Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
பேஸ்புக்’கின் பெயர் மாற்றம் Facebook – Meta
பேஸ்புக்’கின் பெயர் மாற்றம் Facebook – Meta
பேஸ்புக்’கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் புதிய பெயர் மெட்டா என பேஸ்புக்’கின் தலைமை
அதிகாரி (CEO ) Mark Zuckerberg மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், மெய்நிகர் ஒன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி
தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் மீது விழுந்த வீதி; சிறுமி காயம்
வீட்டின் மீது விழுந்த வீதி; சிறுமி காயம்
கண்டி பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கண்டி- உடபோவல வீதியின் ஒரு
பகுதி, வீடொன்றின் மீது சரிந்து விழுந்ததால், 13 வயது சிறுமியொருவர் காயமடைந்து,
பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (26) இரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன்
இதன்போது வீட்டில் அவரது தந்தையுடன் சிறுமி மாத்திரமே இருந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியை அவரது தந்தை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், வீடு கடுமையாக சேதமடைந்துள்ளது.
இடிந்து விழுந்த வீதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் மற்றும் கங்கவட்டகோரல பிரதேசசபைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த விடயம் தொடர்பில்
உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி செயலகத்தால்
கங்கவட்டகோரல பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லை என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த வீதியின் பல இடங்களிலும் இவ்வாறு வெடிப்பு காணப்படுவாகவும்,
எதிர்வரும் காலங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் மணசரிவு ஏற்படும் என்றும்
பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இராணுவத்திடம் இருந்த 11 ஏக்கர் காணி விடுவிப்பு
இராணுவத்திடம் இருந்த 11 ஏக்கர் காணி விடுவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள மக்களின் காணிகளில் 11 ஏக்கர்
காணிகள் இராணுவத்தினரிடம் இருந்து இன்று (28) விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து மக்கள் புதுக்குடியிருப்பில் மீள குடியமர்ந்த போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள சுமார்
19 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீள்குடியேறிய மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தபோதும் எந்தவித தீர்வுகளும்
கிடைக்கப்பெறாத நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மாசி மாதம் 3 ஆம் திகதி குறித்த பகுதியில் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட 19 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு கோரி 49
குடும்பங்களை சேந்தவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.
போராட்டம் ஆரம்பித்து சுமார் 1 மாத காலத்தில் குறித்த காணிகளை 3 கட்டங்களாக விடுவிப்பதாக உறுதிமொழி வழங்கப்பட்டது. இருப்பினும் முதலாவது பகுதி காணிகள் விடுவிக்கும்
வரை தாம் போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்த மக்கள் குறித்த உறுதிமொழிகளுக்கு அமைய முதற்கட்டமாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட 7.75 ஏக்கர் காணி விடுவிப்போடு தொடர் போராட்டத்தை நிறுத்தினர்.
புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட 7.75 ஏக்கர் காணி விடுவிப்பை தொடர்ந்து மீதமுள்ள 29 பேரினது 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட
கட்டடங்களை அகற்றிய பின்னர் 3 மாதத்திற்குள் விடுவிக்கப்படும் எனவும் மீதமுள்ள பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுவதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த காணி சுமார் 4 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமை குறித்தும் குறிப்பாக சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் 682 ஆவது படைப்பிரிவு முகாம் கைவேலிப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளபோதும் இன்று வரை மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை
எனவும் குற்றம் சுமத்தி இருந்ததோடு இராணுவம் மிக விரைவாக தமது காணிகளை தம்மிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதிகாரிகள் தமது காணிகளை விரைவில்
பெற்றுத்தர வேண்டும் எனவும் தாம் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படட நிலையில் உள்ளதாகவும் மக்கள் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் குறித்த காணிகளில் பதினொரு ஏக்கர் காணி இன்று (28) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாக
இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் பொன்னம்பலம் வைத்தியசாலை
அமைந்திருந்த ஒரு சிறு பகுதியை தவிர ஏனைய காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பணமோசடி காவல்துறை அதிகாரி கைது
பணமோசடி காவல்துறை அதிகாரி கைது
இலங்கை வந்துரம்ப பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர் பத்து லட்சம் ரூபா பணம்
லஞ்சமாக பெற்றார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
சாமீப காலங்களாக இவ்வாறான குற்ற சாட்டுக்கலில் சிக்கி சில காவல்துறை அதிகாரிகள் கைது
செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது
சீனாவை பாராட்டிய மகிந்தா – இந்தியாவுக்கு ஆப்பு
சீனாவை பாராட்டிய மகிந்தா – இந்தியாவுக்கு ஆப்பு
இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்களின் முன்னிலையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பாராட்டினை தெரிவித்தார்.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்கள் நேற்று (27) அலரி மாளிகையில் சந்தித்தபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கொவிட் தொற்று நிலைமையை கட்டுப்படுத்தல் மற்றும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.
இலங்கையின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு வாழ்த்து தெரிவித்த சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்கள், அதற்கு சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
சீன மக்கள் வங்கி (PBOC) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) இடையிலான 10 பில்லியன் சீன யுவான் மதிப்பிலான இருதரப்பு நிதி பரிமாற்ற ஒப்பந்தமானது, உலகளாவிய முதலீட்டாளர்களின்
உணர்வை வலுப்படுத்தவும், இலங்கையின் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் உதவும் என சீன தூதுவர் இதன்போது வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு நிறைவு மற்றும் இரப்பர் அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை ஆகியவற்றை குறிக்கும்
2022ஆம் ஆண்டானது, இலங்கை – சீன இருதரப்பு உறவின் மிக முக்கியமான ஆண்டாக விளங்கும் என சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த மாதம் வரவிருக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி மற்றும் சீன பிரதமரின் சார்பில் சீன தூதுவர் முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பற்றி எரிந்த லொறி – அடித்து மூடப்பட்ட வீதி
பற்றி எரிந்த லொறி – அடித்து மூடப்பட்ட வீதி
அவுஸ்ரேலியா மேற்கு சிட்னி பகுதியில் பயணித்த கொண்டிருந்த லொறி ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது .
இதனால் அவ்வழி சாலை முற்றாக பாதிக்க பட்டது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
எனினும் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது ,மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பிரபாகரன் தமிழ் நாட்டுக்கு தலைவர் இல்லை – அமீர் – கொதிக்கும் மக்கள் video
பிரபாகரன் தமிழ் நாட்டுக்கு தலைவர் இல்லை – அமீர் – கொதிக்கும் மக்கள் video
தமிழின தேசிய தலைவர் தமிழ் நாட்டு தமிழர்களுக்கு தலைவர் இல்லை என இயக்குனர் அமீர்
அவர்கள் அறிவித்துள்ள கூட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
சமீப காலங்களாக இவரது பேச்சு மாறி சுழன்றடித்து வருவதை காண முடிகிறது
இவரது இந்த பேச்சின் பின்னால் தமிழர்கள் இவருக்கு எதிராக கொதித்து எழுந்துள்ளதும் எதிர்
காலத்தில் இவர் தயாரிக்கும் திரைப்படங்களை தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என கணிக்க பெறுகிறது
click here video
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
மக்களை ஓட ஓட வெட்டிய நபர் – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்
மக்களை ஓட ஓட வெட்டிய நபர் – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்
அவுஸ்ரேலியா Vienna நகர பகுதியில் 35 வயதுடைய நபர் ஒருவர் மக்களை ஒட ஓட கத்தியால்
வெட்டியுள்ளார்
இதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி தாக்குதல் நடத்த பட்ட நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,இவர் மன நலம் பாதிக்க பட்டவர் என தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது ,இவ்வாறான சம்பவங்கள்
தற்போது அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
ஈரான் பெட்ரோல் நிலையங்களை முடக்கிய இஸ்ரேல் சைபர் குழு
ஈரான் பெட்ரோல் நிலையங்களை முடக்கிய இஸ்ரேல் சைபர் குழு
ஈரான் நாட்டின் அணைத்து பெட்ரோல் நிலையங்களையும் இஸ்ரேல் கைக்கர்கள் கைக்கிங் புரிந்து தடை செய்துள்ளனர்
ஒரே வேளையில் அணைத்து நிலையங்களும் முடக்க பட்டதால் மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்
தற்போது தமது புலனாய்வு குழு இது எங்கிருந்து தாக்குதல் மேற்கொள்ள பட்டது என்பதை கண்டறிவதில் தீவிரம் காட்டி வருவதாக அறிவித்துள்ளது
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
மக்களை தாக்கிய காவல்துறை அதிகாரி இடமாற்றம்
மக்களை தாக்கிய காவல்துறை அதிகாரி இடமாற்றம்
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் நபர் ஒருவரை தாக்கும்
காணொளியுடன் தொடர்புடைய சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அவர் வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி சிரேஷ்ட் பிரதி பொலிஸ்மா அதிபராக
இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அதிகாரியின் தவறான நடத்தை தொடர்பில் விசாரணை ஒன்று
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று முற்பகல் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டிருந்தது.
யாழ்ப்பாணம் மிருசுவிலில் வீடு புகுந்து தாக்குதல்
யாழ்ப்பாணம் மிருசுவிலில் வீடு புகுந்து தாக்குதல்
மிருசுவில் – தவசிக்குளம் பகுதியில், நேற்று (26) இரவு, வீடொன்றுக்குள் அயல்வீட்டார் அத்துமீறி
புகுந்து மேற்கொண்ட தாக்குதலில், வயோதிப தம்பதிகள் காயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில், 69 வயதான கணவனும் 52 வயதான அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர்.
அயல்வீட்டார் தம் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தம் மீது தாக்குதலை மேற்கொண்டதாக, தாக்குதலுக்கு இலக்கான தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கோட்டா கொலைக்கு ஆதாரம் இல்லை – சிங்கள கூலி ஊளை
கோட்டா கொலைக்கு ஆதாரம் இல்லை – சிங்கள கூலி ஊளை
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டா ,மற்றும் மகிந்த கூட்டு முயற்சியில் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டனர்
மேற்படி கொலைக்கு ஐநாவில் வழங்குவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என இலங்கை தமிழ்
ஊடக வியலாளர் என்ற போர்வையில் ராசுக்குட்டி சிங்கள கூலி ஒன்று இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது
சிங்கள இராணுவ தளபதியின் மகளாக விலங்கு யோகினி இளையராஜா மகனால்வழங்க பட்ட
இசை ஒன்றில் அழைக்க பட்டு பாடல் பாடுவிக்க பட்டுள்ளது
மேற்படி விடையத்தால் ஆத்திரமுற்ற தமிழர்கள் கொந்தளித்துள்ளார் ,அவ்வேளையே மேற்படி
கருத்தை சிங்கள கூலி கூவியுள்ளது
பள்ளி வாசலுக்குள்18 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் வெறிச்செயல்
பள்ளி வாசலுக்குள்18 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் வெறிச்செயல்
நையீரியாவில் உள்ள பள்ளி வாசல் ஒன்றுக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் மீது
தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில
பதினெட்டு பேர் பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
ரசியா இராணுவம் மீது குண்டு தாக்குதல் -சிதறிய வண்டிகள்
ரசியா இராணுவம் மீது குண்டு தாக்குதல் -சிதறிய வண்டிகள்
சிரியாவில் உள்ள ரசியா இராணுவத்தினர் பயணித்த வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில்
இராணுவத்தினர் சிலர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலும் கவச வண்டிகள் சேதமடைந்துள்ளதாக
களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன
இதே பகுதியில் அமெரிக்கா இராணுவ அணிகள் மீதும் தாக்குதல் நடத்த பட்டு வந்துள்ளமை
குறிப்பிட தக்கது
சூடானில் இராணுவம் ஆட்சி கவிழ்ப்பு – பிரதமர் சிறை பிடிப்பு – 140 பேர் காயம்
சூடானில் இராணுவம் ஆட்சி கவிழ்ப்பு – பிரதமர் சிறை பிடிப்பு – 140 பேர் காயம்
சூடானில் ஆளும் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இராணுவத்தினர் ஆட்சி கபிவிழ்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்
இதில் ஆளும் பிரதமர் இராணுவத்தினரால் கைது செய்ய பட்டு வீட்டு காவலில் வைக்க பட்டுள்ளார்
மேலும் இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்
இவ்வாறான மக்கள் மீது நடத்த பட்ட சூட்டு தாக்குதலில் 7பேர் பலியாகியும் 140 பேர் படுகாயமடைந்துள்ளனர்
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்
முல்லேரியா பொலிஸ் பிரிவில் மீகஹாவத்த பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 42 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸ்
ஊடகப்பேச்சாளர், 45 வயதுடைய மற்றுமொரு நபர் படுகாயமடைந்துள்ளாக கூறினார்.
படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சுமந்திரன் உருவ பொம்மை எரிப்பு – யாழில் மக்கள் போராட்டம்
சுமந்திரன் உருவ பொம்மை எரிப்பு – யாழில் மக்கள் போராட்டம்
குருநகரில், இன்று (26), குருநகர, வல்வெட்டித்துறை மீனவர்களால், கறுப்புக் கொடி கட்டப்பட்டு, ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், உள்ளுர் இழுவை படகு மீன்பிடி தொழில் தடை செய்யப்பட
வேண்டும் என தெரிவித்த கருத்தை எதிர்த்தே, இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, குருநகர, வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து, எதிர்ப்புப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளதோடு, குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு, பாராளுமன்ற உறுப்பினர்
சுமந்திரனின் உருவ பொம்மையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது.
ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தை பெற்ற பெண்
ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தை பெற்ற பெண்
பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் இன்று (25) பிற்பகல் நைன்வெல்ஸ் தனியார் மருத்துவமனைக்கு விஜயம் செய்து ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அதிகாலை ஒரே பிரசவத்தில் இந்த ஆறு குழந்தைகளும் பிறந்துள்ளதுடன், அவர்களில் மூவர் ஆண் குழந்தைகள், மூவர் பெண் குழந்தைகள் ஆவர்.
திலினி வாசனா மற்றும் பிரபாத் உதயங்க மரவனாகொட தம்பதியினருக்கு பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரிப்பதற்காக சென்ற பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ
அவர்கள், நைன்வெல்ஸ் மருத்துவமனையின் சிரேஷ்ட செயல்பாட்டு முகாமையாளர் திரு.சுசந்த பீரிஸ் உள்ளிட்ட ஊழியர்களினால் வரவேற்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து பிரதமரின் பாரியார் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியாக கலந்துரையாடினார்.
குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு பரிசுப் பொருட்களை வழங்கிய பிரதமரின் பாரியார், எதிர்காலத்தில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்வருவதற்கு தயார் எனவும் குறிப்பிட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் நைன்வெல்ஸ் மருத்துவமனையின் முகாமைத்துவ பணிப்பாளர் தியோ ஃபெர்னாண்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிரியா இராணுவ முகாம்கள் மீது துருக்கி அகோர ஏவுகணை தாக்குதல்
சிரியா இராணுவ முகாம்கள் மீது துருக்கி அகோர ஏவுகணை தாக்குதல்
சிரியாவின் இட்லி பகுதியில் உள்ள சுமார் இருபது மைல் நீளமான சிரியா இராணுவ நிலைகள் அனைத்தும் துருக்கியின் ஏவுகணை தாக்குதல் கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
மேலும் இந்த இராணுவ முகாம்கள் மீது தொடர் அகோர ஏவுகணை தாக்குதலை துருக்கி நடத்திய வண்ணம் உள்ளது
எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இடம் பெற்று வரும் சமரில் இதுவரை பத்து லட்சத்துக்கு அதிகமான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி கர தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கிய இரு பிரதநா நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது
இதில் அமெரிக்கா படைகளிற்கு கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈரானை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகும் வரை இவ்வாறன பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் மேற்படி தாக்குதல்கள் தொடந்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
















