Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
கொரோனா நிதிக்கு சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி
கொரோனா நிதிக்கு சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி
நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் நிதிக்கு சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி
சிவகார்த்திகேயன்
கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் ஸ்தம்பித்துள்ளது. இதில் மீளும் நடவடிக்கைக்காக நிதி உதவி
வழங்கும்படி பிரதமர் மோடியும், தமிழகம் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹிந்தியில் அக்ஷய் குமார் ரூ.25 கோடி, தெலுங்கில் பிரபாஸ் ரூ.4 கோடி, மகேஷ்பாபு, சிரஞ்சீவி தலா ரூ.1 கோடி என நிதி உதவி
அளித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள நடிகர்கள் தாங்கள் சார்ந்த சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் சிலர் நிதி உதவி
அளித்தனர். பிரதமருக்கோ, முதல்வரின் நிவாரண நிதிக்கோ இதுவரை நிதி வழங்கவில்லை.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே பெப்சி தொழிலாளர்களுக்கும் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளத்தை குறைத்த முன்னணி நடிகை
சம்பளத்தை குறைத்த முன்னணி நடிகை
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹீரோயின் ஒருவர் தற்போது சம்பளத்தை குறைத்துள்ளாராம்.
சம்பளத்தை குறைத்த முன்னணி நடிகை
கிசுகிசு
‘பொம்மாயி’ வேடம் போட்ட அந்த பிரபல கதாநாயகி, ஒரு படத்துக்காக குண்டானாராம். அந்த படம் முடிவடைந்ததும் பழைய
உடம்பை கொண்டுவர முயற்சி செய்தார். உடனடியாக முடியவில்லை. மெலிவதற்கான சிகிச்சை பெற்றபின், அவருக்கு பழைய உடம்பு கிடைத்து இருக்கிறது.
இந்த நிலையில், அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. கவலை அடைந்த நடிகை, மீண்டும் இழந்த மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.
முதல்கட்டமாக அவர் தனது சம்பளத்தை குறைத்து இருக்கிறாராம். அவருடைய சம்பள குறைப்புக்கு சில தெலுங்கு பட அதிபர்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்களாம்.

பிரிட்டனில் பிரபல நடிகர் Andrew Jack கொரனோ நோயால் பலி
பிரிட்டனில் பிரபல நடிகர் Andrew Jack கொரனோ நோயால் பலி
பிரிட்டனில் மிக பெரும் புகழ் வாய்ந்த நடிகராக விளங்கிய Andrew Jack
பிரிட்டனில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று பலியாகியுள்ளார்
இவருக்கு தற்பொழுது 76 வயதாகிறது ,இவரது இழப்பால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

கல்யாண ஆசையில் மாப்பிள்ளை தேடும் நடிகை
கல்யாண ஆசையில் மாப்பிள்ளை தேடும் நடிகை
கல்யாண ஆசையில் மாப்பிள்ளை தேடும் நடிகை
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான கேரள நடிகை, தற்போது மாப்பிள்ளை தேடி வருகிறாராம்.
மாப்பிள்ளை தேடும் நடிகை
கிசுகிசு
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான கேரள நடிகை, தற்போது கொச்சியில் வசித்து வருகிறார்.
கேரளாவில் இருந்தோ, வெளியே இருந்தோ பொருத்தமான முஸ்லிம் வரன் எனக்கு தேவை என்று கூறியுள்ளாராம்.
மேலும் கணவராகப்போகிறவர் திருமணத்திற்கு பிறகும் நான் நடிக்க சம்மதிக்கவேண்டும். எனது வளர்ச்சிக்கு அவர்
துணைபுரியவேண்டும். அதுவே என் நிபந்தனை என்று கூறுகிறார் அந்த நடிகை.

சினிமா தொழிலாளர்களுக்கு சல்மான்கான் உதவி
சினிமா தொழிலாளர்களுக்கு சல்மான்கான் உதவி
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து இருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு சல்மான் கான் உதவி செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.
சினிமா தொழிலாளர்களுக்கு சல்மான்கான் உதவி
சல்மான் கான்
கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு
உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சி
அமைப்புக்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, உதயநிதி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நிதி வழங்கி உள்ளனர்.
தெலுங்கில் சிரஞ்சீவி இதற்காக ஒரு அமைப்பையே தொடங்கி நிதி திரட்டி வருகிறார். இதுவரை ரூ.3.8 கோடி சேர்த்துள்ளார். இந்த
நிலையில் இந்தி நடிகர்களும், சினிமா தொழிலாளர்களுக்கு உதவ பணத்தை வாரி வழங்குகிறார்கள். நடிகர் சல்மான்கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.என்.திவாரி கூறும்போது, “எங்கள் அமைப்பில் மொத்தம் 5 லட்சம்
உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கஷ்டத்தில் உள்ள 25 ஆயிரம் பேருக்கு உதவுதாக சல்மான்கான் உறுதி அளித்துள்ளார்” என்றார்.

லண்டன் மருத்துவமனையில் ராதிகா ஆப்தே
லண்டன் மருத்துவமனையில் ராதிகா ஆப்தே
தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே லண்டன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
லண்டன் மருத்துவமனையில் ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே
தென்னிந்திய மொழிகளிலும், இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில், ரஜினியுடன்,
கபாலி, பிரகாஷ் ராஜுடன், தோனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர், லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர், பெனடிக்ட் டெய்லர்.
இந்நிலையில், சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்துள்ள தன் படத்தை, சமூக வலைதள பக்கத்தில் ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார். அதில், ‛தனக்கு கொரோனா
இல்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்கே வந்துள்ளேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில், ரசிகர் ஒருவர் கேட்ட
கேள்விக்கு பதிலளிக்கையில், ‛இடது விரலில் ஏற்பட்ட காயத்திற்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளேன்’ என, பதிலளித்துள்ளார்.
கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக ராதிகா ஆப்தே சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறிய நடிகை
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறிய நடிகை
இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறி இருக்கிறார்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறிய நடிகை
ஷிகா மல்கோத்ரா
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நடிகர்-நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு, தங்கள் பங்களிப்பை
செய்து வருகிறார்கள். கஷ்டப்படும் திரைப்பட தொழிலாளர்களுக்கு நிதி உதவியும் அளிக்கின்றனர்.
ஆனால் இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறி இருக்கிறார்.
இவர் கடந்த மாதம் திரைக்கு வந்த ‘காஞ்ச்லி லைப் இன் எ ஸ்லாஷ்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதில் சஞ்சய் மிஸ்ரா நாயகனாக வந்தார். கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உதவும் பணிகளில் தொண்டு நிறுவனத்தினர்
இணைய வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து ஷிகா, மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தன்னார்வலராக ‘நர்சு’ பணியில் சேர்ந்துள்ளார்.
இவர் நர்சிங் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கதாநாயகி ஆனதால் நர்சு வேலை பார்க்காமல் இருந்தார். இப்போது அந்த பணியை
ஏற்றுள்ளார். ஆஸ்பத்திரியில் நர்சு சீருடை அணிந்து வேலைபார்க்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில்
வெளியிட்டுள்ளார். அதில், “இந்த மோசமான தருணத்தில் மக்களுக்கு நர்சாக சேவையாற்ற முடிவு செய்துள்ளேன்.
அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். அரசுக்கு உதவுங்கள்” என்று கூறியுள்ளார்.

தெருநாய்களுக்கு உணவளிக்கும் நடிகை
தெருநாய்களுக்கு உணவளிக்கும் நடிகை
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு நடிகை ஒருவர் உணவளித்து வருகிறார்.
தெருநாய்களுக்கு உணவளிக்கும் நடிகை
சம்யுக்தா ஒரநாடு
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அதுபோல் திரைப்படம் உள்பட பல்வேறு துறை பிரபலங்களும் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கன்னட திரைப்பட நடிகை சம்யுக்தா ஒரநாடு, ஊரடங்கால் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார்.
சம்யுக்தா ஒரநாடு
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஒரு வாரமாக நாய்கள் உணவு இல்லாமல் போராடி வருவதைக் கண்டு மனம் உடைகிறது. நான் உள்பட சிலர் சேர்ந்து
தெருநாய்களை கண்டறிந்து உணவளித்து வருகிறோம். இதற்கு உதவியாக இருக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி
சூர்யாவுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

உயிரை விட எதுவும் முக்கியமில்லை – தமன்னா
உயிரை விட எதுவும் முக்கியமில்லை – தமன்னா
ஊரடங்கில் யாரும் வெளியே போகவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ள தமன்னா, உயிரை விட எதுவும்
முக்கியமில்லை என கூறியுள்ளார்.
உயிரை விட எதுவும் முக்கியமில்லை – தமன்னா
தமன்னா
ஊரடங்கில் யாரும் வெளியே போகவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து நடிகை தமன்னா கூறியிருப்பதாவது:-
“‘பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு என்பது, வரும் அழிவில் இருந்து முன்கூட்டியே நம்மை பாதுகாத்து கொள்ளும்
முயற்சியாகும். இதை அலட்சியமாக நினைக்க வேண்டாம். நம்மை காப்பாற்றுவதற்காகத்தான் இந்த முடிவு. நமக்கான முதல் நல்ல
அடியாக இதை பார்க்க வேண்டும். நாம் உயிரோடு இருப்பதைவிட எதுவும் முக்கியம் இல்லை.
தமன்னா
நான் குடும்பத்தோடு வீட்டில் இருக்கிறேன். நீங்களும் இதையே கடைபிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நல்ல நிலையில்
இருப்பவர்கள் வீட்டில் இருப்பது வேறு. ஆனால் சாதாரண ஏழைகள், படிப்பறிவில்லாத கிராமத்தினர் வீடுகளுக்கு வேலிபோட்டு அவர்கள்
வெளியே வராமல், மற்றவர்களையும் ஊருக்குள் வரவிடாமல் தடுத்து வைத்துள்ளார்கள். அவர்களை பார்த்து படித்தவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு தமன்னா கூறினார்.

கொரோனா நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ்
கொரோனா நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ்
கொரோனா வைரஸ் பாதிப்புக்காக, பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கொரோனா நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ்
பிரபாஸ்
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும்
21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று
பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும்
ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இதுவரை மகேஷ் பாபு, சிரஞ்சீவி,
பவன் கல்யாண் ஆகியோர் தலா ரூ.1 கோடி, ராம்சரண் ரூ.70 லட்சம், நிதின் ரூ.20 லட்சம் என தொடங்கி பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
பிரபாஸ்
இந்நிலையில் பாகுபலி நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். அதில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.3 கோடியும்,
ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சமும் வழங்கி உள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் மரணம்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் மரணம்
பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காலமானார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
மார்க் ப்ளம்
பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று
வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். அவருக்கு வயது 69. இது ஹாலிவுட் திரையுலகினர்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மார்க் ப்ளம் 1970-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1985-ல் வெளியான ‘டெஸ்பரேட்லி சிக்கிங் சூஸன்’ என்ற
படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக பாராட்டப்பட்டார். ‘ஜஸ்ட் பிட்வீன் பிரண்ட்ஸ்’, ‘க்ரொக்கடைல்
டண்டி’, ‘பிளசண்ட் டே’, ‘லவ்சிக்’, ‘த பிரசிடியோ’ உள்ளிட்ட பல படங்களில் மார்க் ப்ளம் நடிப்பு பேசப்பட்டது.
தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்கள் இத்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் ஹிவ்ஜு,
ஹாலிவுட் நடிகை இந்திரா வர்மா, ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை
பெற்று வருகிறார்கள். ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், நடிகை
ஒல்கா குரிலென்கோ ஆகியோர் கொரோனா காய்ச்சலில் சிக்கி சிகிச்சை மூலம் குணமடைந்து உள்ளனர்

சேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்
சேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்
நடிகர் டாக்டர் சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட
நடிகர் சந்தானம் அவரது உடலை சுமந்து சென்று உள்ளார்.
சேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்
சேதுராமன் – சந்தானம்
தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலி
ராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர்
சேதுராமன். இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை
நிபுணர். இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில்
தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சேது ராமன் நேற்று மாரடைப்பு காரணமாக
காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்தனர். நடிகரும் சேதுராமனின் நண்பனுமான
சந்தானம் இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். மேலும்
கண்ணீருடன் சேதுராமனின் உடலை சுமந்து சென்றார் சந்தானம்.

கொரோனாவால் இணைந்த வைரமுத்து, எஸ்பிபி
கொரோனாவால் இணைந்த வைரமுத்து, எஸ்பிபி
உலக மக்களை அச்சுறுத்தும் கொரோனா பாடலாசிரியர் வைரமுத்து, எஸ்பிபியும் இணைந்திருக்கிறார்கள்.
கொரோனாவால் இணைந்த வைரமுத்து, எஸ்பிபி
வைரமுத்து எஸ்பிபி
தமிழ் திரையுலகின் பாடலாசிரியரும், எழுத்தாளருமான வைரமுத்து கொரோனா குறித்த பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த பாடலை பாடி இசை அமைத்து வெளியிட்டுள்ளார் எஸ் பி பாலசுப்ரமணியம்.
கொரோனா பாடலை எழுதியுள்ள வைரமுத்து அதில் பல வார்த்தை புகுத்தியுள்ளார். அணுவை விட சிறியது, அணுகுண்டை போல்
கொடியது என அவரின் ஒப்பீடு எவ்வளவு உண்மை.
கொரோனா சத்தமில்லாமல் நுழைந்து, போரே போடாத நிலையிலும் உலகை நிலைகுலையச் செய்துள்ளது.
தொடுதல் வேண்டாம், தனிமையில் இருங்கள், தூய்மையாய் இருங்கள், கொஞ்சம் அச்சமும் இருக்கட்டும், அதை பற்றிய
தெளிவும் இருக்கட்டும் என எழுதியுள்ளார் வைரமுத்து. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது

விலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் – நமீதா,
விலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் – நமீதா
மிருக காட்சி சாலைகளில் விலங்குகளை அடைத்து வைக்க வேண்டாம் என நடிகை நமீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் – நமீதா வேண்டுகோள்
நமீதா
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் வீட்டில் இருக்கும்படி அரசு கடுமையாக எச்சரித்து உள்ளது.
இதனையும், விலங்குகளை மிருக காட்சி சாலைகளில் அடைப்பதையும் ஒப்பிட்டு நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “இப்போதைய நிலைமையை வைத்து புரிந்துகொள்ள வேண்டும். நான் ஒருபோதும் மிருக காட்சி
சாலைகளை ஆதரித்தது இல்லை. மிருக காட்சி சாலைகளுக்கு
சென்று விலங்குகளை பார்க்கும்படி யாரையும் ஊக்குவித்ததும் கிடையாது.
ஊரடங்கையொட்டி சில நாட்கள் வீட்டில் இருப்பதற்கே நமக்கு சோர்வு ஏற்படுகிறது, வெளியே செல்ல வேண்டும் என்று
விரும்புகிறோம். நமது சந்தோஷத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் விலங்குகளுக்கும் இந்த உணர்வுதானே இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளை காட்ட விரும்பினால் கம்ப்யூட்டரிலோ அல்லது சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றோ
காட்டுங்கள். தயவுசெய்து மிருகங்களை அடைத்து வைப்பதை நிறுத்துங்கள்.
நமீதா
மன அழுத்தத்தாலும், கவலையாலும் அவை இறக்கின்றன. நாம் டிக்கெட் வாங்கி போய் பார்ப்பதால்தான் மிருக காட்சி சாலைகள்
நிரம்பி வழிகின்றன. அங்கு போவதை நிறுத்தினால், விலங்குகளை அடைத்து வைப்பதையும் நிறுத்திவிடுவார்கள். விலங்குகள்
நம்முடன் வாழ்பவையே தவிர நமக்காக வாழக்கூடியவை அல்ல.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

போலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்,
போலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்
ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு
விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவசமாக முக கவசங்களை
வழங்கினர்.
போலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்
விஜய்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முக கவசம் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளதால் போலீசாருக்கும் போதிய அளவில் முக கவசங்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு
முன்பு இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் 200 முக கவசங்கள் தயார் செய்யப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்
வழங்கப்பட்டது.
விஜய்
இந்நிலையில், தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியை நேற்று
நேரில் சந்தித்து விஜய் ரசிகர்கள் சார்பில் 200 முக கவசங்களை வழங்கினார்.
அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் உடன் இருந்தார்.
விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா,
கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பிடியிலிருந்து மக்களை காக்க நடிகை ரோஜா தனது வீட்டில் சிறப்பு யாகம்
ஒன்றை நடத்தி உள்ளார்.
கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா
குடும்பத்தினருடன் வீட்டில் யாகம் நடத்திய ரோஜா
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது
கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலத்திலும் ஊரடங்கு
கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தனது கணவரும், இயக்குனருமான
ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து தனது வீட்டில் பண்டிதர்கள் மூலம் ருத்ராபிஷாகம் என்ற யாகத்தினை நடத்தினர்.
கொரோனாவின் பிடியில் இருந்து கடவுள் பொதுமக்களை காத்திட
வேண்டி இந்த யாகத்தை தனது வீட்டில் நடத்தியதாக ரோஜா தெரிவித்தார்

நயன்தாரா, அனுஷ்கா பாணியில் காஜல் அகர்வால்,
நயன்தாரா, அனுஷ்கா பாணியில் காஜல் அகர்வால்
வழக்கமான கதாநாயகியாக நடிப்பதை விட கதைக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களிலும் நடிக்க காஜல் தயாராகி வருகிறாராம்.
நயன்தாரா, அனுஷ்கா பாணியில் காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில முதிர்ந்த வேடத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இதையடுத்து
நடன மாஸ்டர் பிருந்தா இயக்கும் படத்தில் துல்கர் சல்மானுடன் நடிக்க உள்ளார். தென்னிந்திய மொழி படங்களில் நடன
இயக்குனராக பணியாற்றிய பிருந்தா, முதல்முறையாக இயக்கும் படத்துக்கு ஹே சினாமிகா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதை ஜியோ ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு,
பிரீத்தா ஜெயராமன். இசை, கோவிந்த் வசந்தா. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. பாலிவுட்டில் அவர் நடித்துள்ள படமும்
இந்த ஆண்டில் திரைக்கு வருகிறது. இதையடுத்து அவர் ஒரு முடிவெடுத்துள்ளார்.
காஜல் அகர்வால்
வழக்கமான கதாநாயகியாக நடிப்பதை விட ரிஸ்க்கான வேடங்களிலும், கதைக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களிலும்
நடிக்க தயாராகி வருகிறாராம். மேலும் டாப் ஹீரோக்களுடன் தான் நடிப்பேன் என்ற கொள்கையையும் தளர்த்தி உள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையாக என் வீட்டை தருகிறேன் -பார்த்திபன்,
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையாக என் வீட்டை தருகிறேன் -பார்த்திபன்
இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையாக என் வீட்டை தருகிறேன் என்று கூறியுள்ளார்.
என் வீட்டை தருகிறேன் – பார்த்திபன்
உலக மக்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். தினம்
தினம் இறப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், இப்படி உலகம் முழுக்க இந்த நோய்
பரவி வருகிறது. 24 மணி நேரமும் இதை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் எனக்கு ஒரு யோசனை வருகிறது.
24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளை நாமே உருவாக்கணும். அதாவது இரண்டு வீடுகள் இருந்தால் அதில்
ஒன்றை இந்த கொரோனா மருத்துவமனையாக கொடுக்க முன் வரலாம் . எனக்கு 3 பிளாட் இருக்கு அதையும் கொடுக்க தயார்.
அதுபோல தெருவுக்கு தெரு இப்படி பட்ட மருத்துவ வசதி செய்து கொள்வது பெரிய உதவியாயிருக்கும்” என்று கூறியுள்ளார்.

நான் வீட்டில் இருக்கிறேன் – மாஸ்டர் பட நடிகை,
நான் வீட்டில் இருக்கிறேன் – மாஸ்டர் பட நடிகை
கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், என் அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில் இருக்கிறேன் என்று மாஸ்டர் பட நடிகை கூறியுள்ளார்.
என் அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில் இருக்கிறேன் – மாஸ்டர் பட நடிகை
மாளவிகா மோகனன்
கொரோனா வைரஸ் உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகம்
முழுவதும் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விடப்பட்டது. தற்போது தமிழகத்தில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் பலர் பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.
யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று திரைத்துறையினர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின்
மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன், என்னுடைய அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில்இருக்கிறேன் என்று எழுதி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக செல்லும் நடிகை,
பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக செல்லும் நடிகை
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர், பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக செல்கிறாராம்.
பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக செல்லும் நடிகை
கிசுகிசு
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர், ஒருகாலத்தில் உடன் நடிப்பவர்களை மதிக்காமல் ஓவர் பந்தா காட்டி வந்தாராம்.
தற்போது திருமணத்துக்கு பின் மீண்டும் திறமையை காட்ட வந்துள்ள அந்த அம்மணியை மாஜி ஹீரோக்கள் ஏறெடுத்து கூட பார்ப்பதில்லையாம்.
இருப்பினும், நான் இப்போது பழைய பந்தா நடிகை இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், அவர்களை வலிய சென்று
நட்பு வளர்க்கிறாராம் அந்த நடிகை. அதோடு பார்ட்டிகளிலும் அழையா விருந்தாளியாக விசிட் அடித்து வாய்ப்பு கேட்டு
வருகிறாராம். இதன்மூலம் வாய்ப்புகள் குவியும் என நம்புகிறாராம் அந்த நடிகை







