மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம்

மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம்

மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம் ,செம்மணி மக்கள் படுகொலை தொடர்பாக ,கொதித்து எழுந்து நின்ற பொழுது, அங்கு சென்ற அரசியல்வாதிகளை மக்கள் ஓட ஓட விரட்டியடித்தனர் .

சிவஞானத்தை வண்டிவரை மக்கள் விரட்டி சென்னறனர்

இதன் பொழுது சிவஞானம் அவர்களை வண்டிவரை மக்கள் விரட்டி சென்னறனர் .

ஆனால் தங்களை யாரும் விரட்டவில்லை ,மக்கள் என்னோடுதான் இருக்கிறார்கள் இதெல்லாம் பொய் வதந்திகள் பரப்பாதீர்கள் என்று ஐயா சிவஞானம் உருட்டு விட்டுள்ளார் உருட்டு கட்டை உருட்டு சிதம்பரம்.

வேட்டி கழண்டு விழாத குறையாக ஓட்டம்

வேட்டி கழண்டு விழாத குறையாக ஓடித் தப்பிய ஊழல்வாதிகளும் ,ஓட்டுக்குழு ஆசாமிகளும், இப்பொழுது ஊடகங்கள் முன்னால் குந்தி இருந்து எங்களுக்கு மக்கள் ஆதரவு என கத்தி வருகின்றனர் .

பாடையில போற வயதில், கூடையில் வருகிறது குஷ்பூ மாதிரி ஆட முற்பட்ட ,சிவ ஞானத்தை பார்த்து மக்கள் சிரிக்காமல் என்ன செய்வார்..?

ஏமாற்றி வந்தால் இப்படித்தான் நடக்கும் என்பதை இனியாவது இந்த அரசியல் உருட்டு வாதிகள் உருட்ட கட்டுகள் உணர்ந்து கொள்வார்களாக.

இவர்களது இந்த பேச்சைக் கேட்டு மக்கள் தற்போது சிரித்து நகைச்சுவை ஆடுகிறார்கள்.

இந்த ஓட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா சுருட்டு கட்டை அயோக்கியர்களே .

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு

தென்னாபிரிக்க முன்னாள்ஜனாதிபதி அநுர சந்திப்பு ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கு இது தனது முதல் விஜயம்

இலங்கைக்கு இது தனது முதல் விஜயம் என்றும், கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமாக

இருந்ததாகவும் கூறிய முன்னாள் ஜனாதிபதி ம்பெக்கி, இதுபோன்ற சமயத்தில் இலங்கைக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்று கூறினார்.

தென்னாபிரிக்காவும் இலங்கையும் புவியியல் ரீதியாக தூரம் இருந்தாலும், வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இருப்பதால் இரு

நாடுகளும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன என்றும், பல்வேறு வகையான மக்கள்

குழுக்களை ஒன்றிணைப்பதில் இலங்கை ஜனாதிபதியுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தான் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய பொருளாதார சவால்கள்

பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் தேசிய நல்லிணக்க

சவால்களை இலங்கை ஜனாதிபதி சமாளிக்க முடியும் என்று ம்பெக்கி நம்பிக்கை தெரிவித்தார்.

நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளித்து நாட்டை முன்னோக்கி

நகர்த்துவதற்கும் தான் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம் ,கடந்த இரவு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச்சூட்டு சம்பந்தமாக விசாரணை ஆரம்பித்துள்ள போலீசார் மேற்கண்டவாறு தெரிவிக்கின்றனர்.

காயம் அடைந்தவர் மிகுந்தலையைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் எனவும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார் என்பது தொடர்பாக இன்னும் தெரிய வரவில்லை.

எனினும் குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் இரகசிய குற்றத் தடுப்பு போலீஸ் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அனுராவினுடைய ஆட்சி அரியணையில் ஏறித்தன் பின்னர் இலங்கையில் அதிகமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த சூட்டத் தாக்குதலுக்கு பின்புலமாக உள்ளவர் யார்? ஏன் இவர் மீது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றது என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துப்பறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதும் ,அதன் ஊடாக பல தடயங்களை சேகரித்துள்ளனர்.

அதனை மையமாக வைத்து குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகிறது.

SLTBதனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல்
Posted in இலங்கை செய்திகள்

SLTBதனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல்

SLTBதனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல்

SLTBதனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல் ,பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து

தனியார் பேருந்து அரசபேரூந்து ஊழியர் மோதல்

ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் டிப்போ முகாமையாளர் உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறையிலிருந்து பொலன்னறுவை டிப்போவிற்கு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, தனியார் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களையும்,

வழியில் பருவச் சீட்டுகளைப் பெற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு சென்றதால், தனியார் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறையிலிருந்து வந்த பேருந்தில் டிப்போ முகாமையாளரும் இருந்துள்ளார். மேலும் பொலன்னறுவை டிப்போவிற்கு முன்னால் பேருந்து கடக்கும்போது தனியார் பேருந்து சாரதி டிப்போ முகாமையாளரைத் தாக்கியதால் மோதல் அதிகரித்தது. பின்னர்

டிப்போவில் இருந்த அதிகாரிகள் குழு தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு பேரூந்து ஊழியர்கள் காயம்

காயமடைந்தவர்களில் இலங்கை போக்குவரத்து சபையின் மூன்று ஊழியர்களும், தனியார் பேருந்து ஊழியர்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவை மாவட்டத்திலும், நீண்டதூர பயணங்களுக்காகவும் சுமார் 135 இ.போ. சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாகவும், மேற்படி தாக்குதல் சம்பவத்திற்கு

எதிர்ப்பு தெரிவித்து இன்று (26) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் டிப்போ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலன்னறுவை டிப்போவில் பல பேருந்துகள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் பிரதான வாயில் மூடப்பட்டுள்ளது, இதனால் ஊழியர்கள், பேருந்துகள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு பொலிஸாரினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலன்னறுவை பொலிஸார் டிப்போவுக்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் பொலன்னறுவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரிக்கும் நோய்கள் எச்சரிக்கும் சுகாதாரஅமைச்சு
Posted in இலங்கை செய்திகள்

அதிகரிக்கும் நோய்கள் எச்சரிக்கும் சுகாதாரஅமைச்சு

அதிகரிக்கும் நோய்கள் எச்சரிக்கும் சுகாதாரஅமைச்சு

அதிகரிக்கும் நோய்கள் எச்சரிக்கும் சுகாதாரஅமைச்சு ,நடவடிக்கை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் குழந்தைகளிடையே தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.

நோய் அதிகரிப்புக்கு காரணம்

உட்கொள்ளும் உணவு முறைமையே இந்த நோய் அதிகரிப்புக்கு காரணம், என ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் மோனிகா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகங்கள் சந்திப்பின்போது ,இந்த விடயத்தை தெரிவித்தார்.

நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தொற்று நோய்கள் தற்பொழுது குழந்தைகளுடைய அதிகம் அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.

பிட்ஸா, பேக்கர் ,மற்றும் கொழுப்பு நிறைந்த அதிகமான உணவுகளை உட்கொள்வது ,உடலுக்கு ஒவ்வாமையான உணவுகளை அதிகமாக உட்கொள்வதை இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே மக்கள் மிகப் பெரும் நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கிறார்.

இதேபோல இலங்கையில் ஐந்து பெண்களுக்கு ஒருவர் வன்முறைக்கு உள்ளாட்சி பெறுவதாகவும் இவையும் தடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார் .

புதிய வகை உணவு

இந்த புதிய வகை உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து புரதச்சத்து அதிக காரணத்தினால் இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்று வருகிறதால் என அவர் கூறாமல் கூறுகிறாரா என்பது பொருளாகிறது.

ஆகவே மேற்கத்திய நாடுகளை விரும்பி உண்ணும் உறவுகளை கொஞ்சம் உங்களில் கவனம் செலுத்துமாறு அவர் இதனூடாக வேண்டுதல் கொடுத்துள்ளார்.

நோயில்லா உடலோடு நீங்கள் வாழ வேண்டுமாக இருந்தால் இந்த உணவுகளை சற்று பின்தள்ளி போடுதல் அல்லது உண்பதை தவிர்த்துக் கொள்ளுதல் உங்கள் உடலுக்கு உசுத்தமானது என்பதாக அவர் தெரிவிக்கின்றார்.

ஐநா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்டவிடயம்
Posted in இலங்கை செய்திகள்

ஐநா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்டவிடயம்

ஐநா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்டவிடயம்

ஐநா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்டவிடயம் ,இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்ட விடயம்

மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய

மனித உரிமைகள் பேரவை

நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் நேற்று இரவு அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம்

சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சிறீ பவனாந்தராஜா ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் பங்கேற்றனர்.

கருத்துத் தெரிவித்த இராசமாணிக்கம் சாணக்கியன்

சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சனைகள் காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைத்

தமிழர் பிரச்சனை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் என்னிடம் தெரிவித்தார்.

ஈரான் – இஸ்ரேல், பாகிஸ்தான் – இந்தியா, ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – பலஸ்தீனம் என சர்வதேச ரீதியில் நாடுகளிடையே பிரச்சினைகள் நிலவும் போது இலங்கை விவகாரம் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தில் காத்திரமாக

பேசப்படுமா என நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம் கேட்ட போது, இலங்கை விவகாரம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக தெரிவித்தார் –

மேலும் மனித புதைகுழிகள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக குறித்த சந்திப்பில் பேசப்பட்டது – என்றார்.

மிக மோசமாக அரசாங்கம் நடக்காமல் இருப்பதற்கு ஜெனீவா தீர்மானங்களை தொடர்ந்து முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித

உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு வலியுறுத்தியதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில், காணிப் பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை சிறைகளில் வாடுகின்றவர்களின் பிரச்சினைகளை நாம் சொல்லும் போது அவர் தமக்கு தெரியும் என்று

சொன்னார். முக்கியமாக பல பிரச்சினைகள் எடுக்கப்படுகின்றபடியால் எவ்வளவு தூரம் இலங்கை விவகாரத்தில் அக்கறை எடுக்கப்படும் என்பது

தனக்கு தெரியாது. இருந்தாலும் தன்னுடைய முயற்சியை தான் முழுமையாக எடுப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து செம்மணி புதைகுழி உள்ளிட்ட நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டதுக்கு நாம் நன்றி சொன்னோம் – என்றார்.

செம்மணி, குருந்தூர் மலை வெடுக்குநாறி மலை, வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டியதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கையிலே பொறுப்பு

கூறல் என்பது நேர்மையான கண்ணியமான முறையில் முன்வைக்கப்படவில்லை.

பொறுப்புக் கூறலை பரிகார நீதியுடன் கூடியதாக வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் தெளிவுடன் எடுத்து கூறியுள்ளோம் – என்றார்.

முப்பது வருடப் போரிலும் அதற்கு பிற்பட்ட 16 வருடங்களிலும் எதுவித முன்னேற்றத்தையும் காணாத தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தான்

எடுத்துக் கூறியதாகவும் எமது அரசாங்கம் இந்த பிரச்சினையை கையாண்டு மக்களுக்கு தீர்வை தருவதில் மிக முனைப்பாக இருப்பதாக தான்

சுட்டிக்காட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீ பவனாந்தராஜா தெரிவித்தார்.

தீயில் எரிந்த வண்டி
Posted in இலங்கை செய்திகள்

வண்டி தீயில் எரிந்தது

வண்டி தீயில் எரிந்தது

வண்டி தீயில் எரிந்தது ,ஒரு குடும்பத்த பகுதியில் ஒரு கொள்கலன் நொறுக்கி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்தில் சிக்கியதில் அங்கு பாரிய தீ விபத்து சம்பவம் ஏற்பட்டது.

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயம் அடைந்த நிலையில் ,கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து ஏற்பட்டதனால் அந்த வழிச்சாலை போக்குவரத்து பல மணி நேரம் தாமதம் அடைந்தது.

பாதிக்கப்பட்ட வாகனங்கள் விபத்தில் இருந்து மீட்கப்பட்டு அவை வெளியேற்றப்பட்ட பின்னர் இந்த வீதி மூலமும் மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் விபத்துகளினால் ஏழு பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருகின்றனர் .

ஆயிரத்துக்கு மேற்பட்ட விபத்துக்கள்

ஆண்டு ஒன்றுக்கு 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவது இங்கே குறிப்பிடத்தக்கதே.

மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு துப்பாக்கியுடன் கைதான சந்தேகநபர்
Posted in இலங்கை செய்திகள்

உள்நாட்டு துப்பாக்கியுடன் கைதான சந்தேகநபர்

உள்நாட்டு துப்பாக்கியுடன் கைதான சந்தேகநபர்

உள்நாட்டு துப்பாக்கியுடன் கைதான சந்தேகநபர் ,ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமரசேன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் மகாண பொலிஸ் விசேட பிரிவு

தென் மகாண பொலிஸ் விசேட பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (25) பிற்பகல்

முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

55 வயதுடைய ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரவைகள் 18, போர 12 ரக ரவைகள் மூன்றும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் ஹிக்கடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் பாவனைக்கு தடை விதிக்க பட்டுள்ள நிலையில் ,தற்போது இந்த துப்பாக்கிகள் மீளவும் தயாரிக்க பாடுவது மிக பெரும் குற்றமாக பார்க்க படுகிறது .

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் ,முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவு

மேலும், இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க

முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி

இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி மே மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

பின்னர், முன்னாள் அமைச்சரை கல்கிஸ்ஸ பதில் நீதவான் முன்னிலையில் கடந்த 19ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
Posted in இலங்கை செய்திகள்

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் ,தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (26) கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

குற்றப் பத்திரிகை

தொடர்புடைய குற்றப்பத்திரிகையில் 13 குற்றச்சாட்டுகள் உள்ளன.

2022 ஆம் ஆண்டில், நாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற போர்வையில், சுகாதாரத் துறையின் ஏற்கனவே இருந்த கொள்முதல் நடைமுறைகளை

மாற்றி, மருந்துகளுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்து புதிய மருந்துகளை கொள்வனவு செய்தது.

இவ்வாறு கொள்வனவு செய்த மருந்துகளில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் காணப்பட்டதோடு, அதனை செலுத்திக்கொண்ட கண்டி,

மாத்தளை மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த நோயாளர்கள் மூவர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாகக் கிடைத்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்தது.

நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு

பின்னர், அந்த விசாரணை தொடர்பாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, அதில் 12 நபர்கள் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டனர்.

தரமற்ற தடுப்பூசிகளை விநியோகித்த சுதத் ஜனக பெர்னாண்டோ, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின்

முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திர குப்தா மற்றும் சுகாதாரத் துறையில் உயர் அதிகாரிகள் குழு ஆகியோர் இதில் அடங்குவர்.

இந்த வழக்கில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், தரமற்ற

தடுப்பூசிகளை விநியோகம் செய்த முதல் சந்தேக நபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 19 ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு இறுதியாக விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கையிட்டு தெரிவிக்கையில், தரமற்ற தடுப்பூசி சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்

திணைக்களம் ஒரு வருடம், 8 மாதங்கள் மற்றும் 6 நாட்களாக நடத்திய விசாரணைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம தெரிவித்தார்.

அதன்படி, இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன், முன்னாள் சுகாதார

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளான மஹேன் வீரமன், அமாலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகையின்படி, 350 சாட்சிகளும் சுமார் 300 ஆவணங்களும் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள்
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள்

செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள்

செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள் ,செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டிய மக்கள் பேரெழுச்சி பெரும் எழுச்சி கொள்ள வைத்துள்ளது.

அரசியல்வாதிகளை சுற்றி வளைத்த மக்கள்

அந்த பதினாறு ஆண்டுகளாக தமிழர்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற அரசியல்வாதிகளை சுற்றி வளைத்து மக்கள் விரட்டி அடித்தனர்.

அணையா தீபா போராட்டம் இடம்பெற்று கொண்டிருந்தது இவ்வேளையில் ,அங்கு சென்ற தமிழரசு கட்சி அனுரா கட்சியை உள்ளிட்டவர்களை மக்கள் விரட்டி அடித்தனர் .

அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், சிவஞானம் ,சாணக்கியன், போன்றவர்களை மக்கள் விரட்டி அடித்தனர் .

எட்டப்பன் சுமந்திரன் செயல் தமிழர் உடைய வாழ்வியலை குழப்புற நடவடிக்கை எனவும் ,சிங்களது கைக்கூலி எனவும் அங்கு போரடத்தை நடத்தியவர்கள் உறுமினார்கள் .

தமிழர் தேசிய அரசியல் வரலாற்றை பேசுகின்ற இவர்களை மக்கள் சுற்றி வளைத்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள்

ஆகவே தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள் என்பதை மேற்படி விடயம் கட்டிய பட்டுள்ளது.

கூட்டு வைத்து தமிழரசு கட்சி உடைத்து நாசம் செய்த சுமந்திரன் ,சாணக்கியன் சுமந்திரன் சிவஞானம் போன்றோர் எட்டப்பர்கள் என மக்கள் விரட்டி அடித்தனர் .

ஆட்சியில் அங்கம் வைத்து அமைச்சர் சந்திரசேகரன் எம்பி இளங்குமரன் உள்ளிட்டவர்களும் போக்கிரிகள் என்பதை மக்கள் இந்த இடத்தில் காட்டி இருக்கிறார்கள் .

எங்களை விட்டால் காணும் என ,பிடரியில் கால்பட ,தலை தெறிக்க ஓடி உள்ளார்கள் .

கயவர் கும்பல்களுக்கு இது ஒரு மக்கள் எழுச்சி என்பதை இந்த விடயம் காண்பிக்கிறோம்.

மலர்தூவி அஞ்சலிசெலுத்திய UNமனித உரிமைகள்உயர்ஸ்தானிகர்
Posted in இலங்கை செய்திகள்

மலர்தூவி அஞ்சலிசெலுத்திய UNமனித உரிமைகள்உயர்ஸ்தானிகர்

மலர்தூவி அஞ்சலிசெலுத்திய UNமனித உரிமைகள்உயர்ஸ்தானிகர்

மலர்தூவி அஞ்சலிசெலுத்திய UNமனித உரிமைகள்உயர்ஸ்தானிகர் ,இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்று (25) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.

உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் மாலை வந்திறங்கிய உயர்ஸ்தானிகர், முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார்.

அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார்.

அதன் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள் , மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாக பொலிஸ்

நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ். வளைவுக்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘அணையா

விளக்கு’ போராட்ட களத்திற்கு நேரில் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட அணையா தீபத்திற்கு முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஐநா ஈழத் தமிழரை கைவிட்டது
Posted in இலங்கை செய்திகள்

ஐநா ஈழத் தமிழரை கைவிட்டது

ஐநா ஈழத் தமிழரை கைவிட்டது

ஐநா ஈழத் தமிழரை கைவிட்டது ,ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐ.நா சபை வடக்கில் இருந்து

சாட்சியம் இல்லாத யுத்தம்

முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க காரணமாக அமைந்து விட்டது.

இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடைபெறவில்லை.

அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

ஈழத்தமிழ் உடன் பிறப்புகள்

யுத்தம் நடைபெற மூல காரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐநா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள்.

ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விட வேண்டாம் என உங்களை கோருகிறேன்

என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் நேரடியாக தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இதன் போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கையில் மக்கள் மத்தியில் மிகவும் பின் தங்கிய பிரிவினராக வாழ்கிறார்கள். காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம்.

தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும் சமீபத்திய

இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்த ஐ.நா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, தனது அறிக்கையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் காத்திரமாக குறிப்பிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையை அவர் உங்கள் ஐநா மனித உரிமை ஆணையகத்தின் 51ஆவது அவைக்கு சமர்பித்தார்.

அதை கவனத்தில் கொள்ளுமாறு உங்களை கோருகிறேன்.

இலங்கையை பற்றி அறிக்கை சமர்பிக்கும் போது, தவறாமல் இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்கள் குறிப்பாக,

பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொட ர்பில் கவனம் செலுத்தும் படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உங்களை மேலும் கோருகிறேன்.

இலங்கையில் வாழும் மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழ வில்லை. இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள்.

காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடி உரிமை முழுமை அடையும்.

அதை ஐ.நா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இருவர் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

இருவர் சுட்டு கொலை

இருவர் சுட்டு கொலை

இருவர் சுட்டு கொலை ,சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதுடன், தற்போது மூன்று விசேட விசாரணைக் குழுக்கள், மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தல்

மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தல்

மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தல் ,அரசியலமைப்புத் திருத்தமொன்று தேவை மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தா ,பாராளுமன்றத்தில் நேற்று (24) நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடனான விசேட சந்திப்பில்,

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க் (Volker Türk) கலந்து கொண்டார். இச்சந்திப்பில் பெரும்பாலான முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, மனித உரிமை

அரசியலமைப்புத் திருத்தமொன்று தேவை
அரசியலமைப்புத் திருத்தமொன்று தேவை

சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு பரந்த பார்வை தேவையென்பதை ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் துர்க் வலியுறுத்தினார்.

குறிப்பாக, கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாதம், வன்முறைகள் மற்றும் உள்நாட்டுப் போர் காரணமாக பாதிக்கப்பட்ட சமுதாயங்களின், குறிப்பாக

தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் வாழும் பகுதிகளில், சமூக மற்றும் பொருளாதார மேம்பாடுகள் முன்னேற வேண்டிய அவசியம் குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் தொடர்பான அணுகுமுறைகள் சமூகவியல் நுட்பத்துடனும், அளவீட்டு நேர்மையும், சமூக நீதி மற்றும் பூரணப் பங்கேற்பும் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பங்கேற்ற கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி கருத்து

தெரிவிக்கையில், நாட்டில் நிலையான நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக மக்களாட்சி வலுவூட்டல் மற்றும் அதிகாரப் பகிர்வின் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலைநாடு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது மாகாண பிரதிநிதிகள் ஊடாக அரசியல் அதிகாரம் செலுத்தும் உரிமையை

பெற வேண்டும் என்றும், நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை, மனித உரிமை தொடர்பான சவால்கள், போருக்குப் பிறகு சமூகங்களின் மீட்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் மீதான ஐ.நா பார்வையை வெளிப்படுத்தும் ஒரு

முக்கியமான நிகழ்வாக அமைந்திருந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது

எரி பொருள் தட்டுப்பாடு ஏற்படாது

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது ,நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

“மக்களுக்கு சொல்ல விரும்புவது, எந்த பிரச்சனையும் இல்லாமல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை நாங்கள் முன்பதிவுகள் செய்துள்ளோம். அந்த முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் எந்த காரணத்தினாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. பிரச்சனை என்னவென்றால், எரிபொருள் எந்த இடங்களிலிருந்து வருகிறது என்பதுதான்.

அதற்கு பிறகு, போரின் தாக்கம் இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.” என்றார்.

அத்துடன் தற்போதைய நிலைமையில், சட்டவிரோதமாக எரிபொருள் கையிருப்பு வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்தார்.

“எங்களிடம் உள்ள அறிக்கைகளின்படி, ஒக்டேன் 92 பெற்றோல் பெருமளவு இறக்குமதி செய்யப்படுவது போர் நடக்கும் பிராந்தியத்திலிருந்து அல்ல.

அந்த எரிபொருள் மலேசியா, சிங்கப்பூர், இந்தியாவில் இருந்து வருகிறது.

ஒரே ஒரு இறக்குமதி ஓமானிலிருந்து செய்யப்பட்டது. அதுவும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை.

நாங்கள் அந்த விநியோகஸ்தர்களிடம் பேசி, அதை முழுமையாக உறுதி செய்துள்ளோம். டீசல் விடயத்திலும் அப்படித்தான். எந்த சிக்கலும் இல்லை” என்றார்.

அரசியலமைப்புத் திருத்தமொன்று தேவை
Posted in இலங்கை செய்திகள்

அரசியலமைப்புத் திருத்தமொன்று தேவை

அரசியலமைப்புத் திருத்தமொன்று தேவை

அரசியலமைப்புத் திருத்தமொன்று தேவை ,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் வருகையுடன், நமது நாட்டில் மனித உரிமைகள் குறித்து ஒரு கலந்துரையாடல் எழுந்துள்ளது.

ஜனநாயக சமூகத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமான அம்சமாக காணப்படுகின்றன.

மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை, பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை, பெண்கள்

, குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், இனப் பாகுபாடுகள் காட்டாமை, வன்முறையின்மை மற்றும் சுற்றுச்சூழல் உரிமைகள் பாதுகாப்பு போன்ற உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித

உரிமைகளைப் பாதுகாப்பது ஜனநாயகத்தின் தனித்துவமான அம்சமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக

நமது நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம்,

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகமாகும் என்பன ஊடாக யுத்தத்திற்குப் பிந்தைய காலத்திலான நல்லிணக்கம், நட்புறவு மற்றும்

ஒற்றுமையை அடைய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் அவர்களை நேற்று (24) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்த பின்னர்

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம்
இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம்இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனவே, பெரும்பாலான அரசியல் கட்சிகள் உடன்படுகின்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தெளிவான மாற்றத்தைச் செய்ய வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி

இதில் திருத்தத்தைக் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி தமது ஆதரவை நல்கும். நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் மூலம் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது.

இதிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நான்காவது தூணாக சுதந்திரமான ஊடகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்களால் நடத்தப்படும் ஊடகங்களை ஒழுங்குமுறைப்படுத்த பல்வேறு ஆணைக்குழுக்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், எதிர்க்கட்சி அவற்றை எதிர்க்கும்.

பொருளாதார, சமூக, மத உரிமைகள், அதேபோல் இன்று அடிப்படை மற்றும் மனித உரிமைகளாக இருக்கும் வாழும் உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய பொருட்களின் விலைகளால், மக்களின்

வாழ்வாதாரம் கூட சீர்குலைந்துள்ளது. வாழ்வதற்கான உரிமை கூட நசுக்கப்படுகிறது.

உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகளை பூர்த்தி செய்து கொள்வது பிரச்சினையாக மாறியுள்ளது.

பொருட்களின் விலைகளில் ஏற்படும் சடுதியான அதிகரிப்பு, நாட்டு மக்களின் வாழ்வுரிமையைக் கூட மீறுகிறது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மனித வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காகவும் ஐக்கிய

மக்கள் சக்தி என்றும் முன்நிற்கிறது. அரசியலமைப்பில் தெளிவான மாற்றம் நிகழ்ந்து, மனித மற்றும் அடிப்படை உரிமைகள் பிரிவின் கீழ் வாழ்வதற்கான

உரிமை, கல்வி, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமை ஆகியவை உள்ளடங்க வேண்டும் என தெரிவித்தார்.

22 பகிடிவதை மாணவர்கள் விலக்கல்
Posted in இலங்கை செய்திகள்

22 பகிடிவதை மாணவர்கள் விலக்கல்

22 பகிடிவதை மாணவர்கள் விலக்கல்

22 பகிடிவதை மாணவர்கள் விலக்கல்,பகடி வகை பிரிந்ததாக கூறப்படுகின்ற தென்மேற்கு பல்கலைக்கழகத்தின் பணியாற்றி வந்த 22 மாணவர்கள் அங்கிருந்து உடனடியாக அமலுக்கு வரும் நிலையில் மேலும் அதிகமாக படிப்பு தொடர முடியாமல் நீக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


இவர்கள் வழங்கி வந்த பகிடிவதை காரணமாக ஆண் பெண்கள் பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகியும் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகின்ற நிலையில் ,இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், புதிதாக வருகின்ற மாணவர்களை மிகவும் கொடூரமாக ,பகிடிவதை வரை என்ற பெயரில் சித்திரவதை செய்து அவமதித்து வருகின்றனர்.

இதனால் மனமுடைந்த இவர்கள் மரணத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

தற்கொலைக்கு தூண்டும் வகையில் இவர்களது பகிடிவதைகள் வதைகள் இடம் பெற்ற காரணத்தினால் ,இவர் அவர்கள் மேலும்

இங்கு படிக்க அனுமதி அளிக்க முடியாதென தெரிவித்து ,இந்த 22 மாணவர்களும் அந்த பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

இது வரவேற்கத்தக்க விடயமாக பார்க்கப்படுவதுடன், இலங்கையில் இனி பகிடிவதைகள் இடம் பெறாது இருக்க, இவை ஒரு தண்டனையாக பார்க்கப்படும் என நம்பப்படுகிறது.

புதுப்பிக்க நடவடிக்கை 50பேருந்து நிலையங்கள்
Posted in இலங்கை செய்திகள்

புதுப்பிக்க நடவடிக்கை 50பேருந்து நிலையங்கள்

புதுப்பிக்க நடவடிக்கை 50பேருந்து நிலையங்கள்

புதுப்பிக்க நடவடிக்கை 50பேருந்து நிலையங்கள் ,சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் 50 முக்கிய பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன

இலங்கை விமானப்படையின் உதவியுடன் ‘சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் கொழும்பு மத்திய பேருந்து நிலையம் உட்பட நாடு தழுவிய அளவில் 50

முக்கிய பேருந்து நிலையங்களை புதுப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

‘சுத்தமான இலங்கை’ திட்டத்திற்கு இணங்க, அடுத்த ஆண்டுக்குள் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தலில் உணவகம், ஓய்வு பகுதி, டிக்கெட் கவுண்டர்கள், நிர்வாக பிரிவு, செயல்பாட்டு அறை மற்றும் ஓட்டுநர் குடியிருப்புகள் போன்ற முக்கிய வசதிகள் புதுப்பிக்கப்படும்.

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் 1.42 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் தற்போது தினமும் 1,500 முதல் 2,000 பேருந்துகளை கையாளுகிறது.

‘சுத்தமான இலங்கை’ திட்டம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

1500டன் திடக்கழிவுகள் திணறும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

1500டன் திடக்கழிவுகள் திணறும் இலங்கை

1500டன் திடக்கழிவுகள் திணறும் இலங்கை

1500டன் திடக்கழிவுகள் திணறும் இலங்கை,கடந்த ஆண்டு கதிர்காம பெரஹெராவில் 1,500 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டன: CEA

கடந்த ஆண்டு கதிர்காம எசல பெரஹெரா பருவத்தின் இறுதியில் கிட்டத்தட்ட 1,500 டன் திடக்கழிவுகள், நான்கு டன் பிளாஸ்டிக் PET பாட்டில்கள் மற்றும் 50

பிளாஸ்டிக் மாலைகள்

கிலோகிராம் பிளாஸ்டிக் மாலைகள் சேகரிக்கப்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (CEA) தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக

CEA குறிப்பிட்டுள்ளது, இது தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கழிவு மேலாண்மை திட்டங்களின் நேர்மறையான விளைவாகும்.

ஒவ்வொரு ஆண்டும், வருடாந்திர எசல பண்டிகை பருவத்திற்காக கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பக்தர்கள் கதிர்காமத்திற்கு வருகிறார்கள். இருப்பினும், குப்பைகளை ஒழுங்கற்ற முறையில் அகற்றுவது நீண்ட காலமாக ஒரு

சவாலாக உள்ளது, குறிப்பாக கதிர்காம நகரம், புனித தலம் மற்றும் மெனிக் கங்கை நதிக்கரைகள் போன்ற இடங்களில்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த ஆண்டு அனைத்து பக்தர்களும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாட்டைக் குறைக்கவும், ருஹுணு

கதிர்காம மகா தேவாலாவில் எசல விழா

கதிர்காம மகா தேவாலாவில் எசல விழா மற்றும் மத நடவடிக்கைகளில் பங்கேற்கும்போது பொறுப்புடன் கழிவுகளை அப்புறப்படுத்தவும் CEA வலியுறுத்துகிறது.

இந்த ஆண்டு கதிர்காம எசல பெரஹெரா ஜூன் 26 முதல் ஜூலை 10 வரை நடைபெறும், மேலும் பல அரசு, தனியார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள்

இணைந்து சீசன் முழுவதும் விரிவான கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தியுள்ளன.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மொனராகலை மாவட்ட செயலகம், கதிர்காம பிரதேச செயலகம், கதிர்காம பிரதேச சபை மற்றும் பெரஹெரா குழு

உள்ளிட்ட நிறுவனங்கள் கழிவுகளை நிர்வகிக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு முயற்சிகளைத் தொடங்கியுள்ளன.

ஆக மொத்தம் இலங்கை குப்பையில் மிதக்கிறது .இப்படியே தொடரட்டும் வாழ்க .