இலங்கை இராணுவ சிப்பாய் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவ சிப்பாய் கைது

இலங்கை இராணுவ சிப்பாய் கைது

இலங்கை இராணுவ சிப்பாய் கைது ,ஒரு பாடசாலையில் படிக்கும் 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அத்தகைய மற்றொரு குழந்தையை பாலியல் .

பாடசாலையின் நிர்வாகக் குழு

துஷ்பிரயோகம் செய்ததாக பாடசாலையின் நிர்வாகக் குழுவின் பொருளாளராக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் 62 வயதுடைய மாற்றுத்திறனாளி.

பாடசாலையில் செவித்திறன் குறைபாடுள்ள மாணவனை அவருடைய தாயார் அழைத்துச் செல்ல வந்தபோது

குழந்தையை காணவில்லை, பின்னர் அவர் பாடசாலையில் கிணற்று இருக்கும் பக்கத்தில் இருந்து ஓடிவந்துள்ளார்.

அதுதொடர்பில் மகனிடம் தாயார் வினவியுள்ளார்.

அதன்பின்னர், அந்த தாயார் அளித்த புகாரில் சந்தேக நபர் பல கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள இந்தக் குழந்தைகளிடமிருந்து வாக்குமூலங்களை எடுக்கும்போது, ​​

சைகை மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகவும், பாடசாலையின் நிர்வாகக் குழுவின் பொருளாளராகச்

செயல்படும் நபர் இந்த மைனர் சிறுவர்கள் மீது பல சந்தர்ப்பங்களில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் அடிக்கடி பாடசாலைக்கு வருவார், இருட்டிய பிறகு திரும்புவார், கூடுதலாக, அவர் தங்குமிடங்களுக்கு வந்து,

கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு விளக்குகளை அணைப்பார் என்று வாக்குமூலங்கள் மேலும் கூறுகின்றன.

ஹட்டனில் வீடுபுகுந்து கைவரிசை யுவதிசிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

ஹட்டனில் வீடுபுகுந்து கைவரிசை யுவதிசிக்கினார்

ஹட்டனில் வீடுபுகுந்து கைவரிசை யுவதிசிக்கினார்

ஹட்டனில் வீடுபுகுந்து கைவரிசை யுவதிசிக்கினார் ,ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோட்சிலி மாஸ்க் டிவிசனில் வீடொன்றுக்குள் புகுந்து

களவாடிய ஒரு தொகை பணம்

களவாடிய ஒரு தொகை பணத்துடன் 21 வயது யுவதியை ஹட்டன் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் வியாழக்கிழமை(18) மாலை கைது செய்துள்ளனர்.

வீட்டுக்குள் புகுந்த பக்கத்து வீட்டு யுவதி, அங்கு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை எடுத்துள்ளார்.

அதிலிருந்த 95 ஆயிரம் ரூபாய் பணம் , வங்கி தானியங்கி பணம் பெறும் அட்டை ( ATM CARD)

ஆள் அடையாள அட்டை

மற்றும் ஆள் அடையாள அட்டை என்பன அந்த யுவதியால் திருடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டதன் பின்னர், அந்த பெட்டியை தேயிலை செடிகளுக்குள் வீசிவிட்டுள்ளார்.

அதன் பின்னர் குறித்த ATM அட்டையை பயன்படுத்தி ஹட்டனில் உள்ள வங்கி ஒன்றில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். விசாரணைகளின் பின்னர், அந்த பாதுகாப்பு பெட்டகமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து வங்கியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவின் உதவியுடன் சந்தேக நபரான 21 வயதுடைய யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த யுவதியிடமிருந்து 195,000 ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளனர். அந்த யுவதி, ஹட்டனில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான அந்த யுவதியை ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் எம்பி கனகசபை காலமானார்
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் எம்பி கனகசபை காலமானார்

முன்னாள் எம்பி கனகசபை காலமானார்

முன்னாள் எம்பி கனகசபை காலமானார் ,மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் .

பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை

பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, தனது 86 ஆவது வயதில் நேற்று (19) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

1939.03.20 அன்று பிறந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரான இவர் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்

தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டி

தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்தேசியத்தின் தீவிர பற்றாளராய் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் பயணித்த அன்னாரது இழப்பு பலரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது.

பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு ,யாழ். ஏழாலை மயிலங்காடு ஞான வைரவர் ஆலய நித்திய பூசகர் ஆலய அர்த்த மண்டபத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மானிப்பாயைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன்

இவ்வாறு உயிரிழந்தவர் கோவில் வீதி, சுதுமலை தெற்கு, மானிப்பாயைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன் (வயது 29) என்பவராவார்.

குறித்த, பூசகர் இருமல் சளி காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை மானிப்பாயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

பின்னர் மறுநாள் சளிக்கு ஆவியும் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆலயத்துக்கு பூசைக்கு சென்ற நிலையில், அர்த்தமண்டபத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை

மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

உடற்கூற்று பரிசோதனையில் நுரையிரலில் இரத்த அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை (21) நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

மின்சார சபையை மறுசீரமைக்கும் மசோதாவை

அதேநேரம், மின்சார சபையை மறுசீரமைக்கும் மசோதாவை எதிர்த்து மின்சார தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி

முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார சபை ஊழியர்கள் குழுக்களாக இணைந்து மின்சார சபை தலைமையகத்தின் முன் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

புதிய மின்சார சபை

புதிய மின்சார சபைச் சட்டத்தின் பாதகமான விளைவுகளை எதிர்த்து தொடர்ந்தும் போராடுவோம் என மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

சட்டத்தரணியின் வீட்டில் துப்பாக்கிகள்
Posted in இலங்கை செய்திகள்

சட்டத்தரணியின் வீட்டில் துப்பாக்கிகள்

சட்டத்தரணியின் வீட்டில் துப்பாக்கிகள்

சட்டத்தரணியின் வீட்டில் துப்பாக்கிகள் ,இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து இலங்கையிலும்

துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர்

வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்தபோது திடீரென மாரடைப்பால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவர் இருந்துள்ளார்.

இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 17ஆம் திகதி ரோந்து பணியில் இருந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சட்டத்தரணி உயிரிழந்த வீட்டை சோதனை செய்தபோது பல துப்பாக்கி பாகங்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதில், போர 12 ரக துப்பாக்கி ஒன்று, ரிப்பீட்டர் வகை துப்பாக்கி ஒன்று, போர 12 ரக துப்பாக்கிகளின் 6 அசல் பாகங்கள், 11 பீப்பாய்கள், 2 சிறிய துப்பாக்கிகள்,

போர 12 மற்றும் 16 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 440 புதிய தோட்டாக்கள் உட்பட பல துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் பாகங்கள் அடங்கியுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிகள் சில குற்றச் செயல்களுக்காக வழங்கப்பட்டதா

இந்தத் துப்பாக்கிகள் சில குற்றச் செயல்களுக்காக வழங்கப்பட்டதா என்பதையும், இவற்றுடன் மேலதிக துப்பாக்கிகள் சில குழுக்களுக்கு

வழங்கப்பட்டதா என்பதையும் கண்டறிய விசாரணைகள் நடைபெறுவதாக இரத்தினபுரி தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன சுமனசிறி கூறினார்.

இத்துப்பாக்கிகளில் பல இலங்கையில் தயாரிக்கப்பட்டவை என்று சந்தேகிக்கப்படுவதால், அவை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை

முன்னாள் ஜனாதிபதிகள்

ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பிலுள்ள விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலை கார்ல்டன் இல்லத்தில் இருக்கின்றார்.

அரசியல் பிரபலங்கள் மஹிந்தவை சந்தித்து வருகின்றனர்

இந்த நிலையில் அரசியல் பிரபலங்கள் மஹிந்தவை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதியும், மஹிந்தவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஸ மஹிந்தவை கார்ல்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார்.

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் கொழும்பு மேலதிக

நீதவான் லஹிரு சில்வா உத்தரவினால் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு வெள்ளிக்கிழமை (19) பிறப்பிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட கிரிப்பன்வெவ மகாவலி அதிகாரசபை சொத்துக்களுக்கு இழப்பீடு பெற

அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

வழக்கை விசாரிக்கும் நிரந்தர பிரதான நீதவான் விடுமுறையில் இருந்ததால் மேலதிக நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு பிணை வழங்குவதா இல்லையா என்பது குறித்த உத்தரவு அன்றைய தினம் பிறப்பிக்கப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எல்ல விபத்து ஜீப்பின் பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

எல்ல விபத்து ஜீப்பின் பாதுகாப்பு

எல்ல விபத்து ஜீப்பின் பாதுகாப்பு

எல்ல விபத்து ஜீப்பின் பாதுகாப்பு ,எல்ல விபத்து ஜீப்பின் பாதுகாப்பு எல்ல-வெல்லவாய பிரதான சாலையில் உள்ள 15வது மைல்கல்ஸ்ர பகுதியில் 1,000 அடி பள்ளத்தில் பாறையில் விழுந்து 16 பேர் கொல்லப்பட்டு 17 பேர் காயமடைந்த சுற்றுலாப் பேருந்துடன் மோதிய

சொகுசு ஜீப்பின் பாதுகாப்பு கெமரா

சுமார் 800 மில்லியன் ரூபாய் (80 மில்லியன் ரூபாய்) மதிப்புள்ள சொகுசு ஜீப்பின் பாதுகாப்பு கெமரா அமைப்பில் பதிவு செய்யும் வசதிகள் இல்லை

என்பது தெரியவந்துள்ளதாக எல்ல பொலிஸார் வியாழக்கிழமை (18) தெரிவித்துள்ளனர்.

ஜீப்பை விற்ற நிறுவனம் வழங்கிய அறிக்கையின் அடிப்படையிலேயே பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

இந்த சொகுசு ஜீப் பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள ஒரு வாகன விற்பனையாளரிடமிருந்து 2023 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது என்றும், சொகுசு

ஜீப்பில் நான்கு நேரடி பாதுகாப்பு கெமராக்கள் உள்ளன என்றும், வாகனம் ஓட்டும் ஓட்டுநரின் வசதிக்காக கெமராக்கள் இயக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த சொகுசு ஜீப்களின் பாதுகாப்பு கெமராக்களின் பதிவு வசதிகளைப் பெறுவதற்கு, வாகன உரிமையாளர்கள் நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும், அத்தகைய கோரிக்கை

விடுக்கப்பட்டால் மட்டுமே, சொகுசு ஜீப்களின் கெமராக்களில் பதிவு செய்யும் மென்பொருள் நிறுவப்படும் என்று நிறுவனம் தங்களுக்குத் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சொகுசு ஜீப்களை வாங்கும் பல வாகன உரிமையாளர்கள்

இதுபோன்ற சொகுசு ஜீப்களை வாங்கும் பல வாகன உரிமையாளர்கள் வாகனத்தின் கெமராக்களில் பதிவு செய்யும் மென்பொருளை நிறுவக்

கோருவதில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்காலை நகராட்சி மன்ற ஊழியர்கள் குழு ஒன்று நுவரெலியாவிலிருந்து தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணமாக தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

4 ஆம் திகதி இரவு, சுற்றுலாப் பேருந்து, எல்லா-வெல்லவாய பிரதான சாலையில் 15வது மைல்கல் பகுதியில் அந்த பேருந்துக்கு முன்னால் வந்து

கொண்டிருந்த சொகுசு ஜீப்பில் மோதி, பின்னர் சாலையின் இருபுறமும் கட்டப்பட்ட பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி, ராவணன் எல்லா பளளத்தில் விழுந்தது.

இந்த விபத்தில் தங்காலை நகராட்சி மன்றத்தின் செயலாளர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நகராட்சி மன்ற ஊழியர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன விற்பனை நிறுவனம் மூலம் பண்டாரவளை நீதிமன்றம் பெற்ற நீதிமன்ற உத்தரவின் பேரில் எல்ல பொலிஸார் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார்
Posted in இலங்கை செய்திகள்

விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார்

விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார்

விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார் ,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் நுழைந்தது

பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள்

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் அந்த இளைஞரை பிடித்து நீலாங்கரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை – நீலாங்கரை கேசினோ டிரைவ் பகுதியில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டுக்கு எப்போதும் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர்,

தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ‘ஒய்’ செக்யூரிட்டி பிரிவினரும் ஈடுபவது வழக்கம்.

இந்த நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

விஜய்யின் வீட்டு வளாகத்தில் நுழைந்த அந்த இளைஞர், மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் அமர்ந்திருந்ததை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் கவனித்துள்ளனர்.

அவரை பிடித்து நீலாங்கரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

பின்னர் அவரை பிடித்து நீலாங்கரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ​

பிடிபட்ட அந்த இளைஞரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (24) என்பதும், நான்கு ஆண்டுகளாக மனநலம்

பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நீலாங்கரை பொலிஸார் சேர்த்தனர்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலத்த பாதுகாப்பை மீறி அந்த இளைஞர் விஜய் வீட்டுக்குள் நுழைந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

கொலையில் முடிந்த குடும்பப் பகை
Posted in இலங்கை செய்திகள்

கொலையில் முடிந்த குடும்பப் பகை

கொலையில் முடிந்த குடும்பப் பகை

கொலையில் முடிந்த குடும்பப் பகை மீரிகம ரெந்தபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டார்.

நேற்று (18) அந்தப் பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பெண்ணுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பெண்ணின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல்

பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல்

பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல் | கொண்டாடும் பெண்கள் ஈழப் பெண்ணே ஈழப்பெண்ணே.

பாடல் கேட்டு வெடித்து கிளம்பிய பெண்கள்

வீழ்ந்து போன பெண்களை தட்டி எழுப்பிய வீர பாடல் ,இந்த பாடல் கேட்டு வெடித்து கிளம்பிய பெண்கள் .

ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே என்ற பாட்டு பெண்ணினம் கொண்டாடும் நிலைக்கு ஏற்ற பாட்டாக எழுச்சி பாடலாக வெளிவந்துள்ளது .

யாழ்ப்பாணம் பாடல்களின் வரிசையில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக 63 வது பாடலாக வெளிவருகிறது .

அகல்யா எழுதிய ஈழப் பெண்ணே பாட்டு

அகல்யா எழுதிய ஈழப் பெண்ணே பாட்டு அவரது முதலாவது பாடலாக உள்ளது .

பாடலின் பெயர் – ஈழப் பெண்ணே
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன் இந்தியா
இசை அமைப்பாளர் – இளங்கோ செல்லப்பா இந்தியா
பாடல் வரிகள் – அகல்யா – லண்டன்

பாடலின் வரிகள்

பல்லவி

ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே
எழுந்து வா நீ எழுந்து வா
தடைகள் உடைக்க
படைகள் நகர்த்த
தளராமல் நீ எழுந்து வா

அடக்கவா உன்னை முடக்கவா
அகிலம் விழிக்க எழுந்து வா
அங்கையற் கன்னியாய் வெடித்து வா – நீ
அங்கையற் கன்னியாய் வெடித்து வா

( சரணம் 1 )

இழிவா உனக்கு தலை குனிவா
விடை காண நீ எழுந்து வா
துணிவு காட்டு வீரம் நாட்டு
உன்னை யார் என உலகிற்கு காட்டு

தீண்டாமை உன்னை தீண்டவா – இந்த
தீயிலே நீ பொசுங்கி போகவா
தங்கமே நீ எழுந்து வா – இந்த
தரணி ஆள எழுந்து வா

( சரணம் 2 )

தவறுகளை தட்டி கேட்க கலங்காதே
துரோகத்தை துடைத்தெறிய தயங்காதே
தேச கொடியை நாட்ட எழுந்து வா
தேச புதல்வியே துணிந்து வா

வீர மங்கைகள் பிறந்த தேசமே
வீறு கொண்டு எழுந்து வா
பூமா தேவியாய் இருந்தவளே- இனி
பூகம்பமாய் வெடித்து வா

திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மீனவஅமைச்சர்
Posted in இலங்கை செய்திகள்

திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மீனவஅமைச்சர்

திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மீனவஅமைச்சர்

திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மீனவஅமைச்சர் ,தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர்

அந்நிலையில் நேற்று (17) மாலை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் தேசிய மக்கள்

சக்தியின் உறுப்பினர்கள் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்று இருந்தனர்.

அதன் போது, அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டனர்

ஆம்புலன்ஸ் விபத்து பீர்கேன்களை மீட்டபொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

ஆம்புலன்ஸ் விபத்து பீர்கேன்களை மீட்டபொலிஸார்

ஆம்புலன்ஸ் விபத்து பீர்கேன்களை மீட்டபொலிஸார்

ஆம்புலன்ஸ் விபத்து பீர்கேன்களை மீட்டபொலிஸார் ,தெனியாய பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி, இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற .

இரண்டு பீர் கேன்கள் கண்டுபிடிப்பு

ரூ2000 மனைவியின் அந்தரங்க உறுப்பை Zoom செய்த அசிங்கம்
ரூ2000 மனைவியின் அந்தரங்க உறுப்பை Zoom செய்த அசிங்கம்ரூ2000 மனைவியின் அந்தரங்க உறுப்பை Zoom செய்த அசிங்கம்

ஆம்புலன்ஸ் , ​​விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்து இரண்டு பீர் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மொரவக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெனியாய அடிப்படை வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த ஆம்புலன்ஸ் மாத்தறை பொது மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச் சென்ற போது

மொரவக்க அது எல பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி ஒரு வீட்டின் நுழைவாயிலில் மோதியுள்ளது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்

விபத்து இடம்பெற்ற நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் பின்னர் பொலிஸில் சரணடைந்த நிலையில் அவர் விபத்தின்

போது குடிபோதையில் இருந்தாரா என்பது தொடர்பான விசாரணைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம்புலன்ஸில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பீர் கேன்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சட்டத்தரணியின் காரில் துப்பாக்கி
Posted in இலங்கை செய்திகள்

சட்டத்தரணியின் காரில் துப்பாக்கி

சட்டத்தரணியின் காரில் துப்பாக்கி

சட்டத்தரணியின் காரில் துப்பாக்கி ,வலஸ்முல்ல , நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, சட்டத்தரணி ஒருவரின் காரில் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்ப்பு

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருட்கள் மித்தெனிய தலாவ பகுதியில் உள்ள நிலமொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் காரில் இருந்து குறித்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வலஸ்முல்ல நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், உரிமைப்பத்திரம் பெற்ற துப்பாக்கி என சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வலஸ்முல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் அளித்த பின்னர், துப்பாக்கியை விடுவிக்க வலஸ்முல்ல நீதிமன்ற நீதவான் மல்பா கொடிதுவக்கு உத்தரவிட்டுள்ளார்.

முந்திய செய்திகள்…

‘தெம்பிலி லஹிரு’, ‘பெக்கோ சமன்’ இருவருக்கும் தடுத்துவைப்பு

‘கஜ்ஜா’ எனப்படும் அனுர விதானகமகே கொலை தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக ‘பெக்கோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’

ஆகியோரை டிசெம்பர் 2ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம், புதன்கிழமை (17) அன்று பொலிஸாருக்கு அனுமதி அளித்துள்ளது.

வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான கொலைகளில் ஈடுபட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்

கும்பல்களின் தலைவர்களான ‘கெஹல்பத்தர பத்மே’ உட்பட ஐந்து பேர் இந்தோனேசியாவில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை பொலிஸ் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் சிறப்புக் குழு இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

மித்தெனிய பகுதியில் “ஐஸ்” என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இரசாயனக்

கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில், சட்டத்தரணி ஊடாக புதன்கிழமை (17) சரணடைந்தார்.

அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபை வேட்பாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்

கைதுசெய்யத் தேடப்பட்டு வரும் சம்பத் மனம்பேரி, நீதிமன்றில் சரணடைய சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடையத் தயாராக தயாராக

இருப்பதாக, அவரது சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு திங்கட்கிழமை (15) அறிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப்

பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்றையும் எம்பிலிப்பிட்டி பொலிஸார் அண்மையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுருக்குவலை மீன்பிடியால் மீனவர்கள் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சுருக்குவலை மீன்பிடியால் மீனவர்கள் பாதிப்பு

சுருக்குவலை மீன்பிடியால் மீனவர்கள் பாதிப்பு

சுருக்குவலை மீன்பிடியால் மீனவர்கள் பாதிப்பு ,யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை கடற்றொழில்

மீன்பிடி இடம்பெற்று வருவதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி வடக்கு மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டைக்காடு மீனவர்கள் அதிகளவானோர்

கட்டைக்காடு மீனவர்கள் அதிகளவானோர் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடுவதால் அதிகளவான

சிறியமீனினங்கள் பிடிக்கப்படுவதாகவும், அம்மீனினங்கள் இறந்தநிலையில் மீண்டும்

கடலில்கொட்டப்படுவதாகவும் இதனால்தற்போது சிறுமீன்பிடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் புதன்கிழமை (17) அன்று வடமராட்சி வடக்கு

பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்

பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் கடற்படை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் அதற்கு பதிலளித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி இவ்வருடமும் அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

உலகக் கடவுச்சீட்டு இலங்கை 97வதுஇடத்தில்
Posted in இலங்கை செய்திகள்

உலகக் கடவுச்சீட்டு இலங்கை 97வதுஇடத்தில்

உலகக் கடவுச்சீட்டு இலங்கை 97வதுஇடத்தில்

உலகக் கடவுச்சீட்டு இலங்கை 97வதுஇடத்தில் ,2025 ஆம் ஆண்டு உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்தது கடந்த

செப்டம்பர் (11) ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 97வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையும் ஈரானும் 97வது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றது

குறியீட்டின் படி, இலங்கையும் ஈரானும் 97வது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றது, இதன் மூலம் அதன் உரிமையாளர்களுக்கு 41 இடங்களுக்கு

விசா இல்லாத அணுகலை வழங்குகிறது. 2024 ஆம் ஆண்டில் இந்த நாடுகள் 96வது இடத்தைப் பிடித்துக்கொண்டது.

உலகின் மிகவும் அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டு

உலகின் மிகவும் அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டு தரவரிசையாகக் கருதப்படும் ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு, முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய

நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 227 இடங்களுக்கு எதிராக 199 கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது.

இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன்
Posted in இலங்கை செய்திகள்

இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன்

இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன்


இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன் | அலறும் இஸ்ரேல்,இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன நாட்டிற்கான அங்கீகாரத்திற்கு பிரிட்டன் கனடா பிரான்ஸ் ஆஸ்திரேலியா ஐரோப்பா என்பன அங்கீகரிக்க உள்ளன.

இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அதிர்ச்சியில்

தனிநாட்டு பிரகடனம் பரபரப்பாக இடம் பெறுவதால் இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அதிர்ச்சியில் உறைந்துள்ளார் .

இஸ்ரேலின் இன்றைய பிரதமர் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கப்படும் நிலை காணப்படுவதுடன்

இனப்படுகொலை குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட சந்தர்ப்பம் அதிகம் காணப்படுகிறது .

இஸ்ரேலின் ஆட்சி பீடம் அலறுகிறது.

அதனால் இப்பொழுது இஸ்ரேலின் ஆட்சி பீடம் அலறுகிறது.

Palestine to become a separate state this month | Israel is screaming

Britain, Canada, France, Australia and Europe are set to recognize the recognition of a separate state of Palestine this month.

Israel’s ruling Netanyahu is in shock as the declaration of independence is making headlines.

Israel’s current Prime Minister Netanyahu is facing the possibility of being overthrown and is likely to be arrested on charges of genocide.

So now the Israeli ruling elite is screaming

HOW YOUTUBE Multi-Language Audio’s

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஐநா முன் பறந்த புலிக்கொடி
Posted in இலங்கை செய்திகள்

ஐநா முன் பறந்த புலிக்கொடி

ஐநா முன் பறந்த புலிக்கொடி

ஐநா முன் பறந்த புலிக்கொடி ஐநா முன் பறந்த புலிக்கொடியால் இலங்கை ஆளும் அரசு கொதிப்பில் உறைந்துள்ளது .

தியாகி திலீபன் நினைவு நாளை முன்னிட்டு

தியாகி திலீபன் நினைவு நாளை முன்னிட்டும் அறுபதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை சுவிஸ் நாட்டில் இடம் பெற்று வருகிறது .

அதனை அடுத்து தமிழர்கள் அறவழிப் போராட்டத்தை நடத்திய பொழுது ஐநா வுக்கு முன்பாக புலிக்கொடி அங்கு பறக்க விடுவதற்கு அனுமதி அளித்திருந்தது .

விடுதலை புலிகளின் தேசியக்கொடி

இதனால் தமிழீழ , விடுதலை புலிகளின் தேசியக்கொடியாக விளங்கும் புலிக்கொடி ஐக்கிய நாடுகள் சபை முன்பாக அங்கு பட்டொளி வீசி பறந்தது.

நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கு கூடி இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக புலிக்கொடி பறந்து அசைந்து ஆடியது .

வளமையாக சுவிஸ் அரசாங்கம் புலிக்கொடி பிடிப்பதற்கு தடை விதித்து வந்தது .

ஆனால் இந்த முறை அறுபதாவது மனித உரிமை கூட்டத்தொடரில் தேசியக் கொடியான புலிக் கொடி பறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது தமிழர்களுக்கு மிகப்பெரும் வரவேற்பையம் மகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை இனப்படுகொலைக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வருகிறது .

இவ்வாறான நிலையில் இம்முறை புலிக்கொடியுடன் மனித உரிமை பேரவைக்கு முன்பாக இலங்கை இடம் பெற்றது இனப்படுகொலை என தமிழர்கள் முழங்கிய செயல், இலங்கை அரசாங்கத்தை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்

மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்

மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல் ,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தங்காலை கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை செவ்வாய்க்கிழமை (16) சந்தித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர், விமல்

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர், விமல் வீரவன்ச தனது பேஸ்புக் கணக்கில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:

“பல தசாப்தங்களாக வளர்க்கப்பட்ட விடுதலைப் புலி பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் அரசியல்

தலைமைத்துவத்தை வழங்கிய 5வது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள்

இருந்தபோதிலும், கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து திரும்பி தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார் என்ற

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த செய்தி

செய்தி, இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த செய்தியாகும்.

அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை தோற்கடிக்க அவர் வழங்கிய அரசியல் தலைமைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு செயலாகும்.

தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜெயந்த சமரவீர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் பிற பிரதிநிதிகள் தங்காலை கார்ல்டன்

இல்லத்தில் அவரைச் சந்தித்து அவரது நலம் குறித்து விசாரித்து எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.”