இந்தியாவில் 23 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,963 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 834 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24
மணி நேரத்தில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,68,675-ல் இருந்து 23,29,638 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 56,110 குணமடைந்துள்ளதால் இதுவரை 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர். இது 70.38 சதவீதமாகும். 834
பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 46,091 ஆக உயர்ந்துள்ளது. இது 1.98 சதவீதமாகும்.
தற்போது 6,43,948 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது 27.64 சதவீதமாகும். நேற்று மட்டும் 7,33,449 பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை 2,60,15,297 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
- எகிப்து துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் கப்பல் சேதமா

- குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்

- எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை

- ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி

- பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் பலி

- இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்

- குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்

- இன்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

- சாலை அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) மோசடி

- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்







