Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
இரான் பெரும் இராணுவ தாக்குதலுக்கு தயாராகி வருகிறது – இஸ்ரேல் எச்சரிக்கை
இரான் பெரும் இராணுவ தாக்குதலுக்கு தயாராகி வருகிறது – இஸ்ரேல் எச்சரிக்கை
ஈரான் தனது அணு ஆயுத சோதனையில் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ,புதிய கொடிய ஆயுதங்களை தயாரிக்கும் நகர்வில் தன்னை தீவிர ப்படுத்தியுள்ளது
மேலும் இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தும் நோக்குடன் அது நகர்ந்து வருவதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது
ஈசனின் ஆதரவுடன் இயங்கும் போராளி குழுக்கள் ஊடக இந்த பெரும் தாக்குதலை ஈரான் நடத்த உள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை எச்சரித்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது
மெஸ்சிக்கோ வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்ல படும் கார்கள் -16 பேர் பலி -video
மெஸ்சிக்கோ வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்ல படும் கார்கள் -16 பேர் பலி -video
மெஸ்சிக்கோ வெள்ளத்தில் சிக்கி இதுவரை பதினாறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலு சிலர் காணாமல் போயுள்ளனர்
இந்த அகோர வெள்ளத்தில் சிக்கி வாகனங்கள் அடித்து செல்ல படும் காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
சிங்கள இராணுவத்தால் கற்பழித்து கொல்லப்பட்ட கிருசாந்தி
சிங்கள இராணுவத்தால் கற்பழித்து கொல்லப்பட்ட கிருசாந்தி
கிருசாந்தி யாழ் சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி. சிறுவயதில் தந்தையை இழந்தவர். தாய் ஆசிரியர். கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்டவர். திறமையான மாணவி. சாதாரண தரப்பரீட்சையில் ஏழு டி மற்றும் ஒரு சி என்ற அதிதிறமை சித்தி எய்தியவர்.
செம்டம்பர் 07 இலங்கை இராணுவத்தின் வாகனம் ஒன்று மோதி சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது மரண வீட்டிற்கு சென்ற மாணவர்களில் கிருசாந்தி
குமாரசாமியும் ஒருவர். யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் இராணுவ முகாமடியில் கிருசாந்தி தடுத்துநிறுத்தப்பட்டாள்.
கோப்ரல் தர இராணுவ அதிகாரி ஒருவர் கிருசாந்தியை உள்ளே கொண்டுவருமாறு கூறியுள்ளார். அவள் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டதை ஊரார் அவதானித்துச் சென்றனர்.
இந்த நிலையில் கிருசாந்திக்காக காத்திருந்த தாயாருக்கு அவள் இராணுவமுகாமடியில் வைத்து விசாரிக்கப்பட்ட செய்தியை ஊரார் கூறினர். இந்த நிலையில் கிருசாந்தியின் தயாரார் 59
வயதான இராசம்மா பக்கத்து வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை அழைத்துக் கொண்டு டியூஷன் போய் வந்த 16வயதான மகன் பிரணவனையும் அழைத்தபடி குறித்த இராணுவமுகாமிற்குச் சென்றார். இராணுவமுகாமில் கிருசாந்தியை விசாரித்தனர்.
அவளை விசாரிக்க வந்த மூவரையும் இராணுவமுகாமிற்குள் கொண்டு சென்று சித்திரவதை புரிந்தனர். இரவு பத்து மணியளவில் அவர்கள் மூவரும் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டனர்.
கிருசாந்தியை இரண்டு பொலிசாரும் ஒன்பது இராணுவத்தினருமாக பதினொருபேர் வன்புணர்வு செய்தனர். நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் கிருசாந்தியை வன்புணர்ந்து கொலை செய்தனர். அதன் பின்னர் மூன்று புதைகுழிகளில் நான்குபேரையும் புதைத்தனர்.
அங்கு புதைக்கப்பட்டவர்கள் கிருசாந்தியும் அவளது தாய் இராசம்மாவும் தம்பி பிரணவனும் பக்கத்து வீட்டு அண்ணன் சிதம்பரம் கிருபாமூர்த்தி மாத்திரமல்ல. அங்கு சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள் என்ற அதிரச்சியட்டும் செய்தி அம்பலமானது.
இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களை அழிக்க வேண்டும் என்ற திட்டமிட்ட இன அழிப்பு கொள்கை
முன்னெடுக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்து இளைஞர்கள் யுவதிகள் காணாமல் போகச் செய்யப்பட்டனர்.
செம்மணிப்படுகொலைப் புதைகுழியை நினைவுகூர கிரிசாந்தி காணாமற்போன இன்றைய நாளே பொருத்தமானது!
தீபச்செல்வன்.
புலிகளின் ஆஸ்தான மொழி பெயர்ப்பாளர் மரணம்
புலிகளின் ஆஸ்தான மொழி பெயர்ப்பாளர் மரணம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆஸ்தான மொழி பெயர்ப்பாளரான திருவாளர் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் ஐயா நேற்றைய தினம் தனது 85வது வயதில் காலமாகி விட்ட செய்தி எல்லோரையும் போலவே எனக்கும் ஆழ்ந்த துயரை ஏற்படுத்தியுள்ளது.
மிகச்சிறந்த மொழி ஆளுமையும், சமூகம் மீதான அதீத அக்கறையும் கொண்ட அவருடன் தனிப்பட்ட ரீதியில் பழகிய நாட்கள் பசுமையானவை. தபால் அதிபராக இருந்து செவ்வனே தன் பணிகளை ஆற்றி ஓய்வு பெற்ற அவர், தன் பணி ஓய்வின் பின்னர் தான் சார்ந்த இனத்தின்
மீட்சிக்காக போராடிய தனிப்பெரும் இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான் மொழி பெயர்ப்பாளராக, சமாதான முயற்சிகளின் பங்காளனாக, போராளிகளுக்கு சிறந்த ஆங்கில ஆசானாக தனது பணியை ஓயாது தொடர்ந்தவர்.
இறுதிப்போரின் பின்னரான கடந்த ஒரு தசாப்த காலமாக, போரின் வடுக்களைத் தாங்கி, பொருளாதார நெருக்கடியால் கல்வியைத் தொடரமுடியாது தவித்த எத்தனையோ
மாணவர்களுக்கு, தனதும் தனது நண்பர்களின் ஆதரவோடும் கல்விக்கான மாதாந்த உதவிகளை வழங்கி அம் மாணவர்களின் கல்வி பயணத்திற்கு உதவி புரிந்த வண்ணமே இருந்தார்.
பஞ்சரட்ணம் என்ற தனது இயற்பெயரைக் கடந்து ஜோர்ஜ் மாஸ்டராகவே எம் எல்லோரது மனங்களிலும் நிறைந்திருக்கும் இவரது செயற்பாடுகள் எனக்கு ஆச்சரியமளிப்பதாகவும் மானிட வாழ்வு தொடர்பான சிந்தனையை தூண்டுவதாகவும் அமைந்திருந்தன.
உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறேன். ஒருநாள் தனது மருத்துவ தேவைக்காக பண்ணை வைத்தியசாலைக்கு சென்றவர் அங்கே காசநோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணியை கண்டு விசாரித்ததில் வடலியடைப்பைச் சேர்ந்த கணவனை இழந்த
அப்பெண்மணி மிகவும் வறுமைப்பட்டவர் என்பதையும், வறுமையினால் அவரது இரு குழந்தைகள் பாடசாலைக்கு கிரமமாக செல்வதில்லை என்பதையும் அறிந்து, தனது நோயுற்ற நிலைமையையும் பொருட்படுத்தாது பருத்தித்துறையிலுள்ள தனது வதிவிடத்திற்கு வந்து தேவையான கோரிக்கை
கடிதங்களை தயாரித்து, தானே நேரடியாக வடலியடைப்பிலுள்ள அப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று தேவையான ஆவணங்களையும் கையொப்பத்தையும் பெற்று அப்போது சமூக சேவை
அமைச்சின் செயலாளராக இருந்த திருமதி. இமெல்டா சுகுமார் அம்மையாருடன் தொடர்புகொண்டும் அப்போதைய ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் எழிலரசி அம்மையாரை
நேரடியாக சந்தித்தும் உடனடியாகவே குறித்த பெண்மணிக்கு ஒரு தொகை பணமும் பின்னர் மாதாந்த உதவு தொகையும் கிடைக்க வழி ஏற்படுத்தியிருந்தார்.
இத்தகு கருணையும், காருண்யமும் நிறைந்த மனப்பாங்குள்ள மனிதர்களை இன்றைய சமூகத்தில் காண்பது அரிது. தான் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் முழுமைக்கும் தன்னாலான
அரசியல், சமூக, கல்வி, மனிதநேயப் பணிகளை மானசீகமாக ஆற்றி, எம் எல்லோரது வாழ்வுக்கும் முன்னுதாரணமானவராக இருந்து, இறையடியில் இணைந்துகொண்ட ஐயாவின் ஆத்மா அமைதிபெற நாமும் பிரார்த்திக்கிறோம்.
சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி
மனைவி இறந்து 3 நாளில் இறந்த கணவன்
மனைவி இறந்து 3 நாளில் இறந்த கணவன்
கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்து மூன்று நாள்களின் பின் கணவனும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நுணாவில் பகுதியில் பதிவாகி உள்ளது.
சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 96 வயது முதியவரே இவ்வாறு கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
நுணாவில் கிழக்கைச் சேர்ந்த 90 வயதுடைய பெண் கடந்த 3 ஆம் திகதி கொவிட்-19 நோயினால் உயிரிழந்தார். அவரது சடலம் இன்னும் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் அவரது கணவர் தனது 96 வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். அவரும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத் துறையினர் அறிக்கையிட்டுள்ளனர்.
வவுனியாவில் வாகன விபத்து – ஒருவர் மரணம்
வவுனியாவில் வாகன விபத்து – ஒருவர் மரணம்
வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிளொன்று, ஈரப்பெரியகுளம் சந்திக்கருகில், எதிரே வந்த கடற்படை பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று மாலை(06) இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதான
அனுஸ்க அபயரத்தின லக்மால் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரிட்டனில் புலிகள் மீதான தடைக்கு நன்றி – இலங்கை அரசு
பிரிட்டனில் புலிகள் மீதான தடைக்கு நன்றி – இலங்கை அரசு
நியூசிலாந்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், இலங்கையின் அனைத்து புலனாய்வு பிரிவும் நியூசிலாந்தில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இதற்கான பணிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ளார் என்றார்.
சர்வதேச ரீதியில் தீவிரவாதம் மற்றும் அதன் தாக்கம் குறித்து தெளிவான அறிவை அனைத்து நாடுகளும் அறிந்துள்ளதாக தெரிவித்த அவர், தீவிரவாத செயற்பாட்டால் தெற்கு ஆசிய நாடுகள் மாத்திரமின்றி உலக நாடுகளையும் அழுத்தங்களுக்கு இட்டுச் சென்றுள்ளமைக்கு நியூசிலாந்தில் இடம்பெற்ற சம்பவம் சிறந்த உதாரணமாகும் என்றார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் நேற்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை பிரித்தானியா நீக்காமைக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்த அவர், குறித்த தடையை நீக்குமாறு தொடர்ச்சியாக பல சக்திகள் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் பிரித்தானியா நீதிமன்றம் அக்கோரிக்கையை நிராகரித்து வருகின்றது.
போர் முடிந்தாலும் அரசியல் ரீதியான செயற்பாடு காரணமாகவே பிரித்தானியா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது என நினைக்கிறோம். இத்தீர்மானமானது ஏனைய நாடுகளுக்கு மிகச் சிறந்த உதாரணம் என்றார்.
இதேவேளை,இலங்கை தொடர்பில் பல்வேறு சக்திகள் போலியான பிம்பத்தை தோற்றுவித்து, பங்கம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை சர்வதேசத்தில் முன்னெடுத்து வருகின்றன.
இந் நிலையில், அவற்றை நீக்கி நாட்டின் யதார்த்த உண்மையை ஐரோப்பாவுக்கு முன்வைப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாக ஐரோப்பிய நாடுகளின் உயரிய மாநாட்டுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுத்த அழைப்பை கருதுவதாகவும், இந்த மாநாட்டின் முதல் அமர்வில் பேசுவதற்கும் பிரதமருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொரனோவால் பரிதிசைகள் ஒத்தி வைப்பு
கொரனோவால் பரிதிசைகள் ஒத்தி வைப்பு
2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சையை எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கான் முழுவதும் எமது காட்டு பாட்டில் – தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கான் முழுவதும் எமது காட்டு பாட்டில் – தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கான் முழுவதும் தற்போது தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தாலிபான்களை அறிவித்துள்ளனர் ,இறுதியாக போரிடம்பெற்ற இறுதி மாநிலமும் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்
அரச இராணுவம் தலிபான்கள் வசம் சரண் அடைந்துள்ளனர் ,
அங்கு குவிக்க பட்டிருந்த முள் ஆயுத தளபாடங்களும் மீட்க பட்டுள்ளது என அறிவித்துள்ளனர்
சிக்காகோவில் துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்
சிக்காகோவில் துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்
அமெரிக்கா சிக்காகோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் சிக்கி எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலும் நான்கு வயது சிசு பலியாகியுள்ளது
தற்போது தொடராக நடந்து வரும் துப்பாக்கி சூட்டில் பலர் படுகாயமடைந்து ,பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
தாயுடன் காட்டுக்கு சென்ற மகளை காணவில்லை – தேடும் பொலிஸ்
தாயுடன் காட்டுக்கு சென்ற மகளை காணவில்லை – தேடும் பொலிஸ்
பூண்டுலோயா பகுதியில் தயவுடன் காட்டுக்கு விறகு வெட்ட சென்ற இருபத்தி ஐந்து வயது மகள் காணாமல் போயுள்ளார்
இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் இராணுவத்தின் ஈடுபட்டுள்ளனர் ,இவர் உயிருடன் உள்ளாரா என்பது தொடரபில் ஐயம் நிலவுகிறது
கொரனோ தொற்றுக்கு இலக்காகி 180 மரணம்
கொரனோ தொற்றுக்கு இலக்காகி 180 மரணம்
இலங்கையில் அதிவேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 180 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பத்து ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
அணுகுண்டுகள் தாங்கிய சீன விமானங்கள் -தாய்வான் மேலாக பறப்பு
அணுகுண்டுகள் தாங்கிய சீன விமானங்கள் -தாய்வான் மேலாக பறப்பு
தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையில் கடும் பனிப்போர் இடம்பெற்று வரும் நிலையில்
தற்போது சீனா தனது அணுகுண்டுகளை காவிய விமானங்களை எல்லையோரத்தில் பறக்க விட்டுள்ளது
இந்த விமானங்கள் திடீர் நுழைவால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
அமெரிக்காவின் ஏவுகணைகள் மற்றும் இராணுவம் , தாய்வான் எல்லையில் குவிக்க பட்டுள்ள நிலையில் இந்த
அதிரடி இராணுவ நகர்வை சீனா மேற்கொண்டு வருவது குறிப்பிட தக்கது
வெள்ளை வானில் மக்களை பிடிக்கும் இராணுவம்
வெள்ளை வானில் மக்களை பிடிக்கும் இராணுவம்
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், வெள்ளைவான் கலாசாரம் தலைத்தூக்குமென கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது பிரசாரம் செய்யப்பட்டது.
அதற்காக முதலைக்கண்ணீர் வடித்தனர். ஊடகவியலாளர் சந்திப்பில் படம் காட்டப்பட்டது.
முன்னாள் சுகாதார அமைச்சரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குபற்றிய இருவர் சிறையில் உள்ளனர்.
பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் அவரசகாலச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உண்மையால், வெள்ளைவான் கலாசாரத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தலைமை வகிக்கின்றார். என்ன? கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியாமல் வீடுகளிலேயே
இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றுவதற்கு படையினர் வெள்ளை வான்களிலேயே செல்கின்றனர்.
அவ்வாறு வெள்ளைவான் கலாசாரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே மாற்றியுள்ளார். அவ்வாறு வெள்ளைவான்களில் சென்று தடுப்பூசியை ஏற்றாவிடின், வீடுகளுக்குள்ளே முடங்கியிருப்போரின் நிலைமை என்னவாகியிருக்கும் என்றும் வினவினார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ,சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை
கிளிநொச்சி மாவட்டத்தில் ,சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை
கிளிநொச்சி மாவட்டத்தில் ,இம்முறை சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை நிகழ்ந்துள்ளதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி த. இராஜகோபு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நான்கு பாரிய குளங்களும் 5 நடுத்தர குளங்களும் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் 2019 ஆண்டுக்கு முன்னர்
40சதவீதத்திற்கு குறைவாக காணப்பட்ட மாவட்டத்தின் சிறுபோக அளவானது இரணைமடு குளத்தின் புனரமைப்பின் பின்னர் 2019 இல் 68% ஆகவும் 2020 இல் 68.2% ஆகவும் இவ்வருடம் 2021 இல் 78.6% ஆக அதிகரித்துள்ளது.
இவ் அதிகரிப்பானது கிளிநொச்சி மாவட்ட வரலாற்றில் இதுவரை காணப்படாத உச்ச அடைவு மட்டமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இம் முறை இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக பயிற்செய்கை 82% ஆக பயிற்செய்கை குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் பொது பங்குகள் பங்கணைத்தலில் ஏற்பட்ட
அதிகரிப்பு மற்றும் அத்துமீறல்கள் என்பவற்றை கணக்கிடும் போது இரணைமடு குளத்தின் கீழான ஏறக்குறைய 100% பயிற்செய்கை இடம்பெற்றுள்ளதை அறிய முடிவதாகவும் இவ் அடைவு
மட்டமானது விவசாயிகளின் பங்களிப்புடன் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் சிறப்பான
நீர் முகாமைத்துவத்தின் மூலம் அடையப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி
20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி
20 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மாவட்டங்களில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களிலேயே இந்த வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று
கொவிட் 19 வைரசு தொற்றுபரவலை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல்
ஆரம்பமாகும் என கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட ஐந்து பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார். இதற்கமைவாக ,கொழும்பு சுகததாச உள்ளக அரங்கு,
ஜிந்துப்பிட்டி பொதுச் சுகாதார அலுவலகம், ஃபோர்ப்ஸ் வீதி சனசமூக நிலையம், கெம்பல் பார்க், சாலிகா மைதானம், ரொக்ஸி கார்டின் ஆகிய இடங்களில் இன்றைய தினம் தடுப்பூசி ஏற்றப்படும்.
லண்டனில் போலிஸ் அதிகாரியை கடித்து குதறிய குற்றவாளி
லண்டனில் போலிஸ் அதிகாரியை கடித்து குதறிய குற்றவாளி
லண்டனில் காவல்துறை சிப்பாய் ஒருவர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றுள்ளார்
.,அவ்வேளை அவரை குறித்த நபர் அவரது கையில் இரண்டு தடவை கடித்துள்ளார்
இவரது கடி காயத்தினால் பாதிக்க பட்ட சிப்பாய் சிகிச்சை பெற்றுளளர் ,மேற்படி விடயம் பெரும்
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் 3 பேர் மரணம் 24 பேர் காயம்
பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் 3 பேர் மரணம் 24 பேர் காயம்
பாகிஸ்தான்,ஆப்கான் எல்லை பகுதியி, இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில மூவர் பலியாகியுள்ளனர்
மேலும் இருபத்தி நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர் ,மேற்படி தாக்குதலை அடுத்து பாதுகாப்பு
பலப்படுத்த பட்டுள்ளது
சுறா கடித்து நபர் பலி – அவுஸ்ரேலியாவில் பயங்கரம்
சுறா கடித்து நபர் பலி – அவுஸ்ரேலியாவில் பயங்கரம்
அவுஸ்ரேலியா Coffs Harbour பகுதியில் நபர் ஒருவர் சுறா கடித்து பலியாகியுள்ளார்
சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுக்கள் விரைந்த பொழுதும் அவரை காப்பற்ற முடியவில்லை
குறித்த பகுதியில் இது போன்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
எருமையை பலியிட்டு, ரத்தத்தைத் தெளித்து நடிகர் – அதிர்ச்சி சம்பவம்
எருமையை பலியிட்டு, ரத்தத்தைத் தெளித்து நடிகர் – அதிர்ச்சி சம்பவம்
எருமை மாட்டைப் பலியிட்டு அதன் ரத்தத்தை நடிகர் சுதீப்பின் படத்தில் தெளித்து ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
´நான் ஈ´, ´புலி´ படங்களின் மூலம் தமிழில் பிரபலமானவர் கிச்சா சுதீப். கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனான இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரின் 50 நாள் பிறந்த நாள் விழா ரசிகர்கள் சார்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அவரது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து பிறந்த நாளைக் கொண்டாடினர்.
இந்த நிலையில் கர்நாடகம் பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான சுதீப் ரசிகர்கள் ஒன்று கூடி கட் அவுட் வைத்து பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாடினர்.
அப்போது சில ரசிகர்கள் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்து, அதைப் பலியிட்டு அந்த ரத்தத்தைக் கட் அவுட் மீது தெளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து பெல்லாரி நகர் காவல்துறையினர் சுதீப் ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







