Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர்மீட்பு
ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர்மீட்பு
ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர்மீட்பு ,கண்டி, ரட்டேமுல்ல பகுதியில் 12 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு, நேற்று மாலை ஹந்தானை மலை உச்சியைப் பார்வையிடுவதற்காக ஒன்று கூடியிருந்தது.
பின்னர் மூடுபனி மற்றும் மழை காரணமாக, அவர்களால் திரும்பி வருவதற்கு பாதையைக் கண்டறிய முடியாமல் வழி தவறியிருந்தனர்.
இதைப் பற்றி பெற்றோருக்கு அறிவித்த பின்னர், இராணுவமும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாணவர்கள் உட்பட குழுவினரைக் கண்டறிந்தனர்.
மீட்கப்பட்ட குழுவினர் பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம்
இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம்
இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம் ,அவசர காலத்தின் போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தமிழக மீனவர் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளதாக இந்திய வௌிவியறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இடம்பெற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அவசர நிலை காலத்தின்போது பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது குறித்து நாம் கேட்டிருக்கிறோம். அதற்கு அவசர காலத்தின்போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமே காரணம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் சில குறிப்பிட்ட கடற்பகுதிகளில் மீன் பிடிக்கும் நமது உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது.
அவசர நிலை காலத்தின்போது உண்மையான பாராளுமன்றம் செயல்பாட்டில் இருந்திருந்தால் இது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கும். அப்போது இந்த முடிவு ஏற்கப்பட்டிருக்காது.
அதன் விளைவுகளை தமிழ்நாட்டில் நாம் இன்னும் காண்கிறோம்.
உலகின் பழமையான, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் பிம்பம் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் மூலம் உடைந்தது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் பொலிஸார் சோதனை நடத்தியதை நானே நேரில் பார்த்தேன்.
அவசரநிலை பிரகடனத்தால் அரசியலமைப்பும், ஜனநாயகமும் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்தியாவின் முடிவை ஆதரிப்பதற்கு எவ்வளவு கடினமாக
இருந்தது? என்பதை வெளியுறவுத்துறையில் உள்ள எனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து கேட்டறிந்தேன்.
நாட்டை விட ஒரு குடும்பமே முக்கியம் என்ற நிலை வரும்போது அவசர நிலை உருவாகிறது. சிலர் தங்கள் பாக்கெட்டுகளில் அரசியல் சாசன புத்தகத்தை
வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் இதயத்தின் உணர்வோ வேறுமாதிரி இருக்கிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற எத்தகைய நிலையையும் தவிர்ப்பதற்கு மக்கள் அதிகாரம் பெற வேண்டும். அதிகாரம் பெற்ற மக்கள் இதை ஒருபோதும் நடக்க விடமாட்டார்கள் என இந்திய வௌிவியறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது

காணாமல் போன மீனவர் சடலங்கள்மீட்பு
காணாமல் போன மீனவர் சடலங்கள்மீட்பு
காணாமல் போன மீனவர் சடலங்கள்மீட்பு ,களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள்
பெந்தோட்டை கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (28) காலை மீன்பிடிக்கச் சென்றிருந்த போது அவர்கள் இந்த விபத்திற்கு முகம் கொடுத்திருந்தனர்.
இறந்தவர்கள் அளுத்கம பகுதியைச் சேர்ந்த நதுன் குமார மற்றும் அவரது சகோதரர் துமிந்த நதுன் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பிரதேசவாசிகள் படகுகள் மூலம் அவர்களைத் தேடியிருந்தனர் .
மீனவ படகுகள் கடலில் விபத்தில்
தற்போது மீனவ படகுகள் கடலில் விபத்தில் சிக்கி மீனவர்கள் காணாமல் போவதும் ,மரணமாகி வருகின்ற சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
இவ்விதமான விடயங்கள் மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது . என்பது குறிப்பிடத்தக்கது.
08 இந்திய மீனவர்கள் கைது
08 இந்திய மீனவர் கைது
08 இந்திய மீனவர்கள் கைது ,இலங்கை கடற்படையினர், இன்று (29) அதிகாலை மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி
இந்திய மீன்பிடி படகு
நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைது செய்யதனர்.
நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின்
வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை
அதன்படி, இன்று ( 29) வடமத்திய கடற்படை கட்டளை மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில்
ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்ததோடு, அந்த மீன்பிடி படகுகளை இலங்கையிலிருந்து அகற்றும் விசேட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
அங்கு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீன்பிடி படகொன்று (01) இலங்கை கடற்படையினரால் முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், எல்லை விதிகளை மீறி சட்டவிரோத மீன்பிடியில்
ஈடுபட்டிருந்த எட்டு (08) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைது செய்யதனர்.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகொன்றும் (01) அதில் இருந்த எட்டு (08) இந்திய மீனவர்கள்
மன்னாரில் உள்ள தால்பாடு படகுத்துறைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்..
- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது

இறக்குமதி கொள்கலன் நெரிசல்
இறக்குமதி கொள்கலன் நெரிசல்
இறக்குமதி கொள்கலன் நெரிசல் ,கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டிருந்த நெரிசல் இப்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
மேலதிக சுங்கப் பணிப்பாளர்
தற்போது இந்த நெரிசல் முற்றிலும் தீர்க்கப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் மற்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதற்கு கூடுதல் நாட்கள் எடுக்க வேண்டியிருந்தாகவும், இறக்குமதி கொள்கலன்களின்
எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு காரணம் என்றும் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு சுமார் 1,200 இறக்குமதி கொள்கலன்கள் வந்த நிலையில், சில நாட்களில் இது 2,900 ஆக உயர்ந்ததாகவும், இதனால் இறக்குமதி
கொள்கலன்களை அனுமதிப்பதற்கு கூடுதல் நேரம்
கொள்கலன்களை அனுமதிப்பதற்கு கூடுதல் நேரம் எடுக்க வேண்டியிருந்ததாகவும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இன்று காலை நிலவரப்படி இந்த தாமதம் முற்றிலும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய அனைத்து கொள்கலன்களும் சுங்கத்தால்
அனுமதிக்கப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் மற்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட மேலும் தெரிவித்தார்.
மீனவர்களை தேடச் சென்ற விமானம்
மீனவர்களை தேடச் சென்ற விமானம்
மீனவர்களை தேடச் சென்ற விமானம் ,தங்காலை பரவி வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று இன்று (29) காலை விபத்துக்குள்ளான நெடுநாள் மீன்பிடி படகில் இருந்து காணாமற்போன இரு மீனவர்களைத்
விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் விமானம்
தேடுவதற்காக விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது சுமார் ஒரு மணி நேரமாக அந்த விமானம் மூலம் காணாமற்போன இரு மீனவர்களைத் தேடும் பணி
முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப் படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மீன்பிடி படகு விபத்து
குறித்த நெடுநாள் மீன்பிடி படகு விபத்துக்குள்ளாகும்போது, அதில் ஆறு மீனவர்கள் இருந்துள்ள நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
இவர்கள் உயிரோடு உள்ளார்களா இல்லையா என்பது கூட தெரியவில்லை .மீனவர்களின் குடும்பத்தினர் ஏக்கத்தோடு தவித்த வண்ணம் உள்ளனர்
மீண்டு வருவார்களா இல்லை சடலமாக மீட்க போடுவார்களா என்பதே தற்போதுள்ள கேள்வியாக உள்ளது என்பது இங்கே குறிப்பிட தக்கது .
இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு
இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு
இளங்கோ செல்லப்பா பிறந்தநாள் நிகழ்வு கடந்த தினம் அவரது இல்லத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.
செல்லப்பாவின் புதல்வன், இளங்கோ செல்லப்பாவின் 52 வது பிறந்தநாள்
பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பாவின் புதல்வன், இளங்கோ செல்லப்பாவின் 52 வது பிறந்தநாள் கடந்த தினம் இடம் பெற்றுள்ளது.
தமது குடும்பத்தாருடன் சிறப்பான முறையில் இந்த பிறந்த நாளை அவர் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் .
தமிழ் தேசிய பாடகர்களில் ஒருவராக விளங்கும் ஐயா தேனிசை செல்லப்பா தமிழ் தேசிய விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு மாமனிதன் ஆவர் .
அவருடன் இணைந்து பல நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை யாரத்து ,அதற்கு இசை வழங்கியவர் இளங்கோ செல்லப்பா அவர்களாவார் .
தமிழர் தேசிய விடுதலைக்காகும் தன்னை அர்ப்பணித்த குடும்பத்தின் புதல்வன், இளங்கோ செல்லப்பா
அவ்வாறான தேசிய எழுச்சிக்காகவும் தமிழர் தேசிய விடுதலைக்காகவும் தன்னை அர்ப்பணித்த அந்த குடும்பத்தின் புதல்வன், இளங்கோ செல்லப்பா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
அவ்வாறான விடுதலை சார்ந்து பயணித்த அந்த குடும்பத்தின் செல்வனை , சர்வதேசத்தில் உள்ள தமிழர்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து அவரை வாழ்த்தி வணங்கினர்.
காலத்தால் அழியாத காவியமாக ஐயா தேனிசை செல்லப்பா ,இளங்கோ செல்லப்பா அவர்கள் காணப்படுகிறார்கள்.
அதனால்தான் உலகத் தமிழர்கள் இவர்களை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இவ்வேளையில் எதிரி இணையமும் வன்னி மைந்தன் டிக்டாக் தளம் என்பன ,இளங்கோ செல்லப் அவர்களுக்கு தமது பிறந்தநாள் வாழ்த்துக்கள் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறது.
இவரது இந்த பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ,பிறந்த நிகழ்வு கொண்டாட்ட காணொளி கீழே இணைக்கப்படுகிறது.


- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது

மது போதைக்கு 65பேர் பலி
மது போதைக்கு 65பேர் பலி
மது போதைக்கு 65பேர் பலி ,மது போதைக்கு அடிமையான நிலையில் மாதம் ஒன்றுக்கு 65 பேர் பலியாகி வருவதாக, புதிய புள்ளி விவரங்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது .
அதிக மது பாவனை
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் அதிக மதுபாவனை அதிகரிப்பின் காரணமாக ,நாளொன்றுக்கு இரண்டுக்கு மேற்பட்டவர்கள் குடிபோதை யில் இறந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது .
வருடம் ஒன்றுக்கு இலங்கையில் இந்த குடிபோதையினால் ,23 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாக வருவதாக தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுக்கடங்காது மது போதை களியாட்டங்களில் ஈடுபட்டு வருவதனால், ஈரல் கருகி பாதிக்கப்பட்ட நிலையில் இவ்வாரணம் மரணங்கள் சம்பவித்து வருகின்றன.
மது போதைகள் ,சாராயம் விற்பனை
நாள் ஒன்றுக்கு இலங்கையில் 242 மில்லியன் ரூபாய்க்கு மேல் மது போதைகள் ,சாராயம் விற்பனையாகிறது .
இதில் பாதி அளவு பணத்தினை ஆளுகின்ற அரசு வரியாக பெற்றுவிடுகிறது.
அதனால் நாடும் மக்களும் எக்கேடு கெட்டுப் போனால் என்ன ,எங்களுக்கு வரி மட்டும் வந்தால் போதுமான நிலையில் ,மதுபானத்தை அதிகமாக அரசு விற்பனை செய்வதற்கு பல கடைகளை திறந்து அதை வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இதனால் நாடெங்கும் 65 பேர் மாதந்தோறும் பலியாகி வருகின்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
குடி மகன்களினால் குடிகள் சீரழிகின்ற அதே வேளையில் ,தற்பொழுது புதிய சந்ததியும் புதிய சீரழிவான கலாச்சாரத்துக்கு சிக்கி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிக்கலை தடுப்பது எப்படி இதிலிருந்து மக்களை மீட்பது எப்படி என்பது தான் ,தற்பொழுது மக்கள் சமூகவாதிகள் சிந்தித்து வருகிறார்கள்.
- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது

செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள்
செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள்
செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள், செம்மணி மனித புதைகுழியில் கடந்த தினம் இரண்டு மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள்
செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இரண்டாவது நாள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்பு பணியின் பொழுது இரண்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித புதைகுழி
இதுவரை இந்தசெம்மணி மனித புதைகுழியில் இருந்து 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது . முதல் கட்டமாக 15 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பணிகளில் இந்த எலும்பு கூடுகள் மீட்ககப்பட்டுள்ளன.
இதுவரை 26க்கு மேற்பட்ட சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக புதிய சுயாதீன தகவல் தெரிவிக்கின்றன.
சந்திரிகா காலத்தில் இடம்பெற்ற ராணுவ நடவடிக்கையின் போது, புதைக்கப்பட்ட சடலங்கே தற்பொழுது தோண்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையை கட்டிப் பிடித்தபடி இறந்த நிலையில் தாயின் உடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சிங்கள ராணுவ காட்டினால் மிக கொடூரமாக குடும்பங்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குடும்பங்களுடன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்ட இந்த படுகொலைகள் இப்பொழுது மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி வருகின்றது .
இவ்வாறான நிலையில் இந்த செம்மணி விவகாரம் உலக அரங்கில் பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்
காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்
காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம் ,காணி நிர்ணயச் சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ், வடக்கு மாகாணத்தில் காணிகளை சுவீகரிப்பதற்காக 28.03.2025
திகதியிட்ட 2430/25 இலக்க வர்த்தமானியை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு நேற்று (27) விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக
வலுவிழக்கச் செய்யும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஜூலை 2, 2025 அன்று நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னர், அரசாங்கம் குறித்த வர்த்தமானியை மீளப்பெறுவதற்கான புதிய வர்த்தமானியை வெளியிட்டால், அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடிப்படை உரிமை மீறல் வழக்கு
இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு (SC/FR/112/25) இல், மனுதாரர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில், சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின்
பேரில், ஜனாதிபதி சட்டத்தரணிகள் கே. கனக-ஈஸ்வரன், விரான் கொறேயா, மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொன்சேகா, நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர்.
வீதி விபத்துகளில் 4பேர் பலி
வீதி விபத்துகளில் 4பேர் பலி
வீதி விபத்துகளில் 4பேர் பலி ,நாடு முழுவதும் இடம்பெற்ற சில வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் நேற்றும் (27) இன்றும் (28) இடம்பெற்ற சில விபத்துக்களில், அனைத்துமே மோட்டார் சைக்கிள் விபத்துக்களாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, நேற்று காலை நாரம்மல பொலிஸ் பிரிவில் கடஹபொல – கடுபொத வீதியில் உள்ள சியம்பலாகஸ்கொட்டுவ பிரதேசத்தில், கட்டுபொதவிலிருந்து
கடஹபொல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து, கட்டுபொத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பன்வில பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், மீட்டியாகொட – கஹவ வீதியில் மீட்டியாகொடவிலிருந்து கஹவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர்.
கொழும்பு – கண்டி வீதியில் மாஹேன பகுதியில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பெண் பாதசாரி பலத்த காயமடைந்து வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அங்கு பெண் பாதசாரி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கண்டி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று (28) அதிகாலை பொத்துவில் வீதியில் அக்கரப்பத்திலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
துவிச்சக்கரவண்டியில் சென்றவர் மற்றும் பயணி பலத்த காயங்களுடன் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்கா
தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்கா
தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்கா ,தவறுகளை ஏமாற்றிய அமெரிக்கா பல்வேறுபட்ட நாடுகளில் நடத்தப்பட்டதாக கூறப்படும் போர் கூட்டங்கள் மற்றும் பின்னப்படுவது தொடர்பான பொறுப்பு கூறல் மனித உரிமை விசாரணைக்காக 24 திட்டங்களுக்காக அமெரிக்கா நிதி வழங்கி வந்தது.
அந்த நிதியினை தற்போது நிறுத்துவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது
இவ்வாறு ஈராக் .சிரியா . ரஷ்ய ஆகிய நாடுகளும் அடங்குவதாகவும் அதில் இலங்கையின் தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் குற்றங்கள்
இதனால் இந்த நாடுகளில் இடம்பெற்று வருகின்ற போர் குற்றங்கள் தொடர்பான விடயங்களுக்கு அமெரிக்கா இனி
நிதி வழங்காத நிலையில் அந்த விடயங்கள் அப்படியே காணாமல் ஆக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
அமெரிக்கா முன்னெடுத்த முடியும் தற்பொழுது பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
போர் குற்றவியல் தொடர்பாக அதனை பகுப்பாய் செய்வதற்கு அதனை பேசுவதற்குமாக அமெரிக்காவின் நிதி உதவி ஊடாகவே அங்கு காரியங்களிடம் பெற்று வந்தன.
இலங்கை அரசாங்கத்தை தப்பிக்க வைக்கும் நடவடிக்கை
தற்பொழுது இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது இலங்கையிலும் இலங்கை அரசாங்கத்தை தப்பிக்க வைக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ஊக்குவித்துள்ளதாகவே தமிழ் திறப்பு பார்க்கிறது.
ஆகவே இந்த இடத்தில் தமிழர் தரப்புக்கு அமெரிக்கா துரோகம் அளித்துள்ளதாக தவறுகள் பேசிக்கொள்கிறார்கள்.
இது மீன்பிடி படகுகள் விபத்து
இது மீன்பிடி படகுகள் விபத்து
இது மீன்பிடி படகுகள் விபத்து ,இரு மீன்பிடி படகுகள் விபத்து மீனவர்களை காணவில்லை தேடும் இலங்கை ராணுவம்.
தெவுந்தரா மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஒரு படகும் ,களுத்துறை பகுதியிலிருந்து புறப்பட்ட மீன் பிடி படைக்கும் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது .
விபத்தில் சிக்கிய மீன் பிடி படகுகள்
இந்த விபத்தில் சிக்கிய மீன் பிடி படகுகள் ஐந்துக்கு மேற்பட்ட மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது .
மேலும் படகு ஒன்று வணிக கப்பலுடன் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகப்படுகிறது.
இருப்பினும் விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு ,கரைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஏனைய நால்வர்களும் என்ன ஆனார்கள் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
இவ்வாறு காணாமல் போன நால்வரும் பலியாகி உள்ளார்களா, அல்லது கடல் நீந்திக்கொண்டு உள்ளார்களா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
இவ்வாறு காணாமல் போன நால்வரையும் தேடி கண்டுபிடிக்கும் பணியில், இலங்கை விமானப்படை
இலங்கை விமான படை
ஈடுபட்டுள்ளதாகவும் ,இலங்கை விமான படை உலங்குவானூர்திகளில் தேர்தல் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த விபத்து திடீரென ஏற்பட்ட விபத்தா, அல்லது திட்டமிடப்பட்ட ஒரு விபத்தா என தெரியவில்லை.
படகு கடலில் கவிழ்ந்து காணாமல் போன நிலையிலையே ,இந்த மீனவர்களுக்கு என்ன ஆனாது என தெரியவில்லை.
இவ்வாறு காணாமல் போன மீனவர்கள் சிங்கள மீனவர்கள் என தற்போது தெரியவந்துள்ளதை அடுத்து தற்பொழுது இலங்கை ராணுவ வான்படை தேடுதலில் ஈடுபட்டுள்ளன.
கைது செய்யப்படவுள்ள ராஜித
கைது செய்யப்படவுள்ள ராஜித
கைது செய்யப்படவுள்ள ராஜித ,முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில் கைது
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டபோது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன
சம்பவம் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் ராஜித சேனாரத்னவை குறித்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்யவிருப்பதாக அவர் இதன்போது கூறினார்.
ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி
லியனகே, இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மாப்புள்ள ஊழல் கொடி கட்டி பறந்த சிங்க முத்து என இலக்கை வாழ் மக்கள் அறிந்தது உண்மை என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது .
எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு
எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு
எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு ,எரிந்த நிலையில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
எரிந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சடலம்
கார் ஒன்றுக்குள் எரிந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சடலம் தொடர்பாக ,இலங்கை காவல்துறையினர் குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர் குரு நகல் பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் என தெரிய வந்துள்ளது.
கடந்த 25ஆம் தேதி தலைமுடி திருத்துவதற்காக வீட்டை விட்டு சென்ற இவர் , வீடு திரும்பாததை அடுத்து ,அவரது மனைவி போலீசாரில் முறைப்பாடு அளித்திருந்தார்.
அதனை அடுத்து அவரை தேடிய போலீசார் ,அவரது காரில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்கள் .
கொலையா அல்லது தற்கொலையா
இந்த சம்பவம் மரணமா அல்லது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
தொழிலதிபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த சம்பவம் பெரும்பாலும் படுகொலையாக இருக்கலாமென அந்த பகுதி மக்கள் கருதுகின்றனர்.
தொழில் பகமை காரணமாக, கூலி குழுக்களை ஏவி இந்த படுகொலை இடம்பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர் இந்த கொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பீதியும் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
யாழ் ரயில்சேவை இனி தினசரி
யாழ் ரயில்சேவை இனி தினசரி
யாழ் ரயில்சேவை இனி தினசரி ,யாழ்ப்பாணம் முதல் கல்கிசை வரையிலான குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை, இதுவரை வார இறுதி நாட்களில் (சனி
மற்றும் ஞாயிறு) மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி முதல் தினசரி சேவையாக விரிவாக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய அத்தியட்சகர் ரீ. பிரதீபன் தெரிவித்தார்.
நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொது மக்கள் மற்றும் துறைசார் தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் சேவை தினசரி அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறினார்.
இதன்படி, எதிர்வரும் 7ஆம் திகதி முதல் கல்கிசை ரயில் நிலையத்தில் இருந்து காலை 5:15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொழும்பு கோட்டை நிலையத்தை காலை 5:45 மணிக்கு வந்தடைந்து, யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிக்கும்.
இது யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை மதியம் 11:49 மணிக்கு வந்தடைந்து, பின்னர் காங்கேசன்துறையை மதியம் 12:13 மணிக்கு சென்றடையும்.
மீண்டும் மாலை 1:30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் இந்த ரயில், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 2:12 மணிக்கு
பயணத்தைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டையை இரவு 8:33 மணிக்கு வந்தடையும். பின்னர், கல்கிசையை இரவு 8:55 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் சேவைக்கான ஆசன முற்பதிவுகளை அடுத்த சில நாட்களில் ரயில்வே திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம் எனவும் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
மேலும், இதுவரை காலை 5:45 மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்டு வந்த யாழ் தேவி ரயில், எதிர்வரும் 7ஆம் திகதி முதல் காலை 6:35 மணிக்கு புறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது

ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை
ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை
ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை, பொருளாதார விரைவில் வீழ்ச்சியூறும் நிலைக்கு காணப்படுகின்றன.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போர்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்று வருகின்ற ,இந்தப் போர் காரணமாக இலங்கையுனுடைய பொருளாதார ம் ஆட்டம் கண்டு வருகிறது .
விழுந்து போன பொருளாதாரத்தில் நிமிர்ந்து எழ முடியாது தத்தளித்துக் கொண்டிருக்கிறது .
இலங்கை இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் தற்பொழுது இடம்பெறும் யுத்தம் 3 மாதம் நீடித்தால் அதுவே இலங்கைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் .
தொடர்ந்து இஸ்ரேல் ஈரானுக்குள் போர் நடைபெற்றால் இலங்கையினுடைய பொருளாதாரம் , வீழ்ந்து பட்டினி பஞ்சத்தால் இலங்கை தள்ளாடும் நிலை காணப்படுகிறது .
விமானங்கள் ,கப்பல்கள் ,பறக்கவும். செல்லவும் முடியாத நிலை ஏற்படும் .அவ்வாறு ஏற்பட்டால் இலங்கை நிலை என்னவாகும்..? என்பதை இலங்கை தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளவும்.
வரலாற்று முக்கியத்துவமான காலப்பகுதியில்
வரலாற்று முக்கியத்துவமான காலப்பகுதியில், இலங்கை கால்பதிக்கிறது .அதற்கான காரணம் பட்டினியால் அந்த நாடு மிக விரைவில் சிக்கப்போவது என்பதுதான் அபாய எச்சரிக்கையாகும் .
இதை உணராது ஆளுகின்ற அரசியல் வாதிகளும் ,ஆண்டு சென்ற ஆட்சியாளர்களும் லஞ்ச உடலில் சிக்கி திகழ்த்த இருக்கிறார்கள்.
இவ்வாறான ஏற்பட்டால் இலங்கையினுடைய ஆண்ட ஜனாதிபதிகள் வீடுகள் சுத்திவளைக்கப்பட்டு ,மக்களால் விரட்டப்படும் காலம் விரைவில் எழுதப்படும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வரும் காலங்கள் இதை பகிரும்.
அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள்
அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள்
அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள் எழுச்சி கண்டு அனுரா அரசு ஆடிப் போயுள்ளதுடன் மக்கள் எதிர்ப்பை கண்டு ஆட்டம் கண்டுள்ளனர் .
யாழ்ப்பாணம் மண்ணில் ஒட்டுக் குழுக்களின் தளபதிகளாக விளங்கியவர்கள் ,ஆதரவாளர்கள் விளங்கியவர்கள் ,யாழ்ப்பாணத்தில் எம்பிக்களாக விளம்பரம் செய்தவர்கள் காணாமல் போயுள்ளனர் .
ஜட்டி விக்கிற அமைச்சராக சந்திரசேகர்
இவர்கள் ஜட்டி விக்கிற அமைச்சராக சந்திரசேகர் ,மணல் கொள்ளைகளை பிடிக்கிற சமூக வாதியாக தன்னை அடையாளம் காட்டிய எம்பிக்கள் என அனைவரையும் மக்களோடு சேர்த்து அரவணைப்பது போல கட்டி கொண்டார் .
தமிழருடைய அரசியல் பரப்புரையில், தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் அடிப்படை உரிமைகள் தொடர்பாக ,பேச மறுக்கின்ற இவர்களையே வீரம் கொண்டிருந்த மக்கள் ஒன்றாகி விரட்டி அடித்தனர் .
தேசத்தின் தற்காப்புக்காகவும் ,தேசத்தின் விடியலிற்காகவும் தங்களை அர்ப்பணிக்க மறந்த இந்த அன்ன கைகளை ,மக்கள் ஓட விரட்டியது வாழ்த்தப்படக்கூடிய ஒன்று தான் .
தமிழர் தேசிய விடுதலை
தமிழர் தேசிய விடுதலை மெல்ல மெல்ல மீண்டெழ தோன்றும் காலத்தில் வலிகள் சுமந்து பயணிக்கின்ற மக்களை ,ஏமாற்ற வந்தால் உங்களுக்கு இதுதான் நடக்கும் என்பதை செம்மணியில் எழுச்சி கொண்ட மக்கள் கோபம் காட்டியது .
அப்பாவி தமிழர்களை கைது செய்து ,கொலை செய்ய காரணமாக இருந்த ,ஆண்ட கால ஆட்சியாளர்களுக்கு உடந்தையாக இருந்தது ,ஆளுகின்ற இந்த அனுராது என்பதை மறந்துவிட முடியாது.
அவ்வாறான கூலி குழுக்களை விட்டு விட முடியாது என்பதற்காக அனுராவை ஓடவிட்டது சரிதான் போலும் . மக்கள் தீர்ப்பு செவ்வென எழுத பட்டுள்ளது .
- அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது

- ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலி

- பாகிஸ்தான் காவல் நிலையம் மீதான தாக்குதலில் 11 அதிகாரிகள் மற்றும் 15 தாக்குதல் நடத்தியவர்கள் பலி

- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- சீனாவின் ஆயுதங்கள் ஈரான் போர் முனையில் அலறும் அமெரிக்கா

- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு

- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்

பொலிஸார் மீது தாக்குதல்
பொலிஸார் தாக்குதல்
பொலிஸார் மீது தாக்குதல் மட்டக்களப்பு, சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட
ஐந்து பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சிப் பெட்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேக நபரான திருடனை கைது செய்ய மட்டக்களப்பு பொலிஸார் நேற்று முன்தினம் (25) பிற்பகல் 1:30 மணியளவில் அவரது வீட்டுக்கு சென்றனர்.
இதன்போது, சந்தேக நபரும் அவருடன் இருந்த இரு பெண்கள் உட்பட ஆறு பேர் கொண்ட குழு, பொலிஸார் மீது கத்தியால் குத்தியும், கம்புகளால் அடித்தும் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடி தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபரான திருடன் உட்பட மூன்று ஆண்கள் மற்றும் இரு பெண்கள் என ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம்
மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம்
மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம் ,செம்மணி மக்கள் படுகொலை தொடர்பாக ,கொதித்து எழுந்து நின்ற பொழுது, அங்கு சென்ற அரசியல்வாதிகளை மக்கள் ஓட ஓட விரட்டியடித்தனர் .
சிவஞானத்தை வண்டிவரை மக்கள் விரட்டி சென்னறனர்
இதன் பொழுது சிவஞானம் அவர்களை வண்டிவரை மக்கள் விரட்டி சென்னறனர் .
ஆனால் தங்களை யாரும் விரட்டவில்லை ,மக்கள் என்னோடுதான் இருக்கிறார்கள் இதெல்லாம் பொய் வதந்திகள் பரப்பாதீர்கள் என்று ஐயா சிவஞானம் உருட்டு விட்டுள்ளார் உருட்டு கட்டை உருட்டு சிதம்பரம்.
வேட்டி கழண்டு விழாத குறையாக ஓட்டம்
வேட்டி கழண்டு விழாத குறையாக ஓடித் தப்பிய ஊழல்வாதிகளும் ,ஓட்டுக்குழு ஆசாமிகளும், இப்பொழுது ஊடகங்கள் முன்னால் குந்தி இருந்து எங்களுக்கு மக்கள் ஆதரவு என கத்தி வருகின்றனர் .
பாடையில போற வயதில், கூடையில் வருகிறது குஷ்பூ மாதிரி ஆட முற்பட்ட ,சிவ ஞானத்தை பார்த்து மக்கள் சிரிக்காமல் என்ன செய்வார்..?
ஏமாற்றி வந்தால் இப்படித்தான் நடக்கும் என்பதை இனியாவது இந்த அரசியல் உருட்டு வாதிகள் உருட்ட கட்டுகள் உணர்ந்து கொள்வார்களாக.
இவர்களது இந்த பேச்சைக் கேட்டு மக்கள் தற்போது சிரித்து நகைச்சுவை ஆடுகிறார்கள்.
இந்த ஓட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா சுருட்டு கட்டை அயோக்கியர்களே .














































