Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கையில் ஒரு நாளில் 856 பேர் கைது
இலங்கையில் ஒரு நாளில் 856 பேர் கைது
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் உலவிய மக்களில் 856 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
காவல்துறையினரின் அனுமதியின்றி வெளியில் நடமாடும் நபர்கள் தொடர்ச்சியாக கைது செய்ய பட்ட வண்ணம் உள்ளனர்
எனினும் இவ்வாறு நடமாடுபவர்கள் ஊடக இந்த நோயின் தாக்குதல் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது

கொரனோ பீதி -நீர்கொழும்பு சிறையில் இருந்து 175 கைதிகள் விடுதலை
கொரனோ பீதி -நீர்கொழும்பு சிறையில் இருந்து 175 கைதிகள் விடுதலை
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலின் பீதி காரணமாக நீர்கொழும்பு சிறையில் தடுத்து
வைக்க பட்டிருந்த சுமார் 175 கைதிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்
சிறை காலத்தில் அவர்களின் நன் நடத்தைகளை அடிப்படையாக கொண்டு இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது
என தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் கொரனோ தாக்குதலுக்கு ஒருவர் பலி 113 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ தாக்குதலுக்கு ஒருவர் பலி
இலங்கையில் கொரனோ வைரஸ் தாக்குதலில் முலாவது நபர் பலியாகியுள்ளார் ,
இவ்வாறு பலியானவர் மாறவில பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது
இவருக்கு கிட்னி மாற்று நோயினால் சிக்கி தவித்தவரே இவ்வாறு பரிதாபகராமாக பலியாகியுள்ளார்
இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி 113 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் சிங்கள அரசு திட்டமிட்டு மக்கள் இழப்புக்களை மறைத்து வந்த நிலையில் தற்பொழுது முதலாவது உயிர்பலி
என அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

ஸ்பெயினில் ஒரே நாளில் 832 பேர் பலி -உலகில் 600,000 லட்சம் பேர் பாதிப்பு
ஸ்பெயினில் ஒரே நாளில் 832 பேர் பலி -உலகில் 600,000 லட்சம் பேர் பாதிப்பு
ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் நோயின்
தாக்குதலில் சிக்கி 832 பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு
எண்ணிக்கை 5,690, எட்டி பிடித்துள்ளது
மேலும் உலகலாவிய ரீதியில் இதுவரை 27,000 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் ஆறு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
எதிர்வரும் நாட்களில் ஒரு மில்லியன் மக்கள் இந்த நோயினால்
பாதிக்க படுவார்கள் என்ற மறுபட்ட தகவல் பீதியை கிளப்பியுள்ளது
முடிந்தவரை மக்களை வீட்டுக்குள் முடக்கும் நகர்வில் இராணுவம்
,போலீசார் ஈடுபட்டுள்ளனர்
இத்தாலியில் இறுதியாக வெளிவந்த தகவலின் படி ஒரே நாளில் 919 பேர் பலியாகியுள்ளனர் ,அதன் மொத்த உயிர்பலி எண்ணிக்கை
9,134 ஆக உள்ளது , அதேபோல அமெரிக்காவில் 1,700 பேர் பலியாகியுள்ளனர் ,104.000 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
பிரிட்டனில் ஒரேநாளில் 181 பேர் பலியாகியுள்ளனர் ,பதின் ஐந்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

வவுனியாவில் பெண்களின் சங்கிலியை திருடிவந்த -திருடன் மடக்கி பிடிப்பு
வவுனியாவில் பெண்களின் சங்கிலியை திருடிவந்த -திருடன் மடக்கி பிடிப்பு
வவுனியா கற்குளம் பகுதியைச சேர்ந்த 25 வயதுடைய வாலிபர்
ஒருவர் காவல்துறையினரால் கைது
செய்ய பட்டுளளார் ,
கைதானவர் ஊரடங்கு சட்டம் தளர்த்த படும் வேளையில் தனிமையில் வீதியில் செல்லும் பெண்களின் தங்க சங்கிலியை
அறுத்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது
ஊந்துருளியின் இலக்க தகட்டை மாற்றி ,மாற்றி இவர் கொள்ளையில் ஈடுபட்டு பின்னர் தப்பித்து சென்றது
பாதிக்க பட்ட பெண்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்
போலீசார் விசேட அணியினர் மேற்கொண்ட விசாரணையின் இந்த திருடன் கைது செய்ய பட்டுளளார்

யாழில் பல குடும்பங்களுக்கு கொரனோ இறக்கும் நிலையில் குடும்பம் – மறைக்கும் அரசு
யாழில் பல குடும்பங்களுக்கு கொரனோ இறக்கும் நிலையில் குடும்பம் – மறைக்கும் அரசு
இலங்கை வடக்கு தமிழர் தாயக பகுதியான யாழ்ப்பாணத்தில்
உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய
நிலையில் பல குடும்பங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
இதில் சில தமிழர் குடும்பங்கள் பலமாக இந்த நோயால் பாதிக்க
பட்டுள்ளன .
அந்த குடும்பங்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளன
எனினும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர்
இதனை மறைத்து வருவதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது
இழப்புக்களை குறைத்து நாடு பாதுகாப்பாக உள்ளதான தோற்ற
பட்டாடை உருவாக்க இராணுவத்தை கொண்டு இந்த மக்களை
மிரட்டி அடக்கி வருகிறது
இந்த நோய் தொடர்பான தகவல்கள் வெளியில் பரவ விடாது
தணிக்கைக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி கூற
படுபவர்கள் வதந்தி பரப்பினார்கள் என கைது செய்ய பட்டு
சிறைகளில் அடைக்க பட்டுள்ளனர்
வரும் நாட்களில் இலங்கை கூறும் தகவல் நிலைகளுக்கு
எதிர்மறையாக பல உயிர்பலிகள் இடம்பெறும் என உள்ளிருந்து
கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன
பிந்திய செய்தி இதில் அழுத்தி படிக்க யாழில் வேகமாக பரவும் கொரனோ -மரண பொறிக்குள் வடக்கு தமிழர்கள்
பிந்திய விசேட செய்தி – இலங்கையில் ஐந்து கிராமங்களில் 100 பேருக்கு வைரஸ் – மக்கள் செல்ல தடை- இராணுவம் குவிப்பு

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்து தனிமை படுத்த பட்ட 300 பேர் விடுதலை
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்து தனிமை படுத்த பட்ட 300 பேர் விடுதலை
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் கைது செய்ய பட்டு
பதின் நான்கு நாட்கள் தனிமை படுத்த பட்டனர் ,அவ்வாறு
தனிமை படுத்த பட்ட முன்னூறு பேர் அடங்கிய குழு ஒன்று தற்போது
விடுதலை செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு விடுதலை செய்ய பட்ட அனைவருக்கும் பரவி வரும்
கொரனோ நோய் தொற்று இல்லை என தெரிவித்து இந்த
விடுதலை இடம்பெற்றுள்ளது
இவ்வாறு சென்றவர்களில் இத்தாலியில் இருந்து பயணித்தவர்களே
அதிகம் என தெரிவிக்க படுகிறது

இலங்கையில் கடந்த ஒரு நாளில் எவருக்கும் கொரனோ இல்லையாம்
இலங்கையில் கடந்த ஒரு நாளில் எவருக்கும் கொரனோ இல்லையாம்
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இந்த
கொரனோ தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் எவரும்
அடையாளம் காணப்படவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது
இலங்கை இராணுவம் தமது பாதிப்புக்களை மறைத்து தமது நாடு
பாதுகாப்பானது என்ற பரப்புரையை மேற்கொள்ள இவ்விதம்
செய்திகளை மூடி மறைத்து வருவதாக உள்ளிருந்து கசியும்
தகவல்கள் தெரிவிக்கின்றன
இலங்கை அரசு கூறுவது போன்று இலங்கையில் நிகழ்வுகள்
இல்லை எனவும் ,அதற்கு எதிர்மாறாக இடம்பெறுவதாக அந்த
கசிவுகள் தெரிவிக்கின்றன

இலங்கையில் ஊரடங்கை மீறி செயல் பட்ட 5,185 பேர் கைது
இலங்கையில் ஊரடங்கை மீறி செயல் பட்ட 5,185 பேர் கைது
இலங்கையில் பிறப்புவிக்க பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறி
செயல்பட்ட சுமார் 5,185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 1,167 பேர்
கியது செய்ய பட்டுள்ளனர்
நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்த
ஊரடஙக்ளு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
எனினும் அதனை அலட்சியம் செய்து மக்கள் வீடுகளை விட்டு
வெளியேறி பொது சந்திப்பு மற்றும் களியாட்டம் என்பனவற்றில்
அவ்வாறானவர்களும் கைது செய்ய பட்டுள்ளனர்

ஐரோப்பவில் 10 தமிழர்கள் கொரனோவால் பலி
ஐரோப்பவில் 10 தமிழர்கள் கொரனோவால் பலி
உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை
ஐரோப்பா தழுவிய நிலையில் பத்து தமிழர்கள் பலியாகியுள்ளனர் .
பிரிட்டன் ,பிரான்ஸ் .சுவிஸ்,இத்தாலி நாடுகளை உள்ளடக்கிய தமிழர்களே இவ்விதம் பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் தமிழர்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்
பல தமிழர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் ,வெளியில் சொல்ல
வெட்கத்தில் பல தமிழர் இதனை தெரிவிக்கவில்லை ,தமிழீழ தேசிய
செயல் பாட்டாளர்கள் சிலரும் இந்த நோயினால் பாதிக்க
பட்டுள்ளதாக தெரியவருகிறது
எப்பொழுது யாரை இந்த நோயானது தாக்கும் என்பது எவருக்கும்
உத்தரவாதம் இல்லாத நிலையே தற்பொழுது நீடிக்கிறது ,
இன்று அவருக்கு இந்த நோயானது தொற்றியுள்ளது என கூறும்
நமக்கு கூட இந்த நோயானது நாளை தொற்றி விடும் என்பதே
நிகழ்கால நிகழ்வாக உள்ளது
மேலும் இந்த நோயினை கட்டு படுத்த மக்களை வீட்டை விட்டு
வெளியில் வரவேண்டாம் என அரசுகள் அறிவித்து வருகின்றன
மேலும் வீட்டு யன்னல்களை கூட மூடி வைத்து விடுங்கள் ,காற்றில்
கலக்கும் இந்த கிருமி உங்கள் வீடுகளுக்குள் நுழையும் அபாயம் உள்ளது
அடுக்கு மாடி தொடரில் வசித்து வந்த தமிழர் சிலர் வீட்டு
யன்னல்களை திறந்து வைத்த பொழுது அதன் வழியாக அருகில்
உள்ள பாதிக்க பட்டவராது நோயானது தாக்கியுள்ளதாக மாறு பட்ட
செய்திகள் சமூக வலைத்தளங்கள் வழியாக பரவிய வண்னம் உள்ளது
எனவே மக்களே விழிப்பாக இருந்து செயல் படுங்கள் ,இரண்டாம்
உலக யுத்தத்தின் பின்னர் பெரும் அழிவு இந்த நோயினால்
ஏற்படுவதாக நிபுணர்கள் கருத்துரைத்துளள்னர்

பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டவர்களை கைது செய்த பொலிஸ்
பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டவர்களை கைது செய்த பொலிஸ்
இலங்கையில் பள்ளி வாசல் ஒன்றில் தொழுகையில் ஈடு பட்டிருந்த
சில முஸ்லீம் மக்களை காவல்துறையின் அதிரடியாக கைது
செய்துள்ளனர்
வைரஸ் நோயானது பரவி வருவதல் மக்களை வெளியில் செல்ல
வேண்டாம் என இலங்கை அரசு அறிவித்தல் விடுத்து வரும்
நிலையில் அதனை மீறி வெள்ளிக்கிழமை தொழுகையில்
ஈடுபட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இது போன்று இந்தியாவில் பல டசின் பேர் கைது செய்யப்
பட்டதுடன் ,அவர்கள் மீது தடி அடியும் நடத்த பட்டுள்ளது
மக்களின் அலட்சியே போக்கே இந்த செயல் பாடுகளுக்கு காரணம்
என சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வைத்து மகிழ்ந்த வாலிபர்கள் -இவர்கள் மனிதர்கள்
கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வைத்து மகிழ்ந்த வாலிபர்கள் -இவர்கள் மனிதர்கள்
இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை அடுத்து நாய்கள் சாப்பாடு
இன்றி தவித்தன .அவ்வாறான நாய்களை கண்ணுற்ற வாலிபர்கள்
சிலர் அதற்கு உணவளித்து அன்பை செலுத்தின ,
மேற்படி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி
வருவதுடன் வெளி நாட்டு வெள்ளையர்களின் வாழ்த்து குவிந்த
வண்ணம் உள்ளது
இப்படியும் மனிதமுள்ள மானிடர்கள் இலங்கையில் இருக்கத்தான்
செய்கின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணம்
அந்த வாலிபர்களுக்கு எமது வாழ்த்துக்களையும்
பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம் ,
அணைத்து உயிர்களிடத்திலும் அன்பை செலுத்து என ஆண்டவன்
கட்டளையிடுகிறான் ,முடிந்தவரை அந்த உயிர்களுக்கு உதவு
என்கிறான் ,
இந்த வேத வாக்கு இப்பொழுது இந்த வாலிபர்கள் செயல் ஊடாக

பிரிட்டன் சுகாதர அதிகாரிக்கும் கொரனோ தொற்று
பிரிட்டன் சுகாதர அதிகாரிக்கும் கொரனோ தொற்று
பிரித்தானியாவின் இரண்டாவது சுகாதார அதிகாரிக்கும் Matt
Hancock கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க
பட்டுள்ளது ,தற்போது அவரும் தனிமை படுத்த பட்டுளளார் ,
முன்னர் இருந்த அம்மையாருக்கும் இந்த நோயானது தாக்கியதை
அடுத்து அவர் தனிமை படுத்த பட்டார் இப்பொழுது இவருக்கும்
ஏற்பட்டுள்ளது
மொத்தமாக பிரதமர் ,இளவரசர் உள்ளிட்ட ஐவர் இந்த நோயினால்
பீடிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4018 பேர் கைது
இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4018 பேர் கைது
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை கட்டு
படுத்தும் நோக்கில்
ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டது ,
இந்த சட்டம் அமூலுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை
மீறி வெளியில் உலாவிய சுமார் 4,018 பேரை காவல்துறையினர்
கைது செய்துள்ளனர்
அவர்கள் சென்ற வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
மேலும் இந்த அத்துமீறல் சம்பவம், கம்பகாவிலே அதிகம்
பதிவாகியுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

சுவிஸில் கொரனோ தாக்கியதில் தமிழர் பலி
சுவிஸில் கொரனோ தாக்கியதில் தமிழர் பலி
சுவிஸ் நாட்டில் வசித்து வந்த தமிழர் ஒருவர் வேகமாக பரவி வரும்
கொரனோ
நோய் தாக்கி பலியாகியுள்ளார்
பலியானவராது சடலம் உறவினர்களிடம் கையளிக்க படவில்லை
என தெரியவருகிறது
மேற்படி நோயினால் மரணித்தவர்கள் சடலங்களை அரசே
பொறுப்பேற்று நல்லடக்கம் செய்து வருகிறது
ஏனையவர்களுக்கும் இந்த நோயானது தொற்றி விடும் என்பதால்
லண்டன் ,பிரான்சு நாடுகளிலும் இந்த நோயினால் தமிழர்கள்
பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க கொரனோ தொற்றிய தாதி தற்கொலை
மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க கொரனோ தொற்றிய தாதி தற்கொலை
இத்தாலியில் இதுவரை எட்டாயிரத்து மேற்பட்டவர்கள்
பலியாகியுள்ளனர் ,மேலும் எண்பதாயிரம் பேர் வரை பாதிக்க
பட்டுள்ளனர் .இதன் இழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என நம்ப
படுகிறது
பாதிக்க பட்ட வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வந்த
தாதி ஒருவருக்கு கொரனோ தொற்றியதை அடுத்து அவர்
ஏனையவர்களுக்கு பரவாமல் இருக்க தற்கொலை செய்து
கொண்டுள்ளார்
மேற்படி சம்பவம் உலக அரங்கில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளதுடன் குறித்த தாதிக்கு சமூக வலைத்தளங்களில்
பாராட்டும் ,இரங்களும் குவிந்த வண்ணம் உள்ளது
இவர் மக்களினால் போற்ற படும் ஒரு கொரனோ கீரோவாக

மலையகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான சுகாதார விழிப்புனர்வு குறைவு photo
மலையகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான சுகாதார
விழிப்புனர்வு குறைவு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் வௌ;வேறு காலங்களில் ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கபட்டு
வருகின்றது. இதன் பயனாக பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையில் வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில்
மாற்றம்பெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் மக்கள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
விளகி இருத்தல் தனிமைபடுத்தல் மக்களின் தானதாக ஊரடங்கு உட்பட அரசாங்கம் கூறும் வைரஸ் பரவாமல் இருக்க கூறும்
பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றுதல் ஊரடங்கு சட்டத்தை கடைபிடித்தல் காரணமாக பல நாடுகளில் கொரோனா வைரஸ்
பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை எமது நாட்டு மக்களும் பின்பற்ற வேண்டும். இந்நிலையில் எமது நாட்டின்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களின் செயற்பாடுகளும் பாராட்டதக்க ஒன்றாகும்.
இந் நிலையில் மேற்படி சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளை மலையகத்தில் சில தோட்டங்களில் முன்னெடுத்தாலும் பல
தோட்டங்களிலும் மலையக நகரங்களிலும்; முன்னெடுத்து வருவதாக தெரியவில்லை. கொழும்பு மற்றும் பிற நகர்களில்
தொழில் புரிந்த இளைஞர்கள் தற்போது தோட்டங்களுக்கு படையெடுத்துள்ளனர். இவர்களும் உல்லாச ஹோட்டால்களிலும்
பல்வேறு நிறுவனங்களிலும் தொழில் புரிந்தவர்கள். சிலர் வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ளனர். இவர்கள் மூலமாகவும்
கொரோனா வைரஸ் தோட்டங்களுக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் மேற்படி சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளை
முன்னெடுக்க வேண்டும். தற்போதும் இந்த இளைஞர்கள் சுற்றி திரிவதையும் விளையாடுவதையும் காணக் கூடியமாக இருக்கின்றது.
தற்போது தோட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் இல்லை. ஒரு சில தோட்டங்களுக்கு அவை வழங்கப்பட்டு உள்ளதாக
செய்திகள் வெளியானாலும் பெரும்பாலான தோட்டங்களில் அவை வழங்கப்படவில்லை. அவர்கள் பாதுகாப்பு முக கவசங்கள்
இல்லாமலே தேயிலை மலைகளில் தொழில் புரிந்து வருகின்றனர். இந் நிலை தொடருமானால் பெருந்தோட்டங்களில் இந்த நோய்
பரவுவதை தடுக்க முடியாது. எனவே இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள சம்பந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..



பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முககவசம் வினியோகத்தில் சிக்கல் தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம் photo
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முககவசம் (ஆயளம) வினியோகத்தில் சிக்கல் தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம்
உலகத்தையே குளுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை கொரோனா வைரஸ்
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இலங்கையில் இன்றுடன் சதம் அடித்து 106 யை தாண்டியுள்ளது.
இந் நிலையில் மலையகத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து மக்களை பாதுகாக்க பல சுகாதார
விழிப்பணர்வுகளும் அதற்கான பொருட்கள் வினியோகமும் அரசாங்கத்தின் நிவாரண பணிகளும் தோட்டங்களுக்கு
முன்னெடுத்து செல்லப்படுகின்றது என்ற பல அறிக்கைகளை நாளாந்தம் நாம் கேட்டு வருகின்றோம். ஆனால் இவை முறையாக
செயற்பட்டு வருகின்றதா அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கின்றதா என்று நோக்கும் போது அவை கேள்விகுறியாகவே இருக்கின்றது.
தோட்டங்கள் என்றதும் குறிபிட்ட மாவட்டத்தை மாத்திரமாக கொண்டதாக இல்லை. மத்திய ஊவா சப்ரகமுவ மகாணங்களையும் மற்றும் குருநாகலையும் கொண்டே பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து
வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் முறையான நிவாரணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது வேலை செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் போது தொழிலாளர்கள் குறித்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்
முககவசம் அணிய வேண்டும் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகள்
கூறப்பட்டாலும் நடைமுறையில் பல இடங்களில் காணக் கூடியதாக இல்லை.
முககவசங்கள் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டது. அவை ஒருமுறை பாவித்துவிட்டு மீண்டும் கழுவி பாவிக்க முயற்சிக்கும் போது பிஞ்சி
கிளிந்து விட்டது. மீண்டும் முககவசங்கள் வழங்கப்படவில்லை. சில தோட்டங்களில் முககவசங்களே வழங்கப்படவில்லை. இந்
நிலையில் தொடர்ந்து இவர்கள் பாவிக்க கூடிய முககவசங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முககவசம் பாவிக்க
கூடிய வசதியே முக கவசங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதியோ தோட்ட தொழிலாளர்களுக்கு இல்லை. சந்தையில்
முறையான முககவசமும் இல்லை.
தற்போதும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் கூட்டமாக ஒரு இடத்தில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமலே தொழில்
செய்து வருகின்றனர். இவர்களுடன் தோட்ட உத்தியோகஸ்தர்களும் சேவை செய்து வருகின்றமையும் காணக் கூடியதாக இருக்கின்றது.
சில இடங்களில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் மாத்திரம் முககவசம் போட்டு மேற்பார்வை செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் என்பது யாருக்கும் எந்நேரத்திலும் தொற்றலாம் வந்தால் யாரையும் விட்டு வைக்காது. இதை உணர்ந்து
அனைவரும் மனிதர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றலாம் என்ற எண்ணத்துடன் செயற்படுவது கட்டாயமானதாகும்.
இந்நிலையில் அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் கொரோனா பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க
சம்பந்தபட்டவர்கள் முன் வரவேண்டும். இவர்களுக்கு விழிப்புணர்வுகள் மாத்திரம் அல்லாது தேவையானதை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



புஸ்ஸல்லாவில் கொரோனா பரவும் அபாயம் photo
புஸ்ஸல்லாவில் கொரோனா பரவும் அபாயம் photo
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று (26) தளர்த்தபட்ட பொழுது மலையகத்தில்
காணப்படும் பெரும்பாலான நகரங்களில் மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டனர். அதன் ஒரு கட்டமாக இன்று (26)
புஸ்ஸல்லாவ நகரில் மக்கள் பொருட்கள் கொள்வனவுகளிலும் வங்கி நடவடிக்கைகளிலும் எரிபொருள் நிரப்புதல் உட்பட அன்றாட
நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்
இருந்தும் கொரோனா வைரஸ் பரப்புதல் நடவடிக்கைகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பின்பற்றபட்டு வரும் ஒரு
மீற்றருக்கு அப்பால் நிற்;க வேண்டும் என்ற கட்டாய செயற்பாடு இங்கு நடைமுறைபடுத்தவில்லை கடைகளில் மக்கள் கூட்டம்
கூட்டமாகவே பொருட்களை கொள்வனவு செய்தனர். இந்நிலையை தொடர்ந்து வரும் நாட்களில் மாற்றம் செய்ய வேண்டும். இன்று
முட்டை கொள்வனவிற்காக மக்கள் முண்டி அடித்துக் கொள்வதையும் பொருட்கள் கொள்வனவிற்கு முண்டி அடித்துக்
கொள்வதையும் காணக் கூடியதாக இருந்தது. கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுபடுத்த ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தி பின்
பொருட்கள் கொள்வனவுக்காவும் அத்தியாவசிய தேவைக்காகவும் ஊரடங்கு சட்டம் தளர்த்தும் சந்தர்பங்களில் மக்கள் உரிய
பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். மக்கள் ஒன்று சேரும் இடங்களில் இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள்
அதிகமாக இருக்கின்றன. இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததினால் உலகில் பல நாடுகளில் பல
சேதங்கள் ஏற்பட்டதை நாம் அறிவோம். இந்நிலை தொடராமல் இருக்க வேண்டுமானால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அதிகாரிகள் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்





லண்டனில் கடைகள் முன் பீதியில் குவிந்துள்ள மக்கள் – வீடியோ,
லண்டனில் கடைகள் முன் பீதியில் குவிந்துள்ள மக்கள் – வீடியோ
லண்டன் லூசியம் பகுதியில் உள்ள சயன்ஸ் பெரி சூப்பர்
மார்க்கட்டில் பொருட்களை வாங்கி குவிக்க மூன்றடி இடைவெளி விட்டு குவிந்துள்ள மக்கள்
முதன் முதலாக இந்த பகுதியில் இவ்வாறு நிரையில் நிற்பதை
அவதானிக்க முடிந்தது
மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் அங்கு கட்டில்கள் இல்லாத
நிலை என்ற செய்தி வெளியானதை அடுத்து மக்கள் இவ்வாறு
குவிந்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது







