Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பல்கலைகழகம் ஒன்றில் 127 பேருக்கு கொரனோ

பிரிட்டனில் பல்கலைகழகம் ஒன்றில் 127 பேருக்கு கொரனோ

பிரிட்டன் Manchester Metropolitan University யில் கல்வி கற்ற மாணவர்களில்

127 பேருக்கு கொரனோ உள்ளது சோதனையின் பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது

குறித்த பகுதியில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து அந்த பகுதி

லக்கடவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்விடயம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

மேலும் 1.700 பேர் 14 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் ,

இது போல பிற பல்கலை கழகங்களில் சோதனை நடத்த திட்டமிட்ட படுகிறது

மக்களே அவதானம் தற் பொழுது ஐம்பத்தி நான்கு விகிதம் இந்த நோயானது

அதிகரித்துள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது ,குளிர்கால நிலையில் நோயின் தாக்குதல் அதிகரித்துள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் பாடசாலையில் மரத்தில் இருந்து விழுந்து சிறுமி பலி

பிரிட்டன் பாடசாலையில் மரத்தில் இருந்து விழுந்து சிறுமி பலி

பிரிட்டன் Newcastle பகுதியில் உள்ள ஆரம்ப பாசாலை ஒன்றில்
கல்வி கற்ற

ஆறுவயது மாணவி ஒருத்தி அங்கிருந்த மரத்தில் ஏறி வீழ்ந்து

பலியாகியுள்ளார்

மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட

வண்ணம் உள்ளனர் ,
ஆசிரியர்களின் கவன குறைவின் செயல் பட்டால்


இந்த சம்பவம் இடம்பெற்று இருக்கிறது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது

பிரிட்டன் பாடசாலையில்
பிரிட்டன் பாடசாலையில்
Posted in உலக செய்திகள்

மனைவியுடன் சண்டை – டவரில் குதிக்க முயன்ற நபர் – video

மனைவியுடன் சண்டை – டவரில் குதிக்க முயன்ற நபர் – video

இந்தியா மத்திய உத்தர பிரேதச பகுதியில் நபர் ஒருவர் மனைவி இருக்கும்


பொழுதும் கணவனை இழந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ,

இதனால் முதல் மனைவிக்கும் இவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது ,


இதனை அடுத்து அவர் தொலை கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்திட

முயன்றார் ,
அவவாறான் காட்சி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை அதில் இருந்து இறக்கி சமரச படுத்தி அழைத்து சென்றுள்ளனர்

https://www.youtube.com/watch?v=8Py3R_75sGY
Posted in உலக செய்திகள்

ஸ்பைடர் மான் போல சுவரில் பறக்கும் இந்தியா சிறுவன் – வீடியோ

ஸ்பைடர் மான் போல சுவரில் பறக்கும் இந்தியா சிறுவன் – வீடியோ

இந்தியாவை சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவர் ஸ்பைடர் மானை

போல சுவரில் ஏறி தாவும் காட்சிகள் உலக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

அவ்விதமான காட்சியை இப்பொழுது நீங்கள் பார்க்கலாம்

Posted in உலக செய்திகள்

ரயில் சக்கரத்துக்குள் சிக்கிய 2 வயது சிறுவன் – மெய் நடுங்க வைக்கும் வீடியோ

ரயில் சக்கரத்துக்குள் சிக்கிய 2 வயது சிறுவன் – மெய் நடுங்க வைக்கும் வீடியோ

இந்தியாவில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் ரயில் சக்கரத்தில்

சிக்கியுள்ள காட்சி ஒன்று உலக ஊடங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

இயந்திர சக்கரத்துக்குள் சிக்கிய நிலையில் சாரதியின்

கவனத்திற்கு அது கொண்டு வரப்பட்ட நிலையில் அந்த சிசு காப்பாற்ற பட்டுள்ளது ,

இயந்திரம் இயக்க பட்டு இருந்தால் சிறுவன் உடல் சிதறி பலியாகி இருப்பான் .


கடவுளின்செயலினால் அவன் அதற்குள் இருந்து காப்பாற்ற பட்டுள்ளான் .அந்த காட்சிகள் இதோ பாருங்கள்

https://www.youtube.com/watch?v=bSqTrqqvwtI
Posted in உலக செய்திகள்

நடுவர்களை போட்டு தாக்கும் ,ஆண்கள் பெண்கள் – சிரிக்காம பாருங்க – video

நடுவர்களை போட்டு தாக்கும் ,ஆண்கள் பெண்கள் – சிரிக்காம பாருங்க – video

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நடுவர்களுடன் நடத்தும் சண்டைகள் ,அவர்களை திட்டும் நிகழ்வை பாருங்கள்

இது நிகழ்ச்சிக்காக செய்யப்படு பவையா அல்லது லொள்ளுக்கா செய்யப் படு [பாவையா என்பது தொடர்பில் தெரியவில்லை

Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானத்தில் கிருந்து தப்பிய பெண் – புரிந்த சாதனை வீடியோ

விமான விபத்தில் சிக்கி அந்த விமானத்தில் இருந்து வீழ்ந்து உடல் முழுவதும்

எரிந்த நிலையில் பலமாதங்கள் இடம்பெற்ற தொடர் சிகிச்சையின் பின்னர்

அவர் மீண்டு வந்த அந்த சம்பவம் .அதன் பின்னர் அவர் காட்

டேலண்ட் நிகழ்வில் கலந்து கொண்டார் ,

வாரி மனதார வாழ்த்தியும் ,அவரது குரல் ,விடா முயற்சிக்கும் ,அவர் திறன் வெளிப் பாட்டுக்கும் சம்பியன் வழங்க கவுரவித்துள்ளது

பார்த்து பார்த்து அழுது முடித்தேன் ,அந்த கனதியை இங்கே நீங்களும்

பாருங்கள் ,இது தான் மனிதம் ,தன்னம்பிக்கையின் வெளிப்பாடு 57 நிமிடத்தில் பாருங்கள்

Posted in உலக செய்திகள்

இராணுவம் அதிரடி தாக்குதல் – சிறைபிடிக்க பட்ட 40 குழந்தைகள் மீட்பு

இராணுவம் அதிரடி தாக்குதல் – சிறைபிடிக்க பட்ட 40 குழந்தைகள் மீட்பு

சோமாலியா தென் மேற்கு பகுதியில் உள்ள தீவிரவாதிகளினால் சிறை

பிடித்து வைக்க பட்டிருந்த நாப்பது சிறார்கள் சோமாலியா அரச இராணுவத்தினர்

நடத்திய திடீர் முற்றுகை சுற்றிவளைப்பு தாக்குதலில் இருந்து மீட்க பட்டுள்ளனர்

மீட்க பட்ட சிறுவர்கள் மருத்துவ சோதனைகளின் பின்ன பெற்றவர்களிடம்

ஒப்படைக்க பட்டுள்ளனர் ,தற்போது குறித்த பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

இராணுவ முற்றுகையை அடுத்து தீவிரவாதிகள் தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்

Posted in உலக செய்திகள்

வெடித்த கிளைமோர் – சிதறிய 6 மனித உடல்கள்

வெடித்த கிளைமோர் – சிதறிய 6 மனித உடல்கள்

ஆப்கானிஸ்தான் northern Kunduz மாகாணத்தில் வீதியோரம் மறைத்து

வைக்க பட்டிருந்த கிளைமோர் வெடித்து சிதறியதால் ஆறு அப்பாவி

மக்கள் பலியாகியுள்ளனர்

இராணுவத்தினரை இலக்கு வைத்து தாலிபான் போராளிகளினால்

வைக்க பட்ட கண்ணிவடியில் இவர் சிக்கியதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது

தொடர்ந்து குறித்த பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

4 வாரத்தில் பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 1000 க்கு மேல் பலியாவர்கள் – எச்சரிக்கை

4 வாரத்தில் பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 1000 க்கு மேல் பலியாவர்கள் – எச்சரிக்கை

பிரிட்டனில் எதிர்வரும் நான்கு வாரத்துக்குள் நாள் ஒன்றுக்கு

நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாவார்கள் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

இன்று முதல் கடும் குளிர்காலம் நிலவுகிறது ,இதனால் இயல்பாக

ஏற்படும் நோய்த் தாக்கம் அதிகரித்து மக்கள் கடும் நோயினால் பாதிக்க படுவார்கள் ,

அவ்வேளை இந்த கொரனோ வைரஸ் தொற்றி கொள்ளும் எனவும் அதனை

அடுத்து உயிர்பலிகள் நூறு முதல் ஆயிரத்தை நாள் ஒன்றுக்கு எட்டி பிடிக்கும்

என நோய் தொற்று நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

எனினும் மக்கள் இவர்களின் இந்த அறிவுறுத்தல்களை அலட்சிய படுத்தி செல்வதை அவதானிக்க முடிகிறது

Posted in இலங்கை செய்திகள்

395 மில்லியனில் இந்திய நிதி உதவி-மலையகத்தில் 10 பாடசாலைகள் அபிவிருத்தி

395 மில்லியனில் இந்திய நிதி உதவி-மலையகத்தில் 10 பாடசாலைகள் அபிவிருத்தி

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியானது இந்திய நிதி உதவி 80 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளுடன் கூடிய கணித விஞ்ஞான ஆய்வு கூடங்கள் கணணி கூடம் வகுப்பறைகள் நிர்வாக

அலகு மற்றும் ஏனைய வசதிகள் அனைத்துடன் 04 மாடி கட்டிடம் கட்டப்பட்டு பூர்த்தியாகி உள்ளது. இந்த கட்டிட தொகுதிக்கு மேலும் 15 மில்லியன் ரூபா செலவில் ஆய்வுகூட உபகரணங்கள் கணணிகள்

அனைத்து பிரிவிற்குமான தளபாடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை கொழும்பு இலங்கைக்கான இந்திய உயர்

ஸ்தானிகர் அலுவலகம் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது.

இந்த செயற்திட்டம் குறித்தான மீளாய்வு கலந்துறையாடல் ஒன்று கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் அரசியல் மற்றும் மேம்பாட்டு

ஒத்துழைப்பு ஆலோசகர் திருமதி பானு பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. (23.09.2020 ) இந்த கலந்துறையாடலில் முன்னால் கல்வி இராஜாங்க அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற

உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் பாராளுமன்ற உறுப்பினர்கான வேலுகுமார் எம். உதயகுமார் கல்வி அமைச்சின் பாடசாலைகளின் கட்டிட அபிவிருத்திற்கான பனிப்பாளர் கலாநிதி

அபேசுந்தர பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்திட்ட பனிப்பாளர் எஸ்.முரளிதரன் உட்பட அதிகாரிகளும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின்

நிகழ்ச்சிதிட்ட பணிப்பாளர்கள் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.எஸ். ரவிசந்திரன் பழைய மாணவர்

சங்கத்தின் செயலாளர் பா.திருஞானம் ஆசிரியர்களான பி.கமல்நாதன் ஜி.லோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தற்போதைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்; கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த பொழுது முன்னெடுக்கப்பட்ட மலையக

பாடசாலைகள் அபிவிருத்தி தொடர்பான விடயங்களின் முன்னெடுப்புகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதன் படி மலையத்தில் காணப்படும் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி

95 மில்லியன் ரூபா செலவிலும் மேலும் 09 பெருந்தோட்ட பாடசாலைகளை இந்திய உதவி 300 மில்லியன் ரூபா செலவில்

அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ததற்கு இனங்க அதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது.

இதன் படி நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயம் ஹட்டன் ஹெல்பொட தமிழ் வித்தியாலயம் நுவரெலியா வெஸ்டடோ தமிழ் வித்தியாலயம் கண்டி மாவட்டத்தில்

நாவலபிட்டிய டெம்பெஸ்டோர் தமிழ் வித்தியாலயம் குண்டசாலை விவேகானந்த தமிழ் வித்தியாலயம் கண்டி விவேகானந்த தமிழ் வித்தியாலயம் பதுளை மாவட்டத்தில் நீவ்பேர்க் தமிழ்

வித்தியாலயம் காலி மாவட்டத்தில் தலங்கம சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் கேகாலை மாவட்டத்தில் ருவான்வெல ஸ்ரீ கலைவானி தமிழ் வித்தியாலயம் அடங்களாக 09 பாடசாலைகள்

அபிவிருத்தி செய்யபடவுள்ளன. இந்த அபிவிருத்தியில் பாடசாலையின் கட்டடம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் தளபாடங்கள் அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்படும். தலா ஒரு

பாடசாலைக்கு 30 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திகள் முன்னெடுக்கபடவுள்ளன. தொடர்ந்து மேலும் மலையகத்தில் பின் தங்கியுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்hகன

பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இதற்கும் அனுமதி கிடைத்துள்ள அதே நேரம் தெரிவு செய்யபட்ட பாடசாலைகள் முன்மொழிப்படும்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்ணியின் பிரதி தலைவரும்

முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்
உன்மையிலேயே இது ஒரு சந்தோஷமான விடயமாகும். நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த பொழுது இதனை பெற்றுக்

கொள்வதற்காக இந்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினேன். அதன் பயனாக இந்த பெறுபேறு கிடைத்துள்ளது. இதற்கு உதவி செய்த கல்வி அமைச்சின் முன்னால் செயலாளர்

முன்னால் கல்வி அமைச்சர் உட்பட அனைத்து பனிப்பாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தியோகஸ்த்தர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போல் தொடர்ந்து இந்த

வேலைத்திட்டத்தை தற்போதும் முன்னெடுத்து வரும் தற்போதைய கல்வி அமைச்சின் செயலாளர்; கல்வி அமைச்சர் உட்பட அனைத்து பனிப்பாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும்

உத்தியோகஸ்த்தர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். எமது நாட்டைவிட்டு விடைபெற்று சென்ற முன்னால் இந்திய உயர் ஸ்தானிகர் சரன்ஜித் சிங் அவர்களுக்கும் தற்போதைய இந்திய உயர் ஸ்தானிகர் அவர்களுக்கும் உயர்

அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்தக் கொள்கின்றேன் இந்திய நிதி உதவி 395 மில்லியனில் மலையகத்தில் தற்போது 10 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது தொடர்ந்து

எதிர்காலத்தில் மேலும் மலையக பாடசாலைகள் இணைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் என்று கூறினார்

Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் ஏழு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

பிரான்சில் ஏழு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

பிரான்சின் Charlie Hebdo in Paris பகுதியில் வைத்து ஏழு ஐ எஸ் கொடிய

பயங்கரவாதிகள் கைது செய்ய பட்டுள்ளனர் ,மிக பெரும் தாக்குதல் ஒன்றை

நடத்த திட்டமிட்டு இருந்த வேளையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

உளவு துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த

நபர்கள் தங்கியிருந்த பகுதியில் திடீர் சுற்றிவளைப்புக்கு உள்ளாக்க பட்டு கண்காணிக்க பட்டது ,

அதனை தொடந்து இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பொழுது இந்த கைது இடம்பெற்றுள்ளது

கைதானவர்கள் தொடந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

இந்த நடவடிக்கையால் பெரும் தாக்குதல் ஒன்று முறியடிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

பிரான்சில் ஏழு தீவிரவாதிகள் கைது
பிரான்சில் ஏழு தீவிரவாதிகள் கைது
Posted in உலக செய்திகள்

உக்கிரேனில் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் – 22 பேர் பலி

உக்கிரேனில் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் – 22 பேர் பலி

உக்கிரேன் நாட்டில் Chuhuivவிமான நிலையத்தில் இருபத்தி இரண்டு பேருடன்

தரை இறங்கிய இராணுவ விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதால் அதில்

பயணித்த இருபத்தி இரண்டு பேர் உடல் சிதறி பலியாகினர்
இந்த

விபத்து சம்பவிக்கும் பொழுது 26பேர் விமன்த்தில் இருந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

குறித்த விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது


இது ரசியாவின் சதி வேலையாக இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது

உக்கிரேனில் வீழ்ந்து நொறுங்கிய
உக்கிரேனில் வீழ்ந்து நொறுங்கிய
Posted in இலங்கை செய்திகள்

தேங்காய்க்கு நிர்ணய விலை-சில்லறை விலையாக 60 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேங்காய்க்கு நிர்ணய விலை-சில்லறை விலையாக 60 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேங்காய்களின் தன்மையை​ பொருத்து அதற்கான அதிகபட்ச சில்லறை விலையாக 60 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேங்காயின் சுற்றுவட்டம் 12 அங்குலத்துக்கு குறைவாக இருக்கும் 60 ரூபாயும் 13

அங்குலமாக இருக்குமாயின் அதற்கான அதிக பட்ச சில்லறை விலை 65 ரூபாயெனவும் நிர்​ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 13 அங்குலத்துக்கு அதிகமான தேங்காய்க்கான விலை 70 ரூபாயெனவும்,

இந்த நிர்ணய விலை இன்று முதல் அமுலாகுமெனவும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அத்தோடு, மேற்படி நிர்ணய விலைக்கு அதிகமான எந்தவொரு விற்பனை

முகவர்களும் தேங்காயை விற்பனை செய்ய முடியாதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு,

அண்மையில் தேங்காய் உற்பத்தி குறைந்தமையே விலையேற்றத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் கட்சிகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் கட்சிகள்

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் திலீபனின் நினைவுகூரலுக்கான

உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத போராட்டம், சாவகச்சேரி சிவன் கோவிலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்போராட்டத்தில் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், சீ.வீ.கே.சிவஞானம்,

பா.கஜதீபன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், க.அருந்தவபாலன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

மக்களை வாழ வைப்பது என் கடமை – கோட்டா

கிராமத்துடன் கலந்துரையாடல்’ ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி பதுளை, ஹல்துமுல்லையில் தெரிவிப்பு…

 அனைத்து வாய்மொழி ரீதியான உத்தரவுகளையும் சுற்றறிக்கை என கருத்திற்கொள்ளவும்…

 உத்தரவுகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை…

 14 நாட்களுக்குள் சட்டம் செயற்படுத்தப்படும்…

 ஹல்துமுல்லை உட்பட பல பிரதேசங்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு…

 பஃகுமாரதென்ன வித்தியாலயத்தின் அனைத்து குறைபாடுகளும் நிறைவு செய்யப்பட்டது….

மக்களின் பொது நலனுக்காக வழங்கப்படும் அனைத்து வாய்மொழி ரீதியிலான உத்தரவுகளையும் சுற்றறிக்கையாக கருதி செயற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இவ் உத்தரவுகளை மீறுகின்ற அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பதுளை, ஹல்துமுல்லை, வெலங்விட்ட கிராமத்தில் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்ட ‘ஜனாதிபதி கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

‘அரச அதிகாரிகளிடமிருந்து நான் எதிர்பார்ப்பது மக்கள் பிரச்சினைகளை தெளிவாக புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்குவதே ஆகும். மக்களின் பக்கம் நின்று சரியான மற்றும்

தைரியமாக முடிவெடுக்கக்கூடிய அதிகாரிகளை நான் பாதுகாப்பேன். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க அரச நிறுவனங்கள் நீண்டகாலத்தை எடுக்கின்றன. ஒரு நிறுவனத்திலிருந்து எழுத்துமூல விசாரணைக்கு இன்னுமொரு

நிறுவனம் 14 நாட்களுக்குள் பதில் அளிக்காதவிடத்து அவ் எழுத்து மூல வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாக கருதி மக்களுக்கு பதில் கூறவும்.’ ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

ஹல்துமுல்லைஇ பதுளை மாவட்டத்தின் கஷ்டப் பிரதேசங்களில் ஒன்றாகவும் வெலங்விட்ட, ஹல்துமுல்லை பிரதேச செயலகப்

பிரிவின் பின்தங்கிய கிராமமாக உள்ளது. ‘ஜனாதிபதி கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வின் முதலாவது சந்திப்பு ஹப்புத்தளைஇ

வெலங்விட்ட 100 ஏக்கர் கிராமத்தின் குமாரதென்ன வித்தியாலத்தில் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி பிரதேச மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.

பாதைகள்இ மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக்கூட நிறைவு செய்ய முடியாமல் மக்கள்

தமது பாரம்பரிய கிராமங்களை விட்டுச் சென்றுள்ளதாக கிராமவாசிகள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.

முன்னர் குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் கல்விகற்ற குமாரதென்ன வித்தியாலயம் 16 மாணவர்களுடன் இன்று இருப்பது அதற்கு சிறந்த உதாரணமாகும் என்றும் குறிப்பிட்டனர்.

100 ஏக்கர் கிராமத்திலிருந்து வெலங்விட்ட வரையான பாதையை காப்பட் இட்டு அபிவிருத்தி செய்தல்இ நீரூற்றுக்களை இனங்கண்டு

குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் இரண்டு மாதங்களுக்குள் மின்சாரத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

தொடர்பாடல் தடங்கள் காரணமாக மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களின்

கவலைகளை ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்து கொண்டார். ஒரு சில வாரங்களுக்குள் தொடர்பாடல் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பல வருடங்களுக்கு முன்னர் கிராமத்தை விட்டுச் சென்றிருந்தாலும் கலந்துரையாடலில் பங்குபற்றி கிராமவாசிகள் ஜனாதிபதி

அவர்கள் எடுத்த தீர்மானங்களின் காரணமாக தமது கிராமங்களில் வாழ்வதற்கு மீண்டும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

குமாரதென்ன வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்துக் கொடுக்குமாறு கூறிய ஜனாதிபதி அவர்கள்இ அப்பிரதேசத்தை சூழ உள்ள பிள்ளைகளுக்கு மீண்டும்

பாடசாலைக்கு வருகை தந்து கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை வழங்குமாறு அதகாரிகளுக்கு தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த பிரதேச மக்களின் இன்னும் பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

கிரவனாகம மற்றும் நிக்கபொத்த மகா வித்தியாலயங்கள் மற்றும் கொஸ்லந்த தேசிய பாடசாலையில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கும் ஹாலி எல மலித்த

மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை அமைத்துக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். அது

தவிர வெள்ளவாய கம்பஹ மகாவித்தியாலயத்திற்கு அதிபர் ஒருவரை நியமிப்பதற்கும் சொரகுனே மற்றும் ஜனானந்த

வித்தியாலயங்களின் குறைபாடுகளை தீர்ப்பதற்கும் ஹப்புத்தளை தமிழ் மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அங்கவீனமுற்ற இராணுவ வீரர் ஒருவரின் வேண்டுகொளுக்கு தமது அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி 07 கிராமங்களை

இணைக்கக்கூடிய மொரகெட்டிய வீதியை காப்பட் இட்டு அபிவிருத்தி செய்யவும் உத்தரவிட்டார்.

கொழும்பு – மட்டக்களப்பு வீதியில் 35 கிலோமீற்றர்களை கொண்ட பெரகல – வெள்ளவாய பகுதிஇ கெலிபனாவெலஇ ஹால்கன்ன வீதியின் வௌ்ளவாய வரையான பகுதிஇ 100 ஏக்கர் கக்குட்டு

அராவ மத்திய வீதி, தெஹிலந்த – அளுத்வெலயை இணைக்கும் வீதி மற்றும் கிளை வீதிகளை துரிதமாக நிர்மாணித்து நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு உரிய காணிகள் தொடர்பாக

மக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு உரிமம் மற்றும் உறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டார்.

பதுளை மாவட்டத்தின் பல பிரதேச விவசாயிகள் நாட்டின் அதிக மிளகு விளைச்சலுக்கு மற்றும் வளமான விவசாயத்திற்கு உரிமை கோருகின்றனர். அதில் பலர் சேதனப் பசளை பயன்படுத்தி மிளகு

பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நெல்இ கறுவாஇ கோப்பி உட்பட அனைத்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலும் விவசாயிகள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு வனப் பாதுகாப்பு அளவைகளின் போது இடம்பெற்று இருக்கின்ற தவறுகளை தீர்க்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

கூடியிருந்த சிறு பிள்ளைகள் இருக்கக்கூடிய அனைவரினதும் பிரச்சினைகளுக்கு இயலுமான வகையில் தீர்வுகளை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி அவர்கள்இ கலந்துரையாடலின் பின்னர் பிரதேசத்தின் பயிர் நிலங்கள் மற்றும் பல வீடுகளுக்கும் சென்று தகவல்களை கேட்டறிந்தார்.

பிரசேத்தின் மகா சங்கத்தினர், அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, இராஜாங்க அமைச்சர் தேனுக்க விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷன தெனிபிட்டிய, திஸ்ஸ குட்டியாரச்சி, சாமர சம்பத் தசநாயக்க, ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், ஜனாதிபதியின் இபிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோருடன் பிரதேச அரசியல் பிரதிநிதிகள், நிறுவனங்களி்ன் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் – மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் – மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக உயர்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 18 விசேட மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு இன்று (25) நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்த சட்ட மூலத்திலுள்ள சில சரத்துக்கள் அரசியல் யாப்புக்கு முரணானது என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விசேட மனுக்களை பரிசீலனை செய்வதற்காக பிரதம

நீதயரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன,

விஜித் மலல்கொட, சிசிர டி அப்ரூ ஆகியோரைக்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் கடந்த 22ஆம் திகதி

நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி, 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் பரிசீலிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

நடைபாதையில் உறங்கும் நோயாளர்கள்

நடைபாதையில் உறங்கும் நோயாளர்கள்

வவுனியா வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் (1) போதிய இடவசதிகள் இன்மையால், நோயாளார்கள் விடுதிக்கு வெளியே

நடைபாதையில் படுத்துறங்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையின் விடுதி ஒன்றானது (1) காயங்கள் மற்றும் சிறுநீரகம் சார்ந்த சத்திர சிகிச்சைக்குள்ளாக்கப்படும்

நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் பகுதியாக செயற்பட்டு வருகின்றது.

குறித்த விடுதிக்குள் அண்ணளவாக 40 கட்டில்களே போடப்பட்டுள்ளது. அதனைவிட அதிகமான கட்டில்களை

போடுவதற்கு அவ்விடுதியில் இடவசதி இல்லாதநிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் அதிகமான நோயாளர்கள் வருகைதரும்போது அவர்களுக்கு ஒதுக்குவதற்கு கட்டில்கள் இன்மையால், விடுதிக்கு வெளியே பிரதான கட்டடத்தின் வாயில் பகுதியில் நோயாளர்கள்

தங்கவைக்கப்பட்டு உள்ளனர். குறித்த பகுதி பொதுமக்கள், வைத்தியசாலை ஊழியர்கள் நடந்து செல்லும் ஒரு பகுதியாக காணப்படுகின்றது.

குறித்த விடுதியில் கட்டில்கள் பற்றாக்குறையால் நோயாளர்களுக்கு படுக்கைகளை ஒதுக்கிகொடுப்பதில் தாதிய உத்தியோகத்தர்களும்

அசௌகரியங்களை எதிர்கொள்ளும் அதேவேளை, விடுதியில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர்களின் எண்ணிக்கை குறைவாக

காணப்படுவதால் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்படும் போது கடமைபுரியும் ஊழியர்கள் சிரமமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

வடக்கின் முக்கிய வைத்தியசாலையாக காணப்படும் வவுனியா மருத்துவனைக்கு முல்லைத்தீவு, மன்னார் உட்பட பல பகுதிகளைச்

சேர்ந்த நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.

இந்நிலையில் தீவிரமான நோயாளர்களை தங்கவைப்பதற்காக பயன்படும்குறித்த விடுதியில் போதிய வசதிகளை

ஏற்படுத்துகொடுக்க வேண்டும் என்பது நோயாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் மக்கள் மீது கத்தி வெட்டு – போலீசார் குவிப்பு

பிரான்சில் மக்கள் மீது கத்தி வெட்டு – போலீசார் குவிப்பு

பிரான்ஸ் Charlie Hebdo offices, Paris பகுதியில் மர்ம நபர் ஒருவரால் பலத்த

வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்

குறித்த குற்ற செயலை புரிந்த நபர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு

உட்படுத்த பட்டுள்ளார் ,
தற்போது குறித்த பகுதியில் போலீசார் குவிக்க பட்டுள்ளனர்

இது தீவிர வாத செயல் தொடர்பானதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

பிரான்சில் மக்கள் மீது
பிரான்சில் மக்கள் மீது
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் குறைடன் போலீஸ் நிலையத்தில் போலீசார் சுட்டு கொலை

லண்டன் குறைடன் போலீஸ் நிலையத்தில் போலீசார் சுட்டு கொலை

லண்டன் குறைடன் பகுதி காவல் நிலையத்தில் காவல்துறை

சிப்பாய்

ஒருவரை இருபத்தி மூன்று வயது வாலிபரால் சுட்டு படு கொலை செய்ய பட்டுள்ளார்

காவல்துறை ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார் ,மேலும் குற்றவாளி

படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது

குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகிறது