Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இந்துக்களுக்கு அயோத்தி பயணம் இலவசம் – கெஜ்ரிவால்
இந்துக்களுக்கு அயோத்தி பயணம் இலவசம் – கெஜ்ரிவால்
கோவா சென்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஊழல் கட்சிகள் என தெரிவித்தார்.
இந்துக்களுக்கு அயோத்தி பயணம் இலவசம் – கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி
அரவிந்த் கெஜ்ரிவால்
உத்தர பிரதேசம், கோவா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ், பா.ஜக கட்சிகள் நேருக்கு நேர் மோதிய மாநிலங்களில்
காங்கிரஸ் வலுவிழந்து காணப்படுகிறது. மேலும், மத்தியில் பா.ஜ.க.வை எதிர்த்து வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் தவிக்கிறது.
இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியும் இந்த களத்தில் குதித்துள்ளது. கோவாவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோவா சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரசும், பா.ஜ.க.வும் ஊழல் கட்சிகள். அதனால் தான் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேச காங்கிரஸ் அஞ்சுகிறது. பா.ஜ.க. குறித்து பேசினால் சிறைக்குச் செல்ல நேரிடும் என காங்கிரசுக்கும் தெரியும்.
கடந்த 10 ஆண்டாக பா.ஜ.க. ஆட்சியில் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல் மந்திரிகள் மீதோ, அமைச்சர்கள் மீதோ ஏன் ஒரு வழக்கு கூட இல்லை என தெரிகிறதா?
இரு கட்சிகளும் கூட்டுசேர்ந்து செயல்படுகின்றன. இருவரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஒப்பந்தமிட்டுள்ளன.
கோவாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களை அயோத்திக்கும், கிறிஸ்தவர்களை வேளாங்கண்ணிக்கும், முஸ்லிம்களை அஜ்மீர் ஷெரீப்புக்கும், சாய்பாபாவை வணங்குபவர்களை
ஷீரடி சாய்பாபா கோவிலுக்கும் யாத்திரை செல்ல இலவசமாக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
லண்டனில் கவிழ்ந்த கார் – ஒருவர் மரணம்
லண்டனில் கவிழ்ந்த கார் – ஒருவர் மரணம்
லண்டன் London Road, Strood பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று கவிழ்ந்ததில் சம்பவ நேரத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்
இந்த வாரத்தில் இடம்பெற்ற மோசமான விபத்தாக இது பார்க்க படுகிறது ,மேலும் எம் 20
சாலையில் ஐந்து கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி
விபத்தில் சிக்கியதில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது ,மேலும் இங்கும் சிலர்
படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்க படுகிறது
அமெரிக்காவில் மக்களுக்குள் துப்பாக்கி சூடு 7 பேர் மரணம் -பலர் காயம்
அமெரிக்காவில் மக்களுக்குள் துப்பாக்கி சூடு 7 பேர் மரணம் -பலர் காயம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் இடம்பெற்று கொண்டிருந்த கலவன் நிகழ்வில் கலந்து
கொண்ட மக்களுக்குள் நுழைந்த ஆயுத தாரிகள் திடீர் சூட்டு தாக்குதலை நடத்தினர் ,.இதில்
சம்பவ இடத்தில் ஏழு பேர் பலியாகினர் மேலும் பலர் பாடுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து இவ்வாறான சூட்டு தாக்குதல்கள் கலிபோனியாவில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
ஏமான் விமான நிலையத்தில் குண்டு தாக்குதல் – 12 பேர் மரணம் – 38 பேர் காயம்
ஏமான் விமான நிலையத்தில் குண்டு தாக்குதல் – 12 பேர் மரணம் – 38 பேர் காயம்
ஏமான் நாட்டின் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்த பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி
சம்பவ இடத்தில 12 பேர் உடல் சிதறி பலியாகினர்
மேலும் 38 பேர் படுகாயமடைந்துள்ளனர் .,தற்போது மறு அhttps://www.youtube.com/user/ethiricom1றிவித்தல் வரை குறித்த விமான
நிலையம் அடித்து மூட பட்டுள்ளது ,இந்த தாக்குதலில் விமானங்களும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்க படுகிறது
முழுமையான சேத விபரங்கள் வெளிவரவில்லை
அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பதட்டம்
அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பதட்டம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது திடீரென ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இந்த ஏவுகணைகள் அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் தங்கியுள்ள கிரீன் சூன் பகுதிகளை
இலக்கு வைத்து வீழ்ந்து வெடித்துள்ளன
இந்த தாக்குதலில் பலமான பாதிப்பு அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்டுள்ளதாக ஈராக்கிய
தகவல்கள் தெரிவிக்கின்ற பொழுதும் அமெரிக்கா இதுவரை எவ்வித கருத்தையும்
தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
புயலில் உடைந்த தோட்டம் 100 மில்லியன் நட்டம்
உலக
புயலில் உடைந்த தோட்டம் 100 மில்லியன் நட்டம்
அவுஸ்ரேலியா தெற்கு பகுதியில் பலமாக வீசிய கோர புயலின் காரணாமாக பெரும் தோட்டத்தின் கண்ணாடிகள் உடைந்து வீழ்ந்துள்ளன
இந்த புயலின் சேத விபரம் சுமார் நூறு மில்லியன் என மதிப்பிட பட்டுள்ளது
பாதிக்க பட்டவர்களுக்கு ஆளும் அரசு விரைந்து உதவ வேண்டு என்ற கோரிக்கை விடுக்க
பட்டுள்ளது ,பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் ,மற்றும் கணக்கெடுப்பு ஆரம்பிக்க பட்டுள்ளது
அவுஸ்ரேலியா கிரிக்கட் வீரர் மரணம்
அவுஸ்ரேலியா கிரிக்கட் வீரர் மரணம்
அவுஸ்ரேலிய நாட்டின் முன்தன்மை மிகு மட்டை பந்து வீச்சாளராக விளங்கிய Ashley Mallett
அவர்கள் தனது 76 ஆவது வயதில் மரணமாகியுள்ளார் இவர் தனது முதலாவது ஆட்டத்தை
இந்தியாவுக்கு எதிராக ஆடி அசத்தி இருந்தமை இங்கே பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது
இத்தாலி பிரதமருடன் மோடி சந்திப்பு
இத்தாலி பிரதமருடன் மோடி சந்திப்பு
இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள பிரதமர் மோடி ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும்கமிஷன் தலைவர்களையும் சந்தித்தார்.
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில்
ரோம் நகரில் 2 நாட்கள் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராகி அழைப்பின்பேரில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
மேலும், இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலக தலைவர்கள் மாநாடு வரும் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடக்கிறது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பின்பேரில் இந்த மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று தனி விமானத்தில் இத்தாலி
புறப்பட்டு தலைநகர் ரோம் சென்றடைந்தார். ரோம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பயணத்தில் நேபாளம், இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளில் புதிதாக பொறுப்பேற்ற
பிரதமர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் பருவநிலை மாறுபாடு உச்சிமாநாட்டிலும் பங்கேற்கிறார்.
லண்டன் மீன்பிடி படகை சிறை பிடித்த பிரான்ஸ் – முறுகல் உச்சம்
லண்டன் மீன்பிடி படகை சிறை பிடித்த பிரான்ஸ் – முறுகல் உச்சம்
பிரிட்டன் நாட்டுக்கு சொந்தமான ரோலர் படகு ஒன்று மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்தது
,இந்த படகு அத்துமீறி பிரான்ஸ் கடல் பரப்புக்கள் மீன் பிடித்ததை அடுத்து பிரான்ஸ் எல்லையோர காவல்படையினரால் சிறை பிடிக்க பட்டுள்ளது
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளது
ரஜனி மருத்துவனையில் அனுமதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்
ரஜனி மருத்துவனையில் அனுமதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு, நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? – வெளியான புதிய தகவல்
ரஜினிகாந்த்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முழு உடல்
பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து
சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ரஜினிகாந்த்
இந்நிலையில், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை
அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை
சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்
ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்
ஆர்யன் கானின் ஜாமீன் மனுக்கள் கீழ் நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
போதைப் பொருள் வழக்கு- ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்
ஆர்யன் கான்
சொகுசு கப்பலில் போதை விருந்து தொடர்பாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்,
அர்பாஸ் மெர்சன்ட், முன்முன் தமேச்சா உள்ளிட்ட சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், 2 முறையும் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் ஜாமீன் வழங்கக் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதேபோல் அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோர் சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆர்யன் கான் சார்பில் முகுல் ரோகத்கி, முன்முன் தமேச்சா சார்பில் அலி காஷிப் கான் தேஷ்முக், அர்பாஸ் மெர்ச்சன்ட் சார்பில் அமித் தேசாய் ஆகியோர் வாதாடினர்.
மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஆர்யன் கானுக்கு இன்று ஜாமீன் வழங்கி
மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா கியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் – 14 பேரை காணவில்லை
படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் – 14 பேரை காணவில்லை
துருக்கியில் இருந்து கிரேக்க பகுதிக்குள் நுழையும் முகமாக பயணித்த படகு ஒன்று விபத்தில்
சிக்கியதில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நல்லவர் பலியாகியுள்ளனர் ,மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர்
ஏனையவர்கள் காப்பாற்ற பட்டுள்ளனர்
காணாமல் போனவர்களை கண்டு பிடிக்கும் தேடுதல் நகர்வுகள் முடக்கி விட ப்பட்டுள்ளன .
இந்தியாவின் 5,000 km செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியாவின் 5,000 km செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியா தனது பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை
சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5
ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக
ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி
அழிக்கும் திறன்கொண்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்றதாக தெரிவிhttp://ethirinews.com/க்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்… ஸ்காட்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நமீபியா
பணத்திற்காக கணவனை கொன்று குப்பையில் எறிந்த மனைவி
பணத்திற்காக கணவனை கொன்று குப்பையில் எறிந்த மனைவி
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் ஓய்வு பெற்ற கணவர் ஒருவரை அவரது மனைவி கொன்று குப்பையில் வீசிய செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
இவரது ஓய்வூதிய பணம் என்பனவற்றை பெற்றுக்கொள்ளவதற்காக மனைவி இந்த கொலையினை புரிந்துள்ளார்
பணம் வழங்கும் நிறுவனத்திற்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்ட்தால் விசாரணையை நடத்தினர் ,அப்பொழுது
கணவன் இறந்ததற்கான ,சடங்குகள் எதனையும் இவர் புரிந்திருக்கவில்லை
அதில் சநதேகம் அடைந்த அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் கணவரை கொன்றது மனைவி
தான் என்பது கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,இவருக்கு சாகும்வரையிலான சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது
தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்-ஸ்டாலின் அறிவிப்பு
தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்-ஸ்டாலின் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து
காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பட்டாசுக்கடை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
மு.க. ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் உள்ள பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில்
ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ‘‘கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து
மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில்
இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் #CMRF நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’’ எனப்பதிவிட்டுள்ளார்
வெடித்து சிதறிய குண்டு – பலர் காயம்
வெடித்து சிதறிய குண்டு – பலர் காயம்
உகாண்டா தலைநகர் அருகே பேரூந்தில் பயணித்த மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு
தாக்குதலில், சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,மேலும் பலர் படுகாயமhttps://www.youtube.com/user/ethiricom1டைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
குறித்த பகுதி சுற்றிவளைக்க பட்டு தேடுதல் முடுக்கிவிட பட்டுள்ளது
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே சசிகலா விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது
ஓ.பன்னீர்செல்வம்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
சென்னை:
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய சசிகலா சட்டசபை தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
அதன்பிறகு தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதால் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நான் தான் என்று கூறி வரும் சசிகலா அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வந்தார்.
இது அ.தி.மு.க. தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சசிகலாவுடன் போனில் பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கினார்கள். சசிகலாவுடன் யாரும் எந்தவித தொடர்பும்
வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி வைத்தால் கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அ.தி.மு.க.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாடப்படும் இந்த சூழலில் சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் இறங்கி உள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி
செலுத்திய அவர், எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா’ என்ற கல்வெட்டும் வைக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக சசிகலா மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் சென்று கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
இது குறித்து அண்மையில் கருத்து தெரிவித்து இருந்த அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் இடமில்லை. அவர் பொழுதுபோகாமல் பேசிக்
கொண்டு இருக்கிறார். சூரியனை பார்த்து… என்று தொடங்கும் ஒரு வரியை சொல்லி, அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று பதில் அளித்தார்.
அ.தி.மு.க. கட்சி நாங்கள் தான். சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை. இதை கோர்ட்டும் சொல்லிவிட்டது. தேர்தல் கமிஷனும் கூறி விட்டது என்று பரபரப்பாக பேட்டி அளித்தார்.
இந்த சூழலில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரையில் பேட்டி அளித்த போது, “சசிகலா அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்கையில், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் மக்கள் விருப்பம் ஆகும். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கம். தொண்டர்கள் இயக்கமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்” என்றார்.
அப்போது சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமி சர்ச்சைக்குரிய முறையில் விமர்சித்து பேசியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அரசியலில் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும் கூறினார்.
இந்த பேட்டி அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டி குறித்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நேற்று உடனே பதில் அளித்தார்.
சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என தெளிவான முடிவை அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். எனவே சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை என்று கூறினார்.
இதேபோல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்தார். அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டார். அதில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைவரும் கையெழுத்து போட்டுள்ளனர்.
சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திதான் ஓ.பன்னீர்செல்வம் முதலில் வெளியே வந்தார் என்றும் கூறி இருந்தார். அ.தி.மு.க.வில் சசிகலா விவகாரம் இப்போது பெரும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
சசிகலா
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து இதற்கு நேர்மாறாக உள்ளது. இது கட்சியில் விவாத பொருளாக மாறி வருகிறது. தலைமைக்கழக நிர்வாகிகள் ஒன்று கூடி இதில் என்ன முடிவு எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அ.தி.மு.க.வின் பொதுக்குழு வருகிற டிசம்பர் மாதம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலாவை சேர்ப்பதா? வேண்டாமா? என்பது குறித்து காரசார விவாதம் கண்டிப்பாக இடம்பெறும். இதில் ஒரு முடிவு தெரிந்து விடும்” என்றார்.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே சசிகலா விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒரு முடிவுக்கு வரட்டும். அதுவரை மவுனம் காப்பதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி வருகிற 30-ந்தேதி மதுரை செல்கிறார். அங்கிருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.
அப்போது அவர், நிருபர்களை சந்திக்கும்போது சசிகலா விவகாரம் குறித்து தெளிவுப்படுத்துவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து குறித்தும் தனது நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனில் சம்பளம் அதிகரிப்பு –1000 பவுன்டு இலவசமாக வழங்கும் அரசு
பிரிட்டனில் சம்பளம் அதிகரிப்பு –1000 பவுன்டு இலவசமாக வழங்கும் அரசு
பிரிட்டனில் ஆளும் அரசு தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ,அதன் பிரகாரம்
மணித்தியாலம் ஒன்றுக்கு புறநகர் பகுதிக்கு 9,50 சம்பளமும் ,லண்டனில் வசிப்பவர்களுக்கு £10.85 அதிகரிக்க It will take effect from 1 April next year
பட்டுள்ளது ,மேலும் முழுநேர வேலை ,அதாவது full time வேலை செய்பவர்களுக்கு ஆண்டு தோறும் ஆயிரம் பவுண்டுகள் இலவசமாக வழங்க படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்
ஒரு மணித்தியாலத்திற்கு பத்து பவுண்டுகள் மேலாக வழங்கும் நோக்குடன் இந்த பணம் வழங்குதல் மற்றும் சம்பளம் அதிகரிக்க பட்டுள்ளது
மேலும் மக்களுக்கு உதவிடும் முகமாக மேலும் 500 மில்லியன் பணம் ஒதுக்க பட்டுள்ளது ,வீழ்ந்து
போன பொருளாதாரத்தை மேலும் மீள் நிலைக்கு எடுத்து செல்லும் முகமாக இந்த அதிரடி அறிவிப்புக்கள் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது
அப்புறம் என்ன குஷி தான் ,மேற்படி செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள்
living, however, by increasing it to £9.50 it brings it up to the actual living wage of those outside London, according to the Living Wage Foundation.
The independent campaign organisation says the living wage inside London is £10.85 an hour.
Chancellor Rishi Sunak said:
சாமியாரால் ஏமாற்றப்பட்ட குடும்பம் | பெற்ற குழந்தையுடன் சேர முடியாமல் தவிக்கும் தாய்
சாமியாரால் ஏமாற்றப்பட்ட குடும்பம் | பெற்ற குழந்தையுடன் சேர முடியாமல் தவிக்கும் தாய்
அன்பான அழகான தமிழில், அதட்டல் உருட்டல் மிரட்டல் இல்லாமல், சாதுவாக தீர்ப்பு கூறிய இந்த நிகழ்ச்சி மீண்டும் மீண்டும் தொடர வேண்டும். நன்றி வணக்கம்.
லண்டனில் கத்தி குத்து பெண் காயம்
லண்டனில் கத்தி குத்து பெண் காயம்
லண்டன் Victoria Row, Canterbury. பகுதியில் பெண் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த குத்து சம்பவத்தில் பாதிக்க பட்ட பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் ,
மேற்படி குற்ற செயலை புரிந்த நபர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்












