Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
பாரசீக வளைகுடாவில் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான்
பாரசீக வளைகுடாவில் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான்
பாரசீக வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றினை ஈரான்
கடல் படையினர் சிறை பிடித்துள்ளனர்
சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டு கப்பல் ஒன்றையே தாம் சிறை
பிடித்துள்ளதாக ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது
இவ்வாறு சிறை பிடிக்க பட்ட கப்பலானது இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என நம்ப படுகிறது .
McDonald’sசுக்கு மிரட்டல் – சுற்றிவளைத்த பொலிஸ்
McDonald’sசுக்கு மிரட்டல் – சுற்றிவளைத்த பொலிஸ்
லண்டன் கென்ட் Orbital Park, Ashford பகுதியில் உள்ள உலக புகழ் பெற்ற McDonald’s உணவகத்திற்கு
தொலைபேசியில் மிரட்டல் விடுக்க பட்டுள்ளது
மேற்படி சம்பவத்தை அடுத்து பறந்து வந்த போலீசார்
சுற்றிவளைத்து தேடுதலை நடத்தியதுடன் ,மேற்படி மிரட்டல்; அலைபேசி தொடர்பாக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த மிரட்டலுக்குரிய காரணம் இதுவரை தெரியவில்லை
லண்டனில் இந்த பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டனில் இந்த பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் Sissinghurst பகுதியில் வசித்து வந்த 34 வயதுடைய இந்த பெண் காணாமல் போயுள்ளார்
இவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போயுள்ளார்
இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
இவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை ,மக்கள் உதவியை
போலீசார் நாடியுள்ளனர்
லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு போலீசார் குவிப்பு
லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு போலீசார் குவிப்பு
கடந்த தினம் London Road, West Croydon பகுதியில் திடீர் கத்தி வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது
,இதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்ட
பொழுதும் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களில் வாலிபர் மரணமானார்
இந்த சமபவத்தை அடுத்து போலீசார் குவிக்க பட்டு தேடுதல் முடுக்கிவிட பட்டுள்ளது
சமீப காலங்களாக லண்டன் பகுதியில் இவ்வாறான குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படுகிறது ,
கமரா மற்றும் போலீசார் ரோந்து பணிகள் தீவிரமாக்க பட்ட பொழுதும் இதனை தடுக்க முடியவில்லை
லண்டன் Bexleyheath ல் வீடு எரிந்து நால்வர் மரணம்
லண்டன் Bexleyheath ல் வீடு எரிந்து நால்வர் மரணம்
லண்டன் Bexleyheath பகுதியி வீடொன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது
இதன் பொழுது இரு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் தீவிசை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பலத்த தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சில மீட்க பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்ற
வண்ணம் உள்ளனர்
1,05,000 கன அடி வெள்ளம்- 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை
1,05,000 கன அடி வெள்ளம்- 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை
பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ அல்லது ஆற்றினை கடக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
100 ஆண்டுக்கு பின் வாலாஜா பாலாற்றில் 1,05,000 கன அடி வெள்ளம்- 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை
வாலாஜா பாலாற்றில் சீறிப்பாய்ந்து செல்லும் 1,05,000 கனஅடி வெள்ளம்
:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணைக்கு நீர்வரத்து 1,05,000 கனஅடியாக உயர்ந்துள்ளதால் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதனால் பாலாற்றின் கரையோரங்களில் உள்ள 30க்கும் அதிகமான கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் கனமழை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத வகையில் சுமார் 100 வருடங்களுக்கு பின்பு வாலாஜா அணைக்கட்டு தடுப்பணைக்கு பொன்னை
மற்றும் பாலாற்றிலிருந்து நீர்வரத்து அதிகரித்து தற்போது தடுப்பணைக்கு 1,05,000 கன அடி நீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் உள்ள சாதம்பாக்கம், திருமலைச்சேரி, பூண்டி, சுமைதாங்கி உள்ளிட்ட 30-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ அல்லது, ஆற்றினை கடக்க முயற்சி
செய்ய வேண்டாம் எனவும் தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று வருவாய்த்துறை
அதிகாரிகள் பொதுமக்களை மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
வாலாஜா அடுத்த சாதிக்பாட்சா நகர் பாலாற்றை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை பாலாற்று வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளில் வசித்து வந்த 1200-
க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாலாறு அணைக்கட்டில் அதிகாலை 3 மணியளவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் -பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் -பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் -பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
புதுடெல்லி:
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
2014-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால்தான்,
அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சரியான விதைகள், உரம், பயிர்க் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல
மடங்கு உயர்ந்துள்ளது. பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சந்தைகளையும் வலுப்படுத்தி உள்ளோம். விளை பொருட்களுக்கான நியாயமான விலையை தற்போது விவசாயிகள் பெற்று வருகின்றனர்.
விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 3 வேளாண் சட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற
முடிவு செய்துள்ளோம். இந்த மாதம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான நடைமுறையை தொடங்குவோம்.
விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு
ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய கடலில் வீழ்ந்து நொறுங்கிய பிரிட்டன் போர் விமானம்
மத்திய கடலில் வீழ்ந்து நொறுங்கிய பிரிட்டன் போர் விமானம்
பிரிட்டன் இராணுவத்திற்கு சொந்தமான British F35 jet விமானம் ஒன்று
மத்திய தரைக் கடல் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது
எனினும் விமானி பரசூட் மூலம் குதித்து தப்பியுள்ளார்
இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
மத்திய தரைக் கடல் வழியாக பயணித்து கொண்டுள்ள குயின் எலிசபெத் என்ற
விமான தாங்கி கப்பலில் இருந்து குறித்த விமானம் பறப்பில் , ஈடுபட்ட பொழுது
இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
சிரியா மீது இஸ்ரேல் இராணுவம் ஏவுகணை தாக்குதல்
சிரியா மீது இஸ்ரேல் இராணுவம் ஏவுகணை தாக்குதல்
சிரியா தலைநகரை இலக்கு வைத்து
இஸ்ரேலிய இராணுவம் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது
இதில் ஒரு ஏவுகணை சுட்டு வீழ்த்த பட்டுள்ளது, ஏனையது இலக்கை தககிய போதும் அதனால் எவ்விதக சேதங்களும் ஏற்படவில்லை என சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது
இஸ்ரேல் வலிந்து தாக்குதலை திட்டமிட்டு நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .
ஆணின் காதை கடித்து குதறிய பெண் – பாரில் நடந்த பயங்கரம்
ஆணின் காதை கடித்து குதறிய பெண் – பாரில் நடந்த பயங்கரம்
அமெரிக்கா லூசியான பகுதியில் உள்ள பார் ஒன்றில் பெண் ஒருவருக்கும் அங்கு பணி புரிந்த
ஊழியர் ஒருவருக்கும் இடையில் கடும் சன்டை ஏற்பட்டுள்ளது
இதில் ஆத்திரமுற்ற பெண், அந்த ஊழியரின் காதை கடித்து குத்தறியுள்ளார்
இதில் பலத்த காயமடைந்த ஊழியர் சிகிச்சை பெற்று வருகின்றார் ,பெண் உள்ளிட்ட இருவர் கைது
செய்ய பட்டுள்ளனர்
போதை எதை எல்லாம் செய்கிறது பாருங்கள்
கொரனோ சோதனை மையத்திற்குள் வெடி குண்டு சோதனை -பார்சல் செய்த வேலை
கொரனோ சோதனை மையத்திற்குள் வெடி குண்டு சோதனை -பார்சல் செய்த வேலை
பிரிட்டன் Wrexham பகுதியில் உள்ள கொரனோ சோதனை மையத்திற்கு நபர் ஒருவர் அனுப்பி
வைத்த பார்சல் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
குறித்த பார்சல் தொடர்பில் பொலிசாருக்கு தெரிவிக்க பட்டதை அடுத்து அங்கு குண்டு செயல்
இழக்க வைக்கும் படையினர் வரவழைக்க பட்டு குறித்த பார்சல் சோதனை செய்ய பட்டது
,அதற்குள் ஒரு கையுறை ,டார்ச் மற்றும் கைக்கிளேட்டர் என்பன உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
அதனை அனுப்பி வைத்த நபர் அதனை ஏன் அனுப்பினார் என்ற விபம் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது
லண்டனில் தீவிர வாத தாக்குதல் – தப்பிய மருத்துவமனை
லண்டனில் தீவிர வாத தாக்குதல் – தப்பிய மருத்துவமனை
பிரிட்டன் லிவர்பூல் பெண்கள் மருத்துவமனை முன்பாகபாரிய
கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,
இதில் இருவர் காயமடைந்த நிலையில் பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது
டாக்சி சாரதி ஒருவர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி தாக்குதலை நடத்திய குற்ற சாட்டில் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
இந்த சமபவத்தை அடுத்து தற்போது ஆளும் பிரதமர் அவசர கூட்டத்தை கூட்டி
நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்
பிரிட்டனில் என்றுமில்லாதவாறு பெரும் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொண்டு உள்ளதாக முக்கிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
மேற்படி சம்பவம் தொட்ரபில் பிரதமர் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
அமெரிக்கா இராணுவ வானூர்தி கண்காணிப்பு தீவிரம்
அமெரிக்கா இராணுவ வானூர்தி கண்காணிப்பு தீவிரம்
ஈராக் சிரியா எல்லை பகுதியில் அமெரிக்கா இராணுவத்தின் உலங்குவானூர்தி ரோந்து பணி
அதிகரிக்க பட்டுள்ளது
இந்த பகுதியில் அமெரிக்கா இராணுவத்தின் மீது தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும்
நிலையில் இந்த ரோந்து பணிகள் தீவிரமாக்க பட்டுள்ளன
மேலும் அமெரிக்கா படைகள் பெரும் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதான கசிவுகள்
வெளியாகியுள்ளமை இங்கே கவனிக்க தக்கது
பிரிட்டனில் கொரானாவுக்கு 47 பேர் மரணம் 39 705 பாதிப்பு
பிரிட்டனில் கொரானாவுக்கு 47 பேர் மரணம் 39 705 பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் 47 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும்
39,705 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தற்போது மூன்றாம் அலையாக கொரனோ நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது
ஈரானுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகள் – ரஷியா அதிரடி அறிவிப்பு
ஈரானுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகள் – ரஷியா அதிரடி அறிவிப்பு
ஈரானுக்கு தொடர்ந்து ரஷியா உதவிகளை வழங்குவோம் என ரசியா அதிரடியாக அறிவித்துள்ளது
இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பை முன்னிட்டு மேற்படி இராணுவ ஒத்துழைப்பு தொடரும் என
அதிரடியாக அறிவித்துள்ளது ,அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளுக்கு பெரும் பீதியை
ஏற்படுத்தியுள்ளது
லிபியாவில் கடாபி மகன் போட்டி – அமெரிக்கா அழிக்க படுமா
லிபியாவில் கடாபி மகன் போட்டி – அமெரிக்கா அழிக்க படுமா
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் தேடப்படுகிறார்.
லிபியா அதிபர் தேர்தலில் கடாபி மகன் போட்டி
கடாபி மகன் வேட்பு மனு தாக்கல்
லிபியாவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஐ.நா. தலைமையில் பல வருடங்களாக ஜனநாயக ரீதியிலான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், நாட்டின் உள்நாட்டு
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, வரும் அடுத்த மாதம் 24ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில், மறைந்த சர்வாதிகாரி கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செயிப் அல் இஸ்லாம் பேசியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை தேர்தல் அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சீப் அல்
இஸ்லாம், நாட்டின் எதிர்காலத்திற்கான சரியான பாதையை கடவுள் தீர்மானிப்பார் என்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, செயிப் அல்-இஸ்லாம் பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
லிபியாவில் கடாபி மகன் போட்டி – அமெரிக்கா அழிக்க படுமா
லிபியாவில் கடந்த 2011ல் ஏற்பட்ட கலவரத்துடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் செயிப் அல் இஸ்லாம் தேடப்படுகிறார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கடாபியின் ஆட்சி, மக்கள் எழுச்சியால் 2011ல் கவிழ்ந்தது. அதன்பின்னர் கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாமை கிளர்ச்சியாளர்கள் சிறைப்பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடந்த சண்டை, உள்நாட்டு போருக்கு மத்தியில் கடாபி கொல்லப்பட்டார். 5 ஆண்டுகள் தடுப்புக் காவலுக்குப் பிறகு 2017ல் செயிப் அல் இஸ்லாம் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த தேர்தலில் இவர் வெல்ல பட்டால் அது அமெரிக்காவிற்கு எதிராக காட்சிகள் மாறும் என அடித்து கூறலாம்
தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுவது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிகிறது.
கடலுக்குள் வீழ்ந்த விமானம் – தப்பிய விமானி ,பயணிகள்
கடலுக்குள் வீழ்ந்த விமானம் – தப்பிய விமானி ,பயணிகள்
Perth பேச்சு பகுதியில் மேல் பறந்து கொண்டிருந்த இலகுரக விமானம் ஒன்று திடிரென கடலுக்குள்
வீழ்ந்தது
எனினும் விமானியின் சாதூரியத்தால் அதில் பயணித்த பயணி மற்றும் விமானி உயிர் தப்பித்தார்
காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பியுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்
அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்
ஏமான் நாட்டு இராணுவத்தினர் Marib. பகுதியில் பிறந்து கொண்டிருந்த கழுகு ரகத்தை சேர்ந்த
உளவு விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் ,அந்த விமானம் சுட்டு
வீழ்த்த படும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்
எதிரிகளிடம் இருந்து பல கிலோ மீற்றர் நிலப் பரப்பை மீட்டவாறு முன்னேறி வரும் இராணுவ
அணிகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

பிரிட்டணுக்குள் நுழைந்த 1,185 அகதிகள் – டொமினோ பீட்சாக்கடை உணவின்றி வெறித்து போன கொடுமை
உலக
பிரிட்டணுக்குள் நுழைந்த 1,185 அகதிகள் – டொமினோ பீட்சாக்கடை உணவின்றி வெறித்து போன கொடுமை
பிரான்சில் இருந்து பிரிட்டன் டோவர் பகுதிக்குள் சுமார் 33 படகுகளில் சுமார் 1,185 அகதிகள்
வருகை தன தந்தனர் ,இதனால் பலத்த குளிரில் அவதி பட்ட அகதிகளுக்கு உடனடி உணவு வழங்க
வேண்டிய நிலைக்கு குடிவரவு குடியகல்வு அமைச்சு தள்ள பட்டது
இதனால் கடந்த தினம் 200 பிட்சா மற்றும் நேற்று 500 பிட்ஸா ஆடர் செய்ய பட்டது ,இதனால் அந்த
கடையில் இருந்து பொருட்கள் யாவும் முடிந்து போனது ,இதனால் அந்த கடை அடித்து பூட்ட பட்ட தூயர சம்பவம் இடம்பெற்றுள்ளது
இந்த அகதிகளின் தற்காலிக உணவிற்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட பவுண்டுகளை தாம் செலவு செய்ததாக கோம் ஆபிஸ் தெரிவித்துள்ளது
பிரான்ஸ் பிரிட்டன் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில் லண்டனுக்குள் அகதிகள் கடல்வழியாக நுழைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
The Dover branch of Domino’s had 200 orders on Wednesday and 500 orders yesterday and had to temporarily close after running out of ingredients.
It is not known how much was spent on the pizza.
பிரிட்டனில் கார் பாக்கில் வைத்து பெண் கற்பழிப்பு
பிரிட்டனில் கார் பாக்கில் வைத்து பெண் கற்பழிப்பு
பிரிட்டன் கென்ட் பகுதியினுள் உள்ள Park Street, Ashford, கார் பாக்கிங் ஒன்றில் வைத்து பெண்
ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
பெண் மீது தாக்குதல் நடத்த பட்டு இந்த விடயம் இடம்பெற்றுள்ளது ,இது தொடர்பான
விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
,இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன












