Posted in உலக செய்திகள்

அமெரிக்காவின் ஏவுகணை சோதனை தோல்வி

அமெரிக்காவின் ஏவுகணை சோதனை தோல்வி

அமெரிக்கா புதிதாக நடத்திய கைபிரட் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்துள்ளது
மேற்படி சோதனை அதன் வேக தொழில் நுட்பத்தில் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

சீனாவின் புதிய இதே தரத்திலான ஏவுகணைக்கு போட்டியாக நடத்த பட்ட சோதனையே தோல்வியில் முடிவடைந்துள்ளது குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள்

    அல்கொய்தா தளபதி படுகொலை அமெரிக்கா அறிவிப்பு

    அல்கொய்தா தளபதி படுகொலை அமெரிக்கா அறிவிப்பு

    சிரியாவில் அமெரிக்கா உளவு விமானம் நடத்திய விமான தாக்குதலில் சிக்கி அல்கொய்தா அமைப்பின் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை செய்ய பட்டுள்ளதாக அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது

    பல்வேறு பட்ட தாக்குதல்களுக்கு இவர் மூளையாக செயல் பட்டவர் என தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      வெடித்து சிதறிய ஆயுத கூடம் – 15 பேர் மரணம்

      வெடித்து சிதறிய ஆயுத கூடம் – 15 பேர் மரணம்

      ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெஸ்னோய் கிராமத்தில் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை

      செய்துகொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த

      தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

      இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒருவரைக் காணவில்லை. ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

      தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய விசாரணைக்குழுவினர் சென்றுள்ளனர்.

        Posted in உலக செய்திகள்

        பஸ் பயணிகளிடம் உரையாடிய மு.க.ஸ்டாலின்

        பஸ் பயணிகளிடம் உரையாடிய மு.க.ஸ்டாலின்

        முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 5 இடங்களில் நடந்த சிறப்பு முகாமினை ஆய்வு செய்தார்.

        பஸ் பயணிகளிடம் உரையாடிய மு.க.ஸ்டாலின்- இலவச பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பெண்கள்
        முக ஸ்டாலின்
        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

        சென்னை:

        தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

        தினசரி முகாம்கள் நடந்தாலும் கூட, ஞாயிற்றுக்கிழமைகளில் கடந்த 5 வாரமாக மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம் தடுப்பூசி இலக்கை நெருங்க முடிவதால் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

        இதனால் தமிழகம் முழுவதும் மெகா முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு வாரமும் 2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

        காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுவதால், ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வசதிக்கேற்ப சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

        வீடுகளுக்கு அருகே முகாம்கள் நடைபெறுவதால் எளிதாக சென்று மக்கள் தடுப்பூசியை செலுத்தி வந்தனர்.

        இந்தநிலையில் அசைவ மற்றும் மது பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போட முன்வராததால் மெகா சிறப்பு முகாம் சனிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

        அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மெகா சிறப்பு முகாம்கள் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது.

        2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களை இந்த சிறப்பு முகாம்கள் மூலம் பயன்பெற ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டன.

        சென்னை சென்ட்ரலில் நடந்த தடுப்பூசி முகாம்

        இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் முதியவர்ளை கண்டறிந்து அவர்களை முகாமிற்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

        தடுப்பூசி கையிருப்பு அதிகமாக உள்ளதால் அவற்றை விரைவாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சுகாதாரத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

        சென்னையில் 1,600 முகாம்களில் தடுப்பூசி போட மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. வார்டுகளுக்கு 4 முகாம்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. நடமாடும் முகாம்களும் செயல்படுகின்றன.

        மாநகராட்சி பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார மையங்கள், தனியார் குடியிருப்பு இடங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் மெகா முகாம்கள் நடக்கின்றன.

        முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 5 இடங்களில் நடந்த சிறப்பு முகாமினை ஆய்வு செய்தார்.

        அப்போது தியாகராயா நகரில் இருந்து கண்ணகி நகருக்கு மாநகர பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் மு.க.ஸ்டாலின் ஏறி அதில் பயணம் செய்த பெண்களிடம் இலவச பயணம் குறித்து விசாரித்தார்.

        அரசு வழங்கும் இலவச பயணம் வசதியாக இருக்கிறதா? குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வருகிறதா? இருக்கைகள் வசதியாக உள்ளதா? என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள் இலவச பயணம் எங்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

        இந்த ஆய்வின்போது பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர். அதை அவர் அன்போடு வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

        இந்த ஆய்வின்போது தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி, வீரராகவ ராவ் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

        சென்னை மாநகரில் நடந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்கள் காலையிலேயே சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

        ஒருசில இடங்களில் ஊழியர்கள் வீதி வீதியாக சென்று தடுப்பூசி போடாதவர்களை அழைத்து வந்தனர்.

        இதேபோல புறநகர் பகுதியிலும் தடுப்பூசி போட பொதுமக்களிடையே ஆர்வம் இருந்தது. பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பல இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஆர்வத்துடன் தடுப்பூசி போட வந்தனர்.

          Posted in உலக செய்திகள்

          ஜிப்ரானின் வீரவணக்கம் பாடலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

          ஜிப்ரானின் வீரவணக்கம் பாடலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

          மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை வீரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

          ஜிப்ரானின் வீரவணக்கம் பாடலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
          வீரவணக்கம் குழுவினர் – முதல்வர் மு.க.ஸ்டாலின்


          ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை வீரர்களின் நினைவை போற்றும் வகையில்,

          வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம், சுனாமி, கொரோனா என எந்த பேரிடரிலும், களத்தில் முன் நின்று பணியாற்றிய காவல்துறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நாள் கொண்டாடப்படுகிறது.

          ஜிப்ரான்

          இந்த ஆண்டு இவ்விழாவை இன்னும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா மற்றும் வெஸ்லி எழுத்தில், சசிகலாவும்,

          பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய, “வீரவணக்கம்” ஆல்பம் பாடலை இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்

            Posted in Uncategorized உலக செய்திகள்

            பேஸ்புக் தற்கொலை நேரலை புரிந்த நாபர் – மடக்கிய காவல்துறை

            பேஸ்புக் தற்கொலை நேரலை புரிந்த நாபர் – மடக்கிய காவல்துறை

            இந்தியா டில்லி பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர் பேஸ்புக்கில் நேரலையில் தான் தற்கொலை செய்ய போவாகக தெரிவித்துள்ளார்

            இதனை பார்வையிட்ட பேஸ்புக் உடனடியாக காவல்துறைக்கு மெயில் அனுப்பியது ,இதனை தொடர்ந்து உஷாரான காவல்துறையினர் அந்த நபர் உள்ள இடத்தை கண்டு பிடித்தனர்


            அப்போது அவர் வீட்டுக்குள் மயங்கிய நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்

            இவர் மனைவியை பிரிந்து வசித்து வருவதாலும் ,உடல் நல குறைபட்டாலும் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது

              Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

              எமது புதிய ஏவுகணை – அமெரிக்காவை தாக்காது – வடகொரியா

              எமது புதிய ஏவுகணை – அமெரிக்காவை தாக்காது – வடகொரியா

              நாம் புதிதாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து சோதனை புரிந்த ஏவுகணையானது அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்டதல்ல எனவும், இது தம்மை தாமே பாதுகாத்து கொள்ள உருவாக்க பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணை என வடகொரியா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

              அமெரிக்கா அரேபிய நாடுகளை அடக்கி ஒடுக்கியது போன்று சிரியா ஈரானை அடக்கிவிட நினைத்தது ,ஆனால் அது தோற்று போன நிலையில் வாலை சுருட்டி கொண்டது

              இதற்கு அமைவாக தம்மை தாமே நிலை நிறுத்தி கொள்ள வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையை புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                Posted in உலக செய்திகள்

                சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்டு டிரம்ப்

                சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்டு டிரம்ப்

                சமூக வலைதளங்கள் டொனால்டு டிரம்ப் கணக்குகளை முடக்கிய நிலையில், தனி சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளார்.

                தனி சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்டு டிரம்ப்
                டொனால்டு டிரம்ப்
                இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜோ பைடன் களம் இறங்கினார். இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார்.

                தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். இதனால் சமூக வலைதளங்கள் இவரது கணக்குகளை முடக்கின. ஆகவே, சமூக வலைதளங்களுக்கும் டிரம்பிற்கும் இடையில் பனிப்போர் நடைபெற்றது.

                இந்த நிலையில் தனி சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதற்கு Truth Social (உண்மை சமூகம்) எனப் பெயரிட்டுள்ளார். இதன் பீட்டா பதிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

                டொனால்டு டிரம்ப்

                மேலும், தலிபான்கள் டுவிட்டரில் மிகப்பெரிய அளவில் செயல்முறையில் இருக்கையில் நாம் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவரை உங்களுக்கு பிடித்தமான அமெரிக்க ஜனாதிபதி அமைதியாக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

                  Posted in உலக செய்திகள்

                  ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமி

                  ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமி

                  அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                  சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக அனுமதி
                  எடப்பாடி பழனிசாமி
                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                  அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

                  அவர் முதல்-அமைச்சராக இருந்த போது இந்த ஆஸ்பத்திரியில் ஏற்கனவே குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்திருந்தார்.

                  இந்த நிலையில் உடல் பரிசோதனைக்காக மீண்டும் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் என்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொண்டதாக தெரிகிறது.

                  உடல் பரிசோதனை முடிந்த நிலையில் இன்று அவர் வீடு திரும்பினார்.

                    Posted in உலக செய்திகள்

                    வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

                    வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை


                    நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியுள்ளது வடகொரியா.

                    வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: இந்த முறை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியது

                    வடகொரியாவுக்கும், அதன் பக்கத்து நாடான தென் கொரியாவுக்கும் இடையே நிரந்தர பகை உள்ளது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது.

                    எனவே தென்கொரியாவையும், அமெரிக்காவையும் மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனை, நவீன ஆயுத சோதனைகள் போன்றவற்றை நடத்தி வருகிறது.

                    கடந்த 2 மாதங்களாக இந்த சோதனைகளை வடகொரியா தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி சில வாரங்களுக்கு முன்பு ரெயிலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அணுகுண்டை ஏந்தி செல்லும் சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

                    எதிரிகள் விமானத்தை தாக்கும் புதிய ரக ஏவுகணை சோதனையும் நடந்தது. கடந்த 28-ந்தேதி அதிக சக்தி வாய்ந்த மற்றொரு ஏவுகணை சோதனையையும் நடத்தினார்கள்.

                    இந்த நிலையில் நேற்று வடகொரியா மற்றொரு புதிய ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இந்த முறை நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை செலுத்தி பரிசோதனை நடத்தியிருக்கிறது. இந்த ஏவுகணை நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கில் அழிக்கும் திறன் கொண்டதாகும்.

                    Posted in உலக செய்திகள்

                    இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா

                    இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா

                    இங்கிலாந்தில் தற்போது குளிர்காலமாக இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

                    இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
                    கொரோனா வைரஸ்

                    இங்கிலாந்தில் 3 மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்பு சமீப நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி அங்கு ஒரே நாளில் 49 ஆயிரத்து 156 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகி உள்ளது. குறிப்பாக தொடர்ந்து 6-வது

                    நாளாக 40 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதுவரை மொத்தம் 84 லட்சத்து 97 ஆயிரத்து 868 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திங்கட்கிழமை 45 பேர் கொரோனாவுக்கு

                    பலியானதை தொடர்ந்து இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 629 பேர் இறந்து உள்ளனர். தற்போது அங்கு 7 ஆயிரத்து 97 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

                    கொரோனா தடுப்பூசி

                    இங்கிலாந்தில் தற்போது குளிர்காலமாக இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 85 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும், 78 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

                    Posted in உலக செய்திகள்

                    நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை

                    நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை

                    பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

                    நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் அட்டூழியம்
                    நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை

                    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க முடியாமல் ராணுவம் போராடி வருகிறது.இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு மேலும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதோடு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

                    இந்த நிலையில் வடமேற்கு மாகாணம் சோகோட்டோவில் உள்ள கோரோனியோ நகருக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாதிகள் புகுந்து கொடூர தாக்குதலை நடத்தியதில் 30 பேர் கொன்று குவிப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் சோகோட்டோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

                    மோட்டார் சைக்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

                    பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியத்தால் பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

                      Posted in உலக செய்திகள்

                      செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

                      செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

                      3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், 77 சதவீத அளவுக்கு நீர் நிரம்பி உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

                      புழல்-செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
                      புழல் ஏரியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
                      சென்னை:

                      சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

                      புழல் ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ‌ஷட்டர்களும் பழுதுபார்க்கப்பட்டுள்ளன.

                      3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,772 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 23 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.

                      புழல் ஏரியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

                      புழல் ஏரியில் 84 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. முழு கொள்ளளவை விரைவில் எட்ட உள்ளதால் இந்த ஏரியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

                      ஏரியின் ‌ஷட்டர்கள் சரியாக இயங்குகிறதா? என்பதை கேட்டறிந்தார். எவ்வளவு தண்ணீர் வருகிறது. குடிநீருக்கு எவ்வளவு தண்ணீர் தினமும் திறக்கப்படுகிறது என்பதனை கேட்டறிந்தார்.

                      புழல் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் அதில் நடந்து சென்றும் பார்வையிட்டார். அவருக்கு பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா விரிவாக விளக்கி கூறினார்.

                      இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., சென்னை குடிநீர் வாரிய இயக்குனர் விஜயராஜ் குமார், தலைமை என்ஜினீயர் ராமமூர்த்தி உடன் இருந்தனர்.

                      புழல் ஏரியை பார்வையிட்ட பிறகு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் குன்றத்தூர் அருகில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார். அவரை அங்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்றார். செம்பரம்பாக்கம் ஏரிக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது, எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்ற விவரங்களை மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

                      3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், 77 சதவீத அளவுக்கு நீர் நிரம்பி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

                      அப்போது மு.க.ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது ஏரியை திறப்பது பற்றி முன் கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும். அவ்வப்போது உள்ள நிலவரத்தை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

                      கதவணை பகுதிக்கும் சென்று பார்வையிட்டார். ஏரியின் கரைகள் எந்த அளவு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கேட்டறிந்தார்.

                      இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ. அன்பரசன், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை குடிநீர் வாரிய இயக்குனர் விஜயராஜ் குமார் மற்ற அதிகாரிகள் உடன் இருந்தனர்.

                      Posted in உலக செய்திகள்

                      அத்துமீறி நுழைந்த – இஸ்ரேலிய விமானங்கள்

                      அத்துமீறி நுழைந்த – இஸ்ரேலிய விமானங்கள்

                      லெபனான் நாட்டின் வான் பரப்பிற்குள் இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளது ,
                      மேற்படி சம்பவம் நாடுகளுக்கு இடையில்முறுகளை ஏற்படுத்தியுள்ளது

                      லெபனான் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த இஸ்ரேல் வெளியாக உணவுத்துறை நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in உலக செய்திகள்

                        17 அமெரிக்கர்களை கடத்திய தீவிரவாதிகள்

                        17 அமெரிக்கர்களை கடத்திய தீவிரவாதிகள்

                        கைட்டியில் பேரூந்தில் பயணித்து கொண்டிருந்த 17 அமெரிக்கா நாட்டவர்களை அந்த நாட்டில் போராடி வரும் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்

                        கடத்தியவர்களை விடுவிக்க அமெரிக்கா அரசு பேரம் பேச்சில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                          Posted in Uncategorized உலக செய்திகள்

                          ஏமனில் சவுதி கூட்டுப்படை அதிரடி வான் தாக்குதல்- 160 கிளர்ச்சியாளர்கள் பலி

                          ஏமனில் சவுதி கூட்டுப்படை அதிரடி வான் தாக்குதல்- 160 கிளர்ச்சியாளர்கள் பலி

                          மரிப் நகருக்கான போரில் திங்கள்கிழமை முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 700-க்கும் அதிகமான ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக சவுதி கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

                          ஏமனில் சவுதி கூட்டுப்படை அதிரடி வான் தாக்குதல்- 160 கிளர்ச்சியாளர்கள் பலி
                          தாக்குதல் (கோப்பு படம்)
                          ரியாத்:

                          ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

                          ஏமனின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மரிப் மற்றும் ஷப்வா நகரங்களில் பல மாவட்டங்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். இதனால் அந்த நகரங்களில் ஹவுதி

                          கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

                          இந்நிலையில், மரிப் நகரின் தெற்கே அபியா பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 160 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக சவுதி கூட்டுப்படை

                          தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், சண்டையின்போது 11 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறி உள்ளது.

                          மரிப் நகருக்கான போரில் திங்கள்கிழமை முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 700-க்கும் அதிகமான ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் சவுதி கூட்டுப்படை தெரிவித்துள்ளது. அப்தியா நகர் மரிப் நகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

                            Posted in உலக செய்திகள்

                            ஈரான் எல்லையில் ஒன்றரை தொன் போதைவஸ்து மீட்பு

                            ஈரான் எல்லையில் ஒன்றரை தொன் போதைவஸ்து மீட்பு

                            ஈரான் நாட்டு எல்லையில் எல்லையோர படைகள் நடத்திய சோதனையில் சுமார் ஒன்றரை தொன்
                            எடையுள்ள போதைவஸ்துக்கள் மீட்க பட்டுள்ளன

                            இவ்வாறான போதைவஸ்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிக்கினால் அவர்களுக்கு மரண தண்டனை மக்கள் முன்பாக நிறைவேற்ற படுகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in உலக செய்திகள்

                              விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சூடு நால்வர் காயம்

                              விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சூடு நால்வர் காயம்

                              அமெரிக்கா Mobile, Alabama விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் இடம்பெற்ற வண்ணம்

                              இருந்தன .அவ்வேளை அங்கு நுழைந்த ஆயுததாரி திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தினர் ,இதில் நால்வர் படுகாயமடைந்தனர்

                              போலீசார் குவிக்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,பாதிக்க பட்டவர்கள் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                Posted in உலக செய்திகள்

                                பிரேசில் அதிபருக்கு கால்பந்தாட்ட மைதானத்தில் அனுமதி மறுப்பு

                                பிரேசில் அதிபருக்கு கால்பந்தாட்ட மைதானத்தில் அனுமதி மறுப்பு

                                கால்பந்து போட்டியை பார்பதற்காக சென்ற பிரேசில் அதிபரை அதிகாரிகள் மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அவர் அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

                                பிரேசில் அதிபருக்கு கால்பந்தாட்ட மைதானத்தில் அனுமதி மறுப்பு: காரணம் இதுதான்
                                பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ
                                பிரேசிலியா :

                                கொரோனா வைரஸ் சாதாரண காய்ச்சல் போன்றதே என கூறிவரும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மற்றும் முககவசம் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதே போல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அவர் மறுத்து வருகிறார். இந்த நிலையில் பிரேசிலின் சா பாலோ நகரில் குடும்பத்தோடு விடுமுறையை கொண்டாடி வரும் அதிபர் ஜெய்ர் போல்சனரோ உள்நாட்டு அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை பார்பதற்காக அங்குள்ள மைதானுக்கு சென்றார்.

                                ஆனால் மைதானத்தில் இருந்த அதிகாரிகள் ஜெய்ர் போல்சனரோ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் அவரை மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அவர் அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

                                இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‘‘எதற்கு தடுப்பூசி சான்றிதழ். நான் கால்பந்து விளையாட்டை பார்க்க விரும்பினேன், அதற்கு தடுப்பூசி போட வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அது ஏன்? தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை விட எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது’’ என கூறினார்.

                                Posted in உலக செய்திகள்

                                சவுதி விமான நிலையம் மீது தாக்குதல் – பலர் காயம்

                                சவுதி நாட்டின் King Abdullah சரவதேச விமான நிலையம் மீது ஏமன் நாட்டு கிளர்ச்சி படையினர் டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்

                                இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                                விமான நிலையம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது