போலி வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் சிக்கியது
போலி வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் சிக்கியது ,உரிமம் இல்லாமல் இயங்கி வந்த மற்றொரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை சட்டத்தின் முன் நிறுத்தியது “அத தெரண உகுஸ்ஸா”.
மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி போலி கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்து
பல சந்தர்ப்பங்களில் நாட்டுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.
நம் நாட்டில் அப்பாவி மக்கள்
ஆனால், நம் நாட்டில் அப்பாவி மக்கள் இன்னும் இந்த மோசடியால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது சோகமான விடயம்.
இதேபோன்று பொரளை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் நிறுவனம் தொடர்பில் ஆராய,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சோதனை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சோதனைப் பிரிவின் அதிகாரிகள் குழுவுடன் அந்த இடத்திற்குச் சென்றது.
நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற ஏற்கனவே ஒரு குழு அங்கு இருந்ததுடன், அந்த இடம் மிகவும் பரபரப்பாக இருப்பதை நாங்கள் அவதானித்தோம்.
இருப்பினும், நாங்கள் சந்தேகித்தபடி, நிறுவனத்தை நடத்துவதற்கு அங்கிருந்தவர்களிடம் எந்த உரிமமும் இல்லை என்பது தெரியவந்தது.
ஜா-எல பகுதியில் வசிக்கும் மற்றொரு நபரின் பெயரில் இடைநிறுத்தப்பட்ட உரிமத்தைப் பயன்படுத்தி நீண்ட காலமாக இந்த மோசடி இடம்பெற்று வந்துள்ளது.
போலந்து, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக உறுதியளித்து பெரும் தொகையை அவர்கள் பெற்றுள்ளனர்.
அதன்படி, இந்த போலி நிறுவனத்தை நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இதுபோன்ற பிற சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டத்தின் முன் நிறுத்த அத தெரண உகுஸ்ஸா மிகுந்த விழிப்புடன் உள்ளது.







