Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
விவசாயத் துறையை நவீனமயப்படுத்த கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு
விவசாயத் துறையை நவீனமயப்படுத்த கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு
இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு
வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று (16) நடைபெற்ற, அமெரிக்க – இலங்கை ஃபுல்பிரைட் (Fulbright) ஆணைக்குழுவின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உணவைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான வளம் இல்லாத தீவு நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கப்பூர்
முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அதற்குத் தேவையான காணிகளை
அடையாளங்கண்டு விவசாயத்தை நவீனமயப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நவீன விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் (TRI) இணைப்பதன் மூலம் இலங்கையின் விவசாய
ஆராய்ச்சித் துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிய பல அமெரிக்க நிறுவனங்களின் ஆதரவைப் பெற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதில் பேராசிரியர் பிரதீபா பண்டாரநாயக்க போன்ற ஃபுல்பிரைட் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியமானது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பத்து வருடங்களில் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாபெரும் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும்,
ஃபுல்பிரைட் புலமைப்பரிசில்கள் மற்றும் உதவிகள் மூலம் இலங்கைக்கு வளவாளர்களை அழைத்துவருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,
ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக இலங்கை மற்றும் அமெரிக்காவிலிருந்து பல்வேறு துறைகளைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவு மற்றும் தொழிற்திறமையுள்ள சுமார் 3000 புலமைப்பரிசில் பெற்றுள்ளனர்.
அவர்கள் இலங்கையின் கல்வித் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்கள் எமது சமூகத்தையும் போசித்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முறையான கல்விப் பரிமாற்றத்துக்கு 70 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
அமெரிக்க மிஷனரிகளின் யாழ்ப்பாண வருகையுடன் இது ஆரம்பமானது. இரண்டாவது, கேர்ணல் ஹென்றி ஸ்டீல் ஒல்காட் இலங்கைக்கு வந்தபோது.
ஜனாதிபதி வூட்ரோ வில்சன் (Woodrow Wilson) காலனித்துவ நாடுகளுக்கு சுதந்திரத்தை உறுதிசெய்து 14 விடயங்களை அறிவித்தமை 20 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற மற்றொரு முக்கிய அம்சமாகும்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் கல்வி மற்றும் கலாசாரம் என்பவற்றுக்கு வரையறுக்கப்படவில்லை. பொருளாதார உதவிகள், இரு நாடுகளுக்கும் சமமான நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல்
பிரச்சினைகள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் இந்த உறவு வியாபித்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சன்ங் மற்றும் அமெரிக்காவின் இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சந்தர்ஷி குணவர்தன ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, வயம்ப பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உதித் ஜயசிங்க,
ஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே மற்றும் ருஹுனு பல்கலைக்கழக
உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன ஆகியோர் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இராணுவத்தால் இருவர் சுட்டு கொலை
இராணுவத்தால் இருவர் சுட்டு கொலை
மினுவாங்கொடை, பொல்வத்த பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், தற்போது வெளிநாட்டில் உள்ள குற்றவாளியான உரகஹா இந்திக்கவின் சகாக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் சிகிச்சைக்காக மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொத்தல பிரதேசத்தை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தால் இருவர் சுட்டு கொலை
இவ்வாறு உயிரிழந்தவர்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் 4 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து T-56 ரக துப்பாக்கி, போர 12 வெடிமருந்து துப்பாக்கி மற்றும் ரம்போ ரக கத்தி ஆகியவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் தலைமையக முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி கிழக்கின் ஆளுநரினால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி கிழக்கின் ஆளுநரினால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தகவல்கள் முகாமைத்துவ (IMS) தரவுத்தளம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பனம்
செய்து வைக்கும் நிகழ்வு நேற்று (17) மாலை மாகாண பிரதிப் பிரதம செயலக கூட்ட மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் (திருமதி) கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது, கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நாகராஜா தனஞ்ஜெயனினால், தகவல்கள் முகாமைத்துவ (IMS) தரவுத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்ட நோக்கம் பற்றியும்,
தரவுத்தளத்தில் எவ்வாறு உள்நுழைவது மற்றும் பதிவுகளை எவ்வாறு பதிவிடுவது பற்றிய முழுமையான தகவல்களை அதிதி உள்ளிட்ட மாகாண
அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்களுக்கு மிக விரிவாக எடுத்துரைத்தார்.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி கிழக்கின் ஆளுநரினால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், விவசாய அமைச்சின்
செயலாளர் எல்.கே.ஜி.முத்துபண்டா, பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஏ.மன்சூர், பிரதிப் பிரதம செயலாளர் (ஆளனி மற்றும் பயிற்சி) திருமதி ஆர்.யூ.ஜெலீல், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) என்.தமிழ்ச்செல்வன்
, பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) எஸ்.குலதீபன் உள்ளிட்ட மாகாண திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் தகவல்கள்
முகாமைத்துவ முறைமையில் (IMS) தரவுத்தளத்தில் கிராம மற்றும் மாதர் கிராம
அபிவிருத்திச் சங்கத் தரவுகளை பதிவேற்றம் செய்ததில் மாகாணத்தில் முதல் 10
இடங்களைப் பெற்றுக் கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்கு ஆளுநர் சான்றிதழ் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது
அபு அலா –
காவல்துறையை தாக்கிய 6 பெண்கள் கைது
காவல்துறையை தாக்கிய 6 பெண்கள் கைது
அநுராதபுரம், புபுதுபுர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி
அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்று (16) புபுதுபுர பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 14 கிராம் 220
மில்லிகிராம் ஹெரோயினுடன் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல தயாரான போது, அவ்விடத்திற்கு வந்த சந்தேக நபர்களின்
காவல்துறையை தாக்கிய 6 பெண்கள் கைது
உறவினர்கள் 6 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்களை கற்களால் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, சட்டவிரோதமான ஒன்று கூடியமை மற்றும் கற்களால் தாக்கி காயங்களை
ஏற்படுத்திய குற்றங்களுக்காக குறித்த ஆறு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (17) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை
பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை
பொத்துவில் பிரதேசத்தில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை செய்த நபர் ஒருவருக்கு பொத்துவில் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மலீக் இதை தெரிவித்தார்.
பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை செய்வதாக புதன்கிழமை (16) பொது மக்களால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி எம்.எஸ். அப்துல் சமட் தலைமையிலான பொதுச் சுகாதார
பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை
பரிசோதகர்கள் குழுவினர் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பழுதடைந்த மாட்டிறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த இறைச்சியை கைப்பற்றியதாக தெரிவித்தார்.
பாவனைக்குதவாத மாட்டிறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கெதிராக பொத்துவில் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டதையடுத்து நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய்
அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு கைப்பற்றப்பட்ட மாட்டிறையும் அழித்ததாக தெரிவித்தார் .
யாழில் அதிக விலையில் பொருட்கள் விற்ற 61 கடைகளுக்கு ஆப்பு
யாழில் அதிக விலையில் பொருட்கள் விற்ற 61 கடைகளுக்கு ஆப்பு
யாழ்ப்பாணத்தில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரால் 61 வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த மாதம் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்
செய்ததில், 14 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி விஜிதரன் தெரிவித்துள்ளார்.
பொருட்களுக்கான சந்தை விலையினை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையினைமீறி பொருட்களை விற்றமை, ஏமாற்றும் நோக்கோடு
பண்டத்தின் மீது பொறிக்கபட்ட விலையினை மாற்றி விற்பனை செய்தமை, நிறை குறைவாக பாண் விற்பனை செய்தமை மற்றும் உற்பத்தி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின்
வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளார் .
இந்தியா மீனவர்கள் 14 பேர் கைது
இந்தியா மீனவர்கள் 14 பேர் கைது
யாழ்ப்பாணம் வெத்திலை கேணி பகுதியில் வைத்து இந்தியா மீனவர்கள் 14 பேர் சிங்கள கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்க பட்டுள்ள நிலையில் ,நீதிமன்றில் முன்னிலை படுத்தும் நடவாடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
காவல்துறை சுற்றிவளைப்பு பலர் கைது
காவல்துறை சுற்றிவளைப்பு பலர் கைது
கல்கிஸை, படோவிடவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 9 பேர் மற்றும் ஏனைய 14 சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக
ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
வவவுனியா கந்தன் குள காட்டு பகுதியில் இருந்து 48 வயதுடைய ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
வீடொன்றை பராமரிக்க வவுனியாவில் தங்கி இருந்து வீட்டு வேலைகளை கண்காணித்து வந்த ,யாழ்பாணத்தை சேர்ந்தவரே கந்தன் குள பகுதியில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இலங்கையில் தொடர்ந்து இவ்விதம் காடுகளில் சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை ,மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
காதலியை கொன்று தோட்டத்தில் புதைத்த காதலன்
காதலியை கொன்று தோட்டத்தில் புதைத்த காதலன்
இலங்கை காலை வதூரம்போற் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் தன்னோடு வசித்த 41 வசித்து பெண்ணை கொன்று தாம் வசித்த அதே தோட்ட பகுதியில் புதைத்துள்ளார் .
காதலன் காதலிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் ,மேற்படி விடயம் அம்பலமான நிலையில் ,சடலம் தோண்டி எடுக்க பட்டு மரண விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளது .
இலங்கையில் இவ்விதமான கொடூர சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
கூட்டமைப்புக்குள் மோதல் சம்பந்தன் வீட்டில் செருப்படி
கூட்டமைப்புக்குள் மோதல் சம்பந்தன் வீட்டில் செருப்படி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கொழும்பு இல்லத்தில் தமிழ் கட்சிகள் கூட்டம் இடம்பெற்றது .இதில் தமிழரசு கட்சியை தவிர வேறு எந்த பங்காளி கட்சிகளும் கலந்து கொள்ளவில்லை .
சுமந்திரன் ,சம்பந்தன் செயல்பாடு காரணமாக கூட்டமைப்பிற்குள் பெரும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது .
இந்த நெருக்கடி காரணமாக சம்பந்தனுக்கு அவரது வீட்டில் வைத்து சாட்டை அடி வழங்க பட்டுள்ளது .
கூட்டமைப்பின் முக்கிய எம்பிக்கள் பலர் சுமந்திரன் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ,இந்த செருப்படி சம்பந்தருக்கு இடம்பெற்றுள்ளது .
எதிர் வரும் தேர்தலில் சம்பந்தன் சுமந்திரன், மக்களினால் தோற்கடிக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது .
ராஜீவ் கொலையில் விடுவிக்க பட்ட நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தல்
ராஜீவ் கொலையில் விடுவிக்க பட்ட நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தல்
இந்தியாவில் ராஜீவ் கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்க பட்டு வதைக்க பட்டவர்கள் நீதிமன்றினால் விடுவிக்க பட்டனர் .
இவ்வாறு விடுவிக்க பட்ட இலங்கையை சேர்ந்த நால்வரையும் ,இலங்கைக்கு நாடு கடத்தும் படி இந்திய உள்துறை அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது .
இலங்கைக்கு இவர்கள் சென்றாக அங்கு இவர்கள் புலிகள் என்ற போர்வையில் சிங்கள படைகளினால் சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கையில் 634 பொருட்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் 634 பொருட்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் 634 பொருட்களின் விலைகள் மீளவும் அதிகரிக்க பட்டுள்ளன .புதிய வரவு செலவு அறிக்கையின் பிரகாரம் இந்த விலை அதிகரிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து அதிகரித்து செல்லும் இந்த விலை வாசிகள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுவதால் மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் .
கவிழ்ந்த வான் பெண் மரணம் 11 பேர் காயம்
கவிழ்ந்த வான் பெண் மரணம் 11 பேர் காயம்
கல்முல்ல பகுதியில் வான் ஒன்று விபத்தில் சிக்கி கவிழ்ந்ததில் ,அதில் பயணித்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
மகனை வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு கட்டுநாயக்காவில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த பொழுதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சாரதி நித்திரை துக்கத்தினால் ,அவரது கட்டு பாட்டை இழந்த வான் விபத்தில் சிக்கியது .இதன் பொழுதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .
காதலியை துண்டு துண்டாக வெட்டி வீசிய காதலன்
காதலியை துண்டு துண்டாக வெட்டி வீசிய காதலன்
இந்தியா டில்லி பகுதியில் காதல் தகராறு காரணமாக ,காதலியை துண்டு துண்டாக வெட்டி வீசிய காதலன் சிறை பிடிக்க பட்டார் .
நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பொழுது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது ,அதன் பின்னர் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர் .
தன்னை திருமணம் முடிக்கும் படி காதலி வலியுறுத்தி வந்துள்ளார் .அதனால் எழுந்த சண்டை காரணமாக ,காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் .
கோபத்தில் காதலியை கொலை செய்த பின்னர் செய்வதறியாது திணறிய காதலன் ,காதலியின் உடலை துண்டு துண்டுகளாக வெட்டி குளிர் சாதன பெட்டியில் வைத்து ,இரவு நேரங்களில் பல பகுதிகளுக்கு சென்று உடலின் துண்டுகளை வீசியுள்ளார் .
காதலியின் தோழி ஒருவர் தந்தையை தொடர்பு கொண்டு இரண்டு மாதமாக மகளின் தொலைபேசி செயல் இழந்துள்ளது, எதாவது தெரியுமா என வினவிய பொழுதே, தந்தை காவல்துறையில் மகளை காணவில்லை என்வும் ,குறித்த நபருடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார் .
இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணைகளில் ,இந்த கொலை சம்பவம் அம்பலமாகியுள்ளது .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மட்டக்களப்பில் மூவர் தூக்கில் தொங்கி மரணம்
மட்டக்களப்பில் மூவர் தூக்கில் தொங்கி மரணம்
மட்டக்களப்பில் கடந்த 48 மணித்தியாலத்தில் மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர்களில் , ஒரு பாடசாலை மாணவியும் உள்ளடங்கும் என கண்டறிய பட்டுள்ளது .
இவை கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
200 வருட வேம்பு சரிந்து முறிந்து வீழ்ந்து உடைந்த வீடுகள்
200 வருட வேம்பு சரிந்து முறிந்து வீழ்ந்து உடைந்த வீடுகள்
யாழ்ப்பாணம் கச்சரிக்கு அருகில் நிலைத்து செழிப்பு தந்த ,200 வருட பழமை வாய்ந்த வேம்பு மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது .
இந்த வேம்பு மரம் சரிந்து வீழ்ந்ததில் அருகில் உள்ள வீட்டு மதில்கள் உடைந்தன .
எனினும் உயி சேதங்கள் ஏற்படவில்லை .
இதனால் வீதி போக்குவரத்தில் சாற்று நெரிசல் ஏற்பட்டது .
15 வயது சிறுமியை காணாவில்லை தேடும் பொலிஸ்
15 வயது சிறுமியை காணாவில்லை தேடும் பொலிஸ்
இலங்கை கண்டி புஸ்ஸலாவவை பகுதியில் 15 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளார் .
கடந்த 30 ஆம் திகதி முதல் இவர் காணாமல் போயுள்ளார் .
ஒரே ஒரு மகளான இவர் காணாமல் போயுள்ளதால் பெற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
காணாமல் போன சிறுமியை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
யாழில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு
யாழில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ். ஒழுங்கையில் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளனர்.
நேற்று மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வழிப்பறி தொடர்பான சி.சி.ரி.வி. பதிவு காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.
சங்கிலி பறிகொடுத்த பெண் ஒவ்வொரு திங்கட்கிழமை ஆலயத்துக்கு வழிபடச் செல்பவர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது
விபத்தில் தந்தை மகள் பலி
விபத்தில் தந்தை மகள் பலி
பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரிகம பஸ்யால வீதியில் கொட்டகந்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மீரிகமவில் இருந்து பஸ்யால நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த தந்தை மற்றும் மகள் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் மகளும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
கல்எலிய பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மகளும் 54 வயதுடைய தந்தையுமே இதில் உயிரிழந்துள்ளனர்.
மேலதிக வகுப்பு முடிந்து தந்தை தனது மகளை வீட்டிற்கு அழைத்து வரும் போது இந்த விபத்து நடந்துள்ளது.
தப்பியோடிய கார் சாரதியை பல்லேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்து வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது அவர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






























