மயங்கி விழுந்த 44 மாணவிகள்
Posted in இலங்கை செய்திகள்

மயங்கி விழுந்த 44 மாணவிகள்

மயங்கி விழுந்த 44 மாணவிகள்

மாத்தளை– கும்பியாங்கொடை சுஜாதா மகளிர் கல்லூரியின் மாணவிகள் 44 பேர் இன்று (15) காலை திடீர் சுகவீனம் காரணமாக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளில் சிலர் கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட வலைப்பந்தாட்ட அணியைச் சேர்ந்த மாணவிகள்

என்பதுடன், வென்னப்புவ பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயங்கி விழுந்த 44 மாணவிகள்

இவர்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இன்று காலை பாடசாலையில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இதில் கலந்துகொண்ட போதே, மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மாணவிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மாணவிகளின் நிலை சாதாரணமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும் கண்காட்சியும்
Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும்

சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும்

சர்வதேச நீரிழிவு தினத்தையொட்டி கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் – இலங்கையுடன்

இணைந்து திருகோணமலை, கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலை ஊடாக நடாத்திய சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும்

நேற்றும் (14) இன்றும் (15) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அன்டென் அனஸ்ரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு

பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் யாழ்ப்பாண அலுவலக துணைத் தூதர் ஸ்ரீ ராக்கேஷ் நட்ராஜ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுதேச

மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் மற்றும் திருகோணமலை நகரசபை செயலாளர் வி.ராஜசேகர்

உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த விழிப்புணர்வுக் கண்காட்சியில் நீரிழிவு நோய்க்கான இரத்தப்

பரிசோதனைகளுடன் மருத்துவ ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன், நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்தி சுக வாழ்வுடன் வாழவேண்டும் என்ற ஆலோசனை வழிமுறைகள் பற்றிய தெளிவான

விளக்கங்களை வைத்தியர்கள் வழங்கி வைத்து அதுதொடர்பிலான வழிகாட்டி கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், திருகோணமலை கேம்பஸ் உள்ளகப்பயிற்சி வைத்தியர்களினால் யோகாப் பயிற்சி செய்முறைகளும் செய்து காட்டப்பட்டு அதுதொடர்பிலான

விளக்களை அதிதிகளுக்கும், பொதுமக்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்ட
அதேவேளை பொதுமக்கள் கொள்வனவு செய்வதற்காக அந்த உணவு
வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அபு அலா –

வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகும்.
Posted in இலங்கை செய்திகள்

வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகும்.

வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகும்.

எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெற்று அன்றையதினம் மாலை ஐந்து மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறும். வரவு செலவுத்திட்ட

குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம திகதி முதல் டிசம்பர் எட்டாம் திகதி வரை இடம்பெறும். இதன் வாக்கெடுப்பு டிசம்பர் எட்டாம் திகதி மாலை இடம்பெறும்.

இன்று முதல் டிசம்பர் எட்டாம் திகதி வரை ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர்ந்த வாரத்தின் அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் கூடும். வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறும் காலப்பகுதியில் வாய்மொழிமூல

பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகளை கேட்க முடியாது என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.


டிசம்பர் ஒன்பதாம் திகதி பாராளுமன்றம் கூடும். அன்றையதினம் வாய்மொழிமூல பதில்களை
எதிர்பார்க்கும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட உரை எமது மக்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விட்டது

ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட உரை எமது மக்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விட்டது

  • தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு எம்மை

ஏமாற்றமடைய செய்துள்ளது கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்றைய வரவு செலவு திட்டம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

உலக வங்கி, ஐநா நிறுவனமான உலக உணவு திட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றால், உணவின்மை மற்றும் வறுமை ஆகிய விடயங்களில் இலங்கையிலேயே

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரிவினராக பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த பின்தங்கிய பிரிவினருக்கான விசேட ஒதுக்கீட்டு திட்டங்களை ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டார்.

ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட உரை எமது மக்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விட்டது

ஆனால் அது நடைபெறவில்லை. உடனடியாக நிவாரண திட்டங்கள் இல்லாவிட்டாலும் கூட, இம்மக்களின் இக்குறைபாடுகள் பற்றி தான் அறிந்துள்ளேன் என்பதை ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டு கூறி இருக்க வேண்டும்.

அப்படியாயின், இந்த நலிவடைந்த மக்களை அது ஓரளவு சாந்தப்படுத்தி இருக்கும். தமது பிரச்சினைகள் பற்றி ஆளுகின்ற அரசு அறிந்து வைத்துள்ளது என்பதை அறிந்து மக்கள் சற்று நம்பிக்கை அடைந்து இருப்பார்கள். தீர்வுகள் தாமதமாகி வரும் என ஆறுதல் அடைந்து இருப்பார்கள்.

ஆனால், உயிருள்ள உழைக்கும் மக்களை மறந்து விட்டு,
தோட்டங்களில் உள்ள காணிகளை பற்றி பேசி, பயிரிடப்படாத காணிகளை, புதிய முதலீட்டாளர்களுக்கு


பகிர்ந்து கொடுக்க போவதாக நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வரவு செலவு திட்ட உரையில் கூறி உள்ளார்.

நமது மக்களுக்கு பயிரிடப்படாத காணிகள் தருவதாக எனக்கு பாராளுமன்றத்தில் தந்த வாக்குறுதியை அவர் மறந்து விட்டார்.
அப்போது அவர் பிரதமர். இப்போது ஜனாதிபதி.

ஆனால், நாம் மறக்கவில்லை.
நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை துன்பப்படும் நமது மக்களை, இந்த அலட்சியம் கொல்லாமல் கொல்கிறது.

கத்தி தி முனையில் வாகனங்களை சோதனை செய்திடும் ரவுடி கும்பல்
Posted in இலங்கை செய்திகள்

கத்தி தி முனையில் வாகனங்களை சோதனை செய்திடும் ரவுடி கும்பல்

கத்தி தி முனையில் வாகனங்களை சோதனை செய்திடும் ரவுடி கும்பல்

இலங்கை அங்கமுவ பிரதேசத்தில் வீதியில் செல்லும் வாகனங்களை ரவுடி கும்பல் ஒன்று கத்தி முனையில் மிரட்டி சோதனை செய்திடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன .

இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர் .

யாழ்ப்பாணத்தை போலவே தற்பொழுது சிங்கள பகுதியில் ஆவ குழுவை போன்ற கும்பல் அடி தடியில் ஈடுபட்டு வருகிறது .

மக்கள் புகாரை அடுத்து காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்க பட்டுள்ளது .

நளினி கணவன் முருகன் சிறப்பு முகாமில் அடைப்பு
Posted in இலங்கை செய்திகள்

நளினி கணவன் முருகன் சிறப்பு முகாமில் அடைப்பு

நளினி கணவன் முருகன் சிறப்பு முகாமில் அடைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன் மற்றும்

ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்த நிலையில் கடந்த மே மாதம் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

இதே காரணத்தை கொண்டு நீதிமன்றத்தை அணுகியிருந்த நளினி, முருகன் உள்ளிட்ட ஆறு பேரையும் அண்மையில் நீதிமன்றம் விடுதலை செய்தது.

எவ்வாறு இருப்பினும் நளினியும், ரவிச்சந்திரனும் மாத்திம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நளினி கணவன் முருகன் சிறப்பு முகாமில் அடைப்பு

எனினும் ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் நளினியின் கணவர் முருகன் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கை திரும்பும் வரை இங்குதான் தங்கி இருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக” 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த இவர்களை சிறப்பு முகாமில் அடைக்காமல் முழுவதுமாக விடுதலை செய்ய வேண்டும் ”என தமிழ அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு பின்னால் இருக்கும் பிரச்னை குறித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி விளக்கியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “30 வருட சிறைக்கு பிறகும் நால்வரை சிறப்பு முகாமில் அடைப்பது ஏற்புடையது அல்ல என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு.

ஆனால் சட்டப்படி வெளிநாட்டவர் இங்கு இருந்தால் அகதியாகவோ அல்லது வெளிநாட்டவர் சட்டம் பிரிவு-12 ன் படி ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட விசா அனுமதியோடு தான் இருக்க முடியும்.

அவர்கள் விரும்பிய நாடு செல்ல உரிய கடவுச் சீட்டு,விசா ஆவணங்களை அவர்கள் ஏற்பாடு செய்யும் வரை தற்காலிகமாக சிறப்பு முகாமில் (அகதி அந்தஸ்து இல்லாது)தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எப்போதும் போல் சட்ட நடைமுறை தெரியாத சில கட்சியினர் தமிழ்நாடு அரசை குறை கூறி தங்கள் இருப்பே காட்ட ஆரம்பித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது சிறப்பு முகாமில் உள்ள இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப ‘க்யூ’ பிரிவு பொலிஸார் முயன்று வருகின்றனர். இதற்கு தேவையான ஆவணங்களையும் தயாரித்து வருகின்றனர்.

இதில் முருகன் மேல் மற்றொரு வழக்கு இருப்பதால் அவரை இலங்கைக்கு அனுப்ப தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது.

இவ்விவகாரத்தில் முருகன் மற்றும் ஜெயக்குமார் இந்திய குடிமக்களை திருமணம் செய்துள்ளதால் அவர்களுக்கு இந்திய
குடியுரிமை கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

மாத்தளை– உக்குவளை லேலிஅம்ப பிரதேசத்தில் தாயும் பிள்ளைகள் மூவரும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சகோதரர்கள் இருவரும் பாடசாலை செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது, அவர்களது வீட்டுக்கு வந்த நபர் ஒருவர்

இவ்வாறு சிறுவர்களின் தாயையும் பிள்ளைகளையும் தாக்கி காயப்படுத்தியதாகவும் இதன்போது அவர்களின் தந்தை தொழிலுக்குச் சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

இச்சம்பவத்தில் லேலிஅம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது தாயும் 19 வயது மகளும் மற்றுமொரு சிறுவனும் பாரிய காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்பவர் என்றும் தெரியவந்துள்ளதுடன்

தாக்குதலுக்கான காரணம் தொடர்பில்
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜேவிபியுடன் இணையும் அரசியல் கட்சி
Posted in இலங்கை செய்திகள்

ஜேவிபியுடன் இணையும் அரசியல் கட்சி

ஜேவிபியுடன் இணையும் அரசியல் கட்சி

இலங்கையில் ஆட்சி கவிழ்ப்பை மேற்கொண்டு ஜேவிபி என்கின்ற குற்ற சாட்டு பலமாக வைக்க பட்டு வருகிறது .

இவ்வேளை அதே ஜேவீபியுடன் புதிய அரசியல் கட்சி ஒன்று இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது .

இந்த புது கூட்டு முயற்சிகள் இலங்கை வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .

தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிக ரயில் தடம்புரள்வு இம்மாதம் அதிகரிப்பு

இலங்கையில் அதிக ரயில் தடம்புரள்வு இம்மாதம் அதிகரிப்பு

இலங்கையின் வரலாற்றில் அதிகமான ரயில்கள் தடம் புரள்வு மற்றும் தாமதமாக இம் மாதம் மட்டும் அதிகம் இடம்பெற்றுள்ளது என் ரயில்வே போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது .

இலங்கை வரலாற்றில் இம் மாதம் இந்த சாதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

No posts found.
பெற்றோர்களின் கவனம் பிள்ளைகள் மீது முழுமையாக இருக்கவேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

பெற்றோர்களின் கவனம் பிள்ளைகள் மீது முழுமையாக இருக்கவேண்டும்

பெற்றோர்களின் கவனம் பிள்ளைகள் மீது முழுமையாக இருக்கவேண்டும்

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டு வருகின்ற இக்காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது

முழுமையான கவனத்தினை செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் தொழில் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி (திருமதி) கிரிதன் சுகந்தினி தெரிவித்தார்.

“போதையற்ற மாணவர்கள் சமூதாயத்தை உருவாக்கல்” என்ற தொனிப்பொருளில் இலங்கை காப்போம் நிறுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

நேற்று மாலை (13) திருமலை வளாக சித்த மருத்துவ பிரயோக விஞ்ஞான பீட தொழில் நுட்பவியல் கருத்தரங்கு மண்டபத்தில் காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.

பெற்றோர்களின் கவனம் பிள்ளைகள் மீது முழுமையாக இருக்கவேண்டும்

பிரதீப்கரன் (திலீப்) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பது மட்டுமே பெற்றோர்களின் கடமையல்ல. தனது பிள்ளையின் கல்வி செயற்பாடுகளையும், அவர்கள் யார் யாருடன் நட்பு ரீதியான தொடர்புகளை வைத்துள்ளார்கள் என்பதையும் நன்கு அவதானிக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் பிள்ளைகள் பிழையான நண்பர்களின் உறவினால் வழிதவறிச் செல்லும் நிலைமை ஏற்படுகின்றது.

பணம் சம்பாதிக்கும் நோக்கில் போதைப்பொருள் வியாபாரிகள் பாடசாலை மாணவ சமூதாயத்தைக்கூட விட்டு வைக்கவில்லை.

அவர்களின் இந்த மோசமான செயற்பாடுகளுக்கு பழியாகுவது எமது பிள்ளைகளாகிய இளம் சந்ததியினராகும்.

எமது பிள்ளைகளை பாதுகாப்பது ஆசிரிய சமூகம் மாத்திரமல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்துகொண்டு தங்களின் பிள்ளைகள் மீது முழுமையான கவனத்தினை செலுத்துவது இன்றைய காலத்தின் தேவையாகும் என்பதை அனைத்துப்பெற்றோர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இதன்போது, இலங்கை காப்போம் நிறுவத்தினால் ஏற்பாடில் திருமலை வளாக சித்த மருத்துவ பிரயோக விஞ்ஞான பீட தொழில் நுட்பவியல் வளாகத்தில் அதிதிகளினால் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், சித்த மருத்துவ பிரயோக விஞ்ஞான பீட தொழில் நுட்பவியல் மாணவர்கள்
ஒன்றியத்தின் தமிழறி தலைவர் தியாகராசா துகேந்தன், சன்சைன் முன்பள்ளி பாடசாலையின் பொறுப்பதிகாரிகள்,


இலங்கை காப்போம் நிறுவத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

யாழ் கோப்பாயில் குண்டு வெடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ் கோப்பாயில் குண்டு வெடிப்பு

யாழ் கோப்பாயில் குண்டு வெடிப்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீதியோரத்தில் மர்ம குண்டு வெடித்துள்ளது .

இந்த மரம் குண்டு வெடிப்பு எவ்விதம் இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

வழமை போல குறித்த பகுதியில், புல்லு வெட்டும் பணியில் ஈடுபட்ட நபர்களை இலக்கு வைத்து, இந்த மர்ம குண்டு வெடித்திருக்கலாம் என அஞ்ச படுகிறது .

குறித்த வெடிப்பு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஈபி டீபி அலுவலக மின்சாரம் துண்டிப்பு

யாழில் ஈபி டீபி அலுவலக மின்சாரம் துண்டிப்பு

யாழ்ப்பாணம் சிறீதர் திரையரங்களில் இயங்கி வரும் ஈபிடிபி தலைமையகத்தின் , மின்சாரம் தூண்டிக்க பட்ட நிலையில் ,அந்த மையம் இருளில் மூழ்கியுள்ளது

மக்களின் தேச பக்கத்தானாக தன்னை அடையாள படுத்தி கொள்ளும் ,மீன்பிடி துறை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா , மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளது அம்பலமாகியுள்ளது .

யாழில் ஈபி டீபி அலுவலக மின்சாரம் துண்டிப்பு

மக்களை நடைமுறை படுத்த முனையும் இவ்விதமான வங்குரோத்து அரசியல் வாதிகள் ,தமமை முதன்மையன ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றி கொள்ள வேண்டும் என ,சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபத்தை கொப்பளித்து வருகினற்னர் .

மின்சார கட்டணம் செலுத்த முடியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக உள்ளது வெட்கக்கேடு .,

இப்பொழுது நாடு பிச்சைக்கார நாடக மாறியதற்கு இவர்களே காரணம் என் மக்கள் கருத்துக்கள் இயம்புகின்ற்ன .

மரத்துடன் மோதி சிதறிய வாகனம் ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

மரத்துடன் மோதி சிதறிய வாகனம் ஒருவர் மரணம்

மரத்துடன் மோதி சிதறிய வாகனம் ஒருவர் மரணம்

மதவாச்சி பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த ரக் ரக வாகனம் ஒன்று ,சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து மரத்துடன் மோதி சிதறியதில் ,சாரதியின் அருகில் இருந்தவர் பலியாகியுள்ளார் .

சாரதி மயக்கம் அடைந்த நிலையில் காயங்கள் இன்றி தப்பித்துள்ளார் .

சாரதியின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது. .

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

குளத்தில் மூழ்கிய மூன்று சிறுமிகள் சடலமாக மீட்பு

குளத்தில் மூழ்கிய மூன்று சிறுமிகள் சடலமாக மீட்பு

இலங்கை ஆரா குள பகுதியில் படகு ஒன்று குளத்தில் கவிழந்ததில் ,அதில் பயணம் செய்த மூன்று சிறுமிகளும் பலியாகினர் .

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 மற்றும் 18 வயது சிறுமிகள் அடங்குவர் .

காணாமல் போன சிறுமிகள் சடலம் இன்று மீட்க பட்டது .

இந்த சிறுமிகள் மரணம், அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா இராணுவத்தால் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா இராணுவத்தால் கைது

இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா இராணுவத்தால் கைது

இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா கடலோர காவல் படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர் .

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில் ,இந்த அப்பாவி மீனவர்கள் 11 பெரும் கைது செய்யப் பட்டுள்ளனர் .

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பார்ப் படுத்த படவுள்ளனர் .

இந்தியா இலங்கை கடல் படையால் ,இரு மீனவர்களும் மாறி மாறி கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

பிள்ளைகள் இரண்டை வீட்டில் தவிக்க விட்டு தப்பி சென்ற பெற்றோர்கள்
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளைகள் இரண்டை வீட்டில் தவிக்க விட்டு தப்பி சென்ற பெற்றோர்கள்

பிள்ளைகள் இரண்டை வீட்டில் தவிக்க விட்டு தப்பி சென்ற பெற்றோர்கள்

பெற்றோர் தனது குழந்தைகள் இருவரை வீடொன்றில் கைவிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று அம்பலாங்கொடை பகுதியில் பதிவாகியுள்ளது.

இது குறித்து அறிந்த அயலவர்கள் நேற்று (11) இரவு அம்பலாங்கொடை பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அம்பலாங்கொடை குலீகொட ரங்கோத் விஹார மாவத்தையில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அதன்படி பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று இரு குழந்தைகளையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பிள்ளைகள் இரண்டை வீட்டில் தவிக்க விட்டு தப்பி சென்ற பெற்றோர்கள்

2 மற்றும் 3 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளனர்.

தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ள இரண்டு குழந்தைகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பதற்கான அனுமதியை நீதிமன்றில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குழந்தைகளின் பெற்றோரைக் கண்டறிய பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No posts found.
பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியா முதல் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை அதை செய்க -ஜனாதிபதிக்கு மனோ கடிதம்

நுவரெலியா முதல் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை பெருந்தோட்டத்துறையை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து ஆவன செய்ய வேண்டும்

  • ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்

மத்திய மாகாண நுவரெலியா, கண்டி, மாத்தளை, ஊவா மாகாண பதுளை, மொனராகலை, சப்ரகமுவ இரத்தினபுரி, கேகாலை, மேல் மாகாண களுத்துறை, தென் மாகாண காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்ட

அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ரணில்

விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதம் எழுதியுள்ளேன். இது தொடர்பான விசேட வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கி உதவுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், தமிழக

நுவரெலியா முதல் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை அதை செய்க -ஜனாதிபதிக்கு மனோ கடிதம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் ஊடாக கோருகிறேன்.

பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்நடவடிக்கை அவசர நிலையாக கருதி முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கையில் “வறுமை” பற்றிய கணக்கெடுப்பு அறிக்கையில் உலக வங்கி, இலங்கையின் தேசிய வறுமை மட்டம் 26 விகிதமாக உயர்ந்துள்ள வேளையில் பெருந்தோட்ட துறையில் வறுமை 53 விகிதமாக அதீதமாக உயர்ந்து இருக்கின்றது.

அதேவேளை, ஐநா உலக உணவு நிறுவனத்தின் இலங்கை பற்றிய அறிக்கையில் “உணவின்மை”, நகர துறையில் 43% என்றும், கிராமிய துறையில் 34% என்றும், பெருந்தோட்ட துறையில் 51%, என்றும் கூறுகிறது.

ஆகவேதான், மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் முதல், மேல் மாகாண களுத்துறை, கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள

பெருந்தோட்டத்துறை மக்கள் வாழும் குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும்.

நம் நாட்டில் இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள, உணவின்மை பிரச்சினையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள

இந்திய வம்சாவளி மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விசேட உதவிகளை வழங்கிட இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் முன்வர வேண்டும்.

இலங்கை முழு நாட்டுக்கும் இந்திய மத்திய அரசு
வழங்கிடும் உதவிகள், மிகவும் நலிவுற்ற நிலையில் வாடும் இந்திய வம்சாவளி
பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்பதை மிகவும் பொறுப்புடன்


இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்திய வம்சாவளி


பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோருகிறது.

பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்

பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்

இலங்கை ஹொரண மில்லனிய பகுதி காவல்துறை ஓ ஐ சி ஒருவர் திடீர் இடமாற்றம் செய்ய பட்டுளளார் .

இவர் தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலி நாடா ஒன்று ,சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் ,இவர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்க படுகிறது .

இலங்கை காவல்துறையின் தலைமை அதிகாரிகள் ,அதிகார துஸ்பிரயோகம் செய்து வருவதாக ஒன்பதாயிரம் முறைப்பாடுகள் பாதிவாகி இருந்தமை குறிப்பிட தக்கது .

No posts found.
ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் மோதி வாலிபன் மரணம்

ரயில் மோதி வாலிபன் மரணம்

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி வாலிபர் ஒருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .

முறைக்கொட்டான் சேனை பகுதியில் இடம்பற்ற விபத்திலே வாலிபர் மரணமாகியுள்ளார் .

சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வடபடுத்த பட்டுள்ளது .

ஆண்டு தோறும் ரயில் விபத்துக்களில் சிக்கி , பல டசின் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .

No posts found.
மலிவு விலையில் வாகனங்கள் விற்பனவு
Posted in இலங்கை செய்திகள்

மலிவு விலையில் வாகனங்கள் விற்பனவு

மலிவு விலையில் வாகனங்கள் விற்பனவு

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு இடைக்கால டதை விதிக்க பட்டுள்ள பொழுதும் ,வாகனங்கள் மலிந்த விலையில் விற்க பட்டு வருகின்றன .

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த அவல நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது .

தொடர்ந்து இவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்க படுமாக இருந்தால் ,நாடு மிக மோசமான நெருக்கடியை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .