Posted in இலங்கை செய்திகள்

44 ஆயிரம் பேர் கைது

44 ஆயிரம் பேர் கைது

நாட்டில் கடந்த 7 மாத காலத்தில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய

சுமார் 44 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இத்தகைய குற்றங்களைக் குறைப்பதற்கு, உரிய சட்டதிட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தற்போது

கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், சட்டங்களை இறுக்கமாக்குவதன் ஊடாக போதைப்பொருட்களற்ற ஒரு

இலங்கையைக் கட்டியெழுப்புவது இதன் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும்

முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் கொழும்பிலுள்ள பாதுகாப்பு

அமைச்சில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் கலந்துகொண்ட போதே பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைக் குறிப்பிட்டார்

      Posted in இலங்கை செய்திகள்

      இதொக வின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்

      இதொக வின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்

      இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.​

      ஹட்டன், கொட்டகல பகுதியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி அலுவலகத்தில் இன்று (17) காலை கட்சியின் நிர்வாக சபை கூட்டம் இடம்பெற்றது.

      இதன்போது ஜீவன் தொண்டமானை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க அனைவரும் ஏகமனதாக ஒத்துக் கொண்டுள்ளனர்.

      அத்துடன் இதுவரையில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அனுஷா சிவராஜா கட்சியின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுளள்தாக தெரிவிக்கப்படுகின்றது.

          Posted in இலங்கை செய்திகள்

          போதையில் கிணற்றில் விழுந்து பலி

          போதையில் கிணற்றில் விழுந்து பலி

          வெலிமட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பில்லகடே, மல்பொத்த பகுதியில் கிணற்றில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

          மல்பொத்த, மீரகஹவத்த பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

          குறித்த நபர் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

          கிணற்றில் விழுந்த நபரை பிரதேசவாசிகள் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.

              Posted in இலங்கை செய்திகள்

              உமா ஓய பணிகளை நிறைவுசெய்ய ஈரானிலிருந்து 85 பேர் வருகை

              உமா ஓய பணிகளை நிறைவுசெய்ய ஈரானிலிருந்து 85 பேர் வருகை

              உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் பணிகளை

              நிறைவுசெய்ய ஈரானிலிருந்து 85 தொழிநுட்பவியலாளர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

              இவர்கள் நேற்று முன்தினம் (15) பிற்பகல் 6.00 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.

              உமா ஓய திட்டத்தின் சுமார் 95 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள வேலைகளை இவ் வருட

              டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

              இத்திட்டத்தின் ஊடாக 120 மெகா வோட் நீர் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது. வருகை தந்தவர்கள் PCR

              பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் இராணுவத்தினரால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டனர்.

              தனிமைப்படுத்தல் காலப்பகுதிக்கு பின்னர் இரண்டாவது முறையாகவும்

              PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் திட்டப் பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

                  Posted in இலங்கை செய்திகள்

                  பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் சுத்தம் செய்யப்பட வேண்டும்

                  பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் சுத்தம் செய்யப்பட வேண்டும்

                  பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கை தற்போது

                  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

                  எதிர்வரும் தினங்களில் கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகளை சுத்தம் செய்து முடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

                  அத்துடன் ஜூன் 29 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரையில் ஏனைய பாடசாலைகளை சுத்தம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                      Posted in உலக செய்திகள்

                      கொரோனா மருந்து கண்டுபிடிப்பு – இங்கிலாந்து சாதனை

                      கொரோனா மருந்து கண்டுபிடிப்பு – இங்கிலாந்து சாதனை

                      கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான மருந்தை இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

                      கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு – இங்கிலாந்து சாதனை
                      கோப்பு படம்

                      உலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

                      இந்நிலையில், கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான மருந்தை இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

                      டெக்சாமெத்தசோன் எனப்படும் இந்த மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொண்டால் அவர்களது இறப்பு விகிதம் குறைகிறது.

                      பரிசோதனை முயற்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 6 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேருக்கு டெக்சாமெத்தசோன் மருந்து

                      கொடுக்கப்பட்டது. இந்த மருந்தை எடுத்துக்கொண்ட வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்:

                      வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களில் உயிரிழப்பு வாய்ப்பு 40 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக குறைந்துள்ளது.

                      ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்பவர்களில் உயிரிழப்பு வாய்ப்பு 25 சதவிகிதத்தில் இருந்து 20 ஆக குறைந்துள்ளது.

                      இந்த மருந்து கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகித்தை வெகுவாக குறைத்துள்ளது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளர் பீட்டர் தெரிவித்துள்ளார்.

                      டெக்சாமெத்தசோன்

                      மேலும், இந்த டெக்சாமெத்தசோன் மருந்து குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட மூத்த ஆராய்ச்சியாளர் மார்ட்டின் லேட்ரியின் ஆராய்ச்சியில்,

                      சராசரியாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் 8 பேரில் ஒருவர் உயிர் இந்த மருந்தால் காப்பாற்றப்படுகிறது.

                      சராசரியாக ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் 20 பேரில் ஒருவரது உயிர் இந்த மருந்தால் காப்பாற்றப்படுகிறது என்ற தகவலை கண்டுபிடித்துள்ளார்.

                      இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த டெக்சாமெத்தசோன் மருந்து உலக அளவில் பெரும்பாலான

                      நாடுகளிடம் உள்ளதாகவும், இந்த மருந்துக்கான செலவும் மிகவும் குறைவு
                      எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

                      கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான டெக்சாமெத்தசோன் மருந்து நிச்சயம் பலன்

                      அளிக்கும் என இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

                          Posted in உலக செய்திகள்

                          இந்தியாவும், சீனாவும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் – ஐ.நா வேண்டுகோள்

                          இந்தியாவும், சீனாவும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் – ஐ.நா வேண்டுகோள்

                          இந்தியா, சீனா இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளது.

                          இந்தியாவும், சீனாவும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்


                          ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ்
                          ஜெனிவா:

                          இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக்

                          எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

                          இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


                          சீனா தரப்பில்உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்த வீரர்களின் மொத்த எண்ணிக்கை 43 என எ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

                          இந்த மோதலால் இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் நிலவி வருகிறது.

                          இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.

                          கோப்பு படம்

                          இது குறித்து அண்ட்டோனியாவின் துணைச்செய்தித்தொடர்பாளர் இர் ஹனிஹொ தெரிவித்ததாவது:-

                          இந்தியா-சீன எல்லையில் நடைபெற்ற வன்முறை மற்றும் உயிரிழப்புகள் மிகுந்த கவலை அளிக்கிறது. இரு நாடுகளும்

                          அதிகபட்ச கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

                          பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் ஆறுதல் தரும் நிகழ்வுகளாக எடுத்துக்கொள்கிறோம்.

                              Posted in உலக செய்திகள்

                              இந்தியா-சீன எல்லையில் மோதல் – தமிழக வீரர்பலி

                              இந்தியா-சீன எல்லையில் மோதல் – 20 இராணுவம் பலி

                              எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

                              எல்லையில் சீன ராணுவம் தாக்குதல்- தமிழக வீரர் வீரமரணம்
                              தமிழக வீரர் பழனி

                              இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக்

                              எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்குமிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

                              இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த

                              பழனியும் (வயது 40) ஒருவர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி, கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

                              மோதலைத் தொடர்ந்து எல்லைப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

                              இந்தியா-சீன எல்லையில்
                              இந்தியா-சீன எல்லையில்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  யாழில் சிதறிய தீயணைப்பு வண்டி – ஒருவர் பலி

                                  யாழில் சிதறிய தீயணைப்பு வண்டி – ஒருவர் பலி

                                  யாழ்ப்பாணத்ம் பருத்துறை மாமலக்காடு பகுதியில் பற்றி பிடித்த தீயினை அணைக்க விரைந்து சென்ற தீயணைப்பு வண்டி ஒன்று

                                  சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதால் ,அந்த வாகனத்தை

                                  ஓட்டி சென்ற சாரதி பலியாகியுளளார் .மேலும் அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்

                                  மக்களை காப்பாற்ற விரைந்த வண்டி ,இவ்விதம் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                  யாழில் சிதறிய தீயணைப்பு
                                  யாழில் சிதறிய தீயணைப்பு
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      அமெரிக்கா அரசுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசு – கடும் கண்டனம் – பயத்தில் டிரம்ப்

                                      அமெரிக்கா அரசுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசு – கடும் கண்டனம் – பயத்தில் டிரம்ப்

                                      சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பன்னாட்டுக் குற்றங்களுக்கு நீதி கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான

                                      காவல்துறை மிருகத்தனத்தையும் ஊறிப்போன இனவெறியையும் எதிர்த்து நாள்தோறும் தெருவிலிறங்கிப் போராடும் கிளர்ச்சியாளர்களுக்குத் தோழமை தெரிவித்துள்ளது.


                                      வெள்ளைக் காவல்துறை அதிகாரி ஒருவரால் ஆபிரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் பிளோய்டு மிருகத்தனமான முறையில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கிளர்ச்சிகள் நடந்து

                                      வருகின்ற நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

                                      சிறிலங்கா எனப்படும் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களாகிய ஈழத்தமிழர்கள் மனிதத் தன்மையற்ற அமைப்புசார் இனவெறிக் கொடுமையின் வலியை நன்கறிவார்கள். ஏனெனில் 1948இல்

                                      இப்போது சிறிலங்கா எனப்படும் சிலோன் தீவு பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்ற நாள் முதல் சிங்கள பௌத்தப்பேரினவாதிகளின் கைகளிலும் பேரினவாத

                                      நிறுவனங்களின் கைகளிலும் அவர்கள் இந்த இனவெறிக் கொடுமையைப் பட்டறிந்தவர்கள்.

                                      ஆண்டாண்டு காலமாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வரும்போதும் அடக்கியொடுக்கப் பட்டவர்களாகவே இருப்பது எப்படி இருக்கும் என்பதை ஈழத் தமிழர்கள் நன்கறிவார்கள்.

                                      ‘போதும் நிறுத்து!’ என்ற முழக்கத்தோடு தெருவிலிறங்கிப் போராட எவ்வளவு துணிவும் உறுதியும் வேண்டும் என்பதையும் ஈழத் தமிழர்கள் அறிவார்கள். அறுபதுகளிலிருந்து சிறிலங்காவில் இன

                                      பாகுபாட்டுக் கெதிராகப் போராடிய தமிழ் மாணவர்கள் மீது காவல்துறை ஏவிய மிருகத்தனத்தையொட்டித் துணிந்து தெருவிலிறங்கியவர்கள் ஈழத்தமிழர்கள். அந்த நேரத்தில்தான்

                                      இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு சி, கதிரவேற்பிள்ளை அவர்கள் இலங்கையின் இனவெறியைத் தென் ஆபிரிக்காவில் கண்ட அப்பார்த்தேயிட்

                                      இனவெறியுடன் ஒப்பிட்டுப் பார்த்ததோடு ‘சிறிலங்காவில் இனவெறி தோலில் ஒட்டியிருப்பதன்று, அது ஆன்மாவில் ஆழ ஊன்றியிருப்பது’ எனச் சொன்னார்.

                                      அந்நாட்டின் இனவெறிப் பாகுபாடு கல்வித்துறை உட்பட வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பரந்து ஊறிக் காணப்படும் ஒன்று. தரப்படுத்தல் என்ற பெயரிலும் ‘சிங்களம் மட்டும்’ என்ற

                                      சட்டத்தினூடாக வேலை வாய்ப்பு வழங்கலிலும், நிலப் பறிப்பு மூலம் குடியேற்றம் செய்வதிலும் பல வடிவங்களில் இது வெளிப்படுத்தப் படுகிறது. சிறீலங்காவின் இன்றைய ஆட்சி கடந்த வாரத்தின்

                                      போதும் கூட புதைபொருள் ஆய்வு, பாரம்பரியம் பேணல் என்ற பெயர்களில் எல்லாம் புதிய செழுமையான தோற்றம் கொண்ட நிலப்பறிப்பு முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது.

                                      மேற்கூறிய அதே ஆன்ம நோய் அமெரிக்காவிலும் உள்ளது. அமெரிக்காவில் இனவெறி அந்நாடு அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே தொடங்கியது போலவே சிறிலங்காவிலும்

                                      உள்ளது. 2017ஆம் ஆண்டு மனிதவுரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் போற்றிக் காத்தல் பற்றிய அப்போதைய சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் சிறிலங்கா போய்வந்த பிறகு

                                      ‘சிறிலங்காவின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ‘தமிழ் மக்களுக்கு எதிராக அளவுகடந்து’ பயன்படுத்தப்படுகிறது. சிறிலங்காவில்

                                      தமிழர்கள் ‘அரசின் திறமான சித்திரவதைப் பொறியின் தாக்குவிசையைத் தாங்கியுள்ளனர்’ எனக் கூறினார்.

                                      பாகுபாட்டிலிருந்து விடுபடும் உரிமை ஓர் அடிப்படை உரிமை. அனைத்து வகை இனப்பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தம் 1965ஆம் ஆண்டு ஐநா பொதுப் பேரவையால்

                                      இயற்றப்பட்டது. அது கூறுவதாவது: உலகளாவிய மனிதவுரிமைப் பிரகடனம் பறைசாற்றுவது என்னவென்றால், மாந்தப் பிறவிகள் அனைவரும் பிறப்பால் உரிமையும் நிகர்மையும் உடையவர்கள்,

                                      அதில் பொறிக்கப்பட்டுள்ள உரிமைகள், விடுமைகள் அனைத்துக்கும் உரித்துடையவர்கள். எவ்வித வேறுபாடும் இல்லாமல், குறிப்பாக இனம், நிறம், அல்லது பிறந்த நாடு

                                      தொடர்பான எவ்வித வேறுபாடும் இல்லாமல் உரித்துடையவர்கள். அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் விரைந்து

                                      ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து நடைபடிகளும் எடுக்கத் தீர்மானிக்கப்படுகிறது.

                                      அனைத்து வகையான இனப் பாகுபாட்டையும் ஒழிப்பது பற்றிய பன்னாட்டு ஒப்பந்தத்தை ஐநா உறுப்பு நாடுகள் இயற்றி 50 ஆண்டுக்கு மேலாயிற்று. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல

                                      நாடுகளில் இனவெறி ஆழ வேரூன்றிப் பரவலாகத் தலைவிரித்தாடுகிறது. அமெரிக்காவில் இனவெறி என்பது சட்டச் செயலாக்கத்தில் மட்டுமல்லாமல், பொது நல்வாழ்வு, பொது வீட்டு

                                      வசதி போன்ற சமூகப் பணியிலும், பெருங்குழுமத் தொழில்வணிகக் களத்திலும், பிறவகையிலும் கூட வெளிப்படுகிறது. கொவிட்-19

                                      நோய்க்கு இரையாகியுள்ள கறுப்பின மக்களின் தகவுமீறிய பெருந்தொகை இந்த உண்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.

                                      சிறிலங்காவும் அமெரிக்காவும் எதில் வேறுபடுகின்றன என்றால், அமைதியான போராட்டக்காரர்கள் வெற்றிகரமாக மாற்றம் ஒன்றை ஏற்படுத்திய வரலாற்றைக்கொண்ட ஒருசில நாடுகளில்

                                      அமெரிக்காவும் ஒன்று என்பதிலாகும். நாடு உருவாக்கப் பட்டதிலிருந்தே இது தொடங்கி விட்டது. பாஸ்டன் தேநீர்

                                      விருந்துதான் அமெரிக்கப் புரட்சிக்கு உந்துதல் ஆயிற்று. பிற்பாடு 1960களில் குடியியல் உரிமைகள் இயக்கத்திலிருந்துதான் 1964ஆம் ஆண்டின் குடியியல் உரிமைகள் சட்டம் பிறந்தது. 1960களில்

                                      ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகள் இயக்கம்தான் ஓரினப்பாலியல் சமுதாயத்தினர் காவல்துறையால் மிருகத்தனமாக

                                      நடத்தப்படுவதில் மாற்றங்கள் ஏற்படச்செய்தார்கள், அத்துடன் அண்மையில் அது திருமண நிகர்மையைக் கொண்டுசேர்த்தது.

                                      ஜார்ஜ் பிளோய்டு கொலையானது அமெரிக்காவில் இனவுறவுகளில் ஒரு திருப்புமுனையைக் குறிப்பதாகும். கைப்பேசிகளில் படம்பிடிக்கப்பட்ட அந்த மனிதத்தன்மையற்ற செயல்

                                      உலகெங்கிலும் கிளர்ச்சிகளைப் பற்ற வைத்தது. இளைஞர்கள் 1960களில் முன்னுக்கு நின்றது போலவே, இப்போதும் டிக்டாக்,

                                      ஸ்னப்ஷாட், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இடுகைகளிட்டு இந்த கிளர்ச்சிகளின் முன்னணிப்படையாகத் திகழ்கின்றனர்.

                                      அமெரிக்காவில் இரண்டாம் தலைமுறை ஈழத்தமிழர்கள் பலரும்கூட இந்தப் போராட்டங்களில் பங்கேற்று வரக் கண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பெருமிதம் கொள்கிறது.

                                      நடப்புக் கிளர்ச்சிகளும் அதேபோன்ற சமூக மாற்றம் நோக்கிய நடைபடிகளுக்கு வழிகோலக் கூடும் என்பதற்கான அறிகுறிகள்

                                      தென்படுகின்றன. சில இடங்களில் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து காவல்துறை அதிகாரிகள் மண்டியிட்ட நிகழ்வு இப்படி

                                      நம்பிக்கையூட்டும் படியான ஓர் அறிகுறியாகும், துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நேற்றைய துன்பகரமான அட்லாண்டா பொலிஸ் மற்றொரு நிராயுதபாணியான கறுப்பின

                                      மனிதனை சுட்டுக் கொன்றது இந்த நம்பிக்கையைத் குறைப்பதோடு மேலும்; பணி எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது. எனவே, காங்கிரஸ் உறுப்பினர்கள்,

                                      பொலிஸ் கமிஷனர்கள் மற்றும் அனைவருமே பொலிஸ் நடத்தை சீர்திருத்தங்களை; செய்வதற்கு உதவும் நிலையில் இருக்க வேண்டும். மேலும் தாமதமின்றி நடவடிக்கை எடுப்பது மட்டுமே

                                      மக்களின் உயிரை மதித்து பாதுகாப்பதைக் காட்டுகிறது. ஆனால், இனவெறி என்பது அமெரிக்கச் சமுதாயத்தில் உள்ளோடியிருக்கிற ஒன்றாய் இருப்பதால் சட்டச் சீர்திருத்தத்தின் ஊடாக மட்டும்

                                      மெய்யான நீடித்த மாற்றம் மெய்ப்படச் செய்து விட முடியாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட விரும்புகிறது.

                                      தனிமனிதர்களின் மனநிலையிலும் பரவலான மாற்றம் ஏற்பட வேண்டும்.

                                      ஆகவே ஒவ்வொரு மனிதரும் தன்னுணர்வில்லாத காழ்ப்பெண்ணங்களை வெளிப்படுத்தத் தேவையான தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

                                      அழைக்கிறது. ஒவ்வொருவரும் வீட்டுப் படி தாண்டாமலே இதைச் செய்து கொள்ள முடியும். எப்போதோ நடந்திருக்க வேண்டிய பண்பாட்டு மாறுதலை இப்போதாவது செயற்படுத்த

                                      ஒவ்வொருவரும் முயற்சி செய்வது இன்றைய அடிப்படைத் தேவையாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

                                          Posted in உலக செய்திகள்

                                          என்னிடம் சொன்னதை செய்யாமலேயே போயிட்டியே சுஷாந்த்…. சானியா மிர்சா உருக்கம்

                                          என்னிடம் சொன்னதை செய்யாமலேயே போயிட்டியே சுஷாந்த்…. சானியா மிர்சா உருக்கம்

                                          பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவிற்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

                                          என்னிடம் சொன்னதை செய்யாமலேயே போயிட்டியே சுஷாந்த்…. சானியா மிர்சா உருக்கம்
                                          சானியா மிர்சா, சுஷாந்த் சிங்


                                          பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட், மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி

                                          உள்ளது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 34 வயதாகும் சுஷாந்தின் திடீர்

                                          மறைவுக்கு பிரபலங்கள் பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

                                          அந்த வகையில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சுஷாந்த் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “சுஷாந்த் மனம்

                                          உடைந்துவிட்டது. ஒரு நாள் நீயும் நானும் சேர்ந்து டென்னிஸ் விளையாடலாம் என கூறினாய். எப்போதும் சிரிப்புடன் இருக்கும்

                                          நபர் நீ. செல்லும் இடமெல்லாம் அனைவருக்கும் சந்தோசத்தை பரப்பினாய். ஆனால் நீ இவ்வளவு வலியுடன் இருந்தாய் என்பது

                                          எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இந்த உலகம் உன்னை நிச்சயம் மிஸ் பண்ணும் என் நண்பரே.” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்

                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                              பிரிட்டனில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

                                              பிரிட்டனில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

                                              இங்கிலாந்து நாட்டின் சோபோஃக்ஸ் நகரில் அந்நாட்டுக்கு சொந்தமான விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. அங்கு நட்பு

                                              நாடான அமெரிக்காவின் போர் விமானங்களும், வீரர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

                                              இந்நிலையில், அங்கு பணியில் இருந்த அமெரிக்க விமானப்படை வீரர் அந்நாட்டுக்கு சொந்தமான எஃப் 15 ஈகில் ரக போர் விமானம்

                                              ஒன்றில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிக்கொண்டிருந்தார்.

                                              வானில் வட்டமிட்டப்படி பறந்து கொண்டிருந்த அந்த போர் விமானம் புறப்பட்ட சிறுது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

                                              இதையடுத்து, விமானத்தை தேடும் பணியை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க படைகள் தீவிரமாக மேற்கொண்டனர்.

                                              இந்நிலையில், யார்க்‌ஷிரின் பகுதியில் இருந்து 74 நாட்டிக்கல் மையில் தொலைவில் போர் விமானம் விபத்துக்குள்ளானதை படையினர் கண்டுபிடித்தனர்.

                                              இந்த விபத்தில் விமானத்தை ஓட்டி சென்ற அமெரிக்க விமானப்படை விமானி உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடலை கைப்பற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

                                              மேலும், இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

                                                  Posted in உலக செய்திகள்

                                                  ராணுவ வீரர்கள், தலிபான் மோதல் – 6 பேர் பலி

                                                  ராணுவ வீரர்கள், தலிபான் மோதல் – 6 பேர் பலி

                                                  ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.

                                                  ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள், தலிபான் பயங்கரவாதிகள் மோதல் – 6 பேர் பலி
                                                  ஆப்கானிஸ்தான் தாக்குதல்

                                                  ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆப்கானிஸ்தானுக்கு

                                                  பக்கபலமாக இருந்து வரும் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தான் அரசும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர தீவிரம் காட்டி வருகின்றன.

                                                  அதன் பலனாக கடந்த பிப்ரவரி மாதம் தலீபான் பயங்கரவாதிகள் இருக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க

                                                  அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உடன்பாடு

                                                  ஏற்படாததால் இந்த அமைதி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

                                                  மாறாக ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள்

                                                  தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

                                                  இந்தநிலையில் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பர்யாப் மாகாணத்தில் ராணுவ வீரர்களுக்கும், தலீபான்

                                                  பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்புக்கும் இடையே பல மணிநேரம் கடுமையான சண்டை நடந்தது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.

                                                      Posted in உலக செய்திகள்

                                                      இந்தியாவில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- இதுவரை 9900 பேர் மரணம்

                                                      இந்தியாவில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- இதுவரை 9900 பேர் மரணம்

                                                      இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 9900 பேர் பலியாகி உள்ளனர்.

                                                      இந்தியாவில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- இதுவரை 9900 பேர் மரணம்
                                                      கொரோனா பரிசோதனை
                                                      புதுடெல்லி:

                                                      இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை

                                                      அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

                                                      இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 343091 பேர் கொரோனாவால்

                                                      பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 10667 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 380 பேர் மரணம்

                                                      அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9900 ஆக உயர்ந்துள்ளது.

                                                      கொரோனா சிறப்பு வார்டு

                                                      இதுவரை 180013 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 10215 பேர் டிஸ்சார்ஜ்

                                                      செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 153178 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

                                                      அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 110744 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 46504 பேருக்கும், டெல்லியில்

                                                      42829 பேருக்கும், குஜராத்தில் 24055 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

                                                          கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

                                                          குவைட்டில் இருந்து வந்து கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண்

                                                          ஒருவருக்கு மீண்டும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று அனுராதபுரம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

                                                          அனுராதபுரம் கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று

                                                          உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார்.

                                                          குறித்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹோமாகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றப் பின்னர்

                                                          கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் மீண்டும் சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் நேற்று

                                                          முன்தினம் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              நடு கடலில் மூழ்கிய படகு -உயிருடன் ஒருவர் மீட்பு

                                                              நடு கடலில் மூழ்கிய படகு -உயிருடன் ஒருவர் மீட்பு

                                                              ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான நான்கு மீனவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

                                                              காணாமல் போன மூன்று மீனவர் குறித்து எந்த வித தகவலும் கிடைக்காததால் தென் கடலோர மீனவக் கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

                                                              கொரோனா மற்றும் மீன்பிடி தடை காலம் காரணமாக 83 நாட்களுக்கு பின் கடந்த சனிக்கிழமை (13) ராமேஸ்வரம் மீன்பிடி

                                                              துறைமுகத்தில் இருந்து 622 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

                                                              இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஹெட்ரோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரெஜின் பாஸ்கர், மலர், ஆனந்த், ஜேசு ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

                                                              வழக்காமாக மீனவர்கள் ஞாயிற்றுகிழமை (14) காலை மீன் பிடித்து விட்டு கரை திரும்பி இருக்க வேண்டும்.

                                                              ஆனால் மூன்று நாட்களுக்கு மேலாக கரை திரும்பாததால் விசைப்படகின் உரிமையாளர் மீன் வளத்துறை அதிகாரிகளிடம்

                                                              படகு மீனவர்களுடன் மாயமானது குறித்து தகவல் தெரிவித்ததுடன் படகையும் மீனவர்கள் நால்வரையும் மீட்டு தரும்படி மனு அளித்தனர்.

                                                              இதனையடுத்து நேற்று (15) காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து இரண்டு படகுகளில் பத்து பேர் மாயமான மீனவர்களை தேடி கடலுக்குள் சென்றனர்.

                                                              ஆனால், மாயமான மீனவர் மற்றும் விசைப்படகுகள் குறித்த தகவல் ஏதும் கிடைக்காதால் மீனவர்னகளின் உறவினா்கள் மீனவர்களை

                                                              தேடும் பணியினை துரிதபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

                                                              இந்நிலையில், இன்று (16) காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்

                                                              பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருந்த போது நடுக்கடலில் மூன்று நாட்களுக்கு முன் மாயமான விசைப்படகு மூழ்கியதில்

                                                              உயிருக்கு போராடிய நிலையில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஜேசு என்ற மீனவரை மீட்டு சிகிச்சைக்காக மணல் மேல்குடி அரசு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

                                                              மேலும் இவருடன் மீன் பிடிக்க சென்று மாயமான மூன்று மீனவர்களை தேடும் பணியில் இந்திய கடலோர காவல் படைக்கு

                                                              சொந்தமான கப்பல் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான உலங்கு வானுர்தி மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறமை குறிப்பிடத்தக்க

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை

                                                                  ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை

                                                                  கொவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட

                                                                  வாகனங்களை மீண்டும் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                                                                  அதற்காக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கம் பதில் பொலிஸ் மா அதிபர் திரு. சீ.டீ. விக்ரமரத்னவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்களுடான இரண்டாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து புறப்பட்டது

                                                                      இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்களுடான இரண்டாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து புறப்பட்டது

                                                                      தமது நாட்டுக்குத திரும்பமுடியாது இலங்கையில் தங்கியிருந்த 156 இந்தியப்பிரஜைகள் நேற்று நாடுதிருப்பினார்கள்.

                                                                      அவர்களை அழைத்து செல்வதற்கென இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானம் நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

                                                                      இதுதொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

                                                                      இந்திய உயர் ஸ்தானிகராலயம்
                                                                      கொழும்பு

                                                                      ஊடக அறிக்கை

                                                                      இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்களுடான இரண்டாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து புறப்பட்டது

                                                                      இலங்கையில் சிக்கியிருந்த 156 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 1202) மூலமாக 2020 ஜூன் 15 ஆம் திகதி கொழும்பிலிருந்து கொச்சி மற்றும் பெங்களூருக்கு பயணமானார்கள்

                                                                      கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு

                                                                      அழைத்துவருவதற்காக இந்திய அரசின் “வந்தே பாரத் மிஷன்” திட்டத்தினுடைய மூன்றாவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப் டிருந்தது.

                                                                      பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜைகளை சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அப்பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காக

                                                                      வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார். அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவதையிட்டு அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததுடன் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகளை சொந்த நாட்டுக்கு

                                                                      அனுப்பும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் ஒத்துழைப்புக்காகவும் நன்றிகளை

                                                                      தெரிவித்தார்..WhatsApp Image 2020 06 15 at 12.33.55 PM 3கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த

                                                                      இந்திய பிரஜைகள் சொந்தநாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல்

                                                                      ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பற் சேவை 2020 மே 29 ஆம் திகதி விசேட ஏர் இந்திய விமானம் ஏனைய பல விசேட விமான சேவைகள் மற்றும்

                                                                      இன்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 1000க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          பொலிஸ் அதிகாரியாக நடித்த வாலிபர் சிக்கினார்

                                                                          பொலிஸ் அதிகாரியாக நடித்த வாலிபர் சிக்கினார்

                                                                          பொலிஸ் அதிகாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சித்த இளைஞன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

                                                                          நேற்று (15) பம்பலப்பிடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் களப்படை தலைமையகத்தில் அமைந்துள்ள சர்வதேச பொலிஸ் சங்கத்திற்கு குறித்த சந்தேகநபர் வருகை தந்துள்ளார்.

                                                                          பின்னர் சர்வதேச பொலிஸ் அடையாள அட்டை ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

                                                                          குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தான் பணியாற்றுவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச பொலிஸ்

                                                                          சங்கத்தின் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நாரஹேன்பிட பொலிஸாருக்கு அறிவித்த பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                                                          கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 23 வயதுடைய கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

                                                                          சந்தேகநபர் இன்று (16) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் நாரஹேன்பிட

                                                                          பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                                              மங்கள, அரசியலிருந்து விலகவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை-மனோ கணேசன்

                                                                              மங்கள, அரசியலிருந்து விலகவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை-மனோ கணேசன்

                                                                              மங்கள, அரசியலிருந்து விலகவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை. சிவில் சமூகத்தில் பணியாற்ற போகின்றார்.

                                                                              மங்களவுடன் உரையாடலையடுத்து மனோ கணேசன்
                                                                              முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தேர்தல் போட்டியிலிருந்து விலகல் எனக்கு கவலையை தந்தாலும், அவர்

                                                                              அரசியலை விட்டு ஓய்வு பெறவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை, சிவில் சமூகத்தில் பணியாற்ற போகிறேன் என்று எனக்கு கூறியதில் மகிழ்ச்சி. அவரது சிவில் சமூக பணியின் மூலம்,

                                                                              இலங்கையர் அடையாளமும், பல்லின பன்மைதன்மை அடையாளமும் இன்னமும் வலுவடைய வேண்டுமென அவருக்கு

                                                                              தான் கூறினேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது டுவீட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

                                                                              இது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களுக்கு மேலும் கூறியுள்ளதாவது,

                                                                              இந்த அரசாங்கம் இன்று பகிரங்கமாக “சிங்கள பெளத்தம் மட்டும்” என்ற கொள்கையை கடைபிடிக்கின்றது. இது இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்கு

                                                                              உள்ளாக்கியுள்ளது. அதேவேளை, இந்நாட்டில் சிங்கள சகோதர மக்களுடன் சகோதரத்துடன், அன்னியோன்யமாக ஒரே நாட்டுக்குள் சமத்துவமாக வாழவே தமிழ் பேசும் மக்கள் இன்று

                                                                              விரும்புகிறார்கள். ஆனால், இந்த ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாகவும், சமத்துவமாகவும் வாழ விரும்பும் எங்களை

                                                                              நிராகரிக்கும் போக்கை அரசு சார்பு தீவிரவாதிகள் கடைபிடிக்கின்றார்கள்.

                                                                              இந்நாட்டில் பெரும்பான்மை மக்களை தவறாக வழிநடத்த முயலும் இவர்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வி இப்போது

                                                                              தமிழ் பேசும் மக்கள் மனங்களில் எழுந்து நிற்கின்றது. இன்று இதற்கு விடை தர ஒரு சிங்கள பெளத்தரான மங்கள தன்னை தயார் செய்கிறார் என எனக்கு தெரிகிறது.

                                                                              தமிழ், முஸ்லிம் மக்களின் மறுக்கப்படும் அரசியல் உரிமைகள் ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின்

                                                                              கல்வித்துறை வாய்ப்புகள், தொழில் வர்த்தக துறை வாய்ப்புகள் ஆகிய எல்லாவற்றிலும், எல்லை மீறிய இடையூறுகள் அடுத்து வரும் ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும் சாத்தியங்கள் தெரிகின்றன.

                                                                              இந்நாட்டில் நடுநிலையாக சிந்திக்கும் சிங்கள பெளத்த சிவில் சமூகத்தை ஒன்றுகூட்டி சிங்கள பெளத்த மக்களுக்கு உண்மைகளை, உலக நடப்புகளை எடுத்து கூறி, ஒரே

                                                                              இலங்கைக்குள், சிங்கள, தமிழ், முஸ்லிம் இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்கும் பணியினை மங்கள செய்வார் என நான் எதிர்பார்க்கிறேன். அதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை

                                                                              வழங்குவோம். இந்நாட்டு, தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்கால சுபீட்சத்துக்காக இதை நாம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு அழிவு நிச்சயம்.

                                                                              பாராளுமன்றத்தில், கட்சி அரசியலுக்குள் இருந்தபடி, இந்த சிவில் சமூக பணியினை தன்னால் செய்ய முடியாது என்றும், வெளியே இருந்தே தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியும் என்றும்

                                                                              உணர்ந்த காரணத்தாலேயே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக எனது நீண்ட நாள் நண்பர் மங்கள சமரவீர எனக்கு தெரிவித்தார்.