Category: சமையல் cook
இன்றைய சமையல் ,இன்றய முக்கிய சமையல்,today cook,today easy cooking
இட்லி தோசைக்கு ருசியான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் நாக்குல நிக்கும்
இட்லி தோசைக்கு ருசியான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் நாக்குல நிக்கும்
இட்லி தோசைக்கு ருசியான சட்னி நம்ம வீட்டில இன்றே செய்து பாருங்க , டேஸ்ட் நாக்குல நிக்கும்
.மிகவும் தரமான சுவயான ,இலகுவான சட்னி .
பத்து இட்லி தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .
அவ்வாறான இந்த பொட்டுக் கடலை சட்னி செய்வது எப்படி என்பதை வாங்க பார்க்கலாம் .
தமிழ் சமையல்
பொட்டு கடலை சட்னி செய்வது எப்படி ..?
கடலை சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
கீழே பார்க்கலாம் வாங்க .
பொட்டு கடலை சட்னி செய்முறை ஒன்று
அடுப்பில கடாய வைத்து மூன்று கரண்டி எண்ணெய் விட்டிருங்க .
எண்ணெய் நன்றாக சூடானதும் ,சின்ன வெங்காயம் பத்து ,இரண்டு பல்லு பூண்டு ,காரத்திற்கு ஏற்ப வறு மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .
இட்லி தோசைக்கு ருசியான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் நாக்குல நிக்கும்
இது கூட சிறிய துண்டு ,புளி சேர்த்து வதக்கி வாங்க .மூன்று கரண்டி அளவு பொடியாக வெட்டியா தேங்காய் சேர்த்து வதக்கி வாங்க .
இரண்டு நிமிடத்திற்கு பின்னர் ,பொட்டு கடலை சேர்த்து வறுத்து வாங்க .இரண்டு நிமிடம் கழித்து ,இறக்கிய பின்னர் கொஞ்ச நேரம் ஆறவைத்து பின்னர் ,மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து,கூடவே தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வாங்க .
இப்போ சட்னி ரெடியாகிடுச்சு .இந்தசட்னிக்கு தாளித்து போட்டா ரெம்பவே சுவையாக இருக்கும் .
அதனால மீளவும் அடுப்பில கடாய வைத்து, எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து ,வறுமிளகாய் ,பெருங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .
ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் ,அதனை சட்னியில் போட்டு நன்றாக கலக்கி விடுங்க .
இப்போ சட்னி ரெடியாடிச்சு .
இப்போ இட்டலி தோசை கூட சேர்த்து சாப்பிட்டு பாருங்க செம ,சுவையாக இருக்கும் ,மிகவும் இலகுவான முறையில் சிறந்த சட்னி தயாராகிடிச்சு .
பத்து இட்லி நாம சாப்பிடலாங்க .அப்புறம் என்ன குஷி தாங்க .தலைவரே சட்னி எப்படி இருக்கு சொல்லவே இல்லை .
டீ கடை மசால் உருளைக்கிழங்கு போண்டா 10 நிமிடத்தில் செஞ்சு சாப்பிடுங்க
டீ கடை மசால் உருளைக்கிழங்கு போண்டா 10 நிமிடத்தில் செஞ்சு சாப்பிடுங்க
டீ கடை மசால் உருளைக்கிழங்கு போண்டா வெறும் பத்து நிமிடத்தில் ,வீட்டில செஞ்சு சாப்பிடுங்க .
மிகவும் இலகுவான முறையில் ,தரமான ,அதே டீ கடை சுவையில் ,அட்டகாசமான .மசால் போண்டா செஞ்சு சாப்பிடலாம் வாங்க .
உருளைக்கிழங்கு மசால் போண்டா செய்முறை ஒன்று
தமிழ் சமையல்
அடுப்பில கடாய வைத்து, இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு,எண்ணெய் சூடானதும் அதில ,இரண்டு கரண்டி கடுகு ,ஒரு கரண்டி சீரகம் ,ஒரு கொத்து கருவேப்பிலை ,வெட்டிய பெரிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,பூண்டு ,இஞ்சி ,பெருங்காய தூள் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
பல வித போண்டா சமையல் பார்க்க இதில் அழுத்துங்க
வெங்காயம் வதங்கிய பின்னர் ,உப்புச சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் .,ஒருகரண்டி மஞ்சள் தூள் ,ஒருகரண்டி மிளகாய் தூள் ,ஒரு கரண்டி கரம் மசாலா சேர்த்து நனறாக வதக்கி வாங்க .
டீ கடை மசால் உருளைக்கிழங்கு போண்டா 10 நிமிடத்தில் செஞ்சு சாப்பிடுங்க
மசாலா வறுபட்ட பின்னர், வேகவைத்து தோல் உரித்து வைத்த உருளைக்கிழங்கை நன்றாக , மசித்து சேர்த்து கொள்ளுங்க .
அப்படியேநன்றாக மசலா சேரும் வண்ணம் வதக்கி வாங்க .
இரண்டு நிமிடம் வதக்கிய பின்னர் ,கொத்தமல்லி இலைசேர்த்து கலந்து இப்போ இறக்கிடுங்க
போண்டா செய்முறை இரண்டு .
போண்டா செய்திட இரண்டு கப் கடலை மாவு ,ஒரு கப் அரிசி மாவு ,
தேவையான அளவு உப்பு ,ஒரு கரண்டி சீரகம் ,ஒரு கரண்டி மிளகாய் தூள் ,அரை கரண்டி கரம் மசாலா ,கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து நனறாக கலக்கி வாங்க .
கலந்த பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து, பச்சி மா பதத்திற்கு, வரும் வரை நன்றாக மாவை கட்டியாக கலந்து வாங்க .
கட்டி இல்லமா கரைத்து வந்த பின்னர் ,சூடான எண்ணெய் சேர்த்து ,இப்போ நனறாக கலக்கி வாங்க .
மேல் மா ரெடியாடிச்சு .
இப்போ உருளைக்கிழங்கு தொக்கை ,சின்ன உருண்டையாக பிடித்து எடுத்து வாங்க .
அதன் பின்னர் உருண்டையை மேல் மாவிலை போட்டு .நன்றாக தோய்த்து அதனை எண்ணெயில் போட்டு பொரித்து கொள்ளுங்க .
எண்ணெய் நன்றாக சூடான நிலையில் ,மாவில் போட்டு எடுத்து வாங்க ,
இரண்டு பக்கம் பிரட்டி வேகும் வரை பிரட்டி எடுங்க .
நன்றாக பொரித்த பின்னர் .அதனை வெளியில் எடுத்து ,ருசு பேப்பர் மேல போட்டிருங்க .
உருளைக்கிழங்கு மசால் போண்டா ரெடியாகிடுச்சு .
சூப்பரான சுவையான ,தரமான உருளைக்கிழங்கு மசால் போண்டா ரெடியாடிச்சு .
மாப்புள்ள செம மாஸ் சுவை.அதே டீ கடை வாசத்தோட இருக்கு .அப்புறம் என்ன ஒரு புடி புடிங்க.
மிஞ்சிய சப்பாத்தியில் ருசியான சில்லி சப்பாத்தி செஞ்சு பாருங்க சுவையோ சுவை
மிஞ்சிய சப்பாத்தியில் ருசியான சில்லி சப்பாத்தி செஞ்சு பாருங்க சுவையோ சுவை
வீட்டில் மிஞ்சிய சப்பாத்தியில் ருசியான சில்லி சப்பாத்தி செஞ்சு சாப்பிட்டு பாருங்க மக்களே .
மிகவும் இலகுவான முறையில் ,இந்த சில்லி சபாப்பாத்தி செய்திடலாம் .
வாங்க இப்போ மிஞ்சிய சப்பாத்தியில், எப்படி சில்லி சப்பாத்தி செய்வது என்பதை பார்ப்போம் .
தமிழ் சமையல்
சில்லி சப்பாத்தி செய்முறை ஒன்று
மிஞ்சிய சப்பாத்தி எடுத்து ,அதை ஒன்றுடன் ஒன்றாக அடுக்கி வைத்து ,கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்க .
அப்புறம் அடுப்பில கடாயை வைத்து இரண்டு கரண்டி எண்ணெய் ,மிளகாய் தூள் ,போட்டு ,இதில வெட்டிய சப்பாத்தியை போட்டு கிண்டி வாங்க .
மசாலா ரெம்ப கலக்கும் படியாக கிண்டி வறுத்து வாங்க .
இரண்டு நிமிடம் வறுத்த பின்னர் .அதே கடாயில சுத்தம் பண்ணிட்டு ,எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
மிஞ்சிய சப்பாத்தியில் ருசியான சில்லி சப்பாத்தி செஞ்சு பாருங்க சுவையோ சுவை
எண்ணெய் நன்றாக சூடானதும் வெட்டி வைத்த இரண்டு வெங்காயம் ,அது கூட உப்பு ,போட்டு வதக்கி வாங்க .
வெங்காயம் கண்ணாடி பதம் வந்த பின்னர், கருவேப்பிலை ,பச்சை மிளகாய் ,இரண்டு தக்காளி வெட்டியது போட்டு அப்படியே வறுத்து வாங்க .
இப்போ இது கூட ஒரு கரண்டி இஞ்சி பூண்டு போட்டு ,அதன்பச்சை வாசம் போகும் வரை வதக்கி வாங்க ,
அதன் பின்னர் தேவையான மிளகாய் தூள் , பிட்ஸா சோஸ் ,ஒரு கரண்டி மல்லி தூள் ,.கரம் மசாலா சேர்த்து வதக்கி வாங்க .
நன்றாகா மிக்ஸ் பனி வதங்கிய பண்ணிய பின்னர், தக்காளி சோஸ் கலந்து அப்படியே வதககி வாங்க .அதன் பின்னர் வறுத்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு நன்றாக வதக்கி வாங்க .
அடுப்பை குறைத்து வைத்து, ஏரியாமநன்றாக மிக்ஸ் பண்ணி வாங்க .இரண்டு நிமிடம் ஆன பின்னர் .இப்போ நிப்பாட்டி எடுத்து சாப்பிடுங்க .
இப்போ சில்லி சப்பாத்தி ரெடியாகிடிச்சு .
இவ்வளவு தாங்க மேட்டர் ,சிம்பிளா சில்லி சப்பாத்தி செய்தாச்சு
.
இப்போ கையை கைகழுவி நன்றாக சாப்பிடுங்க .எனக்கும் கொஞ்சம் அப்டியே அனுப்பி வைங்க மக்களே .
கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க
கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க
வீட்டில மக்களே இப்படி கடை சுவையில் மட்டம் வறுவல் செய்து சாப்பிடுங்க .
இலகுவாக தரமான முறையில் இந்த மட்டன் வறுவல் செய்து அசத்துங்க மக்களே .
மட்டன் வறுவல் செய்வது எப்படி ..?
இந்த மட்டன் வறுவல் செய்திட தேவையான பொருட்கள் .
வாங்க இப்போ மட்டன் வருவல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
மட்டன் செய்முறை ஒன்று
தமிழ் சமையல்
குக்கரில் ஒரு கரண்டி நெய் வைத்து சூடாக்கி கொள்ளுங்க .அதன் பின்னர், வெட்டி கழுவி வைத்துள்ள மட்டன் போட்டு கொள்ளுங்க .
இதே ணியில வதக்கிய பின்னர் உப்பபு ,மஞ்சள் தூள்.மிளகாய் தூள் ,மல்லி தூள் போட்டு நன்றாக கலக்கி வதக்கி வாங்க .
ஐந்து நிமிடம் அப்டியே வகை வைத்து எடுத்திடுங்க .
கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க
அப்புறம் ஒரு காடாய் வைத்து அதில மல்லி விதை ,சீரகம் ,ஒரு நட்ச்சத்திர சோம்பு ,கூடவே இந்த நான்கு கராம்பு ,ஒரு துண்டு பட்டை அப்படியே இந்த மசாலாவை வதக்கி வைக்க .
அப்புறம் 15 வறு மிளகாய் சேர்த்து வறுத்து வாங்க .
வறுத்து ரெடியானதும் அதனை அப்படியே எடுத்திடுங்க .
அப்புறம் மிச்சியில் சேர்த்து மூன்று வெங்காயம் ,ஐந்து பூண்டு
,இஞ்சி துண்டு ,அரை கப் தயிர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .
மட்டன் வறுவல் செய்முறை இரண்டு இறுதி பாகம்
இப்போ மறுபடி ஒரு கடாய வைத்து சூடாக்கி ,நெய் சேர்த்து சூடாக்கியதும் ,அரைத்து வைத்த
மசாலாவை கொட்டி கலக்கிடுங்க .
தண்ணி கொஞ்சம் சேர்த்து கலக்கி வாங்க .அப்புறம் தேவையான உணவு போட்டு மூடிய போட்டு மூடி வையுங்க .
நல்ல மணம் வந்த பின்னர் இப்போ இறைச்சியை சேர்த்திடுங்க .
மூடிய பாதி அளவுக்கு மூடி நன்றாக கொதிக்க வைத்து வாங்க .நன்றாக தண்ணி வற்றி வரும் அளவுக்கு வேக வையுங்க .
இப்போ கறி எல்லாம் ரெடியாடிச்சு .அப்டியே எடுத்து வாயில் வைத்து காய வைத்து கொள்ளுங்க .மட்டன் வறுவல் என்ற இப்படி தங்க பண்ணனும் .
மரக்கறி நூடில்ஸ் கொட்டல் சுவையில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க
மரக்கறி நூடில்ஸ் கொட்டல் சுவையில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க
நம்ம வீட்டில மரக்கறி நூடில்ஸ் கொட்டல் சுவையில், இப்படி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .
கடையில் விற்கும் சுவையில், அதே சுவை மாறாத படி காய்கறி ,அல்லது மரக்கறி நூடில் செய்வது என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .
மரக்கறி நூடில்ஸ் செய்வது எப்படி ..?
நூடில்ஸ் செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?
தமிழ் சமையல்
மரக்கறி நூடில்ஸ் செய்முறை ஒன்று
நூடில்ஸ் வேக வைத்து அடுக்க அடுப்பில பாத்திரம் வைத்து தண்ணீர் விட்டு சூடாக்கி கொள்ளுங்க .
தன்ணியில ஒரு கரண்டி எண்ணெய் ,உப்பு சேர்த்திடுங்க ,.அப்புறம் நூடில்ஸ் போட்டு வேக வைத்திடுங்க .
90 வீதம் நூடில்ஸ் வேகி வரும் வரைக்கும் வைத்து எடுங்க .
நூடில்ஸ் நாம் சொன்ன பதம் வந்தத பின்னர் வெளியில் எடுத்திடுங்க .அப்புறம் தண்ணியை வைத்திடுங்க ,அப்புறம் தண்ணி சேர்த்து கழுவி எடுத்திடுங்க .
இப்போ அடுப்பில அடுப்பில கடாய் சூடாக்கி எண்ணெய் கூட பூண்டு பொடி ,பச்சை மிளகாய் ,இஞ்சி எல்லாம் வெட்டி கடாயில போட்டு வதக்கி கொள்ளுங்க .
கலர் மாறியதும் ,ஒரு வெங்காயம் ,கரட் ,ஒரு குடைமிளகாய் ,ஒரு கைப்பிடி அளவுக்கு முட்டை கோஸ் .
இவை எல்லாம் சேர்த்து வதக்கி வாங்க .
இப்போ மிளகாய் தூள் ,கரம் மசாலா ,மல்லித்தூள் ,நூடில்ஸ் மசாலா ,உப்பு,சீரகம் சேர்த்து வதக்கி கொள்ளுங்க .
முப்பது நிமிடம் வதக்கிய பின்னர் தக்காளி சோஸ் விட்டிருங்க .சோயா சோஸ் ,வினிகர் எல்லாம் விட்டு கலக்கி வதைக்கிடுங்க .
அதன் பின்னர் பச்சை வாசம் போன பின்னர் ,ஆற வைத்துள்ள நூடில்ஸ் எடுத்து போட்டு கலக்கி வாங்க .
நூடில்ஸ் உடையாம சேர்த்து கலக்கி வாங்க .
அடியில் இருந்து மேல் வரை நன்றாக கிளறி கலக்கி வாங்க .இப்போ சாப்பிடும் அளவுக்கு நூடில்ஸ் ரெடியாகிடிச்சு .
கொட்டல் சுவையில் மிக தரமான நூடில்ஸ் நம்ம வீட்டில செய்தாச்சு .அப்புறம் என்ன மக்களே ,குஷி தான் ,சுவையான நூடில்ஸ் இது போல தினம் செஞ்சு அசத்துங்க .
இட்லி தோசை போா் அடிக்குதா இதோ இருக்கு செம அயிட்டம்
இட்லி தோசை போா் அடிக்குதா இதோ இருக்கு செம அயிட்டம்
இட்லி தோசை நாள் தோறும் சப்ப்பிட்டு போர் அடிக்குதா ..?
அப்போ வாங்க நம்ம வீட்டு சமையலில் இது ரெம்பவே சுவையாக இருக்கு
வித்தியமானது ,.ரெம்பவே ஆரோக்கியம் நிறைந்தது உணவு .
சிறுவர்களுக்கும் ,வயதானவர்களுக்குக்கும் ,அதிக சத்து நிறைந்த ரெம்ப சிறந்த உணவு இதுங்க
வாங்க இப்போ இந்த உணவு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்
செய்முறை ஒன்று
தமிழ் சமையல்
வெங்காயம் ,உருளைக்கிழங்கு ,மிளகாய்
என்பனவற்றை எடுத்து ,பொடி பொடியாக, வெட்டி வவையுங்க ..ரெம்பவே சிறியதாக வெட்டுங்க
இப்போ இவை எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணுங்க .
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்துகலக்குங்க .அப்புறம் தேவையான அளவு உப்பு ,சேருங்க .
கூடவே அரை கரண்டி சோடா தூள் சேருங்க ,மேலும் அரை கப்பு கோதுமை மாவு ,கூடவே இரண்டு முட்டைகள் அடித்து ஊற்றுங்க .
இப்போ இவை எல்லாவற்றையும் இணைத்து கலக்குங்க ,மிக்ஸ் பண்ணிக்கோங்க .
இப்போ இவை எல்லாவற்றையும் இணைத்து கலக்குங்க ,மிக்ஸ் பண்ணிக்கோங்க .
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .ரெம்ப சூடாகி வரும் வரை அப்படியே தோசை கல்லில் வேக வையுங்க .
ஒருபக்கம் வெந்ததும் , மறு பக்கம் புரட்டி விடுங்க
இப்போ இரண்டு பக்கமும் வேகியதும் ,எடுத்து சாப்பிட்டு பாருங்க .செம தூக்கலாக இருக்கும் .
இந்த உண்வு என்பது மிகவும் இலகுவானதும் ,அதிக சத்து நிறைந்த ஒன்று .
சிறுவர்கள் ,முதியவர்கள் உடல் ஆரோக்கியமாக வாழ்ந்திட இந்த புதிய உணவு முக்கிய மான ஒன்றாகும் .
தவறாது வாரத்தில் இரண்டு நாட்கள் என்றாலும், இந்த உணவு செய்து கொடுங்க மக்களே .
தோசை இட்லி தினமும் சாப்பிட்டு போர் அடிக்குதா .?கவலை விடுங்க ,இதை ஒருமுறை முயற்சித்து சமையல் செய்து பாருங்க .
இந்த சுவை உங்க நாவிலே ஓடிக்கிட்டா விடவே மாட்டிங்க
ஒருமுறை முயற்சித்து பாருங்க செமையா தாங்க இருக்கும் .
என்ன மாப்புள்ள எதனை எடுத்தாலும் செமை எண்ணு சொல்லுறாய் என திட்டுறீங்களா ..?
ஏன் தெரியுமா அப்படி சொல்லுறேன் , ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ,அதற்கு ஏற்ப சுவை வித்தியஷ படும் .அதாங்க சமையல் .
பிரியாணி தோற்று போகும் சுவையில் குஸ்கா முட்டை வறுவல்
பிரியாணி தோற்று போகும் சுவையில் குஸ்கா முட்டை வறுவல்
பிரியாணி தோற்று போகும் அளவில் ,குஸ்கா முட்டை வறுவல் செய்து சாப்பிடுங்க .மிக இலகுவான முறையில் ,அதிக சுவையுடன் கூடிய முட்டை குஸ்கா வறுவல் செய்வது எப்படி..?
உங்களின் இந்த கேள்விக்கு இதோ பதில் உள்ளது .
வாங்கோ இப்போ முட்டை குஸ்கா வறுவல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
பிரியாணி தோற்று போகும் முட்டை குஸ்கா செய்முறை ஒன்று
முதல்ல தக்காளி சாதம் செய்வதற்கு அரசி ஊற வைத்துக் கொள்ளுங்க .
மூன்று தடவை தண்ணியில அரிசியை நன்றாக கழுவி எடுத்திருங்க .
தமிழ் சமையல்
அப்புறம் புதிய தண்ணியில இந்த அரிசியை முப்பது நிமிடம் ஊற வைத்திடுங்க .
அரை மணி நேரம் கழித்து குக்கர் எடுத்து ,அதனை சூடாக்கி கொள்ளுங்க ,
அந்த குக்கரில் ஒரு மேசை கரண்டி நெய் சேர்த்திடுங்க .
இது கூட இரண்டு ஏலக்காய் ,மூன்று கராம்பு ,இரண்டு பட்டை ,ஒரு பிரிஞ்சி இலை ,
இது கூட பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் பொடியாக வெட்டி சேர்த்திடுங்க .
பிரியாணி தோற்று போகும் சுவையில் குஸ்கா முட்டை வறுவல்
இவை யாவற்றையும் இப்போ ஒன்றாக சேர்த்து வதக்கிடுங்க .
வெங்காயத்தின் கலர் மாறி வரும் வரைக்கும் நன்றாக வதாக்கி வாங்க .
வெங்காயம் வதக்கி வந்ததன் பின்னர், ஒரு பச்சை மிளகாய் ,மற்றும் தக்காளி ஒன்று பொடியாக வெட்டி சேர்த்து ,
உப்பு ,மஞ்சள் ,இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக கலக்கி வதக்கிடுங்க .
இஞ்சி பச்சை வாசம் போன பின்னர் ,ஒரு கரண்டி காஸ்மீர் மிளகாய் தூள் ,அரை கரண்டி கரம் மசாலா ,ஒரு கரண்டி மல்லி தூள் ,
கூடவே காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்து வதக்கி வாங்க .
மசாலா பச்சை வாசம் போன பின்னர் ,ஒரு கைபிடி கொத்தமல்லி இலை ,புதினா இலை ,சேர்த்து வதக்கி வாங்க .நன்றாக வதங்கிய பின்னர் ,
ஒரு கரண்டி தயிர் சேர்த்திடுங்க .சேர்த்துட்டு நன்றாக வதக்கி வாங்க .
இப்போ தேவையான அளவு தண்ணீர் ஊற்றிடுங்க ,தண்ணி கொதித்து வந்த பின்னர் ,தேவையான உப்பு சேர்த்து கொள்ளுங்க ,அப்புறம் கலக்கிய பின்னர் ,
இப்போ பசுமதி அரிசியை வடி கட்டி இதில போட்டு கொள்ளுங்க .
அரசி ஓரளவு வெந்த பின்னர் ,மூடிய போட்டு மூடி கொள்ளுங்க .இப்போ குஸ்கா சூப்பராக தயாராகிடிச்சு .
பிரியாணி தோற்று போகும் முட்டை மிளகு வறுவல் செய்முறை இரண்டு
அடுப்பில கடாயா வைத்து அதில இரண்டு கரண்டி எண்ணெய் சேர்த்திடுங்க .
எண்ணெய் சூடானதும் ,அரை கரண்டி மஞ்சள் ,அரை கரண்டி மிளகு தூள் ,தேவையான அளவு உப்பு ,
போட்டு எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கி வதக்கிடுங்க .
அவித்து வைத்த முட்டையை இரண்டாக வெட்டி இதில சேர்த்திடுங்க .
இப்போ இந்த முட்டையை இரு பக்கம் திருப்பி நன்றாக வறுத்திடுங்க .
இப்போ முட்டையை எடுத்து தட்டு ஒன்றில் வைத்திடுங்க .இப்போ அதே கடாயில பொடியாக வெட்டிய வெங்காயம் ,கருவேப்பிலை ,
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நனறாக வதக்கி வாங்க .
இஞ்சி பச்சை வாசம் போன பின்னர் மல்லி தூள் ,
மிளகு தூள் ,உப்பு .அரை கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
மசாலா பச்சை வாசம் போன பின்னர் ஒரு தக்காளியை அரைத்து நன்றாக மிக்ஸ் பண்னி வதக்கி வாங்க .தக்காளி பச்சை வாசம் போன பின்னர் அது தொக்கு மாதிரி வந்த பின்னர்,
இதில எடுத்து அவித்த முட்டைகளை சேர்த்திடுங்க .
முட்டையுடன் மசாலா அப்படியே அடுப்பில ஒரு நிமிடம் வேக
வைத்து ,மிளகு தூள் தூவி அடுப்பில் இருந்து இறக்கிடுங்க .
தயிர் சாதம் ,சாம்பாரு சாதம் ,குஸ்காவுடன்
இந்த முட்டை மிளகு வறுவல் சேர்த்து சாப்பிட்டா செமையாக இருக்கும் .
சமையல் என்பது ஒரு கலைங்க ,அதனை ரசித்து சமைத்தால் ருசித்து சாப்பிடலாம் தலைவா .
அப்புறம் என்ன குஷி தாங்க . குஸ்கா முட்டை வறுவலை ஒரு புடி புடிங்க .
முள்ளங்கி துவையல் இட்லி தோசை சாதம் கூட சாப்பிட செமையாகும் செஞ்சு பாருங்க
முள்ளங்கி துவையல் இட்லி தோசை சாதம் கூட சாப்பிட செமையாகும் செஞ்சு பாருங்க
முள்ளங்கி துவையல் இட்லி தோசை சாதம் கூட சேர்த்து சப்ப்பிட்டு செமையாக இருக்கும் .
முள்ளங்கி செமையான சுவையுடன், இலகுவாக செய்வது எப்படி என்பதை வாங்க இதில பார்க்கலாம் .
முள்ளங்கி துவையல் செய்வது எப்படி ..?
அடுப்பில கடாயா வைத்து ,அதில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .எண்ணெய் சூடானதும் ,ஒன்றரை மேசை கரண்டி அளவு மல்லி ,எட்டு வறு மிளகாய் ,இரண்டையும் சேர்த்து நன்றாக வறுத்து வாங்க.
தமிழ் சமையல்
அதன் பின்னர் சீரகம் சேர்த்து வறுத்துட்டு .
இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்க .
அப்புறம் அதே கடாயில் மூன்று கரண்டி எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் .300 கிராம் வெட்டிய முள்ளங்கியை வெட்டி நன்றாக வதக்கி வாங்க .
முள்ளங்கி கலர் மாறி வந்ததும் ,ஆறு பல் பூண்டு ,பொடியாக வெங்காயம் வெட்டி சேர்த்திடுங்க .
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் ,கருவேப்பிலை ,புளி சேர்த்திடுங்க .புளியை சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
இப்போ இது கூட தேவையான உப்பு சேர்த்து வதக்கி வாங்க ,வதங்கிய பின்னர் அடுப்பை நிப்பாட்டிடுங்க .
மல்லி மற்றும் ,முள்ளங்கி எல்லாத்தையும் ,மிக்சியில் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்திடுங்க .
இப்போ அருமையான முள்ளங்கி துவையல் ரெடியாகிடிச்சு .இதனை இட்லி தோசை சாதம் கூட சாப்பிட செமையாக இருக்கும் மக்களே .
வீட்டில் செஞ்சு அசத்துங்க .
பூரி கூட இந்த மசாலா கிரேவி செஞ்சா 3 கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க
பூரி கூட இந்த மசாலா கிரேவி செஞ்சா 3 கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க
வீட்டில பூரி கூட இந்த மசாலா கிரேவி செஞ்சா, இன்னும் இரண்டு கூட கேட்டு
வாங்கி சாப்பிடுவாங்க .
அனைவருக்கு பிடித்த உணவுகளில் ஒன்று பூரிங்க ,இந்த பூரி சுவையோட சாப்பிட கிரேவி முக்கியமானதாகும் .
தமிழ் சமையல்
பூரிக்கு ஏற்ப கிரேவி கிடைத்தால் செமையாக சாப்பிடலாம் .அவ்வளவு சுவையாக இருக்கும் ,
சாப்பிட சப்பிட்டு கொண்டே இருக்கும் அளவுக்கு கிரேவி சுவை இருக்கும் .
அப்படி பட்ட மொறு மொறு பூரிக்கு ஏற்ப, கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க .
பூரிக்கு ஏற்ப கிரேவியும் ,பூரியும் சேர்த்து சாபபிடலாம் வாங்க .
பூரி கிரேவி செய்முறை ஒன்று
அரை கிலோ வெள்ளை கொண்ட கடலை ,அதனை எட்டு மணித்தியாலம்
ஊற வைத்து நன்றாக தண்ணியில வேக வைத்து எடுத்திடுங்க .
வெந்த கொண்ட கடலை ,இரண்டு கரண்டி எடுத்து, பிறிதான தட்டில வைத்து ,
நன்றாக கரண்டியால் மா போல நசித்து கொள்ளுங்க .
பூரி கூட இந்த மசாலா கிரேவி செஞ்சா 3 கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க
வெந்த கொண்ட கடலை தன்ணியை ஒரு கிளாஸ் எடுத்து வைத்திருங்க .அந்த தண்ணியை சட்னிக்கு பயன்படுத்த தேவையான ஒன்று
.இந்த கடலை தண்ணியில் சத்து சுவை இருக்கும் .
இப்போ அடுப்பில கடாயா வைத்து மூன்று கரண்டி எண்ணெய் ஊற்றிடுங்க .நன்றாக சூடானதும் ,அரை கரண்டி சோம்பு ,நன்றாக பொடியாக வெட்டிய இரண்டு வெங்காயம் ,
இது கூட நனறாக சேர்த்து இரண்டு நிமிடம் விடாது வதக்கி வாங்க .
வெங்காயம் வதங்கிய பின்னர் ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்திடுங்க
இந்த பூண்டு பச்சை வாசம் போன பின்னர் ,அரைத்த தக்காளி ஒன்று சேர்த்திடுங்க .அப்படியே அதனை வதக்கி வாங்க. வதங்கிய பின்னர் ,உப்பு ,மஞ்சள் ,இரண்டு கரண்டி மிளகாய்த்தூள் ,அரை கரண்டி சீராக தூள்,
மல்லி தூள் , எல்லாம் போட்டு நன்றாக வதக்கி வாங்க .
மசாலா நன்றாக வதங்கிய பின்னர் ,வேக வைத்து எடுத்து வைத்த
கொண்ட கடலையை இதில போட்டு நன்றாக வதக்கி வாங்க .
அதன் பின்னர் மசித்து வைத்த கொண்ட கடலை மற்றும் ,
அந்த தண்ணியையும் சேர்த்து வதக்கிட்டு மூடி போட்டு மூடி வையுங்க .
மசாலா செய் முறை இரண்டு
மிக்சியில் தேங்காய் துருவல் ,8 முந்திரி பருப்பு ,சோம்பு ,பட்டை ,ஒரு அன்னாசி பூ ,
மூன்று கராம்பு ,ஒரு ஏலக்காய் ,தேவையான தண்ணி ,எல்லாத்தையும் போட்டு
இதில நன்றாக மாவு போல அரைத்திடுங்க .
இப்போ அரைத்த விழுதை ,கொதிக்கிற கிரேவியில் ஊற்றி ,நன்றாக கலந்து கொள்ளுங்க .
கரம் மசாலா ,கொத்தமல்லி இலையை போட்டு கலக்கிய பின்னர் ,மெல்லிய நெருப்பில 10
நிமிடம் கிரேவியை கொதிக்க வைத்திடுங்க .இப்போ கிரேவி ரெடியாடிச்சு .
இபோபோ பூரி தயாரிப்பு
இப்போ இந்த கிரேவிக்கு பூரி தயாரிக்கலாம் .,மீளவும் அடுப்பில ஒரு கடயா வைத்து ,தேவையான
எண்ணெய் விட்டு ,பிசைந்து வைத்த பூரி மாவை எடுத்து தட்டி பொரித்து சுட்டு எடுங்க
பூரி நன்றாக் பொங்கி வரும் அளவுக்கு பொரித்து எடுங்க .இந்த பூரி கூட கிரேவி சேர்த்து சாப்பிடலாம் .
வாயூறூம் பூரி கிரேவி ரெடியாகிடிச்சு .இது போல மக்களே நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்க .
செமையான சூப்பரான பூரி கிரேவி ரெடியாடிச்சு .வாங்க எல்லோரும் சாப்பிடலாம் .
சுவையான இட்லி சாதத்தில் செய்து அசத்துங்க ரெம்ப வாங்கி சாப்பிடுவாங்க
சுவையான இட்லி சாதத்தில் செய்து அசத்துங்க ரெம்ப வாங்கி சாப்பிடுவாங்க
சுவையான இட்லி மிஞ்சிய சாதத்தில் வீட்டில் எவ்வாறு செய்து கொள்வது என்பதை இதில் பார்க்கலாம் .
சாதத்தில் சமையல் செய்திடும் இட்லி மிக மெருதுவாக இருக்கும் .அவ்வாறான இட்லியை கேட்டு வாங்கி ரெம்பவே பிள்ளைகள் சாப்பிடுவாங்க .
வாங்க இப்போ மிஞ்சிய சோறில் எவ்வாறு இட்லி செய்து கொள்வது என்பதை ,இந்த செய்முறை விளக்கத்தில் பார்க்கலாம் ,
தமிழ் சமையல்
சுவையான இட்லி சாதத்தில் செய்வது எப்படி செய்முறை விளக்கம் .
இரண்டு கப் அளவு சாதம் எடுத்து ,அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து , மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்க .
அதன் பின்னர் அரைத்த சாதத்தை அப்படியே எடுத்து வேறு பாத்திரம் ஒன்றில் ஊற்றி வைத்திடுங்க
சுவை தரும் இட்லிக்கு தேவையான பொருட்கள்
இப்பபோ இட்லிக்கு தேவையான ரவையை எடுத்து ,அதனை அடுப்பில கடாய வைத்து சூடாக்கி வறுத்து கொள்ளுங்க .ரவை வாசம் வரும் வரைக்கும் அதனை நன்றாக வறுத்து கொள்ளுங்க .
வறுத்த ரவையை இப்பொழுது அரைத்து வைத்த சாதத்துடன் சேர்த்து ,அது கூட தயிர் ஒரு கப் ,
கூடவே கொஞ்சமா தண்ணீர் சேர்த்து நன்றாக கலவையுடன் சேர்த்து கலக்கி கொள்ளுங்க .
சுவையான இட்லி சாதத்தில் செய்து அசத்துங்க ரெம்ப வாங்கி சாப்பிடுவாங்க
இப்போ இந்த இட்லிக்கு தேவையான உப்பு கலந்து கொள்ளுங்க .உப்பு கலந்த பின்னர் நனறாக கட்டி இல்லாது அடித்து கலக்கி கொள்ளுங்க .
அதன் பின்னர் பத்து நிமிடம், மூடி வைத்து ஊறவைத்து கொள்ளுங்கா
தற்போது இட்டலி சுடும் அளவிற்கு இட்லி மா ரெம்ப பதமாக உள்ளது .பேர்கிங் பவுடர் கலந்து ,அதன் பின்னர் இட்லி தட்டில் இட்டலி மாவை ஊற்றி ,
பத்து நிமிடம் நன்றாக வேக வைத்து கொள்ளுங்க .
இப்பொழுது நமக்கு சுட சுட சூப்பரான இட்டலி ரெடியாகிடிச்சு .இந்த சுவையான
சாதத்தில் தயாரான இட்லிக்கு ,கூடவே பச்சை மிளகாய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க .
அசத்தல் சுவையினை உண்ணும் பொழுது காணலாம் .இவ்வளவு தாங்க வேலை
.சீக்கிரமாக மீதமான சாதத்தில் வீட்டில் இட்லி ரெடியாகிடிச்சு .
இதனை போன்று மக்களே நீங்களும் வீட்டில் விரும்பும் நேரம் ,மீதமான சாதத்தில் இட்லி செஞ்சு அசத்துங்க .
உங்க கூடவே சாப்பிட நானும் வருகிறேன் என்னையும் மறந்திடமா கூப்பிடுங்க உறவுகளே .
மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க
மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க
வீட்டில் மீதமான சாததில் 5 நிமிடத்தில் மிக சுவையான, snacks ரெடி பண்ணிக்கலாம் .
பெரியவர்கள் முதல் சிரியவர்களை வரை விரும்பி உண்ணுவாங்க .முதல்ல இதை செஞ்சு பாருங்க .
சாதம் வீட்டில் மிஞ்சிருச்சு என்றால் கவலை வேண்டாம் ,இது போல நீங்களும் செஞ்சு அசத்துங்க .
தமிழ் சமையல்
மிகு இலகுவான அசெய்முறையில் நேரம் மிச்சம் ,சுவையான snacks .
வாங்க இப்போ இந்த snacks செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
வீட்டில் மீதமான சாதத்தில் snacks செய்வது எப்படி .
செய் முறை ஒன்று
வீட்டில மீதமான சாதம் ஒன்றை கப்பில் எடுத்திருங்க .அப்புறம் அதை கையினால் நன்றாக அழுத்தி நசுக்கி வாங்க .
இல்லை என்றால் மிக்சியில் போட்டும் அரைத்து எடுக்கலாம் .
இது கூட மூன்று உருளை கிழங்கு நன்றாக வேகா வைத்து தோல் உரித்து இது கூட சேர்த்திருங்க .
அப்புறம் அதனையும் சேர்த்து சாதம் கூட நன்றாக அழுத்தி பிசைந்து வாங்க .
இப்பொழுது கட்டி இல்லாம நன்றாக மசித்து கொள்ளுங்க .
இது கூட பெரிய வெங்காயம் நறுக்கியது ,கூடவே ஒரு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சேர்த்திடுங்க .
மூன்று கரண்டி அளவு கடலை மாவு ,கொஞ்சமா கருவேப்பிலை ,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ,தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ,கரம் மசலா ,
ஒரு கரண்டி இஞ்சி துருவல் .
இப்போ இவை எல்லாத்தையும் சேர்த்து நனறாக பிசைந்து கலக்கி வாங்க ,ஒன்றுடன் ஒன்று சேருவது போன்ரு நன்றாக கலக்கி வாங்க .
தண்ணி ஏதும் சேர்க்காதீங்க .
இப்போ நன்றாக பிசைந்த பின்னர் எலுமிச்சை சாறு விட்டிருங்க .இப்போ நன்றாக பிசைந்த பின்னர் ,இப்போ பிசைந்த வைத்த பின்னர் ஒரு தட்டிலே வைத்து ,சதுராம அழுத்தி பிடித்திருங்க .
அப்புறம் அதன் மேலும் கீழும் எண்ணெய் விட்டு அழுத்தமாக சதுரமாக எடுத்திருங்க .
இப்போ அவற்றை சின்ன சின்ன சதுரமா வெட்டி கொள்ளுங்க .
இப்போ அடுப்பில காடாய வைத்து எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் சூடானதும் ,அதில் போட்டு நன்றாக பொரித்து எடுத்திருங்க .
இரண்டு பக்கமும் வேகிற மாதிரி புரட்டி புரட்டி வேக வைத்து கொள்ளுங்க .
நன்றாக கோல்டன்ட் பிரவுன் கலர் வர மாதிரி பொரித்து எடுத்திருங்க .
இப்போ மீதமான சாதத்தில் உருவான snacks ரெடியாடிச்சு ,இது கூட தக்காளி சோஸ் சேர்த்து சாப்பிடுங்க செமையாக இருக்கும் .
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அவரை ,இந்த snacks விரும்பி சம்பிடுவாங்க .
வீட்டில் சாதம் மீதமான கவலை வேண்டாம் .இதுபோல செஞ்சு அசத்துங்க மக்களே .
இட்லி தோசை சப்பாத்திக்கு 1 நிமிடத்தில் செய்யகூடிய சூப்பரான சட்னி
இட்லி தோசை சப்பாத்திக்கு 1 நிமிடத்தில் செய்யகூடிய சூப்பரான சட்னி
இட்லி தோசை சப்பாத்திக்கு வீட்டில் , 1 நிமிடத்தில் அருமையாக செய்யகூடிய சூப்பரான சட்னி ,சமையல் செய்து அசத்துங்க .
ஒரு நிமிடத்தில் இட்லி தோசை சப்பாத்திக்கு சட்னியை ..? நம்பவே முடியலையா ..அட உண்மைங்க .
நம்ம சமையல் கலை நிபுணர் செய்து அசத்துறாங்க .வாங்க
வீட்டில இட்லி தோசை சப்பாத்திக்கு, ஈஸியான சட்னி சாப்பிடலாம் .
இந்த சட்னி செய்திட முதல்ல .இரண்டு பெரிய வெங்காயம் வெட்டி ,மிக்சியில் போட்டு கொள்ளுங்க .
இது கூடவே ஒரு கைப்பிடி பூண்டு ,கூடவே புளி சேர்த்திடுங்க .
தமிழ் சமையல்
தேவையான அளவு உப்பு சேர்த்திடுங்க .கூடவே ஐந்து வறு மிளகாய் சேர்த்திடுங்க .உங்க காரத்திற்கு ஏற்ப மாதிரி மிளகாய் கூட சேர்த்திடுங்க .
இப்போ இதனை தண்ணி சேர்க்காம நன்றாக அரைத்து எடுத்திடுங்க .இது கூட மூன்று நல் எண்ணெய் சேர்த்திடுங்க .
எண்ணெய் சேர்த்திட்டு நன்றாக மிக்ஸ் பண்ணி கொள்ளுங்க .இப்போ சட்னி ஒரு நிமிடத்தில் ரெடியாடிச்சு .
இதனை இப்பொழுது இட்லி ,தோசை ,சப்பாத்தி கூட சேர்த்து சாப்பிடுங்க .
செமையாக இருக்கும் .
இந்த தோசை சுடும் பொழுது, அதுக்கு கூட சட்னியாக பாவித்து கொள்ள முடியும் .
அப்புறம் என்ன குஷி தாங்க ஒரு நிமிடத்தில் சட்னி ரெடியாகிச்சு .மிகவும் ஈஸியான செய்முறை சட்னி .
இது போல நீங்களும் வீட்டில் தினமும் செய்து அசத்துங்க .
தரமான அசத்தலான சுவையில் அட்டகாசமான சூப்பர் சட்னி தலை
நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்
நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்
நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்
நண்டு மசாலா கிரேவி நாம வீட்டில் செய்வது எப்படி ..? என்ற உங்கள் கேள்விக்கு இதில் பதில் .நண்டு கிரேவி தோசை சாதம் கூட
சேர்த்து சாப்பிட்டால் சுவையோ செமை தூக்கலாக இருக்கும் .
அவ்வாறான நண்டு கிரேவி செய்வது ,எப்படி என்பதை இதில் பார்க்கலாம் வாங்க
நண்டு கிரேவி செய்வது எப்படி ..?
இந்த நண்டு கிரேவி செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?
வாங்க இப்போ நண்டு கிரேவி செய்முறைக்குள் போகலாம் .
தமிழ் சமையல்
செய்முறை ஒன்று
வீட்டில் சுவையான நண்டு கிரேவி ,சமையல் செய்திட ,அடுப்பில கடாய சூடாக்கி கொள்ளுங்க .
அதில மூன்று மேசை கரண்டி எண்ணெய் சேர்த்திடுங்க .எண்ணெய்
சூடானதும் ஒரு கரண்டி சோம்பு ,ஒருகரண்டி வெந்தயம் ,கூடவே ஒரு கொத்து கருவேப்பிலை நன்றாக சேர்த்து வதக்கி வாங்க .
அப்புறம் இரண்டு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டி கலந்திடுங்க ,கூடவே தேவையான உப்பு ,கொஞ்சம் மஞ்சள் ,சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
வெங்காயம் கொஞ்சம் வதங்கிய பின்னர் ,இரண்டு பச்சைமிளகாய் கீறி சேர்த்திடுங்க .
வெங்காயம் நன்றாக வதங்கி வந்த பின்னர் ,இஞ்சி பூண்டு சேர்த்து ,அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கி வாங்க .பெரிய தக்காளி இரண்டு பொடியாக வெட்டி கலக்கி வாங்க .
அது வதங்கி வருவதற்கு முன்பாக, நம்ம நண்டுக்கு ஏற்ப ,மசாலா தயார் செய்யலாம் .
மிக்சியில் இரண்டு கரண்டி மிளகு ,ஒரு கரண்டி சீரகம் ,வெட்டிய தேங்காய் கொஞ்சம் சேருங்க .இப்போ இவற்றை சேர்த்து நனறாக அரைத்து வாங்க
தேவை பட்டால் தண்ணி கொஞ்சம் சேர்த்து அரைத்து வைத்திடுங்க .
முதல்ல நன்றாக அரைத்தவுடன் ,அப்புறம் தண்ணி சேர்த்து அரைத்திடுங்க நன்றாக இருக்கும் .
இப்போ வதக்கி வரும் பொருளுடன் ,ஒரு கரண்டி மஞ்சள் ,ஒரு கரண்டி மிளகாய் தூள் ,மசாலா தூள் ,தேவையான உப்பு ,சேர்த்து மீளவும் நனறாக வதக்கி வாங்க .மசாலா பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி வாங்க .
அதன் பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுகளை சேர்த்திடுங்க .அப்புறம் இந்த மசாலா நன்றாக துண்டுடன் சேரும் வரைக்கும் வதக்கி வாங்க .
மசாலா நன்றாக நண்டுடன் ஒட்டி பிடித்த பின்னர் ,தேவையான தண்ணீர் சேர்த்திடுங்க .நண்டு முழுமையாக வெந்து வரும் அளவுக்கு தண்ணி சேர்த்திடுங்க .
இப்போ மூடி போட்டு மூடி ,நண்டில் எண்ணெய் பிரிந்து வரும் வரைக்கு காத்திருங்க .பத்து நிமிடம் பின்னர்
அரைத்து வைத்த மசாலா கலவையை ஊற்றி ,நனறாக கலக்கி வாங்க .
மறுபடியும் 10 நிமிடம் மூடி போட்டு மூடி நன்றாக வேக வைத்திடுங்க .இப்போ மசாலா பச்சை வாசம் போயிடுச்சு .இப்போ நனறாக சப்பாத்தி ,தோசை ,இட்லி கூட சேர்த்து சாப்பிடுங்க நன்றாக இருக்கும் .
இப்போ நண்டு கிரேவி ரெடியாகிடிச்சு .இதுபோலவே நாளும் செய்து வாங்க ,செமை தூக்கலாக இருக்கும் ,.
சிறியவர்கள் வரை ,பெரியவர்கள் வரை ,அதிகம் விரும்பி சாப்பிடும் கடல் உணவுகளில் ,நண்டு முக்கிய இடம் வகிக்கிறது .
மக்களே நண்டுகறி எப்படிங்க ..? தலைவரே மெது வா சாப்பிடுங்க தொண்டையில் சிக்கிட போகுது
நாவில் எச்சில் ஊறும் கரட் அல்வா ( தொதல்) 10 நிமிடத்தில் ரெடி
நாவில் எச்சில் ஊறும் கரட் அல்வா ( தொதல்) 10 நிமிடத்தில் ரெடி
நாவில் எச்சில் ஊறும் கேரட் அல்வா ( தொதல்) வீட்டில் ஈசியாக செய்திடலாம்.இந்த அல்வா செய்திட 10 நிமிடம் போதுமானது .
அப்படியே கடை சுவையில் இந்த (தொதல் ) அல்வா உள்ளது .
கேரட்டை வைத்து ,எப்படி இலகுவாக இந்த தொதல்
சமையல் செய்வது என்பதை வாங்க பார்க்கலாம் .
அல்வா செய்வது எப்படி .?
இந்த அல்வா செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?
முதல்ல இந்த அல்வா செய்வதற்கு 250 கிராம் காரட் எடுத்து ,தோல் சீவி சிறிதாக வெட்டி கொள்ளுங்க .
இப்போ இந்த கரட்டை மிக்சியில் போட்டு, ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்திடுங்க .அதன் பின்னர் நன்றாக அரைத்து கொள்ளுங்க .
அரைத்த கரட்டை இப்போ வடி வைத்து வடித்து எடுத்திடுங்க .இப்போ கரட் சாறு கிடைச்சிருச்சு .இப்போ அதில அரை கரண்டி சிவப்பு பூட் கலர் சேர்த்திடுங்க .
இப்போ இது கூட அரை கப் சோளம் மா போட்டு கலந்திருங் .இப்போ நன்றாக கலந்திருங்க .
அடுத்து ,அடுப்பில கடாயா வைத்தது ( சட்டி ) ஒரு கப் அளவு சக்கரை ( சீனி ) சேர்த்திடுங்க .
சக்கரை மூழ்கும் அளவு தண்ணி சேர்த்து கொதிக்க வைத்திடுங்க .இப்போ சக்கரையை நன்றாக கலக்கி வாங்க .
இப்போ சக்கரை கொதித்து வந்திருச்சு ,இப்போ இதில ,முதல்ல கரைத்து வைத்த .கரட்டை ஊற்றி கலந்து ,கலக்கி வாங்க .
நன்றாக கெட்டியாக வரும் வரை கலக்கிட்டு இருங்க .நன்றாக அல்வா வரும் வரைக்கும் வதக்கி வாங்க ., இப்போ நெய் கலந்து வாங்க .
நெய் சுவையை அள்ளி தரும்
நாவில் எச்சில் ஊறும் கரட் அல்வா ( தொதல்) 10 நிமிடத்தில் ரெடி
நன்றாக திக்கா வரும் வரை கலந்துட்டு இருங்க .
தட்டு ஒன்று எடுத்திருங்க ,அதில நெய் தடவி ,பொடியாக வெட்டி பாதம் பருப்பு ,கூடவே எள்ளு சேர்த்திடுங்க .
இப்போ அல்வா அந்த மாதிரி கட்டியாக வந்திருச்சு .
வெட்டிய முந்திரி இப்போ சேர்த்திட்டு ,தயரான தட்டில் இதை கொட்டிடுங்க .
மூன்று மணி நேரம் இப்போ இதை ஆற வைத்து பின்னர் ,விரும்பிய அளவு போல வெட்டி கொள்ளுங்க .
வெட்டிய முந்திரி இப்போ சேர்த்திட்டு ,தயரான தட்டில் இதை கொட்டிடுங்க .
மூன்று மணி நேரம் இப்போ இதை ஆற வைத்து பின்னர் ,விரும்பிய அளவு போல வெட்டி கொள்ளுங்க .
அதன் பின்னர் அதனை நீங்க பிள்ளைகளுடன் ,உறவினருடன் பரிமாறி சாப்பிடலாம் .
இதுபோல சுவையான அல்வா ( தொதல் ) சமைத்து சாப்பிடுங்க .பார்க்கும் பொழுதே ரெம்ப அழகா இருக்கு .
ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி
ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி
வீட்டில ராகி அப்பம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மக்களே ,சுவையே தனி ,ரெம்ப அட்டகாசமாக இருக்கும் .
இந்த ராகி அப்பம் செய்து கொள்ள தேவையான பொருட்கள் என்ன ..?
ராகி அப்பம் செய்வது எப்படி ..?
ராகி அப்பம் செய்வது எப்படி செய்முறை ஒன்று
மிக்சியில் ஒரு கப் அளவு சாதம் எடுத்து கொள்ளுங்க .அதே கப்பில துருவிய தேங்காய் எடுத்து ,இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்திடுங்க .
தமிழ் சமையல்
அரைத்த பின்னர் இது கூட ராகி மாவு இரண்டு கப் சேர்த்து கொள்ளுங்க .அதே அளவு இரண்டு கப் தண்ணி சேர்த்து நன்றாக கரைத்து பின்னர் அரைத்து எடுங்க .
ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி
இப்போ இதை பாத்திரத்தினுள் போட்டு, ஒரு கரண்டி உப்பு போட்டு இதனை புளிக்க வைத்திடுங்க .
ஒரு இரவு முழுதும் ஊற வைத்து பொங்கி வந்த பின்னர் ,மாவினை நன்றாக மிக்ஸ் பண்ணி கொள்ளுங்க .
செய்முறை இரண்டு அப்பம் சுடுதல்
இப்போ அடுப்பிலா அப்ப கடையா வைத்து சூடாக்கி கொள்ளுங்க ,கடாய் சூடானதும் மாவு அதில ஊற்றி ,ரவுண்டாக சுற்றி வாங்க .அப்பா வடிவில வந்த பின்னர் மூடி போட்டு வேக வைத்திடுங்க .
இப்போ ராகி அப்பம் ரெடியாடிச்சு .
இது கூட சட்னி அல்லது நீங்கள் விரும்பும் குருமா ,முட்டை தொக்குடன் சேர்த்து சாப்பிடலாம் .
மிக இலகுவான முறையில் சுவையான தரமான ராகி அப்பம் ரெடியாடிச்சு மக்களே.
கறிவேப்பிலை கார தொக்கு செஞ்சு பாருங்க இட்லி தோசை சாதம் கூட சாப்பிட்டா சுவையே தனி
கறிவேப்பிலை கார தொக்கு செஞ்சு பாருங்க இட்லி தோசை சாதம் கூட சாப்பிட்டா சுவையே தனி
கறிவேப்பிலை கார தொக்கு வீட்டில் சமைத்து சாப்பிட்டு பாருங்க ,இட்லி தோசை சாதம் கூட சாப்பிட்டா சுவையே தனி அம்புட்டு சுவையை தரவல்லது .
அது மட்டுமல்ல ,உடலுக்கு ரெம்ப ஆரோக்கியமான உணவு கறிவேப்பிலை கார தொக்குங்க .
கறிவேப்பிலையில் தொக்கு செய்வதா ..? எப்படி என்பது தாங்க உங்கள் கேள்வி
தமிழ் சமையல்
ஆமாங்க கறிவேப்பிலையில், தொக்கு சமைப்பது எப்படி, என்பதை இதில் பார்க்க போகிறோம் .
வாங்க கருவேப்பிலை தொக்கு செய்வது, எப்படி என்பதை செய்முறையுடன் பார்க்கலாம் .
கறிவேப்பிலை கார தொக்கு செஞ்சு பாருங்க இட்லி தோசை சாதம் கூட சாப்பிட்டா சுவையே தனி
செய் முறை ஒன்று
அடுப்பில பாத்திரம் வைத்து ,எண்ணெய் விட்டு கொள்ளுங்க .அப்புறம் எண்ணெய் சூடானதும் ,அரை கரண்டி வெந்தயம் போட்டு கொள்ளுங்க .
வெந்தயம் போட்டு பத்து செக்கனுக்கு, இப்படியே வறுத்து வாங்க .அப்புறம் ஒரு கரண்டி கடலை பருப்பு,ஒரு கரண்டு உளுத்தம் பருப்பு ,இரண்டு கரண்டி பச்சை வேர் கடலை ( கச்சான் ) இப்போ இவற்றை சேர்த்து வதக்கி வாங்க .
பருப்பு எல்லாம் கலர் மாறி வரும் வரை வறுத்து வாங்க .
கலர் மாறி வந்ததும் ஒன்றரை கரண்டி மல்லி ,ஒரு கரண்டி சீரகம் .அதையும் ஈர்த்து வதக்கி வாங்க .காரத்திற்கு ஏற்ப கார மிளகாய் ,பெருங்காயம் சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .
இவை நன்றாக வறுபட்டதும் அதை எடுத்திடுங்க ,.இப்போ இரண்டு கப் அளவு கருவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வரை வறுத்து எடுத்திடுங்க .
அப்புறம் அடுப்பை அணைத்திடுங்க .
இப்போ சூடு ஆறியதும் ,மிக்சியில் போட்டு இவற்றை அரைக்கணும் .
.புளியும் கொஞ்சம் கரைத்து வைத்திடுங்க .
இப்பபோ அரைத்த பொருளுடன் இந்த புளியை மிக்சியில் போட்டு கலக்கி வாங்க
அப்புறம் அது கூட அரை கரண்டி மஞ்சள் ,கூடவே தேவையான உப்பு கலந்திருங்க . இப்போ எல்லாத்தையும் சேர்த்து அரைத்து வாங்க .
நன்றாக துவையல் அரைப்பது போன்று அரையுங்க .
அப்புறம் அடுப்பில பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு ,கடுகு ,அரை கரண்டி உளுந்து ,இடிச்சு வைத்த 8 பூண்டு ,எலலத்தையும் நன்றாக வறுத்திடுங்க .
கலர் மாறியதும் ,அரைத்து வைத்த கலவைகளை இதில் போட்டு வதக்கி வாங்க .
இப்போ கருவேப்பிலை தொக்கு வைத்த மாதிரி ரெடியாடிச்சு .ரெம்ப அருமையாக இருக்கு ,இதுபோல நீங்களும் செய்து பாருங்க மக்களே .
காய்கறி வீட்டில் இல்லையா கவலை விடுங்க இட்லி தோசைக்கு ருசியான கிரேவி
காய்கறி வீட்டில் இல்லையா கவலை விடுங்க இட்லி தோசைக்கு ருசியான கிரேவி.
சில வேலைகளில் வீட்டில் காய்கறி இல்லாது போகும் .அவ்வேளை கிரேவி ,குழம்பு இல்லாம சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும் .
அவ்வாறான சந்தர்ப்பங்களில் ,இதோ இப்படி கிரேவி செய்யுங்க .
வாங்க காய்கறி இல்லாத நேரத்தில் ருசியான கிரேவி, எப்படி செய்வதை என்பதை பார்க்கலாம் வாங்க .
தமிழ் சமையல்
செய் முறை ஒன்று
அடுப்பில கடாய வைத்து அரை கரண்டி எண்ணெய் சேர்த்திடுங்க .எண்ணெய் சூடாகி வந்ததும் இந்த பொருட்களை சேர்த்திடுங்க .
ஒரு கரண்டி உளுந்து ,கூடவே இரண்டு கரண்டி கடலை பருப்பு ,ஒரு கரண்டி சீரகம் ,அரை கரண்டி மிளகு ,இரண்டு ஏலக்காய் ,ஒரு கரண்டி எள்ளு ,மூன்று முந்திரி பருப்பு ,ஒரு பட்டை ,கராம்பு ,வெட்டிய தேங்காய் .ஒரு கைப்பிடி கருவேப்பிலை ,சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .
காய்கறி வீட்டில் இல்லையா கவலை விடுங்க இட்லி தோசைக்கு ருசியான கிரேவி
கடலை பருப்பு கலர் மாறி வரும் வரைக்கும், நன்றாக வதக்கி வாங்க .மெல்லிய நெருப்பிலே வைத்து வதக்கி வாங்க .எரிஞ்சிடாம இருக்க இப்படி நெருப்பை குறைத்து வைத்து வறுத்தெடுங்க .
மெல்லிய நெருப்பில் வதக்கினால் சுவையும் தரமானதாக இருக்கும் ..
இப்போ நன்றாக வதங்கிருச்சு .இப்போ வதங்கியதை எடுத்து ஆற வைத்திடுங்க .
நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு அரைத்திடுங்க .
இப்போ இதை தண்ணி சேர்க்காமாக அரைத்திடுங்க .அப்புறம் தண்ணி விட்டு அரைத்திடுங்க .
இப்போ அடுத்து ஒரு கடாயில நல் எண்ணெய் சேர்த்திடுங்க .அப்புறம் ஒரு கரண்டி கடுகு சேர்த்திடுங்க .கடுகு நன்றாக பொரிந்து வரட்டும்
கடுகு நன்றாக பொரிந்த பின்னர் சீரகம் ,அரை கரண்டி வெந்தயம் ,பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்திடுங்க .
இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .தேவையான உப்பு சேர்த்திடுங்க .தீயின் வேகத்தை அடுப்புல குறைத்து நன்றாக வதக்கி வாங்க
இதில் இரண்டு பச்சை மிளகாய் கீறி சேர்த்திடுங்க .
கூடவே ஒரு கொத்து கறிவேப்பிலையும் சேர்த்திடுங்க .சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
இப்போ ஒரு கரண்டி இஞ்சி சேர்த்திடுங்க .இஞ்சி பச்சை வாசம் போகும் வரைக்கும் நன்றாக வாதகிடுங்க .
அப்புறம் அரை கரண்டி மஞ்சள் ,ஒரு கரண்டி மிளகையே தூள் ,ஒரு கரண்டி மல்லி தூள் ,ஒரு கரண்டி கரம் மசாலா ,சேர்த்திடுங்க .கரம் மசாலாவுக்கு பதிலாக சிக்கன் மசலாவும் சேர்க்கலாம் .
இப்போ நன்றாக கரைத்திடுங்க .மசாலா பச்சை வாசம் போன பின்னர் ,ஏற்கனவே அரைத்து வைத்தவற்றை இப்போ இதில் சேர்த்திடுங்க .
தேவையான அளவு தண்ணீர் சேர்த்திடுங்க .இது கூடவே புளி கரைச்சு சேர்த்திடுங்க .இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக கரைத்திடுங்க .
இப்போ இரண்டு சைஸ் வெல்லம் சேர்த்திடுங்க .
இப்போ இதில தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வாங்க .இப்போ மூடி போட்டு முடிங்க .
எண்ணெய் பிரிந்து வரும் வரைக்கும் வேக வைத்திடுங்க .இடையில மூடி திறந்து பார்த்து மிக்ஸ் பண்ணிடுங்க .
இடை இடையில் திறந்து பார்த்து கலக்கிடுங்க .இல்லை என்றால் அடி பிடிச்சிடும் .இப்படி காய்கறி இல்லாத கிரேவி ரெடியாச்சு .
இந்த கிரேவி தோசை ,இட்லி கூட சேர்த்து சாப்பிட ரெம்ப சுவையாக இருக்கும் .
வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில இப்படி ஒரு கிரேவி சாப்பிட்டு மகிழுங்க.
இப்படியும் காய்கறி இல்லாம கிரேவி இ செய்திடலாம் என்பதை பார்த்து நீங்க வியந்து போயிருப்பீங்க .

அது போலவே இந்த சமையல் ,காய் கறி இல்லாத கிரேவி ,குழம்பு உள்ளதுங்க .மனம் திறந்து வாழ்த்து கூறலாமே மக்களே .
சில்லி சிக்கன் கடை சுவையில் சில்லி சிக்கன் 65
சில்லி சிக்கன் கடை சுவையில் சில்லி சிக்கன் 65
சில்லி சிக்கன் கடை சுவையில் சமையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .
இந்த சில்லி சிக்கன் வீட்டில கடை சுவையில் சமையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க நண்பர்களே .
இப்போ இந்த சில்லி சிக்கன் 65 சமையல் செய்வது எப்படி என்பதை பார்ப்போம் .
தமிழ் சமையல்
செய் முறை ஒன்று .
ஒரு கிலோ கோழி இறைச்சியில் இந்த சில்லி சிக்கன் 65.சின்னதா சிக்கன் வெட்டி உப்பு போட்டு ஊறவைத்து கழுவி எடுத்திருங்க .
சிக்கனில் ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,கரம் மசாலா ,அரை கரண்டி மல்லி தூள் ,மூன்று கரண்டி காஸ்மீர் மிளகாய் தூள் .இரண்டு கரண்டி இஞ்சி பூண்டு விழுது .பாதி எலுமிச்சை பழம் சாறு பிழிந்து விட்டிருங்க .தேவையான அளவு உப்பு .
இப்போ இந்த இறைச்சியுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணியிடுங்க .
இறைச்சி கூட ஒன்றுடன் ஒன்று ஓட்டும் படி கலந்திருங்க .
சில்லி சிக்கன் கடை சுவையில் சில்லி சிக்கன் 65
இப்போ இரண்டு முட்டை அடித்து சேர்த்திடுங்க .இப்போ முட்டையை சிக்கன கூட கலந்திருங்க .
அப்புறம் இரண்டு கரண்டி சோளம் பவுடர் சேர்த்திடுங்க .
இப்போ நன்றாக கலந்து கொடுங்க .
தண்ணி இல்லாம திக்காக இருக்கு ,இப்படி தான் நாம செய்யணும் .,
இப்போ குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்திடுங்க .இப்போ ரெடியாகிச்சு.
இப்போ கடாயில என்னை ஊற்றி ,எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ,சிக்கனை போடுங்க .இப்போ பொங்கி வரும் ,நனறாக சிக்கன் பொரிந்ததும் எடுத்திடுங்க .
சிக்கன் நன்றாக பொரிந்து வர கரண்டியால் கலக்கி விடுங்க .
இப்போ சிக்கன் வெந்து நன்றாக சாப்பிடும் பதத்திற்கு ரெடியாச்சு .
இப்போ இந்த சிக்கன் சில்லியை சோறு கூட சேர்த்து சாப்பிட்டா சொல்லவே தேவை இல்லை .இது போல வீட்டில நீங்களும் செய்து அசத்துங்க மக்களே .
இன்று நான் உங்களுக்கு இது சாப்பிட கொடுக்க மாட்டேன் .ஏன் கூறுங்க ,நான் தான் தனிய எல்லாத்தையும் சாப்பிட போகிறேன் தலைவா .
சிக்கன் சில்லியா கொக்கா ,செம மாஸ் .
ஆரஞ்சு பழம் இருந்தா இந்த சுவீட் செய்யலாம் வாங்க புள்ளைங்க அடிக்கடி கேப்பாங்க
ஆரஞ்சு பழம் இருந்தா இந்த சுவீட் செய்யலாம் வாங்க புள்ளைங்க அடிக்கடி கேப்பாங்க
ஆரஞ்சு பழம் இருந்தா இந்த சுவீட் செய்யலாம் வாங்க. வீட்டில புள்ளைங்க அடிக்கடி கேப்பாங்க.அம்புட்டு சுவையாக இருக்கும் இந்த சுவீட் .
கூடவே இது இலகுவான முறையில் செய்திடலாம் ,வாங்க .
இந்த ஆரஞ்சு சுவீட் இப்போ செய்திடலாம் வாங்க
செய் முறை ஒன்று
இந்த ஆராஞ்சு பழத்தை பாதியாக வெட்டிய பின்னர் ,அதன் சாறை பிழிந்த எடுத்திருங்க .ஆரஞ்சு சாறு எடுத்ததும் ,அதை வடியில் வைத்து வடித்து எடுத்திடுங்க .
தமிழ் சமையல்
அதன் பின்னர் .அடுப்பில கடாயை( சட்டி ) வைத்திருங்க, அதில அரை கப் அளவுக்கு சக்கரை ( சீனி ) சேர்த்திடுங்க .
சோளம் மா சேர்த்திடுங்க ,அது கூட அந்த மாவிலை போட்டு கொஞ்சம் கொஞசகமாக கரைத்திடுங்க .
இப்போ மெல்லிய நெருப்பிலே அடுப்பை வைத்து ,சக்கரை நன்றாக கரையும் படி கலக்கி வாங்க .அடிபிடிக்காம அப்படியே கலக்கிய வண்ணம் இருங்க .
பூட் கலர் ஆரஞ்சு சேர்த்திருங்க . சேர்த்திட்டு அப்படியே கலக்கி வாங்க .
ஒரு கரண்டி வெண்ணெய் சேர்த்திடுங்க .அப்படியே ரெம்ப நன்றாக கெட்டியாக கிண்டிய வண்ணம் இருங்க.
நனறாக கெட்டியாக வந்த பின்னர் .
ஒரு பிளேட் எடுத்து அதில பட்டர் ஸீட் போட்டு ,அதன் மேல் இந்த சுவிட்டை கொட்டிருங்க .
அப்படியே ,அதை மட்ட படுத்திடுங்க .
வெளியில் வைத்து சூடு ஆறியதும் .அப்புறம் குளிர் சாதன பெட்டியில் ஒரு மணிநேரம் வைத்து எடுத்திடுங்க .
அப்புறம் பட்டர் ஸீட் எடுத்திட்டு, கத்தி கொண்டு சிறிது துண்டாக வெட்டி வாங்க .அப்புறம் சக்கரையில இந்த சுவிட்டை சக்கரையில் வைத்து தோய்த்து எடுத்திடுங்க .அப்புறம் சாப்பிட நன்றாக இருக்கும் .
இவ்வாறு இலகுவான முறையில் நாங்களும் செய்து அசத்தலாம் வாங்க .
இந்த சுவீட் சிறுவர்கள் அடிபட்டு ரெம்பவே ,வாங்கி சாப்பிடுவாங்க மக்களே .
செஞ்சு அசத்துங்க .
இப்படி தொதல் செய்து பாருங்க வாயில் வைத்ததும் கரையும்
இப்படி தொதல் செய்து பாருங்க வாயில் வைத்ததும் கரையும்
இப்படி தொதல் செய்து பாருங்க , வாயில் வைத்ததும் கரையும் .
செம சுவையாக இருக்கும் .
இந்த தொதல் உலக நாடுகளிலும் அதிகம் விற்பனையாகிறது .இந்த தொதலை கண்டு பிடித்தவர்கள் தமிழர்கள் தாங்க .
ஆனால் அதிகமான நாட்டு மக்கள், இந்த தொதல் விரும்பி சாப்பிடுறாங்க .
தொதல் செய்வது எப்படி ..?
இந்த தொதல் செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?
வாங்க தொதல் செய்வது எப்படி என்பதை இந்த பக்கத்தில் பார்க்கலாம் .
தமிழ் சமையல்
செய்முறை ஒன்று
சுவையான இந்த தொதல் செய்திட அரைகிலோ மஞ்சள் வாழைப்பழம் எடுத்திடுங்க .
அரைக்கிலோ வாழைப்பழத்தை நன்றாக மிக்சியில போட்டு அரைத்திடுங்க .
250 கிராம் வெள்ளம் ( சக்கரை ) எடுத்திடுங்க .வெள்ளம் கரைவதற்கு கொஞ்சம் தண்ணீர் சேர்த்திடுங்க .
வெள்ளம் கரைத்த பின்னர் சிறிது நேரம் கொதிக்க வைத்து எடுத்திருங்க
அடுப்பில கடையா வைத்து அது சூடாகியதும் ,நான்கு கரண்டி நெய் சேர்த்திடுங்க .இப்போ அரைத்து வைத்துள்ள ,வாழைப்பழ சாறை இதற்குள் ஊற்றிடுங்க .நெய்யில் வாழைப்பழத்தை நன்றாக வதக்கி வாங்க .
கலர் மாறி வரும் வரைக்கும் கெட்டியாக வதக்கி கொள்ளுங்க .
கெட்டியாக வந்த பின்னர் ,அரை கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்திடுங்க .
கரைத்து வைத்துள்ள வெல்லத்தை ,வடிய வைத்து ,இதற்குள் ஊற்றிடுங்க .
இப்போ அடி பிடிக்காம நன்றாக கலக்கிருங்க .
இப்படியே கலக்கி நன்றாக கெட்டியாக வந்த பின்னர் .இரண்டு கரண்டி நெய் சேர்த்திடுங்க .அடி பிடிக்காம நன்றாக கலக்கி வாங்க .
நன்றாக கெட்டியாக வந்த பின்னர், முந்திரி பருப்பு சேர்த்து கலக்கிடுங்க .
நன்றாக கெட்டியாக வரும் வரைக்கும் ,அடி பிடிக்காம கிண்டி கலக்கி வாங்க .
இப்போ அந்த கெட்டியாக உள்ளதை ஒரு தட்டில கொட்டிடுங்க .
நன்றாக சூடு ஆறியதும் ,குளிர் சாதான் பெட்டியில் வைத்து எடுத்திடுங்க .அதன் பின்னர் ,நன்றாக இறுகி வந்ததும், கத்தியால் துண்டு துண்டாக வெடி எடுத்திடுங்க .
அப்புறம் ஒரு டீ கூட சேர்த்து சாப்பிட்டு வாங்க ,செமையாக இருக்கும் .
இது தாங்க தொதல் .இங்கே கொஞ்சம் செய்முறை மாற்றம் பெற்றுள்ளது . ஆனால் மிகவும் இலகுவான முறையில் உள்ளதுங்க .
இது போல நீங்களும் இன்றே வீட்டில் தொதல் செய்து அசத்துங்க மக்களே .




















































