புதிய அரசாங்கத்தில் முன்னர் எப்போதும் பதவி வகிக்காத 3 அமைச்சர்களும் 11 இராஜாங்க அமைச்சர்களும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான புதிய அரசாங்கத்தின்
அமைச்சர்கள் 26 பேரும் இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரும் இன்று கண்டி தலதாமாளிகை மகுல்மடுவவில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த வைபவம் இன்று காலை 9.00 மணியளவில் மத வழிபாடுகளுடன் ஆரம்பமானது. இதன்போது முதலாவதாக மாவட்ட இணைப்புக்குழுக்களின் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்த
பட்டியலில் 11 இராஜாங்க அமைச்சர்களும் 3 அமைச்சர்களும் இதற்கு முன்னர் எந்தவித அமைச்சு பொறுப்புக்களையும் வகிக்கவில்லை என்பது விசேட அம்சமாகும்.
பதவிப் பிரமாணங்களுக்கு பின்னர் பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவை தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டது.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது








