Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
அதிபர்களை குறிக்கும் “மிகை ஊழியர்கள்” என்ற பதம் மாற்றப்படல் வேண்டும்! சிறீதரன் எம்.பி
அதிபர்களை குறிக்கும் “மிகை ஊழியர்கள்” என்ற பதம் மாற்றப்படல் வேண்டும்! சிறீதரன் எம்.பி
அதிபர்களுக்கு மிகை ஊழியர்கள் என்ற பதத்தை மாற்றி அவர்களை அதிபர் தரத்திற்கு கொண்டுவர வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாய்மூல விடைக்காக கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய வேளையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் அதிபர்களுக்கு மிகை ஊழியர்கள் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இது நியாயமானதா? அதிபர்கள் தரப்படுத்தப்பட்டுள்ளனர். கடமையை
நிறைவேற்றும் அதிபர்களும் உள்ளனர். 2012 முதல் மிக ஊழியர்கள் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இறக்கமும் கிடையாது. இதனை மாற்றி அவர்களை அதிபர் தளத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தா
இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே – முழங்கிய சிறிதரன் எம்பி-video
இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே – முழங்கிய சிறிதரன் எம்பி-video
இறுதி யுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பகிரங்கமாக ஆதங்கத்துடன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இது தொடர்பில் அவர் வினவியுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில்,
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நான் அதிபராக கடைமையாற்றிய போது தான் இந்த சண்டைகளும் இடம்பெற்று இடப்பெயர்வுகளும் இடம்பெற்றன.
அப்போது என்னிடம் படித்த மாணவர்களில் பெரும்பாலானோரும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கணங்களில், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள், அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்கள் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
- விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அறிக்கைப் பொறுப்பாளர் அம்பி அவர்களின் குழந்தைகள் பிரியாளினி பரமேஸ்வரன், பிரதீபன் பரமேஸ்வரன், பிறையாளன் பரமேஸ்வரன்,
- மணலாறு தாக்குதல் படையணியைச் சேர்ந்த இளங்குமரன் அவர்களின் மகள் அறிவுமதி,
- யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அவர்களின் பிள்ளைகளான தமிழொளி மகாலிங்கம், எழிலினி மகாலிங்கம், மகிழினி மகாலிங்கம்,
- கலை மாஸ்டரின் மகள்மாரான கானிலா திருச்செல்வம், லக்சாயினி திருச்செல்வம்,
- மணலாறு தளபதி மஜீத் அவர்களின் பிள்ளைகளான சாருஜன் முரளிதரன், அபிதா முரளிதரன்,
- அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் ஜனகன் மகேந்திரன்,
- நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பிரியன் அவர்களின் ஒரு வயதேயான மகள் கலைச்சுடர் தயாசிறீ,
- விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் மகன்மாரான சாருஜன் கிருஸ்ணமூர்த்தி, நிகநிலான் கிருஸ்ணமூர்த்தி, ஆதிரையன் கிருஸ்ணமூர்த்தி,
- வனவளத்துறைப் பொறுப்பாளர் சக்தி அவர்களின் பிள்ளைகளான தமிழின்பன் சத்தியமூர்த்தி, தமிழ்முகிலன் சத்தியமூர்த்தி, இசைநிலா சத்தியமூர்த்தி,
- சுடர் அவர்களின் குழந்தைகளான அபிராமி சுரேஸ்குமார், அபிசன் சுரேஸ்குமார்,
- வனவளப் பாதுகாப்புக்கான மன்னார் மாவட்ட பொறுப்பாளர் சுமன் அவர்களின் மகள் தணிகைச்செல்வி செல்வகுமார்,
- அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன் அவர்களின் பிள்ளைகளான துவாரகன் சுதாகரன், துவாரகா சுதாகரன், துர்க்கா சுதாகரன்,
- மன்னார் மாவட்ட படையணிப் பொறுப்பாளர் வாகீசன் அவர்களின் பிள்ளைகளான சிந்தரசி நிமலநாதன், கோகலை நிமலநாதன், கலையரசன் நிமலநாதன்,
- புகைப்படப்பிரிவுப் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் மகள் எழில்நிலா சற்சுதன் உள்ளிட்டோர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சரணடைந்ததற்கான சாட்சிகள் இருக்கிறது .
குழந்தைகள் சிறுவர்களுக்கார புதிய சட்டங்கள் சீர்திருத்தங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிற மேலே குறிப்பிட்ட சிறார்களுக்கு என்ன நடந்தது இவர்களில் பெரும்பாலானோர் எனது மாணவர்கள் ஆவர். சிறைச்சாலைகளில் எத்தனையோ பெண்கள் பயங்கர வாத தடைச்சட்டத்தின் கீழ் குழந்தைகளோடு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்
பயங்கர வாத தடைச்சட்டத்தின் மூலம் தற்போதும் தமிழர்களை சித்திரைவதை செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 39 பேர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்டபடுத்தப்பட்டுள்ளனர். பயங்கர வாத தடுப்பு பிரிவினரால் அழைக்கப்படும் கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் ஏனையோரும் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.
எமக்கு நினைவேந்தல் செய்கிற உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது எமது பிள்ளைகளை நினைவுகூர முடியாதவர்களாக நாங்கள் இருக்கிறோம்.
பட்டப்பகலில் யாழில் இடம்பெற்ற பயங்கரம்!
பட்டப்பகலில் யாழில் இடம்பெற்ற பயங்கரம்!
கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பிசுங்காண் போத்தல்களுடன் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மற்றும் வீட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன், வீதியால் சென்றவர்களையும் வாளினை காட்டி அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் சந்தியில் இராணுவத்தினர் வீதிரோந்து காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போது முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சமூகவிரோத கும்பலே இந்த செயலலை செய்துள்ளது.
கடந்த வாரம் பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றுள்ள நிலையிலும் வட மாகாணத்தில் புதிய ஆளுநர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும்பாலான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட பின்னர் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட வாய்த்தர்க்கத்தினை பழிவாங்க இளைஞன் ஒருவனால் ஆவா கைக்கூலிகளை அமர்த்தி வீட்டின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன் குறித்த வீட்டுக்கு முன்னால் உள்ள பழக்கடை வியாபாரம் நிலையமும் சேதமாக்கப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீட்டுக்கு அருகில் உள்ள இளைஞனுக்கு இடையில் சிறு வாய்த்தர்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. இதற்கு பழிவாங்குவேன் என சபதம் போட்ட நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆவா எனப்படும் கைக்கூலிகளை அமர்த்தி இந்த வன்செயலை புரிய வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் வீட்டு ஜன்னல்கள், மோட்டார் சைக்கிள், மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தின் கண்ணாடி என்பன அடித்துடைத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் வயது (58) என்ற முதியவர் வன்முறை கும்பலின் தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்முறை சம்பவத்தினை மேற்கொண்ட குழுவினர் வந்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் கூரிய கண்ணாடி ஆயுதங்களுடன் வந்தவர்கள் வாள்வெட்டுகுழு உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும்- அறிவிப்பு
பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும்- அறிவிப்பு
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள், ஒக்டோபர் மாதம்31ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் அமுலில் இருக்குமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்
என்று கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தற்காலிக தடை
சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தற்காலிக தடை
வெல்லவாய – வெலியார பிரதேசத்திற்கு சுற்றுலாப் பிரயாணிகள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களில் சென்ற சிலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதன் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுலா செயற்றிட்டத்தின் கீழ் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட பின்னர் குறித்த பிரதேசம் மீண்டும் சுற்றுலாப் பிரயாணிகளுக்குத் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்
பேஸ்புக் தற்கொலை நேரலை புரிந்த நாபர் – மடக்கிய காவல்துறை
பேஸ்புக் தற்கொலை நேரலை புரிந்த நாபர் – மடக்கிய காவல்துறை
இந்தியா டில்லி பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர் பேஸ்புக்கில் நேரலையில் தான் தற்கொலை செய்ய போவாகக தெரிவித்துள்ளார்
இதனை பார்வையிட்ட பேஸ்புக் உடனடியாக காவல்துறைக்கு மெயில் அனுப்பியது ,இதனை தொடர்ந்து உஷாரான காவல்துறையினர் அந்த நபர் உள்ள இடத்தை கண்டு பிடித்தனர்
அப்போது அவர் வீட்டுக்குள் மயங்கிய நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்
இவர் மனைவியை பிரிந்து வசித்து வருவதாலும் ,உடல் நல குறைபட்டாலும் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது
கடும் வெள்ளம் 101 பேர் மரணம் – 50 பேரை காணவில்லை
கடும் வெள்ளம் 101 பேர் மரணம் – 50 பேரை காணவில்லை
நேபால் நாட்டில் பொழிந்து வரும் கடும் மழையால் அங்கு பாரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது
இதில் சிக்கி இதுவரை ன் 101 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காணமல் போயுள்ளனர்
ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன
மின்சாரம் ,நீர் விநியோகம் பல பகுதிகளில் முற்றாக தடை பட்டுள்ளது
எனினும் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
வெடித்து சிதறிய காஸ் – 3 பேர் மரணம் – 33 பேர் காயம்
வெடித்து சிதறிய காஸ் – 3 பேர் மரணம் – 33 பேர் காயம்
சீனாவின் காஸ் வெடித்து சிதறியதால் இதுவரை மூவர் பலியாகியுள்ளனர் ,மேலும் முப்பத்தி மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
குறித்த விபத்து தொடபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
70 வயதில் குழந்தை பெற்ற பெண்மணி
70 வயதில் குழந்தை பெற்ற பெண்மணி
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜிவுன்பென் ரபாரி செயற்கை கருத்தரிப்பு மூலம் ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.
70 வயதில் குழந்தை பெற்ற பெண்மணி
குழந்தையுடன் ஜிவுன்பென் ரபாரி
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதி வல்ஜிபாய் ரபாரி (வயது 75). ஜிவுன்பென் ரபாரி (70), இந்த தம்பதிக்கு திருமணமாகி 45 ஆண்டுகளாக குழந்தை இல்லை. வயதானாலும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பிய அவர்கள் செயற்கை கருத்தரிப்பு மையத்தினை அணுகினர்.
இந்நிலையில் ஜிவுன்பென் ரபாரி செயற்கை கருத்தரிப்பு மூலம் ஆண் குழந்தையை பெற்றுள்ளார். வயதான நிலையிலும் குழந்தை பெற்ற அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், குழந்தையுடன் அவர்கள் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இரட்டை குழந்தைகள்
இதற்கு முன்னதாக, 2019-ம் ஆண்டில், ஆந்திராவை சேர்ந்த 74 வயதான மங்கையம்மா என்பவர் செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பியை அடித்து கொன்ற அண்ணன்
தம்பியை அடித்து கொன்ற அண்ணன்
கிரான்பாஸ், கஜீமா தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது.
சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணப்பிரச்சினை காரணமாக இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 28 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரான்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
குண்டை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்
குண்டை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த நபரை, இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.பி.அன்பர், நேற்று (20) உத்தரவிட்டார்.
கிண்ணியா,பூவரசந்தீவு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவில் சேவையாற்றிய இவர், முறையான அங்கிகாரத்துடன் இராணுவ சேவையில் இருந்து விலகிவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கணவனுக்கும் மனைவிக்குமிடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், கணவரான முன்னாள் இராணுவ வீரர், தனது மனைவியை கைக்குண்டை காட்டி பயமுறுத்துவதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் தொடர்பாக கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபரை கைக்குண்டுடன் கைது செய்து, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்
வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்
தூங்கிக் கொண்டிருந்த யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை திருடன் ஒருவன் அறுத்துச் சென்றுள்ள சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – பதுரியா நகரிலுள்ள வீடொன்றிலே நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது.
வீட்டார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, கதவை உடைத்து உள்நுழைந்த திருடன், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தையும் நகையையும் திருடிவிட்டு, தூங்கிக்
கொண்டிருந்த யுவதியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியையும் அறுத்துச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு திருட்டில் ஈடுபட்ட திருடன், அலுமாரியில் இருந்த விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசியை திருடாமல் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இத் திருட்டுச் சம்பவத்தை கண்டுபிடிக்க வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
அரிசி விலை மீண்டும் அதிகரிப்பு
அரிசி விலை மீண்டும் அதிகரிப்பு
பொலன்னறுவை பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலைகளை, மீண்டும் உயர்த்தியுள்ளனர்.
அதன்படி, கீரி சம்பா அரிசியின் விலை கிலோவுக்கு 30 ரூபாயும், சம்பா நாட்டு அரிசி கிலோ 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி 195 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம்சம்பா அரிசி 155 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்
பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
நாட்டிலுள்ள, 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை நாளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு இலவசக் கல்வியை தொடர்வதற்கான சூழலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் பெற்றோரின் பங்களிப்போடு
மேற்கொள்ளப்படுகின்றன. பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். காய்ச்சல் தடிமன் – சளி
போன்ற அடையாளங்கள் காணப்படும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று கல்வி அமைச்சு, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தாய்க்கு பயந்து குளத்துக்குள் பாய்ந்த சிறுவன் பலி
தாய்க்கு பயந்து குளத்துக்குள் பாய்ந்த சிறுவன் பலி
பிபிலை- மெதகம பெல்லன்ஓயாவுக்கு அருகில், மீன் வளர்ப்புக்காக அமைக்கப்பட்டிருந்த குளமொன்றில் விழுந்து 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தனது 4 மற்றும் 11 வயதுடைய சகோதரர்களுடன், நேற்று மாலை 3.30 மணியளவில் பெல்லன்ஓயாவுக்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது அதற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மீன் வளர்ப்புக்கான குளத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது, அவர்களது 27 வயதுடைய தாய் பிள்ளைக் கண்டு சத்தம் போட்டவாறு வந்துள்ளார்.
இதன்போது தாய்க்கு பயந்து பிள்ளைகள் மூவரும் குளத்துக்குள் பாய்ந்துள்ளதுடன், 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
ஏனைய சிறுவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பயணத்தடை மேலும் நீடிப்பு
பயணத்தடை மேலும் நீடிப்பு
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயணத்தடை மேலும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
இலங்கையில் புதிய இராணுவ படையணி உருவாக்கம்
இலங்கையில் புதிய இராணுவ படையணி உருவாக்கம்
இலங்கை இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவு, விசேட அதிரடிப் படயைணி மற்றும் ஏனைய படையணிகள் ஆகியவற்றினை இணைத்து ஏற்படுத்தப்பட்ட 1 இலங்கை இராணுவ படையணி (Sri Lanka Army as 1 Corps of the Sri Lanka Army)யினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 17 ஆம் திகதி காலை சாலியபுர கஜபா படையணித் தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.
இராணுவத் தளபதியின் “முன்னோக்கு வழி மூலோபாய 2020-2025’’ திட்டக் கொள்கையின் ஒரு அங்கமாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரும் பாதுகாப்பு செயலாளருமான ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) அவர்கள் ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் அவருக்கு இராணுவ சம்பிரதாய முறையின்பிரகாரம் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
“வேகம், சக்தி, தைரியம்” என்ற நோக்கக்கூற்றினை அடிப்படையாக கொண்டு ஏற்படுத்தப்பட்ட மேற்படி படையணியின் சின்னத்தினை இலங்கை இராணுவத்தின் 1 படையணி படையினருக்கு பாதுகாப்பு செயலாளர் அவர்கள் பாதுகாப்பு, பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க ஆகியோருடன் இணைந்து அணிவித்தார்.
அன்றைய விழாவின் போது 1 இலங்கை இராணுவ படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களுக்கான படையணி சின்னத்தினை ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்கள் அணிவித்து வைத்ததுடன் அப்படையணியின் கொடியையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கலாச்சார நடனக் கலைகளும் நடைபெற்றது. கிளிநொச்சியில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து செயல்படும் இலங்கை இராணுவ 1 படையணியின் அதிகாரப்பூர்வ வலையமைப்பினை அன்றைய தலைமை விருந்தினர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆரம்பித்து வைத்தார்.
அதிமேதகு ஜனாதிபதியின் “சௌபாக்கிய” தேசியக் கொள்கைக்கு இணையாக ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் இந்த முயற்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து விருந்தினருக்கான நினைவுப் பதிவேட்டில் தனது கருத்தினை பதிவிட்டார். கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை இராணுவ 1 படையணியின் தலைமையகத்தில் உள்ள படையினர் இணையவழி தொழில்நுட்பத்தினூடாக சாலியபுரவில் நடைபெற்ற நிகழ்வினை பார்வையிட்டனர்.
1 படையணியின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகிய இருவருக்கும் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார். இந்த புதிய 1 படையணியானது 53 வது படைப்பிரிவு , 58 வது படைப்பிரிவு , கொமாண்டோ படையணி, சிறப்புப் படையணி பிரிகேட் , எயார் மொமைல் பிரிகேட் , காலாட்படை பிரிகேட் மற்றும் கிளிநொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏனைய படையணிகளை உள்ளடக்கி உறுவாக்கப்பட்டுள்ளதோடு, எதிர்பாராத சூழ்நிலைகளை நிவர்த்தி செய்ய அல்லது திடீர் குழப்பங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் மற்றும் முக்கிய இராணுவப் படையில் இருந்து அழைப்பின் பேரில் செயல்பட உதவியாக அமையக் கூடிய வகையில் சிறந்த படையணியாக செயல்படும்.
கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவு மற்றும் சிறப்பு அதிரடி படையணி ஆகிய படையணிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வந்தாலும் மேற்குறித்த படையணிகள் 1 படையணியுடன் இணைத்து சமகால பாதுகாப்பு இயக்கவியல், இயற்கை பேரழிவுகள், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள், தொற்றுநோய்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது வேறு எந்த தேசிய அவசர நிலைகளையும் எதிர்கொள்ளும் செயலற்பாடுகளுக்கு ஒரு சக்தியாக உயர்தர இராணுவ படையணியாக உறுவாக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இராணுவத் தளபதியின் தொலைநோக்கு ‘முன்னோக்கு வழி மூலோபாயம் 2020-2025’ என்பது போர் ஒத்துழைப்பு மற்றும் போர் சேவை ஒத்துழைப்பு படையினருடன் ஒருங்கிணைந்த மற்றும் தேவையான கூட்டு நடவடிக்கைகளுடன் பொருத்தமாக குழுவாக இருக்கும் முகமாக தேசம் மற்றும் படையினரின் பாதுகாப்பிற்கான சக்தியாக பல்வகைப்பட்ட தற்செயல் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்த சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவினரை வைத்திருக்கும்.
இந்நிகழ்வின் போது இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட, இலங்கை இராணுவ தொண்டர் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலங்கையில் பசு வதையை தடை செய்ய அமைச்சரவையில் தீர்மானம்
இலங்கையில் பசு வதையை தடை செய்ய அமைச்சரவையில் தீர்மானம்
இலங்கையில் பசு வதையை தடை செய்வதற்காக ,அதனுடன் தொடர்புபட்ட 05 சட்டங்கள் மற்றும் கட்டளைச்சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான திருத்த சட்ட மூலத்தை அரச
வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத்தொடர்ந்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
- இலங்கையில் பசு வதையைத் தடை செய்தல்
உள்ளூர் விவசாயத்துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசு வதை செய்வதை தடை செய்வதற்கும், அதற்கு ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளையும்,
விலங்கு அறுப்பு தொடர்பான உள்ளூராட்சி மன்றங்களால் நிறைவேற்றப்பட்டுள்ள துணைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கும், 2020 செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற
அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள்ஃகட்டளைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞர் அவர்களால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
272 ஆம் அத்தியாயத்தின் 1893 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பசு வதை கட்டளைச் சட்டம்
1958 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டம்
252 ஆம் அத்தியாயத்தின் மாநகர சபைகள் கட்டளைச் சட்டம்
255 ஆம் அத்தியாயத்தின் நகரசபைகள் கட்டளைச் சட்டம்
1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்
குறித்த சட்டமூலம் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இணங்கவில்லை என சட்டமா அதிபர்
அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, குறித்த சட்டமூலங்களை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காகவும் கௌரவ பிரதமர்
அவர்கள்: அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்: மற்றும் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
மகிந்த மகனுக்கும் சிறிதரனுக்கும் இடையில் சண்டை video
மகிந்த மகனுக்கும் சிறிதரனுக்கும் இடையில் சண்டை video
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எனக்கும், நாமல் ராஜபக்ஷவிற்கும் இடையில் வாதப்பிரதிவாதம்!
இன்றைய தினம் 09.10.2018 பாராளமன்றில் வரவுசெலவுத்திட்ட
குறைநிரப்பு விவாத வேளையில், தமக்கான நீதி வேண்டி உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ள அரசியல்க் கைதிகளின் விடயங்களை அவையின் கவனத்துக்கு மீண்டும் ஒருமுறை கொண்டுவந்த போது.
லண்டனில் லொறியில் இருந்து குதித்து ஓடும் அகதிகள்
லண்டனில் லொறியில் இருந்து குதித்து ஓடும் அகதிகள்
லண்டன் கென்ட் பகுதியில் உள்ள வேக சாலை ஒன்றில் பயணித்த லொறி ஒன்றுக்குள் பதுங்கி
வந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் அதில் இருந்து குதித்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன
மேற்படி சம்பவம் தொடர்ப்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்











