மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கடும் எச்சரிக்கை

Spread the love

மீனவர்கள் நாளை (19) தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) வரை ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருப்பதாக தேசிய இடர்காப்பு

முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் தாழமுக்க வலயம் காரணமாக, அதன் மத்திய, வடகிழக்கு, கிழக்கு கடற்பரப்பில் கடும

காற்று வீசக்கூடிய சாத்தியம் உள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனைக்

கருத்திற்கொண்டு, இந்தக் கடற்பரப்புக்களில் தொழிலில் ஈடுபடும் கடற்கலங்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான

இடங்களை நோக்கி செல்ல வேண்டும் என திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

Leave a Reply