நோய்களை தடுப்பதற்கு தாதியர்களுக்கு பயிற்சி

Spread the love

நோய்களை தடுப்பதற்கு தாதியர்களுக்கு பயிற்சி

தொற்றா நோய்களை தடுப்பது தொடர்பான தெளிவூட்டல்களை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் தாதியர்களுக்கு பயிற்சி கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.

இதனை சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணிமனை ஏற்பாடு செய்துள்ளதாக தொற்றா நோய் தடுப்புப் பிரிவின்

பணிப்பாளர் டொக்டர் விந்தியா குமாரபேலி தெரிவித்தார். இக் கருத்தரங்கானது

தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளைச் சேர்ந்த தாதியர்களுக்காக நடத்தப்படுகின்றது.

இதன் பிரகாரம் தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டுபிடிப்பது, அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை

எடுப்பது, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் பற்றி அறிவூட்டுவது,

தரவுகளை திரட்டுவது போன்றவைபற்றி தாதி உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது.

முதற்தொகுதிக்கான பயிற்சிகள் மொறட்டுவ சர்வோதய வள நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் டொக்டர் விந்தியா குமாரபேலி தெரிவித்தார்.

Leave a Reply