Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
100 நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி – மகிந்தா உத்தரவு
100 நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி – மகிந்தா உத்தரவு
இலங்கையில் இதுவரை அபிவிருத்தி செய்யப்படாத நூறு நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் புதிய உத்தரவுகளை பிரதமர் மகிந்த பிறப்பித்துள்ளார்
இவ்வாறு செய்வதன் ஊடக பல மில்லியன் பணத்தை கொள்ளையடிக்கலாம் என்பது மகிந்த கூட்டத்தின் கனவு
எனினும் உரிய முறையில் இந்த நகரங்கள் அபிவிருத்தி செய்ய படுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
மக்களுக்கான திட்டங்கள் தொடரும்- அமைச்சர் டக்ளஸ்
மக்களுக்கான திட்டங்கள் தொடரும்- அமைச்சர் டக்ளஸ்
வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்க்கும் நிலையத்தினை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதன் மூலம் எமது பிரதேச மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புக்களையும் பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற
அடிப்படையில், ஆய்வு ரீதியாகப் பொருத்தமான இடங்களை தெரிவு செய்து பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடலட்டைப் பண்ணைகள் தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள புரிதல் காரணமாக ஏராளமானோர் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கடந்த
ஒன்றரை வருடங்களில் நூற்றுக்கணக்கான பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் ஆயிரக்கணக்கான பண்ணைகளை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகின்றன.
இவ்வாறான பண்ணைகளுக்கு இலட்சக்கணக்கான கடலட்டை குஞ்சுகளை இனப்பெருக்கம் செய்து வளர்க்க வேண்டிய தேவையுள்ளது.
இந்நிலையிலேயே, 2016, 2017 காலப் பகுதியில் அப்போதைய அரசாங்கத்திடம் அனுமதிகளை பெற்று, அரியாலையில் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை அமைத்த இலங்கை சீனக்
கூட்டு நிறுவனம், கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை கௌதாரிமுனையில் அமைத்துள்ளனர். இதற்கு தேவையான சட்ட ரீதியான அனுமதிகளை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை.
கடலட்டைப் பண்ணையைப் பொறுத்தவரையில் அவசியமான அனுமதிகளைப் பெற்று செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டுமாயின் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியேற்படும்.
எனவே, நாரா – நக்டா – கடற்றொழில் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஆலோசனைகளைப் பெற்று மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாது என்று
அடையாளப்படுத்தப்படுகின்ற இடங்களில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு தழுவல் அடிப்படையிலான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, எமது மக்களின் பொருளாதார நலன்களையும் நாட்டிற்கான அந்நியச் செலாவணியையும் பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக இநதியா, மாலைதீவு, பங்களாதேஸ், நோர்வே, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடி இருக்கின்றேன்.
அண்மையில்கூட இந்தியத் தூதுவரை சந்தித்து எமது கடற்றொழிலாளர்களுக்கான வாழ்வாதார ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியிருக்கின்றேன். அதேபோன்று முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் கோரியுள்ளேன்
இவ்வாறான நிலையில்தான், கடந்த அரசாங்கத்தினால் நாட்டினுள் செயற்பட அனுமதி அளிக்கப்பட்ட குயிலான் நிறுவனம் கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை கௌதாரிமுனையில் அமைத்திருக்கின்றது.
இதுதொடர்பாக நேரடியாக நிலைமைகள் ஆராயப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கௌதாரிமுனை கடற்றொழிலாளர்களுடனும் கலந்துரையாடி எமது மக்களுக்கும் நாட்டிற்கும் பாதிப்பில்லாத தீர்மானம் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கௌதாரிமுனை கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையம் தொடர்பாக அரசியல் நோக்கத்தோடு மக்களைக் குழப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இவ்வாறான சுயநலப் பூச்சாண்டிகளினால் தன்னுடைய மக்கள் நலச்
செயற்பாடுகளை தடுக்க முடியாது எனவும் மக்களுக்கு தேவையானதையும் சரியானதையும் செய்வதற்கு எதிராக எத்தகைய எதிர்ப்புக்கள் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயங்கப்
போவதில்லை. கடந்த காலங்களில் இவ்வாறான பல சலசலப்புக்களையும் சவாடல்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றமையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
டொலரை அரசாங்கம் விழுங்கிவிட்டது- ரணில்
டொலரை அரசாங்கம் விழுங்கிவிட்டது- ரணில்
ஐக்கிய அமெரிக்க டொலர், பிரச்சினையிலிருந்து இருந்து அரசாங்கத்தால் தலையை தூக்கிக்கொள்ள முடியவில்லையெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்
பட்டியல் எம்.பியான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம்
டொலரை விழுங்கிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
“டொலர், கைவசம் இன்மையால், கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருக்கும் எரிபொருள் அடங்கிய கப்பலும் சிக்கிக்கொண்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். எரிபொருள்களுடன் வந்திருக்கும்
அந்தக் கப்பலுக்கு டொலரை செலுத்தாவிடின், எரிபொருள்களை எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
இலங்கை தற்போது அந்நிய செலாவணி பற்றாக்குறையை மையமாகக் கொண்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. தற்போது நமது அந்நிய செலாவணி இருப்பு 4 பில்லியன்
டொலர்களாகும். ஆண்டின் நடுப்பகுதியில் 1 பில்லியன் டொலர் பத்திரக் கடனை
செலுத்தவேண்டும். அதனை செலுத்திய பின்னர், கருவூலத்தில் 3 பில்லியன் டொலர் இருப்பு மட்டுமே உள்ளது என்றார்.
சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு
சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு
பைஷல் இஸ்மாயில் –
சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களுடன் கணினி உள்ளிட்ட வைத்தியசாலைக்கு தேவையான பல உபகரணங்களை கிழக்கு மாகாண சுதேச
மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் திருமதி எம்.எஸ்.றிஸ்க்காவிடம் கையளித்து வைத்தார்.
இதன்போது, வைத்தியசாலையில் நிலவிவரும் குறைபாடுகள் தொடர்பான விடயங்கள் பற்றிய தகவல்களை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் திருமதி
எம்.எஸ்.றிஸ்க்காவிடம் கேட்டறிந்துகொண்டார். இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ.நபீல், வைத்தியர்களான ஏ.எல்.நஸ்றின் ஜஹான், எம்.ரீ.சாக்கிரா
பானு, சுதேச மருத்துவ திணைக்கள கணக்காளர் என்.பாலநந்தன், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி சி.ரி.நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்
.

பறக்கும் படை வேட்டையில் 164 பேர் கைது
பறக்கும் படை வேட்டையில் 164 பேர் கைது
இலங்கையில் தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயின் கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்
பட்ட 164 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்விதம் கைது செய்ய பட்டவர்கள் முக கவசம் அணியாது சென்றதுடன் ,மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற செயல்களில் கைதாகியுள்ளனர்
காவல்துறை வேடமிட்டு கொள்ளையடித்த திருடர்கள்
காவல்துறை வேடமிட்டு கொள்ளையடித்த திருடர்கள்
இலங்கையில் சிங்கள காவல்துறை அதிகாரிகள் என கூறி வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்
போலீஸ் அதிகாரிகளாக வேடமிட்டு திடீர் சோதனை என்ற பெயரில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது
மேற்படி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
யாழ் மாவட்டத்தில் 10, 603 பேர் சுய தனிமைப்படுத்தலில்
யாழ் மாவட்டத்தில் 10, 603 பேர் சுய தனிமைப்படுத்தலில்
யாழ் மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்து 604 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 603 பேர் சுய
தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர் யாழ் மாவட்டத்தில் இதுவரை 107 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயங்களை குறிப்பிட்டார்
சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்
இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய
நிலையத்தின் பிராதானியும் இராணுவ தளபதியுமாக ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
16 பொலிஸ் அதிகாரிகள் – ஏஎஸ்பி யாக பதவி உயர்வு
16 பொலிஸ் அதிகாரிகள் – ஏஎஸ்பி யாக பதவி உயர்வு
இலங்கையில் எஸ் பியாக பதவி வகித்து வந்த பதினாறு காவல்துறை அதிகாரிகள் ஏஎஸ்பி யாக பதவி உயர்த்த பட்டுள்ளனர்
உடனடி அமுலுக்கு வரும் நிலையில் இந்த பதவி உயர்வு வழங்க பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது
தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 224 பேர் கைது
தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 224 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 224 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் முக கவசம் அணிய மறுத்தமை மற்றும் ,மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது
யாழ் உள்ளிட்ட சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்
யாழ் உள்ளிட்ட சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்
இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேபோல், மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் பின்வருமாறு,
அம்பாறை மாவட்டம்
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
பொத்துவில் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவு
கண்டி மாவட்டம்
கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
சுதுஹும்பொல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின்,
விஹார லேன்
விகார மாவத்தை
கப்பர தேவாலய வீதி
சுதுஹும்பொல கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின்,
அடுக்குமாடி குடியிருப்பு வளாக நடுவீதியின் ஒரு பகுதி,
பொல் வத்த வீதியின் ஒரு பகுதி,
கோவில் வீதியின் ஒரு பகுதி.
கொழும்பு மாவட்டத்தின்,
பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,
தும்போவில வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் கரதியான வத்த கிராமம்.
யாழ்ப்பாணம் மாவட்டம்
பருத்தித்துறை பொலிஸ் பிரிவின்,
வடமராச்சி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்
குருணாகலை மாவட்டம்
ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
கணுகெடிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் கணுகெடிய கிராமம்
நுவரெலியா மாவட்டம்
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
கெடம்புலாவ மத்திய பகுதி
எக்ஸ்பிரஸ் பேர்ள் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அடுத்தவாரம் இழப்பீடு : 420 மில்லியன் நிதி ஒதுக்கீடு
எக்ஸ்பிரஸ் பேர்ள் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அடுத்தவாரம் இழப்பீடு : 420 மில்லியன் நிதி ஒதுக்கீடு
அனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்திற்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம்முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக
தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களுக்காக 420 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால இழப்பீட்டில் மீனவர்களுக்காக 200 மில்லியன் ரூபா பணத்தை கப்பல் நிறுவனம் வழங்கியுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த நிதிக்கு மேலதிகமாக மேலும் 220 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம்முதல்
ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்த 200-க்கும் அதிகமான கடலாமைகளின் உடல்கள் இதுவரை கரையொதுங்கியுள்ளதாகவும் 20 க்கும் அதிகமான
டொல்பின்களும் 6 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கப்பலின் உள்நாட்டு நிறுவன நிர்வாகத்தினர் 7 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் சட்டத்தின் கீழ், தண்டனை சட்டக்கோவையிலுள்ள
சரத்துக்களின் கீழ் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்கு வீடு தென்னங்கன்று வழங்கும்
வீட்டுக்கு வீடு தென்னங்கன்று வழங்கும்
நாடெங்கும் 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் வீட்டுக்கு வீடு தென்னை மரம் வழங்கும் ‘தொரின் தொரட்ட கப்ருக’ தேசிய வேலைத்திட்டத்தில் மட்டகளப்பு மாவட்டத்தில் பின்தங்கிய
கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை
மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தலைமையில் அன்மையில் மட்டகளப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது 250 பேருக்கு தலா இரண்டு தென்னங்;கன்றுகள் வீதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டகளப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் மாவட்ட தென்னை
பயிற்செய்கை சபையின் உதவிப்பிராந்திய முகாமையாளர் கே.ரவிச்சந்திரன் என பலரின் பங்கேற்பில் மட்டகளப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.
81 தனிமைப்படுத்தல் நிலையங்கள்
81 தனிமைப்படுத்தல் நிலையங்கள்
இலங்கையில் 1,548 கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 33 பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள். ஏனைய 1,515 நபர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள். அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகபடியாக
கம்பஹா மாவட்டத்தில் 336 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், கொழும்பு மாவட்டத்தில் 242 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 180 பேரும் பதிவாகியுள்ளனர். மீதி 757 பேர் நாட்டின் ஏனைய
மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் -19 பரவுவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை (11) வரை இலங்கையில் மொத்தம் 273,030 கொவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 165,330 பேர் புத்தாண்டுக்குப் பின்னர் இணங்காணப்பட்டவர்கள்.
இன்று (11) அதிகாலை 0600 மணி வரை 1,804 பேர் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று (11) ஹோட்டல்கள் மற்றும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் 81 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,453 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிகாலை 0600
மணி வரை (கடந்த 24 மணி நேரத்தில்) 653 பேர் 24 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தனிமைப்படுத்தல் நிறைவின் பின் வீடு திரும்பினர்.
ஜூலை (09) ம் திகதி வரை இலங்கையில் கொவிட் 19 வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆகும் அவர்களில் 19 பெண்களும் 14 ஆண்களும் உள்ளடங்குவர்.
இன்று (11) காலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இன்று (11) காலை முதல் கொழும்பு மாவட்டத்தின் தெமட்டகொட பொலிஸ் பிரிவின் ஆராமய
ஒழுங்கை 66 வது தோட்டம், தலங்கம பொலிஸ் பிரிவின் தலாஹேன தெற்கு கிராம சேவகர் பிரிவின் விஜய மாவத்தை ஜயகத் மாவத்தை மற்றும் தலாஹேன வடக்கு கிராம சேவரக் பிரிவின்
ஜயகத் மாவத்தை, சத்சர மாவத்தை, ஒசுரு மாவத்தை, சமனல மாவத்தை மற்றும் தபால் பெட்டிச் சந்திச், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹன்கல கொஸ்கலவத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன
இதுவரையில் 49,042 பேர் கைது – தொடரும் அத்துமீறல்
இதுவரையில் 49,042 பேர் கைது – தொடரும் அத்துமீறல்
மாகாண கட்டுப்பாட்டை மீறியவகையில்பயணிப்பதற்கு முயற்சித்த 205 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6.00 மணியுடன்நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் சட்ட விதிகளை மீறிய 234 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுவரையில் 49,042 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக சிரேஷ்டபிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
7 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை
7 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கொழும்பு ,காலி ,களுத்துறை ,கேகாலை , மாத்தறை ,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய மற்றும் நெலுவ போன்ற பிரதேசங்கள் இதில் அடங்குகின்றன.
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிற்ற, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்த, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, எலபாத்த, எஹெலியகொட
,கஹவத்த, குருவிற்ற, நிவித்திகல, கலவான போன்ற பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சீரற்ற காலநிலையினால் சில பிரதேசங்களில் ஓரளவு வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றது.
கொழும்பு, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.
மின்சாரம் தவிப்பு – 475,000 பேர் பாதிப்பு
மின்சாரம் தவிப்பு – 475,000 பேர் பாதிப்பு
நேற்று இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக 12,000 மின் துண்டிப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனூடாக 475,000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில்-கைக்குண்டு ஒன்று மீட்பு
மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில்-கைக்குண்டு ஒன்று மீட்பு
மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில் குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து குறித்த பகுதியில் நேற்று மாலை பொலிஸார் சென்று கைவிடப்பட்ட
நிலையிலுள்ள கைக்குண்டை சோதனையிட்ட பின்னர் விசேட அதிரடிப்படையினரின் வெடிபொருட்கள் அகற்றும் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டை நீதிமன்ற அனுமதியை பெற்று வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன
பாயும் படை வேட்டை – 234 பேர் கைது
பாயும் படை வேட்டை – 234 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 234 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு
உட்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
மக்களுக்கு நிவாரணம் வழங்க படும் -பசில் முழக்கம்
மக்களுக்கு நிவாரணம் வழங்க படும் -பசில் முழக்கம்
இலங்கையில் நிலவி வரும் நோயின் தொற்றை அடுத்து பொருளாதார ரீதியில் நலிவுற்றுள்ள மக்களுக்கு
நிவாரணம் வழங்க படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ்சா தெரிவித்துள்ளார்
அலிபாவாவும் நாற்பது திருடர்கள் காட்டில் இப்பொழுது மழை அடித்து பொழிகிறது











