Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
புயலில் சிக்கிய பிரிட்டன் பயணிகள் விமானம்
புயலில் சிக்கிய பிரிட்டன் பயணிகள் விமானம்
புயலில் சிக்கிய பிரிட்டன் விமான காட்சிகள் பார்ப்பவர்களை
மிரளவைத்து வருகிறது .
பிரிட்டன் Birmingham விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்ட
விமானம் ஒன்று எழுபது மைல் வேகத்தில் வீசிய புயலில் சிக்கியது
இதனால் அந்த விமான நிலையத்தில் தரை இறங்க முடியாது
மீளவும் விமானம் வானில் பறந்தது .
மேற்படி பயங்கர காட்சி அவ்வேளை அங்கு நிலை கொண்டிருந்த
ஊடக நபர்கள் கமராவில் சிக்கிய நிலையில் ,அவை இப்பொழுது சமுக ஊடகங்களில் வைரலாகி வருகிறது .
போருக்கு தயராகும் சீனா பதட்டத்தில் தாய்வான்
போருக்கு தயராகும் சீனா பதட்டத்தில் தாய்வான்
சீனா இராணுவத்தை போருக்கு தயாரா நிலையில் இருக்குமாறு
அந்த நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார் .
தாய்வானின் சமீபகால செயல் பாடுகள் சீனாவுக்கு
எதிராக உள்ளதாகவும் ,அமெரிக்வுக்கு தாய்வான்
அதிபர் சென்று வந்ததன் பின்னர் இந்த உத்தரவை சீனா
அதிபர் பிறப்பித்துள்ளார் .
புதிய ஆயுதங்கள் மற்றும் மேற்படுத்தலில் தீவிரம் காண்பிக்கும் படியும் ,
போருக்கு தயார் நிலையில் இராணுவத்தை இருக்கும்
படியும் சீனா அதிபர் கட்டளையிட்டுள்ளார் .
விரைவில் ரஸ்யா உக்காரனை போல,
சீனாவும் தாய்வான் மீது போரை தொடுக்கலாம் என
எதிர் பார்க்க படுவதால் ,தாய்வான் பதட்டத்தில் உறைந்துள்ளது .
வடகொரியா அதிரடி விமானத்தில் இருந்து ஏவும் ஏவுகணை சோதனை
வடகொரியா அதிரடி விமானத்தில் இருந்து ஏவும் ஏவுகணை சோதனை
வடகொரியா புதிய வகையிலான விமானத்தில் இருந்து ஏவும் ,
புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது .
இதுவரை தரையில் இருந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை
மட்டும் சோதனை செய்தது .
தற்போது விமானத்தில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும்,
தூர தேச ஏவுகணை சோதனையை முதல் முறையாக
வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது .
இந்த ஏவுகணை மிக பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் ,
அமெரிக்காவை இலக்கு வைத்து வட கொரியா
தயாரித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தொடரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனை ,
அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
கவிழ்ந்த இஸ்ரேல் பேரூந்து பலர் காயம்
கவிழ்ந்த இஸ்ரேல் பேரூந்து பலர் காயம்
கவிழ்ந்த இஸ்ரேல் பேரூந்து தென் கொரியாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் இறந்தார் ,மேலும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
33 இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தென்கிழக்கில்
உள்ள பிரபலமான வரலாற்று நகரமான கியோங்ஜுவிலிருந்து
அருகிலுள்ள சுங்ஜுவுக்குச் சென்று கொண்டிருந்தபோது,
முடக்கில் திருப்பத்தை எடுத்த முனைந்த பின்னர் கவிழ்ந்தது .
ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம்,
தென் கொரிய அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒரு இஸ்ரேலிய
பெண் கொல்லப்பட்டார், மீதமுள்ள பயணிகள் காயமடைந்தனர், சிலர் படுகாயமடைந்தனர்.
தென் கொரிய ஓட்டுநர் மற்றும் சுற்றுலா வழிகாட்டியும் காயமடைந்து
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைனுக்கு MiG-29 விமானங்களை வழங்கும் பொலந்து
உக்ரைனுக்கு MiG-29 விமானங்களை வழங்கும் பொலந்து
உக்ரைன் இராணுவத்தினருக்கு போலந்து நாடு பயன் படுத்தி வந்த
MiG-29 fighter jets விமானங்கள் ஐந்திணை வழங்குகிறது .
தமது பழைய பயன் பாட்டுக்கு உதவாத அல்லது ,முழுமையான செயல் பாட்டில் ஈடுபடுத்த
முடியாத ,விமானங்களை உதவி என்ற போர்வையில்
போலந்து உக்ரைனுக்கு வழங்குகிறது .
உக்ரைனுக்கு MiG-29 விமானங்களை வழங்கும் பொலந்து
விளங்கும் தமிழில் சொல்வது என்றால் ,
பழைய இரும்பு கடைக்கு வழங்க படவுள்ள விமானங்களை
உதவி என்ற போர்வையில் உக்ரைன் தலையில் கட்டி அடிக்க படுகிறது .
நீண்ட கால இருப்பில் அல்லது சேமிப்பில் வைக்க பட்டிருந்த ,
ஆயுதங்களையும் ,உக்ரைனுக்கு பல நாடுகள் வழங்கியுள்ளன .
அமெரிக்கா தனது சேமிப்பில் இருந்த பல்லாயிரம் ஏவுகணைகள் ,
எறிகணைகள் என்பனவற்றை
உக்ரைனுக்கு விற்று தள்ளியுள்ளது குறிப்பிட தக்கது .
அமெரிக்கா உளவுத்துறையால் இராணுவ இரகசிய ஆவணத்தை விற்றவர் கைது
அமெரிக்கா உளவுத்துறையால் இராணுவ இரகசிய ஆவணத்தை விற்றவர் கைது
அமெரிக்கா பாதுகாப்பபு துறையில் உள்ள மிக முக்கிய ஆவணங்களை
ரஸ்யாவுக்கு விற்பனை செய்த முக்கிய நபர் கைது செய்ய பட்டார் .
விமான படை மற்றும் தரை படை பாதுகாப்பபுடன் ,
அமெரிக்கா விமான படையில் பணியாற்றிய நபரே கைது செய்யப்பட்டார் .
டீக்ஸீரா மாசசூசெட்ஸ் விமானப் படையின் தேசிய காவலரக பணியாற்றியவர் ,அவரே இந்த இரகசிய ஆவணங்களை ரஷ்யாவுக்கு விற்பனை செய்துள்ளதாக
கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கைதானவர் மீது விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது .
மேலும் பல முக்கிய விடயங்கள் வெளியிட படும் என எதிர் பார்க்க படுகிறது .
இவருடன் தொடர்பில் இருந்த ஏனைய முக்கிய நபர்களை ,
கைது செய்யும் வேட்டையில் அமெரிக்கா
உளவுத்துறை ஈடுபட்ட வண்ணம் உள்ளது
இது அமெரிக்காவுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி என தெரிவிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் முற்றாக அழிப்போம் ஈரான்
இஸ்ரேல் முற்றாக அழிப்போம் ஈரான்
இஸ்ரேல் நாடானாது ஈரான் மீது மிக பெரும்
தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது .
ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி ,
பேரழிவை ஏற்படுத்த இஸ்ரேல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .
முதலாவது அணு உலைகள் ,மற்றும் முக்கிய இராணுவ தளங்கள் ,
தலைவர்கள் ,இராணுவ தளபதிகள்
இலக்கு வைக்க படுகின்றனர் .
இஸ்ரேல் முற்றாக அழிப்போம் ஈரான்
ஒரே நேரத்தில் பரந்த தாக்குதலை நடத்தி ஈரானை சிதைக்கும்
அணைத்து தாக்குதல் திட்டங்களை இஸ்ரேல் தயரித்துள்ளது .
அமெரிக்காவின் ஆதரவு இன்றி தனித்து ஈரானை தாக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது .
எமது நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ,
உலக வரைபடத்தியல் இருந்து இஸ்ரேல் காணமல் போகும்
என ஈரான் தெரிவித்துள்ளது .
ஒரே நேரத்தில் நான்கு நாடுகளில் இருந்து ,
இஸ்ரேலை தாக்குவதற்கு ஈரான் தனது
தயாரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது
உக்ரைன் போரின் பின்னர் இஸ்ரேல் ஈரான் போரே ,
மிக பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என
எதிர் பார்க்க படுகிறது .
ஐந்து லட்சம் பீரங்கி குண்டுகளை வாங்கும் அமெரிக்கா
ஐந்து லட்சம் பீரங்கி குண்டுகளை வாங்கும் அமெரிக்கா
தென்கொரியாவிடம் இருந்து அமெரிக்கா ,
ஐந்து லட்சம் பீரங்கி குண்டுகளை வாங்குகிறது .
உக்கிரைன் போருக்கு பெருமளவு ஆயுதங்களை வழங்கி வரும் அமெரிக்கா ,
தொடர்ந்து வழங்கிட ஆயுத தயாரிப்பு தாமதம் ஏற்படுவதால் ,
தற்போது தென்கொரியாவிடம் இருந்து கடனாக ஐந்து லட்சம் ,
155 மில்லி மீட்டர் ரக ஆட்டிலறி எறிகணைகளை வாங்குகிறது .
இவ்வாறு வாங்கும் குண்டுகளை ,உக்ரைனுக்கு அனுப்பிட
அமெரிக்கா தயாராகி வருகிறது .யுத்தம் ஆயுதங்கள் வழங்கிட
தென்கொரியா சட்டத்தில் தடைகள் காணப்படுவதல் ,
நட்பு நாடு என்கின்ற வகையில் அமெரி க்காவுக்கு இவ்வாறு ,
ஆயுதங்களா வழங்குவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது .
தீயில் எரிந்த ஆடைத் தொழிற்சாலை பாகிஸ்தானில் பயங்கரம்
தீயில் எரிந்த ஆடைத் தொழிற்சாலை பாகிஸ்தானில் பயங்கரம்
தெற்கு பாகிஸ்தான் துறைமுக நகரமான கராச்சியில் உள்ள ,
ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்,
நான்கு தீயணைப்பு வீரர்கள் பலியாயுள்ளனர் ,
மேலும் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர் .
புதன்கிழமை இரவு தொழிற்சாலையில் தீப்பிடித்து வேகமாக பரவிய நிலையில் ,இறுதியில் கட்டடம் இடிந்து விழுந்தது .
இந்த தீ விபத்துக்கான காரணம் காரணம் உடனடியாகத் தெரியவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
புத்தகாயாவில் பயங்கர தீ விபத்து! எரிவாயு சிலிண்டர்களும் வெடிப்பு
புத்தகாயாவில் பயங்கர தீ விபத்து! எரிவாயு சிலிண்டர்களும் வெடிப்பு
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள புத்தகாயாவில் உள்ள காய்கறி சந்தையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீயினால் 100க்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தீ பரவியதன் பின்னர் சில கடைகளில் உள்ள பல எரிவாயு சிலிண்டர்களும் வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த திடீர் தீயினால் 6 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
தீயினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை மற்றும் பீகார் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன
வடகொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா ஏவுகணை சோதனை
கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள கடலில் ,
வட கொரியா ஏவுகணையை வீசியதாக,
தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் .
அதேவேளை ஜப்பானின் கடலோர காவல்படையும் ,
வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ,
ஏவுகணையை ஏவியது என தெரிவித்துள்ளது .
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நகர்வுகள் எதிர்கொள்ளவும் ,
நாட்டின் தேசிய பாதுகாப்பை ,நடைமுறை படுத்தவும் ,இவ்விதமான ஏவுகணை சோதனைகளில்,ஈடுபட்டு வருவதாக வடகொரியா தெரிவித்துள்ளது .
உலகை மிரட்டும் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள்,
அமெரிக்கா நேட்டோ நாடுகளை
அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
எண்ணெய் கடத்திய கப்பல் சிறை பிடித்த ஈரான்
எண்ணெய் கடத்திய கப்பல் சிறை பிடித்த ஈரான்
ஈரானில் இருந்து படகுகள் மூலம் எண்ணெய் கடத்தி சென்று ,
அமெரிக்கா கப்பல்களிற்கு கடலில் விற்பனை செய்து வந்த ,
வேக படகுகள் மற்றும் கப்பல் என்பன ஈரான் கடல்படையால்
சிறை பிடிக்க பட்டுள்ளது
இரண்டு லட்ஷத்து எழுபது ஆயிரம் எரிபொருள் கடத்தி ,
சென்ற நான்கு படகுகள் ,மற்றும் கப்பலும் சிறை பிடிக்கக் பட்டுள்ளதாக ,
ஈரான் கடற்படை அறிவித்துள்ளது .
எண்ணெய் கடத்திய கப்பல் சிறை பிடித்த ஈரான்
சிரியா ,ஈராக் நாடுகளை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா மற்றும் ,
அதன் நேச நாடுகள் இங்கிருந்து
எரிபொருளை ,எரிபொருள் திருடர்கள் மூலம் கடத்தி செல்கின்றனர் .
இராணுவம் அத்துமீறி எண்ணெய் கிணறுகளை தோண்டி ,
அதில் இருந்து எண்ணெய்களை திருடி சென்ற வண்ணம் உள்ளனர் .
தீவிரவாதம் என்ற போர்வையில் நாடுகளை ஆக்கிரமித்த ,
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள்
வள சுரண்டல்களில் தொடராக ஈடுபட்ட வண்ணம்
உள்ளமை குறிப்பிட தக்கது .
ஜெர்மன் விமானத்தை துரத்திய ரஷ்ய விமானங்கள் வானில் நடந்த பர பரப்பு
ஜெர்மன் விமானத்தை துரத்திய ரஷ்ய விமானங்கள் வானில் நடந்த பர பரப்பு
ஜெர்மன் கடற்படை R-3C ஓரியன் பேஸ் ரோந்து விமானம் ஒன்று மால்டிக்
கடல் பகுதியில் நுழைந்ததை அடுத்து ரஸ்யா போர் விமானங்கள்
வானில் பறந்து துரத்தி சென்றன .
சில மணி நேரம் வானில் மிக பெரும் பர பரப்பு ஏற்பட்டது ,
ஜெர்மன் விமானத்தை ,ரஷ்ய விமானங்கள் தாக்குதல்
நடத்தாமல் துரத்தி சென்று விட்டு ,தமது கூடி தேடி பறந்து சென்றன .
ஜெர்மன் இராணுவத்தின் இந்த செயல் பாடு ரஸ்யா ஜெர்மன்,
நாடுகளுக்கு இடையில் முறுகளை அதிகரித்து .
உக்ரைனுக்கு பெருமளவு ஆயுத தளபாடங்களை வழங்கிய சில நாட்களில்
நேட்டோ நாடு ஒன்றின் ஊடுருவல் ரஷ்யாவுக்குள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை
இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை
மியன்மாரில் ஆளும் மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களினால் மக்கள் குடியிருப்பு பகுதியை இலக்கு வைத்து வான்வழி குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த குண்டு தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் பல டசின் மக்கள் கை ,கால்கள் ,இழந்த நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டுள்ள காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை கதற வைத்துள்ளது .
மக்களின் அழு குரல்கள் எங்கும் ஒலித்த வண்ணம் காண படுகிறது ,
மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுக்கு ,
உலக நாடுகள் பல கடும் கண்டத்தை தெரிவித்துள்ளன .
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
உக்ரைன் கமராக்களை கைக்கிங் செய்த ரஷ்யா கைக்கர்கள்
உக்ரைன் கமராக்களை கைக்கிங் செய்த ரஷ்யா கைக்கர்கள்
உக்ரைன் காபி ஷாப்களில் உள்ள தனியார் பாதுகாப்பு கேமராக்களில்
ரஷ்ய ஹேக்கர்கள் நுழைந்து, அந்த வழியாக செல்லும் உதவித் தொடரணிகள்
பற்றிய உளவுத் தகவல்களைச் சேகரித்துள்ளனர் என அமெரிக்கா பாதுகாப்பு
அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
ரஷ்ய அரசு மற்றும் அரசாங்க ஆதரவு ஹேக்கர்கள் உக்ரேனிய
தகவல் தொழில்நுட்ப அமைப்புகளைத் தொடர்ந்து தாக்கி வருகின்றனர் .
இங்கு உள்ள கமராக்கள் மற்றும் அங்கு உள்ள நடமாட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து
ஒட்டு கேட்டு ,அதன் ஊடாக உக்ரைன் இராணுவத்தினரை இலக்கு வைத்து
தாக்குதல் நடத்தி வருவதான தகவல் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
அண்மையில் நடந்தேறிய ஏவுகணை கிடங்குகள் அழிப்பும் .
இவ்வாறான தகவல்கள் மூலம் பெற்றுள்ளதகா தெரிவிக்க படுகிறது .
உக்ரைன் கமராக்களை கைக்கிங் செய்த ரஷ்யா கைக்கர்கள்
கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி
ரஷ்யா படைகள் 500 பேர் பலியாகியும் , 7 டாங்கிகள், 10 கவச வண்டிகள்
15 பீரங்கி ,ஒரு பல்குழல் ஏவுகணை செலுத்தி , 1 ஹெலிகாப்டர்,
9 ஆளில்லா வான்வழி விமானங்கள்,13 வாகனங்கள் மற்றும் எரிபொருள் தாங்கிகள்ஆகியவற்றை இழந்துள்ளது என உக்ரைன் இராணுவவம் வழமையான ஊடகஅறிக்கையில் தெரிவித்துளளது .
எனினும் தமக்கு ஏற்பட்ட இழப்பு விகிதங்களை, இன்றும் தெரிவிக்கவில்லை .,
கடும் மோதல்கள் இடம்பெறுவதை மட்டும் ஒப்பு கொண்டுள்ளது .
நூற்றுக்கு மேற்பட்ட புதிய ஆயுதங்களை காண்பித்து இஸ்ரேலை அலறவைத்த ஈரான்
நூற்றுக்கு மேற்பட்ட புதிய ஆயுதங்களை காண்பித்து இஸ்ரேலை அலறவைத்த ஈரான்
ஈரான் தேசிய ராணுவ தினத்தையொட்டி, ராணுவ தரைப்படைகளால்
மாற்றியமைக்கப்பட்டு, மறு உருவாக்கம் செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட
பல புதிய உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் வெளியிடப் பட்டன
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ தளவாடங்கள் மற்றும்
இயந்திரங்களை இராணுவ தரைப்படைக்கு செவ்வாய்க்கிழமை
கையளிக்கும் நிகழ்வில் ,இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்
செயத் அப்துல் ரஹீம் மௌசவி கலந்து கொண்டார்.
இதில் ஏவுகணைகள் ,பீரங்கிகள் ,உளவு விமானங்கள் ,
தற்கொலை விமனங்கள் ,உலங்குவானூர்திகள்,ராடர்கள் ,
கவச வண்டிகள்,கப்பல்கள்,படகுகள்,
என பல தரப்பட்ட ஆயுதங்கள் காட்சி படுத்த பட்டு அவை ,
இராணுவத்தில் இணைக்க பட்டுள்ளது .
மேற்படி ஈரானின் புதிய ஆயுதங்கள் ,
இஸ்ரேல் அமெரிக்கா நாடுகளை பதட்டத்தில் உறைய வைத்துள்ளது .
உக்ரைனுக்கு 59 மில்லியன் ஆயுத உதவி வழங்கும் கனடா
உக்ரைனுக்கு 59 மில்லியன் ஆயுத உதவி வழங்கும் கனடா
உக்ரேனிய பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் மற்றும் கனேடிய
பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆகியோருக்கு இடையேயான
சந்திப்பைத் தொடர்ந்து, உக்ரைன் இராணுவதினருக்கான
புதிய நிதி உதவி தொகுப்பை அறிவித்தது.
$59 மில்லியன் ஆயுத உதவிகள் வழங்க படுகின்றன . உக்ரைனுக்கு
21,000 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள்,
வெடிமருந்துகளை வழங்குகிறது.
உக்ரைனுக்கு 2.4 பில்லியன் டாலர் கடன் உதவி
வழங்கவும் கனடாவும் ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்ய சொத்துகளை பறிமுதல் செய்தல் மற்றும்
பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் ஒப்புதல் அளிக்க பட்டுள்ளது .
இது உக்ரைனுக்கு கிடைத்த வெற்றியாக உக்ரைன் தெரிவித்து மகிழ்கிறது .
பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பொலிஸ் வண்டிகள்
பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பொலிஸ் வண்டிகள்
பாகிஸ்தானின் குவெட்டாவில் பகுதியில்
போலீஸ் அதிகாரிகளை குறிவைத்து பயங்கர குண்டுவெடிப்பு
தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
பொலிஸ் வாகனங்களை குறிவைத்து இரண்டு மணிநேர இடைவெளியில் ,
சாலையோரத்தில் மறைத்து வைக்க பட்ட குண்டுகள் வெடித்து சிதறின .
இந்த குண்டு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்,
மேலும் 22 பேர் காயமடைந்தனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரில் திங்களன்று நடந்த முதல் தாக்குதலில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பொலிஸ் வண்டிகள்
சில மணி நேரங்களுக்குப் பிறகு, நகரில் மற்றொரு வெடிகுண்டு
போலீஸ் வாகனம் அருகே வெடித்தது,
நான்கு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்..
சமீப நாட்களாக இவ்வாறான குண்டு வெடிப்பு தாக்குதல்கள்
அதிகரித்து காணப்படுகின்றன .
மாறிய தாக்குதல் திட்டம் வீழ்த்தப்பட்ட விமானங்கள்
மாறிய தாக்குதல் திட்டம் வீழ்த்தப்பட்ட விமானங்கள்
உக்ரைன் இராணுவத்தினர் தமது தாக்குதல்
திட்டங்களில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் .
அமெரிக்கா இராணுவ தலைமையாகத்தால்
வரைய பட்ட இராணுவ நடவடிக்கைகள் ,
ஆயுத வகைகள் ,அது சார்ந்த திட்டமிடல்கள் ,தாக்குதல் இலக்குகள்
என்பன அடங்கிய ஆவணம் ,கசிந்த நிலையில் ,உக்ரைன் இராணுவம் ,
ரஷ்ய மீது மேற்கொள்ள விருந்த கூட்டு போர் முறை தாக்குதல் திட்டங்களை,
அதிரடியாக மாற்றம் செய்துள்ளது .
உக்ரைன் தாக்குதல் திட்ட வரைபுகள் ,ரஸ்யாவின்
கைகளுக்கு சென்ற நிலையில் ,
இந்த திடீர் மாற்றத்திற்கு செல்ல வேண்டிய
நெருக்கடியை உக்ரைனுக்கு ஏற்படுத்த இருந்தது .
மாறிய தாக்குதல் திட்டம் வீழ்த்தப்பட்ட விமானங்கள்
அதனால் இந்த தாக்குத்தில் திட்டம் மற்றம் ஏற்பட்டுள்ளதாக,
உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
அமெரிக்காவினால் வெளியிட பட்ட தாக்குதல் திட்ட வரைபுகள் பொய் என அமெரிக்கா,தெரிவித்து வந்த நிலையில் ,இல்லை அது உண்மை தான் என்பதை போல .
உக்ரைன் இராணுவத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ,
உக்ரைன் படைகள் மிக பெரும் அழிவை சந்திக்க போகின்றன என்பதை
எடுத்து காட்டுகிறது .
கடந்த தினம் உக்ரைன் இராணுவத்தின் ஏவுகணை,
சேமிப்பு ஆயுத கூடம் மீது ,ரஷ்ய இராணுவம் நடத்திய
தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் ,
எறிகணைகள்,ஆயுதங்கள் என்பன வெடித்து சிதறின .
அவ்வேளை அங்கிருந்த இராணுவத்தினரும் பலியாகி உள்ளதாக
ரஷ்ய இராணுவம் தெரிவித்து இருந்தது .
அதன் பின்ன இந்த தாக்குதல் திட்டத்தில் ,
மாறுதல் உள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
லண்டனில் கலவரம் எரிந்த பொலிஸ் வாகனங்கள்
லண்டனில் கலவரம் எரிந்த பொலிஸ் வாகனங்கள்
வடக்கு அயர்லாந்தில் லண்டன் டெரியில் நடந்த குடியரசு அணிவகுப்பின் போது காவல்துறை வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஈஸ்டர் அணிவகுப்பின் போது அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து ,வடக்கு அயர்லாந்தில் போலீசார் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திங்களன்று புனித வெள்ளி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 25 வது ,
ஆண்டு நிறைவைக் குறித்தது – இது வடக்கு அயர்லாந்தில் மூன்று
தசாப்தங்களாக மதவெறி இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைத்த சமாதான ஒப்பந்தநாளாகும் .
1916 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான ஈஸ்டர் எழுச்சிக் கிளர்ச்சியின்,ஆண்டு நிறைவை அதிருப்தி கொண்ட குடியரசுக் கட்சியினர்
பாரம்பரியமாகக் குறிக்கும் நாள் இதுவாகும்.
அவ்வாறான நாளிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .









































