லண்டன் மருத்துவமனையில் ராதிகா ஆப்தே

Spread the love

லண்டன் மருத்துவமனையில் ராதிகா ஆப்தே

தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே லண்டன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

லண்டன் மருத்துவமனையில் ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே
தென்னிந்திய மொழிகளிலும், இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில், ரஜினியுடன்,

கபாலி, பிரகாஷ் ராஜுடன், தோனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர், லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர், பெனடிக்ட் டெய்லர்.

இந்நிலையில், சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்துள்ள தன் படத்தை, சமூக வலைதள பக்கத்தில் ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார். அதில், ‛தனக்கு கொரோனா

இல்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்கே வந்துள்ளேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில், ரசிகர் ஒருவர் கேட்ட

கேள்விக்கு பதிலளிக்கையில், ‛இடது விரலில் ஏற்பட்ட காயத்திற்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளேன்’ என, பதிலளித்துள்ளார்.

கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக ராதிகா ஆப்தே சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

லண்டன் மருத்துவமனையில்
லண்டன் மருத்துவமனையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *