Posted in இலங்கை செய்திகள்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கடமைகளைப் பொறுப்பேற்றார்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கடமைகளைப் பொறுப்பேற்றார்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும்

சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் இன்று (14) காலை கடமைகளை பொறுப்பேற்றார்.

கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அங்கு உரையாற்றறிய இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், தோட்ட

மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் வேலை செய்யக்கூடிய நல்ல அமைச்சு ஒன்று இன்று எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த அமைச்சின் மூலம் எம் மீது நம்பிக்கை வைத்த தோட்ட

மக்களுக்கும் அனைத்து இன மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தினை உருவாக்குவேன் என தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த சந்தர்ப்பத்தில் என் மீது நம்பிக்கை வைத்து எனது தந்தையின்

அமைச்சினை எனக்கு வழங்கியதற்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இந்த அமைச்சின் மூலமாக மலையக மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் சிறந்த ஒரு

சேவையினை முன்னெடுப்பேன். இந்த நேரத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன்,

தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள், உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

புலம்பெயர் உறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு

புலம்பெயர் உறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு

நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்கள் தங்களுடைய தாயக பிரதேசங்களில்

முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதற்கான உத்தரவாத்தினை தான் வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று(13.08.2020) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் கடந்த

காலங்களில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திய போதிலும் சரியான வரவேற்புக் கிடைத்திருக்கவில்லை.

இடைத் தரகர்கள் சிலர் தங்களுடைய குறுகிய நலன்களுக்காக புலம்பெயர் முதலீட்டாளர்களை தவறாக பயன்படுத்த முயற்சித்திருந்தனர்.

ஆனால் தற்போது நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்

மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தவறான செயற்பாடுகள் எவற்றையும் அனுமதிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

இந்நிலையில், அற்கான உத்தரவாதத்தினை தன்னால் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புலம்பெயர் முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில், தமிழ் மக்கள்

எதிர்கொள்ளுகின்ற அபிவிருத்தி மற்றும் அன்றாடப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும்

புலம்பெயர் முதலீட்டாளர்கள் தமக்கிருக்கும் தார்மீக கடமையை உணர்ந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் தன்னிடம்

ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில்

மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்தார்.

அமைச்சர் என்ற வகையில் நாடளாவிய ரீதியில் சுமார் 15 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்கள்

தொடர்பான விவகாரங்களில் அவதானம் செலுத்த வேண்டியிருப்பதுடன், நன்னீர் நிலைகளில் நீர் வேளாண்மையை

விருத்தி செய்வது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பாரிய எதிர்பார்ப்புடன் குறித்த அமைச்சினை

வழங்கியுள்ள நிலையில், அவர்களின் நம்பிக்கையையும் மக்களின் எதிர்பார்ப்பினையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோன்று, ஒரு அரசியல்வாதி என்ற வகையில் எதிர்பார்ப்புக்களுடன் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தான்

, தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாடப் பிரச்சினை – அபிவிருத்தி – அரசியல் தீர்வு ஆகிய விடயங்களுக்கும் தீர்வினை

பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, தற்போது நாட்டில் அமைந்துள்ள நிலையான அரசாங்கத்தின் ஊடாக, பொருத்தமான சூழலை உருவாக்குதல்

மற்றும் உருவாகின்ற சூழலை பயன்படுத்துதல் என்ற தன்னுடைய நீண்ட நாள் கோட்பாட்டின் அடிப்படையிலுல் தென்னிலங்கை

கட்சிகளுடன் கட்டியெழுப்பியுள்ள தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவும் தன்னிடம் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள்

அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

மீன்பிடியில் ஈடுபட்ட 27 நபர்கள் கைது.

மீன்பிடியில் ஈடுபட்ட 27 நபர்கள் கைது.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கடந்த இரண்டு வாரங்களில் சேருநுவர, பூனாடி, முல்லைதீவு, கொக்குத்துடுவாய்

மற்றும் திருகோணமலை போல்டர்பாயிண்ட் ஆகிய கடல் பகுதிகளில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகளின் போது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 நபர்கள் மீன்பிடி சாதனங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக கடல் சுற்றுச்சூழல் மற்றும் அதன் பல்லுயிர் பாதிப்பு ஏற்படுவதைத்

தடுக்க கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் படி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சேருநுவர, பூனாடி, முல்லைதீவு, கொக்குத்துடுவாய் மற்றும்

திருகோணமலை போல்டர்பாயிண்ட் ஆகிய கடல் பகுதிகளில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோத

மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட வலைத்தோட்டம், பூனாடி, கோகிலாய், நிர்கொழும்பு, வவுனியா

மற்றும் பொடுவக்கட்டு பகுதிகளைச் சேர்ந்த 27 நபர்கள், 05 டிங்கிகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்பிடி உபகரணங்களுடன்

திருகோணமலை மற்றும் முல்லைதீவு மீன்வள உதவி இயக்குநர்களிடமும் குச்சவேலி மீன்வள ஆய்வாளரிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

புதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்

புதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்

புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 25க்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு.

Capture Ministry Se

Capture Securatary

01.திரு.டப்ளியு.எம்.டீ.ஜே.பெர்ணான்டோ

அமைச்சரவைச் செயலாளர்

  1. திரு.ஆர்.டப்ளியு.ஆர்.பேமசிரி

நெடுஞ்சாலைகள் அமைச்சு

  1. திரு.எஸ்.ஆர். ஆடிகல

நிதி அமைச்சு

  1. திரு.ஜே.ஜே.ரத்னசிறி

அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

  1. திரு.ஜகத் பீ. விஜேவீர

வெகுசன ஊடக அமைச்சு

  1. திரு. ரவீந்திர ஹேவாவிதாரன

பெருந்தோட்டத்துறை அமைச்சு

  1. திரு. டீ.எம். அனுர திசாநாயக்க

நீர்ப்பாசன அமைச்சு

  1. திரு. டப்ளியு..ஏ சூலாநந்த பெரேரா

கைத்தொழில் அமைச்சு

  1. திருமதி. வஸந்தா பெரேரா

மின்சக்தி அமைச்சு

  1. திரு. எஸ்.ஹெட்டியாரச்சி

சுற்றுலா அமைச்சு

  1. திரு.ஆர்.ஏ.ஏ.கே. ரணவக

காணி அமைச்சு

  1. திரு. எம்.பீ.டீ.யு.கே. மாபா பதிரன

தொழில் அமைச்சு

  1. திருமதி. ஆர்.எம்.ஐ. ரத்னாயக்க

கடற்றொழில் அமைச்சு

14.மேஜர் ஜெனரால் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன

பாதுகாப்பு அமைச்சு

  1. திரு. எம்.கே.பீ. ஹரிஷ்சந்திர

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு

  1. திரு. என்.பீ.மொன்டி ரணதுங்க

போக்குவரத்து அமைச்சு

  1. கலாநிதி பிரியத் பந்து விக்ரம

நீர்வழங்கல் அமைச்சு

  1. திருமதி. ஜே.எம்.பீ. ஜயவர்தன

வர்த்தக அமைச்சு

  1. மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்ஹ

சுகாதார அமைச்சு

  1. மேஜர் ஜனரால் (ஓய்வுபெற்ற) ஏ.கே சுமேத பெரேரா

கமத்தொழில் அமைச்சு

  1. திரு. அனுராத விஜேகோன்

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு

  1. திருமதி. கே.டீ.ஆர் ஒல்கா

வலுசக்தி அமைச்சு

  1. அத்மிரால் (ஓய்வுபெற்ற) ஜயநாத் கொழம்பகே

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

  1. வைத்தியர் அனில் ஜாசிங்க

சுற்றாடல் அமைச்சு

  1. பேராசிரியர் கபில பெரேரா

கல்வி அமைச்சு

  1. திரு சிறிநிமல் பெரேரா

நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சு

Posted in இலங்கை செய்திகள்

யாழில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் பெண்கள் கைது

பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் பெண்கள்

இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் அமைந்துள்ள தங்குமிட

விடுதியில் தனித்திருந்து இரு பெண்களை யாழ்ப்பாணம்

பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன்,

கைதுசெய்யப்பட்ட இரு பெண்களும் 20 மற்றும் 25 வயது கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Posted in இலங்கை செய்திகள்

அபிவிருத்தி பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

அபிவிருத்தி பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் மலையக மக்களுக்கான அபிவிருத்தி பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற

உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

யார் எதை கூறினாலும் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு இந்த புதிய அரசாங்கத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள்

பணியை முன்னெடுத்து செல்லும் என்று இராஜாங்க அமைச்சரான ஜீவன் தொண்டமான் கூறினார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து கடந்த 5ஆம் திகதி நடைnhற்ற ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன

பெரமுன கட்சி நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஏற்பட்ட

வெற்றிடத்திற்காக போட்டியிட்டு வெற்றி பெற்ற இளம் வயது மலையக பாராளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமான் நேற்று கண்டி தலதா மாளிகை மகுல்மடுவ மண்டபத்தில்

நடைபெற்ற புதிய அரசாங்க அமைச்சர்கள் பதிவிப்பிரமாண நிகழ்வில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு

வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, மலையகத்தில் இவருக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு மற்றும் பாராட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனம் அமைந்துள்ள சீ.எல்.எப்க்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு உரையாற்றுகையில், இலங்கை

தொழிலாளர் காங்கிரஸை யார் விமர்சித்தாலும், எடுத்தெறிந்து பேசினாலும் மக்களின் சேவையை இன்னும் பத்து வருடங்களுக்கு இந்த புதிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுப்பதில்

பின்வாங்கப்போவதில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட காலங்களில் 40 நாட்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்த மலையக மக்களுக்கு நன்றி சொல்ல

கடமைப்பட்டுள்ளேன். இவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என ஒரு புறத்தில் விமர்சிப்பும், மறுபுத்தில் எதிர்பார்ப்பும் உள்ள

நிலையில் சிறப்பான அபிவிருத்திகளை இங்கு முன்னெடுக்க நான் தயாராக உள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

வேட்பாளர்கள் பாராளுமன்றம் செல்வதற்கு முன்னர் சொத்துக்கள், பொறுப்பீடுகளை அறிவிக்க வலியுறுத்தல்

வேட்பாளர்கள் பாராளுமன்றம் செல்வதற்கு முன்னர் சொத்துக்கள், பொறுப்பீடுகளை அறிவிக்க வலியுறுத்தல்

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு

முன்னர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு அமர்வதற்கு அல்லது பாராளுமன்றத்துக்கு வாக்களிப்பதற்கு முன்னர், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஊடாக தமது

சொத்துக்கள் மற்றும் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கவேண்டும்.

இதேபோன்று தேர்தல் பெறுபேறு மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவித்த பின்னர் ஓரு மாத

காலத்திற்குள் தெரிவுசெய்யப்படாத அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை வழங்கத்தவறும் வேட்பாளர்கள் குறித்து இலஞ்சம் மற்றும்

மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

வலஸ்முல்ல பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத

ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கல்ல பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த

தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்று, டி கடஸ் வகை

துப்பாக்கி ஒன்று, தோட்டாக்கள் 11 உட்பட மேலுமட் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பின் போது 61 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மத்திய, மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை

பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்

பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது

அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
மன்னாரிலிருந்து புத்தளம் வரையான கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்

வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது

கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்

Posted in இலங்கை செய்திகள்

நோய்களை தடுப்பதற்கு தாதியர்களுக்கு பயிற்சி

நோய்களை தடுப்பதற்கு தாதியர்களுக்கு பயிற்சி

தொற்றா நோய்களை தடுப்பது தொடர்பான தெளிவூட்டல்களை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் தாதியர்களுக்கு பயிற்சி கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.

இதனை சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணிமனை ஏற்பாடு செய்துள்ளதாக தொற்றா நோய் தடுப்புப் பிரிவின்

பணிப்பாளர் டொக்டர் விந்தியா குமாரபேலி தெரிவித்தார். இக் கருத்தரங்கானது

தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளைச் சேர்ந்த தாதியர்களுக்காக நடத்தப்படுகின்றது.

இதன் பிரகாரம் தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டுபிடிப்பது, அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை

எடுப்பது, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் பற்றி அறிவூட்டுவது,

தரவுகளை திரட்டுவது போன்றவைபற்றி தாதி உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது.

முதற்தொகுதிக்கான பயிற்சிகள் மொறட்டுவ சர்வோதய வள நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் டொக்டர் விந்தியா குமாரபேலி தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் 23 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று

இந்தியாவில் 23 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,963 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 834 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24

மணி நேரத்தில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,68,675-ல் இருந்து 23,29,638 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 56,110 குணமடைந்துள்ளதால் இதுவரை 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர். இது 70.38 சதவீதமாகும். 834

பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 46,091 ஆக உயர்ந்துள்ளது. இது 1.98 சதவீதமாகும்.

தற்போது 6,43,948 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது 27.64 சதவீதமாகும். நேற்று மட்டும் 7,33,449 பரிசோதனைகள்

மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை 2,60,15,297 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

புதிய அரசாங்கத்தில் முன்னர் எப்போதும் பதவி வகிக்காத 3 அமைச்சர்களும் 11 இராஜாங்க அமைச்சர்களும்

புதிய அரசாங்கத்தில் முன்னர் எப்போதும் பதவி வகிக்காத 3 அமைச்சர்களும் 11 இராஜாங்க அமைச்சர்களும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான புதிய அரசாங்கத்தின்

அமைச்சர்கள் 26 பேரும் இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரும் இன்று கண்டி தலதாமாளிகை மகுல்மடுவவில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த வைபவம் இன்று காலை 9.00 மணியளவில் மத வழிபாடுகளுடன் ஆரம்பமானது. இதன்போது முதலாவதாக மாவட்ட இணைப்புக்குழுக்களின் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்த

பட்டியலில் 11 இராஜாங்க அமைச்சர்களும் 3 அமைச்சர்களும் இதற்கு முன்னர் எந்தவித அமைச்சு பொறுப்புக்களையும் வகிக்கவில்லை என்பது விசேட அம்சமாகும்.

பதவிப் பிரமாணங்களுக்கு பின்னர் பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவை தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டது.

Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி

கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி

கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஒன்பதாவது பாராளுமன்ற இலங்கை வாழ் மக்களுக்கும் பெரும் செய்தியை சொல்லியுள்ளது

அது மட்டுமல்லாமல் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வரும் அரசியல் கட்சிகளும் இந்த விடயம் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.

,நாம் என்ன செய்தாலும் மக்கள் தொடர்ந்து தம்மை ஏற்று கொள்வார்கள் என்ற நிலையை இந்த தேர்தல் மாற்றி அமைத்துள்ளது.

பத்து ஆசனங்களுடன் சுருங்கி கொண்ட கூட்டமைப்பு

பத்து ஆசனங்களுடன் சுருங்கி கொண்ட கூட்டமைப்பு தற்பொழுது தமக்கு தேவை இல்லை என மகிந்தா அணியினர் தெரிவித்துள்ளனர்

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு அல்லாதாவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்


இதனால் அவர்களை வைத்து தமது ஆ ட்டத்தை ஆட்டுவிக்க மகிந்த அரசு தயாராகி வருகிறது

கோட்டாபாயவின் புதிய திட்ட நகர்வுகளுக்கு ஏற்ப கூட்டமைப்பு உடைந்து காணாமல் போகும் நிலையை அது தோற்றுவித்துள்ளது

இந்த உடைவை ஏற்படுத்திய பெரும் சாதனை சுமந்திரன் ,சம்பந்தரை சாரும்

மயிரிழையில் தப்பித்த சம்பந்தர்

190 வாக்குகளுடன் மயிரிழையில் தப்பித்த சம்பந்தர் இபோது தான் சூப்பர் கீரோ போல பேசி வருகிறார் ,அடுத்து வரும் பாரளுமன்ற

தேர்தலில் இவர்கள் காணமல் போகும் மாற்று நேர்முக அரசியல் தமிழர் அரசியல் தளத்தில் உருவக போகிறது ,அதற்கான விதை இப்பொழுது தூவி விடப்பட்டுள்ளது

மாநகராட்சி தேர்தலில் இவர்கள் பலம் மீள நிர்ணயிக்க படும் என்பதை பறை சாற்றும் எனலாம்
கூட்டமைப்பு தனக்கு தானே புதைகுழி வெட்டி காத்துள்ளது

நோக்கர்கள் ,மக்கள் கருத்துக்களை உணர்வுகளை மதிக்க மறுத்து சுமந்திரன் போன்றவர்கள் சிங்கள அரசை காப்பாற்றும் நகர்வில் ஈடுபட்ட நிலையில் இந்த விடயங்கள் அரங்கேறியுள்ளது

மக்கள் தகுந்த படிப்பினையை கூத்தமைப்புக்கு வழங்கியுள்ளனர்

புலிகளும் இல்லை புலிகள் உருவாக்கிய கட்சியும் இல்லை என்ற நிலையே எதிர்காலத்தில் உருவாக போகிறது என்பதை நடந்து முடிந்த தேர்தல் புள்ளி விபரங்கள் கட்டியம் இட்டுள்ளன

      Posted in இலங்கை செய்திகள்

      மீன்பிடித் தொழில்துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

      மீன்பிடித் தொழில்துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

      திரு.டக்ளஸ் தேவானந்தா மீன்பிடி தொழில்துறை அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

      கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் தற்பொழுது நடைபெறும் புதிய

      அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய

      ராஜபக்ஷ முன்னிலையில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமனம்

          யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமனம்

          புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

          கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான

          நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்படுகின்றன.

          யாழ். மாவட்டத்திற்கு அங்கஜன் ராமநாதனும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் வவுனியாவிற்கு

          கே.திலீபனும், வவுனியா மற்றும் முல்லைத்தீவிற்கு கே.காதர் மஸ்தானும், அம்பாறை மாவட்டத்திற்கு வீரசிங்கமும்,

          திருகோணமலை மாவட்டத்திற்கு கபில அத்துகோரலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

          இதற்கமைய ஏனைய மாவட்டங்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக

          கொழும்பு – பிரதீப் உதுகொட

          கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான

          களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன

          கண்டி – வசந்த யாப்பா பண்டார

          மாத்தளை – எஸ். நாமக்க பண்டார

          நுவரெலியா – எஸ். பி. திசாநாயக்க

          காலி – சம்பத் அத்துகோரள

          மாத்தறை – நிபுண ரணவக்க

          ஹம்பாந்தோட்டை – உபுல் கலப்பத்தி

          யாழ்ப்பாணம் – அங்கஜன் இராமநாதன்

          கிளிநொச்சி – டக்ளஸ் தேவாநந்தா

          வவுனியா – கே. திலீபன்

          மன்னார் மற்றும் முல்லைத்தீவு – காதர் மஸ்தான்

          அம்பாறை – டி. வீரசிங்க

          திருகோணமலை – கபில அத்துகோரள

          குருநாகல் – குணபால ரத்னசேகர

          புத்தளம் – அசோக பிரியந்த

          அநுராதபுரம் – எச். நந்தசேன

          பொலன்னறுவை – அமரகீர்த்தி அத்துகோரள

          பதுளை – சுதர்ஷன தெனிபிட்டிய

          மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க

          இரத்தினபுரி – அகில எல்லாவல

          கேகாலை – திருமதி ராஜிகா விக்ரமசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் நியமனம்

          இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமனம்

          இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

          இளம் வயதான அவர் முதல் முறையாக அமைச்சரவை பதவியை ஏற்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

          கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் தற்பொழுது நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின்

          பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              நீதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நியமனம்

              நீதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நியமனம்

              நீதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

              கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் தற்பொழுது நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின்

              பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

              இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

                  உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

                  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

                  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

                  உயர்தர புதிய, பழைய பாடத்திட்ட பரீட்சைகளுக்கான நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான அட்டவணைகளை கல்வித் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தில் பார்ரவையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  குற்றச்செயல் தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட விசேட இலக்கத்திற்கு 1527 முறைப்பாடுகள்

                  குற்றச்செயல் தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட விசேட இலக்கத்திற்கு 1527 முறைப்பாடுகள்

                  குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த 2

                  வார காலப்பகுதியில் 1527 க்கும் 1263 க்கும் இடைப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும் என்று

                  பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சகருமாக ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

                  நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 1997

                  என்ற தெலைபேசி இலக்கத்துக்கு பாரிய அளவிலான திட்டமிட்ட ஊழல் குற்றச்செயல் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் கப்பம்

                  பெறுதல் போன்ற தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய

                  செயற்பாடுகள் குறித்தும் தெரிவிக்க முடியும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.

                  இதேவேளை அங்கொட லொக்கா உயிரிழந்துள்ளாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான மரபணு பரிசோதனைக்கு தேவையான

                  மாதிரி மற்றும் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

                  இலங்கையின் பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான அங்கொட லொக்கா என

                  சந்தேகிக்கப்படுபவரின் மரணம் உடலில் விஷம் பரவியதால் ஏற்பட்டிருக்கக் கூடும் என தமிழக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      மாலைதீவில் இருந்து 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

                      மாலைதீவில் இருந்து 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

                      மாலே விமானநிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின்

                      விடேச விமானத்தின் மூலம் இவர்கள் இன்று நண்பகல் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

                      இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்

                      தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.