Posted in உலக செய்திகள்

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்துக்கொன்ற நாய்

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்துக்கொன்ற நாய்

தஞ்சையில் எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை நாய் கடித்து கொன்றது. பாம்பு கடித்ததில் நாயும் உயிரிழந்தது.

நாய் நன்றியுள்ள விலங்கு ஆகும். வளர்ப்பு பிராணிகளில் நாய்க்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மனிதர்களிடம் கூட காணாத

குணம் நாயிடம் உண்டு. மேலும் நாயிடம் குறும்பும் அதிகம் உண்டு. சினிமாக்களில் நாய் வீட்டிற்கு தேவையான பொருட்களை கடைக்கு சென்று வாங்குவது, தன்னை வளர்த்த எஜமானர்களை, அவர்கள்

வீட்டில் உள்ளவர்களை பாம்பு, திருடர்களிடம் இருந்து காப்பாற்றுவது போன்ற சம்பவங்கள் இடம் பெற்று இருக்கும். இதே போன்ற சம்பவங்கள் நிஜத்திலும் ஆங்காங்கே நடைபெறுவது உண்டு.

தஞ்சையில் தன்னை வளர்த்த எஜமானர் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை ஒரு நாய் கடித்து கொன்றது. மேலும் பாம்பு கடித்ததில் நாயும் இறந்தது.

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சிந்து நகரைச் சேர்ந்தவர் எழில்மாறன்-மாலா தம்பதியினர். இவர்களது வீட்டில் ரியோ, ஸ்வீட்டி என்ற 2 நாய்களை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று

வீட்டில் எழில்மாறன் குடும்பத்தினர் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று அவர்களது வீட்டு வாசலுக்கு வந்து வீட்டிற்குள் நுழைய முயன்றது.

இதனை பார்த்த ரியோ என்ற நாய், பாம்புடன் கடுமையாக சண்டையிட்டது. இதில் நாய் கடித்ததில் பாம்பு இறந்தது. அதே நேரத்தில் பாம்பு கடித்ததில் அதன் விஷம் நாய்க்கு ஏறியதில் வாயில் நுரை தள்ளியபடி நாயும் இறந்தது.

இரவில் நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல் தூங்கிய எழில்மாறன் தம்பதியினர் மறுநாள் காலை விடிந்ததும் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது பாம்பும், நாய் ரியோவும் இறந்து

கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் அருகிலேயே மற்றொரு நாயான ஸ்வீட்டி கண்களில் நீர்வடிந்தபடி சோகத்தில் படுத்திருந்தது.

வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கொன்று, தனது உயிரை

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்துக்கொன்ற நாய்
வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்துக்கொன்ற நாய்
Posted in உலக செய்திகள்

பிரபல கட்சியில் இணையும் விஷால்

பிரபல கட்சியில் இணையும் விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால் பிரபல கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல கட்சியில் இணையும் விஷால்
விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. பின்னணி வேலைகள் முடிவடைந்தவுடன் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தையடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். இவரே இயக்கி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு

நவம்பர் 9 முதல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஷால் பிரபல கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விஷால்

நடிகைகள் குஷ்பு, காயத்ரி ரகுராம், உள்ளிட்டோர் பிஜேபியில் இணைந்து வரும் நிலையில் விஷாலும் அந்தக் கட்சியில் இணைய

இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், விஷாலோ திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், விஷாலை அணுகி திமுகவில் இணைய வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு விஷால் சம்மதம்

தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விஷால் திமுகவில் இணைந்தால் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – சீனா எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – சீனா எச்சரிக்கை

தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்தது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள சீனா இந்த விவகாரத்தில்

அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது.

அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – சீனா எச்சரிக்கை
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்
பீஜிங்:

தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது.

இதனால் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.

ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா தைவானுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் 2.37 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17 ஆயிரத்து 478 கோடி) மதிப்புடைய 100

ஹார்பூன் ஏவுகணை அமைப்புகளை தைவானுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது 600 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4 ஆயிரத்து 485 கோடி) மதிப்பில் ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா

விமானங்களை தைவானுக்கு வழங்க உள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில் “தைவானுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் அமெரிக்கா சீனாவின் உள் விவகாரங்களில்

மிருகத்தனமாக தலையிடுகிறது. மேலும் சீனாவின் இறையாண்மையும் பாதுகாப்பு நலன்களையும் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது.

சீன அமெரிக்க உறவுகள் மட்டும் தயவால் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க

இதுபோன்ற அனைத்து விற்பனையிலும் அமெரிக்கா ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த விவகாரத்தில்

அமெரிக்காவுக்கு சரியான மற்றும் தேவையான பதிலடி கொடுக்கப்படும்” என்றார்

Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 4 பேர் வெற்றி

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 4 பேர் வெற்றி

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 4 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 4 பேர் வெற்றி
தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் சேர்த்து 5 இந்திய வம்சாவளியினர் எம்.பி.க்களாக இருந்தனர். அவர்களில் 4 பேர்

பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படுகிற கீழ்சபை எம்.பி.க்கள் ஆவர். அவர்கள், டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் ஆவார்கள்.

செனட் சபை என்று அழைக்கப்படுகிற மேல்சபையில் கமலா ஹாரிஸ் எம்.பி.யாக இருந்தார்.

இவர்கள் அனைவரும் செல்லமாக ‘சமோசா காகஸ்’ என்று அழைக்கப்பட்டு வந்தனர்.

இவர்களில் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். எஞ்சிய 4 பேரும் மீண்டும் நாடாளுமன்ற

பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.

டாக்டர் அமி பெரா (வயது 55), கலிபோர்னியா மாகாணத்தின் 7-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் தொடர்ந்து 5-வது

முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் பஸ் பேட்டர்சன் தோற்றுப்போனார்.

ரோகன்னா (44), கலிபோர்னியா மாகாணத்தின் 17-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு

வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி தரப்பில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வம்சாவளியான ரிதிஷ் தாண்டன் தோல்வி அடைந்தார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி (47), இல்லினாய்ஸ் மாகாணத்தில் 8-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றிருக்கிறார். லிபர்டேரியன்

கட்சி பிரஸ்டன் நெல்சன் தோல்வியைத் தழுவினார். ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் தமிழ்நாட்டினர். அந்த வகையில் ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழர் ஆவார்.

பிரமிளா ஜெயபால் (55), வாஷிங்டன் மாகாணத்தின் 7-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். இவரை எதிர்த்து நின்ற குடியரசு

கட்சி வேட்பாளர் கிரேக் கெல்லர் தோல்வி அடைந்தார். பிரமிளா ஜெயபால் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஹிரால் திப்பிர்னேனி என்ற இந்திய வம்சாவளி பெண் டாக்டர், அரிசோனாவில் 6-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு

சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார், அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டேவிட்

ஸ்வெய்கெர்ட் தோல்வி அடைந்தார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்கள் உறுதியானால், டாக்டர் ஹிரால் திப்பிர்னேனி, பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2-வது இந்திய வம்சாவளி பெண் என்ற சிறப்பை பெறுவார்.

ஓஹியோ மாகாண சட்டசபையின் மேல்சபையான செனட் சபைக்கு இந்திய வம்சாவளி நீரஜ் அந்தானி (29) குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர்

மார்க் போகலை வீழ்த்தி இருக்கிறார். ஓஹியோ மாகாண செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி இவர் என்பது சிறப்பு.

இதே போன்று நியூயார்க் மாகாண சட்டசபைக்கு இந்திய வம்சாவளி வக்கீல் ஜெனிபர் ராஜ்குமார் (38), ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவர் குடியரசு கட்சி

வேட்பாளர் ஜியோவானி பெர்னாவை வீழ்த்தினார். இந்த மாகாண சட்டசபைக்கு தேர்வு பெற்றுள்ள முதல் தெற்காசிய பெண் என்ற சிறப்பு, இவருக்கு கிடைத்துள்ளது.

Posted in உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.78 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.43 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 12.27 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் இன்று கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயம் எது தெரியுமா?

அமெரிக்காவில் இன்று கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயம் எது தெரியுமா?

அமெரிக்க மக்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.

அமெரிக்காவில் இன்று கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயம் எது தெரியுமா?

சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கொரோனா நெருக்கடிக்கு

மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவியது. துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோருக்கிடையே கடும் போட்டி இருந்தது.

நவம்பர் 3 மாலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் அதிபரை தேர்ந்தெடுக்க 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி (உள்ளூர் நேரப்படி இரவு) ஜோ பைடன் 129 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். டிரம்ப் 108 வாக்குகளுடன் சற்று பின்தங்கியிருந்தார்.

அமெரிக்க மக்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் இந்த தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர். தொலைக்காட்சி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் முடிவுகளை தெரிந்தவண்ணம் உள்ளனர். ஆனால், அமெரிக்காவில் இன்று கூகுள் தேடலில் முதலிடம் வகித்த வார்த்தை எது என்று பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.

டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில், உற்சாக பானங்களை வாங்குவதற்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர். என் அருகில் உள்ள மதுக்கடைகள் ( ‘Liquor stores near me’) என்ற வார்த்தை கூகுள் தேடலில் இன்று முதலிடத்தில் இருந்ததாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது

Posted in உலக செய்திகள்

மனைவி செய்த துரோகத்தை ஆதாரத்துடன் நிரூபித்த கணவன்

மனைவி செய்த துரோகத்தை ஆதாரத்துடன் நிரூபித்த கணவன்

மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய கணவன், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவர் முன்னிலையிலும் தன் மனைவி தனக்கு

செய்த துரோகத்தை ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார்.மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய

கணவன், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவர் முன்னிலையிலும் தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தை ஆதாரத்துடன்

வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.


வீடியோ ஸ்பானிஷ் மொழியில் உள்ளது. இருந்தாலும் கூட அந்த வீடியோ நம்மை திடுக்கிட வைப்பதை மறுக்க முடியவில்லை. இந்த

சம்பவம் எந்த நாட்டில் நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும், சமூக ஊடகம் ஒன்றில் வெளியான அந்த வீடியோ வைரலாகியுள்ளத

துரோகத்தை ஆதாரத்துடன்
துரோகத்தை ஆதாரத்துடன்
Posted in உலக செய்திகள்

புரட்டி போட்ட புயல் 20 பேர் பலி – 13.000 வீடுகள் சேதம்

புரட்டி போட்ட புயல் 20 பேர் பலி – 13.000 வீடுகள் சேதம்

பிலிப்பைனில் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலின் கோர

தாண்டவத்தில் சிக்கி இதுவரை இருபது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பதின் மூன்றாயிரம் வீடுகள் சேதமாகியுள்ளன

பயன் தரும் மரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் என்பன

அழிந்துள்ளன ,இதன் இழப்பு பல கோடி வரும் என மதிப்பிட பட்டுள்ளது

பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன

புரட்டி போட்ட புயல் 20
புரட்டி போட்ட புயல் 20
Posted in உலக செய்திகள்

பல் கலைக் கழகம் மீது ஐஸ் தாக்குதல் 22 மாணவர்கள் பலி – 24 பேர் காயம்

பல் கலைக் கழகம் மீது ஐஸ் தாக்குதல் 22 மாணவர்கள் பலி – 24 பேர் காயம்

ஆப்கான் தலைநகர் உள்ள பல் கலைக் கழகம் ஒன்றை இலக்கு வைத்து

உலக மகா கொடிய பயங்கரவாத அமைப்பான ஐ எஸ் அமைப்பு நடத்திய

தாக்குதலில் இருபத்தி இரண்டு மாணவர்கள் பலியாகினர் ,மேலும்

இருபத்தி நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்

இறந்தவர்களில் வெளிநாட்டு மாணவர்களும் உள்ளடங்கும் என தெரிவிக்க

பட்டுள்ளது ,மேற்படி தாக்குதலை தாம் நடத்தியதாக ஐ எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ எதிரொலி -லண்டனில் பாடசாலைகளை மூடும் படி அபாய எச்சரிக்கை

கொரனோ எதிரொலி -லண்டனில் பாடசாலைகளை மூடும் படி அபாய எச்சரிக்கை

பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் இரண்டாவது

பரவலை அடுத்து லண்டனில் பாடசலைகளை அடித்து பூட்டும் படி முக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

அதனை செய்திட அரசு மறுத்தால் கடுமையாக மக்கள் பாதிப்பை சந்திக்க நேரும் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என கூறிய அரசு பாடசாலைகளை

நடத்துகிறது ,அவர் தம் பிள்ளைகள் இருவேளை பாடசாலைக்கு பெற்றவர்களே அழைத்து செல்ல வேண்டும்

இவ்வாறான நெருக்கடி நிறைந்த ,கண்துடைப்பு அடித்து பூட்டும் நிகழ்வு

நாடகத்தை ஆளும் அரசு நடத்தி வருகிறது என மக்கள் மன்றம் கருத்துரைத்து

வரும் வேளையில் இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பாட்டி வைத்த 9 பேருக்கு 10.000 மற்றும் 20 பேருக்கு தலா 200 தண்டம்

பிரிட்டனில் பாட்டி வைத்த 9 பேருக்கு 10.000 மற்றும் 20 பேருக்கு தலா 200 தண்டம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ பரவலை கட்டு படுத்த

அரசு புதிய சட்ட விதிகளை அறிவித்துக்ள்ளது ,அதன் படி மக்கள் ஒன்று கூட நிகழ்வுகள் நடத்த தடை விதிக்க பட்டுள்ளது

அரசின் இந்த தடைகளை மீறி ஒன்றுகூடிய முன்னூறு பேர் Halloween நிகழ்வை

நடத்தினர் ,அதனை முன்னின்று நடத்தியவர்களுக்கும் ,அந்த கட்டடத்தை

வழங்கிய நபர்கள் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தலா பத்து ஆயிரம் விகிதம் தண்டம் அறிவிட பட்டுள்ளது

மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இதனை பரப்பிய இருபது பேருக்கு

200 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது ,இந்த செயல் கிரிமினல் குற்றமாக பதிவு செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

சுட்டியலினால் வாலிபனின் மண்டை உடைப்பு – லண்டனில் நடந்த பயங்கரம்

சுட்டியலினால் வாலிபனின் மண்டை உடைப்பு – லண்டனில் நடந்த பயங்கரம்

கடந்த இருபத்தி ஒன்பதாம் திகதி பிரிட்டன் West Bromwich பகுதியில்

முப்பது வயதுடைய வாலிபர் ஒருவர் மீது மர்ம நபர்கள் திடீர் சுட்டியல் தாக்குதலை நடத்தினர்

இதில் குறித்த வாலிபனின் தலைக்குள் சுத்தியல் புகுந்த நிலையில்

மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு தற்போது காப்பற்ற பட்டுளளார்

எனினும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார்

இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் குறித்த பகுதியில் நீல பட்டியல் கொண்டு அடைத்து

முற்றாக மக்கள் பாவனைக்கு தடை செய்தனர்
இதனால் பல மணிநேரம் அங்கு பதட்டம் ஏற்பட்டது பின்னர் அவை நீக்க பட்டது

தொடர்ந்து மேற்படி அகோர தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள்

தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்

தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்

மஞ்சூர் அருகே நடந்த திருமண விழாவில் எனது காதலரை தான் கரம் பிடிப்பேன் என்று கூறி தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டக்கண்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், கோத்தகிரி அருகே உள்ள தூனேரி

கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மிகவும் எளிமையாக திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 29-ந் தேதி மட்டக்கண்டி கிராமத்தில் திருமண விழா நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்ததுடன் கழுத்தில்

மாலையுடனும், மணமகள் பட்டுச்சேலை அணிந்து கொண்டு மாலையுடன் மணமேடையில் அமர்ந்து இருந்தனர். திருமண

விழாவில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

மணமக்களின் குல வழக்கப்படி மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு, என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?

என்று மணமகன் மணப்பெண்ணிடம் 3 முறை கேட்க வேண்டும். 3 முறையும் சம்மதம் என்று சொன்ன பிறகே மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட வேண்டும்.

அதன்படி மணமகளிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று மணமகன் கேட்டார். அவர் 2 முறை கேட்டபோதும் மணமகளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அப்போது

சரியாக கேட்கவில்லை என்று நினைத்த மணமகன், 3-வது முறையாக கொஞ்சம் சத்தமாக என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டபடி மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்றார்.

உடனே மணமகள் உங்களை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் இல்லை என்று கூறினார். அத்துடன் தாலி கட்ட விடாமல்

மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் ஏன் திருமணம் வேண்டாம் என்று கேட்டனர்.

அப்போது பேசிய மணமகள், நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன். ஏற்கனவே அவர் திருமணமானவர். அவருக்கு குழந்தை உள்ளது. எனக்காக அவர் திருமண பந்தத்தை

முறித்துக்கொண்டார். அவருடைய குழந்தைக்கு நான்தான் தாயாக இருந்து பராமரிப்பேன் என்று வாக்கு கொடுத்துவிட்டேன். அவர் எனக்காக காத்து இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வந்துவிடுவார் என்று கூறி மணமேடையை விட்டு இறங்கினார்.

உடனே அந்த மணப்பெண்ணின் உறவினர்கள் அவரை தாக்க முயன்றனர். அத்துடன் அந்த பெண்ணின் பெற்றோர், மணமேடையில் அமர்ந்து மணமகனை திருமணம் செய்து

கொள்ளும்படி கூறினார். அதற்கு அவர், எனது காதலரை தான் நான் கரம் பிடிப்பேன் என்று கூறினார். அதற்கு அங்கிருந்த உறவினர்கள் மணமகனை பிடிக்கவில்லை என்றால் ஆரம்பத்திலேயே கூறி இருக்கலாமே என்று கேட்டனர்.

அதற்கு அந்த பெண், எனக்கு பேசுவதற்கு யாரும் அனுமதி கொடுக்கவில்லை. ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு, பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு, அவருக்கு துரோகம் செய்ய

எனக்கு மனமில்லை. எனவே நான் சென்னையை சேர்ந்த எனது காதலரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இந்த காட்சியை திருமண விழாவுக்கு வந்திருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டார்.

தற்போது அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. மஞ்சூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றுக்கூறி

மணமகள் மணமேடையில் இருந்து எழும்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாலி கட்டும் நேரத்தில் மணமகனின்
தாலி கட்டும் நேரத்தில் மணமகனின்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் Ilford டில் ஒருவர் சுட்டுக்கொலை

லண்டன் Ilford டில் ஒருவர் சுட்டுக்கொலை

கடந்த தினம் இரவு ,
Balfour Road, Ilford, at 10.14மணியளவில் மரம் நபர் நடத்திய

துப்பாக்கி சூட்டில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் ,


மேற்படி கொலை தொடர்பில் ஸ்கொட்லந் யார்ட் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

Posted in உலக செய்திகள்

வடக்கு லண்டனில் பஸ்ஸில் பயணித்த பெண்ணின் முடியை எரித்த காப்பிலி

வடக்கு லண்டனில் பஸ்ஸில் பயணித்த பெண்ணின் முடியை எரித்த காப்பிலி

பிரிட்டன் வடக்கு லண்டன் பகுதியில் பயணிகள் போக்குவரத்து சேவையாக

விளங்கும் 328 பேரூந்தில் பயணித்த இளம் பெண் ஒருவரின் முடியை அதில் பயணித்த நபர் ஒருவ எரித்துள்ளார்

மேற்படி சம்பவம் தொடர்பில் குறித்த புகைப்படத்தினை போலீசார் வெளியிட்டுள்ளனர்


மேலும் பாதிக்க பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார் ,எனினும் ஆபத்து இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது

வடக்கு லண்டனில் பஸ்ஸில் பயணித்த
வடக்கு லண்டனில் பஸ்ஸில் பயணித்த
Posted in உலக செய்திகள்

நாளை ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்காவில் டிரம்ப் – ஜோ பைடன் இறுதிகட்ட பிரசாரம்

நாளை ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்காவில் டிரம்ப் – ஜோ பைடன் இறுதிகட்ட பிரசாரம்

அமெரிக்காவில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளரான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நாளை ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்காவில் டிரம்ப் – ஜோ பைடன் இறுதிகட்ட பிரசாரம்


ஜோ பைடனும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தங்களின் ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த காட்சி.
வாஷிங்டன்:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை)ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இந்த

தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில்

தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் காண்கிறார்.

கொரோனா வைரஸ், இனப்பாகுபாடு ஆகிய விவகாரங்கள் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மிகுந்தஆர்வம் காட்டிவருகின்றனர்.

அந்தவகையில் 8 கோடியே 50 லட்சம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்தினர். அதைப்போல் தேர்தல் நாளன்று இதுவரை

இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக

ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய மாகாணமாக விளங்கும் பென்சில்வேனியாவில் 4 பிரசார பேரணிகளில் ஜனாதிபதி டிரம்ப்

கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல் மற்றொரு முக்கிய மாகாணமான மிச்சிகனில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 2 பிரசார பேரணிகளில் பங்கேற்றார்.

இந்தப் பேரணிகளில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் கலந்து கொண்டு ஜோ பைடனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

ஜோ பைடனின் பிரசார பேரணிகள் மிக சிறிய அளவிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டும் நடந்தன. ஆனால்

ஜனாதிபதி டிரம்பின் பிரசார பேரணிகள் மிக பிரமாண்டமாகவும், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்றியும் நடைபெற்றன.

இதனிடையே பென்சில்வேனியாவில் ஒரு பேரணியில் பேசிய டிரம்ப், நடக்க இருக்கும் இந்த தேர்தலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான வாக்குகளை கைப்பற்றி குடியரசு கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “இது மிகவும் சுவாரஸ்யமான செவ்வாய்க்கிழமையாக இருக்கப்போகிறது. நம்மிடம் ஒரு பெரிய சிவப்பு அலை உருவாகியுள்ளது. இது போன்ற எதையும் யாரும் பார்த்ததில்லை” என கூறினார்.

மேலும் அவர் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் தான் பெற்ற வாக்குகளை விட இம்முறை அதிக அளவு வாக்குகளை பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேபோல் மிச்சிகனில் நடந்த பிரசார பேரணியில் பேசிய ஜோ பைடன் ஜனாதிபதி டிரம்ப் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டை பிளவுபடுத்தியதாவும், எனவே அவரை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்ற மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும் கூறினார்.

பிரசாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பேசுகையில், ஜனாதிபதி டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றின் குறிப்பிடத்தக்க சிக்கலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் தனது தற்பெருமைக்கு தீனி போடுவதை தவிர மற்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

Posted in உலக செய்திகள்

கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் – அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் – அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் சுவாச வைரஸ் என்று அறியப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட இது இதய தசையை நேரடியாக தாக்கும் என தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் – அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் சுவாச வைரஸ் என்று அறியப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட இது இதய தசையை நேரடியாக தாக்கும் என தெரிய வந்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் டாக்டர் சீன் பின்னி கூறும்போது, “இதய நோயால்

பாதிக்கப்பட்டவர் களின் இதயம், வைரசால் சேதம் அடையும் ஆபத்து உள்ளது. மேலும், முந்தைய நோய்கள் இல்லாத கொரோனா

நோயாளிகளுக்கும் இதய சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன” என குறிப்பிட்டார்.

அமெரிக்க இதய மருத்துவ கல்லூரி பத்திரிகை நடத்திய ஆய்விலும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிற கொரோனா நோயாளிகளுக்கு 25-

30 சதவீதம் பேருக்கு இதயத்தில் பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் – பொலிஸாருக்கு தண்ணி காட்டி ஒன்று கூடிய 300 பேர்

லண்டனில் – பொலிஸாருக்கு தண்ணி காட்டி ஒன்று கூடிய 300 பேர்

பிரிட்டனில் கடந்த தினம் Halloween நிகழ்வு இடம் பெற்றது ,இதன் பொழுது

சுமார் முன்னூறு பேர் கலந்து கொண்டனர் ,மேற்படி நிகழ்வில் கலந்து

கொண்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

மக்கள் ஒன்று கூடவா ,இரண்டு மீட்டர் அருகில் நின்று பேசவோ கூடாது

என புதிய சட்டம் அறிமுக படுத்த பட்டு நடை முறையில் உள்ள

பொழுது இவ்விதம் பெரும் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது

லண்டனில் பொலிஸாருக்கு தண்ணி
லண்டனில் பொலிஸாருக்கு தண்ணி
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் தபாற் கந்தோரில் சிக்கிய 46 வாக்கு பெட்டிகள்

அமெரிக்காவில் தபாற் கந்தோரில் சிக்கிய 46 வாக்கு பெட்டிகள் –

அமெரிக்காவில் இடம் பெற்று வரும் தேர்தல் போட்டியில் ஆளும் ஜனாதிபதி

டிரம்ப் பலத்த தோல்வியை தழுவி பைடன் வெல்வார் என எதிர்பார்க்க படுகிறது


இதில் தமது வெற்றிகளை உறுதி செய்து கொள்ள கள்ள வாக்கு

அளிக்கும் நகர்வுகளில் இரு தரப்பும் தீவிரம் காட்டி வருவதான குற்ற சட்டு முன் வைக்க படுகிறது

புளோரிடா தபால் அலுவலகம் ஒன்றில் 46 வாக்கு பெட்டிகள் விநியோகிக்காத நிலையில்

இருந்தமை கண்டு பிடிக்க பட்டுள்ளது,இதுவே தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 21,915 பேர் பாதிப்பு -326 பேர் பலி

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 21,915 பேர் பாதிப்பு -326 பேர் பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த

இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 326 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 21,915 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதுவே வரும் வாரம் முதல் நாள் ஒன்றுக்கு நாற்பது ஆயிரம் முதல் என்பது

ஆயிரம் பேர் வரை பாதிக்க படுவார்கள் எனவும் நாள் ஒன்றுக்கு

மூவாயிரத்துக்கு மேற்பட்ட மரணங்கள் நிகழ கூடும் என தெரிவிக்க படுகிறது