Posted in Uncategorized

பரந்தன் ,கண்டாவளை ஆகிய பகுதிகளில் இரு கமநல சேவை நிலையங்கள்

பரந்தன் ,கண்டாவளை ஆகிய பகுதிகளில் இரு கமநல சேவை நிலையங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் கண்டாவளை ஆகிய பகுதிகளில் இரு கமநல சேவை நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான வேலைத் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய செய்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் செய்கையாளர்களுக்கான சேவையை வழங்கும் விதமாக கிளிநொச்சி கமநல சேவை மையம் காணப்படுகின்றது

குமரபுரம் பரந்தன் உமையாள்புரம் ஆனையிறவு தட்டுவன்கொட்டி கோரக்கன் கட்டு ஆகிய 6 கிராம அலுவலர் பிரிவுகளைக் உள்ளடக்கிய வகையில் சுமார் எண்ணாயிரத்து 413 வயல்களிலும் 950 ஏக்கர் ஐம்பத்தி ஆறு ஏக்கர் நிலம் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் 1883 விவசாய

குடும்பங்களுக்கு சேவை வழங்கும் வகையில் பரந்தன் கமநல சேவை நிலையத்தினையும் ,ஊரியான் முரசுமோட்டை கண்டாவளை ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய

வகையில் பதினோராயிரத்தி 371 ஏக்கர் வயல்களிலும் 668 ஏக்கர் மேட்டுக்காணிகளிலும் பயிர் செய்கை மேற்கொள்ளும் 1443 விவசாய குடும்பங்களுக்கு சேவை வழங்கும் வகையில்

கண்டாவளை கமநல சேவை நிலையத்தினை அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

    Posted in Uncategorized

    சோதனைச் சாவடிகளில் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை

    சோதனைச் சாவடிகளில் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை

    மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் நாளை மறுதினம் (15 ஆம் திகதி) முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டையை பரிசோதிக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பீ.சி.ஆர். அல்லது அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

    மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முடிவுக்கு வருகின்ற நிலையில் உள்ளது.இதன் அடிப்படையில் இது வரையில் 71,396 பேர் முதலாவது கொரோனா தடுப்பூசியையும் , 56,363 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

    30 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 30 வீதமாகும், 2 வது தடுப்பூசியை பெற்றவர்களின் எண்ணிக்கை 68 வீதமாகும்

    கடந்த வாரம் முதல் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களில் கடமையாற்றுகின்ற 30 வயதிற்கு இடைப்பட்ட வர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப் பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது.

    அத்தோடு விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன., தரவுகளும், சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.என்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

    கடந்த இரு நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 101 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் 66 பேர் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்கள்.

    இவர்களில் அதிகமானவர்கள் மன்னார், வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

    தற்போது வரை 1966 கொரோனா தொற்றாளர்களும்,இவ்வருடம் மாத்திரம் 1949 தொற்றாளர்களும்,இந்த மாதம் 282 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    புத்தாண்டு கொத்தணி உடன் தொடர்புடைய 1613 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்றாளர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இவர்களில் கடைசியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை 63 வயதுடைய ஆண் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

    இதேவேளை 30 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத அனைவருக்கும் நாளையும்; தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. கட்டையடம்பன் மகா வித்தியாலயத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

    30 வயதிற்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பீ.சி.ஆர். அல்லது அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டால் அவர்களை இடை நிலை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.

    Posted in Uncategorized

    தலிபான்கள் கட்டு பாட்டு பகுதியில் கார் குண்டு தாக்குதல்

    தலிபான்கள் கட்டு பாட்டு பகுதியில் கார் குண்டு தாக்குதல்

    ஆப்கானிஸ்தான் Kunduz மாநில பகுதியில் இடம் பெற்ற கார் குண்டு தாக்குதலில் சிக்கி
    நால்வர் பலியாகியுள்ளனர்

    மேலு பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

    குறித்த நாடு முழுவதும் தலிபான்கள் வசம் வீழ்ந்துள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      போலீசாரை போட்டு தாக்கிய வாலிபன் – முதல்ல இதை பாருங்க video

      போலீசாரை போட்டு தாக்கிய வாலிபன் – முதல்ல இதை பாருங்க video

      அவுஸ்ரேலியா சிட்னி Jacobs Street in Bankstown. பகுதியில் ஆண் ,பெண் அடங்கிய மூன்று காவல்துறை ஊழியர்கள் மீது நபர் ஒருவர் திடீர் தாக்குதலை நடத்தினர் ,மேற்படி தாக்குதல்

      காட்சியை நபர் ஒருவர் படம் பிடித்து வெளியிட்ட நிலையில் அது தற்போது சமூக வலைத்தளங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை வைரலாகி வருகிறது

      மேற்படி தாக்குதலை நடத்திய ஆப்பிரிக்கா நாநாட்டை சேர்ந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்

      பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான் மூன்று காவல்துறை சிப்பாய்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

      click here full video

      Posted in Uncategorized

      ரஜினியை தொடர்ந்து காட்டுக்கு செல்லும் பிரபல நடிகர்

      ரஜினியை தொடர்ந்து காட்டுக்கு செல்லும் பிரபல நடிகர்

      பியர் கிரில்ஸுடன் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினி கலந்துக் கொண்டதை தொடர்ந்து பிரபல நடிகர் ஒருவர் பங்கேற்று இருக்கிறார்.

      ரஜினியை தொடர்ந்து காட்டுக்கு செல்லும் பிரபல நடிகர்
      ரஜினி – பியர் கிரில்ஸ்


      டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில்

      ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக வெளியிட்டு வருகிறார்.

      இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் ஏற்கனவே பங்கேற்றுள்ளனர்.

      மேலும் நடிகர் ரஜினிகாந்தும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, வனப்பகுதிக்கு சென்றார். அங்கு கிரில்ஸுடன் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

      இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் இந்நிகழ்ச்சியில் கலந்து

      கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் மாலத்தீவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

        Posted in Uncategorized

        நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

        நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


        உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

        நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
        தங்க நகை
        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

        சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அவர் கூறியதாவது:

        • கூட்டுறவு வங்கிகளில் ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
        • உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்.

        இவ்வாறு அவர் கூறினார்.

        ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

          Posted in Uncategorized

          அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா

          அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா

          அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

          காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், தொற்று உறுதியாகியுள்ளது.

          6 பொலிஸ் கொன்ஸ்டபிள், 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 2 பொலிஸ் சார்ஜன்ட் உட்பட 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

          இவர்களில் சிலர், கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

          இந்நிலையில், பொதுமக்கள் தேவையற்று பொலிஸ் நிலையம் செல்வதைத் தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

          Posted in Uncategorized

          எகிறும் படுகொலைகள் – மிதக்கும் சடலங்கள்

          எகிறும் படுகொலைகள் – மிதக்கும் சடலங்கள்

          மஹியங்கனை மொரகெட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (12) நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

          மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதிலில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது,

          மொரகெட்டிய  வேவத்த பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபர் இதன்போது உயிரிந்துள்ளார்.

          சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

          இதேவேளை, பலாங்கொடை மெதகந்தவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (12) இரவு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

          அயல்வீட்டினருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் குறித்த நபர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

          மெதகந்தவத்த  பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

          சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

          இந்த கொலை சம்பங்கள் தொடர்பில் அந்தந்த பிரசேதத்துக்கு பொறுப்பான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

          Posted in Uncategorized

          இராஜினாமா செய்த எம்.பி மீண்டும் எம்.பியாகிறார்

          இராஜினாமா செய்த எம்.பி மீண்டும் எம்.பியாகிறார்

          தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவர், மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

          தற்போதைய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்காக, தன்னுடைய தேசியப் பட்டியல் எம்.பி பதவியை, ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்தார்.

          இந்நிலையில், மற்றுமொரு தேசியப் பட்டியல் எம்.பியான அஜிட் நிவாட் கப்ரால், தன்னுடைய பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

          . அவர், மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவி​யேற்கவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

          அஜிட் நிவாட் கப்ராலின் வெற்றிடத்துக்கே, ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்படவுள்ளார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

          Posted in Uncategorized

          ஐக்கிய நாடுகளின் சபையின் 48வது கூட்டத் தொடர் ஆரம்பம்

          ஐக்கிய நாடுகளின் சபையின் 48வது கூட்டத் தொடர் ஆரம்பம்

          இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள்
          மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது.

          இலங்கை நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

          இதன் போது மனித உரிமை கூட்டத் தொடரின் 46வது கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இன நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான யோசனைகள் தொடர்பில்


          இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் தமது கருத்துக்களை முன்வைக்க உள்ளார்.

          கூட்டத் தொடரின் 47 உறுப்பு நாடுகளும் இதனை முன்வைக்க உள்ளன. இது தொடர்பிலான கருத்தாடல்களும் இடம்பெறவுள்ளன. இதன் போது சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பல

          கருத்துக்களை முன்வைக்க உள்ளதுடன் அரசாங்கம் சார்பில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி இது தொடர்பில் விடயங்களை முன்வைக்க உள்ளார்.

          இலங்கையைத் தவிர ஆப்கானிஸ்தான், நிக்கரகுவா, எத்தியோப்பியா, மியன்மார் மற்றும் யெமன் போன்ற நாடுகளின் மனித உரிமை விடயம் தொடர்பிலும் ஆணையாளர் தனது கருத்துக்களை முன்வைப்பார்.

          Posted in Uncategorized

          களியாட்ட விடுதிக்குள் 3000 கஞ்சா செடிகள் – மடக்கிய போலீஸ்


          களியாட்ட விடுதிக்குள் 3000 கஞ்சா செடிகள் – மடக்கிய போலீஸ்

          பிரிட்டன் Leysdown. பகுதியில் இயங்கி வந்த பிரபல இரவு


          விடுதி ஒன்றுக்குள் இரகசியமாக அமைக்க பட்ட அறை ஒன்றுக்குள் வைத்து கஞ்சா செடிகள் வளர்க்க பட்டுள்ளது

          மேற்படி கஞ்சா செய்கையை மேப்பம் பிடித்த போலீசார் திடீர் சுற்றி வளைப்பை நடத்தினர்
          அப்பொழுது அதற்குள் இருந்து மூவாயிரம் செடிகள் கண்டு பிடிக்க பட்டன

          மேற்படி பயிர் செய்கையில் ஈடுபட்ட ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்

            Posted in Uncategorized

            ஆப்கான் இராணுவ கமாண்டர் பிரிட்டனில் கைது

            ஆப்கான் இராணுவ கமாண்டர் பிரிட்டனில் கைது

            ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில் அரச இராணுவத்தின்

            கமாண்டோ படைக்கு தளபதியா விளங்கிய ஒருவர் பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் தாக்கி இருந்த வேளை பிரிட்டன்


            காவல்துறையினர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டுள்ளார்


            தொடந்து மூன்று நாடுகளாக தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இவர் சிறையில் அடைக்க படலாம் என சுயாதீன தகவல்கள் தெறிவிக்கின்றான்

              Posted in Uncategorized

              ஜெயலலிதா சொத்து கொள்ளை – சிக்குவாரா எடப்பாடி ..?- video

              ஜெயலலிதா சொத்து கொள்ளை – சிக்குவாரா எடப்பாடி ..?- video

              எடப்பாடி பழனி சாமியின் ஆட்சியில் இடம்பெற்ற கொட நாடு கொள்ளை வழக்கு மீள கிளற பட்டு வரும் நிலையில்


              இந்த கொள்ளையில் சசிகலா உள்ளிட்டவர்கள் சிக்குவார்கள் என இந்த ஆய்வு கூறுகிறது பாருங்கள்

              click here full video

                Posted in Uncategorized

                அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது

                அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது

                அமெரிக்காவில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய


                மூன்று கறுப்பினத்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

                இந்த சூட்டு சம்பவத்தில் மூன்று வயது சிசு உள்ளிட்டவர்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  நகங்களில் தென்படும் நோய் பாதிப்பு அறிகுறி

                  நகங்களில் தென்படும் நோய் பாதிப்பு அறிகுறி

                  தண்ணீரில் நனைத்தாலோ, சருமம் வறட்சியாக இருந்தாலோ நகங்கள் உடைவது தொடர்ந்து கொண்டிருக்கும். சோர்வு, சரும பொலிவின்மை போன்ற அறிகுறிகள் உருவாகும்.

                  முகம், கண்கள், நாக்கு போன்றவைகளை பார்த்து அவருக்கு உடலில் எத்தகைய பாதிப்புகள் இருக்கின்றன என்பதை அனுபவ டாக்டர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.

                  அதுபோல் நகங்களும் உடல் பாதிப்புகளை எடுத்துக்காட்டுகின்றன. நகங்கள் வெளிப்படுத்தும் நோய் அறிகுறிகளை காண்போம்!

                  நகங்களின் நடுப்பகுதியில் வெள்ளை நிறத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்பட்டால் அவை நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கும்.

                  அதனால் அவர்கள் உடல்நலத்தில் அக்கறைகாட்டி மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

                  மஞ்சள் நிறம் மற்றும் வெளிறிய நிறத்தில் ஒருசிலரின் நகங்கள் காட்சியளிக்கும். பெரும்பாலும் வயதானவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக தென்படும்.

                  புகைபிடித்தல், நீரிழிவு நோய், சுவாச நோய் போன்ற பாதிப்புக்களின் அறிகுறியாக இதனை உணரலாம்.

                  சிலருக்கு நகங்களின் நடுப்பகுதியில் குழி விழுந்து காணப்படும். அழுத்தமான கோடுகள் போன்றும் பதிந்திருக்கும். இது ஒருவகை திசுக்கோளாறுகளால் ஏற்படும் பாதிப்பாகும்.

                  இப்படிப்பட்டவர்களுக்கு தோல் அழற்சி பிரச்சினையும் இருக்கலாம்.

                  நகம் வெடித்து காணப்பட்டால், நகப்பூச்சு ஒத்துக்கொள்ளவில்லை என்று கருதலாம். ஆனால் வெடித்து நகங்கள் பிசிறுபோல் உதிர்ந்துகொண்டிருந்தால் இரும்பு சத்து குறைபாடு இருப்பதாக அர்த்தம்.

                  உடனே பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

                  நகங்களில் சிலருக்கு நீள்வாக்கிலும், பக்கவாட்டிலும் வரிசையாக கோடுகள் காணப்படும். நகத்தின் நிறமும் மாறுபட தொடங்கியிருக்கும்.

                  நகங்களில் தென்படும் நோய் பாதிப்பு அறிகுறி

                  அது சிறுநீரக நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். சோர்வு, கவலை எடை இழப்பு, நீரிழிவு, சிறுநீர் அதிகமாக வெளியேறுவது போன்ற பாதிப்புகளும் அவர்களுக்கு இருக்கலாம்.

                  சிலருக்கு நகங்கள் வலுவே இல்லாமல் உடைந்துபோய் கொண்டிருக்கும். அது உடல்நலப்பிரச்சினைக்கான ஆரம்பகட்ட அறிகுறியாகும்.

                  தண்ணீரில் நனைத்தாலோ, சருமம் வறட்சியாக இருந்தாலோ நகங்கள் உடைவது தொடர்ந்து கொண்டிருக்கும். சோர்வு, சரும பொலிவின்மை போன்ற அறிகுறிகள் உருவாகும்.

                  இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த வைட்டமின் சத்துக்களைகொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

                  நகங்களில் கருமை படிந்திருந்தாலோ, நகங்களை சுற்றி ரத்தக்கட்டு தோன்றியிருந்தாலோ, அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

                  உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

                  Posted in Uncategorized

                  இலங்கைக்கு விதிக்க பட்ட தடைகள் நீக்கம்

                  இலங்கைக்கு விதிக்க பட்ட தடைகள் நீக்கம்

                  இலங்கை அரசுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் விதித்த தடைகள் நீக்க பட்டுள்ளன ,


                  இந்த தடை நீக்கத்தை அடுத்து இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த பயணிகள்; குறித்த நாட்டுக்கு பயணிக்கலாம் என அறிவிக்க பட்டுள்ளது

                    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                    Posted in Uncategorized

                    யாழில் மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்பு

                    யாழில் மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்பு

                    யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்..

                    மருத்துவ பீடத்தை சேர்ந்த சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

                    கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.

                    சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.

                    குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை

                    முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும் நெருக்கமான மருத்துவப்பீட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

                    மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..

                      Posted in Uncategorized

                      இலங்கையில் உணவு நெருக்கடிக்கு இடமில்லை

                      இலங்கையில் உணவு நெருக்கடிக்கு இடமில்லை

                      கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலினால் உலக நாடுகளைப் போன்று இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.

                      இலங்கையும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இந்த வருட இறுதியில் 4 தசம் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாக பிரதி நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

                      பிபிசி உலக சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இது பற்றி மேலும் தெரிவிக்கையில், போதிய அளவிலான அத்தியாவசியப் பொருட்கள்

                      களஞ்சியங்களில் காணப்படுகின்றன இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களை பதுக்கும்

                      நடவடிக்கைகளில் சில வர்த்தகர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் இவ்வாறான முயற்சிகளை தடுக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறினார்.

                      அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கத்திற்கு உத்தரவாதத்தை வழங்க முடியும் என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்

                        Posted in Uncategorized

                        மின்தகன மயானம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

                        மின்தகன மயானம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதேச சபையில் நேற்று நடைபெற்றது!

                        நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் நேற்று

                        பிற்பகல் வேளையில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது

                        குறித்த மயானத்தை அமைக்க 25 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாவை (10 மில்லியன்) கிளிநொச்சியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்க முன்வந்துள்ளார். புலம்பெயர் அமைப்பு ஒன்றும் உதவ முன்வந்துள்ளது.

                        குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வைத்தியகலாநிதி மு. சிறீதர், அதிபர்கள் ஆசிரியர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .

                        மின்மையானம் அமைப்பதற்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

                        தலைவராக கிளிநொச்சி மாவட்ட முன்னாள் வர்த்தக சங்கத்தின் தலைவர் நவரட்ணராஜா செயலாளராக ஆசிரியரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான சத்தியானந்தன்

                        பொருளாளராக அதிபர் விக்கினராஜா உபதலைவராக வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ஆனந்த வடிவேல் உபசெயலாளராக ரவி அவர்களும் உறுப்பினர்களாக வைத்தியகலாநிதி மு. சிறீதர்

                        கிளிநொச்சி சேவைச் சந்தையின் தலைவர் இரத்தினமணி மற்றும் ரவீந்திரன் ஆகியோரும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

                        சிவஞானம் சிறீதரன்
                        சிவஞானம் சிறீதரன்
                        Posted in Uncategorized

                        கொரோனா மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது

                        கொரோனா மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது

                        நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

                        குறித்த அனைவரும் நேற்றைய தினம் (10) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

                        அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது.

                        இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 482,360 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

                        மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411,233 ஆக அதிகரித்துள்ளது.