Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
பிரிட்டனுக்கும் நுழைவதற்கு 40 நாடுகளுக்கு தடை
பிரிட்டனுக்கும் நுழைவதற்கு 40 நாடுகளுக்கு தடை
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து ஐரோப்பா உள்ளிட்ட நாற்பது நாடுகளுக்கு
உள்நுழையவும் ,இங்கிருந்து வெளி செல்லவும் பயண தடை விதிக்க பட்டுள்ளது
தற்போது பயணிகள் விமான சேவைகள் யாவும் நிறுத்த பட்டுள்ளன
சரக்கு விமான சேவைகள் வழமை போன்று இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இந்த தடையானது தை மாதம் வரை நீடிக்க கூடும் என கருத படுகிறது
அமெரிக்காவில் ஒரேநாளில் 1166 பேர் பலி -144,611சிபாதிப்பு
அமெரிக்காவில் ஒரேநாளில் 1166 பேர் பலி -144,611சிபாதிப்பு
அமெரிக்காவில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வந்தா கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 1,166 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் 144,611 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அது தவிர 27,962 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
அதே போன்று பிரிட்டனில் 326 பேர் பலியாகியும் சுமார் 35,928 பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
அச்சுஅசல் சித்ராவை போல இருக்கும் இளம்பெண்…. வைரலாகும் போட்டோ
அச்சுஅசல் சித்ராவை போல இருக்கும் இளம்பெண்…. வைரலாகும் போட்டோ
தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவை போன்று தோற்றமுடைய பெண்ணின் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது
தொடர்பாக போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே சித்ராவை போன்றே தோற்றம் கொண்ட பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் பெயர் கீர்த்தனா தினகர்.
சித்ரா போலவே போட்டோ ஷூட் நடத்தியதன் பின்னணி குறித்து கீர்த்தனா தினகர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: “இத்தனை வருடங்களாக, நான் எங்குச் சென்றாலும், என்னைப் பார்ப்பவர்கள் முதலில் சொல்வது, நீங்கள் சித்து/முல்லை/சின்ன பாப்பா பெரிய பாப்பா நடிகையைப் போல இருக்கிறீர்கள்’ என்பதுதான். உண்மையில், எனக்கு அந்த மாதிரியான கருத்துகள் சந்தோஷத்தை கொடுக்காது.
சித்ரா, கீர்த்தனா தினகர்
ஏனெனில் நான் அசலாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பவள். ஆனால் இப்போது அதே கருத்தைச் சொன்னால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் என்னால் ஒருவரைச் சந்தோஷப்படுத்த முடிகிறது என்ற காரணம் தான்.
அவர் மறைந்த தருணத்திலிருந்து, என் நண்பர்களும், நெருங்கியவர்களும் அந்த சீரியல் குழுவை தொடர்பு கொள், அந்தக் கதாபாத்திரத்தின் தேர்வுக்கு சென்று வா, கண்டிப்பாக உன்னைத் தேர்வு செய்வார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.
முதலில் அதைக் கேட்ட போது கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்போது வரை அதே போன்ற குறுஞ்செய்திகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன.
சித்ரா, கீர்த்தனா தினகர்
முல்லைக்கும் சித்துவுக்கும் மாற்றே கிடையாது. நாம் அவரை மிகவும் நேசித்துள்ளோம். இப்போது அந்தக் கதாபாத்திரத்தில் அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை தேர்வு செய்திருப்பார்கள். நாங்கள் சித்ராவுக்கு மரியாதையும், அன்பும் செலுத்தும் விதமாகத்தான் இந்த போட்டோ ஷூட்டை எடுத்தோம்.
எங்களைப் போன்றே சித்ராவை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் புகைப்படங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியைத் தரும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
அமெரிக்காவில் தொலைகாட்சியில் நேரலையின் போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
தொலைகாட்சியில் நேரலையின் போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ்
வாஷிங்டன்:
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு
வந்துள்ளது. மேலும் பல நாடுகள் மருந்துகளை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவில், நர்ஸ்களிலேயே முதலாவதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் தலைமை நர்ஸ் டிஃபானி பாண்டிஸ் டோவர் (30 வயது)
இவர் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன், ‘கொரோனா தடுப்பூசியைப்போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’
என்பதை விளக்கும் விதமாகத் தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது சிலநிமிடங்களில், மயங்கிச் சரிந்துவிட்டார். இந்த நேரலை உலகமெங்கும் செய்தி ஊடகங்களில் ‘வைரல்’ ஆகிவிட்டது.
உடனே, அமெரிக்கத் ‘தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்’ கூக்குரல் எழுப்பிவிட்டனர். கொரோனா தடுப்பூசிக்கு மக்களைப் பரிசோதனை எலிகளாக ஆக்க வேண்டாம் என எதிர்ப்பை
தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என்பதற்கு இந்தச் சான்றே போதும்; உடனடியாக அதைத் தடை செய்யுங்கள் என்று போர்க்கொடி உயர்த்தி விட்டனர்.
நர்ஸ் டிஃபானிக்கு, எப்போது ஊசி போட்டாலும் அந்த வலியைத் தாங்க முடியாது என்றும் உடனே மயக்கம் போட்டு விழுந்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் அவருக்கு
மயக்கம் தானாகவே சரியாகிவிடும் என்று தொலைக்காட்சி பேட்டியின் போதும் இதுதான் நடந்தது என்று அவர் பிறகு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் மயக்கம் அடைந்தால் அவரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் பதட்டத்துடன் அவரைப் பார்க்க, அவர் சிரித்த முகத்துடன் தனக்கு ‘வலி உணர்வைத் தாங்க முடியாதபோது
மயக்கம் வருவது உண்டு என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் மயக்கம் வந்ததற்கும் தொடர்பில்லை’ என்றும் கூறியிருக்கிறார்.
முக கவசம் அணியாததால் – சிலி நாட்டில் அதிபருக்கு ரூ.2½ லட்சம் தண்டம்
முக கவசம் அணியாததால் – சிலி நாட்டில் அதிபருக்கு ரூ.2½ லட்சம் தண்டம்
சிலி நாட்டில் முக கவசம் அணியாததால் அதிபர் செபாஸ்டியன் பெனெராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிலி நாட்டில் முக கவசம் அணியாததால் அதிபருக்கு ரூ.2½ லட்சம் அபராதம்
தென் அமெரிக்க நாடான சிலி கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 135 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 16 ஆயிரத்து 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு வைரஸ்
பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி சிலியில் முக கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. பொதுவெளியில் முக கவசம் அணியாமல் இருப்பது
தண்டனைக்குரிய குற்றமாகும். அதாவது முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறிய நபர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டின் அதிபரே முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் அதிபர் செபாஸ்டியன் பெனெரா தனது
சொந்த ஊரான கச்சாகுவா நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்துக்காக அவருடன் செல்பி படம் எடுத்துக்கொண்டார். அப்போது அதிபர்
செபாஸ்டியன் பெனெரா முக கவசம் அணிந்திருக்கவில்லை. எனவே இந்த செல்பி படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிலி அரசு, அதிபர் செபாஸ்டியன் பெனெராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் (இந்திய
மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம்) அபராதம் விதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட அதிபர் செபாஸ்டியன் பெனெரா தனது செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.
அமெரிக்காவில் கொரனோ நோயால் ஒரே நாளில் 2,497 பேர் பலி
அமெரிக்காவில் கொரனோ நோயால் ஒரே நாளில் 2,497 பேர் பலி
அமெரிக்காவில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 2,497 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 173,427 பேர் பாதிக்க
பட்டுள்ளனர்
28,002 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
அதே போல பிரிட்டனில் 534 பேர் பலியாகியுள்ளனர் 27,02 பேர் பாதிக்க
பட்டுள்ளனர்
இவை மேலும் அதிகரிக்கும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது
லண்டனில் புதிய சட்டத்தை மீறினால் – இது தான் தண்டம் – முதல்ல இதை படிங்க
லண்டனில் புதிய சட்டத்தை மீறினால் – இது தான் தண்டம் – முதல்ல இதை படிங்க
பிரிட்டனில் குறிப்பாக லண்டனில் நத்தார் தினத்தை முன்னிட்டு அன்று மட்டும் மக்கள் அயலவர்களுடன் இணைந்து கொள்ள அனுமதி வழங்க பட்டுள்ளது
அது தவிர்ந்து பிற நாள்களில் கூடினால் அவர்களுக்கு தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
தற்போதுலண்டன் பகுதி எங்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
,நோயாளர்கள் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்வதனால்,
நத்தார் தினத்திற்கு பின்பு முழு லொக்கடவுன் நிகழ்வு ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இவ்வேளை அரசு விதித்துள்ள புதிய நடைமுறைகளை மீறினால் இது தான் தண்டம்
அதனை கீழே பாருங்கள்
18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தண்டம் அறவிட படும் என தெரிவிக்க பட்டுள்ளது
£200 for the first offence, lowered to £100 if paid within 14 days
• £400 for the second offence, then doubling for each further offence up to a maximum of £6,400
லண்டனில் 138 வருடம் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
லண்டனில் 138 வருடம் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
பிரிட்டன் லண்டன் பகுதியில் சமூக விரோத செயல் பாடுகளில் ஈடுபட்டு வந்த மிக பெரும் குழுவு ஒன்றினை போலீசார் மடக்கி பிடித்தனர்
கடந்த ஒருவருடத்திற்கு மேலாக இவர்களை தொடராக கண்காணித்து
வந்த போலீசார் ,போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்டு வந்த மேற்படி நபர்களை மடக்கி பிடித்தனர்
அவ்வேளை இவர்களிடம் இருந்து சுமார் 31kg of cocaine, 308kg of amphetamine, 590kg of cannabis resin, 3kg of skunk, 30 cannabis plants and nearly £900,000 லட்சம் பணம் என்பன மீட்க பட்டன
லண்டன் வூல்வீச் நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளில் இவர்கள் அனைவருக்குமாக இணைத்து 138 வருடன் கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது
கொரனோ காலத்தில் போலீசார் மேற்படி கும்பலை இலக்கு வைத்து தமது வேட்டையில் ஈடுபட்டு வந்தமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

லண்டனில் – தமிழர்களிடம் நகை கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய 12 திருடர்களை தேடும் பொலிஸ்
லண்டனில் – தமிழர்களிடம் நகை கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய 12 திருடர்களை தேடும் பொலிஸ்
லண்டன் பகுதியியல்நகை வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த முக்கிய பன்னிரெண்டு திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்
இவர்கள் வீதிகளில் செல்லும் மக்களிடம் கத்திமுனையில் நகைகளை திருடி சென்றதுடன் ,பல கத்தி குத்து தாக்குதலையும் நடத்தியுள்ளனர்
இவர்கள் மிக ஆபத்தான கிரிமினல் நடவடிக்கியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் ,லண்டனில் தேடப்படும் பன்னிரெண்டு
முக்கிய குற்றவாளிகள் என கறுப்பு பட்டியலில் அறிவிக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்
இவர்களை தெரிந்தால் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவோ அல்லது
அருகில் உள்ள காவல்துறையினருக்கோ தெரிவிக்கும் படி வேண்ட படுகின்றனர்
தமிழர்களிடமுடம் கத்தி முனையில் வழிப்பறி கொள்ளையில் இவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது ,இவர்களை
கைது செய்தால் மட்டுமே இவர்கள் பின்புலத்தில் உள்ள குற்றவாளிகளை கண்டு பிடிக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்

இத்தாலியில் நத்தார் மற்றும் புத்தாண்டுக்கு முழு அடைப்பு – மக்கள் கொதிப்பு
இத்தாலியில் நத்தார் மற்றும் புத்தாண்டுக்கு முழு அடைப்பு – மக்கள் கொதிப்பு
இத்தாலியில் மீளவும் இரண்டாம் அலையாக கோவிட் 19 நோயானது மிக
வேகமாக பரவி வரும் நிலையில் நத்தார் தினம் மற்றும் புத்தான்டுக்கு முழு லொக்கடவுன் பிறப்பிக்க பட்டுள்ளது ,
மக்களை நோயில் இருந்து காப்பாற்றி கொள்ள இதனை தாம்
செய்திட வேண்டிய நிலையில் உள்ளதாக அந்த நாட்டு அதிபர் தெரிவித்து வருகிறார் .
ஆனால் மக்களோ இதனை ஏற்க மறுத்து சமூக வலைத்தளங்களில் ஆளும் அரசை விமர்சித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் – நத்தாருக்கு பின்னர் மூன்றாவது முழு லொக்கடவுன்
பிரிட்டனில் – நத்தாருக்கு பின்னர் மூன்றாவது முழு லொக்கடவுன்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து
இரண்டாவது முழு அடைப்பு விடுக்க பட்டது ,நத்தர் தினத்தை முன்னிட்டு
அது தளர்த்த பட்டது ,ஆனால் மேற்படி நோயின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ மனைகளில் நோயாளர்கள்
எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதல் நத்தார் முடிவடைந்ததன்
பின்னர் முழு அடைப்பு நிலைக்கு மூன்றாவது முறையாக பிரிட்டன் செல்ல உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இதனை மறைமுகமாக பிரிட்டன் பிரமர் தெரிவித்துள்ளதும் கவனிக்க தக்கது
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரனோவால் 2,662 பேர் பலி – பல லட்சம் பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரனோவால் 2,662 பேர் பலி – பல லட்சம் பாதிப்பு
அமெரிக்காவில் இரண்டாம் அலையாக பரவி வரும் கோவிட் தாக்குதலில்
சிக்கி ஒரே நாளில் 2,662 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 242,023 பேர் பாதிக்க
பட்டுள்ளனர் ,இது தவிர 28,107 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
பிரிட்டனில் இதே போன்று 489 பேர் பலியாகியும் ,28,507 பேர் புதிதாக
நோயின் தோற்றால் பாதிக்க பட்டுள்ளனர்
எதிர்வரும் நாட்களில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
நடிகை சித்ராவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க பொலிஸ் திட்டம்
நடிகை சித்ராவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க பொலிஸ் திட்டம்
டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.
டி.வி. நடிகை சித்ராவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க ஆர்டிஓ முடிவு
சித்ரா
ஸ்ரீபெரும்புதூர்:
டி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட சித்ராவுக்கு திருமணம் நடத்து சில மாதங்களே ஆனதால் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து காஞ்சீபுரம் மாவட்டம்
ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் மற்றும் கணவர் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் தனித்தனியாக 2 கட்டமாக விசாரணை நடத்தினார்.
ஹேம்நாத்தை விசாரணைகாக ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். நேற்று முன்தினம் ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் சித்ராவுக்கு நெருக்கமானவர்கள், சித்ரா தற்கொலை செய்துகொண்ட விடுதியின் ஊழியர்கள், கடைசியாக
சித்ராவுடன் பணியாற்றியவர்களிடம் இன்று (சனிக்கிழமை) விசாரணை செய்ய ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ முடிவு செய்து அவர்கள் ஆஜராக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயன்ற கும்பல்
மோடியின் அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயன்ற கும்பல்
பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகம் 7 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை என ஆன்லைன் விற்பனை தளமான ஒ.எல்.எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயன்ற கும்பல்
பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்றார். பிதமர் மோடியின் தொகுதி
அலுவலகம் வாரணாசியின் ஜவகர் நகர் பகுதியில் உள்ளது. 6 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவை கொண்டது அந்த கட்டிடம்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடத்தை புகைப்படம் எடுத்த ஒரு கும்பல் அந்த புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளமான ஒ.எல்.எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
மேலும், இந்த கட்டிடம் விற்பனைக்கு உள்ளது எனவும் அதன் விலை 7 கோடியே 50 லட்சம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு படம்
மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடம் விற்பனைக்கு என ஆன்லைனில் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து உத்தரபிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அலுவலக கட்டிட புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளத்தில் பதிவேற்றம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடத்தை ஒ.எல்.எக்ஸ். வலைதளத்தில் விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் Luton பகுதியில் போலீசார் சுற்றிவளைப்பு எட்டு பேர் கைது – ஒரு லட்சம் பணம் மீட்பு
பிரிட்டன் Luton பகுதியில் போலீசார் சுற்றிவளைப்பு எட்டு பேர் கைது – ஒரு லட்சம் பணம் மீட்பு
பிரிட்டன் புறநகர் பகுதியாக உள்ள லூட்டன் பகுதியில் நேற்று போலீசார் நடத்திய சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின்
பொழுது சுமார் எட்டு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,மேலும் ஒருலட்சம் பவுண்டுகள் பணம் மீட்க பட்டுள்ளது
114 போலீசார் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்
இதன் பொழுது கைபேசிகள் ,துப்பாக்கிகள் ,போதைவஸ்துக்கள் ,வாகனங்கள் ,கணனிகள் ,கைபேசிகள் என்பன மீட்க பட்டுள்ளன
இவர்களுடன் தொடர்பில் உள்ள ஏனையவர்களை கைது செய்யும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 532 பேர் மரணம் -35,383 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 532 பேர் மரணம் -35,383 பேர் பாதிப்பு
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி சுமார் 532 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 35,383 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,இதைவிட 1340 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,தற்போது மீளவும்
உணவகங்கள் டெக்கவே மட்டும் அனுமதிக்க பட்டுள்ளது ,வீதிகள்
வழமையை விட மக்கள் நடமாட்டம் குறைந்து காண படுகின்றமை குறிப்பிட தக்கது
சித்ரா தற்கொலை வழக்கு – கணவர் ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றம்
சித்ரா தற்கொலை வழக்கு – கணவர் ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றம்
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதாகி இருக்கும் கணவர் ஹோம்நாத் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சித்ரா தற்கொலை வழக்கு – கணவர் ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றம்
கணவருடன் சித்ரா
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இருவருக்கும் அடுத்த மாதம் ஊர்
அறிய திருமணம் நடைபெற இருந்த நிலையில் அக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
திருமணமாகி 2 மாதங்களிலேயே சித்ரா தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதன்படி இன்று காலை 8.15 மணியளவில் ஹேம்நாத் விசாரணைக்காக ஆர்.டி.ஓ.
முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்.டி.ஓ. கேட்ட கேள்விகளுக்கு ஹேம்நாத் முறையாக பதில் அளித்துள்ளார். பல மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.
கணவருடன் சித்ரா
தற்போது ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை முடிந்து ஹேம்நாத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா
பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பதால் பொன்னேரி கிளைச்சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் என சிறைத்துறை தகவல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் உளவாளி ரசிய ஏதிர்காட்சி தலைவர் – புட்டீன் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவின் உளவாளி ரசிய ஏதிர்காட்சி தலைவர் – புட்டீன் அதிரடி அறிவிப்பு
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர்
கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. உடனடியாக ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி
ஒம்சக் நகரில் இருந்து
ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.
பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி
உள்ளாகியுள்ளதாக ஜெர்மனி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தொடர் சிகிச்சை காரணமாக நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார்.
தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையையடுத்து நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டிருந்த
அலெக்ஸி நவல்னியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து ஜெர்மனியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
நவல்னி – புதின்
இதற்கிடையில், தன் மீது நடத்தப்பட்ட கொடிய விஷ தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் தான் காரணம் என நவல்னி குற்றம் சுமத்தினார். அதேபோல் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும்
ரஷிய அதிபர் புதினையே குற்றம் சுமத்தின. இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் இடம்பெற்றிருந்தன.
அப்போது புதினிடம் எதிர்க்கட்சி தலைவர் நவல்னியை கொலை செய்யும் நோக்கத்தோடு விஷத்தன்மை உடைய வேதிப்பொருள் கொடுக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த புதின்,
அவர் (நவல்னி) அமெரிக்க உளவு அமைப்புடன் தொடர்பில் உள்ளார். ரஷிய அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆனால், இதற்காகவெல்லாம் நாங்கள் அவருக்கு விஷம் கொடுக்க வேண்டியதில்லை. அவரால் யாருக்கு என்ன பயன்?
ஒருவேளை எங்களுக்கு அது தேவைப்பட்டிருந்தால் (நவல்னியை கொலை செய்ய தேவைப்பட்டிருந்தால்) நாங்கள் அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம்.
என்றார்.
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 612 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 612 பேர் பலி
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி சுமார் 612 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 25,161 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவர்களுடன் சுமார் 1632 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,லண்டன்
பகுதி சிவப்பு எச்சரிக்கி விடுக்க பட்ட பகுதியாக அறிவிக்க பட்டுள்ளது
,அதனால் உணவகங்கள் டெக்கவே மட்டும் எடுக்க அனுமதிக்க பட்டு புதிய தடைகள் விதிக்க பட்டுள்ளன
துருக்கி கப்பலை சிறை பிடித்த எதிரி நாடு – மிரட்டும் துருக்கி
துருக்கி கப்பலை சிறை பிடித்த எதிரி நாடு – மிரட்டும் துருக்கி
துருக்கியின் மியாட் பெரும் சரக்கு கப்பல் ஒன்றை Libya’s Haftar இராணுவத்தினர் மடக்கி பிடித்தனர் .
கிழக்கு பெங்காசி பகுதியில் சென்று கொண்டிருந்த மேற்படி கப்பல் தமது
எல்லைகளுக்குள் அத்து மீறி நுழைந்தது என கூறப்பட்ட நிலையில் அதற்கு
பல்லாயிரம் தண்டம் அறவிட பட்டு ,அந்த குற்ற பணம் செலுத்திய பின்னர் விடுவிக்க பட்டுள்ளது
இந்த கப்பல் சிறை பிடிப்புக்கு துருக்கி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது








