Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சூரியின் மண்டாடி படப்பிடிப்பில் விபத்து ரூ1 கோடி சேதம்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பில் விபத்து ரூ1 கோடி சேதம்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பில் விபத்து ரூ1 கோடி சேதம் ,சூரி நடித்து வரும் ‘மண்டாடி’ படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான படப்பிடிப்பு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் ‘மண்டாடி’. இதன் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் தொண்டி
என்ற பகுதியில் கடலில் முக்கிய காட்சிகளை படமாக்கி வந்தது படக்குழு. அப்போது எதிர்பாராத விதமாக கேமரா இருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 2 பேர் கடலில் மூழ்கினர்.
அவர்களை சுற்றியிருந்தவர்கள் பத்திரமாக மீட்டார்கள். இந்த விபத்தில் எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.
ஆனால், கேமராக்கள் கடல் நீரில் வீழ்ந்ததில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு மட்டும் ரூ.1 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏனென்றால் ரெட் டிஜிட்டல் என்ற உயர்ரக கேமராவில் படத்தை படக்குழுவினர் படமாக்கி வந்திருக்கிறார்கள்.
இந்த விபத்தினால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தாலும், உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்பதால் நிம்மதியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுஹாஸ், மகிமா நம்பியார், அச்யூத் குமார், ரவீந்தா விஜய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் சூரியுடன் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
எல்ரெட் குமார் தயாரித்து வரும் இப்படமே சூரியின் நடிப்பில் உருவாகும் அதிக பொருட்செலவு நிறைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
கை வைத்த ஜோடி கைது
கை வைத்த ஜோடி கைது
கை வைத்த ஜோடி கைது ,கண்டியில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் நகை வாங்குவதாகக் கூறி உள்ளே நுழைந்து உண்மையான நகைகளைத்
திருடியதாகக் கூறப்படும் ஒரு இளம் திருமணமான தம்பதியினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டியில் உள்ள ஒரு நகைக் கடையிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, கண்டி காவல் தலைமையகத்தின் குற்றப்பிரிவு உடனடியாக அந்த
அழைப்பை ஏற்று, அதிகாரிகள் நகைக் கடைக்குச் சென்று, திருடப்பட்ட நகைகளை மறைத்து வைத்திருந்தபோது சந்தேகத்திற்கிடமான தம்பதியினரைக் கைது செய்தனர்.
தலத்துஓயா எதுல்கம பகுதியைச் சேர்ந்த இந்த தம்பதியினர் 20-22 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, கண்டி பகுதியில் உள்ள முக்கிய வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட நகைகளின் ஒரு பங்கு
மீட்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஜோடி வேறு ஏதேனும் நகைக் கடைகளுக்கு சென்றுள்ளதா என்பதைக் கண்டறிய பொலிஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
முன்னாள் அமைச்சர் விமலுக்கு அழைப்பாணை
முன்னாள் அமைச்சர் விமலுக்கு அழைப்பாணை
முன்னாள் அமைச்சர் விமலுக்கு அழைப்பாணை ,முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை தங்காலை பொலிஸ் நிலையத்தில் திங்கள்கிழமை (6) ஆஜராகுமாறு அழைப்பாணைஅனுப்பப்பட்டுள்ளது.
“பெலியத்த சனா” என்று அடையாளம் காணப்பட்ட ஒரு நபரைப் பற்றி அவர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீப்பந்த போராட்டம்
தீப்பந்த போராட்டம்
தீப்பந்த போராட்டம் ,அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு எதிரான தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று (03) இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக வங்கி தனியார் மயப்படுத்தலை நோக்கி செல்லவுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினார்.
இலங்கை மக்களுக்கு அவசர செய்தி
இலங்கை மக்களுக்கு அவசர செய்தி
இலங்கை மக்களுக்கு அவசர செய்தி ,விஷ போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கங்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக காணப்படும்
அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக காணப்படும் ஹெரோயின், ஐஸ், கோக்கேன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான
தகவல்களை, பொதுமக்கள் இந்த இலக்கங்கள் மூலம் நேரடியாக அறிவிக்கலாம்.
சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களின்
இன்று (03) முதல், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களின் கீழ் உள்ள மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும்
பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அத்தகைய தகவல்களை வழங்கலாம் என பொலிஸ் தெரிவித்துள்ளது.
நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம்
நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம்
நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம் ,அரசியலமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்ய வேண்டும் என்று கேட்பதிலே சைக்கிள்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்
கட்சியைத் தவிர நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய போதே சி.வி.கே.சிவஞானம் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் அதீத அக்கறை எடுக்க வேண்டும் என்று சொன்னாலும் அதில் மிக முக்கியமான பணி இந்தியாவுக்கு உண்டு.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஊடாக அந்தப் பொறுப்புக் கூட இந்தியாவுக்கு இருக்கின்றது.
ஆனால், பொதுவாகவே இந்தியத் தரப்பு ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றது. அது என்னவென்றால் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதுதான்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான சந்திப்பின் போது
அண்மையில் கூட இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான சந்திப்பின் போது கூட நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றுதான் அவர் சொல்லியிருக்கின்றார்.
உண்மையில் நாங்கள் ஒருமித்துதான் இருக்கின்றோம். உதாரணத்துக்கு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள்
எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம். பிறகு ஏன் ஒற்றுமையாக வாருங்கள் என்று இந்தியா சொல்கின்றது?
ஆக நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம். அதைவிடுத்து விசுவாமித்திரருக்கு வரம் கொடுத்தது போல் கேட்கத் தேவையில்லை. நாங்கள்
எல்லோரும் ஒன்றாக இருந்தாலும் ஆக அந்தச் சைக்கிள் கட்சியினர்தான் இதற்கு உடன்படவில்லை. அவர்கள் உடன்படாமல் இருக்கட்டும்.
உலகத்தில் எங்கும் எல்லோரும் முழு ஒற்றுமை என்று கிடையாதே. அவர்களை விட்டால் நாங்கள் தமிழரசுக் கட்சி மட்டுமல்லாமல் ஏனைய எல்லாக் கட்சிகளும் ஒருமித்துத்தான் இருக்கின்றன என்றார்
பிறந்த குழந்தை வடிகாணில் வீசப்பட்ட கொடூரம்
பிறந்த குழந்தை வடிகாணில் வீசப்பட்ட கொடூரம்
பிறந்த குழந்தை வடிகாணில் வீசப்பட்ட கொடூரம் ,மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு
கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது.
சிசு, மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிசுவின் பெற்றோர்கள்
சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்
மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனமும் கையளிப்பு
மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனமும் கையளிப்பு
மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனமும் கையளிப்பு ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத
மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர்
வாகனம் திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் நேற்று (03) திருப்பி கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிகளின் உரிமைகள் நீக்குதல் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை திருப்பி கையளிக்குமாறு அறிவிப்பு வந்தது.
பாதுகாப்பு வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது
இந்நிலையில் தற்போது பாதுகாப்பு வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரித்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர், அடுத்த வாரம்,
பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலர், மற்றும் பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்து மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு தேவையான வாகனங்களை
பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை முன்வைப்போம் எனத் தெரிவித்துள்ளார்
மின்னல் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
மின்னல் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
மின்னல் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை ,பலத்த மின்னல் தாக்கம் குறித்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும்,
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல்
ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
இன்று (04) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் அபாயத்தை குறைக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது
பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு ,மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன
காணி ஒன்றை பண்படுத்தலில் போதே குறித்த வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன
குறித்த தகவல் மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை அடுத்து மானிப்பாய் பொலிஸார் விசேட அதிரடி படையினர் குறித்த காணியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்
கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள்
கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள்
கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள் ,கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு
இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
(02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த டிப்பர் வாகனமும், கிளிநொச்சியில் இருந்து பயணித்த மற்றொரு டிப்பர்
வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மக்களை இறக்குவதற்கு குறித்த பகுதியில் தரித்து நின்ற போது,
டிப்பர் வாகனம் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து
அதனை டிப்பர் வாகனம் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றது.
விபத்தில் டிப்பர் வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பிளாஸ்டிக் போத்தல்கள் பால் போத்தல்கள் குறித்து அதிரடி அறிவிப்பு
பிளாஸ்டிக் போத்தல்கள் பால் போத்தல்கள் குறித்து அதிரடி அறிவிப்பு
பிளாஸ்டிக் போத்தல்கள் பால் போத்தல்கள் குறித்து அதிரடி அறிவிப்பு ,2026 ஏப்ரல் 1ஆம் திகதி முதல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால் குடிக்கும் போத்தல்கள்
நுகர்வோர் விவகார ஆணையம்
அனைத்தும் இலங்கை தரநிலை (SLS) சான்றிதழைக் கொண்டிருப்பதை நுகர்வோர் விவகார ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
அக்டோபர் 1, 2025 வெளியிடப்பட்ட வர்த்தமானியின் படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் SLS
சான்றிதழ் அடையாளத்தைக் காட்டாவிட்டால்
தரநிலைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் மற்றும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் அடையாளத்தைக் காட்டாவிட்டால், அத்தகைய போத்தல்களை உற்பத்தி
செய்தல், இறக்குமதி செய்தல், கொண்டு செல்வது, சேமித்து வைப்பது அல்லது விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.
கைவிடப்பட்டிருந்த ஒருமாத பெண் குழந்தை மீட்பு
கைவிடப்பட்டிருந்த ஒருமாத பெண் குழந்தை மீட்பு
கைவிடப்பட்டிருந்த ஒருமாத பெண் குழந்தை மீட்பு ,இப்லோகம, கொன்வேவா பகுதியில் தனது தாயாரால் கைவிடப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஒரு பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார அதிகாரி
ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார அதிகாரி இந்திராணி அனுலாவின் வீட்டின் முன் ஒரு நாற்காலியில் குழந்தை விடப்பட்டிருந்தது.
நவியாழக்கிழமை(02) காலை 6.00 மணியளவில் தனது முன் கதவைத் திறந்தபோது பை அசைவதைக் கண்டதாக அவர் கூறினார்.
அதை அவிழ்த்தபோது, குழந்தை உள்ளே இருப்பதையும், குழந்தை ஒரு மாதத்திற்கு முன்பு பிறந்ததைக் காட்டும் மருத்துவ விளக்கப்படத்தையும் கண்டார்.
குழந்தை நிகவெரட்டிய ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது, அங்கு மருத்துவர்கள் அவள் நல்ல நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். “நான் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஒரு அனுபவம் வாய்ந்த
குடும்ப சுகாதார அதிகாரி
குடும்ப சுகாதார அதிகாரி. குழந்தை எடை குறைவாக இருப்பதை உணர்ந்தேன்.
பால் பாட்டில், உடைகள் மற்றும் பால் பவுடர் பாக்கெட் உட்பட குழந்தையின் அனைத்துத் தேவைகளையும் கண்டுபிடிக்க பையைச் சரிபார்த்தேன்.
இருப்பினும், தாயின் பெயர் மற்றும் பிறந்த இடம் விளக்கப்படத்தில் அழிக்கப்பட்டிருந்தன. பின்னர் நான் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தேன்,
”என்று அவர் கூறினார். தாயாரின் இருப்பிடத்தைக் கண்டறிய, தலைமையக மஹோ காவல்துறை அதிகாரி ஏ.ஏ.பி.ஏ. குலதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில்,
குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக பொறுப்பதிகாரிஐ.பி. அபேக்ஷா மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
பாடசாலைக்கு மதுபோத்தலுடன் வந்த மாணவர்கள்
பாடசாலைக்கு மதுபோத்தலுடன் வந்த மாணவர்கள்
பாடசாலைக்கு மதுபோத்தலுடன் வந்த மாணவர்கள் ,உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாடுவதற்காக அம்பலாங்கொடை பாடசாலைக்கு மது
போத்தலை கொண்டு வந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மீட்டியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காவலில் வைக்கப்பட்ட நான்கு மாணவர்களும் இந்த ஆண்டு சாதாரண தர தேர்வு எழுதவிருந்தவர்கள்.
நேற்று முன்தினம் (1) மதியம் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் நான்கு மாணவர்களும் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக சிறுவர்கள் தினத்தன்று நேற்று முன்தினம் (1) பாடசாலைக்கு மது போத்தலைலை கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மது கொண்டு வந்ததாக பாடசாலையிலிருந்து கிடைத்த தகவலின்படி, அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு விசாரணையின்
போது, ஹிக்கடுவையில் உள்ள ஒரு மதுபானக் கடையில் இருந்து மது வாங்கி தண்ணீர் போத்தலில் ஊத்திக்கொண்டு தெரியவந்தது.
கச்சத்தீவை மீட்கணும் ஸ்டாலின்
கச்சத்தீவை மீட்கணும் ஸ்டாலின்
கச்சத்தீவை மீட்கணும் ஸ்டாலின் ,இலங்கை படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை.
மத்திய அரசுக்கு தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே ஏன் கசக்கிறது.
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி ,பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 45 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு
உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் பக்கமுன பிராந்திய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று
வருவதுடன் சிலர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி
குறித்த பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவனுக்கு மூளையில் பாதிப்பு
நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவனுக்கு மூளையில் பாதிப்பு
நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவனுக்கு மூளையில் பாதிப்பு ,கொழும்பில் உள்ள நீச்சல் கிளப்பின் நீச்சல் குளத்தில் விழுந்த தனது எட்டு வயது மகனுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக குறித்த சிறுவனின் தந்தை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
பிறந்தநாள் விழாவிற்காக அங்கு சென்றிருந்த சிறுவன், நீச்சல் குளத்தில் விழுந்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தின் போது குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
தொட்டலங்க பொட்டி அக்காவின் 3 கட்டடங்கள் முடக்கம்
தொட்டலங்க பொட்டி அக்காவின் 3 கட்டடங்கள் முடக்கம்
தொட்டலங்க பொட்டி அக்காவின் 3 கட்டடங்கள் முடக்கம் தொட்டலங்க பொட்டி அக்கா’ எனப்படும் விந்தனி பிரியதர்ஷிகாவுக்கு சொந்தமான கிரேண்ட்பாஸ் பர்குயூஷன் பகுதியிலுள்ள 03 கட்டடங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டடங்கள் போதைப்பொருள் கடத்தலின் மூலம்
இந்த கட்டடங்கள் போதைப்பொருள் கடத்தலின் மூலம் பணம் ஈட்டியதாகக் கூறி, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் மாஅதிபர் நடத்திய விசாரணையை தொடர்ந்து குறித்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாள்
மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாள்
மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாள் மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் வியாழக்கிழமை (02) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின்
யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா
காந்தியின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் மு.தனுஜா, யாழ்ப்பாண மாவட்ட
செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன்,யாழ் மாநகர ஆணையாளர்
கிருஷ்ணசந்திரன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள்
கிருஷ்ணசந்திரன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள்,இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இதே வேளை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் துவிச்சக்கர வண்டி பவனியொன்றும் மேற்கொள்ளப்பட்டது.
குழந்தை மீட்பு17 வயதுடைய பெற்றோருக்கு விளக்கமறியல்
குழந்தை மீட்பு17 வயதுடைய பெற்றோருக்கு விளக்கமறியல்
குழந்தை மீட்பு17 வயதுடைய பெற்றோருக்கு விளக்கமறியல் ,ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தையின் தாய்- தந்தை
அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம்
இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு புதன்கிழமை (1) அன்று அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குழந்தையை பிரசவித்து அதனை அநாதரவாக கைவிட்டமை தொடர்பில்
கைது செய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.
மேலும் 17 வயதுடைய குறித்த பெற்றோர்கள் திருமணத்துக்கு அப்பாலான உறவின் மூலம் மீட்கப்பட்ட பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) அன்றுபெற்றெடுத்திருந்தனர்.
இந்தப் பின்னணியில் குழந்தையின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரை கைது செய்த பொலிஸார் அவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில்
ஆஜர் படுத்திய போது இருவரையும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது குறித்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விளக்க மறியலில் வைக்குமாறு
உத்தரவிடப்பட்ட குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்தி பின்னணி
கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) அன்றுமீட்கப்பட்டிருந்தது.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்டு வந்த அக்கரைப்பற்று பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை (30) ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த
குழந்தையின் தந்தை மற்றும் நிந்தவூரை பிரதேசத்தை சேர்ந்த தாய் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
அத்துடன் காதலித்து வந்த தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும்17 வயதுடையவர்கள் எனவும் அவர்களுக்கு திருமணமாகாத நிலையில் குறித்த குழந்தை பிறந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் குழந்தையின் தந்தையின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார்.
இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை காதலியின் வீடு சென்று எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள் என்று பெற்றுக்
கொண்டு வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதையடுத்து குழந்தையின் தந்தை அவரது உறவுக்கார பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளார். உங்களுக்கும் பெண்
குழந்தை இல்லை. எனவே இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு அவ்வுறவுக்கார பெண்ணும் சம்மதித்துள்ளார்.
இந்த நிலையில் குழந்தையின் தொப்புள்கொடி உரிய முறையில் வெட்டப் படாமை காரணமாக அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததை அடுத்து
அருகில் உள்ள ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்தே குழந்தையொன்று ஒலுவில் அண்டிய பகுதியில் நபரொருவர் கண்டெடுக்கப்பட்டதாக கதை பரவியது.
இந்தப் பின்னணியில்தான் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







































