Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
15 வயது பெண்ணை இணைய தளம் மூலம் விற்ற கும்பல் கைது
15 வயது பெண்ணை இணைய தளம் மூலம் விற்ற கும்பல் கைது
15 வயது சிறுமி ஒருவரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த இணைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் குறித்த இணைதளத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை, நல்லூருவ பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இணையதளத்தின் கணக்காளராக கடமையாற்றிய பிலியந்தல, அளுபொலந்த பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரை இன்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 16 பேரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

இலங்கையில் போலீசா வேட்டை – 417 பேர் கைது
இலங்கையில் போலீசா வேட்டை – 417 பேர் கைது
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து விதிக்க பட்ட விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 417 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் அனைவரும் முக கவசம் அணிய மறுத்தமை ,மற்றும் மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்
இதுவரை நாற்பத்தி ஐந்தாயிரத்துக்கு மேலானவர்கள் இவ்விதம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
ஆடம்பர பொருட்களுக்கு இலங்கையில் தடை
ஆடம்பர பொருட்களுக்கு இலங்கையில் தடை
இலங்கையில் ஆடம்பர பொருட்களுக்கு ஆளும் கோட்டா அரசு தடை விதிக்க உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,.
இலங்கையின் வெளிநாட்டு நாணயத்தை நிலை நிறுத்தும் முகமாகவும் ,இலங்கையின்
பொருளாதாரத்தை முன் நிறுத்தவும் இந்த தடை ,அல்லது கட்டுப்பாடு விதிக்க படவுள்ளதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது
இலங்கையில் 10 வயது சிறார்களுக்கு தடுப்பூசி
இலங்கையில் 10 வயது சிறார்களுக்கு தடுப்பூசி
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பத்து
வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பட உள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
அதே வேளை மூடியுள்ள பாடசலைகள் மீள திறக்க படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
காமுகர்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள் – அவசர கோரிக்கை
காமுகர்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள் – அவசர கோரிக்கை
இலங்கையில் சிறுவர் துஸ் பிரோயோகம் அதிகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,15 வயது
சிறுமி ஒருத்தி இணைய தளம் ஊடக 40 பேர் ரகற்பழித்து அந்த பெண்ணை விபச்சாரத்திற்கு விற்க பட்ட சம்பவம் வெளியானது
இதனை அடுத்து இந்த கோரிக்கை மக்களிடம் விடுக்க பட்டுள்ளது
இந்த சிறுமியை விற்பனை செய்த 26 பேர் இதுவரை கைது செய்ய பட்டுள்ளனர் ,மேலும் 16 பேர் தேட பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கை மீனவர் சமூகம் சார்பாக இந்தியாவுக்கு நன்றி-மனோ கணேசன்
இலங்கை மீனவர் சமூகம் சார்பாக இந்தியாவுக்கு நன்றி
மனோ கணேசன்
“எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பல் மூலமான இரசாயன கழிவினால் இலங்கை கடல் வளத்துக்கு ஏற்பட்ட அழிவை ஆய்வு செய்து பாதுகாக்க, இந்திய கடற்படை கப்பல் “சர்வேக்ஸக்” மூலம் இந்திய அரசு எடுத்தாண்ட முயற்சி பாராட்டத்தக்கது.
வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத பேரழிவு, இலங்கை கடல் வளத்துக்கு, “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பலின் இரசாயன கழிவுகள் மூலம் ஏற்பட்டது. இதனால் மேற்கு கரை முழுக்க மீனவ சமூகம்
தொழில் இழந்து, வாழ்விழந்து, ஏறக்குறைய நடுத்தெருவுக்கு வந்துள்ளது. அவர்களது ஆவேச குரல் இலங்கை அரசுக்கு கேட்கவில்லை. ஆனால், இந்திய அரசுக்கு கேட்டுள்ளது.
ஒரு நட்பு நாட்டு அரசு என்ற முறையில், எங்கள் மீனவர் வாழ்வை மீண்டும் கட்டி எழுப்ப, இந்திய கடற்படை கப்பல் “சர்வேக்ஸக்” மூலம் இந்திய அரசு செய்துள்ள உதவிக்கு, இலங்கை மீனவர்
சமூகம் சார்பாக நாம் நன்றி கூறுகின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
“எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பலின் இரசாயன கழிவுகளை ஆய்வு செய்து இலங்கை கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு தனது கடற்படை மூலம் செய்து வரும் உதவிகள் தொடர்பில் மேலும் மனோ எம்பி கூறியுள்ளதாவது,
நடுக்கடலில், இரசாயன பொருகளை சுமந்தபடி எரிந்து கொண்டிருந்த “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பலை, இலங்கை துறைமுகத்துக்கு, இலங்கை கடல் எல்லைக்குள் வர சொன்னவர் யார் என
எவருக்கும் தெரியாது. அந்த அமைச்சர் அல்லது அதிகாரி யார் என மக்கள் கேட்கிறார்கள். அவரை கண்டால் வரச்சொல்லுங்கள். அவருக்கு சுவையான மீன் உணவு தர தாங்கள் தயார் என மீனவ மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
இலங்கை கடல் வளம் அழிகிறது. மீனவர் வாழ்வு அழிகிறது. இலங்கை மக்களுக்கு உணவில் மீன் இன்று சந்தேக பொருள் ஆகி விட்டது. இவற்றுக்கான நஷ்டஈட்டை “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” எப்போது
தரும்? எத்தனை கோடிகள் கிடைக்கும்? அதில் எத்தனை இலட்சங்கள் மீனவர்களுக்கு கிடைக்கும்? இந்த கேள்விகளுக்கு விடைகள் இன்னமும் இல்லை.
இலங்கை அரசு இவற்றுக்கு பதில் கூறாமல் ஒளிகிறது. இதுவரை துறைமுக துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவோ, மீன்வள துறை அமைச்சர் டக்லஸ் தேவாந்தாவோ இதுபற்றிய உண்மைமைகளை பேச மறுக்கின்றனர். பேரழிவுக்கு பொறுப்பேற்க மறுக்கின்றனர்.
இந்த பின்னணியில் இந்திய அரசின் இந்த உதவி ஒரு ஆறுதல். “சாகர் ஆரக்ஸா” என்ற கடல் செயற்பாட்டின் மூலம் இந்திய கடற்படை கப்பல் “சர்வேக்ஸக்” எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு,
இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் குறிப்பிட்ட கப்பலின் தலைவர், மாலுமிகளுக்கு , இலங்கை மீனவர் சமூகம் சார்பாக எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

இலங்கையில் 7 காவல்துறை அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
இலங்கையில் 7 காவல்துறை அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
இலங்கையில் அதி உயர் காவல்துறை அதிகாரிகள் ஏழுபேருக்கு திடீர் இடமாற்றம் இடம்பெற்றுள்ளது
உடனடி அமுலுக்கு வரும் நிலையில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு – – இந்தியா உதவவேண்டும் டக்கிளஸ்
கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு – – இந்தியா உதவவேண்டும் டக்கிளஸ்
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்று தெரவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்தியாவிற்கு நன்றியினையும் தெரிவித்தார்.
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது அவசர உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்திய கடலோர காவற்படை மற்றும் இந்தியக் கடற்படையினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பு துறைமுக்தில் நேற்று (02.07.2021) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், ‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் எக்ஸ பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எமது அவசர கோரிக்கையை ஏற்று, தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவற்படை ஆகியவற்றுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவும் இலங்கை மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இலங்கைக்கு உதவிகளும் ஒத்துழைப்புகளும் தேவைப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் உடனடியாக உதவுகின்ற இந்தியா கப்பல் விபத்தின் போதும், விரைந்து வந்து தமது உதவிகளை வழங்கியிருந்தன.
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவற்கு மாத்திரமன்றி, ஏற்பட்ட பாதிப்புக்ளை மதிப்பிடுவதிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு எமக்கு பேருதவியாக அமைந்திருந்தது.
எதிர்காலத்திலும், கடலுக்கு அடியில் இருக்கின்ற கொள்கலன்களை கண்டறிந்து அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கான தொழில் நுட்ப உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றோம்’ என்று தெரிவித்தார்.
மேலும், கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை இந்திய அரசாங்கத்திடம் தான் கோரியிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரண்டு நாடுகளும் அவசர தேவைகளில் மாத்திரமன்றி கடல்சார் பொருளாதார அபிவிருத்தியிலும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பறக்கும் படை வேட்டை – 563 பேர் கைது
பறக்கும் படை வேட்டை – 563 பேர் கைது
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தற்பொழுது
விதிக்க பட்டுள்ள விதிகளை மீறி செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் 563 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்கள் அனைவரும் முக கவசம் அணியாது உலவியமை மற்றும் மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டு சுமத்த பட்டுள்ளது
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பிசிஆர் அறிக்கை கொண்டு வர வேண்டியது அவசியம்-இராணுவ தளபதி
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பிசிஆர் அறிக்கை கொண்டு வர வேண்டியது அவசியம்-இராணுவ தளபதி
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோரின் தலைமையில் புதன்கிழமை (30) கொவிட் – 19 தடுப்புச் செயற்பாடுகள் தொடர்பிலான மீளாய்வு கூட்டமொன்று இடம்பெற்றது.
மாகாணங்களுக்கிடையில் தொடர்ச்சியாக பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், பிரதேசங்களை தனிமைப்படுத்துதல், வெவ்வேறு தரப்பினரின் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான கோரிக்கைகள், தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் திட்டங்கள், வெளிநாட்டிலிருப்பவர்களின் வருகை மற்றும்
தனிமைப்படுத்தல் நடைமுறைகள், பிசிஆர் சோதனைகள் மற்றும் ஆன்டிஜென் சோதனைகள் நடத்துதல், அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பில் பெரிதும் ஆராயப்பட்டன.
முறையான பீசிஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு வருவோருக்கு மாத்திரமே இலங்கைக்குள் இடமளிக்க முடியும் என்றும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவோர் சிலர் அண்டிஜன் பரிசோதனைகளை மாத்திரமே செய்துக்கொண்டுள்ளனர் எனவும், இனிவரும்
நாட்களில் அவர்கள் முறையான பிசிஆர் அறிக்கையுடனேயே நாடு திரும்ப வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் அங்கீகிக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரமே பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்கள் நிரம்ப
ஆரம்பித்துள்ளமையால் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதே நேரத்தில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் 2021 ஜூன் வரையிலான நிலைமை மற்றும் இலங்கையின் மூலோபாயம் என்பன தொடர்பில் விளக்கமளித்துடன் “வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம்” என்றும் எடுத்துரைத்தனர்.
அதனையடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அண்மையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், புதிய வைரஸ் வகைகள், இரத்தினபுரி மற்றும் நுவரெலியா பகுதிகளிலிருந்து உருவான கொத்தணிகள், புதிய தரவுகள், புள்ளி விபரங்கள் மற்றும் தரவுகளை சமர்பித்து 6
நாட்களில் 2000 க்கும் குறைவான நோயாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் வைத்தியசாலைகள் , இடைநிலை பராமரிப்பு நிலையங்கள், இறப்பு போன்ற விடயங்கள்
தொடர்பிலும் விளக்கமளித்தார். அத்தோடு டெல்டா மாறுபாடு வைரஸ் பரவி வருகின்றமை தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
விபச்சாரத்திற்கு இளம் பெண்ணை விற்ற 17 பேர் கைது
விபச்சாரத்திற்கு இளம் பெண்ணை விற்ற 17 பேர் கைது
15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் ஊடாக கல்கிசையில் பாலியல் செயற்பாடுகளுக்காக கொள்வனவு செய்த மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (30) தெரிவித்தார்.
குறித்த சிறுமியின் தாய், சிறுமியை முதன்முதலில் விற்பனை செய்தவருடன் தகாத முறையில் உறவுகளை பேணும் பெண், ஆட்டோ சாரதி, மோட்டார்சைக்கிள் ஓட்டுநர், சிறுமி தொடர்பான
தகவல்களை இணையத்தளத்தில் பதிவேற்றியவர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, பாலியல் செயற்பாடுகளுக்காக சிறுமியை பணம் கொடுத்து வாங்கிய மேலும் 20 பேரை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
குறித்த சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்காக இணையத்தளத்தினூடாக விற்பனை செய்த பிரதான சந்தேகநபர் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 35 வயதான குறித்த சந்தேகநபர், மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
மேல் மாகாணத்தில் இன்று முதல் 45 அரச வைத்தியசாலைகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 அரசாங்க வைத்தியசாலைகளில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
இதன் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சயனோஃபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.
தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 433 பேர் கைது
தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 433 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்றச் சாட்டில் 433 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்விதம் கைதானவர்கள் முக கவசம் அணிய மறுத்தமை, மற்றும் மாகாண எல்லைகளை
தாண்டிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
திருகோணமலையில் அமெரிக்கா ,ஜப்பான் இராணுவம் போர் ஒத்திகை
இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி’
நடைவடிக்கையின் இரண்டாவது கட்டம் திருகோணமலை கடற்பரப்பில் ஜூன் 26ம் திகதி ஆரம்பமானதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பல்களான சயுரல, கஜபா{ஹ, ஆகிய கப்பல்களும் இலங்கை விமானப்படையின் பெல் 212, 412 ரக ஹெலிகொப்டர்கள்,
டீ 200 ரக பீச் கிராப்ட் விமானம், அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமத்திற்கு சொந்தமான யூஎஸ்எஸ் சார்ள்ஸ்டன் கப்பல் என்பன பங்கு கொள்வதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக இந்த கூட்டுப் பயிற்சியில் வான் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கவின் 7வது கடற்படை குழுமத்துக்கு சொந்தமான பி-8 பொசிடன் போயிங் ரக கடல் சார்
ரோந்து விமானம் மற்றும் எஸ்எச்-60 ரக ஹெலிகொப்டர் என ஆகியன பங்கு கொள்வதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டுப் பயிற்சியில் பிராந்திய தந்திரோபாயங்கள் மற்றும் இராக்கால தொடர் பயிற்சிகளின் போதான கடல் அணுகுமுறைகளும் சோதனை நடவடிக்கைகள் என்பன ஜூன் 26ம்
திகதி இடம்பெற்ற அதேவேளை ஜூன் 27 இடைவெட்டு பயிற்சிகள் மற்றும் இடைமறிப்பு பயிற்சிகள் தொடர்பான கூட்டு பயிற்சிகள் செயல்படுத்தப்படவுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலில் தரையிறங்குவது தொடர்பான பயிற்சிகளில் சார்ள்ள்டன் அமெரிக்க கடற்படைக் கப்பலின் எம்எச் 60 எஸ் ஹெலிகொப்டர் மற்றும் விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர்
என்பன கஜபாகுகடற்படைக் கப்பலில் தரையிறங்க உள்ள அதேவேளை, அமெரிக்க கடற்படை கப்பலின் எம்எச் 60ள ஹெலிகொப்டர் விமானப்படையின் பெல் 412 ஹெலிகொப்டர் என்பன சுயுரல கடற்படை கப்பலில் குறுக்கு தரையிறக்கம் செய்யப்பட உள்ளன.
இதேவேளை இந்த கூட்டுப் பயிற்சியின் அடுத்தகட்டமாக தடங்களை கண்டறியும் பயிற்சி நடவடிக்கை நாளை தொடர உள்ளது. இதில் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கப்பல்கள் ஆன ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான சயுரல மற்றும் கஜபாகு என்பனவும் இலங்கை
விமானப்படையின் டீ 200 ரக பீச் கிராப்ட் விமானமும், அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமத்திற்கு சொந்தமான யூஎஸ்எஸ் சார்ள்ஸ்டன் கப்பலும் பி-8 பொசிடன் போயிங் கடல் சார்
ரோந்து விமானமும் ஜப்பான் கடற்படையின் ஜேடிஎஸ் யூகிரி நாசகாரி கப்பலும் எம் எச் -60ஆர் ஹெலிகொப்டரும் பங்குபற்றும் என எதிர்பார்க்க கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
பல் தரப்பு கடற் படைகளின் இந்த கூட்டுப்பயிற்சி, இலங்கை கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளில் பயனளிக்கத்தக்க நவீன அறிவு, தந்திரோபாயங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கவுள்ளன.
எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த பல பரபரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சி, சுகாதார வழிமுறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்படுகின்றதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
பறக்கும் படை வேட்டை – 455 பேர் கைது
பறக்கும் படை வேட்டை – 455 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறி பயணித்த 455 பேர் பறக்கும் விசேட படையால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் மாகாண எல்லைகளை மீறியமை ,மற்றும் முகக்கவசம் அணிய மறுத்த காரணத்தினால் இந்த கைது இடம் பெற்றுள்ளது
கொரனோ மரண தகனக் கட்டணம் குறைக்கப்பட்டது
கொரனோ மரண தகனக் கட்டணம் குறைக்கப்பட்டது
கொரோனாவால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்வதற்கு இனிவரும் காலங்களில் 5,000 ரூபாயை அறவிடப்படுவதற்கு நோர்வூட் பிரதேசசபையால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.
25ஆம் திகதி நடைபெற்ற சபையின் மாதாந்த அமர்விலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ”கடந்த காலங்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்ய 15,000 ரூபாய் நோர்வூட் பிரதேச சபையால் அறிவிடப்பட்டு வந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டதாகவும், கொரோனாத் தொற்றுக்குள்ளாகி தான் ஒரு மாத சிகிச்சையின் பின்னர், சபைக்கு திரும்பிய பின்னரே இது குறித்து அறிந்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
எனவே, இனிவரும் காலங்களில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தகனம் செய்ய 5,000 ரூபாயை மாத்திரமே அறவிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
வுனியா- பொது மக்கள் கூடும் இடங்களில் கிருமி நீக்கம்
வுனியா- பொது மக்கள் கூடும் இடங்களில் கிருமி நீக்கம்
கொவிட் – 19 பரவலை தடுக்கும் வகையில் இராணுவத்தினரால் வவுனியா பிரதேசத்தில் பொது
மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய வவுனியா நகரத்தில் உள்ள பஸ் நிலையம், புகையிரத நிலையம்| நலன்புரி நிலையங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், விற்பனை நிலையங்கள் பொது வைத்தியசாலை
வளாகம், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் முச்சக்கர வண்டி கருப்பு கரிப்பு நிலையங்கள் என்பன படையினரால் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
வன்னி பாதுகாப்பு படை தலைமையாக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஹேமந்த் பண்டார
வின் பணிப்புரைக்கமைய இடம்பெற்ற இந்த தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் 17வது சிங்க ரெஜிமென்ட் படைவீரர்கள் 8வது கள பொறியியலாளர் படை வீரர்ஸ் சுகாதார
பரிசோதகர்கள் மற்ற நகரசபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட 11 கிராமங்கள்
மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட 11 கிராமங்கள்
கொழும்பு, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சில கிராம சேவகர் பிரிவுகள்
இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய
செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
வேட்டி கட்டி – தலதா மளிகைக்கு சென்று வழிபட்ட கோட்டா
வேட்டி கட்டி – தலதா மளிகைக்கு சென்று வழிபட்ட கோட்டா
இலங்கை ஆளும் ஜனாதிபத்தியும் தமிழ் இன படு கொலை யாழியுமான கோட்டபாய தலதா மாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்
நோயானது இலங்கையை ஆக்கிரமித்து மிரளவைத்து கொண்டுள்ள நிலையில் இவர் இந்த அமைதி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது
பரவும் நோய் -4 கிராமங்கள் தனிமை படுத்தல்
பரவும் நோய் -4 கிராமங்கள் தனிமை படுத்தல்
கேகாலை மாவட்ட பிரிவில் உள்ள நன்கு கிராமங்கள் தபோது தனிமை படுத்த பட்டுள்ளன
,வேகமாக பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து இந்த தனிமை படுத்தல் இடம்பெற்றுள்ளது






