துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மூவர் சுட்டு கொலை

இலங்கையில் மூவர் சுட்டு கொலை

இலங்கை மினுவாங்கொட பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 51 வயதான தந்தை மற்றும் ,23,24 வயதுடைய இரு மகன்கள் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

கொலை செய்ய பட்ட மூவரும்,கொலை சம்பவம் ஒன்றில் இருந்து விடுவிக்க பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது .

இரு தரப்பினருக்கு இடையில் ,நிலவி வந்த முரண்பாடு காரணமாக ,குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்த பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மேற் கொண்டவர்களை ,கைது செய்திடும் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் .

மாணவர்களுக்கு உணவு
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு 4 பில்லியன் ஒதுக்கீடு அமைச்சர்

மாணவர்களுக்கு 4 பில்லிய ஒதுக்கீடு அமைச்சர்

இலங்கையில் மதியவேளை போசாக்கு உணவு வழங்கி,ட 4 மில்லியன் ரூபா மேலதிகமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார் .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,உணவு இன்றி போசாக்கு குறைபாட்டால் மக்கள் வசித்து வருகின்றனர் .

இவ்வேளையே இந்த மதியவேளை உணவு வழங்கும் நடவடிக்கையை ஆளும் ரணில் அரசு ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது.

5 ஆண்டுகளில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு - கனேடிய உயர்ஸ்தானிகர்
Posted in இலங்கை செய்திகள்

5 ஆண்டுகளில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு – கனேடிய உயர்ஸ்தானிகர்

5 ஆண்டுகளில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு – கனேடிய உயர்ஸ்தானிகர்

கனடா செல்வதற்கு பல்லாயிரம் மக்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பு,இலங்கையில் இருந்து கனடா சென்று கல்வி கற்க ,இலங்கை மாணவர்கள் பத்து மடங்கு அதிகமாக விசா விண்ணப்பம் கோரியுதாக இலங்கைக்கான கனடா தூதுவர் தெரிவித்துள்ளார் .

இந்த விசா விண்ணப்ப கோரல் தொடர்ந்து அதிகாரித்த வண்ணம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .


கொரனோ பரவலை அடுத்து ஏற்பட்ட தாமதம் காரணமாக விசா விண்ணப்ப கோரிக்கை தாமத படுத்த பட்டுள்ளதாகவும் .

தற்போது அவசர தேவைக்காக விசா விண்ணப்பத்தவர்கள் விபரம் ஆராய பட்டு நடவடிக்கை மேற்கொள்ள
பட்டு வருவதாக இலங்கைக்கான கனடா தூதுவர் தெரிவித்துள்ளார் .

காருக்குள் புகுந்த ரயில்
Posted in இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் ரயிலுக்குள் பாய்ந்து வாலிபர் தற்கொலை

காங்கேசன்துறையில் ரயிலுக்குள் பாய்ந்து வாலிபர் தற்கொலை

கொழும்பில் இருந்து காங்கேசன் துறை நோக்கி பயணித்த அஞ்சல் ரயிலுக்குள் முப்பது வயதுடைய வாலிபர் பாய்ந்து தற்கொலை புரிந்துள்ளார் .

இவ்வாறு தற்கொலை புரிந்து கொண்டவர், அடையாளம் காணப்படாத நிலையில்விசாரணைகள் இடம்பெற்று வருகிறது .

அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் சந்திரிக்கா கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் சந்திரிக்கா கோரிக்கை

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் சந்திரிக்கா கோரிக்கை

இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டு ,தமிழர்களை அணைத்து சென்றால் மட்டுமே, இலங்கை ஒரே திசையில் பயணிக்க முடியும் .

வீழ்ந்து போன பொருளாதாரமும் ,.இதன் ஊடாகவே எழுச்சியுற வைக்க முடியும் .

அத்துடன் இலங்கை ஒரு தேசமாக ஒருமித்து பயணித்து ,பொருளாதார ரீதியில் மிக எழுச்சியை பெற முடியும் என ,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார் .

1997 ஆண்டு சந்திரிக்கா ஆட்சியில் சமாதான தேவதையாக விளக்கியவர் .அன்றே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என கோர பட்டது ,.

ஆனால் அது தவிர்க்க பட்டு ,இன்று நாடு தொடர் இன முரண் பாட்டிற்குள் சிக்கியுள்ளது .

இது இலங்கைக்கு உகந்தது அல்ல என
சந்திரிக்கா தெரிவித்து உள்ளது , மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்

பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்

முல்லைத்தீவில் மீனவர்கள் இரு தரப்பாக போராட்டம்!அமைதியின்மை மை அடுத்து இரண்டு தரப்புக்கும் மீதும் பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள

திணைக்கள அலுவலகத்தை 03 ஆம் திகதி காலை முற்றுகையிட்ட மீனவர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

இவர்களது போராட்டம் இன்று (05) மூன்றாவது நாளாக தொடர்ந்து இடம்பெறுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள்

கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்றனர்.

பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்

கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு செல்லும் மீனவர்களான தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத

தொழிலுக்கு உடந்தையாகவுள்ளதாகவும் இவ்வாறான அதிகாரிகள் எமக்கு தேவையில்லை எனவும் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி போராடி வருகின்றனர்

கடந்த 3ஆம் திகதியன்று காலை கடல் தொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காத போதிலும் பின்னர் அனுமதித்தனர் .

தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தேசிய கடற்றொழில் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் தமக்கான தீர்வுகள் வரும் வரையில் குறித்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும் வரையில் தமது

போராட்டம் தொடரும் என அறிவித்த மீனவர்கள் கடற்தொழில் நீரில்வள திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கொட்டகை அமைத்து தொடர் போராட்டத்தில் மீனவர்கள் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் 24 சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்

இந்நிலையில் குறித்த மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை வைத்த கொக்கிளாய் சாலை பகுதிகளில் தென்பகுதியில் இருந்து வருகைதந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் மற்றும் மாத்தளன்

பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் முஸ்லிம் மீனவர்கள் என சுமார் 300 பேர் முல்லைத்தீவு பேருந்து நிலையம் அருகே காலை பதினொரு

மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்து முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என கோரி போராட்டத்தை ஆரம்பித்தனர்

பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்

இந்நிலையில் குறித்த மீனவர்கள் மற்றும் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் இடையே முரண்பாடுகள் ஏற்படலாம் என்ற நிலையில் பொலிஸார் போராட்டக்காரர்கள் கடற்றொழில் நீரியல் வள

திணைக்கள அலுவலகம் நோக்கி செல்லாத வகையில் முல்லைத்தீவு இலங்கை வங்கிக்கு முன்பாக ஒரு வீதித்தடையும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும்

மீனவர்கள் போராட்டக்காரர்களை நோக்கி வரமுடியாத வகையில் மற்றுமொரு வீதித் தடையையும் ஏற்ப்படுத்தியிருந்தனர் .

இந்நிலையில், அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என கோரிய போராட்டக்காரர்கள் இலங்கை வங்கி முன்பாக பொலிஸார் அமைத்திருந்த

வீதித்தடையை உடைத்து கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நோக்கி செல்ல முற்ப்பட்டபோது போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.

இதனையடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற மீனவர்கள் வீதித்தடையை உடைத்து செல்ல முற்பட்ட போது அவர்கள் மீதும் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர் இதன்போது பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்கள் காரணமாக அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

இதன் பின்னர் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலக

வாயிலில் அமைக்கப்பட்ட கொட்டகையில் போராடி வரும் அதேவேளை அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என்று கேட்டு


போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மாவட்ட செயலக முன்றலில் போராடி வருகின்றனர்.

விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் மிரட்டும் சாணக்கியன்
Posted in இலங்கை செய்திகள்

விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் மிரட்டும் சாணக்கியன்

விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் மிரட்டும் சாணக்கியன்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவிலேயே ஆட்சியிலிருந்து

வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று (04) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “xcl technologies lanka (pvt) ltd என்ற நிறுவனம் கடந்த 12 வருடங்களில் 5 ஆயிரத்து 325 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளனர். இது நாட்டிற்கு நல்லதொரு விடயம் தான்.

எனினும் வெளிமாவட்டங்களிலிருந்து குறிப்பாக மன்னார், யாழ்ப்பாணம் என வெளியிடங்களிலிருந்து வருகை தந்து இந்த நிறுவனங்களில் பணிபுரியும்

ஊழியர்கள் கொழும்பில் தங்களது அன்றாட வாழ்க்கையினை கொண்டு செல்வதில் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஏனெனில் குறித்த ஊழியர்களுக்கு குறைந்த அளவிலேயே சம்பளம் வழங்கப்படுகின்றது. எனினும் தங்குமிடம், உணவு என ஊழியர்கள் அதிகளவில் பணத்தினை செலவழிக்கின்றனர். இதனால் குறைந்தளவான பணமே அவர்களிடம் எஞ்சியுள்ளது.

விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் மிரட்டும் சாணக்கியன்

எனவே, கொழும்பிற்கு வெளியேயும் குறித்த நிறுவனம் தங்களது அலுவலங்களை திறந்தால், அவர்களின் வியாபாரம் விருத்தியடையும் என்பதுடன், நாடும் நன்மையடையும், ஊழியர்களும் நன்மையடைவார்கள்.

அத்துடன், இளைஞர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண அரசாங்கம் பொருத்தமான கொள்கைகளை வகுக்கவில்லை.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சட்டத்தை திருத்தம் செய்வதால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

கடந்த ஓரிரு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஏற்றுமதி அதிகரிக்கப்படவில்லை, மாறாக ஏற்றுமதி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் அந்நிய செலாவணி மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் வீழ்ச்சியடைந்தது.

சட்ட திருத்தங்கள் செய்வதால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது, கொள்கை ரீதியில் நடைமுறைக்கு பொறுத்தமான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதை தவிர்த்து விட்டு அரசாங்கம் போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர் யுவதிகளை பின்தொடர்ந்து செல்கிறது.

நாம் கடந்த சில நாட்களுக்கு முன்னர், காங்கேசன் துறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம்.

இன்று நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உணவு கூட இன்று இல்லை.

மேலும், வசந்த முதலிகே உள்ளிட்ட போராட்டத்தின் ஈடுபட்ட பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

47 நாட்களாக இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் செய்ய தவறு என்ன என்பதை பாராளுமன்றில் வெளிப்படுத்த வேண்டும்.

விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் மிரட்டும் சாணக்கியன்

2019 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தச் சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் தொடர்பான விசாரணைக்கு என்ன நடந்தது? அந்த இளைஞர்கள் செய்த தவறு என்ன?

பல தமிழ் இளைஞர்கள் வருடக்கணக்கில் சிறையில் உள்ளார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது அவர்களின் வழக்கு விசாரணைகளையேனும் துரிதப்படுத்த வேண்டும்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முகநூலில் கருத்து வெளியிட்டார்கள் என்றுக்கூட சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு இளம் தலைமுறையினரை கைது செய்ய என்ன காரணம்? இவர்கள் செய்த பயங்கரவாதச் செயற்பாடுகள் என்ன?

இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டால் நிச்சயமாக விரைவிலேயே
ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

வீட்டின் பின்புறத்தில் பதுங்கிய சிறுத்தை
Posted in இலங்கை செய்திகள்

வீட்டின் பின்புறத்தில் பதுங்கிய சிறுத்தை

வீட்டின் பின்புறத்தில் பதுங்கிய சிறுத்தை

கொட்டகலை – திம்புளைபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின்

பின்பகுதியில் ,சிறுத்தைப் புலி ஒன்று இன்று காலை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உணவு தேடி இந்த பகுதிக்கு வரும் வழியில் இவ்வாறு வீட்டின் பின்பகுதிக்கு இறங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வீட்டின் பின்புறத்தில் பதுங்கிய சிறுத்தை

இதனை கண்ட வீட்டாளர்களும், பிரதேசவாசிகளும் திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன், நுவரெலியா வனஜீவராசிகள்

காரியாலயத்திற்கும் அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதிகாரிகள் வரும் வரை, அப்பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு உதவிகள் வழங்க படும் ஐநா தெரிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜெனிவா மனித உரிமைகூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடி

ஜெனிவா மனித உரிமைகூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடி

இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்னெடுக்கப்படும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு மிக்க குறைவான ஆதரவே

கிடைக்கும், அதற்கான இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையுடன் இணங்கப்போவதில்லை என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

உண்மைகளை கண்டறியும் பொறிமுறை அவசியம் எனவும், அது உள்ளக பொறிமுறையாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், உண்மைகளை கண்டறியும் விதமாக உள்ளக பொறிமுறையை

ஜெனிவா மனித உரிமைகூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடி

உருவாக்குவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் இது குறித்த பொறிமுறை ஒன்றினை உருவாக்க

அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர், பயங்கரவாதத்தடைச் சட்டத்தில் தேவையான மாற்றங்களை

செய்துள்ளதாகவும், இச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 200க்கும் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இம்முறை பிரேரணையில் பொருளாதார குற்றங்கள் குறித்து தெரிவித்துள்ள போதிலும்,


பொருளாதார விடயங்களை சுட்டிக்காட்டும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்


பேரவைக்கு இல்லை என தெரிவித்த அமைச்சர்,
இலங்கைக்கு எதிராக மேலும் மேலும் குற்றங்களை சுமத்தி இலங்கையை நெருக்கடிக்குள்


தள்ளவே சர்வதேச தரப்பு முயற்சிப்பதாகவும்,
பிரிவினையினை வலுப்படுத்தும் பிரதான இரண்டு நாடுகளே இந்த முயற்சிகளின்


பின்னணியில் இருந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். நாளைய தினம் (6)


இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில்,


இன்று காலையில் ஜெனிவாவில் இருந்து அமைச்சர் சூம் தொழிநுட்பம் மூலமாக
நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

இலங்கைக்கான புதுடெல்லியில் உள்ள கொரிய குடியரச தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஹான் ஜொங்ஹூன் அவர்கள்

(அக் 04) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த லெப்டினன்ட் கேணல் ஜொங்ஹூன்ஐ ஜெனரல் குணரத்ன அவர்கள் வரவேற்றார்.

கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

இச்சந்திப்பின் போது, கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக சுமுக கலந்துரையாடல் நிகழ்ந்தது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு
அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்துகொண்டார்.

காருக்குள் புகுந்த ரயில்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின

வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின

இலங்கை வடக்கு பகுதிக்கான ரயில்வே சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .

பொருளாதர நெருக்கடி காரணமாக தடை பட்டிருந்த சேவைகள் மீள் செயல் நிலைக்கு திரும்பியுள்ளது ,
வடக்கு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, எலபாத, அயகம, கிரியெல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 09.00 மணி வரை குறித்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய
கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

குளத்தில் மூழ்கிய இருவர் சடலங்கள் மீட்பு

குளத்தில் மூழ்கிய இருவர் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு – உன்னிச்சை குளதில் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 33 வயதுகளையுடைய இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு உன்னிச்சை குளதில் நண்பர்களுடன் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை நீரில் மூழ்கி

காணாமல் போன நிலையில், 16 வயதுடைய சிறுவன் திங்கட் கிழமை சடலமாக மீடக்கப்பட்டார், மற்றுமொருவர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குளத்தில் மூழ்கிய இருவர் சடலங்கள் மீட்பு

சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலங்களை பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியிருந்தார்.

உயிரிழந்த இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு காதல் பாடம் கற்ப்பிக்கும் ஆசிரியரை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலையில் சகா மாணவர்கள் உணவை திருடி உண்ணும் மாணவர்கள்

பாடசாலையில் சகா மாணவர்கள் உணவை திருடி உண்ணும் மாணவர்கள்

சக மாணவர்களின் பகலுணவை திருடி உண்ணும் மாணவர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், பகலுணவை கொண்டுவரும் மாணவர்கள், பகலுணவை கொண்டுவருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

குருணாக்கல்லில் உள்ள பிரசித்திப் பெற்ற பாடசாலையில் தரம்-10லேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என அறியமுடிகின்றது.

இதனால், சாப்பாடு கொண்டு வரும் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக இவ்வாறு பகலுணவு திருடப்படுவதாகவும், தங்களுடைய புத்தகப் பையில் வைக்கப்பட்டிருக்கும் சாப்பாடும் திருடப்படுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால், சிலர் பாடசாலைக்கு பகலுணவை கொண்டு வருவதை விரும்பவில்லை என்றும் அறியமுடிகின்றது.

சாப்பாட்டை களவெடுத்தும் உண்ணும் மாணவர்களுக்கு எதிராக மனிதாபிமானத்தை கவனத்தில் கொண்டு,


எவ்விதமான நடவடிக்கைக்கு எடுக்க முடியாதுள்ளது என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2022 ஒக்டோபர் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது

மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில்

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக்

காணப்படுவதுடன் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்புமுதல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன்

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலிவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம்

செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதோடு,

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும்


இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் பாராட்டு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் பாராட்டு

இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் பாராட்டு

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவும், தற்போது

எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயாரென ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.

அத்துடன், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் இலங்கையின் முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டிருக்கும் மதிப்பீட்டு அறிக்கை இவ்வருட

இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்படுமென்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் பாராட்டு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டதைப் பாராட்டி, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர்

திருமதி. எர்சூலா ஃவொன் டேயர் லைன் (Ursula von der Leyen) அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வாழ்த்துச் செய்தியில்,

”இலங்கை மக்கள் எதிர்பாரா சவால்களைச் சந்தித்துள்ளனர். இந்த நெருக்கடியிலிருந்து மீள, இலங்கை இந்தக் காலகட்டத்தில் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்.

நாட்டை மீண்டும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவும், நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் தேவையான மறுசீரமைப்புகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

சட்டத்தின் ஆட்சி, கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் உரிமை, அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்துதல், அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்தல் என்பன இச்செயன்முறையின் மிக முக்கியமான அம்சங்களாகும்.

அதனடிப்படையில் இலங்கையின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெகு விரைவில் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளும்.

இலங்கையரின் குறுகிய மற்றும் நீண்டகால நலன்களை உறுதி செய்யும் வகையில், நிலையான கொள்கைகளை அறிமுகம் செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்.

எதிர்பாராத பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு சர்வதேச நிதி நிறுவனங்களுடனும், கடன் வழங்குனர்களுடனும் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்க வேண்டுமென நான் வாழ்த்துகின்றேன்.

எமது உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பொதுவான விருப்புகளின் அடிப்படையில் தொடர்ந்தும் உங்களுடன் மிக நெருக்கமாக பணியாற்ற நான் விரும்புகின்றேன்.”


என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் திருமதி. எர்சூலா ஃவொன் டேயர் லைன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி

பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி

பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி வழங்கும் வேலைத்திட்டம் ஆயிரம் பாடசாலைகளில் இன்று (03) தொடக்கம் ஆரம்பிக்கப்படுவதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் மந்த போசாக்கு நிலைமைக்கு தீர்வாக 2 ஆயிரம் சமூக வைத்திய சேவை ஊழியர்களின் பங்களிப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும்
நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி மேலும் தெரிவித்தார்.

உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சி திணறும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சி திணறும் இலங்கை

உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சி திணறும் இலங்கை

இலங்கை வரும் உலலாச பயணிகள் வருகை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. .

இதனால் உல்லாச பயணிகள் மூலம் இலங்கைக்கு ,கிடைக்க பெறும் ,அண்ணிய செலாவணி குறைவடைந்துள்ளது .

இலங்கையில் உல்லாச பாயணிகள் வருகை மூலமே, பல மில்லியன் பணத்தை ஆண்டு தோறும் ஈட்டி வந்தது .


தற்போது அவை வீழ்ச்சியடைந்துள்ளதால் இலங்கை பொருளாதாரத்தில் திணறிய வண்ணம் உள்ளது .

தென் பகுத்தியில் நிரம்பி வழியும் குளங்கள்
Posted in இலங்கை செய்திகள்

தென் பகுதியில் நிரம்பி வழியும் குளங்கள்

தென் பகுத்தியில் நிரம்பி வழியும் குளங்கள்

தென் பகுதியில் நிரம்பி வழியும் குளங்கள் .

கடந்த சில நாட்களாக தைக்களவு மழை வீழ்ச்சி இடம்பெற்று வருவதால் ,குளங்கள் நிரம்பி வழிகின்றன .

இதனை அடுத்து நீர் நிலை பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன .

மேலும் குளங்களின் வான் கதவுகள் திறந்து வீட்டா பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இனம்பெற்ற வண்ணம் உள்ளது .

கடந்த தினம் மட்டும் நூறு மில்லி மீட்டர் மலை வீழ்ச்சி கிடைத்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

பொலி கண்டி கடல்கரையில் 217 கிலோ கஞ்சா மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பொலி கண்டி கடல்கரையில் 217 கிலோ கஞ்சா மீட்பு

பொலி கண்டி கடல்கரையில் 217 கிலோ கஞ்சா மீட்பு

இலங்கை வல்வெட்டித்துறை பொலிகண்டி கடல்கரை பகுதியில் 217 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகள் மீட்க பட்டுள்ளன .

இந்த பொதிகள் தொடர்பாக புலனாய்வு துறையினருக்கு கிடைக்க பெற்ற ,இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தினர் .

அப்பொழுதே இவை மீட்க பட்டுள்ளன .

இந்த கஞ்சா கடத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கை தற்போது கஞ்சா போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்று வருகிறது .இவை ஊடாக மேலும் அம்பல பட்டுள்ளது .