Posted in சினிமா

விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தோனிக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்

விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தோனிக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தோனிக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்
விஜய் – தோனி


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். பிரபலங்கள் மற்றும்

ரசிகர்கள் ஒரு சேர அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை கேப்டனாக அவர்

வழிநடத்திய விதத்தால் ரசிகர்கள் அவரை தல என்றே அழைக்கின்றனர்.

விஜய் தோனியின் ஹெய்டன்

இந்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரரமுான மேத்யூ ஹெய்டன் தனது

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி மற்றும் விஜய்யுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. பிரபல

நடிகர் விஜய் சந்திரசேகருடன் இருக்கும் இது என்னுடைய விருப்பமான புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யுடன் இருக்கும்
விஜய்யுடன் இருக்கும்
      Posted in சினிமா

      பயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது – காஜல் அகர்வால்.

      பயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது – காஜல் அகர்வால்.

      வேலையை பார்த்து பயப்படுவதோ பிரச்சினையை பார்த்து ஓடிப்போவதோ கிடையாது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

      பயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது – காஜல் அகர்வால்
      காஜல் அகர்வால்
      கொரோனா ஊரடங்கில் நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

      வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி எனக்கு எதிரான ஒவ்வொரு பிரச்சினையையும் ஒரு சாவாலாக எடுத்துக்கொள்கிறேன். ஒரு

      வேலையை பார்த்து பயப்படுவதோ பிரச்சினையை பார்த்து ஓடிப்போவதோ கிடையாது. அப்படி செய்தால் அது நமது பலகீனமாக மாறி விடும்.

      நான் நடித்த ஒவ்வொரு படத்திலும் எனக்கு சவாலாக இருக்கிற மாதிரியான நிறைய கதாபாத்திரங்கள் கிடைத்தன. அதுபோன்ற

      கதாபாத்திரங்களில் நடிக்கத்தான் நானும் விரும்பினேன். படப்பிடிப்பில் தொழில் ரீதியாக பிரச்சினைகள் நிறையவே

      இருந்தன. இப்போது அவற்றை நினைத்து பார்த்தாலும் இனிமையான நினைவுகள்தான்.

      காஜல் அகர்வால்

      விவேகம் படப்பிடிப்பில் மைனஸ் 12 டிகிரி குளிரில் மிகவும் கஷ்டமாக இருந்தாலும் புடவை கட்டி நடித்தேன். திரையில்

      ரசிகர்கள் பார்த்து பாராட்டியதை பார்த்தபோது பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஆனந்தமாக மாறி விட்டது. இதுமாதிரி சொல்ல நிறைய

      விஷயங்கள் இருக்கிறது. நம்மால் சாதிக்க முடியாது என்று நினைத்தால் அதுதான் நமது பலவீனம். சாதிக்க முடியும் என்று

      நினைத்தால் அதுதான் நமது பலம். இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்

          Posted in சினிமா

          இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் – நிலா

          இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் – நிலா

          இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று நடிகை மீரா சோப்ரா என்கிற நிலா குற்றம் சாட்டியுள்ளார்.

          இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் – நிலா
          நடிகை நிலா


          தமிழில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை, இசை, கில்லாடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலா இந்தியில் மீரா

          சோப்ரா என்ற பெயரில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

          வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தினால் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக ஏற்கனவே அவர் குற்றம்

          சாட்டினார். தற்போது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியதாவது:- “நானும் வேறு சிலரும் நடிகர்கள்

          எதற்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களை அந்த நிலைக்கு கொண்டு செல்வது எது என்ற விஷயங்களை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

          நிலா

          சினிமா துறை குறிப்பிட்டவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். முதிர்ச்சியான இயக்குனர்கள் அவ்வாறு செய்வது இல்லை.

          எனக்கும் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதை வெளிப்படுத்தினால் எத்தனை பேர் ஆதரவு கிடைக்கும் என்பது

          கேள்விக்குறி. சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு பிறகும் எதுவும் இங்கே மாறவில்லை. வேலையை தாண்டியும் பல விஷயங்கள்

          சினிமா துறையில் நடக்கின்றன. இந்த அழுத்தங்கள்தான் தவறான முடிவுகளை எடுக்க தூண்டுகிறது. சுயமரியாதை, கவுரவத்தை விட மன அமைதி முக்கியம்.” இவ்வாறு நிலா கூறியுள்ளார்

              Posted in சினிமா

              எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன்

              எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன்

              தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா, தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாக கூறியுள்ளார்.

              எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன் வெளியிட்ட பகீர் தகவல்
              யுவன் சங்கர் ராஜா


              தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, சமீபத்தில் சமூக வலைத்தளம்

              வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய

              அச்சம் என்ன? நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி?” என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த யுவன், “இஸ்லாம் மதத்தை

              ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் கடக்க இஸ்லாம் எனக்கு உதவியது” என்று தெரிவித்துள்ளார்.

              கடந்த 2014ஆம் ஆண்டு யுவன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். மேலும், தனது பெயரை அப்துல் காலிக் என மாற்றிக்கொண்டார்.

              2015ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

              யுவன்
              யுவன்
                  Posted in சினிமா

                  ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி

                  ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி

                  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் யோகி, ஊரடங்கு சமயத்தில் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

                  ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி
                  காதலியுடன் யோகி


                  பிரபல காமெடி நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு’ மூலம் பிரபலமானவர் யோகி. சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

                  இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் யோகி தன் காதலி சவுந்தர்யாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய

                  திருமணம் கடந்த ஜூன் 24-ந் தேதி எளிமையாக நடைபெற்றது. இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

                  யோகி – சவுந்தர்யா இருவருமே பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது இருவரும் காதலிக்கவில்லை.

                  சமீபத்தில் கல்லூரி ரீ-யூனியனின் போது சவுந்தர்யாவை சந்தித்துள்ளார். அப்போது காதல் மலர்ந்தாலும், யோகி காதலை வெளிப்படுத்தவில்லையாம்.

                  யோகியின் திருமண புகைப்படம்

                  இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில், எப்படியோ காதலை வெளிப்படுத்தி, இருவருக்கும் பிடித்துப்போனதால், பெற்றோர்கள்

                  சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் இந்தத் திருமணம் நடைபெற்றதால்,

                  யோகியின் நண்பர்கள் பலரும் சமூக வலைதளத்தில் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

                  ஊரடங்கில் காதல் டூ
                  ஊரடங்கில் காதல் டூ
                      Posted in சினிமா

                      நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு

                      நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு

                      சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

                      நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
                      நடிகர் விஜய்

                      நடிகர் விஜய் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

                      இந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு

                      கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார்.

                      அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

                      இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது.

                      இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு

                      வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

                      அதில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு

                      கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என பொய்யான

                      மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
                      மேலும், மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

                          Posted in சினிமா

                          விஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை

                          விஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை

                          விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் பிரபல நடிகரின் தந்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

                          விஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை
                          விஜய்


                          அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’. புட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த

                          படத்தில் நடிகர் கதிர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கதிரின் வேடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

                          இந்நிலையில் நடிகர் கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா – அம்மாவின் போட்டோ பகிர்ந்து உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில்,

                          நடிகர் கதிரின் தந்தை

                          இருவரது வாழ்க்கை எனக்கு எப்பொழுதும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும். அவர்களின் கனவும், ஆசையும் தான்

                          இன்றைக்கு நான் இருக்கும் இடம். 53 வருடங்களுக்கு பிறகு அவர் நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு மாஸ்டர் படத்தில்

                          நிறைவேறியது. அது மிகவும் சிறிய வேடம் தான். அவருடைய வாழ்க்கைக் கனவு நிறைவைடைந்தது. பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. என்று குறிப்பிட்டுள்ளார்

                          விஜய்யுடன் இணைந்து
                          விஜய்யுடன் இணைந்து
                              Posted in சினிமா

                              சிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்

                              சிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்

                              தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, ப்ரெண்ட்ஷிப் படத்திற்காக சூப்பர் ஸ்டார் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

                              சிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்
                              சிம்பு


                              ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

                              அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கிறார். மேலும் நடிகர் அர்ஜூன் இந்தப் படத்தில் வில்லனாகவும், நகைச்சுவை

                              நடிகர் சதீஷூம் நடிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

                              ஹர்பஜன்சிங், லாஸ்லியா

                              படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சூப்பர் ஸ்டார் (Superstar Anthem)

                              என்ற படத்தின் முதல் பாடலை என்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                              சிம்பு குரலில் வெளியான
                              சிம்பு குரலில் வெளியான
                                  Posted in சினிமா

                                  போதும்டா சாமி.. பாலியல் நாயகி சின்மயி வேதனை

                                  போதும்டா சாமி.. பாலியல் நாயகி சின்மயி வேதனை

                                  பிரபல பின்னணி பாடகியான சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் போதும்டா சாமி என்று வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.

                                  போதும்டா சாமி.. பாடகி சின்மயி வேதனை
                                  சின்மயி


                                  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல்

                                  குற்றங்கள் குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

                                  அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்

                                  தமிழகத்தை உலுக்கியது. தமிழக திரைஉலகினர் பலர் ஜெயப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு குரல் கொடுத்தனர்.

                                  ஜெயப்பிரியாவின் கொடூரம் குறித்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் தற்போது சசிகலா என்ற பெண்ணை இரண்டு

                                  சகோதரர்கள் குளிக்கும்போது ஆபாசபடம் எடுத்து அவரை மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துவந்தனர்.

                                  ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லை மீறியதால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

                                  சின்மயி டுவிட்

                                  ஜெயப்பிரியா கொலையை அடுத்து சசிகலாவுக்கும் நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் திரையுலக பிரபலங்கள், உள்ளிட்ட பலர் பதிவு செய்து வருகின்றனர்.

                                  இந்த நிலையில் பாடகி சின்மயி, ‘போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குரோம்ன்னு தோணுது’ என்று மிகவும்

                                  வேதனையுடன் பதிவு செய்துள்ளார். பாடகி சின்மயின் இந்த ட்விட்டர் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.

                                      Posted in சினிமா

                                      அரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு

                                      அரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு


                                      தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார்.

                                      நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு
                                      நடிகை நமீதா

                                      தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் நிர்வாகிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

                                      திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார்.

                                      பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத்தலைவராகவும் நியமித்துள்ளார்.

                                      பாரதிய ஜனதாவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன்

                                      தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

                                      மேலும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்துள்ளார்.

                                          Posted in சினிமா

                                          கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு

                                          கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு

                                          தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நடிகை ஜெனிலியா, தனது கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.

                                          கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு
                                          ரிதேஷ் தேஷ்முக், ஜெனிலியா


                                          கமல்ஹாசன், சூர்யா, சிரஞ்சீவி, சல்மான்கான், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் தங்களுடைய உடல் உறுப்புகள் அல்லது கண்களை தானம் செய்வதாக ஏற்கனவே

                                          அறிவித்து உள்ளனர். இந்த பட்டியலில் நடிகை ஜெனிலியாவும் தற்போது சேர்ந்துள்ளார். இவர் தனது உடல் உறுப்புகளை தானம்

                                          செய்வதாக அறிவித்துள்ளார். தனது ரசிகர்களும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

                                          ஜெனிலியா

                                          இதுபோல் ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்கும் உடல் உறுப்புதானம் செய்வதாக கூறியுள்ளார்.

                                          இருவருக்கும் சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன. ஜெனிலியா தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி சச்சின்,

                                          சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி

                                          படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை 2012-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2

                                          குழந்தைகள் உள்ளனர். தற்போது மீண்டும் படங்களில் நடித்து

                                          வருகிறார்.

                                          கணவருடன் இணைந்து உடல்
                                          கணவருடன் இணைந்து உடல்
                                              Posted in சினிமா வினோத வீடுப்பு

                                              தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

                                              தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

                                              தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா தொகுப்பாளராக களமிறங்க இருக்கிறார்.

                                              தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
                                              தமன்னா


                                              தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் தமன்னா. தற்போது கைவசம் 2 படங்கள் வைத்திருக்கும்

                                              தமன்னா விரைவில் ஒரு டாக் ஷோவில் தொகுப்பாளராக பணியாற்ற போகிறார் என செய்தி பரவி வருகிறது.

                                              தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் துவங்கியுள்ள ஆஹா என்ற ஒரு ஓடிடி தளத்திற்காக தான் இந்த ஷோவினை நடத்த உள்ளனர். இந்த

                                              நிகழ்ச்சியில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான அல்லு அர்ஜுன் மற்றும் தமன்னா ஆகியோர் தான் இணைந்து தொகுத்து வழங்க உள்ளனர்.

                                              தமன்னா

                                              இந்த நிகழ்ச்சியினை நடத்துவதற்காக தமன்னாவிற்கு ஏழு லட்சம் ரூபாய் ஒரு எபிசோடுக்கு சம்பளமாக வழங்கப்பட உள்ளது என்றும் தகவல் பரவி வருகிறது.

                                                  Posted in சினிமா

                                                  பிரபல டிவி நடிகைக்கு கொரோனா

                                                  பிரபல டிவி நடிகைக்கு கொரோனா

                                                  பிரபல சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

                                                  பிரபல டிவி நடிகைக்கு கொரோனா தொற்று
                                                  டிவி நடிகை நவ்யா சாமி


                                                  இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

                                                  இந்நிலையில் டிவி சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது

                                                  உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் இவர், தமிழில்

                                                  வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

                                                  நவ்யா சாமி

                                                  சமீபத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என நேற்று முடிவு வந்துள்ளது. இதுகுறித்து அவர்

                                                  கூறும்போது, நான் படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. சில அறிகுறிகள் தென்பட்டவுடன்

                                                  பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

                                                      Posted in சினிமா

                                                      காதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது

                                                      காதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது

                                                      காதலித்து ஏமாற்றியதாக நடிகை கொடுத்த புகார் அடிப்படையில் போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                                      காதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது
                                                      சாய் சுதா, ஷியாம் கே நாயுடு


                                                      தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய்

                                                      சுதா. இவர் கடந்த 7 வருடங்களாக ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்தார். இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி,

                                                      பிசினஸ்மேன் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

                                                      நடிகை சாய் சுதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நெருங்கி பழகி வந்தாராம் ஷியாம் கே நாயுடு. ஆனால்

                                                      வாக்குறுதி கொடுத்தபடி திருமணம் செய்து கொள்ளவில்லையாம். இதையடுத்து ஷியாம் தன்னை ஏமாற்றியதாக கூறி நடிகை சாய் சுதா போலீசில் புகார் அளித்துள்ளார். இ

                                                      இதை தொடர்ந்து போலீசார் ஷியாம் கே.நாயுடுவை கைது செய்து விசாரித்தனர். பின்னர் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.

                                                      இந்தநிலையில் ஸ்ரீசுதாவும் தானும் தங்கள் பிரச்சனையில் சாமாதானமாக போக முடிவுசெய்து விட்டோம் என கூறி

                                                      நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஷியாம் கே.நாயுடு சில ஆவணங்களையும் சமர்ப்பித்தாராம்.

                                                      ஆனால் அந்த ஆவணங்களில் இருந்த ஸ்ரீசுதாவின் கையெழுத்து போலியானது என்பது தெரியவந்தது. இதனால் மோசடி மற்றும்

                                                      ஏமாற்றுதல் என்கிற பிரிவுகளில் மீண்டும் ஷியாம் கே.நாயுடு மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

                                                          Posted in சினிமா

                                                          டாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்

                                                          டாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்

                                                          கொரோனா ஊரடங்கில் மின் கட்டணத்தை அநியாயத்துக்கு உயர்த்தி விட்டதாக நடிகை டாப்சி கோபமாக கூறியிருக்கிறார்.

                                                          டாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்
                                                          டாப்சி


                                                          கொரோனா ஊரடங்கில் மின் கட்டணத்தை அநியாயத்துக்கு உயர்த்தி விட்டதாக திரையுலகை சேர்ந்தவர்கள் குறை கூறி

                                                          வருகிறார்கள். ஏற்கனவே நடிகர் பிரசன்னா தனது வீட்டுக்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளதாக புகார் கூறினார். அதனை மின்சார

                                                          வாரியம் மறுத்து விளக்கமும் அளித்தது. தொடர்ந்து நடிகை கார்த்திகா மும்பை மின்வாரியம் தனது வீட்டுக்கு ரூ.1 லட்சம் மின்கட்டணம் விதித்துள்ளதாக குறைகூறினார். இது பரபரப்பானது.

                                                          இந்த நிலையில் நடிகை டாப்சியும் தனக்கு அதிக மின்கட்டணம் விதித்துள்ளதாக கோபத்தில் இருக்கிறார். இவர் தனுஷ் ஜோடியாக

                                                          ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி வந்தான் வென்றான், காஞ்சனா 3, வைராஜா வை, கேம் ஓவர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் பிரபல நடிகையாக இருக்கிறார்.

                                                          டாப்சி

                                                          அவர் கூறும்போது, “எனது வீட்டுக்கு ரூ.36 ஆயிரம் மின் கட்டணம் விதித்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் 3 மாதங்களாக நான் புதிதாக மின்சாதனங்களை வாங்கவோ பயன்படுத்தவோ இல்லை.

                                                          அப்படி இருக்கும்போது இவ்வளவு மின் கட்டணம் எப்படி கணக்கிட்டனர் என்பது புரியவில்லை” என்று கூறியுள்ளார்.

                                                              Posted in சினிமா

                                                              சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் – பூர்ணா எச்சரிக்கை

                                                              சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் – பூர்ணா எச்சரிக்கை

                                                              சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் என்று நடிகை பூர்ணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

                                                              சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் – பூர்ணா எச்சரிக்கை
                                                              பூர்ணா


                                                              கேரளாவில் நடிகை பூர்ணாவை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பலை போலீசார் கைது

                                                              செய்துள்ளனர். இந்த நிலையில் நடந்த சம்பவம் பற்றி பூர்ணா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

                                                              “எங்கள் உறவினர்களின் நண்பர்கள் மூலம் தனது பெயர் அன்வர் என்று சொல்லி எங்கள் குடும்பத்தினருடன் அந்த நபர்

                                                              அறிமுகமானார். எனது பெற்றோர்கள், அன்வர் பெற்றோர் சகோதரி, சகோதரி மகள் எல்லோரிடமும் பேசினோம். எங்கள் வீட்டுக்கும்

                                                              வந்தனர். அவர்களை நேரில் பார்த்ததும் சந்தேகம் வந்தது. அவர்களை பற்றிய விவரங்களை துருவி துருவி கேட்டதும் பதில் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறி விட்டனர்.

                                                              பூர்ணா

                                                              அதன்பிறகுதான் போனில் பணம் கேட்டார்கள். பணம் கொடுக்க மறுத்ததும் மிரட்டினார்கள். வீட்டில் இருந்து வெளியே வரும்போது

                                                              பார்த்துக்கொள்கிறோம் என்று எச்சரித்தனர். பெரிய நடிகை என்று நினைத்து விட்டாயா. மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாய் இல்லையா? பார்த்துக்கொள்கிறோம் என்றனர்.

                                                              என்னைபோல் வேறு யாரும் பாதிக்க கூடாது என்றுதான் புகார் அளித்தேன். பலர் இவர்களால் பாதிக்கப்பட்டது இப்போது

                                                              வெளிச்சத்துக்கு வருகிறது. சினிமா அழகியலான உலகம். பட வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பலர் வருவார்கள் அவர்களிடம்

                                                              எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல இளம் பெண்கள் கொச்சியில் அறை எடுத்து தங்கி நடிகையாகும் கனவோடு சினிமா வாய்ப்பு தேடுகிறார்கள். யார் வாய்ப்பு வாங்கி தருவதாக

                                                              அணுகினாலும் அவர்களை பற்றி தோழிகள் மூலம் நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டு முடிவு எடுங்கள்.” இவ்வாறு பூர்ணா கூறினார்

                                                                  Posted in சினிமா

                                                                  இது ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா.

                                                                  இது ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா.

                                                                  இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல… என்று நடிகை வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

                                                                  இது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா
                                                                  லட்சுமி ராமகிருஷ்ணன் – வனிதா


                                                                  நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை கடந்த சனிக்கிழமை அன்று திருமணம் செய்து கொண்டார்.

                                                                  திருமணத்தை அடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனது கணவர் முறையாக விவாகரத்து பெறாமல்

                                                                  திருமணம் செய்து கொண்டதாகவும், மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். மேலும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பீட்டர்

                                                                  பால் ஒரு பெண் பித்தர், குடிகாரர் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.

                                                                  பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கொடுத்த புகார் குறித்து விளக்கமளித்த வனிதா விஜயகுமார், சட்டரீதியாக

                                                                  எதிர்கொள்வோம் என்றும், பணத்திற்காக அவர் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

                                                                  பீட்டர் பாலின் முதல் மனைவி புகார் கொடுத்திருக்கும் செய்தியை அறிந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டர் பதிவின் மூலம் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அதில், பீட்டர்பாலுக்கு

                                                                  திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னும் விவாகரத்தாகவில்லை. வனிதா – பீட்டர் பால் திருமணம் முடியும்

                                                                  வரை ஏன் முதல் மனைவி புகாரளிக்கவில்லை. திருமணத்தை ஏன் நிறுத்தவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

                                                                  கணவருடன் வனிதா

                                                                  மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பதிவில், வனிதா கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறார். இந்த உறவாவது

                                                                  அவருக்கு நல்ல விதமாக அமையும் என்று நினைத்தேன். ஆனால் இந்த பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது.

                                                                  அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தை பெண்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

                                                                  லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவுக்கு பதிலளித்திருக்கும் வனிதா விஜயகுமார், “தம்பதிகளாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது

                                                                  உங்களுக்கு தெரியுமா? நீங்கள் உங்களுக்கு தெரியாத ஒன்றில் எந்த வகையிலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை. நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை.

                                                                  எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துக்களையும் நீங்கள் சொல்ல வேண்டாம்.

                                                                  மேலும் இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல. நான் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன்.

                                                                  அதை எப்படி சரிப்படுத்துவது என்பது எனக்கு தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்கு தேவை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

                                                                  வனிதா
                                                                  வனிதா
                                                                      Posted in சினிமா

                                                                      பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி

                                                                      பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி

                                                                      சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.

                                                                      சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி
                                                                      சனம் ஷெட்டி


                                                                      தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் சனம் ஷெட்டி. இவர் தமிழில் அம்புலி படத்தின் மூலம் அறிமுகமானார்.

                                                                      இதையடுத்து இவர் கதம் கதம், சவாரி, சிபிராஜ் நடித்த வால்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹன்சிகா, சிம்பு நடித்து வரும் மஹா படத்தில் இவர் நடித்து வருகிறார்.

                                                                      இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த

                                                                      ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ்க்கு ஆதரவாக வீடியோ பதிவில் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

                                                                      இது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. மேலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

                                                                      சனம் ஷெட்டியின் புகார்

                                                                      இதையடுத்து தற்போது சனம் ஷெட்டி, இச்சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருக்கும் தவலை தெரிவித்துள்ளார்.

                                                                      மேலும் இந்த சம்பவம் குறித்து அனைவரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும், அப்போது தான்

                                                                      அழுத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                                                          Posted in சினிமா

                                                                          நடிகை வீட்டை உடைத் தெறிந்த திருட்டு கும்பல்

                                                                          நடிகை வீட்டை உடைத் தெறிந்த திருட்டு கும்பல்

                                                                          பிரபல டிவி நடிகை வீட்டிற்கு சென்ற போதை கும்பல், அங்கு இருக்கும் பொருட்களை வைத்து இருக்கிறார்கள்.

                                                                          நடிகை வீட்டிற்கு புகுந்து பொருட்களை உடைத்த போதை கும்பல்
                                                                          அர்ட்ரா தாஸ்


                                                                          மலையாள தொலைக்காட்சி நடிகை அர்ட்ரா தாஸ். இவர் பல டி.வி தொடர்களில் நடித்து கேரள ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக

                                                                          உள்ளார். திருச்சூரில் உள்ள பட்டிப்பரம்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்குள் சிலர் புகுந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

                                                                          அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி நாசம் செய்தனர். பூந்தொட்டிகளை தூக்கி வீசி உடைத்தனர்.

                                                                          வீட்டில் இருந்த நடிகையின் தாய் சிவகுமாரியையும் அடித்து காயப்படுத்தினார்கள். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டனர்.

                                                                          காயம் அடைந்த சிவகுமாரி ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டு உள்ளார்.

                                                                          தாக்குதல் நடந்தபோது நடிகை அர்ட்ரா தாஸ் தந்தையுடன் திருவனந்தபுரத்துக்கு சென்றதால் தப்பினார்.

                                                                          அர்ட்ரா தாஸ்

                                                                          இதுகுறித்து பழயனூர் போலீசார் விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

                                                                          போலீஸ் தரப்பில் கூறும்போது “நடிகையின் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் பல வருடங்களாக எல்லை பிரச்சினை உள்ளது.

                                                                          இதன் காரணமாக மோதல் ஏற்பட்டு இருக்கலாம். விசாரித்து வருகிறோம்” என்றனர்.

                                                                              Posted in சினிமா வினோத வீடுப்பு

                                                                              மூன்றாவது திருமணம் முடித்த வனிதா

                                                                              குமர் பிள்ளைகளுடன் மூன்றாவது திருமணம் முடித்த வனிதா


                                                                              நடிகையும் பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானவருமான வனிதாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது.

                                                                              பீட்டர் பாலை திருமணம் செய்தார் வனிதா
                                                                              வனிதா திருமணம்


                                                                              பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் விஜய்யுடன்

                                                                              சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

                                                                              இந்நிலையில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை ஜூன் 27ஆம் தேதி திருமணம்

                                                                              செய்ய இருப்பதாக அறிவித்தார். அதன்படி வனிதா திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

                                                                              வனிதா திருமணம்

                                                                              இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

                                                                              மூன்றுமாதத்தில் விவகாரத்து நடக்கும் என்பதை இங்கே கூறி விடுகிறோம்

                                                                              மூன்றாவது திருமணம்
                                                                              மூன்றாவது திருமணம்