Posted in இலங்கை செய்திகள்

மத்திய வங்கி 4% தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் சலுகை

மத்திய வங்கி 4% தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் சலுகை

கொவிட் 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட வியாபார நடவடிக்கைகளை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை மத்திய

வங்கி, நான்கு சதவீத உத்தேச மூலதன கடனுக்கான சலுகைக் காலத்தை நீடிக்துள்ளது.

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட தொழில்களை சீரமைக்கும் தேசிய முக்கியத்துவத்தினை இனங்கண்டு, 6 மாத காலப்பகுதியினைக்

கொண்ட சலுகைக் காலம் உள்ளடங்கலாக 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலப்பகுதியொன்றுடன் கூடிய ஆண்டுக்கு 4 சதவீத வட்டிவீதத்தில் தொழிற்படு மூலதனக்

கடன்களை வழங்குவதற்காக சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன் திட்ட வசதியினை இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் இலங்கை மத்திய வங்கி 3 கட்டங்களில் நடைமுறைப்படுத்தியது.

எவ்வாறாயினும், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக எதிர்பார்க்கப்பட்டவாறு தமது தொழில்களை சீரமைத்துக்கொள்வதில் அநேகமான

கடன்பெறுநர்கள் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, தவறுதல் எதுவுமின்றி கடன்களை மீளச்செலுத்துவதற்கு கடன்பெறுநர்களுக்கு

வசதியேற்படுத்தி ஊக்குவிக்கவேண்டிய முக்கியத்துவத்தினை பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியானது சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன்வசதியின் கீழ்

பதிவுசெய்யப்பட்ட கடன்களுக்கு ஏற்புடைய சலுகைக் காலத்தினை, கடன்பெறுநர்களால் முன்வைக்கப்படுகின்ற எழுத்திலான

கோரிக்கையின் மீது மேலும் மூன்று (03) மாதங்களால் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 9 மாதங்களைக் கொண்ட சலுகைக் காலப்பகுதியொன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு விரும்புகின்ற

இத்தொழிற்படு மூலதனத் திட்டங்களின் பயனாளிகள் தொடர்புடைய வங்கிக்கு எழுத்திலான கோரிக்கையொன்றினை அனுப்புமாறு கோரப்படுகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள்

இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள்

இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி

நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளன.

இந்த நிலையம் 300 மெகா வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாக

இருக்கும். இது கெரவலப்பிட்டியிலுள்ள லக்தனவி மின்னுற்பத்தி நிலையத்தில் அமையவுள்ளது.

இது தொடர்பான யோசனையை மின்வலு எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும சமர்ப்பித்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவின் பதவியேற்று ஒரு வருடம்

பூர்த்தியாகும் தருணத்தில், கட்டுமாணப் பணிகள் ஆரம்பமாகுமென அவர் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா – இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா – இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:

இலங்கையில் பதிவான 30 ஆவது கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளானவரின் மரணம் சற்று முன்னர் இடம்பெற்றதாக

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன அவர்கள் உறுதி செய்தார்.

நேற்றைய (05) தினம் மரணமான இந்த நோயாளி அங்கொட தேசிய தொற்று

நோயில் பிரிவில்; சிகிச்சை பெற்றுவந்த 23 வயதுடைய முகத்துவாரம், கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த ஆண் நபராவார்.

இந்த மரணத்திற்கு காரணமாக சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நீரிழிவு நோய் பிரச்சினையுடன் கொவிட்19 வைரசு தொற்றும் ஏற்பட்டதாகும்.

Posted in இலங்கை செய்திகள்

வத்தளையில் 115க்கு கொரோனா

வத்தளையில் 115க்கு கொரோனா

வத்தளையில் உள்ள விளையாட்டுத் தொழிற்சாலையில் 115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 139 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 139 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 26 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 2,532 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

மேலும், 382 வாகனங்களும் கைப்பற்றப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத குற்றச்சாட்டுகளில் இதுவரை 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

199 பொலிஸ் அதிகாரிகளுக்கு , கொரோனா

199 பொலிஸ் அதிகாரிகளுக்கு , கொரோனா

மேல் மாகாணத்தில் இன்று (6) வரை 199 பொலிஸ் அதிகாரிகள்,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் 258 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் 1,350 பேர்

சுயத்தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொவிட்-19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29

இலங்கையில் கொவிட்-19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29

இலங்கையில் இன்று கொவிட்-19 வைரசு தொற்றினால் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைவாக கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

இன்றைய தினம் (05) சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிசெய்யப்பட்ட கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மரணம் விபரம் பின்வருமாறு:

  1. கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஆண் ஒருவர் ஆவார். இவர் பிம்புறு ஆதார வைத்தியசாலையில் நேற்று (04) உயிரிழந்துள்ளார். இந்த நபர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டு இந்த
  2. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்ததுடன் நீண்டநாள் சிறுநீரக நோயினாலும் அவதிப்பட்டுள்ளார்.
  3. வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஆவார்.மார்பு வலியினால் இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் நேற்றைய (04) தினம் உயிரிழந்துள்ளார்.
  4. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர். தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளதுடன் பிரேத பரிசோதனையின் போது கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என்ற ரீதியில்
  5. அடையாளங் காணப்பட்டுள்ளார். இவரது மரணத்திற்கு காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பாகும்.
  6. கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஆவார். தனது வீட்டில் உயிரிழந்துள்ளதுடன் பிரேதபரிசோதனையின் போது கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என அடையாளங்
  7. காணப்பட்டுள்ளார். மரணத்திற்கு காரணம் என்ற ரீதியில் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று என அடையாளங் காணப்பட்டுள்ளது.
  8. கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆண் நபர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையின் போது கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என்று
  9. உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் மரணத்திற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளமை கொவிட் 19 தொற்று பாதிப்பினால் ஏற்பட்ட இருதய பாதிப்பாகும்.

இதற்கு மேலதிகமாக இலங்கையில் பதிவான கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமானோரின் எண்ணிக்கை 29

ஆகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்ன அவர்கள் உறுதிசெய்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரேனா

கொழும்பு மாவட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரேனா

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரேனா தொற்றுக்கு உள்ளானவர்கள்

இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எமக்கு தகவல் வழங்கியுள்ளனர் என்று கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன இன்று தெரிவித்தார்…

இதேபோன்று தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் மேல் என தெரிவிக்கப்பட்டது

இதற்கமைவாக கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேல் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

COVID-19 வைரஸ் தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் எனக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. தொற்றினால்

பாதிக்கப்பட்ட வர்களுக்கு இரண்டு வார காலத்திற்கு நிவாரணத்தை வழங்குவதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக பிரதமர் அலுவலகத்தின்

மூலம் எமக்கு சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதற்கமைவாக அனைத்து குடும்பங்களுக்கும் இந்த நிவாரண உதவியை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப

அங்கத்தவர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாது ஒரு குடும்பத்திற்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய

உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களை அடையாளம் கண்டு உலர் உணவுப்பொருட்களை வழங்குமாறு 13 பிரதேச செயலாளர்களுக்கும் நாம் ஆலோசனை வழங்கியுள்ளோம்.

இவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் அதாவது இரண்டு வாரங்களுக்கு போதுமான ரூபா 10,000/= பெறுமதியான பொருட்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்;.

இதற்கமைவாக அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது

சில சந்தர்ப்பத்தில் ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்களுக்கு மேல் வசிப்பார்களாயின் கிராம கிராம உத்தியோகத்தவர் மூலம் அது தொடர்பாக உறுதிப்படுத்தப்படவேண்டும் அவர்களுக்கு தனித்தனியாக உணவு பொருள் பொதி வழங்கப்படும்

சுகாதார அதிகாரி அல்லது இந்த தனிமைப்படுத்தல் குடும்பங்களின் நலன்களைப் பேணுவதற்காக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் அடிக்கடி உங்களது வீட்டுக்கு அருகில் காணப்படுவார். அவருடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் இந்த அதிகாரிக்கு இதுதொடர்பான தகவலை வழங்கினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கே வந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வார.; அப்படியும் இல்லாதபட்சத்தில் இதற்கென உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கொழும்பு பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு உங்களது உலர் உணவுப் பொதியை பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கான தொலைபேசி இலக்கம் வருமாறு 011 236 9139 பிரதேச செயலாளர் இது தொடர்பாக அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்என்று கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன மேலும் தெரிவித்தார்..

Posted in இலங்கை செய்திகள்

ஒன்று கூடி தண்ணியடித்த எட்டு வெறிக்குட்டிகள் கைது.

ஒன்று கூடி தண்ணியடித்த எட்டு வெறிக்குட்டிகள் கைது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கை பொருட்படுத்தாது, ஜா-எல –சுதுவெல்ல

பிரதேசத்தில் வீடொன்றில் மதுபான விருத்தில் பங்கேற்ற 8 பேர், நேற்று (04) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கண்டியில் புதிய 45 கொரனோ நோயாளர்கள்

கண்டியில் புதிய 45 கொரனோ நோயாளர்கள்

கண்டி மாவட்டத்தில் இதுவரை 45 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

காணப்பட்டுள்ளனரென, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கங்கவட்டகோரள, உடபலாத, பாத்ததும்பர, தொலுவ, மெததும்பர,

யட்டிநுவர, உடதும்பர, துன்பனே,ஹரிஸ்பத்துவ, மினிபே, அக்குறனை

மற்றும் தலாத்துஓயா ஆகிய பிரதேசங்களிலிருந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

5000 ரூபா நிவாரணப் பொதி யாழ் மாவட்டத்திலும் வழங்க ஏற்பாடு

5000 ரூபா நிவாரணப் பொதி யாழ் மாவட்டத்திலும் வழங்க ஏற்பாடு

Covid – 19 தொற்று பரவல் காரணமாக யாழ் மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள 772 குடும்பத்தைச் சேர்ந்த 1700 பேருக்கு

அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணப்பொதி உடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா

பெறுமதியான உணவுப் பொதிகள் நாடுபூராகவும் வழங்கப்பட்டு வரும் நிலையில், யாழ் மாவட்டத்திற்கான இடர் கால நிவாரண

பொதிகள் இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை என எனக்கு தெரியப்படுத்தியிருந்தது

இந்நிலையில் இது தொடர்பில் நேற்றைய பாராளுமன்ற அமர்வின் பின்னர் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு சென்று பேசியதன் பயனாக அந்தந்த கிராம சேவகர்கள் ஊடாக

தனிமைப்படுத்தலில் உள்ள அனைவருக்கும் முதற்கட்டமாக நிவாரண பொதிகளை வழங்கி வைக்க சகல அரச அதிபர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்த நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் ஒரு ஐனாதிபதி, ஒரு அரசாங்கமே இதில் இன, மத மொழி என்ற

பாகுபாடு இன்றிய ஒரே நாடு என்ற அடிப்படையில் அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

எனவே தென்பகுதி மக்களுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் வடபகுதி மக்களுக்கு கிடைக்காமல் அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதாக சிலர் பேசுவதில் எந்த உண்மையும் இல்லை.

எனவே இது தொடர்பில் மக்கள் குழப்பம் அடைய வேண்டிய தேவையும் இலலை என்றும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

பல மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

பல மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தினால் மண்சரிவு அனர்த்த கட்டம் ஒன்றின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, எஹெளியகொடை, எலபாத்த, குருவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கும்

, கேகாலை மாவட்டத்தில் ரூவான்வெல்ல பிரதேச பிரிவுக்கும் இவ்வாறு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையை கவனத்தில் கொண்டு இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவத்தின் பொது முகாமையாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், குறிப்பிட்ட

பிரதேசங்களில் தற்போது நிலவும் காலநிலையை கவனத்தில் கொண்டு முதல் கட்ட மஞ்சள் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த பகுதிகளில் இருந்து பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கு முப்படையினரும், பொலிசாரும் தயார் நிலையில் உள்ளனர்.

அனர்த்தங்கள் தொடர்பாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் 177 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன்

அனர்த்த நிலை தொடர்பான தகவல்களுக்காக எந்த நேரத்திலும் பொது மக்களால் தொடர்பு கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் 07பேருக்கு கொரோனா

வெலிக்கடை சிறைச்சாலையில் 07பேருக்கு கொரோனா

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 06 பேருக்கும் அதிகாரி

ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு பெண் கைதிகளும் இதில் உள்ளதாக தகவல்.

தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு

பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல்

யாழில் வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல்

இலங்கை யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த

மர்ம வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த வயோதிபர் மீது வெட்டு தாக்குதலை மேற் கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது

உடல்களில் பல வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்

போதன வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் நோய் தொற்றாளர்களில் 60 சதவீதமானோருக்கு நோய் அறிகுறிகள் இல்லை

இலங்கையில் நோய் தொற்றாளர்களில் 60 சதவீதமானோருக்கு நோய் அறிகுறிகள் இல்லை

நாட்டில் கொரோனா தொற்றாளர்களில் 60 சதவீதமானோருக்கு நோயின் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டினதும் தற்போதைய நிலைமையை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என அவர் நேற்று (03) பாராளுமன்றத்தில் நம்பிக்கை வெளியிட்டார்.

சுகாதார நடவடிக்கைக்காக உலக வங்கியிடமிருந்து 128 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன. மேலும் 22 மில்லியன் டொலர்களை எதிர்கால நடவடிக்கைகளுக்காக செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கடன் தொகையை 2023 ஆம் ஆண்டு வரை செலவழிக்க வேண்டும். இதுவரை 35 மில்லியன் டொலர்கள் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக செலவிடப்பட்டுள்ளது.

தொற்றொதுக்கல் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் அது தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொள்ள நேர்ந்ததாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் சுகாதார வழிகாட்டல்களை மீறுவோரைக் கைது செய்யும் அதிகாரம் புதிய திருத்தத்தின் ஊடாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 63,600 பேர் சுயதனிமைப்படுத்தலில்

இலங்கையில் 63,600 பேர் சுயதனிமைப்படுத்தலில்

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் சுமார் 63 ஆயிரத்து 600இக்கும் மேற்பட்ட நபர்கள் சுய தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இதிர் குருநாகல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 452 குடும்பங்கள்

சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்

பெறுமதியான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பொதிகளை

விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல மேல் மாகாணத்தில் 11 ஆயிரத்து 900இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 75 பேர் கைது

முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 75 பேர் கைது

முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத

75 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (04) தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 15ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு

அமைய முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயமானதாகும்.

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் 122 புதிய கொரனோ தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

கொழும்பில் 122 புதிய கொரனோ தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 409 தொற்றாளர்களுள் 146 பேர்

கம்பஹா மாவட்டதையும் 122 பேர் கொழும்பு மாவட்டத்தையும் சேர்ந்தவர்களென,

கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 47 பேரும், குருநாகல்-7, கேகாலை-

12, இரத்தினபுரி-12, காலி-19,நுவரெலியா-2, ஹம்பாந்தோட்டை-5, மொனராகலையில் ஒருவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளில் கடற்படை

கடலில் மூழ்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளில் கடற்படை

திருகோணமலை கடல் பிராந்தியத்தில் கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டம் கடற்படையினரால் (நவம்பர்,02) முன்னெடுக்கப்பட்டது.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை காரணமாக கடலில் ஏற்பட்டுள்ள இம் மாசு பொருட்களை அகற்றும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மிதக்கும் கடல் பிளாஸ்டிக் கழிவு போலல்லாமல், பெரும்பாலும் கடல் பிளாஸ்டிக் குப்பைகள் கடலுக்கு அடியில் தங்குவதால் அவற்றை சுழியோடல் நடவடிக்கைகள் மூலமே எடுக்கப்பட வேண்டும்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் குப்பைகள் பாரமற்றவையாக இருப்பதால், அவை கடலோரத்தில் பரவி சிக்கிக் கொள்கின்றன.

கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடற்பறவைகள் என்பவற்றின் சமிபாட்டுத் தொகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கிக்கொள்வதனால் அவை பெரும்பாலும் உயிரிழக்கின்றன. இதேவேளை, சில ஈரூடக வாழி இனங்கள் தங்கள் ஆயுட்காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படுகின்றன.

எதிர்கால சுற்றுச்சூழல் பேரழிவை மனதில் இருந்தி, கடலோரப் பகுதியின் தூய்மையை உறுதிப்படுத்துவதற்கும் நாட்டைச் சூழவுள்ள கரையோரங்களின் தூய்மையை பேணவும், கடல் சுற்றுச்சூழல் மற்றும் அதன் உயிரியல் பல் வகைமைகளுக்கு தீங்கு விளைவிப்பதை தடுக்கவும்
இவ்வகையான திட்டங்கள் கடற்படையினரால் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தினை திருகோணமலையில் உள்ள கோணேஸ்வரம் முதல் கடற்கரை வரை முன்னெடுக்க கிழக்கு கடற்படை கட்டளையாகம் எதிர்பார்த்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் சுழியோடும் படைவீரர்களினால் பெருமளவிலான கடல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் குப்பைகள் அகற்றப்பட்டன.

கரையோரங்களை சுத்தப்படுத்தும் இந்த நடவடிக்கையில் திருகோணமலை பொலிஸ் குழுவினரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

ஆணியை புடுங்காதீர்கள்- மக்களுக்கு எச்சரிக்கை

ஆணியை புடுங்காதீர்கள்- மக்களுக்கு எச்சரிக்கை

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் அதிகமாக நடமாடும் அரச அரசசார்பற்ற

மற்றும் தனியார் நிறுவனங்களில் ஏன் ஒவ்வொரு வீடுகளிலும் சுகாதார நோக்கம் கருதி தொற்று நீக்கிகள் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அரச நிறுவனம் ஒன்றில் தொற்று நீக்கி பாதுகாப்பாகவும் களவாடி செல்ல முடியாதவாறும் பாதுகாப்பு பெட்டி ஒரு

அமைக்கபட்டு இருப்பது அனைவரையும் ஒரு கனம் சிந்திக்க வைத்துள்ளது. இதனை எடுத்து செல்வது என்னாறல் ஆணியை

பிடுங்கி பெட்டியை உடைக்க வேண்டும். இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. இந்த செயற்பாடு பாவனையாளரின்

நம்பிக்கையை எந்தளவுக்கு நம்பியுள்ளார்கள் என்றும் தெரிய வருகின்றது. எது எவ்வாராயினும் இவர்களது செயற்பாடு

பாராட்டதக்கது. இந்த செயற்பாடு கண்டி பேராதெனிய பிரதேசத்தில் காணப்படும் அரச நிறுவனம் ஒன்றில் இதனை காணக் கூடியதாக இருந்தது.

கை கழுவுவோம் முக கவசம் அணியுவோம் தூரத்தில் இருப்போம் சுகாதார

பழக்க வழக்கங்களை பின்பற்றுவோம் கொரோனாவில் இருந்து எம்மையும் எம் நாட்டு மக்ககளையும் காப்பாற்றுவோம்.

ஆணியை புடுங்காதீர்கள்
ஆணியை புடுங்காதீர்கள்