பிரான்சில் தாக்குதல் 14பேர் கைது
Posted in உலக செய்திகள்

பிரான்சில் தாக்குதல் 14பேர் கைது

பிரான்சில் தாக்குதல் 14பேர் கைது

பிரான்சில் தாக்குதல் 14பேர் கைது ,சனிக்கிழமை நாடு தழுவிய இசை விழாவில் 145 பேர் சிரிஞ்ச்களால் ‘குத்தப்பட்டதாக’ புகார் அளித்ததை அடுத்து, 14 பேர் கைது செய்யப்பட்டதாக பிரான்சில் போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள்

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள், இந்த தாக்குதல்கள் பிரான்சின் வருடாந்திர “இசை விழா” –

ஃபெட் டி லா மியூசிக் — இன் போது நடந்தன – இது நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் நகரங்களில் நடைபெறும் இசை நிகழ்வுகளின் தொடர்.

குத்தப்பட்ட அல்லது குத்தப்பட்டதாக நம்பும் 145 பேர் பொதுவாக கூட்டத்தில் இருந்தபோது தாக்கப்பட்டனர், மேலும் அவர்களின் கையிலோ அல்லது முதுகிலோ குத்தப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்கள் தாக்குதலைக் காணவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் சூடான சிவத்தல், தலைச்சுற்றல், சுயநினைவு இழப்பு மற்றும் தோலில் தெரியும் அடையாளங்கள் அல்லது காயங்கள் போன்ற பல்வேறு அறிகுறிகளை உணர்ந்ததாக தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்களால் சிகிச்சை

விழாவில் சில பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்,

அங்கு அவர்கள் உமிழ்நீர், சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகளை கொடுத்து, அவர்களுக்கு மருந்துகள் செலுத்தப்பட்டதா என்பதைக் கண்டறிந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஈரான் தாக்குதல் இஸ்ரேலியர் காயம்
Posted in உலக செய்திகள்

ஈரான் தாக்குதல் இஸ்ரேலியர் காயம்

ஈரான் தாக்குதல் இஸ்ரேலியர் காயம்

ஈரான் தாக்குதல் இஸ்ரேலியர் காயம்,போர் நிறுத்த உடன்படிக்கையை மீறிய நிலையில் இஸ்ரேலுடைய பகுதிகளை இலக்கு வைத்து ,தற்பொழுது ஈரான் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் நால்வர் பலியாகியும் மேலும் பல காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவ ஆதரவு குடியேற்ற பகுதிகள்

இஸ்ரேலிய இராணுவ ஆதரவு குடியேற்ற பகுதிகள் இராணுவ ஆதரவு குடும்பங்கள் தங்கி வாழும் பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இந்த தாக்குதலிலேயே பெரும் இழப்பையும் சேதங்களையும் இஸ்ரேல் சந்தித்துவருகிறது .

பலஸ்தீன மக்களை தாக்கிய இஸ்ரேல்

பலஸ்தீன மக்களை தாக்கியது போன்று ,ஈரானையும் அழித்துவிடலாம் என்று நினைத்த ,இஸ்ரேலுக்கு இப்பொழுது பெரும் நெருக்கடியும் பீதியும் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் போர் தொடுத்தில் திடீர் போர் அச்சம் காரணமாக தற்பொழுது யூத குடிவாசிகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள் .

இது பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நினைவு படுத்துகிறது.அழிவுகள் தமக்கு திருப்பி ஏற்படுகின்ற பொழுது தான் அவர்கள் ,அதன் வலியை புரிந்து கொள்கிறார்கள் போல் தெரிகிறது .

இஸ்ரேல்மீது ஈரான் 20ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல்மீது ஈரான் 20ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல்மீது ஈரான் 20ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல்மீது ஈரான் 20ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் மீது ஈரான் 20 ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

போர் நிறுத்த நடவடிக்கை

போர் நிறுத்த நடவடிக்கை அமல்படுத்துவதற்கு முன்னதாக ,இந்த 20 ஏவுகணை தாக்குதலை ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் அந்த பகுதியில் உள்ள பல உயர் அடுக்குமாடி கட்டிடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றனர் .

ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ,இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில், மீளவும் இந்த தாக்குதலை ஈரான் ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமரசத்தை ஏற்க மறுத்து ஈரானை முற்று முழுதாக அழித்து துவம்சம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணக் கோட்பாடுடன் ,இருக்கின்ற நெத்தன் யாவும் ஆட்சி அதிகாரம் சமாதானத்தை விரும்ப மாறுகிறது .

சர்வதேச கடற்பரப்பு மூடுவதற்கு அபாயம்

ஆகவே தொடர்ந்து நடக்க போகும் இந்த யுத்தத்தால் சர்வதேச கடற்பரப்பு மூடுவதற்கு அபாயம் உள்ளதாகவே அமைந்த ஒரு செய்திகள் தெரிவிக்கின்றன.

மீள் ஆரம்பித்தது கட்டார் விமான சேவை
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

கட்டார் விமானசேவை மீள் ஆரம்பித்தது

கட்டார் விமானசேவை மீள் ஆரம்பித்தது

கட்டார் விமானசேவை மீள் ஆரம்பித்தது ,ஈரான் இஸ்ரேல் உக்கிர தாக்குதலால் 2025 ஜூன் 21-இல், ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளமான Al-Udeid Air Base மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

கட்டார் அரசாங்கம் வான்வெளியை தற்காலிகமாக மூடியது

பாதுகாப்பு காரணங்களால் கட்டார் அரசாங்கம் வான்வெளியை தற்காலிகமாக மூடியது.

விமானங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், பயணிகள் உயிர் சேதம் ஏற்படாமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

2025 ஜூன் 24 – ஈரான்–இஸ்ரேல் இடையே போர்நிறைவு ஒப்பந்தம் (ceasefire) ஏற்பட்டதைத் தொடர்ந்து வான்வெளி பாதுகாப்பாக மீண்டும் அறிவிக்கப்பட்டது.

விமான சேவைகள் வழமைக்கு திரும்பின

வான்வெளி திறக்கப்பட்டதை அடுத்து கட்டார் எயார்வேஸ் உட்பட விமான சேவைகள் வழமைக்கு திரும்பின, அத்தோடு விமான கப்பல் சரக்குகள் மற்றும் பொருளாதார சுமைகள் குறைந்துள்ளன.

FIFA World Cup சுற்றுச்சூழல் பிந்தைய சுற்றுலா மீண்டும் விரைவுபெற்றது.

கட்டார், மற்றும் குவைத் வான்வெளி மூடல் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருந்தது.

தற்போது, Qatar Airways உறுதியுடன் பாதுகாப்பான பயண சூழல் அமைந்துள்ளதாக அறிவித்து, சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

எதிர்காலத்தில் பாதுகாப்பு நிலவரம் நிலைத்திருக்கும் வரை வான்வெளி திறப்பும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவுக்கு வந்த ஈரான் இஸ்ரேல் யுத்தம்
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

முடிந்தது ஈரான் இஸ்ரேல் யுத்தம்

முடிந்தது ஈரான் இஸ்ரேல் யுத்தம்

முடிந்தது ஈரான் இஸ்ரேல் யுத்தம் ,இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்காத நிலையில் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

24 மணி நேரத்தில் போர் நிறுத்தம்

இஸ்ரேல் -ஈரான் இடையே 12 நாட்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. இஸ்ரேல் – ஈரான் இடையே 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என டிரம்ப் கூறியிருந்தார்.

கடந்த 12ம் திகதி ஆரம்பித்த யுத்தம் 12 நாட்களின் பின் 24ம் திகதி நிறுத்தப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்த யுத்தம் தொடர்பில் ஒரு சிறு பார்வை.

இஸ்ரேல் “முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கை” என்ற பெயரில் நாட்டு முழுவதும் இருக்கும் ஈரானின் அணுசக்தித் தளங்களைத் தாக்கியது; இதைத் தொடங்கி 12-நாள் போர் பரவலானது.

இசஃபஹான், நடான்‌ஸ், ஃபோர்டோ‐அடுக்கு கூண்டுகள் பீ-2 வெடிகுண்டுகளால் இடிந்தன; ஈரானின் மூலைவட்டப் பாதுகாப்பு களங்களும் தலைமைப் படைதலைவர்களும் பலர் உயிரிழந்தனர்.

அடுத்த நாட்களில் ஈரான் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தென் இஸ்ரேலின் பெர்‌ஷேவா உள்ளிட்ட இடங்களுக்குத் துப்பாக்கிவிட்டது; குறைந்தது 4 இஸ்ரேலி பொதுமக்கள் உயிரிழந்தனர், வரிசையாகப் பலர் காயமடைந்தனர்.

அமெரிக்க B-2 போர் விமானங்கள் ஈரான் அணுத் தளங்களை மீண்டும் தாக்கின

22-23 ஜூன் “Midnight Hammer” என பெயரிடப்பட்ட நடவடிக்கையில் அமெரிக்க B-2 போர் விமானங்கள் ஈரான் அணுத் தளங்களை மீண்டும் தாக்கின. டிரம்ப் இதை “பூரண வெற்றி” என அறிவித்தார்.

கத்தாரில் உள்ள Al-Udeid அமெரிக்க வ Christensen basé மீது 6 ஏவுகணைகள் வீசப்பட்டன; எல்லாம் அரபுக் கூட்டுறவு எதிர்ப்பைத் தவிர்க்கப்பட, உயிரிழப்புகள் இல்லை.

12-நாள் போரில் 24 இஸ்ரேலியர், சுமார் 430 ஈரானியர் (அணிச் சீனியர்கள், IRGC தளபதிகள் உட்பட) உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது; தவணை சிறை எவின் உட்பட கட்டிடங்கள் மதிப்பிட முடியாத அளவுக்கு சேதமடைந்தன.

போர்க்கால எண்ணெய் பயம் ப்ரென்ட் விலையை $81.40/bbl வரை அதிகரித்தது.

கட்டார், ஐ.நா. மற்றும் ஓமான் கூட்டிடம் மூலம் இருதரப்பும் பேச்சு நடத்தியது; அமெரிக்க அழுத்தமும் துணை செய்தது.

டிரம்ப் “முழுமையான, முழு காலப் போர்நிறுத்தம்” செயல்படுத்தப் பட்டது என கூறினார். ஈரான் 4 am Tehran வரை இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப் பொறுப்பு எடுத்தது.

24 ஜூன் இரவு வரை பெரும்பாண்மை தாக்குதல்கள் நிறுத்தப்பட்டாலும் சிதறிப் படைத் தாக்குதல் எச்சரிக்கைகள் தொடர்கின்றன. உடன்படிக்கை நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலடி ஈரான் திடீர்தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு பதிலடி ஈரான் திடீர்தாக்குதல்

அமெரிக்காவுக்கு பதிலடி ஈரான் திடீர்தாக்குதல்

அமெரிக்காவுக்கு பதிலடி ஈரான் திடீர்தாக்குதல் ,ஈரான் மீது மீளவும் ஈரானிய புரட்சி ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளனர் .

கட்டார் சிரியாவில் நடத்திய தாக்குதலை போன்று ,மேலும் மிக உக்கிரமான தாக்குதலை நடத்துவோம் என, புரட்சி படைகளின் தளபதி பிரிகாடியர் ஜெனரல் முகமட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிதறிய ள்ள அமெரிக்கா விமானப்படை

கட்டாரில் உள்ள அமெரிக்கா விமானப்படை மத்திய தலைமை கட்டளை பீடம் மீது 8 ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது.

40 நிமிடத்திற்கு உள்ளாக 8 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி, அந்த அமெரிக்கா விமான படைத்தளத்திற்கு சேதங்களை ஈரான் ஏற்படுத்தியது .

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

இதனை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்த முற்பட்டால் ,எமது படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தும் என ஈரான் இராணுவ தளபதி மூலமும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் .

ஈரானுடைய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு,பதிலடியாக காட்டார் சிரியா ,ஈரான் ,கட்டார் அமெரிக்க இராணுவ படைத்தளங்களை சுற்றிவளைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது .

இதுவே அமெரிக்காவுக்கும் உலக நாடுகளுக்கும் எதிர்வரும் மணித்தியாலங்களில் எதுவும் நடக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

பொல்லு கொடுத்து அடிவானாகிய கதையாக அமெரிக்கா சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது .

உக்கிரமாகும் போரால் திரும்பும் பயணிகள் விமானம்
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

உக்கிரமாகும் போரால் திரும்பும் பயணிகள் விமானம்

உக்கிரமாகும் போரால் திரும்பும் பயணிகள் விமானம்

உக்கிரமாகிவரும் போரால் பதற்ற நிலை ஏற்படுவதாலும் வான்வெளிகள் ஆங்காங்கே மூடப்பட்டுவருவதால் பயணிகள் விமானங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, மஸ்கட் விமான நிலையம் மற்றும் டுபாய் விமான நிலையத்திற்கு தலா இரண்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஒரு விமானம் ரியாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், துபாய்க்குச் சென்ற ஃபிட்ஸ்ஏர் விமானம் மஸ்கட்டிற்கு திருப்பி விடப்பட்டது. இருப்பினும், விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படாததால், துபாய்க்குத் திருப்பி விடப்பட்டது.

இந்த விமானங்கள் குவைத், அபுதாபி மற்றும் தோஹாவுக்கு சென்று கொண்டிருந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆதிகார சபை தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தை ஈரான் ஏவுகனண தாக்குதலை நடத்தியது.

இதனால் கட்டார் மற்றும் குவைட் போன்ற நாடுகள் தங்களது வான்வெளியியை தற்காலிகமாக மூடியுள்ளன.

இதற்கிடையில், இலங்கையில் தரையிறங்க ஏதேனும் விமானங்கள் கோரப்பட்டால், மத்தள விமான நிலையமும் கட்டுநாயக்க விமான நிலையமும் தயாராக இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

வான்வெளியை மூடிய கட்டார் மற்றும் குவைத்
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

வான்வெளியை மூடிய கட்டார் மற்றும் குவைத்

வான்வெளியை மூடிய கட்டார் மற்றும் குவைத்

கட்டாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருவதால், கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் அந்நாட்டில் உள்ள தங்கள் குடிமக்களை “மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்குமாறு” அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அதன் நட்பு நாடான கத்தாருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கத்தாரில் இருந்த படைகளையும் அமெரிக்கா திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதோடுமட்டுமின்றி கட்டாரிலுள்ள தோஹாவின் தென்மேற்கே உள்ள இரண்டு ராணுவ தளங்களில் அல் உதெய்த் விமான தளத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 10,000 வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையைத் தொடர்ந்து கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ள நிலையில் தற்போது குவைட் நாடும் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.

கட்டாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருவதால், கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டாரில் அமெரிக்க தளங்களை தாக்கிய ஈரான்
Posted in உலக செய்திகள்

கட்டாரில் அமெரிக்க தளங்களை தாக்கிய ஈரான்

கட்டாரில் அமெரிக்க தளங்களை தாக்கிய ஈரான்

கட்டாரில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதலை ஈரான் நடாத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக ஈரானின் Tasnim செய்தியை மேற்கோள் காட்டி அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, “வெற்றி அறிவிப்பு” என்று அழைக்கப்படுகிறது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கட்டாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து பழிவாங்கும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக

அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரானின் Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான், அமெரிக்காவின் அணு தளங்கள் மீது மேற்கொண்ட குண்டுவீச்சுக்கு பதிலடி அளிக்கும் வகையில், கத்தார் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் மோசமாக்கியுள்ளது.

இரவில் வானில் ஏவுகணைகள் பாய, அவற்றைத் தடுக்க வானில் ஏறிய இன்டர்செப்டர்கள் வெடிக்க, டோஹா நகரில் உள்ள மக்கள் வானத்தை பார்த்தபடி பதட்டத்துடன் இருக்கின்றதாக அச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இது கட்டாருக்கு எதிரான தாக்குதல் அல்ல : ஈரான் அறிவிப்பு

கட்டாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானப்படை தளத்தின் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் கட்டாரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு அப்பால் நடந்ததாக ஈரானிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறுகிறது.

இந்த நடவடிக்கை நட்பு மற்றும் சகோதரத்துவ நாடான கட்டார் மற்றும் அதன் மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது,

மேலும் ஈரான் இஸ்லாமிய குடியரசு கட்டாருடன் வரலாற்று உறவுகளைப் பேணுவதற்கும் தொடர்வதற்கும் உறுதிபூண்டுள்ளது என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் ஈரானின் இந்தத் தாக்குதலுக்கு கட்டார் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் தாக்குதலை கடுமையாக கண்டிக்கும் கட்டார்

கட்டாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானப்படை தளத்தின் மீதான ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தாக்குதல் “கட்டாரின் இறையாண்மை,

வான்வெளி மற்றும் ஐ.நா. சாசனத்தை மீறுவதாக” கட்டார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Majed al-Ansari தெரிவித்துள்ளார்.

“கட்டாரில், சர்வதேச சட்டத்தின்படி இந்த ஆக்கிரமிப்புக்கு நேரடியாக பதிலளிக்க எங்களுக்கு உரிமை உண்டு,” என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

கட்டார் வான் பாதுகாப்பு இந்த தாக்குதலை முறியடித்து ஈரானிய ஏவுகணைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டதாக அவர் மேலும் கூறினார்.

இஸ்ரேல் எங்கும் 500ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் எங்கும் 500ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் எங்கும் 500ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் எங்கும் 500ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் இன்றைய கள நிலவரம் செய்திகள் ,இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் .

போரை நடத்திய வண்ணம் உள்ளது , ஈரான் நகரங்கள் மீதும் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளது .

இஸ்ரேலின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் ,ஈரானிய இராணுவம் அறிவிப்பு
இஸ்ரேல் எங்கும் 500 ஏவுகணை தாக்குதல் பதிலடி நடத்தும் ஈரான்

போர் குறித்து போப் லியோ வெளியிட்ட கருத்து
Posted in உலக செய்திகள்

போர் குறித்து போப் லியோ வெளியிட்ட கருத்து

போர் குறித்து போப் லியோ வெளியிட்ட கருத்து

போர் மூலம் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று போப் லியோ கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து போப் லியோ கூறியதாக வத்திக்கான் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

“மத்திய கிழக்கில் இருந்து, குறிப்பாக ஈரானிலிருந்து தொடர்ந்து கவலையளிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. முன் எப்போதையும் விட, மனிதகுலம் அமைதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இது பொறுப்புணர்வும் பகுத்தறிவும் தேவைப்படும் ஒரு கூக்குரல். மேலும் இது ஆயுதங்களின் இரைச்சல் அல்லது மோதலைத் தூண்டும் சொற்பொழிவுகளால் மூழ்கடிக்கப்படக் கூடாது.

போதுமான மனிதாபிமான உதவிக்கான தேவை இன்னும் அவசரமாகி வரும் நிலையில், குறிப்பாக காசா மற்றும் பிற பிரதேசங்களில் மக்களின் அன்றாட துன்பங்கள் மறக்கப்படும் அபாயம் உள்ளது.

சர்வதேச சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் போரின் துயரத்தை தடுக்கும் தார்மிகப் பொறுப்பைக் கொண்டுள்ளனர். மனித கண்ணியம் ஆபத்தில் இருக்கும்போது அதைவிட பெரிய பிரச்சினை எதுவும் இருக்க முடியாது.

போர் மூலம் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது. மாறாக, அது அவற்றைப் பெரிதாக்கி மக்களின் வரலாற்றில் ஆழமான காயங்களை ஏற்படுத்துகிறது.

எந்த ராணுவ வெற்றியும் ஒரு தாயின் வலியையோ, ஒரு குழந்தையின் பயத்தையோ அல்லது திருடப்பட்ட எதிர்காலத்தையோ ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது.

வன்முறை மற்றும் ரத்த மோதல்கள் மூலம் அல்லாமல், அமைதிப் மூலம் நாடுகள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கட்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உலகளவில் பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

உலகளவில் பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

உலகளவில் பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

உலகளாவிய ரீதியில் பயண எச்சரிக்கையை அமெரிக்கா அவசர அவசரமாக வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஸ்திரமின்மை காரணமாக,

வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை ஞாயிற்றுக்கிழமை (22) உலகளாவிய எச்சரிக்கை பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.

தனது உத்தியோகபூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்,

வெளியுறவுத்துறை, “இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலால் மத்திய கிழக்கு முழுவதும் பயணங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது மற்றும் அவ்வப்போது வான்வெளி மூடப்பட்டுள்ளது.

அமெரிக்க குடிமக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நலன்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

“உலகெங்கிலும் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளியுறவுத்துறை அறிவுறுத்துகிறது.

பயணத்தைத் திட்டமிடும்போது எங்கள் பயண ஆலோசனை, நாட்டுத் தகவல் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு எச்சரிக்கைகளை கவனமாகப் படியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய இணையதளம்:
https://travel.state.gov/content/travel/en/international-travel/International-Travel-Country-Information-Pages.html

இந்த இணையதளத்தில் உங்கள் பயண நாடு குறித்து:

பாதுகாப்பு நிலை, சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், உள்ளூர் சூழ்நிலைகள், சுகாதாரம், மருத்துவ வசதிகள், தூதரக தகவல்கள் உள்ளடங்கலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னறிவிப்பு மூலம் பயணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க உலக நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் செயற்பட்டு வருகின்றன. மேலதிக விசாரணைகளுக்கு உங்கள் அருகிலுள்ள அமெரிக்க தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் எங்கு இருந்தாலும், பாதுகாப்பாக இருங்கள். இந்த எச்சரிக்கை அறிவிப்பை உங்கள் சுற்றுவட்டாரத்தவருக்கும் பகிருங்கள். எனக் குறிப்பிடப்பட்டிருந்தது,

இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணைகளை வீசும் ஈரான்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணைகளை வீசும் ஈரான்

இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணைகளை வீசும் ஈரான்

ஈரான் – இஸ்ரேல் போர் நாளுக்குநாள் உக்கிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேல் மீது மிகப்பெரிய ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடாத்துகிறது ஈரான்.

அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் – 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் 1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால், இஸ்ரேலில் உள்ள கட்டிடங்கள் மிகப் பெரியளவில் சேதம் அடைந்து வருகின்றன.

ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று அதிகாலை குண்டு வீசியது.

இதனால் கோபம் அடைந்துள்ள ஈரான் இஸ்ரேல் மீது, மிகப் பெரிய ஏவுகணையான கொராம்ஷர்-4 மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் இந்த ஏவுகணையில் 1,500 கிலோ வெடிபொருள் உள்ளது. இதனால் இது இஸ்ரேலில் உள்ள கட்டிடங்களில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்குப்பின் கொராம்ஷர்-4 உட்பட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் நேற்று வீசியது. டெல் அவிவ் நகரில் உள்ள வணிக வளாகம், வங்கி உட்பட பல கட்டடங்கள் இந்த தாக்குதலில் சேதம் அடைந்தன.

இதில் 11 பேர் காயம் அடைந்தனர். சேதம் அடைந்த பகுதிகளில் இஸ்ரேல் மீட்பு குழுவிவர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும்

அல்லது இராணுவ வீரர்களும் இப்போது ஈரானின் இலக்காக மாறியுள்ளனர் என ஈரான் அரசு தொலைக்காட்சி எச்சரித்துள்ளது.

இது குறித்து ஈரான் மதகுரு கொமேனியின் நெருங்கிய உதவியாளர் ஹொசைன் ஷரியத்மதர் கூறுகையில்,

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க அத்துமீறி தாக்ககுதல் நடத்தியுள்ளது. இதையடுத்து, சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக எதிர்த் தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய கிழக்கில் உள்ள முக்கிய அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையை தாக்கவும், பிரிட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியை மூடவும் ஈரானிய படைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் மூடினால் இலங்கைக்கு என்ன பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஹோர்முஸ் மூடினால் இலங்கைக்கு என்ன பாதிப்பு

ஹோர்முஸ் மூடினால் இலங்கைக்கு என்ன பாதிப்பு

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரானிய பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாதிப்பு என்ன

இருப்பினும் இறுதி முடிவு உயர் தேசிய பாதுகாப்பு பேரவையினால் எடுக்கப்படும் என ஈரானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமாக குறித்த நீரிணை காணப்படுகிறது.

உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் குறித்த பகுதியும் முக்கியம் பெறுவதால், எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் இதனூடாக விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதால், கச்சா எண்ணெய் பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு வடக்கேயும், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு தெற்கேயும் ஹோர்முஸ் நீரிணை அமைந்துள்ளது.

சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முதன்மை பாதையாக இது விளங்குகிறது.

கத்தார் போன்ற நாடுகளின் இயற்கை எரிவாயு (LNG) கப்பல்களும் இந்த நீரிணை வழியாகச் செல்கின்றன.

இலங்கைக்கு ஹோர்முஸ் நீரிணைக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை, ஆனாலும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்களால், அது இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் பொருட்கள், சூயஸ் கால்வாய், ஆப்பிரிக்காவை சுற்றிவரும் கடல் வழி அல்லது பசிபிக் பெருங்கடல் வழியாக வரும்.

இல்லையெனில், அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வழியாக கொண்டு வரப்படலாம். இதற்கு செலவுகள் அதிகமானாலும், நம்பிக்கையான வழித்தடங்களாகும்.

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகத்தில் தற்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும்,

கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் அதன் தாக்கம் தென்படலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பி-2 போர் விமான சிறப்பு அம்சங்கள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவின் பி-2 போர் விமான சிறப்பு அம்சங்கள்

அமெரிக்காவின் பி-2 போர் விமான சிறப்பு அம்சங்கள்

அமெரிக்காவின் பி-2 போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளன, அந்தவகையில் அதன் சிறப்பு அம்சங்கள் என்னவெனில்,

கடந்த 1970-களில் அதிவீன பி-2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா களமிறங்கியது.

புதிய போர் விமானத்தை தயாரிக்கும் பணி அமெரிக்காவின் நார்த்ரோப் கார்ப்பரேசனிடம் அளிக்கப்பட்டது.

கடந்த 1989-ம் ஆண்டில் பி-2 போர் விமானம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக பி-2 கருதப்படுகிறது.

172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட இந்த போர் விமானத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதனை ரேடாரில் கண்டறிய முடியாது. அணு குண்டுகள் மற்றும் மிகப்பெரிய வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

ஒரு போர் விமானத்தில் 40,000 கிலோ கிராம் வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 11,000 கிலோ மீற்றர். வரை தரையிறங்காமல் பறக்கும்.

இது மணிக்கு 1,010 கிலோ மீற்றர். வேகத்தில் சீறிப் பாயும். 50,000 அடி உயரம் வரை பறக்கும். அமெரிக்க விமானப் படையிடம் மொத்தம் 21 பி-2 போர் விமானங்கள் உள்ளன. ஒரு விமானத்தின் விலை ரூ.18,000 கோடி ஆகும்.

அமெரிக்காவின் எப். 16, எப்.35 ரக போர் விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால் பி-2 ரக போர் விமானங்களை வேறு எந்த நாட்டுக்கும் அமெரிக்கா விற்பனை செய்யவில்லை.

இஸ்ரேல் உள்ளிட்ட அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளிடம்கூட பி-2 போர் விமானங்கள் இல்லை.

ஈரான் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய 7 பி-2 போர் விமானங்களும், அமெரிக்காவின் மிசோரி மாகாணம், வெயிட்மேன் விமானப்படைத் தளத்தில் இருந்து சனிக்கிழமை (21) புறப்பட்டன.

ஒவ்வொரு பி-2 விமானத்திலும் இரு ஜிபியு-57 வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டன. இரு விமானிகள் இணைந்து விமானத்தை இயக்கினர்.

அமெரிக்காவில் இருந்து ஈரானுக்கு செல்லும் வழியில் பி-2 போர் விமானங்கள் வேறு எங்கும் தரையிறங்கவில்லை. சுமார் 37 மணி நேரம் போர் விமானங்கள் தொடர்ச்சியாக பறந்தன.

நடுவானிலேயே 7 போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்டது. ஈரான் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை 2.10 மணிக்கு அந்த நாட்டின் 3 அணு சக்தி தளங்கள் மீதும் பி-2 போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

பின்னர் 7 விமானங்களும் பத்திரமாக அமெரிக்காவுக்கு திரும்பின.

அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த ஈரான்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த ஈரான்

அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த ஈரான்

அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த ஈரான். ஈரானில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி தனது ருவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ள அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஐ.நா சாசனம்,

சர்வதேச சட்டம் மற்றும் அணுக்கரு பரவாமை ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை மீறியுள்ளது.

இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு கடும் விளைவுகள் ஏற்படும். ஐ.நா உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்த சட்டவிரோத மற்றும் குற்றவியல் நடத்தை மீறல் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும்.

ஐ.நா சாசனம் மற்றும் அதன் விதிகளின்படி, சுய பாதுகாப்பு சார்ந்து சட்டபூர்வமான பதிலடி மூலம் ஈரானின் இறையாண்மை மற்றும் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தது. “ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிப்பதும்,

அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாத அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தான் அமெரிக்காவின் முதல் நோக்கம்.

அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டன.

ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம்.

மத்திய கிழக்கு பகுதியின் கொடுங்கோல் நாடான ஈரான் இப்போது அமைதிக்கான உடன்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் அடுத்தடுத்த தாக்குதல் மிக பெரியதாகவும், மிக எளிதாகவும் இருக்கும் என எச்சரிக்கிறேன்.

கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் ஈரான் பேசி வருகிறது. வெடி குண்டுகள் மூலம் நம் மக்களின் உயிரை அவர்கள் பறிக்கின்றனர். அப்படி லட்சக்கணக்கானவர்களை நாம் இழந்துள்ளோம்.

பல பேரை கொன்றவர் ஜெனரல் காசிம் சுலைமானி என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடரக் கூடாது என பல ஆண்டுகளுக்கு முன்பு நான் முடிவு செய்தேன்.

அதனால் தான் சொல்கிறேன் இனி இது தொடரக்கூடாது. ஒன்று ஈரானில் அமைதி ஏற்பட வேண்டும். அல்லது அங்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும்.

இந்த பாதிப்பின் தாக்கம் கடந்த 8 நாட்களாக ஈரான் சந்தித்து வரும் நிலையை காட்டிலும் மோசமாக இருக்கும்.

அங்கு தாக்குதல் நடத்துவதற்கான நமக்கு ஏராளமான இலக்குகள் உள்ளன. அமைதி ஏற்படவில்லை என்றால் அந்த இலக்குகளை துல்லியமாக, துரிதமாக, திறம்பட தாக்குவோம்.

இந்த நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அணியாக இணைந்து செயல்பட்டோம். இதற்கு முன்பு யாரும் இப்படி இணைந்து செயல்பட்டது கிடையாது. இஸ்ரேல் இராணுவத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மாதிரியான வெற்றிகர இராணுவ நடவடிக்கையை உலகம் கண்டதில்லை. அதை செய்து காட்டிய அமெரிக்க படையினருக்கு வாழ்த்துகள்.

இது மாதிரியான இராணுவ நடவடிக்கையை உலகில் வேறு எந்த நாடும் மேற்கொண்டது இல்லை. அப்படியொரு தாக்குதலை நாம் நடத்தியுள்ளோம்.

நான் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். கடவுளுக்கு நன்றி. கடவுளே நாங்கள் உங்களை நேசிக்கிறோம். எங்கள் மிகப்பெரிய இராணுவத்தை நேசிக்கிறோம்.

அவர்களை காக்கவும். கடவுள் மத்திய கிழக்கு, இஸ்ரேல், அமெரிக்காவை ஆசீர்வதிப்பார். நன்றி” என்றார்.

ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை

ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை

ஈரானால் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் ஒருவரும் காயமடையவில்லை என இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதட்டங்களுக்கு மத்தியில், இலங்கை தூதரகம் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரானில் அணுசக்தி தொடர்பான தளங்கள் மீது அமெரிக்க விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை 8.00 மணியளவில்

இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களை குறிவைத்து தொடர்ச்சியான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இது நிகழ்கிறது.

நாள் முழுவதும் நிலைமை அதிகரிக்கக்கூடும் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அதன்படி, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் விழிப்புடன் இருக்குமாறும்,

தாக்குதல்களின் போது சேதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு உத்தியோகபூர்வ பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுமாறு வலியுத்தியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் 10 நாட்களை எட்டியுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களாக ஆளில்லா விமான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

எனினும், பலத்த காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று தூதுவர் குறிப்பிட்டார்.

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு
Posted in உலக செய்திகள்

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு

போர் பதற்றத்தை தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அன்டோனியோ குட்டெரெஸ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும்.

மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும்.
இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது.

இது பொதுமக்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஐ.நா. சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் கீழ், ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தவும், போர் பதற்றத்தை தணிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆபத்தான நேரத்தில், மேலும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம். இராணுவ நடவடிக்கை எதற்கும் தீர்வு இல்லை.

பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. அமைதி மட்டுமே ஒரே நம்பிக்கை.” என்று தெரிவித்துள்ளார்.

அமைதி இல்லையேல் அழிவு ட்ரம்ப் எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

அமைதி இல்லையேல் அழிவு ட்ரம்ப் எச்சரிக்கை

அமைதி இல்லையேல் அழிவு ட்ரம்ப் எச்சரிக்கை

உக்கிரம் அடைந்துவரும் ஈரான் இஸ்ரேல் யுத்தம் தொடர்பாகஒன்றில் அமைதி இல்லையேல் அழிவுதான் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு 60 நாட்கள் கெடு கொடுத்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 61வது நாளில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் அமெரிக்க மக்களிடையே உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், உலகத்திலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடு ஈரான் எனவும், ஒன்று அமைதி இல்லையேல் அழிவு என உறுதிப்பட கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் எதிர்பாராத விதமாக களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா.

ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் ஆகிய 3 அணு தளங்கள் மீது தங்கள் நாட்டின் விமானப்படை வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக கூறி இருக்கிறார்.

இதனால் ஈரான் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தாக்குதல் தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,”

ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம்.

அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. அமெரிக்காவின் நம்முடைய சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள்.

உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும்” என கூறியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல் ,ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரானின் மீது நேரடி இராணுவத் தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறையாகும். ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மோதல் வெடித்தது.

ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களுக்கு ஆபத்து என்பதால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இராணுவ மோதல் அமெரிக்காவின் தலையீடு மூலம் மேலும் அதிகரித்துள்ளது.

“ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்” என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

“அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. முதன்மைத் தளமான ஃபோர்டோ மீது முழு அளவில் தாக்குதல் நடத்தப்பட்டன.

அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றன. எங்களின் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இதைச் செய்ய வேறு எந்த

இராணுவமும் உலகில் இல்லை. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விடயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று டிரம்ப் குறிப்பிடவில்லை.

இருப்பினும் ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் “பங்கர் பஸ்டர்” ஆயுதத்தால் மட்டுமே தாக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.