Posted in இலங்கை செய்திகள்

நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க பணிந்து செல்ல வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை

நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க பணிந்து செல்ல வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை

நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணிந்து செல்ல வேண்டிய

தேவை இலங்கைக்கு இல்லை என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் 07 ஆம் திகதி நடாத்தப்பட்ட பொருளாதார செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடனை திருப்பி செலுத்த எந்தவொரு விடயத்திலும் தங்கியிருக்க வேண்டிய தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தனியார் நிறுவனங்களின் கடன் சுமை குறித்து ஆளுநர் குறித்து தெரிவிக்கையில்,

பேச்சு வார்த்தை நடாத்jp, வட்டி விகிதங்களை குறைக்க, வெளிநாட்டு கடன் மற்றும் உள்நாட்டு கடன் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் கடன் சுமைகளை கூடுமானவரையில் குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம்.

இலங்கை கடன்களை மட்டும் பெற்றுக் கொள்வதிலிருந்து விலகி கடன் இல்லாதா வரவுகளை

உருவாக்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

    60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

    60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்ட பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள்

    மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக

    மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே. கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

    மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை பிரிவிற்குட்பட்ட மண்முனை வடக்கு பொது

    சுகாதார பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட பைஸர் தடுப்பூசிகளில் முன்னுரிமை

    அடிப்படையில் 60 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, 7 தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில் இடம்பெறுகின்றன.

    இதற்கமைவாக பாலமீன்மடு, சின்னஊறணி, கருவப்பங்கேணி, இருதயபுரம் கிழக்கு ஆகிய

    நான்கு பொதுசுகாதார பிரிவுகளில் நேற்று (08) பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    பள்ளத்தில் வீழ்ந்த கார்

    பள்ளத்தில் வீழ்ந்த கார்

    தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இன்று (09) அதிகாலை ஒரு

    மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

    நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று நுவரெலியா – அட்டன்

    பிரதான வீதியில் சென்.கிளயார் பகுதியில் வீதியை விட்டு விலகி குறித்த கார் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

    மேற்படி காரில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    சாரதி மதுபானம் அருந்தியிருந்ததாகவும், இதனால் அவரின் கவனயீனம் காரணமாகவே

    இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

    இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      காதலியை கடத்தி சென்ற காதலன் – காதல் செய்த கோலம்

      காதலியை கடத்தி சென்ற காதலன் – காதல் செய்த கோலம்

      தருமபுரம் வட்டக்கச்சிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

      டிப்பர் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு விலகி கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

      விபத்தில் படுகாயமடைந்த டிப்பர் வாகனத்தில் பயணித்த இளைஞரும் பெண்ணும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

      உயிரிழந்தவர் நாகேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

      இளைஞன் ஒருவர் தனது காதலியை கடத்திச் சென்று டிப்பர் வாகனத்தில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை அடுத்து டிப்பர் பாரவூர்தியின் சாரதி உட்பட பலர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

      சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு – கொலையா ..?

        ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு – கொலையா ..?

        நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம்

        இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

        நுவரெலியா, ருவான் எலியா, பன்சல வீதியைச் சேர்ந்த 78 வயதுடைய புஞ்சிபண்டாரகே மெனிகாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

        தனது மகள் மற்றும் மருமகன்களுடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இரவு உறங்கிக்

        கொண்டிருந்த தாய் காலையில் பார்க்கும் பொழுது வீட்டில் இல்லை என உயிரிழந்த பெண்ணின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

        இவ்வாறு வீட்டிற்கு அருகில் உள்ள பிளாக்பூல் ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தமைக்கான

        காரணம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

        சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

        நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          ரயிலில் மோதுண்டு பலியான குடும்பம்

          ரயிலில் மோதுண்டு பலியான குடும்பம்

          வட்டவளை- ரொ​சல்ல ரயில் நிலையத்துக்கு அண்மையில், ரயிலுடன் மோதுண்டதில், தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளனர்.

          பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உட​ரட்ட மெனிக்கே ரயில் மோதுண்டே இம்மூவரும் மரணித்துள்ளார்.

          அவர்கள், ரயிலுக்கு பாய்ந்துள்ளனரா? என்பது தொடர்பிலும் விசாரணைகள்

          முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

          இவ்வாறு உயிரிழந்த மூவரும் மஸ்கெலியா- சாமிமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

          குறித்த மூவரும் உயிரழப்பதற்கு முன்னர், ரொசல்ல ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஒருவரிடம்,

          ரயில் வரும் நேரம் குறித்து வினவி விட்டு, ரொசல்ல ரயில் நிலையத்திலிருந்து வட்டவளை ரயில் நிலையம் நோக்கி நடந்துள்ளனர்.

          உயிரிழந்த மூவரில் ஒருவர் 40 வயதுடைய சாந்தகுமார் ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

            Posted in இலங்கை செய்திகள்

            சிந்து சிறுமிகளை காணவில்லை – தேடும் போலீஸ்

            வத்தேகம – மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுமிகள் காணாமல்

            போயுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

            இந்த சிறுமிகள் சிறுவர்  இல்லத்திற்கு அருகிலுள்ள கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க சென்ற

            நிலையில், காணாமல் போயுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

            காணாமல் போனவர்களில் ஒருவர் நாவலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக தமக்கு

            தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருமாறு பாதுகாவலருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

            மற்ற நான்கு சிறுமிகளும் 16-18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

            இந்த சம்பவத்தில் நேற்று மதியம் வரை சிறுமிகள் தொடர்பில் எந்த தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் குறிப்பட்டுள்ளனர். 

              Posted in இலங்கை செய்திகள்

              ஒமிக்ரோன் வைரஸ் வகையின் 32 திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

              ஒமிக்ரோன் வைரஸ் வகையின் 32 திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

              டெல்டா மற்றும் அல்பா வைரஸ் வகைகளின் பிறழ்வுகளின் எண்ணிக்கையை விடவும் ஒமிக்ரோன்

              பிறழ்வின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்

              வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமக தெரிவித்துள்ளார்.


              சமூகத்தில் ஓமிக்ரோன் திரிபின் பரவல் மற்றும் தனிநபர் மீதான அதன் தாக்கம் குறித்தும்

              உறுதியான அறிக்கையை வெளியிட போதுமான தரவுகள் இன்னும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

                Posted in இலங்கை செய்திகள்

                பத்து ஆயிரம் பேருக்கு வேலை

                பத்து ஆயிரம் பேருக்கு வேலை

                க.பொ.த சாதாரணதரத்தைப் பூர்த்தி செய்த ஒரு இலட்சம் மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு

                வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி, நுண் நிதி, சுயதொழில் மற்றும்

                தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

                நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஷெஹான் சேமசிங்க இதை தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்,

                2015 – 2019 காலப்பகுதியில் அரச சேவைக்கு வழங்கப்பட்ட மொத்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 22,145 ஆகும்.

                ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர்

                சேவைக்கு மாத்திரம் 60,000 பட்டதாரி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

                மேலும், க.பொ.த சாதாரண தரம் வரை படித்த அல்லது க.பொ.த சாதாரண தர பரீட்சையில்

                சித்தியடையாத 100,000 இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம்

                ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

                  Posted in இலங்கை செய்திகள்

                  கிளிநொச்சியில் வெடி பொருட்கள் மீட்பு

                  கிளிநொச்சியில் வெடி பொருட்கள் மீட்பு

                  கிளிநொச்சி, உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து

                  பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

                  கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எறிகணை

                  ஒன்றினை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினல் வெட்டியபோது குறித்த எறிகணை வெடித்ததில் 25

                  வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும்

                  படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .

                  இந்த நிலையில் ஏற்கனவே சம்பவம் இடம்பெற்ற வீட்டில் ஒரு சில வெடி பொருட்கள் அன்றைய

                  தினம் அடையாளம் காணப்பட்டன தொடர்ந்து விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும்

                  மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வீட்டிலிருந்தும் வீட்டு வளவுக்குள் இருந்தும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே நியமனம்

                    இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே நியமனம்

                    மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைத் தளபதியாக இன்று (7) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.


                    பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி

                    ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரைகளுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய

                    ராஜபக்ஷவினால் மேஜர் ஜெனரல் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.


                    கஜபா படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் விகும் லியனகே, இந்த புதிய நியமனத்திற்கு முன்னர்

                    இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றினார்.

                    இராணுவத்தின் 58 ஆவது தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவுக்குப் பின்னர் அவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்

                      Posted in இலங்கை செய்திகள்

                      அடுத்த வருடம் பிரதமர் பதவியில் மாற்றம்

                      அடுத்த வருடம் பிரதமர் பதவியில் மாற்றம்

                      எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித

                      பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

                      இன்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை

                      அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

                      இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இதில் எந்தவித அடிப்படையும் இல்லை இது

                      உண்மைக்கு புறம்பான கூற்று என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன்

                        பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன்

                        பிரியந்த குமார தியவடனவின் இழப்பால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மனைவி மற்றும்

                        பிள்ளைகளின் நலன் கருதி மனிதநேய அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின் மூலம் 2.5 மில்லியன்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


                        இது தொடர்பாக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                        பிரியந்த குமார தியவடனவின் இழப்பு குறித்து அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

                        இன்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

                        நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பிரியந்த குமார தியவடனவின் இழப்பிற்கு தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளர் என்றும் ரமேஷ் பத்திரண மேலும் குறிப்பிட்டார்.

                        2.5 மில்லியன்களை வழங்குவது குறித்து 06.12.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

                        1. பாகிஸ்தான் சியல்கொட் பிரதேசத்தில் மனிதநேயமற்ற வகையில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடன அவர்களுக்கான பணத்தொகை வழங்கல்

                        2. பாகிஸ்தான் சியல்கொட் பிரதேசத்தின் தொழிற்சாலையொன்றில் முகாமையாளராக பணிபுரிந்து வந்த பிரியந்த குமார தியவடன அவர்கள் 2021 திசம்பர் மாதம் 03 ஆம் திகதி கொலைகாரக்
                        3. கும்பலால் மனிதநேயமற்ற வகையில் கொலை செய்யப்பட்டுள்ளார். புலம்பெயர் பணியாளராக 11 வருடங்களுக்கு மேலாக அவர் இலங்கைப் பொருளாதாரத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பைக்
                        4. கருத்தில் கொண்டு, அவருடைய இழப்பால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மனைவி
                        5. மற்றும் பிள்ளைகளின் நலன் கருதி மனிதநேய அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப்
                        6. பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின் மூலம் 2.5 மில்லியன்களை வழங்குவதற்காக தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
                          Posted in இலங்கை செய்திகள்

                          வவுனியாவுக்கு ஆபத்து -அச்சத்தில் மக்கள்

                          வவுனியாவின் பல்வேறு பகுதிகளில், வெளிமாவட்டத்தில் இருந்து வந்து வர்த்தக நடவடிக்கையில்

                          ஈடுபட்டு வருவதுடன், கொரோனா விதிமுறைகளை அனைத்தும் மீறப்பட்டு வருகின்றன. இதனால், இங்கு தொற்றுகள் அதிகரிக்கும் நிலைமைகள் மீண்டும் உருவாகியுள்ளன.

                          இந்த நிலையில், இந்நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்தி, மீண்டும் அதிகரிக்கும்

                          தொற்றுக்களைத் தடுத்து நிறுத்துவதற்குரிய ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை.

                          நகரசபையின் கனவத்துக்கு கொண்டு செல்லப்பட்டும், எவ்விதமான தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

                          வவுனியாவுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வரும் வர்த்தகர்கள்,தமது வர்த்தக

                          நடவடிக்கைகளை ரயில் நிலையம், இலுப்பையடி போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

                          வவுனியாவை தளமாகக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வர்த்தகர்கள்

                          நகர சபையினருக்கு வரி உட்பட வர்த்தக நிலையங்கள், ஊழியர்களுக்கு பெரும் தொகைப்

                          பணங்களை செலவிட்டு, வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

                          அத்துடன், வெளிமாவட்டத்திலிருந்து வருபவர்களினால் மீண்டும் தொற்றுக்கள் அதிகரிக்கும்

                          நிலைமைகளும் மீள உருவாகியுள்ளது . இதனால், நகரில் மீண்டும் ஒரு முடக்கம் ஏற்படும்

                          நிலைமைகளும் காணப்படுகின்றனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

                            Posted in இலங்கை செய்திகள்

                            பாகிஸ்தானில் எரித்துக்கொலை செய்யப்பட்டவர் சடலம் இலங்கை வருகை

                            பாகிஸ்தானில் எரித்துக்கொலை செய்யப்பட்டவர் சடலம் இலங்கை வருகை

                            பாகிஸ்தானில் நிறுவனம் ஒன்றில் மனேஜராக பணிபுரிந்த நபர் ஒருவர் 120 க்கு மேற்பட்ட நபர்கள்

                            ஒன்று கூடி எரித்து கொன்றனர்
                            மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ,

                            இவ்வாறு எரித்து கொன்றவரது சடலம் இன்று இலங்கைக்கு எடுத்து செல்ல படுகிறது ,இலங்கை

                            எயார் லங்கா விமானத்தின் ஊடக இந்த் சடலம் எடுத்து செல்ல படுவதாக தெரிவிக்க படுகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              மிளகாய்த்தூள் வீசி சங்கிலி அறுப்பு – துணிகரக்கொள்ளை

                              மிளகாய்த்தூள் வீசி சங்கிலி அறுப்பு – துணிகரக்கொள்ளை

                              இலங்கை பாசறை பகுதியில் தந்தது மற்றும் உறவினருடன் சென்று கொண்டிருந்த இளம் பெண்

                              ஒருவரின் தங்க சங்கிலி அறுத்து செல்ல பட்டுள்ளது

                              இவர்களை வழிமறித்த மர்ம திருடர்கள் கண்களுக்கு மிளகாய் தூளை வீசிவிட்டு இந்த் சங்கிலியை

                              திருடி சென்றுள்ள செயல்
                              பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                குண்டு வெடித்து இருவர் மரணம் – கிளிநொச்சியில் துயரம்

                                குண்டு வெடித்து இருவர் மரணம் – கிளிநொச்சியில் துயரம்

                                கிளிநொச்சியில் வீடொன்றில் காணப்பட்ட எறிகணை ஒன்றை இரு சகோதரர்கள் இணைந்து

                                வெட்டியுள்ளனர் ,அப்பொழுது அந்த குண்டு வெடித்து சிதறியதில்


                                சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி

                                மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  3வவுனியா வாலிபர்கள் முல்லைத்தீவு கடலில் சடலமாக மீட்பு

                                  3 வவுனியா வாலிபர்கள் முல்லைத்தீவு கடலில் சடலமாக மீட்பு

                                  வவுனியாவில் இருந்து முல்லைதீவிவு கடலில் குளிக்க சென்ற மூன்று வாலிபர்கள் நீரில் அடித்து

                                  செல்ல பட்ட நிலையில் தற்போது சடலமாக மீட்க பட்டுள்ளனர்

                                  காணமல் போயிருந்த இவர்களை தேடும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டனர் ,தற்போது சடலமாக

                                  மீட்க பட்டுள்ள நிலையில் உறவுகள் கண்ணீரில் உறைந்துள்ளனர்

                                  விழிப்புணர்வு அற்று நமது மக்கள் இவ்விதம் செல்வதும் ,இறந்த நிலையில் கடலில் மிதப்பதும்

                                  தொடர் துயர நிகழ்வாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    கொரனோ தொற்று 5 லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரிப்பு

                                    கொரனோ தொற்று 5 லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரிப்பு

                                    இலங்கையில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.

                                    மேலும் 746 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று பதிவான இந்தத்

                                    தொற்றாளர்களுடன் இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின்

                                    எண்ணிக்கை ஐந்து லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.Covid TOTALஇதேவேளை,

                                    கொவிட் வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த மேலும் 316 பேர் முழுமையாகக்

                                    குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். இதன்படி, முழுமையாகக் குணமடைந்தவர்களின்

                                    எண்ணிக்கை ஐந்து லட்சத்து 42 ஆயிரத்து 326 ஆகும். மேலும் 21 கொவிட் மரணங்களை சுகாதார

                                    சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தினார். இதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 461 ஆகும்.

                                    இதுவரை உலகம் முழுவதிலும் பதிவாகியுள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 கோடி

                                    61 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 52 லட்சத்து 70 ஆயிரத்திற்கும்

                                    அதிகமாகும். நேற்றைய தினம் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து

                                    பத்தாயிரத்திற்கும் அதிகமாகும். இவர்களில் இரண்டு லட்சத்து 74 ஆயிரம் பேர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

                                    இதேவேளை, 13 லட்சத்து 43 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      விலங்குகள் ஊடாக புதிய கொரனோ பரவல்

                                      விலங்குகள் ஊடாக புதிய கொரனோ பரவல்

                                      உலகில் மனிதர்கள் ஊடக விலங்குகளுக்கு கொரனோ நோயானது பரவி வருகிறது ,மேற்படி

                                      நோயினால் பாதிக்க பட்ட விலங்குகளிடம் இருந்து புதியவகை கொரனோ நோயானது பரவி வரும்

                                      அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                      இலங்கையில் சிங்கம் ,பூனை ,நாய்களுக்கு இந்த நோயானது பரவி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது