அனுராவுக்கு எதிராக தொடரும் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அனுராவுக்கு எதிராக தொடரும் போராட்டம்

அனுராவுக்கு எதிராக தொடரும் போராட்டம்

அனுராவுக்கு எதிராக தொடரும் போராட்டம் ,அனுராவுக்கு எதிராக தொடரும் போராட்ட நடவடிக்கை ஆளுகிற ஆட்சியை ஆட வைத்துள்ளது.

ஆறாவது நாளாக தபால் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தபால் ஊழியர்கள் தவறு

தபால் ஊழியர்கள் தவறு செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அங்கு பல விடயங்கள் நடைபெற்றது.

மேலதிகமான ஊழிய ஊதியம் உள்ளிட்டவை கோரி இந்த தபால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களது போராட்டம் காரணமாக தற்பொழுது தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நாளுக்கு நாள் அரசுக்கு எதிராக பல தொழிற்சங்கல் புறக்கணிப்பு நடவடிக்கையில் இடம் பெற்று வருகிறது .

விரைவில் அனுரா அரசுக்கு எதிராக அறகல போராட்டம்

விரைவில் அனுரா அரசுக்கு எதிராக அறகல போராட்டம் ஒன்று வெடிக்க போவதை இந்த போராட்டங்கள் முன்னேற்பட்ட நடவடிக்கையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆளுகின்ற அனுரா குமர திசநாயக்காவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கான முன் ஏற்பாட்டு நடவடிக்கையாக இதனை பார்க்கலாம்.

துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விசேட அதிரடிப் படை அதிகாரி

இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் சூரியவெவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் வீசிய கைக்குண்டு காரணமாக அந்த அதிகாரி காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின்போது இரண்டு சந்தேக நபர்

துப்பாக்கிச் சூட்டின்போது இரண்டு சந்தேக நபர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் தப்பியோடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சந்தேக நபர், சமீபத்தில் கொஸ்கொடவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

நல்லூர் திருவிழாவில் நகைதிருடிய இளம்யுவதி கைது
Posted in இலங்கை செய்திகள்

நல்லூர் திருவிழாவில் நகைதிருடிய இளம்யுவதி கைது

நல்லூர் திருவிழாவில் நகைதிருடிய இளம்யுவதி கைது

நல்லூர் திருவிழாவில் நகைதிருடிய இளம்யுவதி கைது ,நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி

ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று (21) நடைபெற்ற நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது, குறித்த யுவதி பக்தர்களிடையே

சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடியதை சாரணர்கள் அவதானித்து, அவரைத் தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.

சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, சாரணர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்

இதன்போது, யுவதி ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, சாரணர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்டார்.

பொலிஸார் அவரைச் சோதனையிட்டபோது, அவரது உடைமைகளில் இருந்து மூன்று தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டன.

விசாரணையில், குறித்த யுவதி கொச்சிக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவருடன் மேலும் சிலர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவருடன் வந்த ஏனைய நபர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கையும் களவுமாகப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரணர்

யுவதியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து, அவரைக் கையும் களவுமாகப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கு பொலிஸார் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேர்த் திருவிழாவின் போது தமது தங்க நகைகள் திருடப்பட்டதாக 08 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

ரணில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
Posted in இலங்கை செய்திகள்

ரணில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

ரணில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

ரணில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார்.

பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழா

ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக

லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பான விசாரணைக்காக இவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க

இது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும்

ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு பொலிஸ்பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு பொலிஸ்பாதுகாப்பு

மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு பொலிஸ்பாதுகாப்பு

மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு பொலிஸ்பாதுகாப்பு ,தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) 5வது நாளாகவும் தொடர்கிறது.

தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு

இந்த சூழலில் மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக்

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் தபால் ஊழியர்கள்

கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்க மறுப்பதாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், கைரேகையை கட்டாயமாக்குதல் மற்றும் மேலதிக நேரம் தொடர்பான தீர்மானம் குறித்த முடிவை திரும்பப் பெற அரசாங்கம் எந்த

நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று பாராளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தினார்.

19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது.

பணிப்புறக்கணிப்பு காரணமாக, கடந்த சில நாட்களாக தபால் சேவைகளைப் பெறச் சென்ற மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும்
Posted in இலங்கை செய்திகள்

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும்

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும்

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும் என அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

எமது அவதானிப்பின் அடிப்படையில் ஆளுகிற அனுரா குமர திசாநாயக்காவுடைய கட்சி என்பது பத்து மாதங்களுக்கு ஆட்சியை பறிகொடுக்க அபாயம் காணப்படுகிறது.

பொருளாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்ல

அபிவிருத்தி பொருளாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் நாட்டை கொண்டு நடத்துவதில் பல்வேறுபட்ட இடங்களில் சிக்கி தவித்து வருகிறது.

உலக நாடுகள் எல்லாம் ஓடி கடன்களை வாங்கி நாட்டை வழிநடத்த வேண்டிய நிர்ப்பந்த நெருக்கடியில் அனுரா இருக்கிறார்.

இறக்குமதியை நம்பி வாழுகிற நிலையில் இலங்கை

இறக்குமதியை நம்பி வாழுகிற நிலையில் இன்றைய இலங்கை இருக்கிறது.

உற்சாகப் பொருளாதாரம் தன்னிறவு அடையாத நிலையினால் இறக்குமதிய நம்பி மட்டும் வாழக்கூடிய நாடுகள் உயிர் வாழ்வது கடினம் தான்.

அவ்விதம் நோக்கையில் விரைவில் அனுரா அரசாட்சி பணமின்றி தள்ளாடும் நிலையும் ,அதனால் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயமும் ,அதன் நேரடி

அச்சுறுத்தலாக ஆட்சியை விட்டு தப்பி ஓடும் நிலை உருவாகும் என்பதாகவே இன்றைய நகர்வுகள் கட்டியம் இடுகின்றன.

தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன

தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன

தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன ,இலங்கைத் தமிழரசு கட்சி மக்களுக்கு செய்தது என்ன என்கிற கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம்.

16 வருடங்களாக யுத்தம் முடிந்து

கடந்த 16 வருடங்களாக யுத்தம் முடிந்து இலங்கை ஐக்கிய இலங்கையாக ஒருமை படுத்தப்பட்ட பின்னர்.

தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாக விளங்கி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கமாக விளங்கும் இலங்கை தமிழரசு கட்சி தமிழுக்கு செய்த சேவை என்ன விளக்கம் தர முடியுமா …?

காணி விடுவிப்பு, காணி அவகரிப்பு, தமிழின படுகொலை

காணி விடுவிப்பு, காணி அவகரிப்பு, தமிழின படுகொலை தொடர்பாக ,கல்வி வணிகம் அகதி நிலை தொடர்பாக ,அவலநிலை

தொடர்பாக இலங்கை தமிழர் கட்சி மக்களுக்கு செய்த சேவை என்ன என்பதாகி விளக்க மறுப்பது ஏன் ..?

இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களையும் 135க்கு மேற்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களையும் தன்னகத்தே வைத்திருக்கக்கூடிய

இலங்கை தமிழரசு கட்சி தமிழருக்கு ஆற்றிய பங்களிப்பு தொடர்பாக மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் .

அபிவிருத்திகள் உள்ளிட்ட எவ்விதமான விடயமும் செய்யவில்லை .

அரசிடம் பணம் இல்லை என கூறுகிற இலங்கை தமிழச்சி கட்சி எதற்காக அரசியல் கட்சியாக போட்டியிட வேண்டும் ..?

எதற்காக மக்கள் பிரதிகளாக நீங்கள் எந்த இறக்க வேண்டும்.? உங்கள் பதவிகளை திறந்து இந்த தேர்தலை புறக்கணிக்க நீங்கள் தயாரா ..?எதிரி இணையம் உங்களிடம் கேள்விகளை எழுப்புகிறோம்.

மானம் உள்ளவர்களாக நீங்கள் இருந்தால் எங்கள் கேள்விகளுக்கு பதில் தரவுமறை இலங்கை தமிழரசு கட்சி பிரளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை அழைக்கிறோம் .

நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 0044 7536707793

யார் போலிகள் உடைத்து பேசிய வன்னி மைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

யார்போலி உடைத்து பேசிய வன்னி

யார்போலி உடைத்து பேசிய வன்னி

யார்போலி உடைத்து பேசிய வன்னி மைந்தன் மற்றும் எதிரி இணையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிற பல உதவித்திட்டங்கள் தொடர்பாகவும் அதில் பல எதிர் விமர்சனங்கள் புதிதாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

இன்றைய சமகால அரசியல் நிகழ்வுகள்

அதன் அடிப்படையில் இன்றைய சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக பேசியுள்ளார் .

அரசியல்வாதிகள் எவ்விதமான மோசடிகளில் ஈடுபடுகிறார் என்பது தொடர்பாகவும் வன்னியின் மைந்தன் இந்த காணொளியில் முழுமையாக விளக்க தரவை கொடுத்துள்ளார் .

காணொளியை ஒருமுறை கேட்டுப்பாருங்கள்

மறந்துவிடாமல் இந்த காணொளியை ஒருமுறை கேட்டுப்பாருங்கள் இவருடைய கூற்றுக்கள் எதுவாக இருக்கிறது என்பதை மக்களே .

இன்றைய இலங்கை சமகால அரசியல் ஆய்வு களமாக இந்த கருத்து பதிவு அமைய பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

யார் போலிகள் உடைத்து பேசிய வன்னி மைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

யார் போலிகள் உடைத்து பேசிய வன்னி மைந்தன்

யார் போலிகள் உடைத்து பேசிய வன்னி மைந்தன்

யார் போலிகள் உடைத்து பேசிய வன்னி மைந்தன் யார் போலிகள் உடைத்து பேசிய வன்னி மைந்தன்|Who are the fakes that Vanni Mainthan spoke about?

Who are the real ones in the political arena and who are the fake ones? Vanninda spoke the truth and spread the truth.

இன்றைய வன்னி மைந்தன் tiktok செய்திகள் Today’s Vanindan tiktok news
|Who are the fakes that Vanni Mainthan spoke about

இதில் அழுத்தி காணொளி பார்க்க

கிழித்து தொங்கவிட்ட வன்னி மைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

கிழித்து தொங்கவிட்ட வன்னி மைந்தன்

கிழித்து தொங்கவிட்ட வன்னி மைந்தன்

கிழித்து தொங்கவிட்ட வன்னி மைந்தன் |அலறும் அரசியல் கட்சிகள்

கிழித்து தொங்கவிட்ட வன்னி மைந்தன் அரசியல் கட்சிகள் சமூக சேவை தொடர்பாக வன்னி மைந்தன் தனது செய்தி பதிவில் ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிக்காட்டி பதிவிட்டுள்ளார் .

அரசியல் பார்வை ஆய்வு சமர் களத்தில்

இன்றைய இலங்கை செய்திகள் அரசியல் பார்வை ஆய்வு சமர் களத்தில் தனது கருத்தை இப்படி வைத்திருக்கிறார் .

இலங்கையில் தேர்தல் வந்தால் வீதி இறங்கி அரசியல்வாதிகள் மக்கள் நலன் மறந்து தேர்தல் காலத்தில் பவெள்ளம் மழை இடி போல வருகிறார்கள் .

சுனாமி பேரலை போல இந்த பேச்சை அவர் பேசியிருக்கிறார்

பின்னர் புயல் போல காணாமல் போய்விடுகிற சம்பவத்தை மையப்படுத்தி ,சுனாமி பேரலை போல இந்த பேச்சை அவர் பேசியிருக்கிறார் .இன்றைய வன்னி மைந்தன் செய்தி காணொளியி

Vanni Mainthan, who was torn and hanged | Political parties are crying

Vanni Mainthan, who was torn and hung, has posted a message expressing his dismay and anger regarding political parties’ social service.

When elections come to Sri Lanka, politicians take to the streets, forgetting the interests of the people, and come like a deluge during the election season

He has delivered this speech like a tsunami, focusing on the incident that then disappears like a storm. Today’s Vanni Mainthan news video

இதில் அழுத்தி காணொளி பார்க்க

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்
Posted in இலங்கை செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இரதோற்சவம் இன்று (21) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

ஆறுமுக பெருமான் வள்ளி

இன்று காலை 06.15 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் காலை 7.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

ஆறுமுக பெருமானுக்கு பச்சை சாத்தி

காலை 8.30 மணிக்கு இருப்பிடத்தை அடைந்த தேர், காலை 09.15 மணியளவில் ஆறுமுக பெருமானுக்கு பச்சை சாத்தி

பூஜை வழிபாடுகள் இடம்பெற்று 10.30 மணிக்கு ஆறுமுக பெருமான் ஆலயத்திற்குள் சென்றார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில்
Posted in இலங்கை செய்திகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில்

புதிய பயங்கரவாத சட்டமூலம் விரைவில்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்று அது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவிற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, அதன் தலைவர் ஜனாதிபதி

சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன தலைமையில் நீதி அமைச்சில் அண்மையில் கூடியது.

இதன்போது சட்டமூலத்தில் கொண்டு வரப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நெரின் புல்லே, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசங்க கரவிட்ட, நீதி மற்றும் தேசிய

உயர் அதிகாரிகள் குழு

ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பியமுந்தி பீரிஸ் மற்றும் உயர் அதிகாரிகள் குழு இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு குழு இதுவரை 14 முறை கூடியுள்ளதுடன், அதன் அடுத்த கலந்துரையாடல் நாளை (22) இடம்பெறவுள்ளது.

சட்டமூல வரைவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள், சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும்

சமூகங்களின் கருத்துக்களைப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக்குழ
Posted in இலங்கை செய்திகள்

முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக்குழ

முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக்குழ

முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக்குழ விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த

ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்கு நிறுவப்பட்ட ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு, பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற எதிர்பார்க்கிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025 ஜூன் 30ஆம் திகதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, 2025 ஜூலை 01 ஆம் திகதி எடுக்கப்பட்ட இலக்கம் 25/1145/801/018 என்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம்,

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த

காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு நிறுவப்பட்டது.

அதன்படி, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றின்

ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற குழு எதிர்பார்க்கின்றது.

இது தொடர்பில் ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2025 செப்டெம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் psicairport@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி (Email) அல்லது 070-3307700 என்ற Whatsapp எண்ணுக்கு தமது

கோரிக்கைகளை அனுப்பி, திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யுமாறு ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு கேட்டுக்கொள்கிறது.

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்
Posted in இலங்கை செய்திகள்

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம் நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன

நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பிபில, வனமெதகம பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நாவுல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ​​நேற்று (20) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர் மேலும் இருவருடன் போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த போது அந்த அனர்த்தம் இடம்பெற்றதாக நாவுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடற்கரையில் நேற்று

இதற்கிடையில், அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஹங்கம கடற்கரையில் நேற்று (20) நீராடச் சென்ற இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவர் வத்தளையைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் நாவுல பொலிஸாரும் அஹங்கம பொலிஸாரும் காணாமல் போன இளைஞர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு

தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு

தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத்

தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ

தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்து குறித்து குருநாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதானவர் என தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணை

சம்பவம் குறித்து குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேல்மாகாணத்தில் நீரிழிவு நோய் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மேல்மாகாணத்தில் நீரிழிவு நோய் அதிகரிப்பு

மேல்மாகாணத்தில் நீரிழிவு நோய் அதிகரிப்பு

மேல்மாகாணத்தில் நீரிழிவு நோய் அதிகரிப்பு மேல் மாகாணத்தில் ஐந்து பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக தெரிவித்துள்ளார்.

இலங்கை வைத்திய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அவர், அதிகப்படியான சீனி நுகர்வு இந்த நிலைக்கு வழிவகுத்ததுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது. தொற்றா நோய்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன.

80% இறப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. உணவு செரிக்கப்பட்டு குளுக்கோஸாக உறிஞ்சப்படுகிறது.

இதனால் நீரிழிவு உட்பட பல நோய்கள். பருமனான குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பரவலாக உள்ளது.

இலங்கை அதிக சீனி உட்கொள்ளும் நாடுகளில் ஒன்றாகும். ஒரு நபர் ஒரு வருடத்தில் 25 முதல் 30 கிலோ வரை சீனியை உட்கொள்கிறார்.​

வயது வந்தவர் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தேக்கரண்டி சீனியை உட்கொள்கிறார்.” என்றார்.

இதேவேளை, நாட்டில் உள்ள குழந்தைகளிடையேயும் சீனி நுகர்வு அதிகரித்துள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை வைத்திய சங்கத்தின் வைத்திய நிபுணர் சுரந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

“சிறு குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகளவான சீனியை உட்கொள்கிறார்கள்.

கொழுப்பு உட்பட பல நோய்கள் இதனால் ஏற்படுகின்றன. உணவில் இருந்து மேலதிக சீனி மற்றும் உப்பை நீக்க வேண்டும்” என்றார்.

டயானா கமகேவிற்கு பிடியாணை
Posted in இலங்கை செய்திகள்

டயானா கமகேவிற்கு பிடியாணை

டயானா கமகேவிற்கு பிடியாணை

டயானா கமகேவிற்கு பிடியாணை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்

டயானா கமகே, வழக்கு விசாரணை

டயானா கமகே, வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான்

இந்த வழக்கு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.

அப்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணையைப் பிறப்பிக்கப்பட்டது.

பிரதிவாதி டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி
Posted in இலங்கை செய்திகள் முக்கிய செய்திகள் விசேட செய்திகள்

துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி

துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி


துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி ,துரத்தும் கன்னி வெடிகள் | ஆப்பு ஆப்பு அலறும் வன்னி |Today’s Vanni Maindan Tik Tok Video

வன்னி மைந்தன் இன்றைய இலங்கை ,செய்திகள் தொகுப்பில் ,கன்னி வெடிகள் துரத்துவதாக தெரிவித்துள்ளார் .

தேர்தல் வந்தால் திருவிழா

தேர்தல் வந்தால் திருவிழா நடக்கும் என்பார்கள் .அதனால் தான உருட்டு
மன்னர்களுள் உருட்டு ஆரம்பமாகியுள்ளது .வாக்கு தேர்தலில் வெல்ல

இப்பொழுதே தயாராகும் வாக்குறுதிகள் ,வன்னிமைந்தனின் அரசியல் பார்வையில் .சூடு பார்க்கும் விவாதம் ,அதிர்ந்த விவாத மேடை

இன்றைய வன்னி மைந்தன் டிக் டாக் வீடியோ காணொளி

Chasing virgin bombs | Whispering Vanni |

Vanni Mainthan has stated in today’s Sri Lanka, news collection, that virgin bombs are chasing.
They say that when the election comes, there will be a festival. So the money roll


The money roll has begun. Promises are being prepared right now to win the election, from Vannimainthan’s political perspective. A heated debate, a shocking debate stage

Today’s Vanni Maindan Tik Tok Video

https://www.youtube.com/watch?v=QaF1Zkgji7M
பாடசாலை மூன்றாம் தவணை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மூன்றாம் தவணை ஆரம்பம்

பாடசாலை மூன்றாம் தவணை ஆரம்பம்

பாடசாலை மூன்றாம் தவணை ஆரம்பம் ,2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று ஆரம்பமாகிறது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை

எவ்வாறாயினும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இன்று (18) ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மின்சார சபையின் இலாபம் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மின்சார சபையின் இலாபம் அதிகரிப்பு

மின்சார சபையின் இலாபம் அதிகரிப்பு

மின்சார சபையின் இலாபம் அதிகரிப்பு ,2025 ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதியுடன் உடன் முடிவடைந்த நிதியாண்டின் காலாண்டில் இலங்கை மின்சார சபையால் 5.31 பில்லியன் ரூபாய் இலாபத்தை பதிவு செய்ய முடிந்துள்ளது.

முந்தைய காலாண்டில்

முந்தைய காலாண்டில், அதாவது 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டின் காலாண்டில், 18.47 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டிருந்த

நிலையில், இந்த காலாண்டில் இவ்வாறு அந்த சபை இலாபம் ஈட்டியுள்ளமை விசேட அம்சமாகும்.

2025 ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தின் மூலம் மின்சார சபை இலாபகரமான பாதையில் நுழைய முடிந்ததுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும், 2024 ஜூன் காலாண்டில் சபையால் ஈட்டப்பட்ட 34.53 பில்லியன் ரூபாய் லாபத்துடன் ஒப்பிடும்போது, ஜூன் 2025 காலாண்டில் ஈட்டப்பட்ட இலாபம் 85% குறைவைக் காட்டுகிறது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, 2025 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணம் சுமார் 20% குறைக்கப்பட்ட நிலையில், இது 2025 மார்ச் காலாண்டில் அறிவிக்கப்பட்ட இழப்புக்கு பெரும்பாலும் காரணமாகும்.

இது தொடர்பாக, சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் அடுத்த தவணையைப்

பெறுவதற்கு, இலங்கை செலவு ஈடுகட்டும் மின்சார விலையை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறியது.

அதன்படி, 2025 ஜூன் இல் மின்சார கட்டணம் மீண்டும் திருத்தப்பட்டது.