Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு

லண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு

பிரிட்டனில் மீளவும் கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் கடைகளில்

பொருட்களுக்கு தட்டு பாடு ஏற்பட்டுள்ளது ,மக்கள் பீதியில்

முண்டியடித்து மீளவும் பொருட்களை வாங்கி குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

உணவு தட்டு பாடு ஏற்படாது என அரசு தெரிவித்து வருகிறது ,இவர்கள்

கூறுவது போன்று தொடர்ந்து ஆறு மாதங்கள் முடக்க பட்டால் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும் ,

சிட்டிக்கு மூன்று மிக பெரும் கடைகள் என்ற வகையில் திறக்க படும் நிலை ஏற்படும் ,அவ்விதம் ஏற்பட்டால் ஒரே இடத்தில மக்கள்

குவியும் நிலை ஏற்படுவதுடன் சமுக இடைவெளி இரு மீட்டர் பின்பற்ற வேண்டும்

அவ்வாறு நோக்கின் மக்கள் பல மைல் கணக்கில் கடைகளுக்கு முன்பாக காத்து கிடைக்கும் நிலை உருவாகலாம் ,அதனை

கருத்தில் கொண்டே மக்கள் இவ்விதம் முந்திகி சென்று பல மாதங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்

இவ்வேளை தமிழர் கடைகள் வழமை போன்று தமது பதுக்கல் நடவடிக்கையில்

ஈடுபட்டுள்ளனர் ,இம்முறை இவர்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்

நிலை ஏற்படும் ,காரணம் ஆறு மாதம் முடக்க பட்டால் பதுக்க பட்ட பொருட்கள் காலவதியாகி விடும்
அபாயம் உள்ளது

எனவே இதனை கருத்த்தில் வைத்து தமிழர் கடைகள் செயல்படுவது சால

சிறந்தது ,மருந்து பொருட்கள் ,அரசி ,மா சீனி ,எண்ணெய் என்பனவே அதிகம் விற்று தீர்கிறது

மக்களே முந்துங்கள் ,வரும் முன் தடுப்போம் உயிரை காப்போம் ,அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி கொள்ளுங்கள்

Posted in உலக செய்திகள்

இரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை

இரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை

பிரிட்டனில் மீள இரண்டாம் அலையாக உருவாக்கம் பெற்றுள்ள கொரனோ

நோயின் தாக்குதலில்
சிக்கி மக்கள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 4,422 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் ,மேலும் நாள் ஒன்றுக்கு நூறு பேருக்கு மேல் பலியாக

நேரிடும் என எச்சரிக்கை பட்டுள்ளது

அவ்விதமான கருத்து வெளியிட படுகிறது எனின் பலி எண்ணிக்கை

தற்போது அதிகரித்துள்ளது என்றே அரசு சொல்லாமல் சொல்கிறது

இவ்விதமான அறிவிப்பு வெளியாகி சில வாரங்களில் லொக் டவுன் ஆரம்பிக்க

பட்டது அதுபோலாவே வரும் இரு வாரத்தில் இருந்து இந்த முடக்கும்

நிலை தொடரலாம் என எதிர்பார்க்க படுகிறது

மக்கள் முந்தி சென்று பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்

,இம்முறை ஊரடங்கு பிறப்பிக்க படவுள்ளது

இரவு பத்துமணிக்கு மேல் மக்கள் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படும்

என்றே கணிக்க முடிகிறது ,எச்சரிக்கை ,வரும் முன் தடுப்போம்

எம்மை காப்போம்

Posted in உலக செய்திகள்

பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ

பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ

இந்தியா மத்திய பிரதேஸ் பகுதியில் காட்டாறு வெள்ளத்தில் சிக்கி

கார் ஒன்று ,பயணிகளுடன் அடித்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது

இவ்வாறு அடித்து செல்ல பட்ட பொழுதும் அதில் இருந்தவர்க்ளின் புத்தி

சாலித்தனம் மற்றும் ,அதிஷ்டாம் காரணமாக அனைவரும் சிறு

காயங்களுடன் உயிர் தப்பியுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

பெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்

பெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்

இந்தியா ராஜஸ்தான் பகுதியில் நாற்பத்தி ஐந்து வயதுடைய குடும்ப பெண்

ஒருவரை ஆறு பேர் கொண்ட குழு ஒன்று கூட்டாக இணைந்து

பாலியல் வல்லுறவு புரிந்து அதனை வீடியோ பிடித்து வெளியிட்டுள்ளனர்

மேற்படி சம்பவத்தில் பாதிக்க பட்ட பெண் காவல்துறையினருக்கு

வழங்கிய தகவலை அடுத்து குறித்த குற்ற செயலை புரிந்த ஆறு பேரும் கைது செய்ய பட்டுள்ளனர்

பாதிக்க பட்ட பெண் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,

இவ்வாறான சம்பவங்கள் இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பாட்டியில் நடந்த துப்பாக்கி சூடு 2 பேர் பலி -14 பேர் காயம்

அமெரிக்காவில் பாட்டியில் நடந்த துப்பாக்கி சூடு 2 பேர் பலி -14 பேர் காயம்

அமெரிக்கா தலைநகர் New York’s Rochester city யில் இடம்பெற்ற பாட்டி

நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி இருவர் பலியாகியும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் சிதறி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது ,


இறந்தவர்களில் பதினெட்டு முதல் இருபத்தி இரண்டு வயதுடைய ஆண்

பெண்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்
இந்த

சம்பம் ஏன் இடம்பெற்றது எனது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள்

சீனாவின் டிக் டாக் ,wechat என்பன அமெரிக்காவில் பாவிக்க தடை

சீனாவின் டிக் டாக் ,wechat என்பன அமெரிக்காவில் பாவிக்க தடை

சீனா அமெரிக்காவுக்கு இடையில் எழுந்துள்ள அரசியல் ,மற்றும் பொருளாதார

போட்டியின் காரணமாக அமெரிக்காவில் வீ சாட் மற்றும் டிக் டாக்

என்பன பயன் படுத்த திடீர் தடை விதிக்க பட்டுள்ளது

குறித்த செயலிகள் அமெரிக்காவில் தரவிறக்கம் செய்திட ஆளும் டிரம்ப் அரசு அதிரடி தடை விதித்துள்ளது


இரு நாடுகளுக்கு இடையில் எழுந்துள்ள இந்த மோதல் நிலவரம்

பிராந்திய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

போதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது

போதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது

இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் விசேட காவல்துறையினர்


நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் பொழுது

அதிக போதையில் வாகனம் ஓடிய 249 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

மேலும் 3,106 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,வீதி ஒழுங்கு நடவடிக்கைகளை

கட்டு படுத்தும் நகர்வில் இலங்கை போலீசார் தீவிரமாக செயல் பட்டு

வரும் நிலையில் இவ்விதமான கைதுகள் தொடராக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்

18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்

அமெரிக்காவில் வீசா முடிவடைந்த பின்னர்

சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த 18 இலங்கையர்கள் மீள தாய் நாட்டுக்கு நெருப்பை வைக்க பட்டுள்ளனர்

இவ்வாறு அனுப்ப பட்டவர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக வான் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

முல்லையில் இராணுவ சிப்பாய் திடீர் மரணம் -இராணுவ முகாமுக்குள் நடந்தது என்ன ..?

முல்லையில் இராணுவ சிப்பாய் திடீர் மரணம் -இராணுவ முகாமுக்குள் நடந்தது என்ன ..?

இலங்கை வடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் முல்லைத்தீவு

பகுதியில் உள்ள இராணுவத்தின் ஐம்பத்தி ஏழாவது படையணியின்

முகாமில் முப்பத்தி ஐந்து வயதுடைய இளம் இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்

இவர் நெஞ்சு வலி காரணமாக இறந்துள்ளதாக இராணுவம்

தெரிவித்துள்ளது ,


காரணம் கொரனோவால் இறந்தார் என்ற செய்திகள் உள்ளூர பரவி வருகிறது

இவரது மரணம் தொடர்பில் உரிய முறை விசாரணைகள்

இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது

பொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது

பிரிட்டனில் கடந்த மூன்று தினங்களில் விசேட குற்ற காவல்துறையினர்

நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 230 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்ய பட்ட வர்களில் அதிகமானவர்கள் போதைவஸ்து

கடத்தல் ,கொலை ,கொள்ளை,கற்பழிப்பு குற்ற சாட்டில் தேட பட்டு

வந்தவர்கள் உள்ளடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Met, Surrey, Kent, Essex, Hertfordshire, Thames Valley, Hampshire, City of

London பகுதிகளில் கடந்த மூன்று திங்களில் இடம் பெற்ற ஒன்பது

வீதி சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பொழுதே இந்த கைது இடம் பெற்றுள்ளது

கார்கள் நம்பர் பிளேட் தானியங்கி முறையில் மாறும் வகையில் செயல் படும் கார்கள் பயன் படுத்த பட்டுள்ளது

அவ்வாறான 54 கார்கள் ,25 கத்திகள்,வாள்கள் ,62 போதைவஸ்து

பொருட்கள் ,மற்றும் ஆறு பிடி விறாந்து பிறப்பிக்க பட்ட ஆவணங்கள் என்பன மீட்க பட்டுள்ளன

தொடர்ந்து இவர்களுடன் தொடர்பில் உள்ள மிக பெரும் முக்கிய புள்ளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

இவர்களிடம் எவ்வாறு துப்பாக்கிகள் வந்து சேர்ந்தன என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

,தப்பி ஓடி கொண்டிருப்பவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

பொலிஸ் அதிரடி வேட்டை
பொலிஸ் அதிரடி வேட்டை
Posted in உலக செய்திகள்

பாரிய நில நடுக்கம் – மக்கள் சிதறி ஓட்டம்

பாரிய நில நடுக்கம் – மக்கள் சிதறி ஓட்டம்

கிரேக் நாட்டில் இன்று இடம்பெற்ற பெரும் நில அதிர்வில் சிக்கி

வீடுகள் குலுங்கியுள்ளன

நில அதிர்வின் பதிவு Magnitude 5.7 ஆக பதிவாகியுள்ளது ,எனினும்

இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

மீட்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளன

சேத விபரங்கள் கிடைக்க பெற்றால் இணைக்க படும்

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in உலக செய்திகள்

தன்னை தானே சுட்டு கொன்ற நபர் – இந்தியாவில் நடந்த பயங்கரம்

தன்னை தானே சுட்டு கொன்ற நபர் – இந்தியாவில் நடந்த பயங்கரம்

இந்தியா டில்லி பகுதியில் ஐம்பது வயதுடைய நபர் ஒருவர் தன்னை

தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்

காருக்குள் இறந்த நிலையில் மீட்க பட்ட சடலம் தற்போது மரண பரிசோதனைக்கு

உட்படுத்த ஏற்பட்டுள்ளது


இவரது இந்த மரணத்திற்கான உடனடி கரணம் தெரியவரவில்லை

தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

எகிறும் கொரனோ – பிரிட்டனில் புதிய மருத்துவமனைகள் தயார்

எகிறும் கொரனோ – பிரிட்டனில் புதிய மருத்துவமனைகள் தயார்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் முகமாக அவசர நடவடிக்கையில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளது

இதற்கு அமைவாக தற்போது Birmingham’s Nightingale Hospital கொரனோ

மருத்துவமனையாக மாற்றம் பெற்றுள்ளது ,எனினும் இங்குள்ள கட்டில்கள் போதாமையால் மருத்துவமனைகள் திணறி வருகிறது

மக்கள் முக கவசங்கள் அணிவதும் ,சமூக இடைவெளியை பின்பற்ற தவறி வரும் நிலையில் இந்த ஏற்பாடுகள் இடம்பெறுகிறது

மக்களே நாட்டினை முடக்கும் நிலைக்கு செல்கின்றனர் என ஆளும் அதிபர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

எகிறும் கொரனோ
எகிறும் கொரனோ
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் ஆறு மாதம் – அடித்து பூட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை

பிரிட்டனில் ஆறு மாதம் – அடித்து பூட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை

பிரிட்டன் நாடு தழுவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது தொற்று நோயாளர்கள் பாதிப்பு அதிகரித்துள்ளது

இதனை அடுத்து நாடு முழுவதும் சுமார் ஆறுமாதம் ,இத்தாலி போன்று அடித்து பூட்டும் நிலைக்கு செல்லும் அபாயம் எழுந்துள்ளது

எனினும் முற்றாக அடித்து பூட்டும் நிலைக்கு செல்லும் அளவு பிரிட்டன்

அதிபர் ஜோன்ஸன் உட்பட மறுத்து வருவதாகவும் ,நிபுணர்கள் எச்சரிக்கையால்

நிலைகளைளுக்கு ஏற்ப அவர் தனது நிலை பட்டைமாற்றி அமைக்க கூடும் என தெரிவிக்க படுகிறது

லண்டன் மேயரும் இந்த் எச்சரிக்கையை விடுத்துள்ளார் ,மக்கள் விதிமுறைகளை பின்பற்ற தயங்கி வருவதன் விளைவே இவை எனப்படுகிறது

மக்களே உசார் பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்

,தற்போது பல்பொருள் அங்காடிகளில்மக்கள் நெரிசல் அதிகரித்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

முக்கியஸ்தரை கொலை செய்ய முயற்சி -எதிரிகள் சுற்றிவளைப்பு

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலை ஆணையாளரை பாதாள குழுவினரின் உதவியுடன் கொலை செய்ய முயற்சி செய்தார் என்ற

குற்றச்சாட்டின் பேரில் குறித்த சிலைச்சாலையின் சார்ஜன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளா​ர்.

குறித்த சார்ஜன் சிறைச்சாலைக்குள் செய்துள்ள விஷமத்தனமான செயற்பாடுகளை முறியடிக்கும் நோக்கில் அவரை வெளிகள

பணிகளில் அமர்த்துவதற்கு சிறைச்சாலை ஆணையாளர் தீர்மானித்திருந்ததாகவும், அதன் காரணமாக ஆணையாளரை

கொலைச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் தெரியவந்துள்ளது.

அதன்படி பாதாள குழு உறுப்பினரும் போதைப்பொருள் வியாபாரியுமான ‘ராமநாயக்க சுத்தா’ என்பவரின் உதவியுடனேயே

இந்த கொலை முயற்சியை மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளதெனவும், இந்த திட்டத்தை ‘ராமநாயக்க சுத்தா’

என்பவர் தனது அடியாட்கள் இருவரிடத்தில் அழைபேசி மூலம் கூறிய பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்த கடைகள் – விசாரணைகள் ஆரம்பம்

இராகலை பிரதான நகரில் இராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதியின் அருகில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், சில்லறை கடை, கோழி கடை தொடர்பாடல் நிலையம் ஆகிய

மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை. பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், இராகலை பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை

கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் பொருள்கள், ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு – இடிந்து வீழ்ந்த வீடுகள்

கொட்டகலை, பத்தனை நகரில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகளும், தொழிற்சங்க அலுவலகமொன்றும் சேதமடைந்துள்ளது.

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலையால் பெய்த கடும் மழையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வீடுகள், தொழிற்சங்க அலுவலகத்துக்கு பின்புறத்திலிருந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் எவருக்கும் காயம்

ஏற்படவில்லை. எனினும், இரு வீடுகளில் இருந்த எட்டு பேர் அங்கிருந்து

வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மேலும், மண்சரிவை அகற்றுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் கொட்டகலை பிரதேச

சபையின் தவிசாளர், உப தவிசாளர் ஆகியோர் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கடும் எச்சரிக்கை

மீனவர்கள் நாளை (19) தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) வரை ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருப்பதாக தேசிய இடர்காப்பு

முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் தாழமுக்க வலயம் காரணமாக, அதன் மத்திய, வடகிழக்கு, கிழக்கு கடற்பரப்பில் கடும

காற்று வீசக்கூடிய சாத்தியம் உள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனைக்

கருத்திற்கொண்டு, இந்தக் கடற்பரப்புக்களில் தொழிலில் ஈடுபடும் கடற்கலங்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான

இடங்களை நோக்கி செல்ல வேண்டும் என திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஆறு பொறியியல் பீடங்களுக்கு இணைத்துக்கொள்ப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

ஆறு பொறியியல் பீடங்களுக்கு இணைத்துக்கொள்ப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டின் பிரதான ஆறு பொறியியல் பீடங்களுக்கு மேலதிகமாக 405 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

பேராதனை, யாழப்பாணம், ருஹூணு, மொரட்டுவை, தென்கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு இந்த மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

உயர்கல்வி அமைச்சில் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் அதிகாரிகளுடன்

கல்வி அமைச்சர் பேராசிரி ஜீ.எல். பீரிஸ் நடத்திய கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

தியாகி தீலீபனின் 33ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்

தியாகி தீலீபனின் 33ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்

தியாகி திலீபன் நினைவு நிகழ்வு_2020 – சிட்னி /குயின்ஸ்லாந்து /பேர்த் /மெல்பேர்ண்

தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 33வது ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர்

மாதம் 26 ஆம் நாள் சனிக்கிழமை (சிட்னி/ குயின்ஸ்லாந்து/ பேர்த் இல்) இடம்பெறவுள்ளது.

ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக

வழியில் போராடினான். தமிழ் மக்களின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது.

பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தற்போதைய கொறானாவைரஸ் இடர்கால நிலையை கருத்திற்கொண்டு, அரச விதிமுறைகள், சமூக இடைவெளியை பேணியவாறு இவ்நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும்.

நிகழ்வுகளில் நேரடியாக கலந்துகொள்ள முடியாதவர்கள் ஏனைய மாநிலத்தவர்கள் இணையவழி ஊடாகவும் இணைந்துகொள்ளமுடியும்.

ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து தமிழின விடுதலைக்காக பன்னிரு நாட்கள் நீராகாரம் இன்றி தன்னுடலை வருத்தி,

அகிம்சையின் உச்சத்தை தொட்டு உயிர்நீத்த
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் 33ம் ஆண்டு நினைவுகளில்….

Sydney

இடம்: Yaarl Function Hall, Pendle Hill, NSW
காலம்: 26/09/2019 சனிக்கிழமை மாலை 5 மணி.
தொடர்பு: ‎0401 842 780 or 0424 757 814

Queensland

இடம்: St. Paul’s Drive Woodbridge Qld 4114
காலம்: 26/09/2019 சனிக்கிழமை மாலை 5 மணி.
தொடர்பு: ‎0415 159 283 or 0469 888 511

Perth

பன்னிரு நாட்கள் எமக்காக தன்னை பசித்தீயில் உருக்கி அணைந்த தியாகதீபத்தின் நினைவுநாள் நிகழ்வு எதிர்வரும் 26.09.2020

சனிக்கிழமை மாலை 6.30 மணிமுதல் 8.00 மணிவரை வணக்கநிகழ்வு மேற்கு அவுஸ்திரேலியாவில் 6, Third Avenue,

Rosmoyne, WA 6148 என்ற முகவரியிலுள்ள “இலங்கைத் தமிழ் சங்கத்தில்” ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Melbourne & Other States

விக்ரோரிய மாநில தற்போதைய கொறானாவைரஸ் இடர்கால நிலையை கருத்திற்கொண்டு, ஒஸ்ரேலியாவின் ஏனைய

மாநிலங்களில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுடன் இணையவழி ஊடாக இணைந்துகொள்வோம்.