Tag: ரயில் சேவைகள்
விசேட ரயில் சேவைகள்
விசேட ரயில் சேவைகள்
விசேட ரயில் சேவைகள் கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4 முதல் ஒகஸ்ட் 8, 2025 வரை இயக்கப்படவுள்ளன.
இவை கொழும்பு கோட்டை, கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி, மற்றும் பொல்கஹவெல ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டு காலத்தில் விசேட ரயில் சேவைகள்
புத்தாண்டு காலத்தில் விசேட ரயில் சேவைகள்
எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காலி, பெலியத்த, கண்டி, மாத்தறை, ஹட்டன் மற்றும் பதுளை ஆகிய பகுதிகளுக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்
மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்
மாகாணங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஆகஸ்ட் மாதம்
முதலாம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்தார்.
இன்று(16) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
இதனடிப்படையில், நாளை (17) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படும்.
இருப்பினும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வரையறுக்கப்பட்ட வகையில் பஸ் மற்றும்
ரயில் களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கi மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம மேலும் தெரிவித்தார்









