Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
துருக்கி நில நடுக்கத்தில் சிக்கி 80 பேர் பலி -800 பேர் காயம்
துருக்கி நில நடுக்கத்தில் சிக்கி 80 பேர் பலி -800 பேர் காயம்
கடந்த தினம் துருக்கி மற்றும் கிரேக்க நாடுகளை தாக்கிய பெரும் நில
நடுக்கத்தில் சிக்கி இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் எண்ணூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று
வருகின்றனர் ,வரும் மணித்தியாலங்களில் உயிர்பலிகள் அதிகரிக்கும் என தெரிவிக்க படுகிறது

துருக்கிய அதிபராது முக்கிய அமைச்சர்களுக்கு கொரனோ
துருக்கிய அதிபராது முக்கிய அமைச்சர்களுக்கு கொரனோ
துருக்கியின் ஆளும் அதிபர் எடகோனின் முக்கிய நெருங்கிய இரு
சாகாக்களுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதில் அவரது பேச்சாளருக்கு இந்த நோயானது உள்ளதால்
,துருக்கிய அதிபருக்கும் நோயானது தொற்றி இருக்கும் என நம்ப படுகிறது
மக்காவில் உள்ள மாசூதிக்குள் உடைத்து புகுந்த கார்
மக்காவில் உள்ள மாசூதிக்குள் உடைத்து புகுந்த கார்
உலக முஸ்லீம்களின் புனித தளமாக பார்க்க படுவது ,சவுதியில் உள்ள
மக்காவாகும் ,இங்கு அதன் புனித தளத்தின் நுழைவாயிலை உடைத்
தெறிந்து கார் ஒன்று புகுந்துள்ளது
சாரதி
ஒருவர் மிகவேகமாக காரை செலுத்தி வந்து குறித்த நுழைவாயிலுடன் மோதியது தெரிய வந்துள்ளது
இது விபத்தா அல்லது சதியா என்பதும் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன

கொரனோ எதிரொலி முடங்கிய ஐரோப்பா
கொரனோ எதிரொலி முடங்கிய ஐரோப்பா
ஐரோப்பா எங்கும் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயானது
தீவிரம் பெற்று வருகிறது ,இதனை அடுத்து எதிர் வரும் டிசம்பர் முதலாம்
திகதி வரை பிரான்ஸ் ,பெல்யியம்,ஜெர்மன் போன்ற நாடுகள்
தடாலடி அடித்து பூட்டும் அறிவிப்பை வெளியிட்டுஉள்ளன
இதுவரை நாற்பத்தி நான்கு மில்லியன் மக்கள் நோயினால் பீடிக்க
பட்டுள்ளதாக மிரள வைக்கும் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது
பிரான்ஸ் அதிபருக்கு எதிராக முஸ்லீம்கள் போராட்டம்
பிரான்ஸ் அதிபருக்கு எதிராக முஸ்லீம்கள் போராட்டம்
பிரான்ஸ் ஆளும் அதிபர் மைகிரேனுக்கு எதிராக பல நாடுகளை
சேர்ந்த முஸ்லீம்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்
பங்காளதேஸ்,பாலஸ்தீனம் ,துருக்கி போன்ற நாடுகளில் பல்லாயிரம்
மக்கள் இணைந்து பிரான்ஸ் நாட்டு தேசிய கொடியினை எரித்து
ஆளும் அதிபருக்கு எதிராக வெற்று கோஷங்களை எழுப்பினர்
உலகை அழப்போவது முஸ்லீம்கள் தான் என்ற இனவெறி கோசம் அங்கே முழங்கியது .
பிரான்ஸ் ஊடகம் ஒன்றும் துருக்கிய அதிபரை கேவலமாக சித்தரித்து காட்டூன் வரைந்தமைக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளமை குறிப்பிட தக்கது

வியட்நாமை சூறையாடிய புயல்-வெள்ளம்: 136 பேர் பலி
வியட்நாமை சூறையாடிய புயல்-வெள்ளம்: 136 பேர் பலி
வியட்நாமில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வியட்நாமை சூறையாடிய புயல்-வெள்ளம்: 136 பேர் பலி
வியட்நாமில்
மோலேவே என்று பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பெய்த பலத்த மழையால் பல மாகாணங்களில் வெள்ளம்
சூழ்ந்தது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புயல், மழை, வெள்ளத்தில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குயங்னம் மாகாணம் தற்போது நிலச்சரிவில் சிக்கியுள்ளது. இந்த சூறாவளியினால் 56,000
வீட்டுக்கூரைகள் சேதமடைந்திருக்கிறது. 17 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 ஆயிரம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் வியட்நாமை தாக்கிய புயல்களில் மிக மோசமான புயல் இது என கூறப்படுகின்றது. தற்போது
உயிரிழந்தவர்களில் 12 பேர் மீனவர்கள் என்றும் மேலும் 14 மீனவர்கள் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்கு வெட்டப் பட இருந்த 150 நாய்களை புகுந்து மீட்ட – மாமனிதர்கள்
இறைச்சிக்கு வெட்டப் பட இருந்த 150 நாய்களை புகுந்து மீட்ட – மாமனிதர்கள்
தென்கொரியாவில் இறைச்சிக்கு வெட்டி விற்கப்பட இருந்த நூற்றி
ஐம்பது நாய்களை Humane Society International, என்ற அமைப்பு மீட்டு சென்றுள்ளது
இந்த நாய்கள் மீட்க பட்ட செய்தி மிருக ஆர்வலர்கள் இடத்தில மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அனைத்து நாய்களும் அமெரிக்காவுக்கு ஏற்ற பட அங்கு திறந்த வெளியில்
சுதந்திரமாக உலவிட விடப் பட்டுள்ளது
நாயை
தின்னும் நாய்கள் தென் கொரியார்கள் என மக்கள் திட்டி கமன்ட் செய்து வருகின்றனர்

தீப் பிடித்த வீட்டுக்குள் பாய்ந்து பாட்டியம்மாவை காப்பாற்றிய பொலிஸ்காரன்
தீப் பிடித்த வீட்டுக்குள் பாய்ந்து பாட்டியம்மாவை காப்பாற்றிய பொலிஸ்காரன்
அவுஸ்ரேலியா Perth’s south-east. பகுதியில் திடீரென வீடு ஒன்று
பற்றி எரிந்தது அப்பொழுது அந்த வீட்டுக்குள் பாட்டியம்மா ஒருவர் சிக்கி கொண்டார் ,
அங்கு விரைந்த காவல்துறை சிப்பாய் ஒருவர் தனது உயிரை
துச்சமென மதித்து அந்த முதியவரை காப்பாற்றிய காட்சிகள்
ஊடகங்களில் வைரலாகி பரவி வருகிறது
குறித்த காவல்துறை உத்தியோகத்தருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது

இரு நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம் -17 பேர் பலி -750 பேர் காயம்
இரு நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம் -17 பேர் பலி -750 பேர் காயம்
துருக்கி மற்றும் கிரேக் நாடுகளுக்கு இடையில் இன்று ஏற்பட்ட பாரிய
நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை பதினேழு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் எழுநூற்றி ஐம்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்
மனித உயிரிழப்பு நூறுக்கு மேல் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது ,
கட்டிட இடி பாடுகளுக்குள் சிக்கி பலர் இறந்திருக்க கூடும் என நம்ப படுகிறது ,
மேலும் டசின் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் ,இவ்விதம்
காணாமல் போனவர்களும் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது
மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு பணிகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

பிரான்சில் மக்களை கழுத்து வெட்டி கொன்ற தீவிரவாதி இவன் தான்
பிரான்சில் மக்களை கழுத்து வெட்டி கொன்ற தீவிரவாதி இவன் தான்
பிரான்ஸ் நாட்டில் கடந்த தினம் பெண்கள் உள்ளிட்ட மூவரை கழுத்து
வெட்டி படு கொலை செய்த இருபத்தி ஒரு வயதுடைய துனிசியா நாட்டை
சேர்ந்த தீவிரவாதி இவர் என காட்சி படங்களுடன் வெளியிட பட்டுள்ளது
பயிற்றுவிக்க பட்ட தீவிரவாதியான இவன் மக்கள் ஒன்று கூடி ஆராதனையில்
ஈடுபட்ட தேவாலயத்திற்குள் புகுந்து திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினான்
மூவர் பலியாகியும் ,மேலும் இருவர் படுகையமடைந்த மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது
அகதியாக நுழைந்த இந்த தீவிரவாதி நடத்திய கொலை வெறி ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரனோ அதிகரிப்பு – இரண்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதும் லொக்கடவுன்
கொரனோ அதிகரிப்பு – இரண்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதும் லொக்கடவுன்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்
அதிகரிப்பை அடுத்து எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாடளாவிய
ரீதியில் அடித்து பூட்டும் நிகழ்வு ஆரம்பிக்கும் படி மருத்துவ நிபுணர்கள் பிரதமர் ஜோன்சனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்
தொடர்ந்து நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதற்கு இந்த பிரகடனம் அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
நத்தார் தினம் வரைக்கும் இழுத்தடிப்பு நிலையை
மேற்கொள்ளஜோன்சன் முயற்சித்து வந்த நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தி 280 பேர் பலியாகியும் 23 ஆயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர்
அப்படி என்றால் எதிர் வரும் இரு வாரத்தில் இருந்து புதிய அதிரடி அறிவிப்புக்கள் வெளியாகலாம்
மக்களே பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுங்கள் ,இந்த நீடிப்பு மாசி வரை செல்லும் என எதிர்பார்க்க படுகிறது
ஈரான் தூதகர அதிகாரிக்கு பிடியாணை அனுப்பிய லண்டன் – முறுகல் உச்சம்
ஈரான் தூதகர அதிகாரிக்கு பிடியாணை அனுப்பிய லண்டன் – முறுகல் உச்சம்
லண்டனியில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரிக்கு பிரிட்டன்
பிடியாணை அனுப்பியுள்ளது ,
இவர் மீது சுமத்த பட்டுள்ள குற்ற சாட்டுக்கள் தொடர்பில் நீதி
விசாரணைக்கு உட்படுத்த பட்ட நிலையில் இந்த பிடிவிறாந்து பிறப்பிக்க பட்டுள்ளது
மேற்படி செயல் ஈரான் மற்றும் பிரிட்டனுக்கு இடையிலான
இராச்சிய உறவுகளில் பலத்த முறுகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

அது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்
அது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட இருந்ததாக ஒரு அறிக்கை நேற்று சமூகவலைதளங்களில் வைரலானது. அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட இருந்ததாக ஒரு அறிக்கை நேற்று சமூகவலைதளங்களில் வைரலானது. அந்த அறிக்கையில்
கொரோனா நோய் தொற்று காரணமாக தன்னுடைய அரசியல் திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியவில்லை
என்பதையும் மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் ஆலோசனைப்படி இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்குவது இயலாத செயல்
என்பதையும் ரஜினி விளக்கி இருந்தார். ரஜினி தரப்பில் இருந்து இதை உறுதிபடுத்தாத நிலையில் அந்த அறிக்கை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது. அது
என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு
மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி
மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை
ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் கைகோர்த்துள்ளது.
ரஷிய தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை – மேலும் ஒரு நிறுவனம்
ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி, இந்தியாவில்
பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த பரிசோதனை
பணியில், மருத்துவ உலகில் முன்னணி நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் கைகோர்த்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் ஸ்புட்னிக்-5 மருத்துவ பரிசோதனைகள் குறித்து
அந்த நிறுவனம் ஆலோசனை வழங்கும். இதற்காக மத்திய உயிரி தொழில்
நுட்பத்துறையுடனும், உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலுடனும் (பிராக்) இணைந்து செயல்படும்
கொரோனா எதிரொலி – ஜெர்மனியில் ஊரடங்கு
கொரோனா எதிரொலி – ஜெர்மனியில் ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக ஜெர்மனியில் அடுத்த மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
கொரோனாவின் இரண்டாவது அலை – ஜெர்மனியில் மீண்டும்
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 214 நாடுகள்/ பிரதேசங்களுக்கு
பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 4 கோடியே 45 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ்
தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவந்தது.
இதையடுத்து, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக ஜெர்மனி நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மற்ற ஐரோப்பிய
நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்துவந்த போதும் ஜெர்மனி அரசின் நடவடிக்கைகளால் அந்நாட்டில் வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது.
இதையடுத்து, அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பத்தொடங்கியது.
ஆனால், ஊரடங்கு தளர்த்தப்பட்டத்தையடுத்து ஜெர்மனியில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தொடங்கியுள்ளது.
இதனால், அந்நாட்டில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 964 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் வைரஸ்
பரவியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 49 ஆயிரத்து 275 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நேற்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 98 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவும் வேகம் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளதையடுத்து ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2-ம் தேதி முதல் நவம்பர்
30 வரை (4 வாரங்கள்) ஊரடங்கு அமலில் இருக்கும் என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள ஊரடங்கின் எவை செயலில் இருக்கும், எவை மூடப்படும் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
- கேளிக்கை விடுதிகள், பார்கள் மூடப்படுகிறது.
- உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி
- உடற்பயிற்சி நிலையம், சினிமா, தியேட்டர்கள் மூடல்
- தனியார் நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை.
- தங்கும் விடுதிகள் மூடல்
- தேவையற்ற பயணங்களை தவிர்த்தல்
- அத்தியாவசிய கடைகள் உரிய பாதுகாப்பு வழிமுறையுடன் செயல்பட அனுமதி
- பள்ளிகள், மழலையர் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி
- நர்சிங் ஹோம்களில் பார்வையாளர்கள் வர அனுமதி வழங்கப்படுகிறது. ஆனாலும் 2 வாரங்களுக்கு பிறகு மறு சீராய்வு செய்து முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
எட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்
எட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்
பிரிட்டனில் அதிகமாக பரவி வரும் கொரனோ நோயின் பரவல் மற்றும்
இ றப்புக்களை அடுத்து எதிர் வரும் எட்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும்
இடைக்கால அடித்து பூட்டும் நிகழ்வு இடம் பெறும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்
இவை நத்தார் தினத்திற்கு முன்னதாக முழுமையாக இடம்பெறும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது .
தற்போது இறப்பு எண்ணிக்கையை அதிகரித்து அரசு காண்பித்து வருவதன் நோக்கம் இதன் தொடக்கம் என எதிர்வு கூறப்படுகிறது
வரும் சிலவரங்களில் இதன் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஐநூறை தாண்டும்
பொழுது புதிய லொக்கடவுன் தொடர்பான இறுக்கமான தடைகள்
அறிவிக்க பட்டு பின்னர் முழுமையான நகர்வுகள் ஆரம்பிக்க படும் என எதிர்வு கூறப்படுகிறது
மக்களே தற்பொழுது அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைத்து
கொள்ளுங்கள் ,வெளியியல் நடமாட முடியாத படி கடுமையான சட்ட நகர்வுகள் முன் வைக்க படும் அபாயம் உள்ளது
வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்
12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை
12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை
பிரிட்டனில் Scarborough பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பன்னிரண்டு
வயது சிறுமி ஒருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் ,
இவரது கற்பழிப்பு தொடர்பாக நீதிமன்றில் இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில்
குற்றவாளி என அடையாளம் காணப் பட்ட நிலையில் இருபது வருடம் கடூழிய சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
இவர் மீது ஒன்பது குற்ற சத்துக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது
கணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..?
கணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..?
பிரிட்டனில் கணவன் இறந்த மூன்றாம் நாளில் கொரனோ
நோயினால் பாதிக்க பட்டு இருந்த மனைவி இறந்துள்ளார்
தந்தையின் இறுதி கிரியை நிகழ்வுகளை நடத்த பிள்ளைகள்
முனைந்த பொழுது தயாரும் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
தற்போது இருவரும் ஒன்றாக இணைந்து மேலோகத்தில் வாழ்வார்கள் என பிள்ளைகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்
ஒருவரை ஒருவர் பிரிந்து வசித்தது இல்லை எனவும், இப்பொழுது இவர்கள்
இணைந்தே சென்றுள்ளனர் என அயலவர்களும் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்
இது தான் பந்த பாசம் என்பதா ..?

பிள்ளைகளுடன் சென்ற தாயை சரமாரியாக குத்திய மர்ம நபர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிள்ளைகளுடன் சென்ற தாயை சரமாரியாக குத்திய மர்ம நபர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் இரு சிறுவர்களுடன் வீதியில் நடந்து சென்ற 32 தாய்
ஒருவர் மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்
தள்ளு வண்டியில் சிசு ஒன்றும் அவரை மூத்தவர் தள்ளு வண்டியின் கை பிடியை
பிடித்த வண்ணம் நடந்து சென்றனர் , அவ்வேளை பிள்ளைகளை தள்ளி
விழுத்தி விட்டு தாயின் தலை மற்றும் உடல்கள் மீது கத்தி குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது
மேற்படி கொலை வெறி தாக்குதல் தொடர்பில் தீவிர நீதி விசாரணைகள்
இடம் பெற்ற வண்ணம் உள்ளது
மேற்படி சம்பவம் Doncaster Road, in Belgrave, Leicester பகுதியில் இடம் பெற்றுள்ளது
காயங்களுக்கு உள்ளான தயார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டு தேறியுள்ளமை குறிப்பிட தக்கது
நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி- கண்ணீரில் கிராமம்
நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி- கண்ணீரில் கிராமம்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சுற்றுலா சென்ற நபர்களில் 6 சிறுவர்கள் நீரோடையில் மூழ்கி பலியானார்கள்.
ஆந்திராவில் நீரோடையில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பூதேவிபேட்டா என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர்
அருகிலுள்ள வசந்தவாடா கிராமத்துக்கு சுற்றுலா சென்றனர். அவர்களில் சிறுவர்கள் 6 பேர் அங்குள்ள ஒரு நீரோடையில் இறங்கி
குளித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சிறுவர்கள் 6 பேரும் நீரோடையில் மூழ்கினர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நீரோடைக்குள் இறங்கி சிறுவர்களை தேடினர். இதற்கிடையில் இதுபற்றிய தகவல்
அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் சிறுவர்களை தேடும் பணியில் இறங்கினர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சிறுவர்கள் 4 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மற்ற 2 சிறுவர்களின் உடல்கள் இன்னும்
கிடைக்கவில்லை. மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







