Author: நலன் விரும்பி
இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்தியாவில் தெரு நிகழ்ச்சிகள்
இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்தியாவில் தெரு நிகழ்ச்சிகள்
இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்தியாவில் தெரு நிகழ்ச்சிகள்
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு ,இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான தெரு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
தெரு நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவுடன் இணைந்து இரு தரப்பு உறவுகளையும், கலாச்சாரத்தினை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கை
சுற்றுலாத்துறையினை மேம்படுத்த முடியும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சிகளை 2022 செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முதலாவது நிகழ்ச்சி செப்டம்பர் 26 ஆம் திகதி புதுதில்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி
மும்பையில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டல்லில் நடைபெறுவதுடன் செப்டம்பர் 30 ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா
ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவடையும்.
இந்த நிகழ்ச்சி மூலம் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இலங்கை பிரபலங்கள் சனத் ஜெயசூரியா மற்றும் யோஹானி டி சில்வா பங்கேற்க உள்ளனர்.
மேலும் இந்த நிகழ்வுகள் மூலம் பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தையும் மற்றும் இலங்கையின் கலாச்சாரம் தொடர்பான கவனத்தை
ஈர்க்கும் வண்ணம் நடனம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
நடனக் குழுவிற்கு Mastercard நிதியுதவி வழங்குவதுடன் யொஹானியின் இசை நிகழ்ச்சி மூலம் அவரது திறமையும் வெளிப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்தியா முழுவதிலும் இலங்கையின் அழகை வெளிப்படுத்தி, இலங்கையின் பிரதான வருமான சந்தைகளில் ஒன்றாக காணப்படும் சுற்றுலா துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதுவே இதன் பிரதான நோக்கம் ஆகும்.
இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்தியாவில் தெரு நிகழ்ச்சிகள்
அத்துடன் கொரோனா தொற்றுக்கு பின்னர் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பின்னடைவில் இருந்து மீட்சி பெறுவதற்கு இந்த நடவடிக்கை பெரிதும் உறுதுணையாக அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நாட்டிற்கு வருகை தரும் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவை சேர்ந்தவர்களாகவும் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கணிசமான அதிகரிப்பை இலங்கை கண்டு வருகிறது..
இந்த நிகழ்வானது எண்ணற்ற சுற்றுலா அனுபவங்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில் ஓய்வு , வணிக நடவடிக்கையில் சுற்றுலா
பயணிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பதிலும் அதிக அளவு கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிகளின் பிரதான இலக்கு மேல்மட்ட வணிக தரகர்கள் , கூட்டுறவு நிறுவனங்கள் , வர்த்தக சங்கங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் துறை பங்குதாரர்கள் மூலம் இலங்கை மிகவும் அழகான நாடுகளில் ஒன்றாகும்
என்ற செய்தியை எடுத்துச் செல்வார்கள் எனவும் தேவையான அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் கடைபிடிப்பது
சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு மற்றும்
இலங்கை மாநாட்டு பணியகத்தின் தலைவர் திசும் ஜயசூரிய ஆகியோருடன் 50 இற்கும் மேற்பட்ட உள்ளூர் பயண முகவர் நிலையங்கள் மற்றும் ஹோட்டல் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர்.
ஒவ்வொரு நிகழிச்சிகள் மூலமும் வணிகத்திலிருந்து வணிகம் (B2B ) நடவடிக்கை மூலம் வணிக கூட்டாண்மைகளை மேம்படுத்த உதவும்.
இத்திட்டத்தின் போது, சுற்றுலாத்துறை அமைச்சர் பல உயர்மட்ட வணிகத் தலைவர்கள், சுற்றுலாப் பங்குதாரர்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களைச்
சந்திப்பார். அதே நேரத்தில் முன்னணி இந்திய ஊடக நிறுவனங்களுடன் பல ஊடக நேர்காணல்களில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் இந்தியாவிலிருந்து 80 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன் 2023 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாலைக் காட்சிகள் மூலம் இலங்கையின் பல்வேறு இடங்கள், கலாச்சார விழுமியங்கள் மற்றும் பயண வாய்ப்புகள் பற்றிய நேரான மனநிலையை உருவாக்கி சுற்றுலா
துறையை மேம்படுத்தவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

வெள்ளவத்தைக்கு, சூரிய சக்தி படகு சேவை
வெள்ளவத்தைக்கு, சூரிய சக்தி படகு சேவை
பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தைக்கு சூரிய சக்தி படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை, தியத்த உயன மற்றும் அக்கொன, ஹீனடிகும்புர முதல் வெள்ளவத்தை வரையில் சூரிய சக்தியில் இயங்கும் படகுச் சேவை
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

இந்திய மகளிர் அணி தொடரை கைப்பற்றியது
இந்திய மகளிர் அணி தொடரை கைப்பற்றியது
இந்திய மகளிர் அணி தொடரை கைப்பற்றியது
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மகளிர் அணியை
எதிர்கொண்டது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் நேற்று (24) வெற்றிபெற்றது.
இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதாத்தில் நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி
பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்தியா, 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.
இந்திய வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழக்க, ஸ்மிரிதி மந்தனா 50 ஓட்டங்களும், தீப்தி ஷர்மா 68 ஓட்டங்களும் குவித்தனர்.
170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, தொடக்கம் முதலே நிலையான ஆட்டமின்றி தடுமாறியது. இறுதியில் 43.4 ஓவர்களில்
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
இந்திய வீராங்கனை ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளையும், ஜூலன் கோஸ்வாமி மற்றும் ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.
முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 88 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், கடைசி ஒருநாள் போட்டியில் 16
ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றயது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனை
700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனை
700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனைஈரான் புரட்சி காவல்
படையினர் தற்போது புதிய ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்
இதன் தூர வீச்சு சுமார் எழுநூறு கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டது என தெரிவிக்க பட்டுள்ளது
அமெரிக்கா ,இஸ்ரேல் நாடுகளின் வல்வளைப்பு
தீவிரம் பெற்று வரும் நிலையில் தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இவை அத்தியாவசிய ஒன்று
என்ற காரணத்தை கூறியவாறு ஏவுகணை சோதனையை இடைவிடாது நடத்தி வருகிறதுஇந்த சோதனைகள் அமெரிக்காவை பெரும் அதிர்ச்சியில் உறைய
வைத்துள்ளதுஇவை
ராடார்களுக்கு சிக்காது செல்ல கூடியவை என தெரிவிக்க பட்டுள்ளது.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

போதைக்காக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறுமி
போதைக்காக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறுமி
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஹெரோயினுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் நேற்று மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டார்.
அவர் 8 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் ஹெரோயினைப் பெறுவதற்காக பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாலேயே கர்ப்பம் தரித்தார் என்று மறுவாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிக்கின்றார்
சிறுமியின் தாயார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அந்தச் சிறுமி அடையாளம் காணப்பட்டு,
மறு வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

உணவு பாதுகாப்பை உறுதி செய்ய முறையான ஏற்பாடு
உணவு பாதுகாப்பை உறுதி செய்ய முறையான ஏற்பாடு
வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்துவந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும்
சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.
இதனையடுத்து குறித்த செய்தி தொடர்பில் தகவல்களைப் பெற ஜனாதிபதி அலுவலகம் நடவடிக்கை எடுத்தது.
• பாடசாலை மாணவர் ஒருவர் மதிய உணவிற்கு தேங்காய்த் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை.
இதன்படி, மினுவாங்கொடை பிராந்திய பணிப்பாளர் வஜிர ரணராஜா, கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ. சத்தியானந்த, திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர், மினுவாங்கொடை கல்வி வலய திவுலப்பிட்டி கல்விப் பிரிவின்
பணிப்பாளர், கொங்கொடமுல்ல புனித அந்தோனியார் கனிஷ்ட கல்லூரியின் அதிபர் ஆகியோரிடமிருந்து தகவல்கள் பெற்றப்பட்டன.
அத்துடன், மாணவி வாழும் பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் இருந்தும் தகவல்கள்
பெறப்பட்டன. எனினும், இந்தத் தகவல்களின்படி அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் அப்பகுதியில் பதிவாகவில்லை என்று உறுதியாகியுள்ளது.
உணவு பாதுகாப்பை உறுதி செய்ய முறையான ஏற்பாடு
எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நிலைமைக் காரணமாக உணவு நெருக்கடி ஏற்பட்டால் இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எந்தவொரு குழந்தையோ, நபரோ அல்லது குடும்பமோ உணவு நெருக்கடிக்கு உள்ளானால் இதற்குத் தீர்வு காண விசேட வேலைத்திட்டமொன்று பிரதேச
செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் மட்டத்தில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டப் பிரிவொன்று
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 0114354647 மற்றும் 0114354354 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து 5705/5707 ஆகிய நீட்டிப்பு இலக்கங்களின் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் உதவி பெறத் தகுதியான அளவுகோல்களைக் கொண்ட தரப்பினராக 05க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சமுர்த்தி பயனாளிகளது குடும்பங்கள், ஊனமுற்றோர் மற்றும் நாட்பட்ட
நோயாளர்களைக் கொண்ட குடும்பங்கள், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஏழ்மையான குடும்பங்கள், கணவன் அல்லது மனைவி இல்லாத குடும்பங்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களைக்
உணவு பாதுகாப்பை உறுதி செய்ய முறையான ஏற்பாடு
கொண்ட குடும்பங்கள், ஆரம்பக் கல்வி கூட பெறாத ஏழைக் குடும்பங்கள், கடுமையான உணவுப் பற்றாக்குறையுள்ள குடும்பங்கள் மற்றும் கடுமையான
உணவுப் பஞ்சத்தில் இருக்கும் குடும்பங்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வாறான குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் மாதாந்தம் 15,000 ரூபாவை கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக
வழங்க முடியும். அதற்கமைய முதல் 03 மாதங்களுக்கு பணம் வழங்கப்படுவதுடன் மேலும் 06 மாதங்களுக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதுதவிர மாதந்தோறும் 10,000 ரூபா வீதம் 6 மாதங்கள் வரை கொடுப்பனவு வழங்க அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் உள்ளடங்காத மற்றும் தற்சமயம் உணவு கிடைக்காமல் தவிக்கும்
குடும்பங்கள் இருப்பின் அவர்களுக்கு குறுகிய காலத்தில் உணவு வழங்க வாய்ப்பு உள்ளது. கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக
ஜனாதிபதி செயலகத்தின் உணவு பாதுகாப்பு திட்டப் பிரிவுக்கு கோரிக்கை முன்வைக்க வேண்டும்.
மேலும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்களைக் கொண்ட குடும்பங்கள் இருந்தால், அது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, அத்தகைய
குடும்பங்களுக்கு அரசாங்கம் செயல்படுத்தி வரும் பெற்றோர் பாதுகாவலர் திட்டங்கள் மூலம் உணவு உதவித் திட்டங்கள் வழங்கப்படும்.
மேலும், உணவின்றி தவிக்கும் குடும்பங்கள் பற்றிய தகவல்களை பாடசாலை ஆசிரியர்களும் சேகரித்து, ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்ப முடியும்.
அத்தகைய குடும்பங்களுக்கு உதவ விரும்புபவர்களும் இதில் இணைந்து உதவி வழங்க முடியும்.
அதுமட்டுமின்றி கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்துடன்
தொடர்பு கொண்டு இந்த வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்ய முடியும்.
இலங்கைக்கு உதவுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி
இலங்கைக்கு உதவுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை
வழங்குவதாக வெளிநாட்டு தூதவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர்.
கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியைப் பெறுவது தொடர்பில் ஜனாதிபதி வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளித்தார்.
இலங்கைக்கு உதவுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவதற்கும், கடன்
மறுசீரமைப்பிற்கும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.
• நெருக்கடியில் இருந்து இலங்கைக்கு மீள முடியும் என்று வெளிநாட்டுத் தூதுவர்கள் நம்பிக்கை!
பரிஸ் க்ளப் (Paris Club) மற்றும் பரிஸ் க்ளப்பில் அங்கத்துவம் அல்லாத 23 நாடுகளின் தூதுவர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இலங்கை நிச்சயம்
இப்பிரச்சினையிலிருந்து மீண்டெழும் என்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் இதன்போது நம்பிக்கை வெளியிட்டனர்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தேவையான
அனைத்து அர்ப்பணிப்புக்களை செய்து வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது வெளிநாட்டு தூதுவர்களிடம் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முன்னேற்றம் குறித்து நிதியமைச்சின் செயலாளர் மகிந்த
சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இதன்போது விளக்கமளித்தனர்.
இதனையடுத்து, வெளிவிவகார தூதுவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, எதிர்கால சந்ததியினருக்காக தற்போதைய நெருக்கடியை , வெற்றிகொள்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என
கேட்டுக்கொண்டார். இதற்காக அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடனும், சமத்துவத்துடனும் பணியாற்றும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தாரக்க பாலசூரிய,
ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட
ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் தலைவருமான சாகல ரத்நாயக்க,
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜயவர்தன உள்ளிட்ட பல அரசாங்க அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
காணி அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும் இம்ரான் எம் பி
இன ஒற்றுமையை பாதிக்கின்ற, காணி அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும்.- இம்ரான் எம் பி அரசாங்கத்திடம் வேண்டுகோள்.
பைஷல் இஸ்மாயில் –
தற்போது நாட்டில் சிலர் வீரப்பேச்சுக்களை பேசித்திரிந்தாலும் பொருட்களில் விலைகளை கட்டுப்படுத்தமுடியாமல் இருப்பதாகவும், பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும், சில பொருட்கள் மாபியா அடிப்படையில்
விற்கப்படுவதாகவும், தற்போது வைத்தியசாலைகளில் மருந்து பொருட்கள், ஏனைய வசதிகள் பற்றாக்குறையாக காணப்படுவதால் மக்கள் தனியார்
வைத்தியசாலையை நோக்கி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மக்கள் பாரிய அளவில் கஸ்டப்படுவதாகவும்
செவ்வாக்கிழமை (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பா உ இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
காணி அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும் இம்ரான் எம் பி
மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போது மக்கள் பல துன்பங்கள், துயரங்கள் அடைந்துள்ள சந்தர்ப்பத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூர் பிரதேசத்திற்குட்பட்ட இக்பால் நகர், உல்லைக்குளம் காணிகளில் வாழும்
தமிழ், முஸ்லிம் மக்களுடைய இன ஒற்றுமையை பாதிக்கின்ற வகையில் காணிப்பிரச்சினைகளை உருவாக்கி இன பிரச்சினைகளை உருவாக்க சில
நாசக்கார சக்திகள் முயற்சிப்பதாகவும் அது உடன் நிறுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், குச்சவெளி பிரதேசத்திற்குரிய சில காணிப்பரப்புகளை
கோமரன்கடவள பிரதேசத்திற்கு உள்வாங்குவதாக சொல்லி சில
அதிகாரிகள் அளவிட அந்த இடங்களில் வருகின்ற போது மக்களுக்கிடையில்
பிரச்சினை உருவாகுவதாகவும் இந்த நாடு சென்று கொண்டிருக்கின்ற இந்த சூழ்
நிலையில் இன ஒற்றுமையை பாதிக்கின்ற செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும்
எனவும் அதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நினைவூட்டல்REMINDER: மெல்பேர்ன் சிட்னிபிறிஸ்பேன் பேர்த் அடிலெயிட் தியாகி தீலீபனின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்
நினைவூட்டல்REMINDER: மெல்பேர்ன் சிட்னிபிறிஸ்பேன் பேர்த் அடிலெயிட் தியாகி தீலீபனின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்
வணக்கம்!
அன்பான உறவுகளே,
தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 35ம் ஆண்டு நினைவு நிகழ்வான தியாக தீப கலை மாலை நிகழ்வு, எதிர்வரும்
செப்ரம்பர் மாதம் 25ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்னில் இடம்பெறவுள்ளது. ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான்.
உடனயாக தீர்வு காணப்படவேண்டிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம், எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான
அர்ப்பணிப்பாகியது. பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Details of the THIYAAGI THILEEPAN’s Melbourne Memorial Event are:
இடம்: Victorian Tamil Community Centre Palmyra Hall, 40-44 Lonsdale Street, Dandenong, Vic 3175.
காலம்: 25/09/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 – 8 மணி.
தொடர்புகளுக்கு: 0433 002 619
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்டோரியா
விசர் நாய் ஊசிகளுடன் இலங்கை வந்தடைந்த சீனா விமானம்
விசர் நாய் ஊசிகளுடன் இலங்கை வந்தடைந்த சீனா விமானம்
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானம் ஒன்று இன்று (23) இலங்கையை வந்தடைய உள்ளது.
06 மாதங்களுக்கு போதுமான விசர் நாய் தடுப்பூசிகளும் இந்த மருந்துகளுடன் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் இணைப்பதிகாரி வைத்தியர்; அன்வர் ஹம்த்ரானி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுநீரக நோயாளிகள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளும்; அதே விமானத்தில் கொண்டு வரப்படுகிறது.
சுகாதார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த மருந்துப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பெறுமதி சுமார் 500 மில்லியன் ரூபாவாகும்.
அகதிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட குழு நியமனம்
அகதிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட குழு நியமனம்
இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள மற்றும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான விசேட
வேலைத்திட்டமொன்றை இழப்பீடுகளுக்கான அலுவலகத்துடன் இணைந்து நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு
அமைச்ச ஆரம்பித்துள்ளது. அதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா தலைமையில் விசேட குழுவொன்று
நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவானது நாடு திரும்பியவர்களுக்கு உரிய ஆவணங்களை தாமதமின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட குழு நியமனம்
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள்
மற்றும் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
ஆவண ஆதாரங்களை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் பங்களிப்புடன் ஒக்டோபர் மாதம் வடக்கு மாகாணத்தில் நடமாடும் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்தல்.
தற்போது கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்தால் கையாளப்படும் குடியுரிமை பெறுவது தொடர்பான ஆவணங்களை மாவட்ட செயலக மட்டத்தில் ஏற்றுக்கொள்வது.
அகதிகள் இந்த ஆவணங்களில் சிலவற்றைச் சமர்ப்பிப்பது கடினமாக இருப்பதால், குடியுரிமையைப் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் சரிபார்ப்புப் பட்டியலைத் திருத்துதல்.
சான்றிதழைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் அபராதத் தொகையை ரத்து
செய்தல் மற்றும் குறைத்தல் ஆகிய பணிகளை முன்னெடுக்க இந்த குழுவுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் கிழக்கு Kupiansk பகுதிகள் முன்னரங்க நிலைகள் மீது ,ரசியா
இராணுவத்தினர் மீளவும் ,தாக்குதல்களை தொடுத்துள்ளனர் .
இழந்த பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் ,ரசியா இராணுவம் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .
உக்கிரேன் கிழக்கு பகுதிகள் நிலைகள் மீது ரசியா
இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .
இந்த அகோர வெடிகுண்டு ஏவுகணை தாக்குதல்கள் ,மீளவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பத்து லட்சம் மக்களை மீளவும் போரில் ஈடுபடுத்தி ,உக்கிரேனை
ஆக்கிரமிக்க முனையும் ,ரசியாவின் திட்டம் ,உக்கிரேன் மக்கள் மத்தியில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

ரஷியாவில் வெடித்த போராட்டம் 1300 பேர் கைது
ரஷியாவில் வெடித்த போராட்டம் 1300 பேர் கைது
ரஷியாவில் மக்கள் உக்கிரேன் போருக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாய,
சட்டம் அமூல் படுத்த பட்ட நிலையில் மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் .
ஜனாதிபதி பிளாடீ மீர் புட்டின் இந்த புதிய சட்ட விதிப்பால் மக்கள் மிக பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
இதுவரை 1300 பேர் ஆயுதம் தரித்த காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் காவல்துறையினரால் தாக்க பட்டு வருவதாக மேற்குலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன .
புட்டீன் பதவி விலக வேண்டும் என்கின்ற கோரிக்கையும் ,இங்கு பிரதானமாக முன் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
கருங் கடலில் உலாவும் ரசியா கடல் உளவு கப்பல் விமானம்
கருங் கடலில் உலாவும் ரசியா கடல் உளவு கப்பல் விமானம்
கருங் கடலில் உலாவும் ரசியா கடல் உளவு கப்பல் விமானம்
கருங்கடல் பகுதியில் ரசியாவின் உளவு கடல் விமானம் வேக படகு உலாவுவது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
உக்கிரேன் மீதான போரினை அடுத்து, ரசியாவின் நீர் மூழ்கி கப்பல்கள் வடிவில் அமைக்க பட்ட சிறிய
படகுகள் இவ்விதம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன .
இவை கடல்களில் உலாவும் கப்பல்கள் மற்றும் கண்ணிவெடிகள் என்பனவற்றையும்
கண்டறிந்து தகவல்கள் தரவல்லது எனப்படுகிறது .
கருங்கடல் பகுதி கடந்து ரசியாவின் ,இவ்விதமான படகுகள் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளது .
ரசியா விரைவில் மிக பெரும் போரினை உக்கிரேன் மீது
தொடுக்க போகிறது என்பதை காண்பிக்கிறது என்பதை கோடிட்டு காட்டுகிறது.
குளிர்கால பகுதியில் ரசியா மிக பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் அபாயம் இதன் மூலம் எழுந்துள்ளது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

இலங்கையில் இராணுவம் குவிப்பு மக்கள் மத்தியில் பதட்டம்
இலங்கையில் இராணுவம் குவிப்பு மக்கள் மத்தியில் பதட்டம்
இலங்கையில் இராணுவம் எங்கும் திடீரென குவிக்க பட்டுள்ளதால் ,மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் ,விடுக்க பட்ட அறிவித்தலை அடுத்து இராணுவம் குவிக்க பட்டுள்ளது .
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இவ்வாறு இராணுவம்வீதி எங்கும் குவிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மக்கள் போராட்டங்களை நசுக்கிட ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இராணுவம் குவிக்க பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
யாழில் வெளிநாட்டு பெண்ணை கற்பழிக்க துரத்திய 10 பேர் கைது
யாழில் வெளிநாட்டு பெண்ணை கற்பழிக்க துரத்திய 10 பேர் கைது
யாழ்ப்பாணம் கரை நகர் பகுதிக்கு வருகை தந்த ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவர் மீது அங்கு கூடிய பத்து பேர் கற்பழிக்க தொந்தரவு தருவித்துள்ளனர் .
பாதிக்க பட்ட பெண் காவல்துறையினருக்கு வழங்கிய ,தகவலின் அடிப்படையில் ,தற்போது நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது .
வெளிநாட்டு பெண்ணின் முறைப்பாட்டின் அடிப்படையில் பத்து பேரும் கைது செய்யப்பட்டு ,காவல்துறை விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளனர்
காரைநகர் கோவலன் கடற்கரை பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து .
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் கிழக்கு Kupiansk பகுதிகள் முன்னரங்க நிலைகள் மீது ,ரசியா இராணுவத்தினர் மீளவும் ,தாக்குதல்களை தொடுத்துள்ளனர் .
இழந்த பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் ,ரசியா இராணுவம் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .
உக்கிரேன் கிழக்கு பகுதிகள் நிலைகள் மீது ரசியா இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .
இந்த அகோர வெடிகுண்டு ஏவுகணை தாக்குதல்கள் ,மீளவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பத்து லட்சம் மக்களை மீளவும் போரில் ஈடுபடுத்தி ,உக்கிரேனை
ஆக்கிரமிக்க முனையும் ,ரசியாவின் திட்டம் ,உக்கிரேன் மக்கள் மத்தியில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்
இலங்கையில் மீளவும் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது எச்சரிக்கை விடுக்க படுகிறது .
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ,அதன் காரணமாக எழுந்துள்ள எரிபொருள்தட்டு பாடு காரணமாக வேலைவாய்ப்பு இழக்க பட்டுள்ளது .
இந்த தொழில் நிறுவனங்கள் பலநூறு அடித்து பூட்ட பட்டுள்ளதல் ,மக்கள் தமது வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது .
இதன் தொடர்ச்சி மேலும் நீடித்து சென்றால் விவசாய துறை பாதிக்க படுகிறது .
நாட்டில் இறக்குமதி நெருக்கடி நிலை ஏற்படும் பொழுதும், இவ்விதமான பாரிய உணவு பற்றாக்குறை ஏற்படும் என்கிறது ஆய்வு ஒன்று .
இவ்வாறான பாரிய நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பாக ,இலங்கை சுதாகரித்து எழுச்சி கொள்ளுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .
அவ்வாறான நிலை நீடிக்கும் அபாயம் இலங்கையில் ஏற்படும் எனப்படுகிறது .
கடற்கரை மிதந்த ஆணின் சடலம் நடந்தது என்ன
கடற்கரை மிதந்த ஆணின் சடலம் நடந்தது என்ன
இலங்கை மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பகுதியில் ,ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது .
சடலமாக மீட்க பட்டவர் 45 வயதுடையவ தமிழர் என கண்டறிய பட்டுள்ளது .
சடலமாக மீட்க பட்டவர் கொலை செய்யப் பட்டாரா .அல்லது இயற்கையாக
இறந்தாரா என்பது தொடர்பில் காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
வவுனியா யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் விபச்சாரம் கொட்டல்கள் உடந்தை
வவுனியா யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் விபச்சாரம் கொட்டல்கள் உடந்தை
இலங்கை வவுனியா யாழ்ப்பாண பகுதிகளில் சில மாதங்களாக விபச்சாரம்
அதிகரித்து செல்கிறது
வவுனியா யாழ்ப்பாணத்தில் உள்ள சில கொட்டல்கள் இந்த விபச்சாரத்தின் பின் புலத்தில் உள்ளதாகவும் ,அவர்களே இதன் முகவர்களாக செயல் பட்டு வருகின்றனர் என்கிறது சில தரப்பு .
தற்கால இலங்கையின் பொருளாதாரத்தை மைய படுத்தி ,இந்த விபச்சாரம் மேலும் அதிகரித்து காணப்படுகிறதாம் .
வேலைவாய்ப்பை இழந்த மக்கள் ,தமது வாழ்வாதாரத்தையும் ,பட்ட கடன்களை வேறு வழியின்றி ,இதன் ஊடாக நிவர்த்தி செய்து வருவதாக .தெரிவிக்க படுகிறது .
ஒழுக்கத்துடன் வாழ்ந்த தமிழர் இனம் , இன்று ,உடல் விற்று பிழைக்கும் நிலைக்கு வித்திட்டுள்ள கால கொடுமைக்கு காரணமானவர்கள் யார் ..?























