Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ரணில் இன்று சிஐடயில் ஆயர்
ரணில் இன்று சிஐடயில் ஆயர்
ரணில் இன்று சிஐடயில் ஆயர் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு
அளித்துள்ளதுடன், அதற்கமைய முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன
தமிழரசின் மேயர்தொடர்பில் வௌியான அறிவிப்பு
தமிழரசின் மேயர்தொடர்பில் வௌியான அறிவிப்பு
தமிழரசின் மேயர்தொடர்பில் வௌியான அறிவிப்பு ,யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கட்சி மட்டத்தில் யாழ் மாநகர சபை மேயர் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரும் யாழ் மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ் மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் தெரிவுகள் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாகன விபத்தில் 3பேர் பலி
வாகன விபத்தில் 3பேர் பலி
வாகன விபத்தில் 3பேர் பலி ,நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துகளில் இளைஞர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மாங்குளம், அம்பன்பொல மற்றும் வரகாபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று (10) இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
மாங்குளம் – முல்லைத்தீவு வீதியில் உள்ள ஒலுமடு பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, பாலத்தின் கொங்கிரீட் தூணில் மோதியதில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பாலத்தின் அடியில் உள்ள ஆற்றில் விழுந்து இறந்தார்.
உயிரிழந்தவர் பரந்தன் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கமுவ-மொரகொல்லாகம வீதியில் உள்ள வலத்வெவ பகுதியில், மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வடிகானில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த செலுத்துனர், எஹெட்டுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவர் அபோகமவைச் சேர்ந்த 65 வயதானவர் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கொழும்பு-கண்டி வீதியில் உள்ள தொலங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல், அது வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த ஒரு கெப் வண்டியில் மோதியது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயமடைந்து வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இறந்தவர் நெலும்தெனிய பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரியவந்துள்ளது.
கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்
கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்
கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம் ,கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ஆராய்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கண்டி நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்போரா காரணமாக இந்த ரயில்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சீர் செய்யப்பட்ட பின்னர் வளமை போன்று ரயில்வே சேவைகள் ஆரம்பிக்கப்படும் என அந்த துணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த திடீர் சாலை தடைப்பட்டதனால் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்..
தமது தொழில் பற்றி வேகமாக ஈடுபட்டு வருவதாக விரைவில் இந்த சேவைகள் நிகழும் வழமைக்கு இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு கஞ்சி கடையில் இடம் பெற்று வருகின்ற ரயில் சேவை அதிகமான மக்கள் பயணித்து வருவதும் கண்டு கொழும்பு கடையிலான சேவைகளும் பலமான பாதிப்புக்கு உள்ளாக கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் அங்கு குளிர்ந்த பயணிகள் பெரும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன்
மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன்
மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன் ,குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் காரணமாக, கணவன் ஒருவர் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (09) ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டுபிடிய, உடவெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடவெலவத்த, ஹட்டுபிடிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மரணமடைந்தவரின் உடல், நீதவான் பரிசோதனைக்காக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான கணவனை கைது செய்வதற்காக ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கீதா கோபிநாத் இலங்கை விஜயம்
கீதா கோபிநாத் இலங்கை விஜயம்
கீதா கோபிநாத் இலங்கை விஜயம் ,சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமைகள், IMF இன் நிதி உதவி திட்டங்கள், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான
சீர்திருத்தங்கள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ள இந்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, கீதா கோபிநாத் இலங்கை அரசாங்க அதிகாரிகள், மத்திய வங்கி ஆளுநர், மற்றும் பிற பங்குதாரர்களுடன் சந்திப்பு நடத்தி, IMF
இன் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (Extended Credit Facility) மற்றும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலாநிதி கீதா கோபிநாத், 2022 ஜனவரி 21 முதல் IMF இன் முதல் துணை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்னர், 2019 முதல் 2022 வரை IMF இன் தலைமை பொருளியலாளராக பணியாற்றினார்.
5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது ,இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து இலங்கையர்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகு மூலம் இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரையை அடைந்த இந்தக் குழுவினர், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் இரண்டு சிறு குழந்தைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் இலங்கை தமிழ் அகதிகளுக்காக நிறுவப்பட்ட மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெசாக் தினத்தைமுன்னிட்டு கைதிகள் விடுவிப்பு
வெசாக் தினத்தைமுன்னிட்டு கைதிகள் விடுவிப்பு
வெசாக் தினத்தைமுன்னிட்டு கைதிகள் விடுவிப்பு ,வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சிறைச்சாலை அதிகார மையங்கள் தெரிவித்திருக்கின்றன.
சிறைச்சாலை குற்றச்சாட்டு
ஆண்டுதோறும் சிறைச்சாலைகளில் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் .நன்னடத்தை காரணமாக ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
அவ்விதம் வெசாக் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் விடுதலை செய்யக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.
சிறைச்சாலை அதிகாரிகள் தற்போது மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.
விடுதலை செய்ய நடவடிக்கை
நற்சான்றிதழ் அடிப்படையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் நல்லொழுக்கத்தின் அடிப்படையில் .விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
விடுதலை செய்யப்பட்டு அவரது குடும்பங்கள் இளைய வாய்ப்புகள் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மக்களுக்கு மிக பெரும் நெருக்கடியை விடுவித்து பிரிந்த உறவுகளுடன் சேரும் நிலைக்கு தள்ளி மகிழ்வை வழங்கி வருகிறது .
இதுவே இன்றைய காலத்தின் முன்னோடி தேவையாக உள்ளதாக பார்க்க முடிகிறது .
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

போராட்டம் நடத்த 27பேருக்கு தடை
போராட்டம் நடத்த 27பேருக்கு தடை ,போராட்டம் நடத்துவதற்கு 27 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாய்க்கு போலீசார் தெரிவித்துள்ளனர் .
நீதிமன்றத்தினால் நேற்று இந்த 27 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
தையிட்டி திச விகாரையில் இன்று நாளையும் போராட்டம் செய்ய வேண்டாம் என்று இந்த தடை உத்தரவு அவசரமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் காணிகளில் அடாத்தாக புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ அரசியல்வாதிகள் குறித்து ,எச்சரித்து வருகின்ற நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது .
நாடளாவ ரீதியில் தமிழ் பகுதிகளில் புத்தக விகாரர்களின் நிறுவி சிங்களமயமாக்கும் நடவடிக்கையில் ,இலங்கை ஆளுமை அதிகார வர்க்கங்கள் முனைந்து வருகின்றனர் .
அந்த வகையில் தற்பொழுது தமிழரின் யாழ்ப்பாண பகுதி ,தையிட்டியில் இந்த புத்தக விகாரை அமைத்ததற்கு எதிராக பல கட்சிகள் தமது கடும் கண்டனங்களை தெரிவித்தும் வந்தனர்.
அவ்வாறான நிலையில் தமிழர் பகுதி சிங்களமயமாக்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் ,அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை அடுத்து மல்லாக நீதிமன்றத்தின் விசேட உத்தரவின் கோவில் தற்பொழுது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஜனநாயக வழிக்கு நீதிமன்றங்களும் தடையாக இருக்கிறதா இந்த கேள்வி இதன் உனக்கு எழுப்பப்பட்டுள்ளது மக்கள் தெரிவிக்கின்றனர் .
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

தாக்குதல் பொலிசார் மீது
தாக்குதல் பொலிசார் மீது
தாக்குதல் பொலிசார் மீது 5சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகம் அவர்களை தாம் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்த போலீசார் மீது போதைவஸ்து நோக்கி துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் பாடத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது எடுத்தேன் குறித்த சந்தேகம் அவர் பெருவழிப் போலீசார்னார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள் மீது அவர்களை தேடிச் சென்ற காவலதுசாரியினர் மீது தாக்குதல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
போத வஸ்து பாவனைகள் எமது நாட்டிலே அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதான சந்தேகம் அவர்கள் போலீசார் விசாரணை அடுத்து தற்பொழுது நீதிமன்றத்தில் பாரம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இதற்கு முன்னரும் இவ்வாறு போலீசார் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
மேற்படி சம்பவம் இலங்கை உள்ள செய்திகளும் தலைப்புச் செய்திகள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிட தக்கது .
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

இறந்து 8நிமிடங்களில் உயிர்பெற்ற பெண்
இறந்து 8நிமிடங்களில் உயிர்பெற்ற பெண்
இறந்து 8நிமிடங்களில் உயிர்பெற்ற பெண் ,கொலராடோவைச் சேர்ந்த 33 வயது பிரியானா லாஃபர்டி, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர், சுமார் 8 நிமிடங்கள்
மருத்துவ ரீதியாக உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், தனது நினைவு மறுபக்கத்தில் இருந்த அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரியானா, தனது உடல் “கைவிட்ட” நிலையில், மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
அப்போது, “தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்கும் ஒரு குரலை கேட்டதாகவும், பின்னர் முழு இருளில் மூழ்கியதாகவும் கூறினார்.
அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து, காலமற்ற ஒரு பரிமாணத்தில் மிதந்ததாக உணர்ந்தார்.
திடீரென உடலில் இருந்து பிரிக்கப்பட்டேன்
“நான் திடீரென உடலில் இருந்து பிரிக்கப்பட்டேன். என் மனித உருவை நினைவில் கொள்ளவில்லை.
முற்றிலும் அசையாமல் இருந்தேன், ஆனால் முழுமையாக உயிருடன், விழிப்புடன், முன்பை விட அதிகமாக உணர்ந்தேன்.
வலி இல்லை, ஆழமான அமைதியும் தெளிவும் மட்டுமே இருந்தது,” என அவர் விவரித்தார்.
பிரியானா, “மரணம் ஒரு மாயை, ஏனெனில் நமது ஆன்மா ஒருபோதும் இறப்பதில்லை. நமது நினைவு உயிருடன் இருக்கிறது.
அந்த நிலையில், நமது எண்ணங்கள் யதார்த்தத்தை வடிவமைக்கின்றன,” என்று கூறினார்.
இந்த அனுபவம், மனித வாழ்க்கையின் தற்காலிக மற்றும் புனிதமற்ற தன்மையை உணர வைத்ததாகவும், ஒரு உயர்ந்த புலனறிவு அல்லது இருப்பு நம்மை வழிநடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரியானாவின் நிலை, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா, கழுத்து, உடல், மற்றும் கைகளை பாதிக்கும் அரிய நரம்பியல் கோளாறாகும், இது திடீர் தசை இழுப்புகளையும் சுருக்கங்களையும் ஏற்படுத்துகிறது.
இதற்கு முழுமையான சிகிச்சை இல்லை என்றாலும், அறிகுறிகளை நிர்வகிக்க மருந்துகள் உதவலாம்.
2017இல், அவரது உடலில் சோடியம் அளவு ஆபத்தான அளவிற்கு (115 மில்லி ஒவ்வொரு லீற்றர்) குறைந்து, இதயம் 8 நிமிடங்களுக்கு நின்றது.
மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவங்கள் (NDEs) சிக்கலானவை மற்றும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை.
ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் பல்கேரியாவில் உள்ள 25 மருத்துவமனைகளில் 567
நோயாளிகளை உள்ளடக்கிய ஆய்வு, இதயம் நின்ற பிறகும் மூளை செயல்பாடு 60 நிமிடங்கள் வரை தொடரலாம் எனக் கண்டறிந்தது.
இந்த ஆய்வு, மறுசீரமைப்பு (CPR) நடைபெறும் போது EEG மூலம் மூளை அலைகளை பதிவு செய்து, 40% நோயாளிகளுக்கு நினைவு தொடர்பான மூளை செயல்பாடு இருப்பதை உறுதிப்படுத்தியது.
பிரியானாவின் வாழ்க்கை
இந்த அனுபவம் பிரியானாவின் வாழ்க்கையை மாற்றியது. “என்னை பயமுறுத்தியவை இனி என்னை ஆட்டிப்படைக்கவில்லை, நான் துரத்தியவை இனி முக்கியமாகத் தோன்றவில்லை,”
என அவர் கூறினார். மரணத்திற்கு அருகிலுள்ள இந்த அனுபவம், அவருக்கு மரண பயத்தை அகற்றி, ஆன்மீக தெளிவை அளித்ததாக தெரிவித்தார்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்
பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்
பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்,புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்திற்கு அருகில் நேற்று (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம், பாலாவி, ஹஸைனியாபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது ஜமீல் (வயது 56) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த விபத்தில்
உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தனது வீட்டிலிருந்து புத்தளம் நகரில் உள்ள வியாபார நிலையத்திற்கு ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வவுனியாவிலிருந்து
தனியார் பேருந்து விபத்து
புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜமீல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து புத்தளம் தலைமையக பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திலும் வைத்தியசாலையிலும் மரண விசாரணையை மேற்கொண்ட புத்தளம் பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.
விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம்
பிரேத பரிசோதனையில், விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் நிகழ்ந்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் தலைமையக பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொகவந்தலாலையில் அறுவருக்கு சிக்கன்குன்யா
பொகவந்தலாலையில் அறுவருக்கு சிக்கன்குன்யா
பொகவந்தலாலையில் அறுவருக்கு சிக்கன்குன்யா ,பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்கன்குன்யா தொற்றியிருப்பது இனங்காணப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை, மாவட்ட மருத்துவமனையில் பணிபுரியும் 06 தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சிக்கன்குனியா நோய் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு திட்டம் திங்கட்கிழமை (09) அன்று
தொடங்கப்பட்டது என்று பொகவந்தலாவை மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர் ஏ.எஸ்.கே. ஜெயசூரியா தெரிவித்தார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட 06 தொழிலாளர்களும் பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஊழியர்களுக்கு தற்போது சிகிச்சை
மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய மாவட்ட மருத்துவ அதிகாரி, இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட சுகாதார இயக்குநருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அலுவலக அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு திட்டத்தைத் திங்கட்கிழமை தொடங்கினர் என்றும் மேலும் கூறினார்.
அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு ,2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024 வருடத்தின் முதல் மாதங்களில் 1,218.07 பில்லியனாக இருந்த அரச வருமானம், இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 236.60 பில்லியன் ரூபாவால்

அதிகரித்து 1,454.67 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. இது 19.42% சதவீத அதிகரிப்பாகும்.
2025 ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 463.19 பில்லியன் ரூபா வரி மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமாகும். குறிப்பாக அந்த மாதத்தில் வாகன
இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் காரணமாக இவ்வாறு வரி வருமானம் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
மஹிந்தானந்த மனுத்தாக்கல் சிறைத்தண்டனையை எதிர்த்து
மஹிந்தானந்த மனுத்தாக்கல் சிறைத்தண்டனையை எதிர்த்து
மஹிந்தானந்த மனுத்தாக்கல் சிறைத்தண்டனையை எதிர்த்து ,உயர் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன்
ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.
அதற்கமைய, குறித்த வழக்கு விசாரணையில் அவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்
உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
CIDயில் முன்னிலையானார் கம்மன்பில
CIDயில் முன்னிலையானார் கம்மன்பில
CIDயில் முன்னிலையானார் கம்மன்பில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன் விடுவிப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஊடகங்களுக்குப் கருத்து வௌியிட்ட உதய கம்மன்பில, மேற்படி 323 கொள்கலன்களின் பட்டியலைப் பகிரங்கப்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பான முடிவுகளை எடுத்த அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக
வெளிநாட்டு பயணத் தடையை விதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தன்னிடம் உண்மையான சாட்சியங்கள் இருப்பதாகவும், ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டை ஒருபோதும் கூற மாட்டேன் என்றும்,
இந்த விடயத்தில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

வேலைநிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் சங்கம்
வேலைநிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் சங்கம்
அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அரச கால்நடை வைத்தியர்களுக்கான தனி சேவை அரசியலமைப்பை அமுல்ப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதைத் தொடங்கத் தவறியது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இன்று காலை 6 மணிக்கு இந்த வேலைநிறுத்தம் ஆரம்பமானது.
அதன் தலைவர் வைத்தியர் உபுல் ரஞ்சித் குமார, இது அனைத்து அரச கால்நடை அலுவலகங்களின் பணிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.
இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் துறையில்
இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் துறையில் ,இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் துறையில் இணைக்க திட்டம்
இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைத் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வௌியிடும் போது, இவர்களை 5 வருட காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகக்கூடிய அபாயத்தில் இருக்கும் சுமார் 7,880 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது
சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது
சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது ,வெளிநாட்டில் இருந்து இலங்கை காட்டுநாயக்க விமலின் ஊடாக சீக்ரெட் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இவரிடம் 2700 தொகையான சிகரெட்டுக்கள் கொண்டுவரப்பட்ட பொழுது, இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கூலிக்காக வேலை செய்தாரா அல்லது இதன் அடிப்படையில் தற்போது விசாரணை இடம்பெற்று வருகின்றன .
அதி விலை உயர்ந்த சிகரெட் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் என்பது மிகப்பெரும் வாடிக்கையான ஒரு கடத்தல் நாடகமாக இருக்கலாம் எனவும், அதனை சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால் மட்டுமே ஏனைய விடிய எங்களுக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இவர் கடத்தலில் ஈடுபட்டுள்ள செய்ய ;ல் மாபியாக்கள் உள்ளதாக நம்ப படுகிறது .
தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருவதும் ,பெரும்தொகையான சிகரெட்டுகள் தங்க என்பன சிக்கிக் கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கடத்தல்களின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் பாதாள உலகம் குழு இருப்பதாக நம்பப்படுகிறது.
எனினும் இன்று வந்து சிக்கிய 20 வயது வாலிபர் எதன் அடிப்படையில் எங்கிருந்து இந்த சிகரெட் கொண்டு வந்தார் என்பது தொடர்பாக முழுமையான தகவல் வெளியாகவில்லை.
தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளாக்கப்பட்டு வருகிறது . பின்னர் நீதிமன்றத்தில் பார்ப்படுத்த படும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.
35 ஆண்டுகளின் பின் யாழில் ஆரம்பித்த சேவை
35 ஆண்டுகளின் பின் யாழில் ஆரம்பித்த சேவை
35 ஆண்டுகளின் பின்னர் மீளவும் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சேவைகள்.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத பொதிகள் சேவைகள் 35 ஆண்டுகளுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை (08) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்
குமார ஜெயக்கொடி ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டு குறித்த சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
அதேவேளை, புகையிரத நிலையத்தில் நூலகம் ஒன்றினையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து புகையிரத நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.
நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோரும்,
தேசிய மக்கள் சக்தியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்







































