வௌ்ளத்தினால் 7 ஆயிரம் பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வௌ்ளத்தினால் 7 ஆயிரம் பேர் பாதிப்பு

வௌ்ளத்தினால் 7 ஆயிரம் பேர் பாதிப்பு

பலத்த மழை மற்றும் வௌ்ளத்தினால் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2271 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வௌ்ளத்தினால் 7 ஆயிரம் பேர் பாதிப்பு

முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

33 வீடுகள் அனர்த்தத்தில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

212 குடும்பங்களை சேர்ந்த 700 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

தாயை கொலை செய்த மகன் தலை மறைவு

தாயை கொலை செய்த மகன் தலை மறைவு

அலவ்வ, மாபோபிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் அவரது மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாபோபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாயை கொலை செய்த மகன் தலை மறைவு

கொலையை செய்த சந்தேக நபர் உயிரிழந்தவரின் இளைய மகன் என்பதும், அவர் குடித்துவிட்டு வந்து தனது தாயுடன் தகராறு செய்த நிலையில் கொலையை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

கிளிநொச்சியில் 23 குடும்பங்கள் இடம்பெயர்வு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் 23 குடும்பங்கள் இடம்பெயர்வு

கிளிநொச்சியில் 23 குடும்பங்கள் இடம்பெயர்வு

கிளிநொச்சி – இரணைமடு குளத்தை அண்மித்த ஐயன்கோவில் கிராமத்தை சேர்ந்த 23 குடும்பங்கள் வௌ்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளன.

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளமையால், தாழ்நிலப் பகுதியிலுள்ள ஐயன்கோவில் கிராம மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐயன்கோவில் கிராமத்தை சேர்ந்த 23 குடும்பங்களின் 70 பேர் அருகிலுள்ள பாடசாலையொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள்

வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள்

வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு
மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலையை எட்டியுள்ளன.

நேற்று பகல் திடீரென வந்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம். பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம் மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

இதேபோன்று குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலைமையில் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளன

வீடியோ

லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு
Posted in இலங்கை செய்திகள்

லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு

லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு

நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் தலா ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக நீர்த்தேக்கத்திற்கு கீழே கிரிந்தி ஓயாவின் இருபுறமும் உள்ள தாழ்நில மக்கள் இவ்விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு திஸ்ஸமஹாராம பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண் மரணம் தொடர்பில் வௌியான தகவல்கள்

பெண் மரணம் தொடர்பில் வௌியான தகவல்கள்

கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவர் நேற்று (15) இரவு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

75 வயதுடைய பெண் ஒருவரே இவ்வா்று உயிரிழந்துள்ளதுடன், பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய கருவாத்தோட்டம் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

பெண் மரணம் தொடர்பில் வௌியான தகவல்கள்

இசை ஆசிரியையான குறித்த பெண் கணவரின் மரணத்திற்குப் பின்னர் தனியாக வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் முகம் மற்றும் கைகளில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெண் இறந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் டிரிப் சுவிட்ச் அணைக்கப்பட்டு இருந்ததையும், மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததையும் பொலிசார் அவதானித்துள்ளனர்.

மின்சாரத்தில் தரையை சுத்தம் செய்யும் இயந்திரம் மூலம் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், அந்த உபகரணத்தின் வயரும் அறுந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண் மர்மமான முறையில் மரணம் சடலம் மீட்பு

பெண் மர்மமான முறையில் மரணம் சடலம் மீட்பு

கொழும்பு 07, விஜேராம வீதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் சனிக்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மித்ராணி பெர்னான்டோ ஸ்மின் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119க்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த

பெண்ணின் சடலம் தரையில் கிடந்ததாகவும், வாய் மற்றும் மார்புப் பகுதியில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் குருந்துவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

தாயை கொலை செய்த மகள் கைது

தாயை கொலை செய்த மகள் கைது

கஹவத்தை, வெல்லதுர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து பெண்ணொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி அதிகாலை கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் 71 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் அவரது வீட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.

குறித்த பெண் தனது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், மகள் வீட்டை விட்டு வெளியே சென்ற போதே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தாயை கொலை செய்த மகள் கைது

இந்த சந்தேகத்திற்கிடமான கொலைச் சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் குறித்த பெண்ணின் மகளே இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி இன்று அதிகாலை 38 வயதான சந்தேக நபரான மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் இன்றைய தினம் (16) இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

மாத்தறையில் துப்பாக்கி சூடு

மாத்தறையில் துப்பாக்கி சூடு

மாத்தறை – வெலிகம பகுதியில் நேற்று துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தினரை தயார்ப்படுத்த வேண்டும்

இராணுவத்தினரை தயார்ப்படுத்த வேண்டும்

உலக சவால்களை வெற்றிக் கொள்ளக்கூடிய வகையில், இராணுவத்தினரை புதிய தொழில்நுட்ப முறைமையின் கீழ் தயார்ப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவிலான முப்படைச் செயற்பாடுகள் தொடர்பில் பார்க்கும் போது இந்த வருட இறுதியில் உலகம் முழுவதும் உள்ள ஆயுத படையினர்

முகங்கொடுக்கவிருக்கும் புதிய சவால்கள் தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல்களின் அரசியல் நிலைமையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகளவில் அனுதாபத்தை

தேடிக்கொள்வதற்கான சில நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்

சீனாவின் மற்றுமொரு ஆய்வு கப்பல் வருகை
Posted in இலங்கை செய்திகள்

சீனாவின் மற்றுமொரு ஆய்வு கப்பல் வருகை

சீனாவின் மற்றுமொரு ஆய்வு கப்பல் வருகை

சீனாவின் மற்றுமொரு ஆய்வு கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதியளவில் அந்த கப்பல் இலங்கையை அண்மிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷியாங் யாங் ஹோங் 03 என்ற ஆய்வு கப்பலே இலங்கைக்கு வரவுள்ளது. அந்த கப்பல் எதிர்வரும் மே மாதம் வரையில் இந்து சமுத்திரத்தில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது

முட்டையால் பேக்கரி பொருட்கள் விலையேறும் அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

முட்டை இறக்குமதிக்கு அனுமதி

முட்டை இறக்குமதிக்கு அனுமதி

முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் இந்த அனுமதியினை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்

வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்

வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் பகுதிகள் ,கடைகள் வீடுகள் நீரில் மூழ்கின .தமிழர் பகுதியில் கடும் பதற்றம்.

வெள்ள பெருக்கு காரணமாக தமிழர் பகுதி கடும் பதற்றத்தில் உறைந்துள்ளது ,வீடுகள் கடைக்குள் நீர் புகுந்துள்ளதினால் ,சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன .

மக்கள் சொல்லென்ன துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்

தாழ்நில பகுதிகள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளதால் மக்கள் அங்கிருந்து அகதிகளாக நகர்ந்துள்ளனர் .

பாம்புகள் விசா ஜந்துக்கள் நீரோடு வருவதால் ஒருவித பதட்டத்தில் மக்கள் உறைந்துள்ளனர் .

மாங்குள குளம் வான் பாய்வதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்

வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்

வீடியோ

வாழ்நாள் தலைவராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
Posted in இலங்கை செய்திகள்

வாழ்நாள் தலைவராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

வாழ்நாள் தலைவராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாழ்நாள் தலைவராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டு‌, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

அதிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்தவை, வாழ்நாள் தலைவராக தெரிவு செய்வதற்கான பிரேரணையை காமினி லொக்குகே முன்மொழிந்தார்.

அதனை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழிமொழிந்தார்.

video

கீரிமலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

கீரிமலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு

கீரிமலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை, நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் வெள்ளிக்கிழமை (15) அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கீரிமலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு

இதனையடுத்து ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 29 ஏக்கர் நிலம் அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி

வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி

கிளிநொச்சியில், பெய்த கடும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் வியாழக்கிழமை (14) கடும் மழை பெய்தது.

இதனால், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி

இதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ள்ளாகியுள்ளனரை். பலர் தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

அத்தோடு தர்மபுரம் மத்திய கல்லுரி மற்றும் தருமபுரம் இலக்கம் ஒன்று
பாடசாலைக்கு உள்ளும் மழைநீர் உட்புகுந்தமையால் இப் பாடசாலைகளுக்கு இன்று(15) விடுமுறை வழங்கப்பட்டது.

பாதிப்புக்கள் தொடர்ப்பாக கிராம சேவையாளர் பிரதேச செயலகங்கள் விபரங்களை பெற்று வருகின்றனர்.

வீடியோ

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, இன்றைய (15) மதிய உணவு நேரத்தில் விமான நிலைய வருகை முனையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

       கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட "விமான நிலைய கூட்டு தொழிற்சங்கம்" இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  பதற்றம் 

         இந்தப் போராட்டத்தின் பின்னர் பேசிய விமான நிலைய கூட்டுத் தொழிற்சங்கத்தின் தலைவர்  தம்மிக்க பெர்னாண்டோ, “எங்களின் இந்தப் புதிய தொழிற்சங்கத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டுப் பேணி வருகின்றார். 
எங்கள் சமூகம் எந்த ஒரு தாய் நிறுவனத்திற்கும் சொந்தமானது அல்ல.  

              எங்களுக்கான சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும் என்பதே இன்று இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. விமான நிலைய ஊழியர்களுக்கு 06 வருடங்களாக சம்பள உயர்வு கிடைக்கவில்லை” என்றார். 

            “எனவே, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பள உயர்வு குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகையை அங்கு குறிப்பிட வேண்டும்.

 இதனை நிறைவேற்றாவிட்டால் 2024 ஜனவரி 03 ஆம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளோம்” என்றும் அவர் கூறினார்.

         இன்று குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களையே இந்த போராட்டத்திற்கு அழைத்துள்ளோம் என்றும், விமான நிலையத்தின் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை என்றும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

         அதன் பின்னர், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அஜித் கல்கெட்டியவிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.  
நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 6 மாதங்களில் கடுமையாகும் சட்டம்

இலங்கையில் 6 மாதங்களில் கடுமையாகும் சட்டம்

இலங்கையில் சட்டம் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 06 மாதங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

அதற்கு இடையூறு செய்யும் எந்த தரப்பினரிடமும் தானும் பொலிஸாரும் சரணடையப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

வீடியோ

தீப்பிடித்த படகினை தேடும் கடற்படையினர்
Posted in இலங்கை செய்திகள்

காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைது

காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் நேற்று(14) மாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறுபேரை, எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.

தமிழகத்தின் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீரியல் வளத் திணைக்களத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வீடியோ