Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
பெண்ணை இடித்து கொன்ற கார் – நண்பிகள் காயம்
பெண்ணை இடித்து கொன்ற கார் – நண்பிகள் காயம்
அவுஸ்ரேலியாவில் கடந்த தினம் இரவு பத்து முப்பது மணியளவில் நண்பிகளுடன்
நடை பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது வேகமாக வந்த கார்
ஒன்று சாரதியின் காட்டு பாட்டை இழந்து மக்களுக்குள் புகுந்தது இதில் 19
வயது இளம் பெண் சம்பவ இடத்தில் பலியானார் நண்பிகள் சிறிய
காயங்களுடன் உயிர் தப்பித்து கொண்டார்
பதினெட்டு வயது சாரதி கைது செய்ய பட்டு நீதி
விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

அமெரிக்காவில் கொட்டலுக்குள் துப்பாககி சூடு பலர் காயம் – பொலிஸ் குவிப்பு
அமெரிக்காவில் கொட்டலுக்குள் துப்பாககி சூடு பலர் காயம் – பொலிஸ் குவிப்பு
அமெரிக்கா 3 shot at Circus Circus Hotel பகுதியில் கொட்டல் ஒன்றுக்குள்
இடம்பெற்ற திடீர் துப்பக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி மூவர் படு காயமடைந்துள்ளனர்
,மேலு ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,இந்த சூட்டு சம்பவத்தால் அங்கு பெரு பரபரப்பு நிலவியது
இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

லண்டனில் பாடசாலைகள் அடித்து பூட்ட படுகிறது – விபரம் உள்ளே
லண்டனில் பாடசாலைகள் அடித்து பூட்ட படுகிறது – விபரம் உள்ளே
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினை
அடுத்து மக்கள் அதிகம் பாதித்து வருகின்றனர், ஆனால் பாடசாலைகள் தொடர்ந்து நடத்த பட்ட வண்ணம் உள்ளது
இதனை அடுத்து தற்பொழுது மாணவர்களுக்கு உடல் நிலை சீரற்று நிலையில்
தாக்குதல் இருந்தால் வீட்டில் நிறுத்தி வைக்கும் படியும் அது
தொடர்பாக மருத்துவர் உதவியை நாடும் படியும் தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் நம்பர் ஒன்பாதம் திகதி முதல்; 13 ஆம் திகதி வரை அடித்து மூட படுகிறது என தெரிவிக்க பட்டுள்ளது
School officials are asking anyone not feeling well to stay home and seek guidance from a doctor.
All schools will be closed for in-person learning the week of Nov. 9 through Nov. 13, according to school officials.
Students must participate in full-time distance during this time. Classes will not be held on Wednesday, Nov. 11 in honor of Veteran’s Day, school officials said.
உலக தலைவர்கள் டிரம்ப்பை ஏற்க மறுப்பு -பைடனுக்கு ஆதரவு
உலக தலைவர்கள் டிரம்ப்பை ஏற்க மறுப்பு -பைடனுக்கு ஆதரவு
முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதியும் சண்டியருமாக விளங்கி வந்த
டிரம்ப் படு தோல்வியை தழுவிய நிலையில் அதனை ஏற்க மறுத்து வருவதுடன் ,
தான் தொடர்ந்தும் ஜனாதிபதி என கூறி வருகிறார் ,ஆனால் தேர்தல்
நிர்வாகமோ பைடனே புதிய ஜனாதிபதி என அறிவித்துள்ளது
இதனை அடுத்து பிராந்திய நாடுகள் உள்ளிட்ட தலைவர்கள் டிரம்பிற்கு
நன்றி வணக்கம் தெரிவித்தும் பைடனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இனியாவது அடங்குவார் இனவெறி டிரம்ப் …?
டென்மார்க்கில் இருந்து மக்கள் பிரிட்டனுக்கும் நுழைய தீடீர் தடை
டென்மார்க்கில் இருந்து மக்கள் பிரிட்டனுக்கும் நுழைய தீடீர் தடை
ஐரோப்பா எங்கும் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து
தற்பொழுது டென்மார்க்கில் இருந்து பிரிட்டனுக்குள் மக்கள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது
இது போல மேலும் சில நாடுகளுக்கு செல்ல எதிர் காலத்தில் தடை
விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகின்றோம் – ஜோ பைடன் வெற்றி உரை
யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகின்றோம் – ஜோ பைடன் வெற்றி உரை
ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றினார் ஜோ பைடன்.
யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகின்றோம் – ஜோ பைடன் வெற்றி உரை
அமெரிக்க அதிபர் தேர்தலில் 4 நாளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. 284 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் வெற்றிக்குத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது. அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கான நேரம் இது.
என்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். நாட்டு மக்கள் வெற்றி மூலம் தங்கள் குரலை
வெளிப்படுத்தியிருக்கின்றனர். இதைவிட சிறந்த நாள் வருமென்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்த உழைப்போம்.
கடந்த 4 ஆண்டுகளாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். கொரோனா காலத்திலும் கட்சிக்காகவும் வெற்றிக்காகவும் உழைத்தவர்களுக்கு நன்றி.
ஆட்சி ஏற்றவுடன் நமது திட்டங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக இருக்கும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கே முன்னுரிமை.
அமெரிக்காவில் ஒவ்வொருவரின் பாதுகாப்பே எனது இலக்கு. எந்த பேதமும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் நம்மை ஆதரித்து
இருக்கிறார்கள். வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். பாராளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும்.
நம்மால் முடியும் என்ற முழக்கத்துடன் ஒபாமா ஆட்சிக்கு வந்தார். அவருடன் நான் இருந்தேன். யாரையும் கைவிடாத அமெரிக்காவை
நாம் உருவாக்க போகின்றோம். அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடி
கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடி
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியை கடந்தது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ்
தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.54 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 13.33 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91
ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தொற்று பாதித்தவர்களில் அதிக அளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 78,19,887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை ஒரு
கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கமலா ஹாரிஸ் வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய சொந்த ஊர் மக்கள்
கமலா ஹாரிஸ் வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய சொந்த ஊர் மக்கள்
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதையடுத்து, தமிழகத்தின் மன்னார்குடி அருகே அவரது சொந்த ஊர் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கமலா ஹாரிஸ் வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய சொந்த ஊர் மக்கள்
இனிப்பு வழங்கி மகிழ்ந்த கிராம மக்கள்
அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ்(வயது 55) வெற்றி பெற்றுள்ளார். இவரது சொந்த ஊர்
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். கமலா ஹாரிசின் தாய்வழி
தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிட்டதால் அவரது சொந்த ஊரான துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி
அடைந்தனர். கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைத்து ஆதரவு தெரிவித்தனர். வீடுகளின் முன்பு ரங்கோலி வரைந்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுவிட்டார் என்ற செய்தி அறிந்ததும், துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டாசுகள்
வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். வீட்டு வாசல்களில் ரங்கோலி வரைந்து வாழ்த்து தெரிவித்தனர்.
நிர்வாண புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய வில்லன் நடிகர்
நிர்வாண புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய வில்லன் நடிகர்
தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் வில்லனாக நடித்த மிலிந்த் சோமன் நிர்வாண புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
பூனம் பாண்டேவை தொடர்ந்து நிர்வாண புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய வில்லன் நடிகர்
பூனம் பாண்டே – மிலிந்த் சோமன்
பாலிவுட்டில் நடிகராகவும், மாடலிங் துறையிலும் இருப்பவர் மிலிந்த் சோமன். இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிப்படங்களில்
நடித்திருக்கும் இவர் தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
கடந்த நவம்பர் 4-ம் தேதி தனது 55-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவா கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவது போன்ற தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்தப் புகைப்படம் குறித்து கோவா சுரக்ஷ் மன்ச் என்கிற அரசியல் கட்சி வாஸ்கோ காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளது. புகாரில்
ஆபாசமான இந்தப் புகைப்படத்தால் கோவாவின் கலாச்சாரத்தை களங்கப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிலிந்த் சோமன்
முன்னதாக கோவாவில் தடை செய்யப்பட்ட பகுதியில் நடிகை பூனம் பாண்டே ஆபாசமாக புகைப்படம் எடுத்ததற்காக அவரைக்
காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் மிலிந்த் சோமனை மட்டும் ஏன் கைது செய்யவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
தந்தை மரணம்…. நடிகை ராய் லட்சுமி உருக்கம்
தந்தை மரணம்…. நடிகை ராய் லட்சுமி உருக்கம்
நடிகை ராய் லட்சுமி தனது தந்தை மறைவு குறித்து சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தந்தை மரணம்…. நடிகை ராய் லட்சுமி உருக்கம்
தந்தையுடன் ராய் லட்சுமி
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ராய் லட்சுமி. இவர் தந்தை
சமீபத்தில் காலமானார். இந்நிலையில், அவர் தனது தந்தை குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: என் தந்தையின் இழப்பை ஒருபோதும் என்னால் ஈடுசெய்ய முடியாது. இருப்பினும் இந்த இழப்புடன் வாழ நான் கற்றுக்கொள்வேன். உங்களைப் போல
யாரும் என்னை நேசிக்க முடியாது. என் இதயம் வேதனையில் உள்ளது. மன்னிக்கவும், உங்களை என்னால் காப்பாற்ற
முடியவில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கின்றீர்கள். அதை இந்த விஷயத்திலும் எடுத்துக் கொள்கிறேன்.
நான் சுதந்திரமாகவும் வலுவாகவும் இருந்தது உங்களால் தான். உங்கள் இழப்பை ஈடுகட்ட எனக்கு வலிமை தேவை என்பது உங்களுக்குத் தெரியும்.
நீங்கள் மேலே இருந்து ஆசீர்வாதங்களைத் தருவீர்கள் என்பது எனக்கு தெரியும். என்னை நீங்கள் முழுமையாக நம்புனீர்கள். உங்களுடைய விருப்பங்களை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.
ஒரு பொன்னான இதயம், துடிப்பதை நிறுத்திவிட்டது. என் வாழ்க்கையின் மிக இருண்ட தருணம் இது. கடினமாக உழைக்கும்
உங்களை கடவுள் விரும்பி எடுத்துக் கொண்டார். எப்போதும் எங்களை சுற்றி நீங்கள் இருப்பீர்கள் என்பதை உணர்கிறோம்.
எங்கள் இதயத்தால் எப்போதும் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
15 பிள்ளைகள் பெற்ற தம்பதிகள் – எதுக்கு தெரியுமா இப்படி ..?
15 பிள்ளைகள் பெற்ற தம்பதிகள் – எதுக்கு தெரியுமா இப்படி ..?
தாம்பத்திகள் மணம் முடித்து குழந்தை பெற்றனர் ஆனால் ,இவர்க, பெண்
பிள்ளைக்கு ஆசை பட்ட பொழுதும் அது கிடைக்கவிலை தொடர்ந்து பதின் நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்தன
ஆனாலும் அவர்கள் தமது செயலை கைவிடவில்லை ,இறுதியாக 15 வது
பிள்ளையாக பெண் பிள்ளை பெற்றுள்ளனர்
இத்துடன் அவர்கள் பிள்ளை பெறுவதை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்
ஆசைக்கு ஒரு பெண் பிள்ளையை பெறுவதற்கு இதனை பாடு பட்டு இருக்காங்க ,பாவம்யா அந்த பொண்ணு

அமெரிக்கா வாக்கு சாவடிக்கு அருகில் துப்பாக்கியுடன் நின்ற இருவர் கைது
அமெரிக்கா வாக்கு சாவடிக்கு அருகில் துப்பாக்கியுடன் நின்ற இருவர் கைது
அமெரிக்கா Philadelphia வாக்கு சாவடிக்கு அருகில் துப்பாக்கியுடன்
நின்ற இருவர் போலீசாரால் சுற்றிவளைக்க பட்டு கைது செய்ய
பட்டுள்ளனர்
தாரிகள் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் பைடன் முன்னிலையில் தொடர்ந்து உள்ளதுடன் அவர்
ஆட்சியமைக்க போதுமான இடங்களை பெற்றுள்ளார்
எனினும் அதனை டிரம்ப் ஏற்க மறுத்து குளறுபடி செய்து
வருகின்றமை குறிப்பிட தக்கது
லண்டனில் கடைகளை பூட்ட மறுக்கும் நபர்கள் – போலீசார் அதிரடி வேட்டை
லண்டனில் கடைகளை பூட்ட மறுக்கும் நபர்கள் – போலீசார் அதிரடி வேட்டை
பிரிட்டன் ,மற்றும் லண்டன் பகுதியில் புதிதாக விதிக்க பட்டுள்ள அடித்து பூட்டும் நிகழ்வின் கீழ்
hair salons, gyms, cafes and tattoo parlours என்பன அடித்து பூட்ட
உத்தரவிட பட்டது ,ஆனால் இவர்கள் தொடர்ந்து திறந்து வைத்துள்ளனர்
இதனால் சலூன் ,டாட்டோ மற்றும் gyms என்பன வற்றுக்கு தண்டம் அறவிட
பட்டுள்ளது ,இரவு பத்து மணிக்கு மேல் திறந்து நடத்தியவர்க்ளுக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளது
மேலும் தமது புதிய சட்ட விதிகளை மீறி திறப்பவர்களுக்கு தண்டம் அறவிட
படுவதுடன் அவர்களை உரிமமும் இரத்து செய்ய படும் என குறிப்பிட படுகிறது குறிப்பிட தக்கது
பிரான்சில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 828 பலி – 60,486பேர் பாதிப்பு
பிரான்சில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 828 பலி – 60,486பேர் பாதிப்பு
பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
கொரனோவில் சிக்கி 828 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 60,486 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து 4,331 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
அவ்வாறு ஏனினின் எதிர் வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு
ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
மக்களே எச்சரிக்கை உங்களை நீங்களே பாது காத்து கொள்ளுங்கள்
பிரிட்டனில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 355 பலி – 23,287 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 355 பலி – 23,287 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 355 பேர் பலியாகியுள்ளனர்
,மேலும் 23,287 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
எதிர்வரும் நான்கு வாரத்திற்கு முழு அடித்து பூட்டு நிகழ்வுகள் இடம்பெற
கூடும் என்பதுடன் ஊரடங்கு சட்டம் அமூல் அப்துத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது
பிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை
பிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை
Manchester,Birchenall Street, Moston,பகுதியில் பதிண்று வயது
கறுப்பின வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இரத்த வெள்ளத்தில் மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த
பட்டுள்ளது ,
இந்த கொலையை புரிந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்
லண்டன் ,பகுதியில் தொடராக கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்று வருகிறது ,
இதனை தடுக்க கமராக்கள் மற்றும் இரசிய போலீசார் உள்ளிட்டவர்கள்
கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பொழுதும் அதனை மீறி இந்த கொலைகள் இடம்பெறுவது பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது
வடகொரியாவில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க தடை
வடகொரியாவில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க தடை
வடகொரியாவில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க தடை விதிக்க வகை செய்யும் புகையிலை தடை சட்ட மசோதா
நிறைவேறி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
வடகொரியாவில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க தடை
கோப்புப்படம்
சியோல்:
வடகொரியாவில் அபூர்வ நிகழ்வாக அந்த நாட்டின் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கூடியதாகவும், அதில் பொது இடங்களில் சிகரெட்
புகைக்க தடை விதிக்க வகை செய்யும் புகையிலை தடை சட்ட மசோதாவும், கம்பெனி சட்ட திருத்த மசோதாவும் நிறைவேறி இருப்பதாக சியோலில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அங்கு நிறைவேற்றப்பட்டுள்ள புகையிலை தடை சட்ட மசோதா, சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான சட்ட மற்றும் சமூக கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதின் மூலம் மக்களின்
வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வழிவகை செய்துள்ளது. புகை பிடிப்பது தொடர்பாக அனைத்து
நிறுவனங்களும், அமைப்புகளும், பொதுமக்களும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளையும் வகுத்துள்ளது.
மேலும், அரசியல் நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், பொது இடங்கள், குழந்தைகள் வளர்ப்பிடங்கள், பொது சுகாதார
நிறுவனங்கள், வணிக மற்றும் பொது உணவு நிறுவனங்கள், பொது போக்குவரத்து சாதனங்கள் ஆகியவற்றில் புகை பிடிக்கவும் தடை விதித்துள்ளது.
இந்த சட்டத்தை மீறி பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு அபராதம் விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது.
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் சிகரெட் புகைக்கும் வழக்கம் உடையவர். இந்த சட்டத்தால் அவர் இனி புகை பிடிப்பதை கைவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது
இங்கிலாந்தில் 4 வாரம் ஊரடங்கு அமல் – வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்
இங்கிலாந்தில் 4 வாரம் ஊரடங்கு அமல் – வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை பரவலை தடுப்பதற்காக இங்கிலாந்தில் 4 வார ஊடரங்கு அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
இங்கிலாந்தில் 4 வாரம் ஊரடங்கு அமல் – வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்
கோப்புப்படம்
லண்டன்:
உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 9-வது இடத்தில் உள்ளது. அங்கு 11 லட்சத்துக்கும்
மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர். சுமார் 48 ஆயிரம் பேர் வைரசுக்கு இரையாகி உள்ளனர். அங்கு கடந்த மார்ச் மாதம்
முதலில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் வைரஸ் தொற்று குறையத்தொடங்கியபோது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
ஆனால் தற்போது அங்கு மீண்டும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது 2-வது அலையாக
பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் 492 பேருக்கு கொரோனா புதிதாக தாக்கி உள்ளது. இது மே மாதம் 19-ந் தேதிக்கு பிறகு
அதிகபட்ச பாதிப்பு ஆகும். புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்து விட்டது.
2-வது அலையாக பார்க்கப்படுகிற இந்த பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அந்த நாட்டில் மீண்டும் 4 வார கால ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு நேற்று முன்தினம் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்குமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பலரும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அத்தியாவசியமில்லாத பொருட்களை விற்பனை
செய்யும் கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளவை மூடப்பட்டுள்ளன.
கல்வி, வேலை போன்ற அத்தியாவசிய காரணங்களையொட்டி மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல
அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலையை பொறுத்தமட்டில் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாத சூழலில் மட்டுமே வெளியே சென்று வரலாம்.
எந்த பொழுதுபோக்கு அமைப்புகளும் அங்கு இயங்கவில்லை. ஓட்டல்கள், உணவு விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்த ஊரடங்கைப்போல இல்லாமல், இந்த முறை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள்,
பல்கலைக்கழகங்கள் மற்றும் நர்சரிகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்களுடன் வசிக்காதவர்களை வெளியே பூங்கா அல்லது கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்று சந்திக்க முடியும்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது
ஊரடங்கு பற்றி பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “இந்த ஊரடங்கு 4 வாரங்கள் நடைமுறையில் இருக்கும். டிசம்பர் 2-ந் தேதி தானாகவே காலாவதியாகி விடும். இதுதான் நம்நாட்டுக்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான பாதை” என கூறினார்.
இந்த 2-வது ஊரடங்கை இங்கிலாந்து நாட்டின் எம்.பி.க்கள் அனைவரும் ஆதரிக்கின்றனர்.
2-வது ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வேலை இழப்புகளை தடுப்பதற்காக 80 சதவீத தொழிலாளர்களின் சம்பளத்தை அரசு தருகிற திட்டத்தை வசந்த காலம் வரையில் (மே மாதம் 31-ந் தேதி வரை) நீட்டிக்க வேண்டும் என்று தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர், இங்கிலாந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி
அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி
அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வென்று புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.
அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி
ஜெனிபர் ராஜ்குமார், கேஷாராம், நிமா குல்கர்னி, வந்தனா சிலேட்டர், பத்மா குப்பா.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் நாடாளுமன்றத்துக்கும், பல மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினர் டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் அபாரவெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் தமிழர்கள் ஆவார்கள்.
அங்கு நடந்த மாகாண சட்டசபை தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியினர் 5 பெண்கள், 7 ஆண்கள் என 12 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- நியூயார்க் மாகாண சட்டசபைக்கு இந்திய வம்சாவளி பெண் வக்கீல் ஜெனிபர் ராஜ்குமார் (38), ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜியோவானி பெர்னாவை வீழ்த்தி, அந்த மாகாண சட்டசபைக்கு தேர்வு பெற்றுள்ள முதல் தெற்காசிய பெண் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
- வெர்மாண்ட் மாகாண செனட் சபைக்கு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கேஷா ராம் (34) வெற்றி பெற்று, முதல் பெண் செனட் உறுப்பினர் என்ற சிறப்பை அங்கு பெற்றுள்ளார்.
- கென்டக்கி மாகாண சட்டசபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு நிமா குல்கர்னி என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார்.
- வந்தனா சிலேட்டர் என்ற பெண் விஞ்ஞானி, வாஷிங்டன் மாகாண சட்டசபைக்கு ஜனநாயக கட்சி தரப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
- மிச்சிகன் மாகாண சட்டசபைக்கு பத்மா குப்பா என்ற பெண், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
- ஓஹியோ மாகாண சட்டசபையின் மேல்சபையான செனட் சபைக்கு இந்திய வம்சாவளி நீரஜ் அந்தானி (29) குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் மார்க் போகலை வீழ்த்தி, ஓஹியோ மாகாண செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி என்ற சாதனையை செய்துள்ளார்.
- வட கரோலினா மாகாண செனட் சபை தேர்தலில் ஜெய் சவுத்ரி (வயது 51) ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
- அரிசோனா மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அமிஷ் ஷா ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார்.
- பென்சில்வேனியா மாகாண செனட் சபைக்கு நிகில் சாவல் (37) ஜனநாயக கட்சி தரப்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
- மிச்சிகன் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ரஞ்சீவ் பூரி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- நியுயார்க் மாகாண செனட் சபை தேர்தலில் ஜெரேமி கூனி ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றுள்ளார்.
- கலிபோர்னியா மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய ஆஷ் கல்ரா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
- டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த மாவட்ட நீதிபதி தேர்தலில் ரவி சாண்டில் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்.
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலிலும், மாகாண தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியினர் அபார வெற்றி பெற்றிருப்பதை இம்பேக்ட் என்று அழைக்கப்படுகிற இந்திய வம்சாவளி அரசியல் நடவடிக்கை குழு பாராட்டி உள்ளது.
இந்த அமைப்பு, அமெரிக்க தேர்தல்களில் இந்திய வம்சாவளியினர் அதிக எண்ணிக்கையில் வெற்றிருப்பதை வரலாற்று தேர்தல் என்று கூறி உள்ளது.
இந்த அமைப்பின் செயல் இயக்குனர் நீல் மகிஜா கருத்து தெரிவிக்கையில், “இந்த ஆண்டு தேர்தல் அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் பெரிய பங்களிப்புக்கு வழிவகுத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைப்பின் ஆதரவை இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் பெற்றிருந்தனர். இவர்களுக்காக 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.75 கோடி) இந்த அமைப்பு தேர்தல் நிதியாக திரட்டி உதவியது குறிப்பிடத்தக்கது.
விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை
விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை
விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இங்கிலாந்து மந்திரியிடம் மத்திய வெளியுறவு செயலாளர் நேரில் வலியுறுத்தினார்.
விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை
விஜய் மல்லையா, நிரவ் மோடி
லண்டன்:
இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர் விஜய்
மல்லையாவும், பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர
வியாபாரி நிரவ் மோடியும் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினர். இந்தியாவின் கோரிக்கையின் பேரில் அங்கு கைது செய்யப்பட்ட
அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இதில் ஜாமீனில் வெளியில் இருக்கும் விஜய் மல்லையாவின் சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதைப்போல லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்தியாவில் கோடிக்கணக்கில் கடன் மோசடியில் ஈடுபட்ட இவர்கள் இருவரின் நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா இங்கிலாந்துக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளது. இதை மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்சவர்தன் ஷ்ரிங்லா நேரில் சென்று கோரிக்கையாக வைத்து உள்ளார்.
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட அவர், லண்டனில் அந்த நாட்டின் பல்வேறு மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். குறிப்பாக உள்துறை செயலாளர் பிரிதி படேல், தெற்கு ஆசியாவுக்கான வெளியுறவு மந்திரி லார்டு தாரிக் அகமது ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது நிரவ் மோடி மற்றும் மல்லையாவை விரைவில் நாடு கடத்துமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் இதுகுறித்து ஷ்ரிங்லா கூறுகையில், ‘நாடு கடத்தும் விவகாரத்தில் அனைத்துவிதமான சட்டப்போராட்டங்களை முடித்துள்ள பொருளாதார குற்றவாளி மல்லையாவை விரைவில் நாடு கடத்தும் இந்தியாவின் விருப்பத்தை நாங்கள் தீவிரமாக சுட்டிக்காட்டினோம். அதைப்போல நிரவ்மோடியை நாடு கடத்துவது குறித்தும் லார்டு அகமது மற்றும் பிரிதி படேலிடம் வலியுறுத்தினோம். இதை இருவரும் மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டனர். குறிப்பாக நமது முன்னுரிமை மற்றும் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொண்டனர்’ என்று தெரிவித்தார்.
இதைத்தவிர கொரோனா தடுப்பூசி ஒத்துழைப்பு, பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இங்கிலாந்து தலைவர்களுடன் ஹர்சவர்தன் ஷ்ரிங்லா பேசினார்.







