Posted in Uncategorized

வடகொரியா ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டும் அமெரிக்கா ஏச்சரிக்கை

வடகொரியா ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டும் அமெரிக்கா ஏச்சரிக்கை

வடகொரியா அதனது தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி நடத்தி வரும் தொடர் ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டும் என உலக சண்டியர் அமெரிக்கா தெரிவித்துள்ளது

மேலும் தமது எச்சரிக்கை கடந்து சோதனை மேற்கொண்டால் அந்த நாட்டின் மீது போர் தொடுக்க படும் என்ற வகையில் மிரட்டியுள்ளது


முடிந்தால் வா என நெஞ்சை நிமிர்த்தி வடகொரியா காத்துள்ளது இங்கே குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    சிறை உடைத்து 600 கைதிகள் ஓட்டம்

    சிறை உடைத்து 600 கைதிகள் ஓட்டம்

    நையீரியாவில் சிறை ஒன்றுக்குள் இருந்து சுமார் அறுநூறுக்கு மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது

    கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் இவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்

    இதுவரை 250 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

    ஏனையவர்கள் கைது செய்ய படும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

      Posted in Uncategorized

      சீமானிடம் இருந்து விலகுகிறேன்? – இயக்குனர் அமீர் ஆவேசம் video

      சீமானிடம் இருந்து விலகுகிறேன்? – இயக்குனர் அமீர் ஆவேசம் video

      சீமான்

      சீமானிடம் இருந்து விலகி கொள்கிறேன் என இயக்குனர் அமீர் அதிரடியாக அறிவித்துள்ளார் ,இந்த திடீர் விலகல் ஏன் என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

      Posted in Uncategorized

      புலிகள் போராட்டத்தை எண்ணி அழுத சீமான் – வீடியோ

      புலிகள் போராட்டத்தை எண்ணி அழுத சீமான் – வீடியோ

      தமிழீழ விடுதலை புலிகள் போரை எண்ணி கதறிய சீமானின் கண்ணீர் பேச்சு


      வீழ்ந்து வீழ்ந்து எழுவோம் என்பதற்கும் தடைகள் தன்னை பயணிப்போம் என்பதாகும் இவரது கடந்த கால சுமைகள் ஒரு படமாக விழுகியது

      Posted in Uncategorized

      லண்டனில் புதிய சட்டம் – இந்த கார் இருந்தால் பணம் செலுத்த தேவை இல்லை

      லண்டனில் புதிய சட்டம் – இந்த கார் இருந்தால் பணம் செலுத்த தேவை இல்லை

      லண்டனில் புதிய ULEZ சட்டம் அறிமுகமாகிறது .எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் இந்த சட்டம் அமுலுக்கு வருகிறது

      இதில் 2005 ஆம் ஆண்டிற்கு முன்னர் உள்ள பெற்றோல் கார்களும் ,2015 ஆண்டிற்கு முன்னர் உள்ள

      டீசல் கார்களுக்கும் மட்டுமே இந்த வரி செலுத்த வேண்டும் ,அது தவறின் இந்த பணம் செலுத்த தேவை இல்லை
      என அறிவிக்க படுத்துள்ளது

      மேலும் உங்கள் வண்டியின் இலக்கத்தை கீழ் உள்ள இணைப்பில் அழுத்தி பாருங்கள் .ஓடலாமா இல்லையா என்பதை இதில் காண்பிக்கிறது ,இது அரச இணையம்

      click here

        Posted in Uncategorized

        வென்றுவிட ஒன்று படு

        வென்றுவிட ஒன்று படு

        வென்றுவிட ஒன்று படு …!

        சிங்கள தனி சட்டம் நாட்டினிலே
        சிறுபாண்மை வாடுது வீட்டினிலே
        சில்லறை காவடி தோள்களிலே
        சிலுக்காக ஆடுது வேட்டிகளே

        தன் மானம் இங்கே விற்று விட்டார்
        தமிழரை காலடி வைத்து விட்டார்
        தான் ஒங்க வீட்டை வளர்த்து விட்டார்
        தமிழரே தாமெனே கூவி நின்றார்

        வந்தேறி குந்திட வைத்து விட்டார்
        வலிகளை அள்ளியே வைத்து விட்டார்
        துயர் போக்க இன்று என் செய்வார்
        தூர பார்வை என்று கொள்வார்

        வேங்கைகள் தாமென முழங்கி வந்தார்
        வேரோடு வீரத்தை சாய்த்து விட்டார்
        ஓட்டுக்கு மட்டும் வீடும் வந்தார்
        ஓடமாய் கரை ஏறி ஓடி விட்டார்

        இவர் தான் எங்கள் தலைவர் என்றால்
        இடி மின்னல் இவரை கொல்லாதோ
        இன்றே தமிழர் விழித்து விட்டால்
        இன்றே நல் தீர்வு கிட்டாதோ …?

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 24-10-2021

          Posted in Uncategorized

          அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு -ஒருவர்மரணம் 7 பேர் காயம்

          அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு -ஒருவர்மரணம் 7 பேர் காயம்

          அமெரிக்கா ஜோர்ச்சியா பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற விருந்து நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,மேலும் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர்

          அமெரிக்காவில் இது போன்ற தாக்குதல்கள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            ஆப்கான் எல்லை பகுதியில் ரசியா இராணுவம் குவிப்பு

            ஆப்கான் எல்லை பகுதியில் ரசியா இராணுவம் குவிப்பு

            ஆப் கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ள நிலையில் தற்பொழுது Tajik-Afghan எல்லையில் ரசியா இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்

            மேலும் கடந்த ஆறு தினங்களாக போர் பயிற்சிகளும் அப்பகுதியில் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

            எவ்வேளையும் தலிபான்கள் தம் வசம் தாக்குதல் நடத்த கூடும் என்ற அச்ச நிலையில் இந்த படை நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

              Posted in Uncategorized

              பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது

              பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது

              கொலம்பியாவில் தேடப்பட்டு வந்த முதல்தார போதைவஸ்து கடத்தல் மன்னன் போலீசாரின் திடீர் சுற்றிவளைப்பில் கைது செய்ய பட்டுள்ளார்
              59 வயதுடைய இவர் அமெரிக்கா உளவு த் துறையாலும் தேட பட்டு வந்தவர்

              பல மில்லியன் சொத்துக்களுக்கு இவர் அதிபதியாக உள்ளவர

              அவ்வாறான அரசியல் ,ஆள்,பண பலம் படைத்த நபரே போலீசாரினால் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                சிங்கள குடியேற்றங்களே இந்நாட்டில் யுத்தத்திற்கு காரணம்


                சிங்கள குடியேற்றங்களே இந்நாட்டில் யுத்தத்திற்கு காரணம்

                மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து நீர்ப்பாசன அமைச்சரும் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.

                அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனாதிபதியின் கிராமத்தினுடனான மக்கள் சந்திப்பு எனும் தொனிப்பொருளில் கடந்த 03.04.2021 இல் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச

                செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள ” போகஸ்வெல” என தற்போது பெயர் மாற்றம் பெற்றுள்ள கொச்சியான் குளம் என்ற தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்தில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

                இதன்போது அப்போதைய வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேனவின் வேண்டுகோளின் பிரகாரம் வடமத்திய மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட கெப்பிட்டிகொலாவ

                பிரதேச செயலாளர் பிரிவின் கனுகாவெல கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 600 குடும்பங்களும் பதவியா கிராம அலுவலர் பிரிவு மற்றும் கம்பிலிவெலலெதகன்ன கிராமங்களைச் சேர்ந்த 430 குடும்பங்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவுடன் இணைப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

                அதனைத் தொடர்ந்து அண்மையில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு வவுனியா மாவட்ட தற்போதைய அரசாங்க அதிபரினால் சமன் பந்துலசேனவின் கோரிக்கை முன்மொழிவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

                வடக்கு – வடமத்திய மாகாணங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் இனப்பரம்பல்க் கோலத்தை மாற்றி அமைத்து அதனால் அப்பிரதேசத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்ற செயற்பாடாக இது

                திட்டமிடப்பட்டுள்ளது என்பதுடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு முரணாகவும் இன நல்லிணக்கத்தை பாதிக்கின்ற செயலாகவும் இது அமையும் என்பதால் இந்நடவடிக்கையை உடன் நிறுத்தும்படி வடமாகாணத்தை

                பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அரசின் இவ்வாறான செயல்முறைகளை வன்மையாக கண்டிப்பதுடன் செயல்பாட்டை உடன் நிறுத்துமாறு தங்களை நாடி நிற்கிறோம்.

                இவ்வாறான மறைமுக நிகழ்ச்சித் திட்டங்களூடாக முன்னெடுக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்களே இந்நாட்டில் 30 வருடங்களுக்கு மேல் நடந்த யுத்தத்திற்கு வித்திட்டதாகவும் இன நல்லுறவை பாதிக்கும் விடயமாக அமைந்திருப்பதையும் நினைவுபடுத்துகிறோம். என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                  Posted in Uncategorized

                  இலங்கை காவல்துறை விசேட சோதனை – 948 பேர் கைது


                  காவல்துறை விசேட சோதனை – 948 பேர் கைது

                  மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                  நேற்று (23) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                  இவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                    Posted in Uncategorized

                    மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று

                    மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று

                    மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

                    எனவே, இவ்வாறான இடங்களில் ஒன்றுக் கூடுவதை, கூடியளவு தவிர்த்துக்கொள்ளுவது அவசியம் என்றார்.

                    மேலும் புதிய தொற்று நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு, சுகாதார அமைச்சு பாரிய அவதானத்துடன் செயற்படுவதாகத் தெரிவித்த அவர், தடுப்பூசிக்கு அப்பாற்பட்ட தொற்று பிரழ்வு , நாட்டுக்குள் நுழைய வாய்ப்புள்ளதென்றார்.

                      Posted in Uncategorized

                      காரில் சென்று திருடி வந்த திருடன் கைது

                      காரில் சென்று திருடி வந்த திருடன் கைது

                      இரவு வேளைகளில் காரில் சென்று, வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர், காருடன் மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

                      மொரட்டுவ- கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

                      இதற்கமைய, குறித்த சந்தேகநபரால் மொரட்டுவ பிரதேசத்தில் 5 வீடுகளும் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீடும் உடைக்கப்பட்டு தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், மதுபானம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                      இவ்வாறு திருடும் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                        Posted in Uncategorized

                        ஓடையில் இருந்து இரு சடலங்கள் மீட்பு

                        ஓடையில் இருந்து இரு சடலங்கள் மீட்பு


                        பண்டாரவளை- நாயபெத்த தோட்டம், கோணமுட்டாவ வீதியின் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

                        இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், தெற்கு கெபில்லவெல- பண்டாரவளை என்ற முகவரியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் என பண்டாரவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                        இதேவேளை பண்டாரவளை- மீரியகஹ சந்தியில் உள்ள வடிகானுக்கு அருகிலிருந்து மற்றுமொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

                        எனினும் இந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், இச்சடலங்கள் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன

                          Posted in Uncategorized

                          மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம்

                          மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம்

                          நாளை முதல் மாகாணங்களுக்குள்ளான ரெயில் சேவைகளுக்காக 133 ரெயில்களை ஈடுபடுத்த ரெயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

                          இருப்பினும் ,நாளை முதல் பருவகால பயணச் சீட்டை கொண்டுள்ள ரெயில் பயணிகளுக்கு மாத்திரமே ரெயில் சேவைகள் இடம்பெறும் என்று ரெயில்வே திணைக்கள பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர கூறினார்.;

                          நாளை கொழும்புக்கு வரும் ரெயில் அளுத்கம, அவிசாவளை ,அம்பேபுஸ்ச மற்றும் கொச்சிக்கடை வரையில் மாத்திரம் பயணிக்கும் என்று பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

                          இதேவேளை ,பயணத் தடை காரணமாக கடந்த சில மாதகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரெயில் சேவை மாகாணங்களுக்குள் நாளை ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

                          எனினும், மாகாணங்களுக்கு இடையிலான ரெயில் சேவை இடம்பெறாது. மாகாணங்களுக்கு இடையிலான ரெயில்
                          சேவை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கூறினார்.

                            Posted in Uncategorized

                            வழக்கு தொடர்ந்த சமந்தா… கோபமடைந்த நீதிபதி

                            வழக்கு தொடர்ந்த சமந்தா… கோபமடைந்த நீதிபதி

                            தனது கணவர் நாகசைதன்யாவை விவகாரத்து செய்ய இருப்பதாக அறிவித்த நடிகை சமந்தா, தவறான தகவல்களை பரப்பிய யூடியூப் தளம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

                            வழக்கு தொடர்ந்த சமந்தா… கோபமடைந்த நீதிபதி
                            சமந்தா


                            தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இவர்களது திருமண உறவு, அண்மையில் முடிவுக்கு வந்தது.

                            இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இதைத் தொடர்ந்து சமந்தா-வின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன.

                            இந்நிலையில், விவாகரத்து விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறாக தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு

                            ஐதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்குத் தொடர்வதை விட, அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம்.

                            பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை பொது களத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள், பின்னர் அவர்கள் அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்கிறார்கள்’ என்று கூறினார்.

                            சமந்தா

                            நடிகையின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சமந்தா-வின் வழக்கறிஞர் முரளி நீதிமன்றத்தில் கோரியதை அடுத்து இந்த கருத்தை நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கறிஞரின் வேண்டுகோளால் கோபமடைந்த கூடுதல் மாவட்ட நீதிபதி, “இந்த மனு சரியான நேரத்தில் விசாரணைக்கு வரும்” என்று உறுதியாக கூறினார்.

                            மேலும் “சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று இல்லை. சமந்தா-வின் வழக்கை, நடைமுறைப்படி நீதிமன்றம் விசாரிக்கும்” என்று கூறியுள்ளார்.

                              Posted in Uncategorized

                              மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம்

                              மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம்

                              நாடு முழுவதும் தற்போது அமுல் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.

                              இதனை, கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணு தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

                              ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று (22) நடத்திய பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணு தளபதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

                                Posted in Uncategorized

                                கோட்டா அரசாங்கமும் மாபியாவும்- தாக்கிய தம்பி ராசா

                                கோட்டா அரசாங்கமும் மாபியாவும்- தாக்கிய தம்பி ராசா

                                இன்று நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் உள்ளதென தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஒன்று கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கம் மற்றொன்று வர்த்தக மாபியாக்களை நிர்வகிக்கும் அரசாங்கம் என்றார்.

                                கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இன்று நாட்டில் 122 ரூபாய்க்கு சீனி இல்லை. அரிசியின் கட்டுபாட்டு விலை நீக்கியதன் பின்னர், 165 ரூபாய்க்கு கீரி சம்பாவைத் தருகிறோம். 115 ரூபாய்க்கு நாடுவைத் தருகிறோம் என அரசாங்கத்தில் உள்ள வர்த்தகர்கள் கூறினார்கள்.

                                ஆனால் இன்று கீரி சம்பா 180 ரூபாயாகவும் நாடு 115 ரூபாயாகவும் சம்பா 150 ரூபாய்க்கும்
                                சென்றுள்ளது. ஆகவே வர்த்தக மாபியாக்களான கறுப்பு சந்தை முதலாளிகளே இன்று
                                அரசாங்கத்தை நிர்வாகம் செய்கின்றனர்.

                                வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஊடகங்கள் முன்பாக வந்து அரசாங்கத்தின் தீர்மானங்களை தெரிவித்தாலும் அதில் ஒன்று கூட நடக்காது.

                                தற்போது வர்த்தக மாபியாக்கள் அரசாங்கத்தின் பணியை செய்யும் அதேவேளை, அரசாங்கம் இந்த மாபியாக்கள் செய்வதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக எதுவுமே தெரியாத மாதிரி மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் உள்ளது என்றார்.

                                இவ்வாறு இருப்பதற்கு நாட்டில் எதற்கு அரசாங்கம் என கேள்வி எழுப்பிய அவர், இந்த
                                அரசாங்கமானது வர்த்தக மாபியாக்களுக்கு அடிமையாக வர்த்தக மாபியாக்கள் சொல்வதை
                                செய்யும் அரசாங்கமாக மாறியுள்ளது என்றார்.

                                  Posted in Uncategorized

                                  இளைஞர்கள் மீது, கொடூரமாக தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

                                  இளைஞர்கள் மீது, கொடூரமாக தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

                                  மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது, கொடூரமாக தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

                                  பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த தகவலை தெரிவிக்கின்றது.

                                  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஏறாவூர் பிரதேசத்தில் இளைஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

                                  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இதை தனது டுவிட்டரிலும் பதிவிட்டிருந்தார்.

                                  இதனையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதோடு குறித்த அதிகாரி தற்சமயம் பணிநீக்கமும் செய்யப்பட்டிருக்கின்றார்.

                                    Posted in Uncategorized

                                    இலங்கையில் புதிய நோய் ஒருவர் மரணம்

                                    இலங்கையில் புதிய நோய் ஒருவர் மரணம்

                                    நாட்டில் முதற்தடவையாக கொவிட்019 நிமோனியாவுடன் தொடர்புடைய கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளார். இது எமது நாட்டில் கறுப்பு பூஞ்சை தொற்றால் ஏற்பட்ட முதலாவது மரணமாகும்.

                                    காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எல்பிட்டிய பகுதியை சேர்ந்த 56 வயதான ஒருவரே கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய விசேட நிபுணர் ரொஹான் பீ. ருவன்புர தெரிவித்தார்.

                                    கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்

                                    சடலம் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொண்ட உதவி சட்ட வைத்திய அதிகாரி தன்தெனிய ஆராய்ச்சி, மேலதிக பரிசோதனைக்காக உடற்பாகங்களை அரச மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

                                    அதற்கமைய, நேற்று (21) வௌியிடப்பட்ட மேலதிக பரிசோதனை அறிக்கைக்கு அமைய, உயிரிழந்த நபரின் சுவாசப்பையை அண்மித்த பகுதியில் கறுப்பு பூஞ்சை தொற்றியிருந்ததாக, அரச மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூஞ்சை நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர உறுதி செய்துள்ளார்.

                                    கொவிட்-19 நிமோனியாவுடன் தொடர்புடைய கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளானவர்கள் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட போதிலும், இதனால் உயிரிழந்த முதலாவது நபராக குறித்த

                                    நபர் காணப்படுவதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய விசேட நிபுணர் ரோஹான் பீ. ருவன்புர தெரிவித்துள்ளார்.