Posted in இலங்கை செய்திகள்

மக்களின் சொத்துக்களையும், உயிர்களையும் பாதுகாக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்; குச்சவெளி தவிசாளர் முபாறக் வேண்டுகோள்!

மக்களின் சொத்துக்களையும், உயிர்களையும் பாதுகாக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்; குச்சவெளி தவிசாளர் முபாறக் வேண்டுகோள்!

சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களை உள்ளடக்கிய போசணை கொள்கைத் திட்டத்தை எமது பிரதேசத்தில் அமுல்படுத்துகின்ற அதேவேளை அரிசி ஆலைகளையும்

எமது பிரதேசத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் எம்.முபாறக் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல் எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய உணவு

பாதுகாப்புத்திட்ட பிரதேச மட்ட கலந்துரையாடல் (22) குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் எம்.முபாறக் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதார மறுமலர்ச்சியை உருவாக்குவதுடன் அவர்களின் வறுமையையும் ஒழிக்க முடியும். அத்துடன் சிறுவர்கள்,

கர்ப்பிணித் தாய்மார், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர்களுக்கு சத்துணவு வழங்குவதன் மூலம் அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து விடுவித்து, உணவுப் பாதுகாப்பையும்,

வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும். இதன் மூலம் பாதுகாப்பான அரோக்கிய கிராமத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

குச்சவெளி பிரதேசத்தில் கால்நடைகளின் தொல்லை வெகுவாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் விபத்துச் சம்பவங்களும் அதிகரித்து வருன்றன.

கால்நடைகளை ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவராவிட்டால் இன்னும் பல ஆபத்துக்களை நாம் எதிர்கொள்ள வேண்டிவரும். எமது மக்களையும்,

அவர்களின் சொத்துக்களையும், உயிர்களையும் பாதுகாக்க அதுதொடர்பான அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

அவர்களுக்கான சகல ஒத்துழைப்புக்களை குச்சவெளி பிரதேச சபையும், சபை உறுப்பினர்களும் வழங்க என்றும் தயாராக இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறப்பித்தனர்.

பைஷல் இஸ்மாயில் –

    Posted in உலக செய்திகள்

    ரஷியாவில் வெடித்த போராட்டம் 1300 பேர் கைது

    ரஷியாவில் வெடித்த போராட்டம் 1300 பேர் கைது

    ரஷியாவில் மக்கள் உக்கிரேன் போருக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாய, சட்டம் அமூல் படுத்த பட்ட நிலையில் மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் .

    ஜனாதிபதி பிளாடீ மீர் புட்டின் இந்த புதிய சட்ட விதிப்பால் மக்கள் மிக பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

    இதுவரை 1300 பேர் ஆயுதம் தரித்த காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .

    கைதானவர்கள் காவல்துறையினரால் தாக்க பட்டு வருவதாக மேற்குலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன .

    புட்டீன் பதவி விலக வேண்டும் என்கின்ற கோரிக்கையும் ,இங்கு பிரதானமாக முன் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

      Posted in உலக செய்திகள்

      ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்

      ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்

      ஈரான் நாட்டு இராணுவம் ஒலியைவிட ஏழுமடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை ஈரான் தயாரித்துள்ளது .

      Rezvan missile என பெயரிட பட்டுள்ள இந்த ஏவுகணையின் , தாக்குதல் வீச்சும் செயல்பாடும் ,ஈரான் இராணுவத்தினருக்கு பலமான ஒன்றாக அமைந்துள்ளதாக ஈரான் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

      இந்த ஏவுகணையின் பயன்பாடு, இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

      தொடர்ந்து ஏவுகணைகளை தயாரித்து வரும் ஈரான் ஆயுத போட்டி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

      ஈரான் தொடர் ஏவுகணை சோதனையால், இஸ்ரேல் பெரும் கொதிப்பில் உறைந்துள்ளது குறிப்பிட தக்கது.

        Posted in இலங்கை செய்திகள்

        பசியால் தேங்காய் துண்டு உண்ட பரிதாபம்

        பசியால் தேங்காய் துண்டு உண்ட பரிதாபம்

        வறுமை காரணமாக மாணவர் ஒருவர், மதிய உணவுக்கு தேங்காய் துண்டுகளை உட்கொண்ட சம்பவம் ஆதாரமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

        அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் எந்தவொரு குழந்தைக்கோ அல்லது குடும்பத்துக்கோ உதவ ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய வேலைத்திட்டம்

        ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 0114354647 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

          .

          Posted in இலங்கை செய்திகள்

          ரவிகரன் மயூரன் ஆட்பிணையில் விடுவிப்பு

          ரவிகரன் மயூரன் ஆட்பிணையில் விடுவிப்பு

          வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் காணி

          அபகரிப்புக்கு எதிரான போராட்ட குழுவின் தலைவருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் இன்று (22) பிணையில் செல்ல அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

          குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்குள்ளாக்கப்பட்டமையை கண்டித்தும், நீதிமன்ற உத்தரவை மீறி

          தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும் நேற்று (21) முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம்

          ரவிகரன் மயூரன் ஆட்பிணையில் விடுவிப்பு

          மேற்கொண்டமைக்காக தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

          கைது செய்யப்பட் இரண்டு பேரும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில்

          முல்லைத்தீவு பொலிஸார் இவர்கள் இருவருக்கு எதிராகவும் தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 140, பிரிவு 146 பிரிவு 147 மற்றும் பிரிவு 344 கீழ் பி (B)அறிக்கை ஒன்றினை மன்றில் தாக்கல் செய்த நிலையில் வழக்கு

          விசாரணைக்கு வந்த நிலையில் சிரேஸ்ட சட்டதரணிகளான அன்ரன் புனிதநாயகம் , கெங்காதரன் , பரஞ்சோதி உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட

          சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த அனைத்து சட்டதரணிகளும் மன்றில் ரவிகரன் ,மயூரன் சார்ப்பில் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்தனர்.

          அதாவது ஏற்கனவே நீதிமன்றம் ஆக்கிய கட்டளையை மீறி குறித்த பகுதியில் தொடர்ந்தும் கட்டுமானம் நடைபெற்று வந்ததன் காரணத்தாலேயே இவர்கள்

          அங்கு சென்று ஜனநாயக ரீதியில் அமைதியாக போராட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

          ரவிகரன் மயூரன் ஆட்பிணையில் விடுவிப்பு

          பொலிஸார் இந்த வழக்கில் இன்னும் பலரை கைது செய்யவேண்டி உள்ளதாகவும், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு

          இடையூறு ஏற்படுத்தியதன் காரணத்தினாலேயே இவர்களை கைது செய்ததாக மன்றில் தெரிவித்தனர்.

          இந்த நிலையில் சட்டதரணிகளின் வாதங்களை அடுத்து இரண்டுபேரையும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல அனுமதித்ததோடு

          அடுத்த வழக்கானது 2023 பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதிக்கு தவணையிடப்படுள்ளது.

          இன்றைய வழக்கு விசாரணை தொடர்பில் மூத்த சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

          குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 12.06.2022 அன்று இருந்த நிலமையினை பேணுமாறு வழங்கிய நீதிமன்ற கட்டளையினை தொல்லியல் திணைக்கள

          அதிகாரிகளும் குருந்தூர் மலையில் இருக்கின்றவர்களும் மீறியதனால் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் இடம்பெற வேண்டிய தேவை உள்ளது என மன்றுக்கு சான்றுகள் ஊடக சட்டத்தரணிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

          இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மன்று
          வினவியதன் பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பதிலினை பெறுவதற்காக தொல்லியல் திணைக்கள


          பணிப்பாளர் நாயகத்தினை அடுத்த தவணைக்கு மன்றில் பதிலளிக்குமாறு வழங்கினை எதிர்வரும் 13ஆம் திகதியிடப்பட்டுள்ளதுடன்


          பொலிஸார் அன்றையதினம் வரைக்கும் ஏற்கனவே மன்றில் இருந்த கட்டளையினை பேணுவதற்கு தாங்கள் உத்தரவாதம் தருவதாக தெரிவித்துள்ளார்கள்.

            Posted in இலங்கை செய்திகள்

            குருந்தூர்மலை பகுதியில் புத்த கோயில் – பொங்கி எழுந்த மக்கள்

            குருந்தூர்மலை பகுதியில் புத்த கோயில் – பொங்கி எழுந்த மக்கள்

            முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த

            கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் இன்றையதினம் (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

            குறிப்பாக குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்றுககூடிய மக்கள், பல பதாதைகளைத் தாங்கியவாறும்,கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

            அதனைத் தொடர்ந்து குருந்தூர்மலையின் மேற்பகுதிக்குச்சென்ற மக்கள் அங்கும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

            குருந்தூர்மலை பகுதியில் புத்த கோயில் – பொங்கி எழுந்த மக்கள்

            முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கடந்த 19.06.2022அன்று குருந்தூர்மலைக்கு விஜயம்செய்து, இதற்குமேல் கட்டுமானப்பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்திருந்தார்.

            இருப்பினும் தற்போதும் அங்கு நீதிமன்றத்தின் கட்ளையை மீறி பௌத்த கட்டுமானப்பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

            அங்கு மேலதிக கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் காணப்படுவதுடன், அங்கு கட்டுமானத்திற்கு பயன்படுத்துவதற்கு தயாரான நிலையில் கலவைசெய்யப்பட்ட சீமெந்து, மற்றும் கட்டுமானப் பணிகளுக்குரிய பொருட்களும் அங்கு காணப்பட்டன.

            அத்தோடு அங்கு மீண்டும் பௌத்த கண்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் ஆர்ப்பாட்டக்கார்களால் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களாடம் கேள்வி எழுப்பப்பட்டது.

            இதன்போது அங்கு சற்று சலசலப்பும் தோன்றியது.

            இந் நிலையில் அங்கு பாரிய அளவில் ஆயுதங்கள் தாங்கிய பொலீசார் குவிக்கப்பட்டடதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துகின்றவகையில் போலீசார் புகைப்படங்களையும் எடுத்திருந்தனர்.

            பொலிசாரின் இத்தகைய நடடிக்கையைக் கண்டித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், குருந்தூர்மலையில் கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படக்கூடாது என்ற நீதிமன்றக் கட்டளையினை நடைமுறைப்படுத்துமாறும் பொலீசாரிடம் தெரிவித்தனர்.

            மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா

            சிவநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ஜோன்சன்,


            கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              மின்வெட்டு நாளை முதல் அதிகரிப்பு

              மின்வெட்டு நாளை முதல் அதிகரிப்பு

              நாளை (23) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள

              இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

              பழைய லக்ஷபான அனல்மின் நிலையத்தின் 1ஆம் நிலை இயங்காமை, வெஸ்ட் கோஸ்ட் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான எரிபொருள்

              பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தேவை திடீரென அதிகரித்தமை ஆகியவை இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

              அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

              அந்த வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

                Posted in உலக செய்திகள்

                மூடப் பட்ட வங்கி கண்ணீருடன் குவிந்த மக்கள்

                மூடப் பட்ட வங்கி கண்ணீருடன் குவிந்த மக்கள்

                லெபனானில் blom வங்கி மூன்று நாட்கள் திடீரென அடித்து மூட பட்டது .இதனால் பதட்டமான மக்கள் அந்த வங்கியின் முன்பாக குவிந்தனர் .

                தாம் வைப்பில் வைத்து கொண்ட பணத்தினை மீள பெற்று கொள்ள பெரும் ,
                தொகையில் குவிந்த நிலையில் ,வாங்கி பெரும் சிரமத்திற்கு உள்ளானது .

                இதனால் வங்கியில் வாய்ப்பு செய்தவர்கள் , தமது பணத்தினை பெற்று கொள்ள கடும் சட்ட நடைமுறைகள் பின்பற்ற பட்டு வருகிறது .

                மக்கள் தாம் வைப்பில் வைப்பிலிட்ட பணத்தினை, பிச்சை எடுப்பது போல கேட்டு பெற்று கொள்ளும் நிலையில் சிக்கியுள்ளனர் .

                இதனால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .இது போன்ற நிலை இலங்கையிலும் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                  Posted in உலக செய்திகள்

                  காயமடைந்த இராணுவத்தினர் மீளவும் உக்கிரேனில் களத்தில் குவிப்பு

                  காயமடைந்த இராணுவத்தினர் மீளவும் உக்கிரேனில் களத்தில் குவிப்பு

                  உக்கிரேனில் ரஸ்யா இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில்
                  காயமடைந்த ,உக்கிரேன் இராணுவத்தினர் மீளவும் களமுனையில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .

                  இவ்வாறு களமுனைக்கு வருகை தந்த இராணுவத்தினர் ,தமது உயிர் மடியும் வரை நாம் போராடுவோம் என அறிவித்துள்ளனர் .

                  மக்களை காப்பாற்றிட களத்தில் இவர்கள் இறந்து போவார்கள் ,ஆனால் போர் ஓய்ந்ததும் ,மக்கள் அதனை மறந்து தனது சுக போக வாழ்க்கையில் நீடிப்பார்கள் .

                  காயமடைந்த இராணுவத்தினர் மீளவும் உக்கிரேனில் களத்தில் குவிப்பு

                  பாதிக்க பட்ட இராணுவத்தின் குடும்பங்களும் ,உதவிட அரசும் மறந்து ,தனது பணிகளில் மூழ்கிவிடுவார்கள் .

                  உலகில் இவ்வாறே அரசியல் விளையாடடுக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

                  அரச ஆதரவு ஊடகங்கள் இராணுவத்தினரை மதிப்பதாக வெளியில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் ,ஆனால் மறுபுறத்தே இராணுவ வீரர்கள் குடும்பம் பிச்சை எடுக்கும் நிலையிலேயே வாழ்ந்து வரும் என்பது வரலாறாக பதிவாகியுள்ளது .

                  அவ்வாறே உக்கிரேனிலும் பதிய பெரு என்பது இந்த காயமடைந்த வீரர்கள் உச்சரிப்பின் வாயிலாக காணமுடிகிறது .

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    லண்டனில் பாடசாலை முன்பாக குற்றி கொலை

                    லண்டனில் பாடசாலை முன்பாக குற்றி கொலை

                    லண்டனில் பாடசாலை முன்பாக North Huddersfield Trust School பகுதியில் குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் .

                    பாடசாலை வாசல் முன்பாக 15 வயது சிறுவனே கோரமாக குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் .

                    மதியம் 2.15 மணியளவில் சிறுவன் கோரமாக குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் ,என காவல்துரையினர் தெரிவித்துள்ளனர் .

                    கொலை செய்ய பட்ட வாலிபனுக்கு மக்கள் ,மற்றும் பாடசாலை வளாகம் ,என்பான் பணம் திரட்டி வழங்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

                    இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
                    தொடர்ந்து காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

                      Posted in இலங்கை செய்திகள்

                      சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

                      சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

                      யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

                      தொல்லியல் திணைக்களமும் யாழ்ப்பாண மரபுரிமை மையமும் இணைந்து புனர்நிர்மாண பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்காக 2.3 மில்லியன் ரூபாய்

                      செலவு மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதி பங்களிப்பினை யாழ்ப்பாண மரபுரிமை மையம் வழங்கவுள்ளது.

                      சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

                      குறித்த தோரண வாயிலின் பாதுகாப்பு , புனர் நிர்மாணம் மற்றும் நில வடிவமைப்பு ஆகிய செயற்திட்டமே முன்னெடுக்கப்படவுள்ளது.

                      சங்கிலியன் தோரண வாயில் அல்லது சங்கிலித்தோப்பு வளைவு என அழைக்கப்படுவது யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம் எனக் கருதப்படுகின்றது.

                      சங்கிலித்தோப்பு வளைவு யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில்,
                      நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சிறிது தூரத்தில் இது அமைந்துள்ளது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஜப்பான் பறக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

                        ஜப்பான் பறக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

                        ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளார்.

                        ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.

                        ஜப்பானுக்கான விஜயத்தின் பின்னர் பிலிப்பைன்ஸ் செல்லும் ஜனாதிபதி, அங்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்போங் மார்கோஸை சந்தித்து பேச்சுவார்த்தை

                        நடத்தவுள்ளார். ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது, ​​
                        எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

                          கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க
                          Posted in சமையல் cook

                          கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க

                          கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க

                          வீட்டில மக்களே இப்படி கடை சுவையில் மட்டம் வறுவல் செய்து சாப்பிடுங்க .
                          இலகுவாக தரமான முறையில் இந்த மட்டன் வறுவல் செய்து அசத்துங்க மக்களே .

                          மட்டன் வறுவல் செய்வது எப்படி ..?
                          இந்த மட்டன் வறுவல் செய்திட தேவையான பொருட்கள் .

                          வாங்க இப்போ மட்டன் வருவல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

                          மட்டன் செய்முறை ஒன்று

                          குக்கரில் ஒரு கரண்டி நெய் வைத்து சூடாக்கி கொள்ளுங்க .அதன் பின்னர், வெட்டி கழுவி வைத்துள்ள மட்டன் போட்டு கொள்ளுங்க .

                          இதே ணியில வதக்கிய பின்னர் உப்பபு ,மஞ்சள் தூள்.மிளகாய் தூள் ,மல்லி தூள் போட்டு நன்றாக கலக்கி வதக்கி வாங்க .
                          ஐந்து நிமிடம் அப்டியே வகை வைத்து எடுத்திடுங்க .

                          கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க

                          அப்புறம் ஒரு காடாய் வைத்து அதில மல்லி விதை ,சீரகம் ,ஒரு நட்ச்சத்திர சோம்பு ,கூடவே இந்த நான்கு கராம்பு ,ஒரு துண்டு பட்டை அப்படியே இந்த மசாலாவை வதக்கி வைக்க .
                          அப்புறம் 15 வறு மிளகாய் சேர்த்து வறுத்து வாங்க .

                          வறுத்து ரெடியானதும் அதனை அப்படியே எடுத்திடுங்க .

                          அப்புறம் மிச்சியில் சேர்த்து மூன்று வெங்காயம் ,ஐந்து பூண்டு
                          ,இஞ்சி துண்டு ,அரை கப் தயிர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .

                          மட்டன் வறுவல் செய்முறை இரண்டு இறுதி பாகம்

                          இப்போ மறுபடி ஒரு கடாய வைத்து சூடாக்கி ,நெய் சேர்த்து சூடாக்கியதும் ,அரைத்து வைத்த
                          மசாலாவை கொட்டி கலக்கிடுங்க .

                          தண்ணி கொஞ்சம் சேர்த்து கலக்கி வாங்க .அப்புறம் தேவையான உணவு போட்டு மூடிய போட்டு மூடி வையுங்க .
                          நல்ல மணம் வந்த பின்னர் இப்போ இறைச்சியை சேர்த்திடுங்க .

                          மூடிய பாதி அளவுக்கு மூடி நன்றாக கொதிக்க வைத்து வாங்க .நன்றாக தண்ணி வற்றி வரும் அளவுக்கு வேக வையுங்க .

                          இப்போ கறி எல்லாம் ரெடியாடிச்சு .அப்டியே எடுத்து வாயில் வைத்து காய வைத்து கொள்ளுங்க .மட்டன் வறுவல் என்ற இப்படி தங்க பண்ணனும் .

                          மரக்கறி நூடில்ஸ் கொட்டல் சுவையில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க
                          Posted in சமையல் cook

                          மரக்கறி நூடில்ஸ் கொட்டல் சுவையில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க

                          மரக்கறி நூடில்ஸ் கொட்டல் சுவையில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க

                          நம்ம வீட்டில மரக்கறி நூடில்ஸ் கொட்டல் சுவையில், இப்படி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .


                          கடையில் விற்கும் சுவையில், அதே சுவை மாறாத படி காய்கறி ,அல்லது மரக்கறி நூடில் செய்வது என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .

                          மரக்கறி நூடில்ஸ் செய்வது எப்படி ..?
                          நூடில்ஸ் செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

                          மரக்கறி நூடில்ஸ் செய்முறை ஒன்று

                          நூடில்ஸ் வேக வைத்து அடுக்க அடுப்பில பாத்திரம் வைத்து தண்ணீர் விட்டு சூடாக்கி கொள்ளுங்க .

                          தன்ணியில ஒரு கரண்டி எண்ணெய் ,உப்பு சேர்த்திடுங்க ,.அப்புறம் நூடில்ஸ் போட்டு வேக வைத்திடுங்க .
                          90 வீதம் நூடில்ஸ் வேகி வரும் வரைக்கும் வைத்து எடுங்க .

                          நூடில்ஸ் நாம் சொன்ன பதம் வந்தத பின்னர் வெளியில் எடுத்திடுங்க .அப்புறம் தண்ணியை வைத்திடுங்க ,அப்புறம் தண்ணி சேர்த்து கழுவி எடுத்திடுங்க .

                          இப்போ அடுப்பில அடுப்பில கடாய் சூடாக்கி எண்ணெய் கூட பூண்டு பொடி ,பச்சை மிளகாய் ,இஞ்சி எல்லாம் வெட்டி கடாயில போட்டு வதக்கி கொள்ளுங்க .

                          கலர் மாறியதும் ,ஒரு வெங்காயம் ,கரட் ,ஒரு குடைமிளகாய் ,ஒரு கைப்பிடி அளவுக்கு முட்டை கோஸ் .
                          இவை எல்லாம் சேர்த்து வதக்கி வாங்க .

                          இப்போ மிளகாய் தூள் ,கரம் மசாலா ,மல்லித்தூள் ,நூடில்ஸ் மசாலா ,உப்பு,சீரகம் சேர்த்து வதக்கி கொள்ளுங்க .

                          முப்பது நிமிடம் வதக்கிய பின்னர் தக்காளி சோஸ் விட்டிருங்க .சோயா சோஸ் ,வினிகர் எல்லாம் விட்டு கலக்கி வதைக்கிடுங்க .

                          அதன் பின்னர் பச்சை வாசம் போன பின்னர் ,ஆற வைத்துள்ள நூடில்ஸ் எடுத்து போட்டு கலக்கி வாங்க .
                          நூடில்ஸ் உடையாம சேர்த்து கலக்கி வாங்க .

                          அடியில் இருந்து மேல் வரை நன்றாக கிளறி கலக்கி வாங்க .இப்போ சாப்பிடும் அளவுக்கு நூடில்ஸ் ரெடியாகிடிச்சு .

                          கொட்டல் சுவையில் மிக தரமான நூடில்ஸ் நம்ம வீட்டில செய்தாச்சு .அப்புறம் என்ன மக்களே ,குஷி தான் ,சுவையான நூடில்ஸ் இது போல தினம் செஞ்சு அசத்துங்க .

                          ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்
                          Posted in உலக செய்திகள்

                          ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்

                          ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்

                          ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்

                          ஈரான் நாட்டு இராணுவம் ஒலியைவிட ஏழுமடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை ஈரான் தயாரித்துள்ளது .

                          Rezvan missile என பெயரிட பட்டுள்ள இந்த ஏவுகணையின் , தாக்குதல் வீச்சும்
                          செயல்பாடும் ,ஈரான் இராணுவத்தினருக்கு பலமான ஒன்றாக அமைந்துள்ளதாக ஈரான் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

                          இந்த ஏவுகணையின் பயன்பாடு, இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

                          தொடர்ந்து ஏவுகணைகளை தயாரித்து வரும் ஈரான் ஆயுத போட்டி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

                          ஈரான் தொடர் ஏவுகணை சோதனையால், இஸ்ரேல் பெரும் கொதிப்பில் உறைந்துள்ளது குறிப்பிட தக்கது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          தந்தையை பார்த்து கொள்ள இரண்டு லட்சம் பணம் கேட்கும் 7 மகள்கள்

                          தந்தையை பார்த்து கொள்ள இரண்டு லட்சம் பணம் கேட்கும் 7 மகள்கள்

                          இலங்கை பதுக்க பகுதியில் 82 வயதுடைய ,தந்தை ஒருவரை கவனித்து கொள்ள ,இரண்டு லட்சம் பணம் கேட்கும் ஏழுமகள் ,செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

                          தம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தை ,வயதான காலத்தில் தம்மை பிள்ளைகள் பார்ப்பார்கள் என எண்ணிய வேளையில் ,தாயையும் தந்தையும் பிள்ளைகள் கவனிக்க தவறியதன் விளைவு இதுவாகும் .

                          தந்தை தாயினை பார்த்து கொள்ள மாதம் தோறும் இரண்டு லட்சம் பணம் வழங்க வேண்டும் என ஏழு பெண் பிள்ளைங்களும் கேட்டுள்ளனர் .

                          ஏழு மகள் மாறும் ஆடம்பர வாழ்க்கையில் வசித்து வருவதாக காவல்துரையினர் தெரிவித்துள்ளனர் .

                          காவல்துறையினரால் இந்த விடயம் கையாள முடியா நிலையில் .தற்போது நீதிமன்றத்தில் இந்த விடயம் பாரப் படுத்த பட்டுள்ளது .

                          பெற்றவர்களை பார்த்து கொள்ள நீதிமன்றம் செல்லும் கொடுமை இலங்கையில் அரங்கேறியுள்ளது .

                          இப்படியும் பிள்ளைகள் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றனர் .

                            Posted in இலங்கை செய்திகள்

                            யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தள்ளாடும் இளசுகள்

                            யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தள்ளாடும் இளசுகள்

                            போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன் அவதானிக்கப்படுகிறது .

                            இது பாடசாலைகளினுள் மாத்திரமன்றி, வைத்திய சாலைகள் வளாகங்க களினுள்ளும் உள்நுழைய தொடங்கி உள்ளது.

                            காலத்தில் தனிமனித ஒழுக்கத்திலும் நற்பண்புகளிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்த வடபிரதேசம் இன்று போதை அரக்கனின் கோரப்பிடியில் சிக்குண்டு தனது சுயத்தையும் மாண்புகளையும் இழந்து நிற்கின்றது.

                            யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தள்ளாடும் இளசுகள்

                            போதைப்பாவனையின் நேரடி மற்றும் மறைமுக விளைவுகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.

                            உடல்ரீதியான பாதிப்புக்களுக்கு மேலதிகமாக உளரீதியான மற்றும் சமூக ரீதியான பாதிப்புக்கள் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லதாய் உணரப்படுகின்றன.

                            போரினால் சிதைவடைந்த வட இலங்கையின் மீள் உருவாக்கத்தின் ஆன்மாவாய் கருதப்படும் இளம் சமுதாயம் போதையின்பால் அடிமையுண்டு தானும் அழிந்து தன் நாட்டையும் அழிவிற்குட்படுத்துவது வேதனையின் உச்சம்

                            . போதையுடன் தொடர்புடைய குற்றங்களில் நாளாந்தம் அடையாளப்படுத்தப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை நாளைய பிரளயத்தை கட்டியம் கூறி நிற்கின்றது.


                            இது நாம் விரைந்து செயற்படவேண்டிய தருணம்.போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பரந்துபட்ட கட்டமைப்பை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது அனைவரினதும் கடமையாகும்.


                            போதைப்பொருள் பாவனையை தடுத்தல் என்பது தனியே போதைப்பொருள் பாவனையாளர்களை இனங்கண்டு சிகிச்சை அளிப்பதுடன் முடிந்து விடுவதில்லை.


                            போதைப்பொருள் நுகர்வோரை இனங்காணுதல், அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், அவர்கள் மீண்டும் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதைஉறுதிசெய்தல்,

                            மீளவும் போதைப் பழக்கத்துக்குற்படாத வகையிலான அகப்புறச் சூழ்நிலைகளை உருவாக்குதல் மற்றும் தொடர் கண்காணிப்பு வலையமைப்பை ஏற்படுத்துதல் உள்ளடங்கலான ஓர் பல்பரிமாணப் பொறிமுறையாகும்.


                            இப் பொறிமுறைகளை உருவாக்கி வெற்றிகரமாகச் செயற்படுத்துவதன் மூலம் மாத்திரமே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நிலைபேறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

                            இதனை நிறைவேற்றுவதில் வைத்தியர்களாகிய எமக்குள்ள தார்மீகக் கடைமையை உணர்ந்துள்ள நாம்,

                            தனியே சிகிச்சை அளிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது ஏனைய அனைத்துப் பொறிமுறைகளினூடும் எமது நேரடியான பங்களிப்பை நல்குவதென்னும் தீர்க்கமான முடிவினை மேற்கொண்டுள்ளோம்.

                            இதற்கு அனைத்து பொறுப்புமிக்க அதிகாரிகள், பெற்றோர் பொதுமக்கள் மற்றும் ஊடகத் துறையினரின் மேலான ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.

                            அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்.

                              Posted in உலக செய்திகள்

                              ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்

                              ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்

                              ரசியா நாட்டின் தேசிய கொடியினை உக்கிரேன் இராணுவ சிப்பாய் ஒருவர், காலில் போட்டு மிதித்துள்ள ,காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது .

                              ரசிய நாட்டின் தேசிய கொடியை அவமதித்ப்பு செய்திட்ட உக்கிரேன் இராணுவத்தின் இந்த செயல் ,ரஷ்ய மக்கள் மற்றும் இராணுவத்தினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

                              ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்

                              அமெரிக்கா பிரிட்டன் ஆயுத உதவியுடன் ,ரசிய இராணுவத்தை உக்கிரேன் இராணுவம் விரட்டியடித்த வண்ணம் உள்ளது .

                              உக்கிரேன் மீது ரஸ்யா போரினை தொடுத்து, ஏழு மாதங்கள் ஆகின்ற பொழுதும் ,உக்கிரேனில் போர் ஓய்வுக்கு வரவில்லை .

                              ரஸ்யாவின் எதிர்ப்பு சமருக்கு , உக்கிரேன் பலகோடி ஆயுதங்களை கொள்வனவு செய்து செலவு செய்துள்ளது .

                              உக்கிரேன் மீளவும் ,உக்கிரேன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சென்றாலும் ,அமெரிக்கா பிரிட்டனில் கொள்வனவுசெய்திட்ட ஆயுத தள பாடங்களுக்குரிய பணத்தினை செலுத்த முடியுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.

                              உக்கிரேன் இராணுவ சிப்பாயின் ரஷ்ய கொடிய அவமதிப்பு பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது .

                                Posted in உலக செய்திகள்

                                இராணுவம் அதிரடி தாக்குதல் 30 கிராமங்கள் மீட்பு 200 தீவிரவாதிகள் பலி

                                இராணுவம் அதிரடி தாக்குதல் 30 கிராமங்கள் மீட்பு 200 தீவிரவாதிகள் பலி

                                சோமாலியா இராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 30கிராமங்கள் மீட்க பட்டுள்ளன .,

                                இந்த் மீட்பு நடவடிக்கையின் பொழுது 200 அல் சபா தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக சோமாலிய இராணுவம் அறிவித்துள்ளது .

                                சோமாலியா தலைநகரை அண்மித்து அல்சபா போராளிகள் தாக்குதல் நடத்தினர் .

                                இந்த தாக்குதலுக்கு பதிலடியாக சோமாலியா அரச இராணுவம் தேடி அழிப்பு தாக்குதலை நடத்தியது .

                                இந்த தாக்குதலின் பொழுதே தீவிரவாதிகளுக்கு, இவ்விதமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சோமாலியா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

                                தொடர்ந்து இராணுவ மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

                                  Posted in சமையல் cook

                                  பிரியாணி தோற்று போகும் சுவையில் குஸ்கா முட்டை வறுவல்

                                  பிரியாணி தோற்று போகும் சுவையில் குஸ்கா முட்டை வறுவல்

                                  பிரியாணி தோற்று போகும் அளவில் ,குஸ்கா முட்டை வறுவல் செய்து சாப்பிடுங்க .மிக இலகுவான முறையில் ,அதிக சுவையுடன் கூடிய முட்டை குஸ்கா வறுவல் செய்வது எப்படி..?

                                  உங்களின் இந்த கேள்விக்கு இதோ பதில் உள்ளது .
                                  வாங்கோ இப்போ முட்டை குஸ்கா வறுவல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

                                  பிரியாணி தோற்று போகும் முட்டை குஸ்கா செய்முறை ஒன்று

                                  முதல்ல தக்காளி சாதம் செய்வதற்கு அரசி ஊற வைத்துக் கொள்ளுங்க .
                                  மூன்று தடவை தண்ணியில அரிசியை நன்றாக கழுவி எடுத்திருங்க .

                                  அப்புறம் புதிய தண்ணியில இந்த அரிசியை முப்பது நிமிடம் ஊற வைத்திடுங்க .
                                  அரை மணி நேரம் கழித்து குக்கர் எடுத்து ,அதனை சூடாக்கி கொள்ளுங்க ,
                                  அந்த குக்கரில் ஒரு மேசை கரண்டி நெய் சேர்த்திடுங்க .

                                  இது கூட இரண்டு ஏலக்காய் ,மூன்று கராம்பு ,இரண்டு பட்டை ,ஒரு பிரிஞ்சி இலை ,
                                  இது கூட பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் பொடியாக வெட்டி சேர்த்திடுங்க .

                                  பிரியாணி தோற்று போகும் சுவையில் குஸ்கா முட்டை வறுவல்

                                  இவை யாவற்றையும் இப்போ ஒன்றாக சேர்த்து வதக்கிடுங்க .
                                  வெங்காயத்தின் கலர் மாறி வரும் வரைக்கும் நன்றாக வதாக்கி வாங்க .

                                  வெங்காயம் வதக்கி வந்ததன் பின்னர், ஒரு பச்சை மிளகாய் ,மற்றும் தக்காளி ஒன்று பொடியாக வெட்டி சேர்த்து ,
                                  உப்பு ,மஞ்சள் ,இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக கலக்கி வதக்கிடுங்க .

                                  இஞ்சி பச்சை வாசம் போன பின்னர் ,ஒரு கரண்டி காஸ்மீர் மிளகாய் தூள் ,அரை கரண்டி கரம் மசாலா ,ஒரு கரண்டி மல்லி தூள் ,
                                  கூடவே காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்து வதக்கி வாங்க .

                                  மசாலா பச்சை வாசம் போன பின்னர் ,ஒரு கைபிடி கொத்தமல்லி இலை ,புதினா இலை ,சேர்த்து வதக்கி வாங்க .நன்றாக வதங்கிய பின்னர் ,
                                  ஒரு கரண்டி தயிர் சேர்த்திடுங்க .சேர்த்துட்டு நன்றாக வதக்கி வாங்க .

                                  இப்போ தேவையான அளவு தண்ணீர் ஊற்றிடுங்க ,தண்ணி கொதித்து வந்த பின்னர் ,தேவையான உப்பு சேர்த்து கொள்ளுங்க ,அப்புறம் கலக்கிய பின்னர் ,
                                  இப்போ பசுமதி அரிசியை வடி கட்டி இதில போட்டு கொள்ளுங்க .

                                  அரசி ஓரளவு வெந்த பின்னர் ,மூடிய போட்டு மூடி கொள்ளுங்க .இப்போ குஸ்கா சூப்பராக தயாராகிடிச்சு .

                                  பிரியாணி தோற்று போகும் முட்டை மிளகு வறுவல் செய்முறை இரண்டு

                                  அடுப்பில கடாயா வைத்து அதில இரண்டு கரண்டி எண்ணெய் சேர்த்திடுங்க .
                                  எண்ணெய் சூடானதும் ,அரை கரண்டி மஞ்சள் ,அரை கரண்டி மிளகு தூள் ,தேவையான அளவு உப்பு ,
                                  போட்டு எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கி வதக்கிடுங்க .

                                  அவித்து வைத்த முட்டையை இரண்டாக வெட்டி இதில சேர்த்திடுங்க .
                                  இப்போ இந்த முட்டையை இரு பக்கம் திருப்பி நன்றாக வறுத்திடுங்க .

                                  இப்போ முட்டையை எடுத்து தட்டு ஒன்றில் வைத்திடுங்க .இப்போ அதே கடாயில பொடியாக வெட்டிய வெங்காயம் ,கருவேப்பிலை ,
                                  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நனறாக வதக்கி வாங்க .

                                  இஞ்சி பச்சை வாசம் போன பின்னர் மல்லி தூள் ,
                                  மிளகு தூள் ,உப்பு .அரை கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .


                                  மசாலா பச்சை வாசம் போன பின்னர் ஒரு தக்காளியை அரைத்து நன்றாக மிக்ஸ் பண்னி வதக்கி வாங்க .தக்காளி பச்சை வாசம் போன பின்னர் அது தொக்கு மாதிரி வந்த பின்னர்,
                                  இதில எடுத்து அவித்த முட்டைகளை சேர்த்திடுங்க .

                                  முட்டையுடன் மசாலா அப்படியே அடுப்பில ஒரு நிமிடம் வேக
                                  வைத்து ,மிளகு தூள் தூவி அடுப்பில் இருந்து இறக்கிடுங்க .

                                  தயிர் சாதம் ,சாம்பாரு சாதம் ,குஸ்காவுடன்
                                  இந்த முட்டை மிளகு வறுவல் சேர்த்து சாப்பிட்டா செமையாக இருக்கும் .

                                  சமையல் என்பது ஒரு கலைங்க ,அதனை ரசித்து சமைத்தால் ருசித்து சாப்பிடலாம் தலைவா .
                                  அப்புறம் என்ன குஷி தாங்க . குஸ்கா முட்டை வறுவலை ஒரு புடி புடிங்க .