ஆனால் அதனை இலங்கை அரசு இதுவரை செய்யவில்லை அதனை எடுத்து எதிர்வரும் ஜூன் 23 26 தினங்களில் இலங்கையில் இவர் தங்கையை பரணமும் பல்வேறுபட்டவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை கூட்டத்துடன் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இவர் இங்கு வந்து இடங்களுடன் பேரன்பேசிகளில் ஈடுபடுவர் என நம்பப்படுகிறது.

16 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள்

16 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள் பாரிய பொழுதும் இதுவரை இது விதமான தீர்ப்பும் அங்கு ஏற்படவில்லை.

இவர்களும் ஏமாற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆர்வலர்களாகவே காணப்படுவதாக தவறு.

இறுதி முள்ளிவாய்க்கால் யுத்தம் இடம்பெற்று பதினாறு ஆண்டுகள் முடிந்த பொழுதும் பாதிக்கப்பட்ட தமிழருக்கு

ஐக்கிய நாடு சபையின் மனித உரிமை பேரவை ஏன் தீர்வுகளை பெற்று தரவில்லை என்ற கேள்வி இவர்கள் எழுப்பி நிக்கிறார்கள்.

பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு

பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு

பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு ,வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்யும் கூட்டம், வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில் இன்று (20) நடைபெற்றது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 8 பேர், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பில் 5 பேர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் 4 பேர், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

பேர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) சார்பில் 2 பேர், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவர், மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் 2 பேர் என

மொத்தம் 28 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி

தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் கந்தையா யசீதன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ்க்

காங்கிரஸ் சார்பில் நாகராசா பகீரதன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், தவிசாளர் தேர்வு பகிரங்க வாக்கெடுப்பு மூலமா அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலமா நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டார்.

இதன்போது, பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக 19 வாக்குகளும், இரகசிய வாக்கெடுப்புக்கு 9 வாக்குகளும் பதிவாகின.

பகிரங்க வாக்கெடுப்பில், கந்தையா யசீதன் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.டி.பி., மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் 13 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

நாகராசா பகீரதனுக்கு 9 வாக்குகள் கிடைத்தன. தேசிய மக்கள் சக்தி (6 வாக்குகள்) நடுநிலை வகித்தது.

இதேவேளை, உப தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் பேரின்பநாயகம் சுபாகர் மற்றும் சங்கு-சைக்கிள் கூட்டணியின்

சார்பில் தர்மகுலசிங்கம் உதயகுமார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பேரின்பநாயகம் சுபாகர் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

மேச்சல் நிலப்பிரச்சினை 30பேர் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

மேச்சல் நிலப்பிரச்சினை 30பேர் விடுதலை

மேச்சல் நிலப்பிரச்சினை 30பேர் விடுதலை

மேச்சல் நிலப்பிரச்சினை 30பேர் விடுதலை ,மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி 2023 ஒக்டோபர் 8 அன்று கொம்மாதுறை பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30

பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. நீதிபதி மதுஜலா

கேதீஸ்வரன், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

கடந்த 2023 ஒக்டோபர் 8 அன்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு – செங்கலடி வருகையின்போது, மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக, வீதிப்

போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், முறைகேடாக ஆட்களைத் தடுத்து வைத்தல் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஏறாவூர் பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டது.

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி

இவ்வழக்கு விசாரணை, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் நேற்று (20) நடைபெற்றது.

விசாரணையின்போது, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு மேலதிக ஆதாரங்கள் இல்லாததால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின்

186ஆவது பிரிவின் கீழ் நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து, குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

பிரதேசசபையின் தவிசாளராக கந்தையாயசீதன் தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

போலி பணத்துடன் சந்தேகநபர் கைது

போலி பணத்துடன் சந்தேகநபர் கைது

போலி பணத்துடன் சந்தேகநபர் கைது போலி நாணயத்தாள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஹதரலியத்த பொலிஸால் பல்வேறு விடயங்களை கண்டறிந்துள்ளனர்.

நேற்று (20) மதியம் ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை வழங்கிய நபர் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய விசாரணையின் போது இது தெரியவந்துள்ளது.

போலி நாணயத்தாள்களை வைத்திருந்தவர் கைது

அதன்படி, போலி நாணயத்தாள்களை வைத்திருந்த கண்டி, உடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து மூன்று போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள், இரண்டு போலி 500 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் இரண்டு போலி 100 ரூபா நாணயத்தாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

மேலும், சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போலி 50 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 9 கடதாசிகள், போலி 100 ரூபா நாணயத்தாள்கள்

அச்சிடப்பட்ட 4 கடதாசிகள், போலி 500 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 4 கடதாசிகள், போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 6 கடதாசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

கள்ள நாணயத்தாள்களை அச்சிட்ட சந்தேக நபர் கைது

இதேவேளை, இந்த போலி நாணயத்தாள்களை அச்சிட்ட சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கலகெதர பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விசாரணை அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இருப்பினும், சந்தேக நபர் அந்த நேரத்தில் நிறுவனத்தில் இல்லை, மேலும் போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு கணினி மற்றும் அச்சு இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து ஹதரலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்மக்களை கைவிடமாட்டோம் அமைச்சர் சந்திரசேகர்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ்மக்களை கைவிடமாட்டோம் அமைச்சர் சந்திரசேகர்

தமிழ்மக்களை கைவிடமாட்டோம் அமைச்சர் சந்திரசேகர்

தமிழ்மக்களை கைவிடமாட்டோம் அமைச்சர் சந்திரசேகர் ,வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியாக மாறிவருகின்றது என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று (20) யாழ்ப்பாணம் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் கமநல

அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரோஹன ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, சிறப்பு அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்

சந்திரசேகர், விசேட அதிதியாக வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அதிபர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இலங்கையில் வாழ முடியாது என்ற மனோ நிலை எமது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி மற்றும் வேலைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.

மறுபுறத்தில் பிறப்புவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 1981 காலப்பகுதியில் 8 இலட்சத்துக்கு மேல் இருந்த யாழ்.மாவட்ட சனத்தொகை தற்போது 6 இலட்சம் வரைதான் உள்ளது.

முன்னர் 11 எம்.பிக்கள் இருந்தனர். இன்று யாழ்.மாவட்டத்தில் ஆறு எம்.பிக்களே தெரிவாகின்றனர். அடுத்த தேர்தலின்போது இது மேலும் குறைவடையக்கூடும். ஏனெனில் புலம்பெயர்வு அதிகரித்துள்ளது.

வடக்கை முன்னேற்றுவது பற்றி, விவசாயம் உள்ளிட்ட தொழில்துறைகளை மேம்படுத்துவது பற்றி கடந்த காலங்களில் கவனம் செலுத்தப்படாமையும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி உருவாக காரணமாக அமைந்தது.

இந்நிலைமையை மாற்றியமைக்கவே நாம் வந்துள்ளோம். வடக்கு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்த வியூகம்

வகுக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்கள பற்றி சிந்திக்கக்கூடிய தலைவர் நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார். அதனால்தான் பாதீட்டில்கூட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே, தமிழ் மக்களை

நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்;. மக்கள் கைவிட்டால்கூட, மக்களுக்காக செய்ய வேண்டிய திட்டங்களை நிச்சயம் நாம் செய்வோம்.” – என்றார்.

விபத்தில் இளம் பெண் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் இளம் பெண் பலி

விபத்தில் இளம் பெண் பலி

விபத்தில் இளம் பெண் பலி ,புத்தளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் பெண்கள் பலியாகி உள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

40 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இந்த விபத்தில் பலியாகி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பாலாவி ஊடாக கருப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசர் ஒன்று ,வீதியில் சென்று கொண்டிருந்த பெண் மீது திடீரென மோதியது .

இந்த வண்டி மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு தற்பொழுது பெண் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணை அதிகாரிகள் விசாரணை முடிந்ததும் சடலத்தை கையளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

சம்பவம் தொடர்பாக புத்தளம் போலீசார் திடீர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்தில் ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .

இந்த வீதி விபத்தினால் மாதம் ஒன்றுக்கு இருவருக்கு மேற்பட்டவர்கள் பலியாகியம் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்து வருகின்ற னர் .

ஆண்டுதோறும் 36.000க்கு மேற்பட்ட வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

ஆளுகின்ற அரசுகள் இந்த வீதிபத்துக்களை தடுக்க மறந்ததன் காரணமாகவே இவ்வாறான உயிர் பலிகள் இடம்பெற்று வருவதாகவும் ,சாரதிகளுக்கு உரிய முறை பயிற்சி வழங்கும் பீதி விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த விபத்து இனம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு

இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு

இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு ,இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஈரான் புரட்சி படைகள் அறிவித்துள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த. யூத படைகளின் ஏவுகணை செலுத்தி கூடங்கள் முற்றுமுழுதாக ,தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சி படைகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற நேரடி யுத்தத்தின் பொழுதே ,மேற்படி அழித்தொழிப்பு தாக்குதலை மேற்கொண்டு, யூத படைகளுக்கு பெரும் இழப்பினை வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து வரும் இந்த இராணுவ நடவடிக்கையினால் ,தற்பொழுது இஸ்ரேல் பல பகுதிகள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

இதுவரையில் 15க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயமடைந்தும் 24 மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடராக இஸ்ரேல் நடத்திவரும் ஏவுகணை தாக்குதினால் 19க்கும் மேற்பட்ட சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ,தற்பொழுது யூத படைகள் பொய் பரப்புரவுகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனை முறியடித்து தற்பொழுது ஈரான் புரட்சி படைகள் தொடர்ந்தும் தீவிரமான தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால் இஸ்ரேல் அதிர்ந்த வண்ணம் உள்ளது.

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான்

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான்

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான் ,இஸ்ரேலுக்குள் நுழைந்து இஸ்ரயேலின் மிக முக்கிய இராணுவ படையணிகள் தங்கியுள்ள குடியிருப்பு தொகுதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நிலை கொண்டிருந்த மக்கள் பகுதிகள் மீது தாக்குதல் நடத்த பட்டது .

இந்த திடீர் தாக்குதலினால் இஸ்ரேல் இப்பொழுது நிலை குலைந்து போயுள்ளது .

சற்றும் எதிர்பாரத அதிர்ச்சி வைத்தியத்தை இஸ்ரேல் மீது ஈரான் இராணுவம் நடத்தியது .

இதில் பலமான இழப்பை இஸ்ரேலிய யூத வாசிகள் சந்தித்துள்ளன .இந்த தாக்குதல் மிக பெரும் அதிர்வலைகளை இஸ்ரேலுக்கும் கொடுத்துள்ளது .

மக்கள் மிக பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதை இந்த தாக்குதல்கள் கோடிட்டு காட்டியுள்ளன .

இஸ்ரேல் மிக பெரும் அழிவை சந்திக்கும் என்பதற்கு இந்த தாக்குதல் எடுத்து காட்டியுள்ளது .

எமது நாட்டை இஸ்ரேல் தாக்கும் என எதிர் பார்த்திருந்த ஈரான் அதற்கேற்ப ,புதிய தாக்குதல் தந்திரோபாயங்களை கையாண்டது .

அதற்கு இணங்க தற்போது ,தாம் வீழ்ந்தாலும் தமது மண் இஸ்ரேல் வசம் வீழ்ந்து விட கூடாது என்பதில் இஸ்ரேலிய இராணுவ உயர் மட்டங்கள் கூடி ஆராய்ந்து வருகின்றன .

அதற்கு ஏற்ப புதிய திட்டங்களை வகுத்து அவர்கள் நகர்ந்து செல்கின்றன .ஈரானின் மிக முக்கிய தளபதிகளை காட்டி கொடுத்த கயவர் கும்பல் என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது .

தமது இராணுவத்தின் முக்கிய தளபதிகள் அழிந்தாலும் ,இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கியமான இராணுவ அதிகாரிகளையும், ஈரான் இராணுவம் பதிலுக்கு போட்டு தள்ளியுள்ளது .

இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட .தக்கது .