Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
நெதன்யாகு சிக்கலில் பறிபோகும் நிலையில் ஆட்சி
நெதன்யாகு சிக்கலில் பறிபோகும் நிலையில் ஆட்சி
நெதன்யாகு சிக்கலில் பறிபோகும் நிலையில்
ஆட்சி உள்ளது என்கின்ற விடயம் அம்பலமாகியுள்ளது .
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக ,
அந்த நாட்டின் உளவுத்துறையான மொஸாட் மக்களை ,
போராட்டங்களுக்கு தூண்டி விட்டது என்கின்ற விடயம்,
வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
நீதி கொள்கையில் நெதன்யாகு செய்த சட்ட மாற்றங்கள் காரணமாக,
லட்சக்கணக்கான மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் .
மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து
செல்லும் நிலையில் ,பதவி விலகும் நிலைக்கு
நெதன்யாகுவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
நெதன்யாகு சிக்கலில் பறிபோகும் நிலையில் ஆட்சி
அவ்வாறு இவர் பதவி விலக்க பட்டால் ,சிறை செல்லும்
வாய்ப்பு காண படுகிறது .
அதனாலேயே ஈரான் மற்றும் ,ஈரான் ஆதரவு குழுக்கள் மீதான ,
தாக்குதலை நடத்தி ,திசை திருப்பத்தை ஏற்பட்ட முற்பட்டார் ,
எனினும் அவை தோல்வியில் முடிந்துள்ளதையை
மக்கள் போராட்டங்கள் எடுத்து காண்பிக்கின்றன .
இலங்கையில் கோட்டபாயாவை போல இஸ்ரேல்,
ஆட்சியும் கவிழ்க்க படும் நிலை காண படுகிறது ,அவை விரைவில் அரங்கேற போவதை அசைவுகள் கட்டியம் இடுகின்றன .
உக்ரைன் இராணுவத்தில் புதிய ஆயுதம் சிதறும் விமானங்கள்
உக்ரைன் இராணுவத்தில் புதிய ஆயுதம் சிதறும் விமானங்கள்
உக்ரைன் இராணுவத்தினருக்கு தற்போது புதிய ஆயுத தொகுதி
ஒன்று கிடைக்க பெற்றுள்ளது .
அமெரிக்கா இராணுவம் வழங்கிய NASAMS ஏவுகணைகள்
பெரும் அழிவை ரஷ்ய இராணுவத்தினருக்கு ஏற்படுத்தி வருகிறது .
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ,இந்த ஏவுகணை செலுத்திகள் மூலம் ,
ரஷ்ய இராணுவத்தின் பல நூறு ஏவுகணைகள் ,
மற்றும் நூற்று கணக்கான விமானங்கள் என்பனவற்றை ,
சுட்டு வீழ்த்தியுள்ளது என்கிறது உக்ரைன் இராணுவம்
ஈரான் வழங்கிய தற்கொலை விமானங்கள் வெறும் இருபதாயிரம் மட்டுமே ,
ஆனல் இந்த ஏவுகணைகள் அதனை விட ஐந்து மடங்கு விலை அதிகமாக உள்ளது .
அவ்வாறு இருந்தும் நாங்களே வெற்றியின் நாயகர்கள் என உக்ரைன் முழங்கி வருகிறது .
மாட்டுக்கு தீனி போடலாம் ,யானைக்கு போடலாமா ,அந்த நிலை தான்
இன்று உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ளது .
பக் மூட் பகுதியில் பலத்த சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ஏவுகணைகள் ,எறிகணைகளினால்
உக்ரைன் அதிர்ந்த வண்ணம் உள்ளது .
ஈரான் புதிய தற்கொலை விமானம் வெற்றிகர சோதனை
ஈரான் புதிய தற்கொலை விமானம் வெற்றிகர சோதனை
ஈரான் இராணுவம் புதிய தற்கொலை விமான ஒன்றை சோதனை செய்துள்ளது
இந்த சோதனையின் பொழுது ,குறித்த இலக்கினை துல்லியமாக சென்று தாக்குவதை ஈரான் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பத்து கிலோ எடையுள்ள குண்டை காவி சென்று வெடிக்கும் திறன் கொண்ட நிலையில் இந்த விமானம் வடிவமைக்க பட்டுள்ளது .
உக்ரைன் களத்தில் ஈரானின் தற்கொலை விமானங்கள்
பெரும் இழப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .
தற்போது கண்டு பிடிக்க பட்ட விமானம் அதனை விட திறன் கொண்ட தாக்குதல் விமானம் என ஈரான் தெரிவித்து இஸ்ரேலுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் திணறும் உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் திணறும் உக்ரைன்
கடந்த தினம் ரஷ்யா துருப்புக்கள் ,உக்ரைன் கிழக்கு லைமன், பாக்முட்,
அவ்திவ்கா மற்றும் மரிங்கா முனைகளில் ,கடும் தாக்குதலைத் தொடர்ந்தன;
குறிப்பாக, பக்முட் நகரை முழுக் கட்டுப் பாட்டிற்குள்
கொண்டு வர ,பாரிய படை நகர்வை மேற்கொண்டன
ரஷ்யப் படைகள் 2 ஏவுகணை மற்றும் 34 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது,பல ஏவுகணை அமைப்புகளிலிருந்து 36 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியது.
உக்ரைன் முழுவதும் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை அதிகமாக நடத்தியது ,லைமன், பாக்முட், அவ்திவ்கா மற்றும் மரின்கா முனைகளில் பலமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன . 35க்கும் மேற்பட்ட ரஷ்ய தாக்குதல்கள் முறியடிக்கப் பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து பக்மூட் பகுதியை முழுவதுமாக தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் தாக்குதல்களை ரஷ்ய வாடகை இராணுவம் மேற்கொண்டு வருகிறது .
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் திணறும் உக்ரைன்
வரும் மணித்தியாலங்கள் அல்லது நாட்களில் ,பக்மூட் ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது .
மேலும் உக்ரைன் போலந்திடம் 200 ரோசோமாக் கவச வண்டிகளை
வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது, அதில் 100 இப்போதும் 100 பிறகும்
வழங்கப்படும் என போலந்து தெரிந்துள்ளது .
ரஸ்யாவை வெற்றி கொள்ள முப்பது நாடுகளிடம் இருந்து உக்ரைன்
ஆயுதங்களை வாங்கி குவித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
ஜப்பானில் அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானங்கள்
ஜப்பானில் அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானங்கள்
ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள ,
மியாகோ ஷிமோஜிஷிமா விமான நிலையத்தில் ,
இரண்டு அமெரிக்க F-16 போர் விமானங்கள் ,
சனிக்கிழமையன்று அவசரமாக தரையிறக்கப்பட்டன
ஜப்பானின் மியாகோ தீவில் இருந்து ,
60 கிலோமீட்டர் (37 மைல்) தெற்கே ஜெட் விமானம் பறந்து கொண்டிருந்தது ,
இதன் பொது திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது ,
அதன் பின்னரே இந்த அவசர தரை இரக்கம் மேற்கொள்ள பட்டுள்ளது .
இந்த போர் விமனக்கல் தரை இரக்கத்தன் பொழுது ,
சிவிலியன் விமானங்களில் பாதிப்புகளோ ,
அல்லது தாமதங்களோ ஏற்படவில்லை என ஜப்பான் தெரிவித்துள்ளது .
அகதிகள் கப்பல் மூழ்கியதில் 20 பேர் மரணம்
அகதிகள் கப்பல் மூழ்கியதில் 20 பேர் மரணம்
துனிசியா கடல் பகுதியில் அகதிகள் படகு மூழ்கியதில் .
குறைந்தது 20 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர்
மத்தியதரைக் கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல முயன்றபோது,
துனிசியாவில் படகு மூழ்கியதில் குறைந்தது 20 ஆப்பிரிக்க குடியேறியவர்கள் பலியாகியுள்ளனர்
கடலோர காவல்படையினர் தெற்கு நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து,
17 பேரை அதே படகில் இருந்து மீட்டனர்
மீட்கப் பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது .
காணாமல் போனவர்கள் சடலங்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடல்படை ஈடுபட்டுள்ளது .
வெளியான அமெரிக்கா நேட்டோ தாக்குதல் திட்டம் ஓடவிட்டு ரஷ்யா
வெளியான அமெரிக்கா நேட்டோ தாக்குதல் திட்டம் ஓடவிட்டு ரஷ்யா
வெளியான அமெரிக்கா நேட்டோ தாக்குதல் திட்டம் ,
உலக நாடுகளின் மிக முக்கிய இராணுவத்தினரை
ஓடி வைத்துள்ளது .
வரும் நாட்களில் ,மாதங்களில் நடத்த போகும் தாக்குதல் ,
திட்டமிடல்கள் ,துல்லியமாக ரஷ்யா
கைகளுக்கு சென்ற நிலையில் ,அதனை அப்படியே வெளியிட்டு ,
அமெரிக்கா நேட்டோ நாடுகளை ஓட விட்டுள்ளது ரஷ்யா .
இந்த தாக்குதல் திட்டடங்கள் யாவும் ,போட்ட சோப் செய்ய பட்டு ,
அமெரிக்கா நேட்டோ நாடுகளை ,குழப்பும் நோக்கிலும் ,உக்ரைனில் இவர்களில் தாக்குதல் திட்டங்கள் யாவும் தோற்று போகும்
வழியை அமைக்கும் தோற்ற பட்டை உருவாக்க ,ரஷ்ய மேற்கொள்ளும் பரப்புரை என மேற்குலங்கங்கள் தெரிவித்துள்ளன .
வெளியான அமெரிக்கா நேட்டோ தாக்குதல் திட்டம் ஓடவிட்டு ரஷ்யா
உண்மையில்லா ஒரு அறிக்கைக்கு ,ஏன் இவ்வாறு அவரச பட்டு ,
நேட்டோ மற்றும் அமெரிக்கா நாடுகளின் ,உளவுத்துறை மற்றும் அவர் தம் ஆதரவு ஊடங்கள் ஒன்றாக கூக்குரல் போடுகின்றன
அப்படி என்றால் இதில் ஏதோ உண்மை இருக்கிறது ,
அமெரிக்காவினால் அறிவிக்க பட்ட சமீபகால ,உக்ரைன் மீதான உதவிகள் ,மற்றும் இராணுவ திட்டங்கள் ,இதில் அடங்க பட்டுள்ளதே ,
இந்த பர பரப்புக்கு காரணமாக அமைந்துள்ளது .
இந்த தாக்குதல் திட்டங்கள் உண்மையானது என்றால் ,
உக்ரைன் ராணுவம் பேரழிவை சந்திக்க போகிறது ,
ஏற்படுத்தும் என்பதை அடித்து கூறலாம் .
80 குழந்தைகளை கடத்தல் கண்ணீரில் பெற்றோர்கள்
80 குழந்தைகளை கடத்தல் கண்ணீரில் பெற்றோர்கள்
ஜம்ஃபாராவில் கொள்ளையர்கள் மீண்டும் வேலை நிறுத்தம் செய்து,
80 குழந்தைகளைக் கடத்திச் சென்றனர்
ஏப்ரல் 7, வெள்ளிக்கிழமை அன்று ஜாம்ஃபாரா மாநிலத்தில்,
உள்ள ட்சேஃப் உள்ளாட்சிப் பகுதியில் 80குழந்தைகள் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்டனர்
இவ்வாறு கடத்த பட்டவர்களில் , 12 முதல் 17 வயதுக்குட்பட்ட
சில குழந்தைகள் காட்டு பகுதி வழியாக கடத்தப்பட்டனர்.
காலை 8:00 மணியளவில் விறகுகளை எடுத்துக்கொண்டிருந்த போது ,
அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்து ,
காட்டுக்குள் கடத்தி இழுத்து சென்றனர் .
கடத்த பட்ட தமது பிள்ளைங்களை ,உறவுகளை விடுவிக்க பெற்றோர்கள் அரசைவேண்டுதல் விடுத்துள்ளனர் .
தொடரும் கொள்ளை கும்பல் அடடூழியத்தால் ,அபாயகர பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது .
விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு ஓடிய மக்கள்
விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு ஓடிய மக்கள்
ஈராக் குர்திஸ்தான் விமான நிலையம் அருகே, பாரிய வெடிகுண்டு வெடித்துள்ளது.
ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ,
சுலைமானியா விமான நிலையத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை ,இந்த
குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது .
குண்டு வெடிப்பில் கட்டங்கள் தீ பிடித்து எரிந்து ,
பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும்
,உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை .
துருக்கி இராணுவத்துடன் ,குருதீஸ் போராளிகள் ,மோதல்களில் ஈடுபட்டுள்ள
வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை
இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் காரல்
மோதி மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ள சம்பவம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வர்த்தக மைய பகுதியாக விளங்கும் ,
டெல் அவிவ் ,பகுதியில் அதிக அளவான உல்லாச
பயணிகள் வருகை தந்து செல்கின்றனர் .
அவ்வாறு வருகை தந்த உல்லாச பயணிகளுக்குள் ,தீவிரவாதி வேகமாக காரை
செலுத்தி மக்கள் மீது மோதியுள்ளார் .
இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை
இந்த சம்பவத்தில் இத்தாலி நாடடை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் ,மேலும் நான்கு இத்தாலியர் மற்றும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த
ஒருவர் காயமடைந்துள்ளனர் .
இது ஒரு திட்டமிட்ட பட்ட ,தீவிரவாத தாக்குதல் என ,
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .
இதே போல மேற்கு கரை பகுதியில், இரண்டு பிரிட்டன் இளம் பெண்கள்
சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவம்,
உல்லாச பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .
பிரிட்டனில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை போலீஸ் சோதனை அதிகரிப்பு
பிரிட்டனில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை போலீஸ் சோதனை அதிகரிப்பு
பிரிட்டன் வட அயர்லாந்து பகுதியில் ஈஸ்டர் திங்கள் அன்று ,
மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ,
உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
பிரிட்டன் எம் 15 உளவுத்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய ,
தகவலை அடுத்து ,வட அயர்லாந்து பகுதிகளில் 350 க்கு மேற்பட்ட ,
ஆயுதம் ஏந்திய விசேட காவல்துறையினர் ,கண்காணிப்பு மற்றும் ,
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .
மேலும் தீவிவாதிகள் பதுங்கி உள்ள பகுதிகளை சுற்றிவளைக்கும்
பணிகள் முடுக்கி விட பட்டுளள்ன .
சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் ,
மற்றும் வாகனகள் என்பன மறித்து சோதனை செய்ய படுகின்றன .
பொறிக்குள் சிக்கிய உக்ரைன் வினியோக வழி துண்டிப்பு
பொறிக்குள் சிக்கிய உக்ரைன் வினியோக வழி துண்டிப்பு
உக்ரைன் ரஷ்ய போர் ,கள நிலவரம் இன்று ,கடும் மோதலாக, காண படுகிறது .
உக்ரைன் மிக முக்கிய ,விநியோக வழி ,ரஷ்யா படைகளினால் ,சுற்றி வளைக்க பட்டுள்ளது .
இந்த ஒரு, சாலை மட்டும், உக்ரைன், வசம் உள்ளது ,ஏனையவை ,ரஸ்யாவிடம் வீழ்ந்து விட்டன .
இந்த பிரதான வீதி ,முடக்க பட்டால் ,அல்லது புதின் ,இராணுவத்தினரிடம் வீழ்ந்தால் ,உக்ரைன் இராணுவம் ,பக்மூட் ,போர் களத்தில் ,தாக்கு பிடிக்க முடியாது .
இன்றைய முக்கிய, இலக்குகளை ,யுக்ரைன் கிழக்கு ,போர் ,முனை மாற்றம் பெற்றுள்ளது .
10 பேருடன் பறந்த ஜப்பான் உலங்குவானூர்தி மாயம் சீனா சுட்டு வீழ்த்தியதா ..?
10 பேருடன் பறந்த ஜப்பான் உலங்குவானூர்தி மாயம் சீனா சுட்டு வீழ்த்தியதா ..?
முக்கிய தளபதி உள்ளிட்ட 10 பேருடன் பயணித்த ஹெலிகாப்டர்,
கடலில் விழுந்து நொறுங்கியதாக ஜப்பான்
இராணுவம் தெரிவித்துள்ளது
காணாமல் போன ஹெலிகாப்டர் தெற்கு தீவில் உள்ள கடலில் விழுந்து நொறுங்கியதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது
டோக்கியோவில் இருந்து தென்மேற்கே சுமார் 1,800 கிலோமீட்டர் (1,120 மைல்) தொலைவில் உள்ள பகுதியில் விமான பாகங்கள்கண்டு பிடிக்க பட்டுள்ளன .
தைவான் உட்பட பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் ,
அங்கு தமது பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்ட ஜப்பான் ,கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட உலங்கு வானூர்தியே இவ்விதம் வீழ்ந்து நொறுங்கியது .
இந்த உலங்கு வானூர்தி சீனா இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம்,
என கருத படுகிறது .எனினும் இது தொடர்பான கருத்து எதனையும் ஜப்பான் தெரிவிக்க மறுத்து விட்டது .
தாய்வான் பகுதியில் போர் கப்பல்கள் விமானங்களை குவித்து மிரட்டும் சீனா
தாய்வான் பகுதியில் போர் கப்பல்கள் விமானங்களை குவித்து மிரட்டும் சீனா
தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், அமெரிக்காவை
சந்தித்ததன் மூலம் பெய்ஜிங்கை கோபப் படுத்திய பின்னர்,
சீனா வெள்ளிக்கிழமை, இரண்டாவது நாளாக ,
தைவான் அருகே ,போர்க் கப்பல்கள் ,மற்றும் விமானங்களை
அனுப்பியபியுள்ளது .
மூன்று சீனப் போர்க் கப்பல்கள் ,சுயராஜ்ய தீவைச் சுற்றியுள்ள நீரில் பயணித்தன,அதே நேரத்தில் போர் விமானம் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ,
ஹெலிகாப்டரும் தீவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை,
கடந்து சென்றதாக தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாய்வான் பகுதியில் போர் கப்பல்கள் விமானங்களை குவித்து மிரட்டும் சீனா
சீனாவின் ஷான்டாங் விமானம் தாங்கி கப்பல் ,
தைவானின் தென்கிழக்கு கடல் வழியாக ,
மேற்கு பசிபிக் பகுதிக்கு செல்லும் வழியில், லாஸ் ஏஞ்சல்ஸில்
மெக்கார்த்தியை சாய் சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு
பயணித்து மிரட்டி சென்றது .
தைவான் தமது நாட்டின் ஒரு மாகாணம் என ,சீனா தொடர்ந்து கூறி வருகிறது ,
பழமை வாத வரலாற்று அடிப்படையில், தாய்வான் ,இந்தியாவின் மிக முக்கிய எல்லையோரங்கள் ,தமது என சீனா ,கூறி ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட .தக்கது
வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு
வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு
உக்ரைன் கிழக்கு ரஸ்யாவின் பின்னரங்க பகுதியாக விளங்கும் ,மெலிட்டோபோல் பகுதியில் ,குவித்து வைக்க பட்டு ஆயுத கிடங்கு வெடித்து சிதறியது .
உக்ரைன் இராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதல் மூலம் இந்த ,ஆயுத கிடங்குஅழிக்க பட்டுள்ளது ,ஏவுகணை செலுத்திகள் ,மற்றும் ஏவுகணை குண்டுகள் ,என்பன வெடித்து சிதறி ,எரிந்த நிலையில் காண படுகிறது .
இதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை ரஸ்யாவும் நடத்தியது .
இதன் பொழுதே அமெரிக்கா வழங்கிய பாட்ரிக் ஏவுகணை செலுத்திகள் உள்ளிட்டவற்றை ,ரசியா அழித்துள்ளது .
தொடர்ந்து உக்ரைன் பல பகுதிகள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் மீது ஹிபுல்ல்லா ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹிபுல்ல்லா ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹிபுல்ல்லா பகுதியில் இருந்து 34ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த வாரம் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி மீது இஸ்ரேலிய,பொலிசார் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து,
வியாழன் அன்று லெபனானில் இருந்து 34க்கும் மேற்பட்ட ,
ராக்கெட்டுகள் ஹமாஸ் ஏவியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
இந்த ரொக்கட் தாக்குதலை அடுத்து ,பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு ,அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டார்,
இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது .
லெபனானில் இருந்து மிகப்பெரிய ராக்கெட் தாக்குதல் 2006 க்குப் பிறகு, இஸ்ரேல் தற்போது சந்தித்துள்ளது .
இஸ்ரேல் மீது ஹிபுல்ல்லா ரொக்கட் தாக்குதல்
எங்களை சோதிக்க வேண்டாம், எங்கள் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க ,
தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ,எடுப்போம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது
லெபனானில் இருந்து 34 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 25 ஏவுகணைகளை ,அயர்ன் டோம் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு தடுத்து நிறுத்தியதாக ,இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலில் ஒருவருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது .
இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தினால் ,ஹிஸ்புல்லா ,காமாஸ் ,ஜிகாத் இணைந்து கூட்டாகதாக்குதலை நடத்த தயாராகி வருகின்றனர் .
ஈரானின் இரண்டு இராணுவ முக்கிய தளபதிகள் படுகொலைக்கு ,
இஸ்ரேல் அதற்கான விலையை அறுவடையை செய்யும் என ஈரான் தெரிவித்து
48 மணித்தியாலத்தில் ,இந்த ரொக்கட் தாக்குதல்
நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
உக்ரைன் இராணுவத்தை பந்தாடிய ரஷ்யா
உக்ரைன் இராணுவத்தை பந்தாடிய ரஷ்யா
உக்கிரைன் கிழக்கு பக்மூட் பகுதியில் ரஷ்ய உக்ரைன் ,
இராணுவத்தினருக்கு இடையில் இன்றும் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன .
பக்மூட் மத்திய பகுதியை கைப்பற்றிய ரஷ்ய இராணுவம் ,
அந்த நகர முழுவதுமாக கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் ,
அதிரடி தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளன .
கடந்த தினம் மிக பெரும் முன்னேற்ற நடவடிக்கையை ,
வழமைக்கு மாறாக ரஷ்ய வாடகை இராணுவம் நடத்தியுள்ளது .
இதில் அமெரிக்கா ஏவுகணைகள் ,பீரங்கிகள்,மாற்றும் டாங்கிகள் என்பன அழிக்கபடும் காட்சிகளை ,ரஷ்ய இராணுவம் வெளியிட்டுள்ளது .
உக்ரைன் இராணுவத்தை பந்தாடிய ரஷ்யா
உக்ரைன் படையினருக்கு பாரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ,
ரஷ்ய தெரிவித்துள்ளது .
தொடர்ந்து கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் ஈரான் ,லெபனான் போர் ஆரம்பிக்க பட்டால் ,
உக்ரைன் நேட்டோ மற்றும் அமெரிக்காவினால் ,
கைவிட படும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்கலாம் .
வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் பலி
வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் பலி
அமெரிக்கா கடற்கரையில் ரக பயணிகள் சிறிய விமானம்
வீழ்ந்து நொறுங்கியது .அவ்வேளை இந்த விமானத்தில் பயணித்த ,
ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளதாக,
மீட்பு படைகள் தெரிவித்துள்ளன .
இரவு 9:30 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம்,
மெக்சிகோ வளைகுடாவில் விழுந்து நொறுங்கியது.
இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியதை ,
கப்பலில் இருந்த பலர் ,விமானம் விபத்துக்குள்ளானதை கண்டு,
மக்கள், அவசர இலக்கத்திற்கு அழைத்து தெரியப் படுத்தினர் .
குறித்த விமான விபத்து காட்சிகள் கப்பலில் பயணித்த ,
மக்களினால் படம் பிடிக்க பட்டு ,
அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன .
உக்ரைனுக்கு உளவு பார்த்த ரஷ்ய தம்பதிகள் கைது
உக்ரைனுக்கு உளவு பார்த்த ரஷ்ய தம்பதிகள் கைது
உக்ரைன் நாட்டுக்கு உளவு பார்த்தனர் என்கின்ற குற்ற சாட்டில் தம்பதிகள் ,
ரஷ்ய உளவுத்துறையில் கைது செய்ய பட்டுள்ளனர் .
ரஸ்யாவின் பாதுகாப்பு நிறுவனத்தின் ,வரை படங்கள் ,
மற்றும் அங்கிருந்த மிக முக்கிய பாதுகாப்பு
ஆவணங்கள் தொடர்பில் தகவல் வழங்கிய குற்ற சாட்டில் ,
பெண் உள்ளிட்ட ஜோடி கைது செய்ய பட்டுள்ளனர் .
சீருடையில் சென்ற உளவுத்துறையினர் ,அடுக்குமாடி ,
குடியிருப்பு பகுதியில் ,குற்றவாளிகளை கைவிலங்கு
இட்டு இழுத்து செல்கின்றனர் .
குறித்த தரவுகளை 1200 யூரோக்களுக்கு விற்பனை செய்துள்ளது
முதல் கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது .
ரஸ்யாவில் தேச துரோக வழக்கில் ,
கைது செய்ய பட்டால் ,இருபது வருடம் சிறை தண்டனை விதிக்க படுகின்றது .
வீடுகளை உடைத்தெறிந்த புயல் அமெரிக்காவில் பயங்கரம்
வீடுகளை உடைத்தெறிந்த புயல் அமெரிக்காவில் பயங்கரம்
அமெரிக்காவில் பாரிய புயல் அனர்த்தம் ஏற்பட்டுளள்து .
இந்த கோர புயலினாலே பல நூறு வீடுகள் சேதமாகியுள்ளன .
மிசோரி மாநில நெடுஞ்சாலை பகுதியில் பல வீடுகள் பாதிக்க பட்டுள்ளன ,
மேலும் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதியில் மீட்பு பணிகள் தொடர்கின்றன .
மேலும் பல மாவட்டங்களுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இதுவரையான இழப்பு பல மில்லியன் டொலர்களாக கணக்கிட பட்டுள்ளது .









































