நீதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நியமனம்
நீதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் தற்பொழுது நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின்
பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.