Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தங்க நகை-பட்டுச்சேலைகளை கொடுத்து ஓட்டு சேகரிக்கிறார்கள்: சீமான்
தங்க நகை-பட்டுச்சேலைகளை கொடுத்து ஓட்டு சேகரிக்கிறார்கள்: சீமான்
பல இடங்களில் தி.மு.க. வினர் நேரடியாக எங்களோடு மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர் என சீமான் கூறியுள்ளார்.
தங்க நகை-பட்டுச்சேலைகளை கொடுத்து ஓட்டு சேகரிக்கிறார்கள்: சீமான் குற்றச்சாட்டு
சீமான்
நாம் தமிழர் கட்சி ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.
சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு அந்த கட்சி வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் பல தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக 3-வது இடங்களை பிடித்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல்களையும் அந்த கட்சி சந்தித்து உள்ளது. இதில் பல இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைத்து ஊரக பதவிகளுக்கும் போட்டியிடுகிறார்கள். அவர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சீமான் அளித்த பேட்டி வருமாறு:-
நாம் தமிழர் கட்சி நேர்மையாக தேர்தலை சந்திக்கிறது. இதுவரை நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் பணமோ, பரிசு பொருளோ கொடுத்தது இல்லை. மக்களை நம்பி நாங்கள் களம் காண்கிறோம்.
மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனை தேர்தல் முடிவுகள் காட்டி வருகின்றன. எங்கள் வளர்ச்சியை மற்ற அரசியல் கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
பல இடங்களில் உள்ளாட்சி தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டும் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தி.மு.க.வினர் மிரட்டியுள்ளனர்.
இதற்கெல்லாம் நாம் தமிழர் கட்சி தம்பிகள் அஞ்ச மாட்டார்கள். கடந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி பல இடங்களில் வென்று உள்ளது. கிராமங்களிலும் நாங்கள் செல்வாக்கோடு திகழ்கிறோம்.
நாம் தமிழர் கட்சிக்கு தற்போது 102 ஊராட்சி தலைவர்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் இது நாங்கள் பெற்ற வெற்றியாகும். 12 சதவீத ஓட்டுகளை அப்போது வாங்கினோம். இந்த தேர்தலில் அதை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
தேர்தல் முடிவுகளின் போது எங்கள் பலம் என்ன என்பது தெரியவரும். கிராமங்கள் தோறும் மக்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் கோட்பாடுகளை எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்டு வருகிறோம்.
பல இடங்களில் தி.மு.க. வினர் நேரடியாக எங்களோடு மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். அதனை நாம் தமிழர் கட்சியினர் எதிர்கொண்டு தடைகளை தாண்டி தேர்தலை சந்திக்க தயாராகி இருக்கிறார்கள்.
கோப்புபடம்
எங்களை எதிர்த்து வெற்றி பெற முடியாதோ என்கிற அச்சத்தில் அரசியல் கட்சியினர் குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறார்கள்.
கிராமங்களில் பல இடங்களில் தங்க நகைகளையும், பட்டுப்புடவைகளையும் பொதுமக்களுக்கு பரிசாக வழங்கி அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.
ஆனால் நாம் தமிழர் கட்சியினர் கொள்கைகளை கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். மக்கள் நிச்சயம் எங்களை ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சியிலும் நல்லாட்சி தருவோம் என்று கூறி இருக்கிறார்.
உங்களிடம் நாட்டையே கொடுத்து இருக்கிறோம். அதில் நல்லாட்சி தர முடியவில்லை. உள்ளாட்சியிலா தரப்போகிறீர்கள். இதுபற்றி எங்களிடம் நேருக்கு நேர் விவாதிக்க நீங்கள் தயாரா? நாம் தமிழர் கட்சிதான் எதிர்காலத்தில் நல்லாட்சியை தரும்.
இந்த நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியிலும் ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
கோட்டபாயாவுக்கு பேத்தி – கட்டிப்பிடித்து கொஞ்சினார்
கோட்டபாயாவுக்கு பேத்தி – கட்டிப்பிடித்து கொஞ்சினார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டுக்குச் சென்று, இன்றுக்காலை நாடுதிரும்பினார்.
தனது பாரியாருடன் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நியூயோர்க் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற பல்வேறான நிகழ்வுகளில் பங்கேற்றார்.
இந்நிலையில், தன்னுடைய மகனின் மகளையும் (பேத்தி) பார்வையிட்டார். அது தொடர்பிலான புகைப்படத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
தனது பேத்தியான துலன்யாவை முதன்முறையாக சந்தித்ததாக அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்
சகல அரச ,தனியார்துறை சேவைகள் வழமைபோல் இயக்கம்
சகல அரச ,தனியார்துறை சேவைகள் வழமைபோல் இயக்கம்
நாடு திறக்கப்பட்டதையடுத்து இன்றிலிருந்து சகல அரச மற்றும் தனியார்துறை சேவைகள் வழமைபோல் இடம்பெறவுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைவாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவன சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென, அதன் தலைவர் வைத்தியர் சசீந்திர கமகே தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகளைப் பெறுவதற்கு முன்பு அதற்கான முற்பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக, றறற.வெஅi.டம எனும் அதன் உத்தியோகபூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய,
www.ntmi.lk இணையத்தளம் அல்லது கையடக்கத் தொலைபேசி ஊடாக 225 எனும் இலக்கத்தின் ஊடாகவும், 1225 தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் அதற்கான பதிவுகளைமேற்கொள்ள முடியும்.
இதேவேளை ,ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களிலும் இன்று முதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இருப்பினும் ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்படாதென ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கிராம அலுவலர்களால் உறுதிப்படுத்தப்பட்டு, உரிய பிரதேச செயலகத்தில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அல்லது இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் அவசர தேவையின் அடிப்படையில்இ தேசிய அடையாள அட்டைகளைப் பெற விரும்புவோர் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அல்லது காலி மாகாண அலுவலகத்திற்கு வரும் பொருட்டு வாரத்தின் அலுவலக நாட்களில் உரிய பிரதேச செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆட்பதிவு பிரிவின் மூலம் அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கம் மூலம் முற்பதிவு செய்து நாளொன்றை பெறுவது அவசியமாகும் எனவும் ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
பத்தரமுல்ல தலைமை அலுவலகம் 0115 226 126ஃ 0115 226 100
வட மாகாண அலுவலகம் 024 222 7201
கிழக்கு மாகாண அலுவலகம் 065 222 9449
வடமேல் மாகாண அலுவலகம் 037 555 4337ஃ037 222 4337
தென் மாகாண அலுவலகம் 091 222 8348
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வெரஹெர அலுவலகங்கள் மூலமான பொது மக்களுக்கான சேவைகள் கடந்த முதலாம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
பெலிஹுல்ஓய பஹன்துடாவ பிரதேசத்தில் ஆபாச காணொளி ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு 7 வருட ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் குறித்த தம்பதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கு 10,800 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட குறித்த ஆபாச காணொளி கடந்த ஆகஸ்ட் மாதம் குறித்த தம்பதியினால் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மஹரகம மற்றும் எல்பிட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் இவ்வாறு கைது செய்யப்பட்டு கடந்த 16 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் வழக்கினை நேற்றைய தினத்திற்கு (01) ஒத்தி வைத்து குறித்த இருவரும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று குறித்த தம்பதி பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து 7 வருட ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் டக்ளஸ்
இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் டக்ளஸ்
சர்வதேச கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற இலங்கையின் மீன்பிடிக் கலன்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடுகள் மற்றும் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்த முன்வரைபு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா,
கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கடற்றொழில் அமைச்சில் (01) நடைபெற்றது.
தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இலங்கை கடற்றொழிலாளர்களின் நலன்களை பாதுப்பதையும் இலங்கை கடற்றொழில் செயற்பாடுகளை வினைத் திறனுடன் மேற்கொள்வதையும் உறுதிப்படுத்தும் வகையில், குறித்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
பலத்த மழையின் காரணமாக ஜந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி , களுத்துறை , கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மாலை 06 மணிவரை ஏற்புடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு
மன்னாரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மன்னார் – எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் முச்சக்கரவண்டியை சோதனைக்குட்படுத்திய போது, போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் நேற்றிரவு கைது செய்தனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் இன்று காலை திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இதன்போது, அந்நபர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
எருக்கலம்பிட்டி – தர்கா நகர் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் பேருந்து மோதி பெண் பலி
யாழில் பேருந்து மோதி பெண் பலி
யாழ். மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து , பேருந்து நிலைய வளாகத்தினுள் நின்ற வயோதிப பெண்ணொருவரை மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வைத்தியசாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் குறித்த வயோதிப பெண்ணுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் , சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
20 மாதங்களில் ரூ. 125,747 கோடி பணம் அச்சடிப்பு
20 மாதங்களில் ரூ. 125,747 கோடி பணம் அச்சடிப்பு
ஆளும் கோட்டா அரசில் இலங்கை பெரும் பணத்தட்டுபாட்டை சந்தித்து வருகிறது
இதற்கு அமைவாக கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 125,747 கோடி பணம் அச்சடிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
இதுவே இலங்கையின் தற்கால நிதி நெருக்கடியை எடுத்து கடடுவதாக உள்ளது
சுவாமி இலங்கை வருகிறார் – ஆப்பு வைக்க படுமா ..?
சுவாமி இலங்கை வருகிறார் – ஆப்பு வைக்க படுமா ..?
இலங்கை அரசுடன் ஒட்டி உறவாடி வரும் சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கு அவசர பயணம் ஒன்றை மேற் கொள்கிறார்
இவரது இந்த பயணத்தின் பொழுது இலங்கை எதிர் காலத்தில் ஆற்ற வேண்டிய செயல் திட்டங்கள் தொடர்பாக பேச படும் என எதிர்பார்க்க படுகிறது
14 வயது சிறுமியை கற்பழித்த 65 வயது தாத்தா
14 வயது சிறுமியை கற்பழித்த 65 வயது தாத்தா
இலங்கை கவிரவில பாக்றோ தோட்டத்தில் வைத்து 14 வயது மாணவி ஒருவரை அறுபத்தி ஐந்து வயது தாத்தா ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உபடுத்தியுள்ளார்
மேற்படி நபர் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்
சிறுமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே?
இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே?
சர்வதேச சிறுவர் தினமான இன்று இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? என் கேட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் மழைக்கு மத்தியிலும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்
கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 1669 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது
இந்நிலையில் இன்று சர்வதேச சிறுவர் தினத்தில் இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? என் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது குழந்தைகளுக்கு உயிர் வாழும் உரிமை இல்லையா?, இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே?, உங்கள் சிறைக்கூடம் எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடமா?, தமிழ் குழந்தைகள் பயங்கரவாதிகளா?, ஓமந்தையில்
இராணுவத்திடம் கையளித்த உறவுகள் எங்கே?, உறவுகள் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும், எமது உறவுகளை எங்களிடம் தா, சர்வதேசமே பதில் சொல், சின்னஞ்சிறார்களும் பயங்கரவாதிகளா?, நட்ட ஈடும் வேண்டாம் மரண சான்றிதழும் வேண்டாம், பயங்கரவாத தடைச்
சட்டத்தை நீக்கு, வட்டுவாகலில் கையளித்த எமது உறவுகள் எங்கே?, விடுதலை செய் விடுதலை செய் எமது உறவுகளை விடுதலை செய், omp வேண்டாம் உள்ளக விசாரணை வேண்டாம்,
கடத்தாதே கடத்தாதே காலத்தை கடத்தாதே, உள்ளக பொறிமுறை சர்வதேசத்துக்கான கண்துடைப்பே, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டும், போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம்
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம்
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது
பல்வேறு பட்ட விடயங்களை சுட்டி காட்டி இந்த அவசர நிதியை இலங்கை கடனாக பெறுகிறது
கடந்த ஆட்சியில் பல கோடி ரூபாய்களை சுருட்டியது மகிந்த குடும்பம், அதே போல தற்பொழுதும் பெரும் பணத்தை ஆளும் அரசு கொள்ளையடித்து வருவதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது
ஆயுதங்களுடன் 5 பேர் கைது
ஆயுதங்களுடன் 5 பேர் கைது
கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்கள் நிட்டம்புவ, அத்தனகல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர்களை கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
21, 22 மற்றும் 24 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகளை கொன்ற தந்தை
மகளை கொன்ற தந்தை
புல் வெட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் நேற்று (27) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த குழந்தை குறித்த ட்ரக்டர் இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளது.
பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனர்த்தம் தொடர்பில் இயந்திரத்தை செலுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கை வந்தடைந்த ஒரு தொகுதி பைசர் தடுப்பூசிகள்
இலங்கை வந்தடைந்த ஒரு தொகுதி பைசர் தடுப்பூசிகள்
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து அதனை தடுத்திட பைசர் தடுப்பூசிகள் ஒரு தொடுத்தி வந்தடைந்துள்ளன
இந்த ஊசிகள் கட்டம் கட்டமாக மக்களுக்கு செலுத்த படும் என அறிவிக்க பட்டுள்ளது
இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் – அபாய எச்சரிக்கை
இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் – அபாய எச்சரிக்கை
இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது ,நாடு முழுதாக முடக்க
பட்டுள்ள நிலையில் மக்கள் தொழில் வாய்ப்பு இன்றி உள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விரைந்து வரும் நாட்களில் இந்த நிலைகளை அவதானிக்க முடியும் என எதிர்வு கூற பட்டுள்ளது ,ஆனால் அரசோ அவ்வாறு ஏற்படாது என அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட்ட தக்கது
இலங்கையில் பிரிட்டன் நபர் – கொட்டலில் சடலமாக மீட்பு
இலங்கையில் பிரிட்டன் நபர் – கொட்டலில் சடலமாக மீட்பு
பிரித்தானிய நாட்டு குடிமகன் ஒருவர் இலங்கை கொட்டல் ஒன்றில் தங்கி இருந்த வேளை சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் சம்பவ தினம் அன்று முதல் தினம் விருந்து நிகழ்வு ஒன்றிற்கு கலந்து விட்டு கொட்டல் திரும்பிய நிலையில் இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார்
குறித்த நபரது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர்
சம்பிக்க ரணவக்க CID-இல் முன்னிலை
சம்பிக்க ரணவக்க CID-இல் முன்னிலை
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குற்றப்புலானாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்கு வருமாறு குற்றப்புலானாய்வு பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.
துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி – ஒருவர் காயம்
துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி – ஒருவர் காயம்
மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (23) மாலை திருப்பனே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முரியாகல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
60 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மூவர் குறித்த பகுதியால் நடந்து சென்ற சந்தர்பத்தில் இருவர் மீது துப்பாக்கி சுடப்பட்டுள்ளது.
இதனை ஊர்மக்களுக்கு அறியத்தருவதற்காக ஓடி சென்ற மூன்றாவது நபர் மீது வேறு ஒரு கட்டுத் துப்பாக்கி வெடித்து அவரும் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







